Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட....1

  • Thread Author
அத்தியாயம்….1

“சுருதி இன்னும் ஆகலையா…? எனக்கு டைம் ஆச்சு…” என்று சாப்பிடும் இருக்கையில் அமர்ந்து இருந்த ஸ்ரீகாந்த் சமையல் அறையை நோக்கி குரல் கொடுத்தான்…

“தோங்க… ஒரு ஐஞ்சு நிமிஷம் தான்.” என்று சொன்னது போலவே சமையல் அறையில் இருந்து ஐந்தாம் நிமிடம் இரு கையிலும் இரு பாத்திரத்தை பிடித்தது போல அறக்க பறக்க வந்தாள் நம் கதையின் நாயகி ஸ்ருதிகா ஸ்ரீ…

தான் கொண்டு வந்ததை சாப்பிடும் மேஜையில் வைத்து விட்டு, திரும்ப சமையல் அறைக்கு சென்று திரும்பியவளின் இரு கையிலும் மீண்டும் இரு பாத்திரத்திம் இடம் பெற்று இருந்தது… அதையும் உணவு உண்ணும் மேடையில் வைத்து விட்டு, உணவை கொண்டு வந்த வேகத்தை விட அதிகமான வேகத்தோடு கணவனுக்கு அதை பரிமாறினாள்..

அத்தனை சூட்டை ஊதி ஊதி சாப்பிட்டு கொண்டே… “ என்ன ஸ்ருதி இப்படி சூடா கொடுத்தா நான் எப்படி சாப்பிடுறது…? ஆபிசுக்கு வேற டைம் ஆகுது….” என்று சொன்னவனின் குரலில் கோபம் இல்லை.. ஆனால் அவசரம் இருந்தது…

“இசைக்கு நையிட் லேசா உடம்பு சுட்டுட்டே இருந்ததுங்க…. அதுல தூங்காம சிணுங்கிட்டே இருந்தா. மிட் நையிட்டுக்கு மேல தான் தூங்கவே ஆரம்பிச்சா… அவள் தூங்கின பின் தான் நானுமே தூங்கினேன்.. அது தான் லேட் ஆகிடுச்சி…” என்ற மனைவியின் பேச்சுக்கு.

“ம்” என்றவன்.. பின் “இயலுக்கு பீபர் இல்லையே….?” என்று தன் குழந்தைகளின் இரட்டையரான மற்றொரு பெண் குழந்தையின் நலனை கேட்டான் குழந்தையின் தந்தையான ஸ்ரீகாந்த்…

“இல்லங்க. இவளுக்கு கொஞ்சம் பீபர் ஆரம்பிச்சதும் இயலுக்கும் சிரப்பு கொடுத்துட்டேன்… அதனால இல்ல..” என்ற மனைவியின் விளக்கத்தில்…

“சரி….” என்பது போல சொன்னவன்….

பின் “இசைக்கு திரும்ப பீபர் வந்தா ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் வந்துடு….” என்று ஸ்ரீகாந்த பேச்சுக்கு ஸ்ருதி.

“சரிங்க.” என்று தலையாட்டினாள்..

பின் ஸ்ரீகாந்த் தன் அலுவலகத்திற்க்கு எடுத்து கொண்டு போகும் பையில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை ஒரு முறை சரி பார்த்து கொண்டவன்..

“ஓகே பை…” என்று சொல்லி கணவன் விடைப்பெற.. மனைவியாக விடை கொடுக்க கணவன் பின் செல்ல.. வெளியில் வந்த மனைவியை திரும்பி பார்த்த ஸ்ரீகாந்த்….

“என்ன ஸ்ருதி நையிட்டி… நையிட்ல போடுவது.. ஆனா இதையே தான் நீ பொழுது அன்னைக்கும் போட்டுட்டு ஆவியை போல சுத்துற….”

காலை எழுது குளித்து முடித்துமே நையிட்டியை போட்டு கொண்டு இருக்கும் மனைவியை பார்த்து கேட்டான்…

அதற்க்கு .. “ இல்லேங்க சமையல் அறையில் வேலை பார்க்க இது தான் வசதியா இருக்கு… அதுவும் இந்த ஏப்ரல் வெயில்ல சமையல் அறைக்கு போனாலே வியர்வையில் குளிச்சிட்டு வருவது போல ஆகிடுது..” என்று சமையல் செய்ய இந்த உடை தான் ஏதுவாக இருக்கிறது என்று சொன்ன மனைவியின் பேச்சு ஸ்ரீகாந்துக்கு திருப்தி கொடுக்க இல்லை.

“ஆமா ஆமா.. ஏப்ரல் மாசத்தில மட்டும் தான் நீ இந்த நையிட்டியை போட்டுட்டு சுத்திட்டு இருக்க… டிசம்பர் மாசம் வந்துட்டா… தழைய தழைய புடவை கட்டிட்டு நிற்பது போல தான் பேச்சு…” என்று ஒரு மாதிரியாக சொன்னவன்.

பின் தன் காரை ஸ்டார்ட் செய்தவன் மனைவியிடம் ஏதோ சொல்ல வந்தவன்.. மனைவியின் அடர்ந்த அந்த புருவத்தை பார்த்து.

“இது என்ன ஸ்ருதி சீப்பை கண்ணுக்கு மேல ஒட்டி வைத்தது போல புருவத்தை வைத்து இருக்க…. வேறு ஏதாவது செய்யலேன்னாலும் பரவாயில்லை.. அட்லீஸ்ட் அந்த புருவத்தையாவது ட்ரீம் செய்துட்டு வா… நாளைய பின்ன மிட் நையிட்ல நம்ம குழந்தைங்களே உன்னையே பார்த்துட்டு பயந்துட போகுது…” என்று சொல்லி விட்டு சென்ற பின் வீட்டிற்க்குள் வந்த ஸ்ருதியின் கை தன்னால் தன் புருவத்தை தடவி விட்டு கொண்டது..

