Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட....14 டீசர்

  • Thread Author
அத்தியாயம்….14

சாண்டில்யனின் முதல் அடி வாசுதேவ்வின் மீது விழுந்ததே மிக பலமான அடி தான்.. அதிலேயே நின்று கொண்டு இருந்தவன் ஆடி போய் விட்டான்..

அதில் சந்தியா அமர்ந்திருந்த இருக்கையில் கை பிடியை பிடித்து கொண்டு தன்னை நிலப்படுத்திக் கொள்ள முயன்ற போதே அடுத்த அடி.. அதில் அவனின் சிங்கப்பல் விழுந்து விட்டது…

அவனின் அந்த . சிங்கப்பல் தான் வாசு தேவ் தன் ராசியாக கருதுவான்.. சின்ன வயதில் அவனின் தந்தை விசுவநாதன் கூட…

“இது உன் சீரான பல் வரிசையை கெடுப்பது போல இருக்கு வாசு.. இப்போ தான் இதுக்கு என்று எவ்வளவோ சிகிச்சை வந்து இருக்கோ.. இதை எடுத்து விட்டு பல்லை சீர் செய்து கொள்ளலாம்..” என்று சொல்லி பல் மருத்துவமனைக்கு அழைத்த போது..

“இது தன் ராசி…” என்பான்..

தன் ஒவ்வொரு வெற்றிக்கும்.. சாண்டில்யனிடம் இருந்து நரிதந்திரமாக பரித்து கொண்டு ஜெயிப்பதை தான் தன் வெற்றியாக கொண்டாடும் போது எல்லாம் தன்னுடைய அந்த பல்லை தான் குறிப்பிடுவான்..

அவனின் அந்த ராசிப்பல் சாண்டில்யனின் இரண்டால் அடியில் விழுந்து விட..

வாசுதேவ்.. “ ஏய்..” என்று கத்தி கொண்டு இருக்கும் போதே தன்னை தாக்க கூட அவனுக்கு அவகாசம் தராது தொடர்ந்து தாக்கினான்… என்ன வார்த்தை சொல்லி விட்டான். சீ என்று மனது கொதித்து போனது..

அதோடு சாண்டில்யனின் இந்த ஒவ்வொரு அடியுமே.. வாசு தேவ்வின் இன்றைய பேச்சுக்கு மட்டும் கிடையாது.. தன் வாழ்க்கையை திட்டம் போட்டு கெடுத்த அவனின் அனைத்து செயல்களுக்கும் சேர்த்து வைத்து கொடுத்தான்…

ஸ்ருதிகா ஸ்ரீக்குமே வாசுதேவ்வின் இந்த பேச்சு ஒரு வித அருவெருப்பை தந்தது.. தங்கள் வீட்டிற்க்கு வந்த போது அத்தனை மரியாதையுடன் பேசியவனா இவன் என்பது போலான இன்றைய பேச்சில் ஸ்ருதிகா முகத்தை சுழித்தான்..

அதனால் சாண்டில்யன் வாசுதேவ்வை அடித்த போது அவள் தடுக்க கூட முயலவில்லை… சந்தியாவுமே முன் தான் சாதாரணமாக சாண்டில்யனை பற்றி பேசும் போது எல்லாம் மறை முகமாக பேசியதில் அர்த்தம் இன்று விளங்கியது..

கூடவே சாண்டில்யன் அங்கு இருக்கும் போது.. தன்னை அந்த இடட்த்திற்க்கு வர விடாது தடுத்து நிறுத்தியது… இல்லை தான் அங்கு இருந்தாலுமே அந்த இடத்தை விட்டு செல்வது போல ஏதான ஒரு வேலை கொடுத்து அனுப்பி விடுவது என்ற செய்கையின் முழு விவரமும் தெரிய வர. வெறுத்து விட்டாள்..

அதுவும் இதோ அடி வாங்கியும் அடங்காது… “ இந்த பெண்ணை நான் விரும்பினேன் டா…” என்று ஸ்ருதிகா ஸ்ரீயை காண்பித்து சொன்னவனின் பேச்சில், சாண்டில்யன் அடித்து கொண்டு இருந்தவன். அதிர்ந்து நின்று விட்டான்…

ஏன் ஸ்ருதிகா ஸ்ரீயுமே என்ன இது புது பேச்சு.. தன்னிடம் பேசும் போது அத்தனை பண்போடு தானே பேசினான்.. இது போல தன்னுடன் பேசினான்.. என்று கொஞ்சம் தெரிந்து இருந்தாலுமே அவள் வாசு தேக்விடம் பேசி இருந்து இருக்க மாட்டேன்னே…

கூட அவள் அண்ணன் கூட வாசுதேவ்வை பற்றி நல்லவிதாக தானே சொன்னான். வாசுதேவ் அதில் எல்லாம் கெட்டி தான்.. தன் உண்மையான முகத்தை அவன் யாரிடமும் காட்டியது கிடையாது.. தாய் தந்தையர் கூட பிறந்தவர்கள் ஏன் திருமணம் செய்து ஒரு குழந்தையும் அவனுக்கு பெற்றேடுத்த மனைவி சரண்யாவுக்கே கொஞ்சம் நாட்கள் முன் தான் வாசு தேவ்வின் உண்மையான முக தெரிந்தது எனும் போது ஸ்ருதிகா ஸ்ரீ எல்லாம் எம்மாத்திரம்..

