Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Pirithariyaa Pithana Podhum-14

  • Thread Author
அத்தியாயம்…14

எப்போதும் போல் லிங்கா விடியும் முன்னவே எழுந்து விட்டான்.. ஆனால் அந்த விடியல் அவனுக்கு எப்போதும் போல் இல்லாது அன்று ஒரு வித புத்துணர்ச்சி அவன் மனது உணர்ந்தது..

நேரம் கழித்து தான் உறங்கியது.. ஆனாலுமே மனது மகிழ்வாக இருக்கையில் , உடலிலும் அந்த மாற்றம் தெரியும் தானே.. அந்த மாற்றம் தந்த சுகந்தத்தை அனுபவித்து கொண்டே தன் காலை வேலையான, உடற் பயிற்சி பின் நீச்சல் என்று முடித்த பின் கல்லூரிக்கு செல்ல தன்னை தயார் செய்து கொண்டு தன் அறையில் இருந்து வெளி வந்தவன் அந்த தளத்தின் வர வேற்ப்பில் மாட்டி இருந்த ஆளுயர தன் அன்னையின் கல்யாண புகைப்படத்தை பார்த்து என்ன நினைத்தானோ சட்டென்று அதை கழட்டி கையில் எடுத்து கொண்டு கீழ் தளத்திற்க்கு வந்தவன்..

சரியாக வீட்டிற்க்கு முன் வந்தால் கண்ணுக்கு பளிச் என்று தெரியும் இடத்தில் ஏற்கனவே மாட்டி இருந்த சின்ன சைஸ் கல்யாண புகைப்படத்தை கழட்டி விட்டு, தன் கையில் இருந்த அளவில் பெரியதாக இருந்த அந்த கல்யாண புகைப்படத்தை வேலையாட்களிடம் அதை மாட்ட வேண்டி சுவற்றில் ஒட்டை போடும் இயந்திரம்.. பின் தேவையான பொருட்களை அங்கு இருந்த தேவையில்லாத அறையில் இருந்து எடுத்து வர சொன்னான்..

தன் அன்னயின் புகைப்படத்திற்க்காக அறை அறையாக ஆராய்ந்தவன் கண்ணுக்கு எந்த பொருள் எங்கு இருக்கிறது என்பது தெரிந்ததால் எடுத்து வர சொன்னான்..

வேலையாளும் எடுத்து வந்து கொடுக்க, அந்த வேலையாள் துணைக் கொண்டு அந்த புகைப்படத்தையும் மாட்டி முடித்து விட்டான்..

அங்கு வசிப்பவர்கள் எழுந்த உடன் வெளி வந்து விட மாட்டார்கள். காலையில் எழுந்து குடிக்கும் பானம், அவர் அவர்கள் அறைக்கு சென்று விடும்..

அதனால் நிதானமாக காலை கடன் முடிந்து குளித்து தயாராகிய பின் தான் காலை உணவை சாப்பிட ஹாலுக்கு வருவது..

அதே பழக்கத்தில் அன்று முதலில் வெளி வந்தவர் சுகந்தி, அதாவது லிங்காவின் சித்தி.. வந்தவர் பார்த்தது லிங்கா மாட்டிய அந்த பெரிய கல்யாண புகைப்படத்தை தான். அதுவும் அந்த புகைப்படத்தை வேலை செய்தவர்கள் தங்கள் வேலையை பார்த்து கொண்டே அந்த புகைப்படத்தையும் ஓர விழியில் பார்த்த வாறு செய்து கொண்டு இருப்பதை பார்த்து அவருக்கு அவ்வளவு கோபம் வந்து விட்டது..

முன் வேலை செய்தவர்கள் அனைவரையும் அனுப்பி விட்டு, புது வேலையாட்களை வசந்தி வைத்ததிற்க்கு காரணம் தான் ஜெய பிரகாஷூக்கு இரண்டாம் மனைவி என்று யாருக்கும் தெரிய கூடாது என்பதற்க்காக தான்..