கண்கள் தன்னால் கீழே குனிந்து தன் உடையையும் பார்த்து கொண்டது…

“அவர் சொன்னது போல தான் ஆவியை போல எந்த நேரமும் இந்த ட்ரஸை போட்டு இருக்கேன்… புருவம் ரொம்ப தான் அடர்த்தியா வளர்ந்து இருக்கோ…” என்று அவள் யோசனை ஓடும் போதே அவர்களின் படுக்கை அறையில் இருந்து முதலில் இசை அவளின் இசையான குரல் எடுத்து..

“ம்மா….” என்று ஆரம்பிக்க அவளை தொடர்ந்து இயலுமே.

“ம்மா…” என்று முன்னவளை விட பின்னவளின் அந்த அழைப்பு சத்தமாக கேட்டதில், தன் யோசனையை அனைத்தும் கை விட்டவளாக தங்கள் அறையை நோக்கி சென்றவளுக்கு அடுத்து அடுத்து தன் இரண்டு குழந்தைகளின் தேவையை கவனிக்கவே சரியாக போய் விட்டது.

தன் இரண்டு குழந்தைகளுக்கும் காலை கடன்கள் அனைத்தும் முடித்து விட்டு அப்படியே குளிக்கவும் வைத்தவள் கூடத்திற்க்கு அப்போது தான் வந்து அமர்ந்த தன் மாமனார் மாமியாருமான பவானி வெங்கடராமன் இருவரிடமும் குழந்தையை ஒப்படைத்தவள்…

மீண்டுமே பாதி நனைந்து இருந்த தன் உடையை மாற்ற தன் அறைக்கு வந்தவள் மாற்று உடையை கையில் எடுக்கும் சமயம் கணவன் சொன்னது நியாபகத்தில் வந்தது தான்..

ஆனால் மதிய உணவு செய்ய சமையல் அறையில் நிற்க வேண்டும் என்று நியாபகத்தில் வந்த நொடி கணவன் சொன்னது பின் சென்று அவளின் செளகர்யம் முன் வந்து நின்றதில் நையிட்டியே எடுத்து மாட்டி கொண்டு வந்தவள்…

காலை உணவை குழந்தைகளுக்கு ஊட்ட தொடங்கினாள்… அப்போது தான் மாடி அறையில் இருக்கும் அவளின் மூத்தாரும் இந்த வீட்டின் மூத்த மகனுமான கோகுல் அலுவலகம் செல்வது போலான உடையில் கீழே வந்து சாப்பிடும் மேஜையில் அமர்ந்தது..

அமர்ந்தவன் மாடி அறையை நோக்கி… “ அனி.” என்று குரல் கொடுக்க. மாடி அறையில் இருந்து பதிலுக்கு ஒரு குரல்..

“கரிஷ்மா டாய்லெட் போயிட்டா நான் க்ளீன் பண்ணிட்டு இருக்கேன்…” என்று… இது கீழே அமர்ந்து இருந்த அனைவக்கும் கேட்டதால் முட்டி வலியில் அவதிப்பட்டு கொண்டு இருக்கும் ஸ்ருதியின் மாமியார் தான் அமர்ந்து இருந்த இருக்கையில் இருந்து கடினப்பட்டு எழ பார்த்தார்.

ஸ்ருதி… “ அத்த நீங்க எழுந்துக்க வேணாம்… நான் பாப்பாங்களுக்கு ஊட்டி முடிச்சிட்டேன்..” என்று சொல்லி மீண்டும் குழந்தைகளை பெரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு கை கழுவிக் கொண்டவள் தன் மூத்தாருக்கு காலை உணவை எடுத்து வைத்தார்…

கோகுலும் எந்த மறுப்பும் சொல்லாது சாப்பிட ஆரம்பித்தான்.. இது அந்த வீட்டில் அவ்வப்போது நடக்கும் விசயங்கள் தான்… கோகுல் சாப்பிட்டு முடிக்கும் சமயம் தான் அனிதா கரிஷ்மாவை கஷ்டப்பட்டு தூக்கி கொண்டு கீழே வந்தாள்..

ஆம் கஷ்டப்பட்டு தான்.. எளிதாக தூக்கி கொண்டு வர.. அவள் எட்டு மாத குழந்தை கிடையாது.. எட்டு வயது முடிவடைந்த சிறுமி… எட்டு வயது குழந்தைக்கு நடக்க தெரியாதா..? ஏன் தூக்கி கொண்டு வரவேண்டும்…?

எட்டு வயது சிறுமிக்கு தன் காலை கடனை அவளே செய்து கொள்ள மாட்டாளா…? அதை ஏன் அவளின் அம்மா செய்ய வேண்டும்….?

ஆம் முடியாது தான்.. எட்டு வயது என்ன இன்னும் எத்தனை வயதானாலும்.. இந்த குழந்தைக்கு நீங்க தான் செய்து ஆக வேண்டும் என்று மருத்துவர்…

“உங்க குழந்தை ஆர்ட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள்.. ஒரு சிலருக்கு இத்தனை வீதம் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.. என்று இருக்கிறது.. ஆனால் உங்கள் குழந்தை இந்த நோயின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே தான் இருக்கிறது.. அதனால்…” என்று அந்த மருத்துவர் அடுத்து பேசாது நிறுத்தி விட்டார்.

ஆனால் அன்று அந்த மருத்துவர் சொல்லாத பல விசயங்களை இப்போது அந்த குழந்தையை வைத்து கொண்டு பெற்றோர் அனுபவித்து கொண்டு இருக்கின்றனர்… அதுவும் குழந்தை வளர வளர அதனின் தாக்கம் இன்னுமே அவர்களுக்கு அதிகமாக தெரிகிறது…

அதனால் தான் அனிதாவின் நிலை உணர்ந்து வீட்டின் அனைத்து வேலைகளையும் ஸ்ருதி பார்த்து கொள்வது…

கீழே இறங்கி வந்த அனிதா கணவன் பக்கத்தில் இருக்கும் இருக்கையில் கரிஷ்மாவை அமர வைத்தாள்…

கரிஷ்மா தன் பக்கம் அமர்ந்ததும். “நீ எப்போவும்… அப்பா ஆபிசுக்கு போகும் போது தான் சரியா டூ டாய்லெட் போவியா…?” என்று கேட்டவனின் பேச்சு குழந்தை எப்போதும் போல புரியாது விழி விரித்து பார்த்து கொண்டு இருந்தாள்…

“சரி சரி சாப்பிடு…. அப்பா ஆபிசுக்கு போயிட்டு வரேன்..” என்று குழந்தைக்கு புரிகிறதோ இல்லையோ.. கோகுலின் தினம் பழக்கத்தில் சொல்ல.

