Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட....24.2

  • Thread Author
அத்தியாயம்….24.2

குழந்தையின் காலை துடைத்து கொண்டு இருந்த சாண்டில்யன் என்ன உணர்ந்தானோ.. சட்டென்று மனைவியின் பக்கம் பார்க்க… மனைவியோ தன்னையே பார்த்து கொண்டு இருப்பதை பார்த்தவன் பெண்ணவளின் பார்வையில் என்ன உணர்ந்தானோ….

குழந்தைக்காக… “ என்ன என்று வாய் அசைவில்…” கேட்டவனிடம்…

“ஐ லவ் யூ….” கணவன் போல் வாய் அசைவில் எல்லாம் மனைவி பதில் சொல்லவில்லை.. சத்தமாக தான் இதை சொன்னது..

அதை கேட்ட ஆணவன் மனம் மகிழ்ந்தாலும், அடுத்த நொடி அவனின் கண்கள் குழந்தையை தான் பார்த்தது..

குழந்தையோ… “ ப்பா ம்மா லவ் சொன்னா. மீ டூ யூ… சொல்லனும் ப்பா… சொல்லுங்க சொல்லுங்க…” என்று குழந்தை சொன்னதும் தான் தந்தை கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தான்..

கிராதகி கொஞ்ச நேரத்தி என்னை பதற வெச்சிட்டா… குழந்தையும் இவளும் இது போல சொல்லிப்பாங்க போல.. அது தான் தைரியமா சொல்றா என்று அவன் நினைத்து கொண்டு இருந்த போது..

மீண்டும் குழந்தை… “ ப்பா ம்மா பார்க்குறாங்க பாருங்க. ம்மா கிட்ட சொல்லுங்க. மீ டூ யூ…” என்று சொன்ன போது ஸ்ருதிகா ஸ்ரீ..

“ப்பாக்கு என் மேல லவ் இல்ல போல அது தான் செல்லம் சொல்லலே…” என்று சொல்லி முகத்தை சோகமாக வைத்து கொள்ள.

குழந்தையோ… “ அப்படியா ப்பா. ப்பாக்கு எங்க மேல மட்டும் தான் லவ்வா ப்பா..” என்று குழந்தை கேட்டதற்க்கு..

“இல்ல டா. ப்பாவுக்கு உங்க மேல அம்மா மேல.. இன்னும் சொல்ல போனா… அடுத்து அடுத்து பிறக்க போகும் குழந்தைங்க மேல எல்லோர் மேலும் லவ்வோ லவ்வுடா..” என்று சந்திரி சாக்கில் அன்றே அடுத்து அடுத்த குழந்தைகளுக்கு அடி போட்டது மட்டும் கிடையாது..

குழந்தைகளின் மனதில் அடுத்து வரும் குழந்தைகளை அவர்களை ஏற்கவும் அவன் வழி வகுக்க…

இதை கேட்டு குழந்தை குதித்த குதியில் மற்றவர்களும் முழித்து கொள்ள… மூன்று பெண் குழந்தைகளஒ அருகில் வைத்து கொண்டு முதல் இரவை கொண்டாடியவன் நம் சாண்டில்யன் ஒருவனாக தான் இருக்க முடியும்..

குழந்தைகள் விளையாடுவதை.. அதுவும் பத்து ஆண்டுகளாக விசோ என்று இருக்கும் வீடு தன் அறை இன்று கல கலத்து.. அதுவும் குழந்தைகள் சத்தம் இட. கூடவே அம்மாவுக்கு பிடித்த பெண் குழந்தைகளின் பேச்சும் சிரிப்புமாக இருப்பதை கண்குளிர பார்த்து கொண்டு இருந்த கணவன் அருகில் வந்து அமர்ந்த ஸ்ருதிகா ஸ்ரீ…

“என்ன சாண்டில்யா..?” என்று கேட்ட மனைவின் கை பிடித்து கொண்டவன்..

