Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட....15

  • Thread Author
அத்தியாயம்…15

ஸ்ரீ காந்த் அன்று பாவனாவுடனே இருந்து பார்த்து கொண்டவன்.. தன் வீட்டிற்க்கு வர இரவு பத்து மணி பிடித்தது… வீட்டில் வந்த போதும் ஒரே அக்கப்போர் தான்… தன் அம்மாவின் புலம்பலான…

“எனக்கு என்ன வருஷம் கூட கூட வயது ஏறுதா குறையுதா…” என்று கோகுலிடம் புலம்பிக் கொண்டு இருந்தார்..

கோகுல் தான்.. “ ம்மா என்னால முடிஞ்சது வேலையாளை வைக்க மட்டும் தான் முடியும்மா.. நீங்க இதை வைத்து சும்மா சும்மா அனிதாவை பேசிட்டு இருக்காதிங்க.. அவளுக்கு எங்க பொண்ணை பார்த்துக்கவே நேரம் சரியா இருக்கும்மா… எங்க பொண்ணுக்கு வயசு கூட கூட அனிதாவினாலுமே முடியலேம்மா.. புரிஞ்சிக்கோங்க… எனக்கு எல்லாத்தையும் விட என் மகள் முக்கியம்…” என்று விட்டான்..

இதை அனைத்தையும் கேட்டு கொண்டு தான் ஸ்ரீ காந்த் தன் படுக்கை அறைக்குள் நுழைந்தது… கோகும் தன் மகளை பற்றி பேசிய போது அவனுக்கு தன் மகள்களின் நியாபகம் வந்தது..

“ப்பா… “ என்று இரண்டு மழலைகள் ஓடி வந்து தன் கையை பிடித்து கொள்ளும் போது…

ஸ்ரீ காந்த்… “ ப்பா டர்ட்டியா இருக்கேன் டா…. கூட ரொம்ப டையாட் வேறு..” என்று சொன்னால் போதும்… சமத்தாக கேட்டு கொண்டு அவர்கள் பாட்டிற்க்கு விளையாட சென்று விடுவார்கள்..

குழந்தைகளிடம் சொன்னது போல்… குளித்து முடித்து இரவு உடை அணிந்ததுமே ஸ்ருதிகா ஏதாவது நேரத்திற்க்கு தகுந்தது போல சாப்பிட கொடுக்க. அதை சாப்பிட்டு கொண்டே… பாவனாவோடு தன் கை பேசியில் வாட்சாப்பில் பேசி கொண்டு இருப்பான்…

அப்போது வாட்சாப்பில் பேசி கொண்டு இருக்கும் போது… இவன் சாப்பிடும் சத்தம் கேட்டு பவானா. “ என்ன செய்யிறிங்க.” என்று கேட்க. இவன். தான் சாப்பிடும் உணவினை சொல்லி சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன்… என்று சொல்ல..

அதற்க்கு பாவனா… “ எனக்கு இல்லையா..?” என்று கேட்டவளுக்கு.

“வீட்டிற்க்கு வா வந்தா தருகிறேன்..” இரண்டு அர்த்தம் கொண்டதாக… அனுப்புவான்… அதை எல்லாம் நினைத்து பார்த்து கொண்டு இருந்தான்…

அப்போது இனிதாக இனித்த ஒன்று.. இன்று ஏனோ கசந்து போனது போலான ஒரு உணர்வு… பாவனாவை தன் மனைவியின் சீமந்ததில் தான் ஸ்ரீ காந்த் முதன் முதலில் கண்டது… கண்ட போது.

“என் ஒய்பை ரொம்ப அழகா ஆக்கிட்டிங்க. அதுக்கு தாங்கஸ்…” என்று சிரித்தப்படி பேசியவனிடம் பாவனா..

“இன்னைக்கு தான் முதன் முதலில் உங்க மனைவியை நீங்க அழகா பார்த்து இருக்கிங்க போல…” என்று கூறினாள்..

ஸ்ரீ காந்த்… “ ஆமா உண்மையில் அது தாங்க…” என்று பதில் அளித்தான்… ஆம் உண்மையில் அன்று அந்த வார்த்தை ஸ்ரீ காந்த் உணர்ந்து தான் கூறியது.

