Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட....5.2

  • Thread Author
அத்தியாயம்…5…2

ஸ்ருதி தன் முடிவில் மிக உறுதியாக இருந்தாள்… “ ஒரு சில தவறுக்கு தான் மன்னிப்பு உண்டு… ஆனால் ஒரு சிலது… முடியாது முடியவே முடியாது.. என்னை பொறுத்த வரை எந்த ஒரு உறவிலும் உண்மை இருக்கனும் , உண்மை செத்து போயிட்டா அந்த உறவில் உயிர்ப்பு இருக்காது.. நான் கல்யாணம் முடிந்து இந்த வீட்டுக்கு வந்த நாள் முதலா… தன் கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்து காட்டி இதுக்கு நான் உண்மை தான் இருந்து இருக்கேன்…

இந்த வீட்டு உறவை என் உறவா பார்த்த தொட்டு தான் நான் எல்லாமே செய்தேன்… ஆனா நான் பார்த்தது போல என்னை யாரும் பார்க்கல என்று எனக்கே இன்னைக்கு தான் தெரியுது… தப்பே செய்து இருந்தாலும். மகன் லே.. ஆனா நானு வேறு ஒரு வீட்டில் இருந்து வந்தவ.. தானே.”

ஸ்ருதி கடைசியாக இந்த வார்த்தை சொல்லும் போது அவளின் பார்வை அனிதா பவானியிடம் சென்று வந்தது…

பின் சிறிது யோசித்தவள்… “ நானும் படிச்சி ஐடியில் வேலைக்கு போய் இருந்தவ தான்.. நான் எந்த நேரமும் மேக்கப்பில் சுத்திட்டு இல்லை என்றாலும், அந்த வேலைக்கு ஏத்தது போல தான் நான் உடை உடுத்தி கொண்டு போவேன்… இங்கு என் வேலைகள் என்னை இழுத்ததில் நான் என்னை கவனிக்க தவறினேன்.. .

நான் என்னை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தால் என் குழந்தைங்க சமத்து குழந்தைங்க தான்.. காலையில் புருஷன் காரனுக்கு கட்டி கொடுத்துட்டு.. என் மத்த நேரத்தில் என்னை அலங்கரிச்சிட்டு இருந்து இருக்கலாம்.

ஆனா இந்த வீட்டுக்கு என் அலங்காரத்தோடு… என் கவனிப்பு தான் இவங்களுக்கு தேவை என்று இருந்தேன்… ஆனா இதுவும் ஒரு வகையில் நல்லது தான் நான் சொல்லுவேன்… இப்போவாவது நான் முழுச்சி கொண்டனே..

என் அந்த இரவு உடையை வைத்து அத்தனை கிண்டல் பேச்சு..ம்… “

வினோத் கடைசியாக பேசியதை கேட்க முடியாது அணைத்து விட்டான். அது இவளை பற்றியதான பேச்சை தான் சாதனாவும் ஸ்ரீ காந்தும் பேசி கொண்டு இருந்தது..

ஸ்ரீ காந்த் எந்த நேரமும் அந்த நையிட்டி போட்டுட்டு இருக்கா.. மனுஷனுக்கு எங்கு இருந்து மூடு வரும்.. நான் அவளை தொட்டே ஒரு மாசம் ஆகுது… கணவன் மனைவிக்குள் இருக்கும் அவர்களின் அந்தரங்கத்தை சாதனாவிடம் கடைப்பரப்பி கொண்டு இருந்தான் ஸ்ரீ காந்த்..

அதோடு அந்த ப்யூட்டிபார்லர் பற்றி கூட தெரியவில்லை என்பது போலான இருவரின் கிண்டல் பேச்சுக்கு ஸ்ருதி…

“எனக்கு ப்யூட்டி பார்லரில் என்ன என்ன மேக்கப் செய்யனும் அது போலான விவரங்கள் தெரியாது தான்.. ஏன்னா எனக்கு அது தேவையில்லை என்று தோனுச்சி.. நான் மக்கும் இல்ல. ஸ்கூல் காலேஜ் கோல்ட் மெடலிஸ்ட்…. அதே போல ஒரு நல்ல ஐடி கம்பெனியில் என்னை கேம்பஸ்ஸில் செலக்ட் செய்யும் அளவுக்கு நான் படிப்பாளி தான்..