கூடவே லிங்காவின் அன்னை கலைசெல்வியின் புகைப்படம் ஒன்று கூட மாட்டாது.. அதற்க்கு காரணமாக தன் இரு மகள்களை சுட்டி காட்டி…

“அவங்க பிரன்ஸ் வீட்டிற்க்கு வரும் போது அவங்க பார்த்தா. நம்ம மகளிடம் ஏதாவது கேட்பாங்க. அதை கேட்டு நம்ம பெண்கள் மனது கஷ்டப்படும்..” என்று ஜெய பிரகாஷிடம் மகள்களின் பாசத்தை காட்டி புகைப்படத்தை அகற்ற வைத்து விட்டார்..

மற்றவர்களுக்கு லிங்காவை நியாபகம் படுத்தும் எதுவும் இல்லாது போனால் அவர்களுக்கு லாபமே.. மற்றவர்களுக்கோ. செல்வசங்கரியே நம்ம விட்டு போயிட்டா.. இது என்ன என்று விட்டு விட்டார்கள்..



ஆனால் செல்வ சங்கரியின் தம்பியும் , மகனும்., அதை அவர்கள் வாழ தான் விடவில்லை.. வாழ்ந்த தடத்தையுமே அழித்து விடுவதா. என்ற எண்ணன் தான்..

சுகந்தி அந்த புகைப்படத்தை பார்த்ததும்.. “ யார் இதை மாட்டினது.?” என்று வேலயாட்களை பார்த்து கத்தியவர்.. பின்.. “ முதலில் அதை கழட்டி வேஸ்ட்டேஜ் ரூமில் போடுங்க..” என்று கோபத்துடன் கத்தினார்..

சுகந்தி தன் ஒவ்வொரு செயல்களின் மூலம் .. தான் இந்த வீட்டு மருமகள் என்று வேலையாட்களிடம் வேலை ஏய்வது மூலம் அவ்வப்போது நிருபித்து கொண்டு இருப்பார்..

ஏன் இன்னும் கேட்டால், அந்த வீட்டில் பெண்கள் காஞ்சனா. காயத்ரியோடு தனக்கு தான் இந்த விட்டில் உரிமை அதிகம் என்பது போல் தான் நடந்து கொள்வார்..

சுகந்தியின் இந்த செயல்களை பெரிய மகள் காஞ்சனா. இது எல்லாம் சின்ன விசயம்.. அவர்கள் அடைய நினைப்பது பெரியதான பள்ளி கல்லூரி. அதனால் சிவ பிரகாஷ் சொல்லி விட்டார்..

“ அமைதியா இரு ..” என்று.. அதனால் காஞ்சனா அமைதி காத்தார் என்றால், காயத்ரி அவரின் பெருந்தன்மையில் அமைதியாக போனார்..



இதை வைத்து அவர்களுக்கே புரிந்து விட்டது.. இந்த வீட்டின் உரிமை மருமகள்களுக்கு தான் என்று தப்பர்த்தம் கொண்டு இவ்வளவு காலமும் தன் அதிகாரத்தை செலுத்தி கொண்டு இருந்தார்.

அதே அதிகார தோரணையில் தான் சுகந்தி வேலையாளை ஏவியது.. ஆனால் எப்போதும் சுகந்தி சொன்ன உடன் சட்டென்று செய்து விடும் வேலையாள் அன்று செய்யாது, சாப்பிடும் மேஜையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த லிங்காவை பார்த்தனர்.

சுகந்தியின் கோபம் வேலையாளின் பார்வை எங்கு செல்கிறது என்று கவனிக்கும் நிலை இல்லாததால், மீண்டும்..

“என்ன அந்த படத்தை கழட்டு என்று சொல்றேன்.. நீ என்ன அப்படியே நின்னுட்டு இருக்க.. போய் கழட்டு… “ என்று சுகந்தி திரும்பவும் இன்னும் பெரும் குரல் எடுத்து கத்தினார்..