“உனக்கு தெரியாது டா. நான் இதுக்கு.. இந்த குடும்ப அமைப்புக்கு எப்படி ஏங்கிட்டு இருந்த்ன் என்று.. தேங்கஸ்.. கண்டிப்பா உன் கிட்ட இதை வார்த்தையினால் சொல்ல மாட்டேன்…நாம வாழும் வாழ்க்கையில் உனக்கு அதை உணர வைப்பேன் டா…” என்று சொன்ன கணவனின் தோள் மீது தன் முகத்தின் மோவாயை பதித்து கொண்டவள்..

“எனக்கு தெரியும் சாண்டில்யா.. எனக்கு தெரியும்.. என்னையும் குழந்தைகளையும் நீங்க ரொம்ப ரொம்ப நல்லா பார்த்திப்பிங்க என்று எனக்கு தெரியும் சாண்டில்யா….” என்று சொன்ன ஸ்ருதகா ஸ்ரீயின் முகத்தில் அத்தனை நிம்மதி நிறைவு..

அந்த நிம்மதி கொடுத்த தாக்கமோ என்னவோ… கணவனின் தோள் மீது முகம் பதித்து கொண்டு இருந்தவள் அப்படியே தூங்கி விட…

அந்த பெரிய மெத்தையில் ஒரு ஓரத்தில் மனைவியை ஸ்ருதிகாவின் தூக்கம் கெடாத வாறு படுக்க வைத்தவன். பின் குழந்தைகள் தூங்கும் வரை அவர்களுக்கு சத்தம் செய்யாது விளையாட்டு காட்டிக் கொண்டு இருந்தவன் அவர்கள் தூங்கிய பின் தான் அவனுமே அதே மெத்தையில் படுத்து உறங்கியது.

படுத்து உறங்கினான் என்றால், மனைவியின் பக்கத்தில் எல்லாம் படுத்து உறங்கவில்லை… மெத்தையின் அந்த ஓரம் மனைவி உறங்க.. இந்த ஓரம் அவன் உறங்க… நடுவில் மூன்று குழந்தைகள்.. இன்னுமே மூன்று குழந்தைகள் படுத்து உறங்கும் அளவுக்கு அந்த கட்டில் அத்தனை பெரியதாக தான் இருந்தது.

இந்த கட்டில் அவனின் அன்னை ஆர்டர் கொடுத்து செய்தது… அப்போது அவன் பன்னிரெண்டாவது படித்து கொண்டு இருந்த சமயம்.

கட்டிலின் அளவை பார்த்து.. “ ம்மா. எதுக்கும்மா எவ்வளவு பெரிய கட்டில் செய்திங்க முன் இருக்கும் கட்டிலே நல்லா தானே இருக்கு…?” என்று கேட்ட போது ராஜ ராஜேஸ்வரி…

“இந்த கட்டில் உன் குடும்பத்துக்கு பத்தாதுடா…” என்று சொன்னவரின் பேச்சின் நினைவில் இதே கட்டிலில் எத்தனை இரவுகள் அதை நினைத்து அவன் தவித்து போய் இருக்கிறான்..

ஆனால் இன்று… தன் அன்னையின் ஆசையை நிறை வேற்றி வைத்து விட்ட பூரிப்பில் அவனை உறக்கம் சுகமாக உள்வாங்கி கொண்டது…

மறு நாள் விடியல்… இயல்

“ப்பா ப்பா.. பசி பசி…” என்று தன் சின்ன வயிற்றை காட்டி இவனின் முகத்தை தட்டி எழுப்பவும் தான் அவன் கண் முழித்தது.

விடிந்து நேரம் கடந்து விட்டது என்று அந்த அறையின் சன்னலின் வழியே வந்த சூரிய ஒளி சொல்ல.

குழந்தை பசி எனவும் அடித்து பிடித்து எழுந்தவன் இயலை தூக்கி கொண்டவன்..

“என் செல்லத்துக்கு படியா..?” என்று கேட்டு கொண்டே கீழே போக பார்த்தவனிடம் இசை..