இதற்க்கு மட்டும் குழந்தை வாயில் இருந்து நீர் வடிய.. தலையை பலமாக ஆட்டி விட்டு தந்தைக்கு விடை கொடுத்தாள்.

மனைவி பெற்றோர் பக்கம் தலையாட்டி விடை பெற்ற கோகுல் ஸ்ருதியை பார்த்து மெல்ல சிரித்து விட்டு சென்று விட்டான்..

ஸ்ருதி கணவன் அலுவலகம் செல்லும் போது விடை கொடுக்க வெளியில் சென்றாள்.. ஆனால் அனிதா…. கணவன் செல்லும் முன்னவே தனக்கு உண்டான உணவை எடுத்து வைத்து கொண்டு சாப்பிட தொடங்கி விட்டாள்..

அனிதாவுமே இரவு உடையில் தான் நாள் முழுவதும் இருப்பது.. ஸ்ருதியின் மீதாவது வியர்வை வாசம் மட்டும் தான் வரும்.. ஆனால் அனிதாவின் மீது…. வேண்டாம் அனிதா சாப்பிடும் போது இது எல்லாம் நினைக்க வேண்டாமே..

அனிதா உண்ட பின் தான் அவள் கரிஷ்மாவுக்கு ஊட்டுவாள். காரணம் குழந்தைக்கு ஊட்ட அவளுக்கு சத்து வேண்டுமே… அந்த அளவுக்கு படுத்தி எடுத்து விடுவாள்…

ஸ்ருதி தங்களுக்கு வேண்டிய மதிய உணவை செய்ய மீண்டும் சமையல் அறைக்குள் புகுந்து கொண்டு விட்டாள்..

மதியம் சமையல் செய்து முடிக்க அவளுக்கு ஒன்னரை மணி நேரம் தேவைப்பட்டது… அவள் சமையல் முடித்த விட்டு கூடத்திற்க்கு வந்த போது அவள் கையில் ட்ரே இருந்தது.. அதில் வெஜிடெபுல் சூப் அடங்கிய கிண்ணம் இருக்க.. அதை பொதுவாக அங்கு இருந்த டீப்பாவின் மீது வைத்தாள்..

அனிதா அப்போது தான் தன் பெண்ணுக்கு ஊட்டி முடித்து விட்டு சாப்பிடும் மேடையில் இருப்பதை ஒழித்து கட்டி கொண்டு இருந்தாள்..

அதை பார்த்த ஸ்ருதி அனிதாவிடம்… “கரிஷ்மாவுக்கு தூக்கம் வந்துட்டது போல அக்கா.. நீங்க போய் அவளை தூங்க வைங்க.. நான் இதை பார்த்துக்குறேன்….” என்று சொல்லி விட்டு அவள் கையில் இருக்கும் பாத்திரத்தை வாங்க பார்த்தாள் ஸ்ருதி..

அனிதா அதை கொடுக்காது… “ நான் இதை செய்யுறேன் ஸ்ருதி.. நீ எனக்கு சூடா டீ வெச்சி எடுத்துட்டு வாயேன்…” என்று சொல்ல.

அதில் அவளை முறைத்த ஸ்ருதியின் கண்கள் டீப்பாவின் மீது பார்வை செல்ல.

“ஸ்ருதி ப்ளீஸ்ம்மா.. நாளையில் இருந்து நீ கொடுக்கும் எல்த்தி புட்டே எடுத்துக்குறேன்.. இன்னக்கு தலை வலிக்குது.. டீ குடிச்சா தான் அது கொஞ்சமாவது குறையும்..” என்று சொன்னதும்..

ஸ்ருதி மீண்டும் சமையல் கட்டுக்கு சென்று இஞ்சியும் ஏலக்காயும் தட்டி போட்டு ஒரு டீ தயாரித்து அனிதாவிடம் நீட்டினாள்….

இங்கு அதற்க்குள் உணவு மேடையை சரி செய்து விட்டு அக்காடா என்று அந்த இருக்கையில் அமர்ந்தவள் ஸ்ருதி நீட்டிய டீ கப்பை வாங்கி கொண்டு இரண்டு மிடறு குடித்தவள் தான் அமர்ந்திருந்த இருக்கையின் பின் பக்கம் கண் மூடி தலை சாய்த்து கொண்டவளின் கண்களின் ஒரம் கண்ணீர் துளிகள் தன்னால் வழிந்தது…

ஸ்ருதி டீப்பாவின் மீது வைத்திருந்த வெஜிடபுள் சூப்பை தன்னுடையதை எடுத்து கொண்டவள்.

தன் மாமனார் மாமியார் அந்த வீட்டின் மூன்று குழந்தைகளுக்கும் சூப்பை கொடுத்து கொண்டு இருப்பதை பார்த்தவள்..

“அத்த மாமா உங்களுடையதை முதல்ல குடிச்சிட்டு குழந்தைகளுக்கு கொடுங்க.. அவங்களுக்கு கொடுத்து முடிக்க ரொம்ப நேரம் பிடிக்கும்.. அதுக்குள்ள உங்களுடையது ஆறி போயிடும்…” என்ற மருமகளின் பேச்சுக்கு..

‘பரவாயில்லை ம்மா…” என்று விட்டனர்..

தன் சூப்பை எடுத்து கொண்டு அனிதா அமர்ந்திருந்த எதிர் இருக்கையில் அமர்ந்த போது தான் அனிதாவின் அந்த கண்ணீரை பார்த்து அமர்ந்துவள் சட்டென்று எழுந்து கொண்டு..

“க்கா என்ன க்கா… ரொம்ப தலை வலிக்குதா…?..? நான் தைலம் எடுத்துட்டு வரட்டா….” என்று கேட்ட ஸ்ருதி அனிதாவின் பதிலை எதிர் பார்க்காது தைல பாட்டிலை எடுக்க போக திரும்பியவளின் கையை பிடித்து கொண்டவள்..