இப்போது அந்த வேலையாளுக்கு யாரை பார்ப்பது என்ற இக்காட்டான நிலையில் தயங்கி அதே இடத்தில் நிற்க..

“ என்ன இங்கு வேலை பார்க்கும் எண்ணம் உனக்கு இல்லையா..?” என்று சுகந்தி அதட்டி கொண்டு இருக்க, அவரை மேலும் திட்டு வாங்க விடாது உணவை முடித்து விட்டு அங்கு வந்த லிங்கா ..

அந்த வேலையாளை பார்த்து. “ நீ போ..” என்று அவரை அந்த இடத்தை விட்டு அனுப்பி விட்டான்.. அவரும் விட்டால் போதும் என்று ஒடி விட்டார்..

சுகந்தி அது வரை வேலையாட்களிடம் அப்படி சத்தம் போட்டவர்.. லிங்காவை பார்த்ததும் அமைதியாகி விட்டார்.

ஆனாலுமே அந்த படத்தை அங்கு இருந்து எடுத்தே ஆக வேண்டும் என்ற அந்த தீர்மானம் மட்டும் அப்படியே இருந்தது.. இத்தனை ஆண்டுகளாக செல்வ சங்கரி அந்த வீட்டில் வாழ்ந்தார் என்ற அடையாளத்தையே அகற்றி வெற்றியும் கண்டவருக்கு இப்போது மீண்டும் அதுவும் அந்த அளவு பெரிய படம்.. அது மட்டுமா செல்வ சங்கரி தனித்து இருந்தால் கூட பரவாயில்லை.

செல்வ சங்கரி தன் கணவனோடு நின்று கொண்டு இருந்த கல்யாண புகைப்படம்.. இதை பார்த்த அனைவருக்குமே தெரிந்து விடுமே நான் இரண்டாம் மனைவி என்பது.. அதனால் அதை கழட்டியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு..

லிங்காவிடம்.. “தம்பி அந்த படம் வேண்டாமே.. குழந்தைங்க இந்த படத்தை பார்த்தா சங்கடப்படுவாங்க..” என்று தன் கணவனிடம் பயன் படுத்திய அதே வார்த்தைகளை கூறினார்..

ஆனால் லிங்கா அது காதில் விழாதது போலவே அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தவன் .. பேசியில் மதுவுக்கு ஒரு மெசஜை தட்டி விட்டான்..

“என்னோடு இன்னைக்கு காலேஜ் வர வேண்டும்..” என்று..

லிங்காவின் அந்த உதாசீனம் சுகந்திக்கு அவ்வளவு ஆத்திரத்தை கொடுத்தது.. இனி லிங்கா கனடாவில் தான் இருந்து விடுவான். அதனால் இனி கணவரின் பங்கு தன் இரண்டு பிள்ளைகளுக்கு மட்டும் தான்..

அதுவும் இந்த வீடு ஆண் மகனான தன் கணவனுக்கு என்பதால் இங்கு முழு அதிகாரம் தனக்கு மட்டுமே என்று நினைத்து அதை செயல் படுத்தியும் கொண்டு இருந்த சுகந்திக்கு, லிங்காவின் இந்த உதாசீனம் அதுவும் வேலையாள் முன்.. பல்லை கடித்து கொண்டு தன் கோபத்தை கட்டு படுத்தி கொண்டு இருக்கும் போது தான்..



உணவு உண்ண அனைவரும் வந்தது. ஜெய பிரகாஷிடம் சென்ற சுகந்தி.. “பாருங்க.. இன்னும் குழந்தைங்க வரல. வருவதற்க்கு முன் அதை கழட்டிடுங்க..” என்று அந்த போட்டோவை காட்டி கூறினார்..

