Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட....21...1 டீசர்

  • Thread Author
அத்தியாயம்…21.1

சாண்டில்யன் தான் தன் தம்பி வாசு தேவ்வை கவனிக்கவில்லை.. ஆனால் வாசு தேவ்வின் பார்வையும், அவனின் மொத்த கவனமும் சாண்டில்யனிடம் தான் இருந்தது… அதுவும் ஸ்ருதிகா ஸ்ரீ வந்ததுமே அவன் முகத்தில் வந்து போன அந்த பாவனையும்.. கூடவே ஸ்ருதிகா ஸ்ரீ மட்டும் அல்லாது அவளின் குழந்தைகள் மீது செலுத்திய சாண்டில்யனின் பார்வையில் தெரிந்த அந்த பாசத்தை பார்த்தவனுக்கு…

அவன் அவனாக இல்லாது போனான்.. எது எது அவனுக்கு இல்லாது தனித்து நிற்க வேண்டும் என்று அவன் நினைத்தானோ… இன்று அனைத்துமாக தன் எதிரில் அவன் நிற்க.. இன்று அவன் எதிரில் தான் அனைத்துலும் தோற்று போனவனாக தான் தனித்து நிற்கிறோம்.. அன்றும் சரி.. இன்றும் சரி.. அவன் தான் ஜெயித்து கொண்டு இருக்கிறான் என்று நினைத்த நொடி..

வாசு தேவ்வின் மூளை இல்ல டா இல்ல. அப்போ நீ சின்ன பையன். உனக்கு ஒன்னும் தெரியாது என்பதை விட உன்னால் ஒன்னும் செய்ய முடியாது..

ஆனால் இப்போ… இப்போ உனக்கு ஒன்னும் இல்லாது நிற்கிற… இனி இழக்க உன்னிடம் என்ன இருக்கு… குடும்பம் சொத்து.. உறவுகள்… தொழில் என்று உன்னை முடக்கி போட்டு விட்டான்..

ஆம் வாசு தேவ் விமல் இருவரையுமே ஒரு விசயத்தில் வசமாக சிக்க வைத்து விட்டு தான் அந்த வீட்டை இடிக்கும் வேலையிலேயே சாண்டில்யன் இறங்கியது…

ஆடிட்டர் பொதுவாக தங்களிடம் கணக்குகளை ஒப்படைக்கும் வாடிக்கையாளர்களுக்கு தான் உண்மையாக இருப்பார்கள்.. என்ன என்ன வழியில் கணக்கு காண்பித்தால், அவர்கள் குறைந்த வருமான வரி கட்டலாம் என்று யோசித்து அதன் படி தான் கணக்கு காண்பித்து வருமான வரி கட்டும் படி பைல் செய்து கொடுப்பது.. இது ஒரு பொதுவான விசயம் தான்.

அதை தான் விமலும் வாசு தேவ்வும் செய்தது.. ஆனால் ஒன்றை நோண்ட ஆரம்பித்தால், அதுவும் பெரிய இடத்தில் தெரிந்தவர்கள் இருக்கும் பட்சத்தில் இதை வைத்து மாட்டி விட நினைத்தால் மாட்டி விடலாம்…

சாண்டில்யன் அதை தான் செய்தது.. ஒரு புகழ் பெற்ற அழகுநிலையம்.. அனைத்து இடத்திலும் கிளைகள் உள்ளது…

அவர்கள் சம்பாத்தியத்தில் பத்தில் ஒரு பங்கு கூட கணக்கில் காட்டாது… வரியாக இந்த சிந்து வருடங்கள் கட்டிக் கொண்டு இருக்கிறது.. அந்த பிராண்டட் அழகுநிலையம்..

இதில் என்ன ஒரு விசயம் என்றால், அந்த அழகுநிலையமே… ஆடிட்டரிடமே ஒரு சில கணக்குகளை காட்டவில்லை. அதாவது ஒரு சில இடங்கள் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் தான் வைத்து உள்ளனர்… கணவன் மகன் மகள் பெயரில் உள்ள இடம்.

அதை அவர்கள் ஆடிட்டரிடம் சொல்லவில்லை… இதில் இவர்களும் தங்கைன் ஆடிட்டர் அறிவை காட்ட வேண்டி வரியை குறைத்து கட்டுவது போல கணக்கு எழுதி காட்ட.. இதுவும் அதுவும் சேர்ந்து ஒரு பெரிய தொகை அரசாங்கத்தை ஏமாற்றுவது போல ஆகி விட.. இது மத்திய அரசு விசயம்… சும்மா விடுவார்களா… இவர்கள் ஆடிட்டங்க் கம்பெனிக்கே வக்கீல் நோட்டிஸ் வந்து விட்டது…

அந்த கேல் கோர்ட்டில் முடியும் வரை இனி இவர்கள் இருவருமே ஆடிட்டிங்க செய்ய முடியாது.. குற்றம் நிருபனம் ஆனால் இனி இவர்கள் வாழ் நாள் முழுவதுமே ஆடிட்டிங்க செய்ய முடியாது என்ற அனைத்து வெறியும் ஒன்று சேர… வாசு தேவ் மொத்தமாக தன் நிலை இழந்து விட்டவன்..

அங்கு டீப்பாவின் மீது இருந்த கத்தியை எடுத்து விட்டான்..
 
Active member
Joined
May 28, 2025
Messages
39
அட அந்த பையித்தியத்தை பிடிடா விமலு இல்லைனா ஏற்கெனவே உனக்கு வேலை போய் ஜெயிலுக்கு போற நிலை இதுல கொலையாளினு பட்டம் வேற வேணுமா சாண்டி உனக்கு கல்யாணம் பண்ணி நாடகம் ரீலீஸ் பண்ணுறதுக்குள்ள உன் சகலை இன்னொரு ரீலீஸ் பண்ணிட போறாரு நாங்க வேற இங்கு பயத்தில் இருக்கோம் விஜி மேம் சீக்கிரமே யூடி தாங்க
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
188
அருமையான டீ பதிவு 😍 😍 😍.
ஆத்தீஇஇஇஇ பொசகெட்ட பய கத்திய வேற கையில தூக்கறானே😱😱😱😱😱😱
 
Top