“வேண்டாம் என்பது போல….” தலையாட்டியவள்..

பின்… “கடவுளுக்கு என் மேல கொஞ்சம் கருணை இருக்கு ஸ்ருதி… அதனால தான் இந்த வீட்டுக்கு இரண்டாவது மருமகளா உன்னை அனுப்பி வெச்சி இருக்காரு….” என்று பேசியவள் தன் மகளை திரும்பி பார்த்தாள்…

தன் பாட்டி கொடுத்த சூப் வாயின் ஓரம் ஒழுகி போய் இருக்க. அதை துடைக்க கூட தோனாது அமர்ந்திருந்த தன் மகளை பார்த்தவளுக்கு தொண்டையை துக்கம் கவ்வி பிடித்து கொண்டது போல இருந்தது..

ஸ்ருதி தான். “க்கா என்ன க்கா..” என்று கேட்ட போது ஸ்ருதியின் பிடித்த கையை விடாது..

“நீயே நினச்சி பாரு… உன்னை தவிர இந்த வீட்டிற்க்கு யாராவது ஒரு பெண் இரண்டாவது மருமகளா வந்து இருந்தா.? என் நிலை… எல்லா வேலையும் நீ தான் பார்த்துக்குற… இதோ சமயத்துக்கு என் பெண்ணுக்கு ஏதாவது தனியா சமைக்கனும் என்றாலும் சமச்சி கொடுக்குற..

அத்தை மாமாவுமே வயசானவந… .. சுகர் ஹார்ட் சர்ஜரி என்று இருக்கிறவங்க. அவங்களுக்கு நீ நேரத்துக்கு இது போல வெயிடபுள் சூப் இப்படி வைத்து கொடுத்து பார்த்துக்குற… எல்லா நான் தானா செய்யனும் என்று நீ நினச்சா….?” என்று சொல்லி கொண்டு போனவளின் பேச்சை தடுத்து நிறுத்திய ஸ்ருதி..

“க்கா இது எல்லாம் ஒரு விசயமா..? விடுக்கா.. நான் உங்களுக்கு என்று தனியாவா சமைக்கிறேன்.. சமைக்கிறதில் ஒரு புடி கூடுதலா போட்டு செய்யிறேன் இது தானே…” என்று சொன்னவளின் பேச்சை அனிதா எளிதாக எடுத்து கொள்ளவில்லை..

“இல்ல ஸ்ருதி நீ என்ன தான் சொன்னாலும் உன் இடத்தில் வேறு ஒரு பெண் இருந்தால், கண்டிப்பா குடும்பம் இது போல அமைதியா போய் இருந்து இருக்காது.. நீ சொன்னியே கூடுதலா இரண்டு பிடி என்று…

ஒவ்வொரு வீட்டிலும் இதை வைத்து தான் சண்டையே நடக்குது ஸ்ருதி.. வெளியில் ஏன் போகனும்.. என் வீட்டில் இரண்டு அண்ணிங்களுக்குள் இதை வைத்து தான் தினம் தினம் சண்டையே.. இன்னும் கேட்டால், அவங்க குழந்தைங்களுக்கு எக்ஸ்ட்ரா கேர் செய்து பார்த்துக்கனும் என்ற அவசியம் இல்லாத குழந்தைங்க தான்.. இருந்தும் தினம் ஒரு பஞ்சாயத்து தான் என் அம்மா வீட்டில் நடக்கும்.. உண்மையில் நீ ரொம்ப நல்ல பெண் ஸ்ருதி… இல்லேன்னா இது போல ஒரு குழந்தையை வெச்சிட்டு நான் இன்னுமே தத்தளித்து தான் போய் இருப்பேன்…” என்று கூறியளின் பேச்சை ஒரு புன்னகையுடன் கேட்டு கொண்டாள்..

பின் கரிஷ்மா சிணுங்க ஆரம்பிக்க… அனிதா குழந்தையை தூங்க வைக்க குழந்தையை தூக்கி கொண்டு மாடிக்கு சென்று விட்டாள்…

ஸ்ருதி .. “ சாப்பிட்டு விட்டு போகலாமே க்கா…” என்று சொன்ன போது.

“இல்ல ஸ்ருதி குழந்தையை தூங்க வெச்சிடுறேன்…” இந்த இடைப்ப்பட்ட நேரத்தில் அந்த வீட்டின் பணிப்பெண் வந்து மேல் வேலைகள் அனைத்தும் முடித்து கொடுத்து விட்டு சென்று விட்டாள்…

மதியத்திற்க்கு உண்டான உணவு வேலையும் வந்து விட பெரியவர்களுக்கு எடுத்து வைத்து விட்டு குழந்தைகளுக்கு ஊட்டி முடித்து விட்டு தானுமே சாப்பிட்டு விட்டு மீண்டும் படுக்கை அறைக்கு வர ஒரு மணி நேரம் கடந்து விட்டது..

குழந்தைகளும் அத்தனை நேரம் கரிஷ்மாவுக்கு விளையாட்டு காட்டுகிறேன் என்று ஓடி ஆடி விளையாடியதில் தூங்கி விட…

மீண்டும் காலையில் கணவன் சொன்ன வார்த்தை அவளின் நியாபகத்தில் வந்தன…

படுக்கையில் அமர்ந்திருந்த ஸ்ருதி தன் எதிரில் ட்ரெஸ்ஸிங் டேபிலில் பதித்திருந்த கண்ணாடி வழியாக தன் உருவத்தை பார்த்தாள்..

பார்த்தவள் கண்ணுக்கு உன்னை பார்த்தா யாராவது இருபத்தி ஒன்பது தான் வயது ஆகுதுன்னா நம்புவாங்கலா…? இப்படி இருந்தா உன் புருஷன் திட்டாது கொஞ்ச செய்வாங்கலா….?

அவர் பாரு முப்பதி மூன்று வயசு போலவா இருக்கிறார்… எங்கள் கல்யாண ஆன நாளில் எப்படி இருந்தாரோ அப்படியே தான் இன்னைக்கும் இருக்கிறார்… என்று நினைப்பு ஓடும் போதே… இயல் கொஞ்சம் சிணுங்கும் சத்தம் கேட்டது..