“ப்பா எனக்கும் பசி..” என்று இசைத்தாள்..

“என் செல்லத்துக்கு பசியா..” என்று ஒன்னொரு கையில் தூக்கி கொண்டவன் காதில் மீண்டும் ஒரு குரல்…

“சித்தப்பா எனக்கும் என்று பின் என்ன மூன்று குழந்தைகளுக்கு காலை கடனை செய்ய வைத்தவன் கீழே போகும் முன் மைதிலி….

“சித்தப்பா சித்திக்குமே பசிக்கும் சித்தப்பா.. அவங்களையும் எழுப்பி விடுங்க… அவங்களும் ப்ரஷ்ஷப் ஆகிட்டு நம்ம கூட வரட்டும்…” என்று சொல்ல..

சாண்டில்யனின் பார்வை மெத்தையின் அந்த பக்கம் உறங்கும் மனைவியின் பக்கம் சென்றது.. இத்தனை சத்தத்திற்க்கும் கண் முழிக்காது அசந்து தூங்கி கொண்டு இருந்தாள்.

நையில் ரொம்ப படுத்தி எடுத்து விட்டோமோ.. ஒரு வருடம் காத்திருப்பா இரண்டு வருடா காத்திருப்பா… எத்தனை வருடங்கள்.. மொத்தமா கொட்டி விட்டேன் போலவே..எங்கு எங்கு கன்னி போய் இருக்குமோ தெரியல. பால்கனியின் வேறு வெளிச்சம் இல்ல..

குழந்தைகள் முன் எதுவும் பார்க்க முடியாது என்று நினைத்தவன் கூடவே மனைவி இன்னுமே தூங்கட்டும் என்று நினைத்து..

“முதல்ல நீங்க சாப்பிட்டு விளையாடுங்க.. நான் சித்தி கூட சாப்பிடுறேன் என்ன..?” என்று சொன்னவன் சொன்ன படி கீழே செல்ல.

அங்கு வேலை செய்யும் பெண்மணிகள் இதை மனது நிறைவுடன் பார்த்து கொண்டு இருந்தார்கள்..

இவர்கள் சாப்பிடும் மேஜையில் வந்து அமர்ந்ததும் சமையல் செய்பவர்..

“என்ன ஐய்யா வேண்டும்..” என்று கேட்க.

ஒரு குழந்தை ஆர்லிக்ஸ் கேட்டது என்றால் இன்னொரு குழந்தை போன்வீட்டா கேட்டது. மைதிலியோ… எனக்கு ராகிமால்ட் வேண்டும் என்று கேட்டது.

நேற்றே குழந்தைகள் என்ன குடிப்பார்களோ என்று சாண்டில்யன் ஒரு ஆளை அனுப்பி அத்தனையும் வாங்கி வந்து வைத்து விட்டான்..

அதனால் குழந்தைகள் கேட்டதை கொண்டு வந்து கொடுத்த சமையல் செய்யும் பெண்மணி… சாண்டில்யனுக்கு காபி கொண்டு வந்து கொடுக்க…

“நான் குளிச்சிட்டு வந்து குடிச்சிக்கிறேன் ம்மா. இன்னுமே நீங்க குடிச்சி இருக்க மாட்டிங்க… இதை நீங்க குடிச்சிடுங்க…” என்று சொன்னவன் குழந்தைகளுக்கு குடிக்கும் பானத்தோடு சாப்பிட பிஸ்கெட்டும் வைத்து விட..

வயிறு நிறைந்த பின் மூன்று பேரும் பின் பக்கம் இருக்கும் அந்த செயற்க்கை குளத்தில் விளையாட கேட்க.

அங்கு வேலை செய்யும் ஒரு தம்பதியரை அழைத்து குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு..