ஸ்ருதிகா ஸ்ரீ அடுத்து அதோடு சாண்டில்யனுக்கு வாசு தேவ் யாரு என்று அவள் யோசிக்கும் போதே… வாசுதேவ்வை பற்றிய முழுவிவரமும் ஸ்ருதிகா ஸ்ரீக்கு தெரிய வந்தது.. அதுவும் சாண்டியல் க்ராஸ் கொஸ்டில் கேட்காமலேயே, வாசு தேவ் அனைத்தும் ஒப்பிவித்து விட்டான்..

அதாவது… மீண்டுமே ஸ்ருதிகா வை காட்டி… “ இவளை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா.? என்று சாண்டில்யனை பார்த்து கேட்ட போது.. சாண்டில்யன் முன் போல அதிர்ந்து எல்லாம் நிற்கவில்லை.. நீட்டிய வாசு தேவ்வின் விரலை உடைத்து விட்டான்..

வாசு தேவ் அப்போது கூட அமைதியாகவில்லை.. அந்த வலியையும் மீறி சாண்டில்யன் மீது வாசு தேவ்வுக்கு இருக்கும் பொறாமையின் அந்த உணர்வானது ஸ்ருதிகா ஸ்ரீயை சாண்டில்யனுக்கு பெண் பார்த்தது முதல் அனைத்தையும் சொல்லி முடித்தவன்.

பின் சந்தியாவை காட்டி… “ இதோ இவளை பிடித்தா கல்யாணம் செய்தேன்… நான் என் தங்கை கூட ஒன்னா இருக்கனும் என்று என் தலை எழுத்து பிடித்த பெண் கிட்ட காதலை கூட சொல்லாம இருட்டில் சகிச்சிக்கிட்டு வாழ்ந்துட்டு இருக்கேன். ஆனா நீ இப்போ ஒன்னுக்கு இரண்டா.” என்று திரும்ப பேச..

இப்போது அவனை யாரும் அடிக்கவில்லை.. அவன் பேசியதே கேட்டு இருந்தனர்.. அதிர்ந்து.. அதோடு ஸ்ருதிகா ஸ்ரீ… வாசு தேவ் பேச பேச சாண்டில்யனை தான் பார்த்து கொண்டு இருந்தான்..

தன்னை விட இவன் எவ்வளவு பெரிய துரோகத்தை சந்தித்து இருக்கிறான்.. வாசு தேவ் பேசும் போது சாண்டில்யனின் அம்மாவின் ஆசையான குழந்தைகளை பற்றியும் சொல்ல..

தன் இரு குழந்தைகளையும் பார்த்து அன்று சொன்ன இல்லாதவனுக்கு தான் அதனுடைய மதிப்பு தெரியும்.. என்ற வார்த்தையின் அர்த்தமும்.. அதில் இருந்த வலியும்.. கூடவே துரோகமும் சேர்ந்தே தெரிந்தது..

வாசு தேவ்வோடு எப்போதும் வால் போல் கூடவே இருக்கும் சுமதியின் கணவன் விமல் அப்போது தான் வாசு சென்ற இடம்.. தெரிந்து சாண்டில்யனின் கேபினுக்குள் வந்த சமயம்.. விமல் கூட ஒன்றும் செய்ய முடியாது. அதாவது வாசு தேவ்வின் முகம் மூடி முற்றிலுமாக விழுவதை அவனால் தடுக்க முடியாது போய் விட்டது..

இதில் சந்தியாவின் பெற்றோர் வீடு வந்த போது அந்த வீட்டு பணிப்பெண் வாசு தேவ் வந்ததையும். தான் பேசிய பேச்சும்… அதோடு சந்தியா எங்கு சென்று இருக்கிறாள் என்று சொன்னது. வாசு தேவ் அங்கு தான் சென்று இருக்கிறான். என்று சொன்னவன் கூடவே..

“நீங்க கவலை படாதிங்கம்மா நம்ம மாப்பிள்ளை நம்ம சந்தியா பாப்பாவை பிரிய விட மாட்டாரு…” என்று வேறு சேர்த்து கூற.

வாசு தேவ் சாண்டில்யனின் மீது எத்தனை பொறாமை எத்தனை வெறுப்பு இருக்கிறது என்பதை தான் அன்று அவர்கள் நேரில் பார்த்தனரே…

இதில் இந்த பெண் டைவஸ்க்கு சாண்டில்யன் கிட்ட தான் போவேன் என்று இந்த பெண் அடம் பிடித்தது கணவதி வசந்திக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..

இன்னும் கேட்டால் தன் மகள் விவாகரத்து செய்வதிலேயே அந்த பெற்றோருக்கு முழு சம்மதம் இல்லை தான்..