ஸ்ருதி சட்டென்று கண்ணாடியில் பதித்து கொண்டு இருந்த தன் பார்வையை குழந்தைகளின் பக்கம் செலுத்தினாள்…

குழந்தை கனவு கண்டது போல சிணுங்கியவள் அந்த பக்கம் திரும்பி படுத்து கொண்டு மீண்டும் உறக்கத்தை தழுவ..

சிரித்து கொண்டாள்… கணவனுக்கு ஏன் வயது தெரிய போகிறது.. ஒரு பெண்ணுக்கு குழந்தை என்று பிறந்து விட்டாலே.. உடல் அளவில் சிறிது மாற்றங்கள் உண்டாகி விடும்..

அதோடு ஒரு பெண் தாய்மை தான் முதன்மையாக நிறுத்தி விடுவதால், தன்னை சரியாக கவனித்து கொள்ள அவளுக்கு நேரம் கிடைப்பது இல்லை..

குழந்தைகளை இன்னும் இரண்டு மாதத்தில் பள்ளியில் சேர்த்து விட்டால், தனக்கும் கொஞ்சம் நேரம் கிடைக்கும்… அதில் நாமும் நம்மை கொஞ்சம் கவனித்து கொள்ள வேண்டும்.. இப்படியே இருக்க கூடாது.. கணவனுக்காக இல்லை என்றாலும் எனக்காக மாற்றி கொள்ள வெண்டும்..

இந்த கண்ணாடியை பார்த்து தான் எத்தனை மாதம்.. தவறு ஆண்டுகள் ஆகிறது… குளித்து முடித்து விட்டு ஒரு தோராயமாக பொட்டை எடுத்து நெற்றியில் வைத்து கொண்டு தலையை வார நேரம் இருந்தால் வாறுவதும்.. இல்லை என்றால் அதுவும் கூட செய்யாது ஒரு கொண்டையை போட்டு கொண்டு விடுகிறோம்…

இனி இப்படி இருக்க கூடாது.. முதலில் பீரோவில் இருக்கும் புடவையை எடுத்து மேட்சிங் ப்ளவுஸ் எடுத்து அளவு சரியா இருக்கா என்று பார்க்க வேண்டும்… இல்லாததுக்கு ப்ளவுஸ் எடுத்து தைக்க வேண்டும்…

குழந்தைகளை பள்ளிக்கு கணவன் கொண்டு விட்டாலுமே, நான் தான் அழைத்து கொண்டு வர வேண்டும்.. பள்ளிக்கு செல்லும் போது கொஞ்சம் நல்ல மாதிரியாக தான் செல்ல வேண்டும்… இந்த காலத்தில் அனைத்தும் பார்த்து தானே மரியாதை கிடைக்கிறது… என்று தான் திட்ட மிட்டதை செயல் படுத்த என்ன முழுவதுமான மனதில் திட்டம் இட கூட அவளுக்கு நேரம் இல்லாது மாலை வேலைகள் அவளை இழுத்து கொண்டது…

மாலைக்கு உண்டான டீயோடு பெரியவர்கள் குழந்தைகளுக்கு என்று கருப்பு சுண்டலை வேக வைத்து அதை தாளித்து கொடுத்து முடித்து இரவுக்கு சப்பாத்தி மாவை பிசைந்து வைத்து விட்டு சரி சைட் டிஷ்ஷாக காளானை எடுக்கும் சமயத்தில் தான் பக்கத்து வீட்டு பெண் வந்தது..

அவளை பார்த்த போது தான் இரண்டு நாட்களுக்கு முன்.. அவள் சொன்ன… தன் நிச்சயத்துக்கு உங்க பிரண்ட் தான் க்கா எனக்கு மேக்கப் பண்ணி விடனும்.. ப்ளீஸ்..க்கா.. அவங்க கொஞ்சம் காஸ்லி .. ஆனா உங்க மூலமா போனா கொஞ்சம் குறைப்பாங்க.. கொஞ்சம் பேசுக்கா….” என்று சொன்னது நியாபகத்தில் வந்தது..

அவள் சொன்னதுமே தன் தோழியான சாதனாவுக்கு அழைத்தாள் தான்.. ஆனால் அவள் பேசியை எடுக்கவில்லை.. அவளுமே கொஞ்சம் பிஸியான ஆள் தான்…

தான் குடும்பத்தில் பிஸி என்றால், அவள் தன் தொழிலில் பிஸி…. அதனால தன் மிஸ்ட் கால் பார்த்து எடுப்பாள் என்று விட்டு விட்டாள்.. பின் அவளும் தன்னை அழைக்கவில்லை.. இவளும் மறந்து விட..

அந்த பெண்ணை பார்த்ததும் தான் ஸ்ருதிக்கு நியாபகமே வந்தது…

“சாரி ம்மா. மறந்துட்டேன்..” என்று மன்னிப்பு கேட்டாள்..

அதற்க்கு அந்த பெண்.. “பரவாயில்லை க்கா.. இன்னும் நிச்சயத்துக்கு ஐந்து நாள் தான் இருக்கு… அது தான் அம்மா கேட்டுட்டு வர சொன்னாங்க…

அதோடு அவங்க ரொம்ப காஸ்லி… வேறு யாராவது பாரேன் என்று தான் வீட்டிலும் சொன்னாங்க… ஆனா எனக்கு தான் அவங்க சீமந்தத்துக்கு அழகா உங்களுக்கு மேக்கப் பண்ணி விட்டதை பார்த்ததுல. . அவங்க பண்ணா நல்லா இருக்கும்.. என்று ஆசை.. “ என்று சொன்னவள்.

பின்.. “ பரவாயில்லை க்கா.” என்று சொல்லி விட்டு செல்ல பார்த்தவளின் கை பிடித்து தடுத்து நிறுத்திய ஸ்ருதி….