குழந்தை உண்டாகிய பின் ஸ்ருதி நன்கு உடை உடுத்தி கூட அவன் பார்க்கவில்லை.. அதனால் தானோ என்னவோ நீண்ட நாட்கள் கழித்து பார்த்த தன் மனைவியின் இந்த அலங்காரமானது.. அழகை விட இன்னும் பேரழாகாக காட்டியது என்று கூட சொல்லலாம்…

அதற்க்கு பாவனாவும் விடாது… “ அப்போ என் மேக்கப் இருக்கும் வரை தான் உங்க மனைவி அழகா…?” என்று கேட்டவளிடம். தன் தோளை குலுக்கி கொண்டான். இந்த வார்த்தைகள் எல்லாம் ஸ்ருதிகா ஸ்ரீயின் முன்பு தான் நடந்தது…

ஆனால் உண்மையில் ஸ்ரீ காந்த் இந்த பேச்சு எல்லாம் மிக எதார்த்தமாக தான் பேசியது.. ஸ்ருதிகா ஸ்ரீயிமே கிண்டலாக தான் அதை எடுத்து கொண்டாள்…

பெரும் பாலோர்… தன் மன வக்கிரத்தை இது போல வேடிக்கை பேச்சில் மூலம் தான் கொட்டுகின்றனர் என்பது அன்று ஸ்ருதிகா ஸ்ரீக்கு புரியவில்லை தான்..

பின் ஸ்ரீ காந்த் தன் மனைவியின் மூலம் தான பாவனாவை பற்றி அனைத்தும் அறிந்து கொண்டது.. அப்போது கூட அதை அவன் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை..

பின் ஸ்ருதிகா ஸ்ரீ குழந்தை பெற்று இங்கு வந்த போது… இரண்டு குழந்தைகளை வைத்து கொண்டு வீட்டு வேலையில் மூழ்கியவளின் கோலம் மீண்டும் ஸ்ரீ காந்துக்கு ஒரு வித எரிச்சலை கொடுத்தது..

மசக்கையில் முடியாது இப்படி இருக்கிறாள்… குழந்தை பிறந்த பின்.. திருமணம் ஆன புதியதில் எப்படி இருந்தாளோ அப்படி இருப்பாள் என்று நினைத்தவனுக்கு மனைவின் இந்த கோலம் ஒரு வித எரிச்சலை கொடுத்தது..

கூடவே வயதின் தாக்கம்.. நீண்ட நாட்களாக மனைவியை தொடாதது.. என்று அனைத்தும் சேர்ந்து இருந்த சமயத்தில் தான் குழந்தையை பார்க்க வந்தேன் என்று அவ்வப்போது வந்த பாவனாவின் தோற்றம் அவன் கண்ணுக்கு குளிர்ச்சியை தந்தது..

கற்பழிப்பில் ஒருவர் சம்மந்தப்பட்டால் மட்டும் போதும்.. ஆனால் கள்ள உறவு இருவருமே சம்மந்தப்பட்டது தானே… பாவனாவுமே ஸ்ரீ காந்தை பார்த்தாள்..

பின் மெல்ல மெல்ல கை பேசி எண் பரிமாறக்கொள்ளப்பட்டு கை பேசியில் மெசஜ் பின் பேச்சு.. பின் வீடியோ கால் பின் நேரில் பேச்சு.. பின் என்ன அடுத்து அடுத்து என்று முன்னேறி சென்று விட்டது..

அப்போது ஸ்ரீ காந்துக்கு இனித்தது… ஆனால் இது போல ஒரு நிலை அவனுக்கு வரும் என்று அவன் கனவிலும் நினைத்தது இல்லை.. நினைப்பான் ஒரு சில நேரம் நினைப்பான் மனைவிக்கு இந்த விசயம் தெரிந்தால் என்ன ஆவது என்று…

ஆனால் ஸ்ருதியை பற்றிய அவனின் கணிப்பான அமைதியான பயந்த பெண்… அதோடு தான் வேலையை விட சொன்னதுமே விட்ட பெண்… தெரிந்தால் அழுவாள்.. அம்மா வீட்டை அழைத்து கொண்டு வந்து ஒரு பஞ்சாயித்து வைப்பாள்.. பின் தான் ஒரு சத்தியம் செய்தால், அனைத்தும் சரியாகி விடும் என்று நினைத்தான்… ஸ்ரீ காந்த் ஒன்றில் உறுதியாக இருந்தான்.. அது தன் குடும்ப வாழ்க்கை கெட கூடாது என்று… ஆனால் அவன் நினைத்தது ஒன்று கூட நடவாது போனதில், அடுத்து என்ன என்று அவன் தத்தளித்து கொண்டு இருந்தவனுக்கு ஒன்றும் புரியாத நிலை தான்..