“கூடவே இருங்க.. பத்திரம்…” என்றும் சொல்லி விட்டு கீழே இருக்கும் குளியல் அறையிலேயே குளித்து முடித்து விட்டு அங்கும் அவனுக்கு உடைகள் இருக்கும்.. அதில் தன் மனைவி ஏனைய உடைகளை விட வேஷ்டி சட்டையில் இருக்கும் போது அவளின் கண்கள் அதிகமாக தன் மீது படியுது என்று நினைத்து கொண்டே.. அதை எடுத்து உடுத்திக் கொண்டவனின் மனதோ…

“டேய் காலேஜில் படிப்பது போல நீ ரொம்ப தான் டா பண்ற…” என்று கிண்டல் அடித்தாலுமே.. அதை எல்லாம் ஓரம் வைத்து விட்டு கூடத்திற்க்கு வந்தவன்..

அங்கு தன் அன்னை தந்தையின் முன் இருக்கும் பெரிய குத்து விளக்கை ஏற்றியவன்.

புகைப்படத்தில் இருக்கும் அவர்கள் முகத்தையே ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்து கொண்டு இருந்தான்..

இங்கு வந்தால் எப்போதுமே இது போல ஏற்றி விட்டு ஒரு சில நிமிடங்கள் அந்த புகைப்பத்தையே பார்ப்பான் தான்..

ஆனால் அப்போது எல்லாம்… அவர்கள் என்னிடம் பெரியதாக என்ன கேட்டார்கள்.. அனைவரும் செய்வது திருமணம் குழந்தை இது தானே.. அவர்கள் நினைத்த இதை கூட இன்னுமே செய்யவில்லையே என்று ஒரு வித குற்றவுணர்வுடன் தான் பார்த்து கொண்டு இருப்பான்…

ஆனால் இன்று.. “ம்மா ப்பா… இன்று உங்க ஆசைப்படி இந்த வீடே நிறைந்து இருக்கும்மா ஆனா நீங்க மட்டும் தான் இல்லேம்மா…” என்று அவன் மனதிற்க்குள் பேசும் போதே.. மெல்லிய கொலுசு ஒலி கேட்க.

இத்தனை நேரம் பெற்றோருக்கு மகனாக கடமை உணர்வுடன் மனதில் பேசிக் கொண்டு இருந்தவனின் மனதானது சடுதியில் காதல் மனதுக்கு தாவி விட..

ஒரு மந்தாகாச முகத்துடன் தான் தன் மனைவியை அவன் திரும்பி பார்த்தது.. பார்த்தவன் கண்களுக்கு ஒரு வித சங்கடத்துடன் வந்தவளின் பாவனையில் அவனுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்..

மனைவியின் முகத்தில் வெட்கத்த்தையும், காதலையும் எதிர் பார்த்திருந்தானோ என்னவோ… அது இல்லாது போக. ஒரு சமயம் நேற்று கொஞ்சம் முரட்டு தனமாக என்று நினைத்த நொடி கொஞ்சம் பதட்டத்துடன் மனைவியின் முகத்தையும், அவளின் ஆடை மூடாத உடலையும் அவன் ஆராய்ந்து பார்த்தான்.

அதில் பெண்ணவளின் முகம் இன்னுமே சங்கடத்தை தான் கூட்டியது.

அதை கவனித்த சாண்டில்யனோ.. மனைவியின் அருகில் வந்து… “ என்ன டா. எங்காவது வலிக்குதா.?” என்று பதறி போனவனாக கேட்டவனின் கேள்வி பாவம் பெண்ணவளுக்கு புரியவில்லை.

அதில்… “ என்ன சொல்றிங்க சாண்டில்யா..?” என்று கேட்ட போது… தான் நினைத்ததை கேட்டவனுக்கு உடனே பெண்ணவளாள் பதில் அளிக்க முடியவில்லை..