“ஏய் நீ ஆசைப்பட்டது போலவே சாதனா கிட்டயே பண்ணிக்கலாம்… புரியுதா…. இரு…” என்று சொல்லி விட்டு கூடத்தில் இருந்த தன் கை பேசியை எடுத்து மீண்டுமே அழகு நிலையம் வைத்து நடத்தும் தன் தோழிக்கு அழைப்பு விடுத்தாள்..

இந்த முறையும் ஸ்ருதியின் அழைப்பை சாதனா ஏற்கவில்லை… இதில் உன் நிச்சயத்துக்கு சாதனாவை ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னதும் மலர்ந்த செல்வியின் முகம் சாதனா அழைப்பை ஏற்காததில் வாடி போய் விட.

“ஏய் அதுக்குள்ள சோக கீதம் வாசிக்காதே… என்ன… இன்னக்கு மறக்காது அவள் போனை எடுக்கலேன்னாலும்… விடாது அவளுக்கு போனை போட்டு.. உன் நிச்சயத்துக்கு அவளையே ஏற்பாடு செய்து விடுகிறேன் என்ன..?” என்று சொல்லி உறுதி அளித்தவள்…

பின் என்ன என்ன செய்ய வேண்டும். என்று கேட்டதுக்கு முகத்தில் செய்ய வேண்டியதில் அத்தனை ரகம் சொல்லி விட்டு இதுக்கு என்ன விலை இதுக்கு என்ன விலை என்று தெரியனும் க்கா.. அதூ போல முடி அலங்காம். அதனை தொடர்ந்து கை கால் மெகந்தி….” என்று பொய் கொண்டே இருக்க.

ஸ்ருதி திரு திருத்து போய் விட்டாள்.. என்னது… இதுல இத்தனை இருக்கா.?” என்று நினைத்தவள் கேட்டே விட்டாள்…

ஸ்ருதி சாதனாவுக்கு அழைக்கும் போதே அங்கு வந்து விட்ட அனிதா ஸ்ருதியின் முக பாவனையிலும், அவள் கேட்ட விதத்திலும் சிரித்தே விட்டாள்..

“ ஏய் நீ ஐடியில் வேலை பார்த்த என்று யாரு கிட்டேயும் சொல்லி விடாதே சிரிச்சிடுவாங்க…” என்று கிண்டலிம் செய்ய.

இதை கேட்ட செல்வி… “ என்னது ஸ்ருதி அக்கா ஐடியில் வேலை பார்த்தாங்கலா….?” என்று அதிசயத்து கேட்டாள்..

“ஆமாம் ஆமாம் ஐடியில் வேலை பார்த்துட்டு இருந்தா. இந்த வீட்டிற்க்கு மருமகளா வரனும் என்றால் வேலையை விடனும் என்றதில் வேலையை விட்டு விட்டா…” என்று அனிதா சொன்னதில்..

செல்வி தான் வந்த வேலையை மறந்து..

“க்கா அப்படியா…. உங்களுக்கு ஸ்ரீகாந்த அண்ணாவை பார்த்த உடனே பிடித்து விட்டதா…?”

ஸ்ருதி ஸ்ரீகாந்த் திருமணம் பெரியவர்கள் பார்த்து செய்த திருமணம் என்று செல்விக்கு தெரியும்.. அதனால் மாப்பிள்ளையை பார்த்ததுமே பிடித்து விட்டதா என்பது போல கேட்டவளிடம்.

“இப்போ இதை கேட்க தான் வந்தியா என்ன…?” என்று ஸ்ருதி கோபம் போல கேட்ட போது தான்..

“ஐய்யோ அண்ணி சீக்கிரம் வா சப்பாத்தி தட்டி கொடுக்கனும் என்று சொல்லி தான் அனுப்பினாங்க. இப்போ என்ன செய்யிறது.. அந்த அக்கா போனை எடுக்க மாட்டேங்குறாங்க. உங்களுக்கு நான் சொல்றது தெரியல இப்போ என்ன செய்யிறது…?” என்று செல்வி கேட்ட போது தான் அனிதா இந்த யோசனையை சொன்னது..

“ஸ்ருதி நீ அவள் சொல்லட்டும் நீ உன் வாட்ஸ் சாப்ல ரெக்கார்ட் பண்ணிடு… அதை அப்படியே உன் பிரண்டுக்கு அனுப்பி விடு… அதே போல உன் பிரண்ட் சொல்றதை ரெக்கார்ட் செய்து இவளை கேட்க வை….” என்றதும் ஸ்ருதிக்கு நல்ல யோசனையாக தெரிய அதே போலவே செய்தும் விட்டாள்…

பின் செல்வியும் சென்று விட அனிதாவுமே கரிஷ்மாவை விட்டு வந்து ரொம்ப நேரம் ஆனதில் அவளுமே மாடிக்கு சென்று விட்டாள்..

தன் இரு குழந்தைகளையும் தாத்தா பாட்டியிடம் விட்டு விட்டு மஷ்ரூம் செய்ய ரெடி செய்து விட்டு தன் குழந்தைகளிடம் “பாட்டி தாத்தா கூட சமத்தா இருக்கனும் என்ன. நான் போய் சாதனா ஆன்ட்டி கிட்ட பேசிட்டு உங்களுக்கு பூவா ஊட்டுறேன்…” என்று சொல்ல இரு குழந்தைகளும் சமத்தாக..

“ஒகே..ம்மா..” என்று ஒரு குழந்தை சொல்ல. இன்னொரு குழந்தை.. “ டன் ம்மா..” என்று சொல்லி தன் கட்டை விரலை காட்டினாள்…

ஸ்ருதியின் மாமியார் தான்.. “ நீ சொல்லாம போனாலுமே உன் பொண்ணுங்க சமத்தா தான் இருப்பாங்க. நீ போ நான் பார்த்துக்குறேன்.” என்று சொன்னார்..