சாண்டில்யன் ஸ்ருதிகா சென்றதும்.. சந்தியாவின் விசயத்தை கவனித்தான். முன் என்றால், கூட பரவாயில்லை.. இப்போது வாசு தேவ் ஸ்ருதிகாவை விரும்பியதை பற்றி சொன்னதில், அதுவும் தான் விரும்பிய பெண் தனக்கும் கிடைக்க கூடாது என்று சொன்னவனை தான் ஏதாவது செய்து ஆக வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டான்..

இனி அமைதியாக இருந்தால் தன்னை போல ஏமாளி ஒருவன் இல்லை… அப்படி இருந்தால் என்னை நானே மிகவும் கீழாக உணர்வேன்.. மற்றவர்களுக்கு நியாயத்தை வழிங்கி தரும் நான்.. எனக்கு உண்டான நியாயத்தை நான் தானே பெற வேண்டும்… என்று நினைத்தவனின் நடவடிக்கை அனைத்துமே அதை ஒட்டி தான் இருந்தது..

வாசு தேவ் அங்கு இருந்து அவ்வளவு சீக்கிரத்தில் செல்லவில்லை. அங்கு இருந்தவர்கள் அடித்து தான் விரட்டி விட்டனர்..

போகும் போது கூட அத்தனை பேச்சுக்கள் பேசி விட்டு தான் சென்றது.. அதுவும் நான் விவாகரத்து தர மாட்டேன் நீ என்ன செய்வ..? என்ன செய்ய முடியும்…” என்று சொன்னவன் பின் தன் தாய் மாமனிடமே…

“அவளாவது அவனை முன்னவே பிடிக்கும்… கிடைத்தது சான்ஸ் என்று இருக்கா… ஆனா உங்களுக்கு என்ன கேடு....?” என்று கேட்டவன்.

பின்.. “ ஓ நீங்களுமே என்னை விட அவன் தான் பெட்டர் என்று நினைக்கிறிங்கலோ… அது தான் ஜாதகத்தில் ஒன்னும் இல்ல என்று தெரிந்ததும்… என்னை கழட்டி விட்டுட்டு உன் மகளுக்கு அவனை மாப்பிள்ளையாக்க பார்க்கிறிங்கலோ…. “ என்று சொல்லி கொண்டு சென்றவன். கடைசியாக.

“நீ எனக்கு தான் மாமா. உங்க பொண்ணுக்கு இல்லை..” என்று வாசு தேவ் சொல்லி முடித்த உடனே. பட்டென்று அடித்து விட்டார் கணபதி..

என்ன மாதிரியான வார்த்தைகள் அது… இவனையா நாம் இத்தனை வருஷம் உயர்வாக நினைத்து கொண்டு இருந்தோம் என்று ஆகி விட்டது கணபதிக்கு.

பின் ஒரு வழியாக வாசு தேவ்வை அங்கு இருந்து பிடித்து தள்ளிய பின்.. கணபதி…

“சாண்டில்யா சீக்கிரம் முடிச்சி விடுப்பா… இதுக்கு மேல வார்த்தை எல்லாம் கேட்க எனக்கு தெம்பு…” என்று சொன்னவர்.

பின்.. “ பைத்தியக்காரன்… அதுக்கும் ஒத்து கொள்ள மாட்டான் போல….” என்றும் சொல்ல..

இதற்க்கு மட்டும்… “ அவன் ஒத்து கொள்ள மாட்டான் தான்… ஆனா நீங்க சொன்னதை வைத்தே சந்தியாவுக்கு விவாகரத்து வாங்கி விடலாம்..” என்று விட்டான்..