வசந்திக்கு அன்று மகள் சாண்டில்யனை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்ன போது வசந்திக்கு கூட சம்மதம் தான்..

காரணம் அவருக்குமே வாசுவை விட சாண்டில்யனிடம் இருக்கும் சொத்து கூட அந்த ஆளுமை பிடித்து இருந்தது.. கூடவே மகளும் விருப்பப்படுகிறாள் எனும் போது அவருக்கு முழு சம்மதம் தான்..

வாசு தேவ்வை என்ன சொல்லி தவிர்ப்பது என்று வசந்தி யோசிக்கும் போது தான் வாசு தேவ் சாண்டில்யனுன் ஜாதகத்தை பற்றி சொன்னது.

அதனால் வாசு தேவ்வின் இந்த பொய்.. பின் அவனின் செயல்கள் அனைத்தும் பார்த்து அவன் மீது கோபம் இருந்தாலுமே, மகள் விவாகரத்து வரை உடனே சென்றதில் கொஞ்சம் யோசித்து முடிவு என்று சொன்னவர்கள் கூட இதோ பணிப்பெண் சொல்லி அலறி அடித்து ஓடி வந்தவர்களின் காதில் வாசு தேவ்வின் இந்த பேச்சு அனைத்தும் கேட்டதில் விருப்பம் இல்லாது சம்மத்தித்தவர்கள். இப்போது உடனே விவாகரத்து செய்.. அதுவும் மகள் போலவே அவர்களும். சாண்டில்யா நீ தான் என் பொண்ணுக்கை டைவஸ் வாங்கி தரனும். அது உன் கட்சிகாரராகவா.. இல்ல சந்தியா உனக்கும் மாமன் மகள் தான்.. அந்த உரிமையில் வாங்கி தருவீயோ… அதை நீ தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூரி விட்டனர்.








 
Well-known member
Joined
Mar 22, 2025
Messages
79
ஏன் சாண்டில்யன் வாங்கி கொடுத்தால் தான் டைவர்ஸ் கிடைக்குமா நீங்க பக்கத்து லாயரை பாருங்க மா கேஸ் இல்லாமல் இருக்காராம்.

எங்களுக்கு வேற ஸ்ருதிக்கு உண்மை தெரிந்ததில் பல நன்மைகள் வேற இருக்கு இனி சாண்டியலுக்கு கொஞ்சம் வேலை கம்மி ஆகும் ப்யூட்டி வேற பல் புடுங்கனும் இப்படி ஏக பட்ட வேலையை சேர்த்து வைச்சு இருக்கோம் நீங்க வேற குறுக்க மறுக்க வந்து போங்க போங்க பஞ்சாயத்தை அடுத்த வக்கீலை வைச்சு பாருங்கள்
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
184
வாசு இனி யாராலும் காப்பாத்த முடியாது 😂😂😂😂
அவனே குழியை தோண்டி உள்ள போய் படுத்துகிட்டு மண் அள்ளி போட்டுகிட்டான் 🤣🤣🤣🤣🤣🤣
 
Active member
Joined
May 7, 2025
Messages
36
நைஸ் டீசர் 🤩🤩🤩
வாசு சாப்ட்டர் ஓவர் ஓவர் 🤓🤓

இனி வக்கீல் சார் தன் காதல் பயிரை வளர்க்க தொடங்கலாம் ♥️♥️💞💞
 
Well-known member
Joined
Aug 16, 2024
Messages
413
ஒருவன் எவ்வளவு நாள் தான் பொய் முகமூடியை போட்டுக் கொண்டு இருக்க முடியும். இதோ இப்போது வாசுவின் முகமூடி கிழிந்து விட்டது அல்லவா?
 
Well-known member
Joined
Jun 2, 2024
Messages
115
Waiting for the ud...epdiyo Sandilyan ku vela micham Sruthiku in detail explain pana theva illa...Intha Vasu ku innum venum...don't know what will be his sisters' reaction....Sumathi da maamiyar ah deal la vitrathinga mudinja avalukum 4 adi edhachum oru scene la vainga pls...aapu vaika vendiya list perusa poguthu maam... 😂
1. Sree Kanth and his beauty
2. Bhavani
3. Sruthi's brothers and sis in laws
4. Sumathi's mother in law and Vimal
5. Vaasuku innum adi padanum 😜
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,244
Waiting for the ud...epdiyo Sandilyan ku vela micham Sruthiku in detail explain pana theva illa...Intha Vasu ku innum venum...don't know what will be his sisters' reaction....Sumathi da maamiyar ah deal la vitrathinga mudinja avalukum 4 adi edhachum oru scene la vainga pls...aapu vaika vendiya list perusa poguthu maam... 😂
1. Sree Kanth and his beauty
2. Bhavani
3. Sruthi's brothers and sis in laws
4. Sumathi's mother in law and Vimal
5. Vaasuku innum adi padanum 😜
இனி ஒவ்வொருத்தருக்கும் அவர்கள் செய்த பாவத்தின் பலனை அனுபவிப்பார்கள்
 
  • Like
Reactions: grg
Top