ஸ்ருதி சொன்னது போல அவளின் இரு குழந்தைகளுமே அத்தனை சமத்து தான்.. அதன் தொட்டு தான் இத்தனை வேலைகள் இருந்தும் அவளாள் சமாளிக்க முடிகிறது.. இல்லை என்றால் ரொம்ப கஷ்டம் தான்…

தன் அறைக்கு வந்த ஸ்ருதி முதலில் செல்வி பேசியதை சாதனாவின் வாட் சாப்புக்கு அனுப்பி விட்ட பின் தான் அதில் ப்ளூ டிக் விழும் நேரத்திற்க்காக காத்து கொண்டு இருந்தாள்…

அந்த காத்து இருப்பு நேறத்தில் ஸ்ருதி சாதனா தனக்கு தோழியானதை நினைத்து கொண்டு இருந்தாள்…ஸ்ருதிக்கு சாதனாவை இவளின் தோழியாக இவளின் கல்யாணத்திற்க்கு முன்பில் இருந்தே தெரியும்.. கல்லூரி தோழி தான்… சித்தி கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்… மதியம் அவள் கொண்டு வரும் சாப்பாட்டில் ஏதாவது ஒன்று குறை இருக்கும்..

ஒன்று அதில் உப்பு கரிக்கும்.. இல்லையே காரமாக இருக்கும்.. இப்படி ஏதாவது ஒரு குறையோடு தான் சாதனாவின் உணவு இருக்கும்..

கேட்டால் “சித்தி நல்லா தான் சமைப்பாங்கப்பா. ஆனா எனக்கு மட்டும் உப்பு கலந்து காரம் கலந்து என்று…” அடுத்து சொல்ல முடியாது கலங்கி போய் விடும்… அதன் பின் ஸ்ருதி சாதனாவுக்கும் சேர்த்து தான் உணவை கொண்டு சென்றது… ஒரு நாள் மூன்றாம் ஆண்டு அவள் கல்லூரிக்கு வரவில்லை… ஒரு வாரம் சென்று தான் தெரிந்தது.. அவள் கல்லூரியை விட்டு நின்று விட்டாள் என்றும்.. அவளின் தாய் மாமன் அவளை அழைத்து சென்று விட்டார் என்பதும்…

உடனே தோழிக்கு பேசியில் அழைத்தாள் தான்.. ஆனால் அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.. அன்று மட்டும் அல்லாது நிரந்தரமாக பின்

ஸ்ருதியினால் தோழியை நினைத்து பாவம் மட்டும் தான் பார்க்க முடிந்தது… கண்டிப்பாக அவளின் சித்தி தான் எதாவது செய்து இருப்பாள் என்று நினைத்தவள் அதன் பின் மறந்தும் போனாள்..

அடுத்து சாதனாவை இவள் பார்த்தது தன் சீமந்தத்திற்க்கு கணவன்… “கண்டிப்பா நீ மேக்கப் செய்துக்கனும் ஸ்ருதி.. என் ஆபிஸ் பிரன்ஸ் எல்லாம் வருவாங்க.” என்று ஸ்ரீ காந்த் திட்டவட்டமாக கூறி விட்டான்..

அப்போது ஒரு அழகு நிலையத்தை பற்றி ஆன் லைனில் அத்தனை நல்ல மாதிரியாக பார்த்தவள்.. அது இவள் வீட்டிற்க்கு சிறிது தூரமாக இருந்ததில் சரி போய் விசாரிக்கலாம் என்று சென்ற போது தான் தெரிந்தது.. அந்த அழகு நிலையம் வைத்து இருப்பது சாதனா தான் என்று.. அதன் பின் விசாரித்து தெரிந்து கொண்ட விசயம்.. இது..

திடிர் என்று அப்பா இறந்து விட்டார்.. உனக்கு தான் தெரியுமே ஏற்கனவே என் சித்தி என்னை எப்படி பார்த்துட்டாங்க என்று… என் தாய் மாமா இந்த விசயம் தெரிந்து என்னை அவர் ஊருக்கு கூட்டிட்டு போயிட்டாரு.” என்று சாதனா சொல்லவும் ஸ்ருதி..

“பரவாயில்லை சாது.. அது வரை உன்னை ஆதாரிக்க தாய் மாமன் இருந்தாங்கலே.. இல்லை என்றால் இன்னுமே உனக்கு கஷ்டம் தானே..” என்று சொன்னவளிடம்.

சாதனா. “என் சித்தி என் சாப்பாட்டில் மட்டும் தான் கை வெச்சாங்க. ஆனா அங்கு என் வாழ்க்கையிலேயே கை வெச்சிட்டிங்க ஸ்ருதி…” என்றதும் ஸ்ருதி..

“ஏய் என்ன டி சொல்ற…?” என்று பதறி கேட்ட போது..

“என் மாமன் என் சொத்துக்கு ஆசைப்பட்டு தான் என்னை கூட்டிட்டு போனாரு என்று எனக்கு அங்கு போன பிறகு தான் தெரிந்தது ஸ்ருதி… உன் அப்பா இறந்து விட்டாரு.. நீ இங்கு இருக்க அந்த வீட்டில் உனக்கும் பங்கு இருக்கு கேஸ் போடு என்று சொல்லி என்னை கேஸ் போட வெச்சி… அந்த வீட்டை வித்து எனக்கு உண்டான பாகத்தை என் சித்தி கிட்ட இருந்து வாங்கிட்டாரு டி…” என்று சாதனா சொன்னதில்.

“அந்த பணம் உன் வங்கி கணக்கில் தானே வந்து இருக்கும்.. அதை உன் கிட்ட இருந்து பிடிங்கிட்டாங்கலா.?” என்று கேட்ட போது சாதனா..

“என் மாமா பலே கில்லாடி ஸ்ருதி.. என் மாமனுக்கு ஒரு பொறுக்கி மகன் இருந்தான்.. அவனுக்கு பெண் கிடைக்கல.. என்னை அவன் மகனுக்கு கட்டி வெச்சி ஒரு கல்லில் இரண்டு மாங்கா மாதிரி காரியத்தை சாதிச்சிட்டான்…” என்று சாதனா சொன்ன செய்தியில் ஸ்ருதி அதிர்ந்து போய் அவளை பார்த்தாள்…

கழுத்தில் தாலி இல்லாது காலில் மெட்டி இல்லாது… திருமணத்திற்க்கு உண்டான எந்த அறிகுறியும் இல்லாது தோழியையே சாதனா பார்த்து கொண்டு இருக்க.

ஸ்ருதியின் பார்வையை புரிந்து கொண்ட சாதவா..