சாண்டில்யன் இப்படி சொன்னதும்… கணபதியோ..

“நானா… நான் என்ன சொன்னேன்… “ என்று கேட்டதும் சாண்டில்யன் “ அது தான் இப்போ சொன்னிங்கலே… பைத்தியக்காரன் விவாகரத்து கூட கொடுக்க மாட்டான்…” என்று சொன்னவன் அது போலவே சந்தியாவுக்கு உண்டான விவாகரத்தை பைல் செய்தான்..

செய்தவன் அடுத்து உண்டான வேலையையும் பார்த்த பின் தான் வீடு வந்தது..

இங்கு மாலை சென்ற பின் கூட மகள் தன் அறையை விட்டு வெளியில் வராது போக… ஷண்முகமதி… என்ன இது… தன் கணவன் துரோகத்தை சந்தித்த அன்று தானே நான் கீழே விழுந்து விட்டேன் என்று தன்னை தேடி வந்தது..

அப்போது கூட மகள் இப்படி இடிந்து போய் நிற்கவில்லையே… தைரியமாக தானே இருந்தாள்…, இன்று என்ன ஆச்சு.? ஏது ஆச்சு.? என்று தன் பேத்திகளை கவனித்து கொண்டே கவலைப்பட்டு கொண்டு இருந்தவரின் கை பேசிக்கு அவரின் மூத்த மாப்பிள்ளை குணசேகரனிடம் இருந்து அழைப்பு வந்தது..

ஷண்முகமதியே… தன் மூத்த மாப்பிள்ளையை அழைக்கலாம் என்று தான் நினைத்து கொண்டு இருந்தார்.. இப்போது குணசேகரனே அழைத்து விடவும்..

அழைப்பை ஏற்றதும்.. குணசேகரனை பேச விடாது கட கட என்று… “ என்ன என்று தெரியல மாபிள்ளை… காலையில் நீங்க சொன்ன அந்த வக்கீல் தம்பியை பார்க்க போனா… அங்கு என்ன ஆச்சு என்று தெரியல வந்ததும் என் கிட்ட கூட ஒன்னும் பேசாது ரூமுல போய் அடஞ்சிட்டா… குழந்தைங்க வேற.. அங்கு சண்டை.. டிஷூ டிஷூ என்று சொல்றாங்க.. அவங்க சொல்றது எனக்கு விலங்கல… அவன் வந்தானா என்று குழந்தைங்க கிட்ட கேட்க கூட பயம். இது வரை குழந்தைங்க அவங்க அப்பனை கேட்கல…. அந்த லட்சணத்தில் தான் குழந்தைங்க கிட்ட இருந்து இருக்கான் போல அவன்.,.

நானே குழந்தைங்க கிட்ட அவங்க அப்பனை கேட்டு நியாபகப்படுத்த விரும்பல.” என்று சொல்லி முடிக்க..

குணசேகரனுக்கு ஷண்முகமதியின் இந்த பதட்டத்திற்க்கு உண்டான காரணம் புரிந்தது தான். கணவன் இல்லாது கடைசி காலத்தில் பெரியவர்களுக்கு கிட்டும் ஒரு நிம்மதி.

‘பரவாயில்லை. நம்ம பசங்களை கரை சேர்த்து விட்டோம். என்பது தான்… இன்று ஒரு பெண் கரை சேர்வாள் என்று ஏற்றி விட்ட ஓடம். ஓட்டையானதில் மகள் குழந்தைகளோடு நடுகடலில் தத்தளித்து போவாளே என்ற ஆதங்கத்தில் தான் பேசுகிறார் என்று புரிந்தவனாக..

குணசேகரன்.. “ அத்த அத்த நீங்க பயப்படும் படி ஒன்னும் இல்ல…. அத்த.” என்று சொன்னவன் இன்று சாண்டில்யனின் கேபினில் நடந்த விசயங்கள் அனைத்தையும் குணசேகரன் சொல்லி முடிக்க..