ஜெய பிரகாஷின் கண்கள் அந்த புகைப்படத்திலேயே நிலைப்பெற்று இருந்தது.. சுகந்தியின் பேச்சு அவர் காதில் விழுந்ததா இல்லையா என்ற நிலையில் தான் அவர் அப்படியே நின்று விட்டார்…

எதேதோ நினைவுகள் அவர் நெஞ்சில்.. இளமையில் செய்யும் செயல்கள் முதுமையில் அனுபவித்து தானே ஆக வேண்டும்.. இதோ விதைத்த நெல் அறுவடை செய்து கொண்டு இருக்கிறார்..

மகன் தன்னை அப்பா என்று அழைத்து பல வருடங்கள் கடந்து விட்டன… அவன் தன்னை எப்போது அப்பா என்று அழைத்தான்..

தன் அம்மா இறந்த அன்று. “ அப்பா அம்மாப்பா அம்மாப்பா..” என்று தன்னை கட்டி கொண்டு அழுததோடு சரி. அதன் பின் தன்னை அப்பா என்று அழைக்கவில்லை..

அம்மா இறந்த போது அவனுக்கு பதினான்கு வயது.. வந்த உறவுகள் பேச்சு மகன் காதில் கண்டிப்பாக விழுந்து இருக்கும். ஒன்றும் தெரியாத வயது இல்லையே அப்போது..

அவன் அன்னை இருக்கும் போதே அம்மா தான் அவனுக்கு எல்லாம் …பெரியதாக தன்னிடம் அவன் ஒன்றியது கிடையாது.. தானும் அப்போது அதை எதிர் பார்க்கவில்லை..

பின் மெல்ல மெல்ல விலகியவன் எப்போது தன்னை விட்டு முழுவதுமாக விலகினான்..

அன்று அந்த பெண் கடிதம்.. இதோ இதே ஹாலில் தான் அனைவரும் அவனை பார்த்து பேசும் போது தான் ஒன்றும் பேசாது இருப்பதை பார்த்தானே.. அந்த பார்வை இப்போதும் அவருக்கு நியாபகத்தில் இருக்கிறது..

ஜெய பிரகாஷ் பழைய நினைவுகளில் இன்னும் மூழ்க விடாது சுகந்தி.. “ என்னங்க என்னங்க..” என்று அவர உலுக்கியதில், நிகழ்வுக்கு வந்தவரிடம் மீண்டும் அதையே சொல்ல.

ஜெய பிரகாஷ் தன் மகனை பார்த்தார்.. அவனோ தன் கைய் பேசியில் மது அனுப்பி இருந்த.. “இன்னும் டென் மினிட்ஸ் ஆகும்.. வேலை இருந்தா போங்க..” என்ற மதுவின் நீண்ட மெசஜூக்கு.



“ காத்திருக்கிறேன்..” என்று ஒரே வார்த்தையை மெசஜில் தட்டி விட்டு போலீஸ் அதிகாரிக்கு அழைத்து என்ன நிலவரம் என்று கேட்டவன்..

பின்… “வருகிறேன்..” என்று சொல்லி விட்டு மீண்டும் தன் கைய் பேசியில் அவன் கவனத்தை செலுத்தினான்.. இத்தனை வருடங்கள் அவன் அந்த வீட்டில் இல்லை.. வந்து சில மாதங்கள் தான் ஆகின்றன.

ஆனால் இத்தனை வருடங்கள் அங்கு இருந்த அனைவரையும் அந்த வீட்டிற்க்கு அன்னியமாக்கி விட்டு அந்த வீட்டின் உரிமையாக அவன் மட்டும் தான் என்பது போல் அந்த இருக்கையில் கம்பீரமாக அமர்ந்து கொண்டு இருந்தான்..

அந்த இடத்தில் சோமசுந்தரமும் இருந்தார் தான்.. ஆனால் அவருமே எதுவும் பேசாது அமைதியாக அனைவரோடு காலை உணவை உட்கொண்டு இருந்தார்..