“டைவஸ் ஆகிடுச்சி டி… என் பணம் மட்டும் இல்ல.. என் குழந்தையையும் பரிச்சிட்டு தான் அனுப்பிட்டாங்க…” என்று சொன்ன நொடி

“என்னது குழந்தையா….?” என்று அதிர்ந்து போய் கேட்டவளிடம் சாதனா..

“ப்ளீஸ் ஸ்ருதி. இனி அதை பத்தி எல்லாம் என் கிட்ட கேட்காதே…. எல்லா மறக்க நினைக்கிறேன்.. உனக்கே தெரியும் நான் படிக்கும் போதே ப்யூட்டி கோர்ஸ் படிச்சேன் என்று… என் வாழ்க்கை தான் அழகா இல்ல.. இதாவது அழகா இருக்கட்டும்..” என்று சொன்னவளிடம்..

“ம் சரி சரி… விடு.” என்று சொல்லி ஸ்ருதி தான் ஆறுதல் படுத்தினாள்..

பின் தன்னை பற்றி விசாரிக்க சொன்னாள்.. “ படிச்சதுமே கேம்பஸ்ல வேலை கிடச்சது… அடுத்த வருஷமே இவரோடான மேரஜ்…” என்று சொல்லும் போதே ஸ்ருதியின் முகத்தில் வந்த அந்த மகிழ்வில்..

“ உன் ஹஸ்பெண்டை ரொம்ப பிடிக்குமோ….” என்று கேட்ட போது.

“பிடிக்கும் பிடிச்சதாலே தானே மேரஜ் செய்துக்கிட்டேன்…” என்று ஸ்ருதி சொன்ன விதத்தில்..

“லவ் மேரஜ்ஜா…?” என்று விசாரித்தவளிடம்..

“அய்யோ இல்ல… பெரியவங்க பார்த்தது தான்…” என்று சொன்னாள்..

கூடவே… “ அவர் தான் சீமந்ததிற்க்கு ப்யூட்டிஷன் வெச்சிக்கோ.. என்று சொன்னார்…” என்று கூறியவளிடம்..

“அப்போ உன் ஹஸ்பெண்டால தான் உன்னை நான் பார்க்க முடிந்தது..” என்று இருவரும் சிறிது நேரம் பேசிய பின்… தான் அன்று வீடு வந்தாள் ஸ்ருதி..

அன்று இரவே கணவனிடம்… “ என் பிரண்ட் தானுங்க…. அவளே வந்து பண்ணிடுறேன்..” என்று சொன்ன போது ஸ்ரீ காந்த்..

“தோ பாரு உன் பிரண்ட் என்று சொல்லிட்டு ஏதாவது ஒன்னு பண்ண கூடாது.. அன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கனும் சொல்லிட்டேன்..” என்று தோழி என்று தான் எதுவும் பார்க்காது வைத்து விட்டளோ என்று நினைத்தவர் கூட..

தன் சீமந்தம் அன்று தான் மேடையில் வந்து அமர்ந்த அழகில்.. ஒரு நிமிடம் தன்னையே பார்த்து நின்ற கணவனின் அந்த பார்வையில் ஸ்ருதிக்கு புது பெண் போல வெட்கம் வந்து விட்டது.. அப்படியான ஒரு பார்வை பார்த்தான் அன்று ஸ்ரீ காந்த்…

தன் கை பேசியில் ப்ளூ டிக் விழுந்து விட்டதா என்று பார்த்து கொண்டு இருந்த இடைப்பட்ட நேரத்தில் சாதனாவை பற்றி அனைத்தும் நினைத்து கொண்டு இருந்த போது சாதனா தான் அனுப்பியதை பார்த்து விட்டாள் என்று தெரிந்ததுமே உடனே அவளை அழைத்து விட்டாள்…




 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
174
ஸ்ருதிகாஸ்ரீ கதையோட நாயகின்னு அறிமுகபடுத்துனீங்க ☺️☺️☺️ஆனா ஸ்ரீ காந்த் பத்தி அப்படி எதுவும் சொல்லலையே 🤭 🤭 🤫 ஒரு வேளை ஏதோ தப்பு செய்வானோ 🤨🤨🤨

ஸ்ருதிய தவிர வேற யாரும் மருமகளா வந்திருந்தா அனிதாவோட நிலை ரொம்ப மோசம் தான் 😖😖😖😖


சாதனா ☹️☹️☹️ சட்டம் எவ்வளவோ பெண்களுக்கு சாதகமா இருக்கு 😨 😨 😨 உன் குழந்தைய உன் கிட்ட வச்சுக்க ஏதாவது வழி செய்வதை விட்டு சோக கீதம் வாசிக்கிற 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
 
Last edited:
Well-known member
Joined
May 11, 2024
Messages
265
அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கற ஸ்ரீகாந்துக்கு எது அழகென தெரியலை. என்னமோ சாதனா ஸ்ருதியோட வாழ்க்கைல குறுக்க வந்திருப்பாளோ என தோணுது
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
187
ஸ்ரீ காந்த் நிறைய பொங்கல் வாங்குவான் போல 🤣🤣🤣🤣
அழகு அழகுன்னு பாழுங்கிணத்துல விழுந்துடாதடா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஸ்ருதியோட வேலைப் பளு உணர்ந்து இன்னொரு வேலை ஆள் வச்சுருக்கலாம்.....
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
177
அருமையான பதிவு 😍 😍 😍.
ஓரகத்திங்க இரண்டு பேரும் ஒத்துமையா இருக்காங்க.
மாமனார் மாமியார் நல்லவிகளா தெரியது.
ஆனா இவனோட பேச்சைப் பாத்தாக்கா வில்லங்கம் வரும் போல தெரியுது.
இதுல சாதனாங்கிற ஆளு கிட்ட சிக்கல் ஆரம்பம் ஆகும் போல போன் போட்டா எடுக்காம இருக்காளே
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
307
Shruthi pawam than… Anitha vum pawam than… 😢😢😢

Sadhana va edhukku intro kodutheenga… Sreekanth kooda link madiri kattida matteenagele 😢😢😢
 
Top