இதை எல்லாம் கேட்ட ஷண்முகமதியோ… “ என்ன மாப்பிள்ளை சொல்றிங்க. தன்னை விடுத்து தன் அண்ணனை தத்து எடுத்ததுக்கா. தம்பிக்காரன் இத்தனையும் செய்தான்…” என்று கேட்டவருக்கு, இன்னுமே தன் அதிர்வில் இருந்து அவரால் விடு பட முடியவில்லை…

குணசேகரன்.. “ அத்த அத்த..” என்று கை பேசியில் அழைக்க. சிறிது நேரம் பிடித்தது ஷண்மதிக்கு தன் நிலைக்கு வட..

பின்.. “ என்ன மாப்பிள்ளை இது.. நீங்க ஸ்ருதிகா அப்பா கிட்ட அத்தனை பேசியது இந்த வக்கீல் தம்பிக்கா…” என்று கேட்டவர் பின்…

“இந்த தம்பியையே கட்டி இருந்தா இன்னைக்கு என் பொண்ணு இரண்டு குழந்தைகளோடு கோர்ட்டில் நிற்க்கும் படி ஆகி இருக்காதே….” என்று ஒரு ஆதங்கத்தில் ஷண்முகமதி சொல்ல..

குணசேகரன்… “ஆனது ஆகிடுச்சி அத்த. போனதையே நினச்சிட்டு இருந்தா இப்போ இருக்கும் நம்ம நிம்மதி தான் கெட்டு விடும் ..” என்று சொன்ன குணசேகரன் பின் மெதுவாக கெட்டதிலும் ஒரு நல்லது… இதை தான் நாம் நினைத்து கொள்ளனும்…” என்று சொன்ன தன் மூத்த மாப்பிள்ளையிடம் ஷண்முகமதி..

“என்ன நல்லத நினைக்க சொல்றிங்க மாப்பிள்ளை…. இரண்டு குழந்தைகளோடு என் பொண்ணு நிற்கிறா… அவள் புருஷனை விட்டு வந்து ஒரு மாதம் கூட ஆகல… அது வரை கூட என் மகளுக்கு ஒன்னுக்கு இரண்டு அண்ணன்கள் இருந்தும்.. இதோ குழந்தைகளை கூட்டிட்டு அலையிறா… இரண்டு குழந்தைங்களோடு… நான் இருக்கும் வரை என் பொண்ணுக்கு பாதுகாப்பு… பின்.. எனக்கு ஒன்னும் புரியல மாப்பிள்ளை..” என்று தன் மன ஆதங்கத்தையும் பயத்தையும் குணசேகரனிடம் சொன்ன ஷண்முகமதியிடம்.

“சாண்டில்யன் பார்த்துப்பாரு அத்த… நீங்க கவலை படாதிங்க..” என்று தைரியம் அளித்தான்..

“விவாகரத்து வாங்கி கொடுத்துடுவாரு.. ஆனா நான் அதுக்கு பின்னான என் பொண்ணோட வாழ்க்கையை பற்றி யோசிக்கிறேன் மாப்பிள்ளை…” என்று சொன்ன போது குணசேகரன் ஒரே வார்த்தையில்..

“அதுவுமே சானண்டில்யன் பார்த்து கொள்ளுவார் அத்த..” என்று விட்டான்…

ஸ்ரீ காந்துக்கு அடுத்த நாளுமே பாவனாவின் மெசஜில் தான் விடிந்தது… முன் எல்லாம் தன் கை பேசியை பாவனா ஏதாவது மெசஜ் அனுப்பி இருக்கிறாளா என்று ஆர்வமுடம் அடிக்கடி எடுத்து பார்ப்பவன்…

இன்று அனுப்பி இருக்க போகிறாள் என்று தன் கை பேசியை தூரம் விலக்கி வைத்து விட்டு தன் அலுவலகத்திற்க்கு கிளம்பினான்..

இன்றுமே அவன் உடை ஐயன் செய்யாது இருக்க நேற்று போல கசங்கிய உடையை தான் அணிந்து கொண்டது..

இன்று அலுவலகத்திற்க்கு கட்டாயம் சென்று ஆக வேண்டும்.. இயர் என்டிங்க வேறு அலுவலகத்தில் அத்தனை வேலை இருக்கு என்று நினைத்து கொண்டே தான் சாப்பிடும் இடத்தில் வந்து அமர்ந்தது…

நல்ல வேலை கோகுல் நேற்று இரவே அவன் மாமியார் துணை கொண்டு ஒரு சமையல் செய்யும் பெண்மணியை பிடித்து விட்டான் போல… இவன் அமர்ந்ததும் தட்டில் இட்லியும்.. தொட்டுக் கொள்ள சட்னியும் இருக்க.