ஒரு வகையில் சாண்டில்யன் கேட்டது சரியே.. எழும் போதே நேற்று தெரியாத வலி அனைத்தும் அவள் உடம்பில் தெரிந்தது தான்.. அவளுமே நினைத்து கொண்டாள்.. என்ன இது நேத்து எதுவும் தெரியலையே என்று. பின் அவளுக்கு அவளே.. நீ இந்த உலகத்தில் இருந்தால் தானே… நேற்று நீ நீயா இருந்தியா முதல்ல என்று…

ஆனால் இப்போது அவளின் இந்த முக மாற்றத்திற்க்கு காரணம் அது அல்ல. உடை தான்.. அது என்னவோ இன்று குளித்து முடித்து புடவை தான் அணிந்தாள்.. ஆனால் புடவையின் ஜாக்கெட் கொஞ்சம் லோ நெக்.. நேற்று நடந்ததில் கொஞ்சம் சாண்டில்யனின் பல் தடம் முதுகில் மட்டும் அல்லாது சரியான அளவில் இருக்கும் அந்த ஜாக்கெட் ஆனது இழுத்து பிடிக்கும் போது கொஞ்சம் வலிக்க செய்தது..

அதனால் காலர் உள்ள இரவு உடையை எடுத்து அணிந்து கொண்டாள்.. ஆனால் இவள் கீழே வரும் போது கணவன் பக்தி மையமாக தாய் தந்தையரின் படம் முன்.. விளக்கு ஏற்றி.. வணங்கி கொண்டு இருப்பதை பார்த்து… அதுவும் கணவன் உடுத்தி இருந்த ஆண்களின் பாராம்பரிய உடையான. வேஷ்ட்டி சட்டையில் பார்த்தவளுக்கு ஒரு வித சங்கடம் கொடுத்தது..

அதை இப்போது கணவனின் இந்த பேச்சில் சொல்ல செய்ய.

“என்ன டா. இது நம்ம வீடு… உன் செளகர்யம் படி தான் ட்ரஸ் போடனும்.. அதுவும் இல்லேம்மா விளக்கு ஏத்தவும் கும்பிடவும் ட்ரஸ் கோட் ஏதாவது இருக்கா என்ன…ம்.. போ அம்மா அப்பாவை கும்பிட்டு வா. டைம் ஆச்சி காபி எல்லாம் வேண்டாம் டிபன் சாப்பிட்டு பின் காபி குடிக்கலாம்…” என்று சொன்னவன் சொன்னது போலவே மனைவி அவளின் மாமியார் மாமனாரை வணங்கி வந்த பின் சாப்பிட்டு விட்டு.. பின் குழந்தைகள் இருக்கும் இடத்திற்க்கு சென்று குழந்தைகளுக்கு உணவு ஊட்டி முடிக்கும் வேளயில்.

குணசேகரன் கலாவதி மட்டும் அல்லாது அவனின் இரண்டு தங்கைகள் அவளின் குழந்தைகள் சந்தியா அவளின் மகன். என்று அனைவரும் வந்து விட்டனர்..

அதுவும் சுமதி மகள் மாளவிகா குழந்தை இரண்டுமே,, இவனிடம் வந்து.

“எங்களை அனுப்பி விட்டு இவங்களை மட்டும் கூட வெச்சிக்கிட்டிங்க.. உங்களுக்கு எங்களை விட இவங்களை தான் பிடிக்குமா மாமா..” என்று உரிமை குரலாக கேட்க.

தம்பி மகனுமே… “என்னையும் பிடிக்கும் தானே பெரிப்பா.” என்று கேட்டு அவன் ஒரு பக்கம் இவன் அருகில் வந்து நிற்க.

சாண்டில்யனின் நிலையை நான் சொல்லவும் வேண்டுமோ….
 
Well-known member
Joined
Jul 14, 2024
Messages
407
இதென்ன 3 மெசேஜ்பா
MSG panna kulla naan first nnu solla munna yaarum first vandhu enakku bulb 💡 kudukkarangha ma
Udhaya ma illa la romba busy pola athan ippadi hihihihi hihi😁😁😁😁😁
pre KG pullaihal mathri nnu🤦🤦 puriyuthu aana 😌😌😌😛😛😛😉😉😉
 
Top