ஆம் இத்தனை நேரம் சுகந்தி தான் அந்த போட்டோ கழட்டு என்று பேசிக் கொண்டு இருந்தாரே தவிர.. யாரும் அதை பற்றி வாய் திறக்கவில்லை..

எப்போதும் லிங்கா என்றால் எதிர்த்து நிற்க்கும் சிவ பிராகாஷ் கூட அன்று ஊமை ஆகி விட்டவர் போல் தான் சாப்பிட்டு கொண்டு இருந்தார்.. காரணம் காலையில் அவருக்கு வந்த கைய் பேசியில் சொல்ல பட்ட செய்தி அப்படி பட்டது.

அதனால் அடக்கி வாசிக்க வேண்டிய நிலை அவருக்கு..கணவனே அமைதியாக இருக்க. அதுவும் சிவ பிரகாஷ் அமைதியாக இருக்கிறார் என்றால் அவர் காரணம் இல்லாது இருக்க மாட்டார் என்று தெரிந்ததால், அவர் குடும்பதினரும் அவரோடு அமைதி காத்தனர்.

காயத்ரியும் அவர் கணவருக்கும் இது எல்லாம் ஒரு விசயமே கிடையாது.. அவர்கள் பெண்.. அவளுக்கு சஜனாவை பற்றி என்ன தெரியும்.. இதுவே மண்டை முழுவதும் ஒடிக் கொண்டு இருந்ததால், அவர்களின் கவனம் மொத்தமும் மூடிக் கொண்டு இருந்த தன் மகளின் அறை வாசலிலேயே இருந்தது.

சுகந்திக்கோ ஒரே நாளில் இந்த வீட்டில் தன்னை அனைவரும் தள்ளி வைத்தது போல் உணர்ந்தார்..

அந்த சமயம் அவரின் இரு மகள்கள் அக்க்ஷயா அனன்யா அங்கு வர. அனைவரின் பார்வை போலவே அவர்கள் பார்வையும் அந்த படத்தில் சென்றது..

பார்த்த உடன்.. தன் அம்மாவிடம்.. “ மா யாரும்மா இதை இங்கு மாட்டினது.. முதல்ல எடுத்து வெளியில் போடுங்க..” என்று சொன்னவள் .. பின் வேலையாள் ஒருவருக்கு குரல் கொடுத்த மூத்த பெண் அக்க்ஷயா.. தான் சுகந்தியின் பெண் என்பதை நிரூபிக்கும் வகையாக கத்தினாள்..

இவ்வளவு நேரமும் யார் என்ன பேசினால் எனக்கு என்ன என்று தன் கைய் பேசியில் மட்டுமே கவனத்தை வைத்து கொண்டு இருந்தவன், அக்ஷயாவின் இந்த பேச்சில்.. தப்பு தப்பு கத்தியதில்..

கைய் பேசியை தனக்கு முன் இருந்த டேபுலில் வைத்தவன்.. அக்க்ஷாவை பார்த்து..

“ எதை எடுத்து வெளியில் வீச சொல்ற. “ என்றவனின் பேச்சு அக்க்ஷாயாவிடம் இருந்தாலும், பார்வை சுகந்தியிடம் இருந்தது.

பின்.. “ வெளியில் போவதை வீட்டில் கொண்டு வந்து வைத்தால், இந்த வீட்டின் உரிமைக்காரியை வெளியில் தான் வீச தோன்றும்..” என்றவனின் பார்வையும் பேச்சும் அவன் யாரை சொல்கிறான் என்று அவன் சொல்லாமலேயே அனைவருக்கும் புரிந்தது…




















 
Member
Joined
May 11, 2024
Messages
83
அம்மா போலபொண்ணும் இருக்கா போல.... வீட்டுல நடக்கிறது எதுவும் தெரியாதா இல்ல பசங்க கிட்ட எதையும் சொல்லவே இல்லையா
 
  • Like
Reactions: grg
Top