கடந்த சில நாட்களாக சரியான உணவு இல்லாததினால் இட்லியை பார்த்ததும். சாப்பிடும் ஆர்வத்துடன் வாயில் ஒரு துண்டு இட்லியை எடுத்து வாயில் வைத்தான்.. வைத்த நொடி அடுத்து தன் வாயில் இருந்து அந்த இட்லி துண்டை எடுத்து கீழே வைத்தவன்..

தன் அன்னையிடம்.. “ ம்மா என்னம்மா இது இப்படி புளிக்கிறது….?”

ஏதுவும் சொல்லாது சாப்பிட்டு கொண்டு இருக்கும் கோகுலை பார்த்து கொண்டே கேட்டவனுக்கு பதிலாக சமையல் அறையில் இருந்து வந்த சமையல் செய்த பெண்மணி.

“கடையில் இருந்து வாங்கிய மாவூ சாரு…” என்று சொல்ல.

அதற்க்கு ஸ்ரீ காந்த். “ ஓ அப்படியா என்றவன்.

பின்… “இனி வீட்டில் அரைங்க.” என்று சொன்னவனை அடுத்த வார்த்தை பேச விடாத அந்த பெண்மணி..

“சார் இருங்க இருங்க… நான் இந்த சார் கிட்ட கட்டன் ரைட்டா எல்லா சொல்லிட்டு தான் வேலைக்கு வந்தேன்… இந்த மாவூ அரைக்க மாட்டேன்.. கடைக்கு போக மாட்டேன்….” என்று கோகுலை கை காட்டி சொல்லி விட்டு மீண்டும் சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டார் அந்த பெண்மணி..

ஸ்ரீ காந்துக்கு இன்றும் உணவு சரியில்லாது பாதி வயிறுடன் தான் அலுவலகம் சென்றது.. அங்கு அவனை நிம்மதியாக வேலை ஸ்ர்ய்ய விடாது பாவனா தொடர்ந்து அழைப்பு விடுக்க..

மற்றவர்களின் வேலைகளையும் இவனின் பேசியில் அழைப்பு ஒசை கெடுப்பதால் ஒரு நிலைக்கு மேல் எடுத்து விட்டான்..

“எடுத்தவன் பாவனா உன் மனசுல நீ என்ன நினச்சிட்டு இருக்க…?” என்று கத்த தொடங்க.

பாவனா இவனுக்கு மேல் கத்த தொடங்கி விட்டாள்..

“நீங்க உங்க மனசு என்ன நினச்சிட்டு இருக்கிங்க… என்ன என்னை கழட்டி விடலாம் என்றா.. கேள்வி பட்டேன்.. ஸ்ருதிகாவுக்கு டைவஸ் கொடுக்க மாட்டேன் என்று நீங்க சொன்னதா… அப்போ என்னை கடைசி வரை கீப்பா வெச்சிக்க தான் நினச்சிங்கலா..?” என்று கேட்டவளின் பேச்சில் ஸ்ரீ காந்த்.. நாம இப்போ இவளை திருமணம் செய்து கொள்வதாக சொன்னோம். நினைத்து பார்த்தான். ஒரு நாள் கூட அது போலான பேச்சுக்கள் அவர்களுக்குள் நிகழ்ந்ததாக அவனுக்கு நினைவு இல்லை…

அதில்.. “ நீ என்ன சொல்ற….? எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைங்க இருக்கு என்று தெரிந்து தானே நீ என் கூட பழகின.. இப்போ என்ன இது புதுசா பேச்சி….?” என்று ஸ்ரீ காந்த் கேட்டதற்க்கு ..

பாவனா.. “ அதான் இன்னைக்கு உங்க மனைவியும் இல்லை.. குழந்தைகளும் உங்க வீட்டில் இல்லையே…. அதோடு என் வயித்துல இருப்பதும் உங்க குழந்தை தான்.. அதை நியாபகத்தில் வெச்சிக்கோங்க… ஆபிஸ் விட்டு இங்கு வந்துட்டு போங்க… வரும் போது கொஞ்சம் பழங்கள்.. நட்ஸ்.” என்று ஒரு லிஸ்ட்டை கொடுத்து விட்ட பின் தான் பேசியை வைத்தது…

ஸ்ரீ காந்துக்கு திருடனுக்கு தேள் கொட்டிய நிலை போல இருந்தவன். பாவனா சொன்னது போலவே ஆபிஸ் விட்டதும் பாவனா சொன்ன அனைத்தையும் வாங்கி கொண்டு அவள் வீடு சென்றான்.

இன்றும் நேற்று போலான நிலையில் தான் அவளும் அவள் வீடும் இருந்தது… இப்போது எனக்கு ஒன்றும் வேண்டாம் என் நிம்மதி போதும்.. அதற்க்கு திரும்ப தன் மனைவி தன் வீட்டிற்க்கு வந்தால் போதும் தனக்கு அந்த அமைதி கிடைத்து விடும் என்று நினைத்தான்.

ஆனால் இனி அது முடியுமா.? ஸ்ருதி ஒரே முடிவாக விவாகரத்து என்று நிற்க.. பாவனா… என்னை கட்டியாக வேண்டும் என்று சொல்ல இனி என்னவோ என்று பயந்து கொண்டு தான் பாவனா சொன்னது போல அவள் கேட்ட உணவை ஆர்டர் செய்து கொடுத்து விட்டு.. அவள் சொன்ன சின்ன சின்ன வேலைகளை முடித்து கொடுத்து விட்டு நல்லிரவு தான் வீடு வந்து சேர்ந்தது…

மறு நாளே ஸ்ருதிகாவிடம் இருந்து விவாகரத்து நோட்டிஸ்சும்.. பாவனா அவன் வீட்டிற்க்கு வரவுமாக அமைந்தது…




 
Well-known member
Joined
Mar 22, 2025
Messages
79
அடி செருப்பால நாயே இரண்டு பிள்ளைகளுக்கு அப்பனு தெரிஞ்சு தானே பேசுன இப்போ மட்டும் என்ன டி மண்டபம் பிடி தாலி கட்டுனு ரொம்ப பேசுற அடேய் காந்து உனக்கு இதெல்லாம் பத்தாது டா இன்னும் இருக்கு அனுபவி.

ஷண்மதி மா கவலை படாதீங்க உங்க சின்ன மருமகன் எல்லாத்தையும் பார்த்துப்பார்.

சந்தியா உனக்கும் நிம்மதி கிடைக்கும்.
விஜி மேம் கொஞ்சம் சுமதி மாமியாரை ஒரு கை பாருங்க
 
Active member
Joined
May 12, 2025
Messages
16
பைத்தியக்காரன்னு டைவர்ஸ், தொழிலும் படுத்துடும் வாசுக்கு. தேவையா இது? கெடுவான் கேடு நினைப்பான். ஷண்மதி மா சாண்டி தான் உங்க சின்ன மாப்பிள்ளை. நீங்க கவலைப்படாதீங்க. காந்து - அனுபவி ராஜா அனுபவி. காந்துக்கு தண்டனை சரி. ஆனா இந்த கேடுகெட்ட துரோகி பாவனாவுக்கு ?
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,244
அடி செருப்பால நாயே இரண்டு பிள்ளைகளுக்கு அப்பனு தெரிஞ்சு தானே பேசுன இப்போ மட்டும் என்ன டி மண்டபம் பிடி தாலி கட்டுனு ரொம்ப பேசுற அடேய் காந்து உனக்கு இதெல்லாம் பத்தாது டா இன்னும் இருக்கு அனுபவி.

ஷண்மதி மா கவலை படாதீங்க உங்க சின்ன மருமகன் எல்லாத்தையும் பார்த்துப்பார்.

சந்தியா உனக்கும் நிம்மதி கிடைக்கும்.
விஜி மேம் கொஞ்சம் சுமதி மாமியாரை ஒரு கை பாருங்க
அடுத்து அவங்க தான்
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,244
பைத்தியக்காரன்னு டைவர்ஸ், தொழிலும் படுத்துடும் வாசுக்கு. தேவையா இது? கெடுவான் கேடு நினைப்பான். ஷண்மதி மா சாண்டி தான் உங்க சின்ன மாப்பிள்ளை. நீங்க கவலைப்படாதீங்க. காந்து - அனுபவி ராஜா அனுபவி. காந்துக்கு தண்டனை சரி. ஆனா இந்த கேடுகெட்ட துரோகி பாவனாவுக்கு ?
அவளுக்கும்
 
Well-known member
Joined
Aug 16, 2024
Messages
413
,பாவனா மேக்கப் கண்டு மயங்கி தானே இந்த வேலை எல்லாம் செய்த இனி அவளை பக்கத்தில் வைத்துக் கொண்டு தினமும் ரசித்துக் கொள்ளு ராசா.
 
Last edited:
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,244
ஒரே நாளில் இரண்டு பதிவு போட மாட்டீர்களா விஜி சிஸ்டர்.
எனக்கும் ஆசை தான்.. ஆனா வீட்டில் வேலை இருக்கே பா... அதோடு ரொம்ப நேரம் உட்கார்ந்து இருந்தால் இடுப்பு வலி... வயசு ஆகுதே பா
 
Well-known member
Joined
Mar 22, 2025
Messages
79
எனக்கும் ஆசை தான்.. ஆனா வீட்டில் வேலை இருக்கே பா... அதோடு ரொம்ப நேரம் உட்கார்ந்து இருந்தால் இடுப்பு வலி... வயசு ஆகுதே பா
உடம்பையும் பாருங்க மேம் ஒரு டீ ஒரு மீல்ஸ் கொடுங்க.

மேம் அந்த பொருத்தம் பல கோடி பாகம் இரண்டு எழுதுவீங்களா என் பிரண்ட் கிட்ட அந்த கதைய படிக்க சொன்னேன் இப்போ பாகம் இரண்டு கேட்டு என்னைய நச்சு பண்ணுறா
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,244
உடம்பையும் பாருங்க மேம் ஒரு டீ ஒரு மீல்ஸ் கொடுங்க.

மேம் அந்த பொருத்தம் பல கோடி பாகம் இரண்டு எழுதுவீங்களா என் பிரண்ட் கிட்ட அந்த கதைய படிக்க சொன்னேன் இப்போ பாகம் இரண்டு கேட்டு என்னைய நச்சு பண்ணுறா
கண்டிப்பாக இருக்கு பா
 
Well-known member
Joined
May 11, 2024
Messages
167
இந்த ஸ்ரீகாந்துக்கு வாழ்கை அமைதி என்பது ஏது அவன் ஸ்ரீக்கு செய்த துரோகதிற்கு இனி அனுதினமும் தலை வலி தான் 🌺🌺🌺
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
173
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
என்ன இருந்தாலும் என்றாளோட முன்னாள் தாலிகட்டுனவனுக்கு( புருசன் ன்னு சொல்ல தகுதி இல்லாதவன்)(கசுமாலம்,கபோதி,கேப்மாரி,சோமாரி, முட்டாபய.....) +இன்னும் நெறைய வையோனும் ன்னு தோணுது கடுப்புல வார்த்தை வரமாட்டேங்குது😡😡😡😡😡😡😡😡😡😡😤😤😤😤😤😤😤😤😤😤😤🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬)

ஒரு சாங்கை போட்டு வுடலாம் 👇👇👇
சபாஷ் வாசுக்கு பைத்தியக்காரன் பதவி கிடைச்சதெல்லாம் பத்தாது இன்னும் கிடைக்கனும் கூடவே அந்த மாமியா சுமதிக்கும்.😤😤😤😤
இந்த சிலுப்பட்டை பாவனா குடும்பத்தை கெடுத்தவளுக்கும்⚔️⚔️⚔️ கிடைக்கனும்
 
Well-known member
Joined
Aug 16, 2024
Messages
413
எனக்கும் ஆசை தான்.. ஆனா வீட்டில் வேலை இருக்கே பா... அதோடு ரொம்ப நேரம் உட்கார்ந்து இருந்தால் இடுப்பு வலி... வயசு ஆகுதே பா
First take care of your health.
 
Top