எனக்கு அந்த ப்யூட்டிபார்லர் பத்தி தெரியாம இருக்கலாம்.. ஆனா உங்க இரண்டு பேருடைய மாத்திரையின்ன் பெயர்… அளவு.. எத்தனை மில்லிகிராம் எந்த நேரத்துக்கு போடனும் என்று நான் எதுலேயும் பதிவு செய்து வைக்கல.. தன் மூளையை காட்டி அது விவரம் இங்கு இருக்கு.. இந்த விவரம் உங்க இரண்டு பிள்ளைங்களுக்கு கூட தெரியாது லே.” என்று பவானி வெங்கடராமனிடன் கேட்டாள்…

ஸ்ருதி இத்தனை பேசியும் கூட பவானி சும்மா இராது… “ நீ சொல்றது எல்லாம் வாஸ்த்தவம் தான்ம்மா நான் இல்லேன்னு சொல்லலே.. நீ எங்களை நல்ல மாதிரியா தான் பார்த்துக்குனே.. அப்படி நான் இல்லே என்று சொன்னா என் நாக்கு அழுகி விடும்…” என்று சொன்’ னவர்..

பின்… கடைசியாக.. “வெளியில் போயிட்டு வர ஆம்பிள்ளை வீட்டுக்கு வரும் போது பொண்டாட்டி கொஞ்சம் பளிச் என்று இருக்கனும் என்று தான் அவன் ஆசைப்படுவான்…” என்ற போது கோகுல்..

“ம்மா என்ன ம்மா பேச்சு..?” என்று அதட்டினான்..

ஆனால் ஸ்ருதியோ… “ ஓ புருஷன் வரும் போது பொண்டாட்டி பளிச் என்று இல்லேன்னா அவன் வேறு பொண்ணை தேடி போயிடுவானா…?” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டவள்..

பின்… “ நான் சும்மா கேட்கிறேன்… இந்த ஆம்பிள்ளைங்க… நாம பாக்கும் போது கண்ணுக்கு நிறைவா தெரியனும் என்று எதிர் பார்க்கிறாங்கலே…

எத்தனை ஆம்பிள்ளைங்க… வீட்டில் நீட்டா உடை உடுத்தி கொண்டு மனைவி பார்வைக்கு பளிச் என்று இருக்கான்.. வெளியில் போகும் போது தான் ஐயன் செய்த உடையை உடுத்தி தலையை இப்படி அப்படி என்று சீவிக் கொண்டு ஷூ சென்ட் என்று போட்டு கொண்டு.. ஊருல இருக்க பொண்ணுங்க கண்ணுக்கு நிறைவா போயிட்டு வரும் இந்த ஆம்பிள்ளைங்க..

வீட்டுல வந்த உடன் என்ன செய்யிறாங்க.. அந்த ஐயன் பண்ண ட்ரஸ்ஸை கழட்டி ஒரு மூலையில் வீசி எரிஞ்சுடுவாங்க.. ஒரு இத்து போன லுங்கியோ இல்ல சாயம் போன ஒரு ஷாட்ஸ்ஸையோ தானே போட்டுட்டு வீட்டுல இருக்கானுங்க.. அவனுங்க மட்டும் ஏன் வீட்ல மனைவியின் கண்ணுக்கு நிறைவா இருக்கனும் என்று நினைக்க மாட்டேங்குறாங்க/.. ஏன்னா வீட்ல இருக்கும் இந்த லூசு பொண்ட்டாட்டிக்கு இது போதும்.. வெளியில் இருக்கும் பெண்களுக்கு தான் நாம பளிச் என்று தெரியனும். இதுங்க எல்லாம் நம்ம விட்டு போகாது என்ற தைரியம்…” என்று சொன்னவள் பின் இது எல்லாம் எனக்கு தேவையில்லாத பேச்சு என்பது போல சொல்லி தன் உடைகளை அந்த வீட்டவர்கள் தடுக்க தடுக்க எடுத்து கொண்டு சென்று விட்டாள்.

ஸ்ருதி வீட்டவர்களில் அவளின் அக்கா அக்கா கணவனை தவிர. இதில் யாருக்குமே விருப்பம் இல்லை…

ஸ்ருதி தன் மாமியார் வீட்டோடு உறவு முடிந்து தாய் வீட்டிற்க்கு வந்து இரண்டு வாரங்கள் கடந்து விட்டது…

ஸ்ருதி முதலில் தன் அன்னை கீழே விழுந்து விட்டார் என்று இங்கு வந்து தங்கிய போதே தன் அன்னையை கவனித்து கொண்டே… அடுத்த தான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து வைத்து இருந்தாள் தான்.

அதில் முதன்மையானது விவாகரத்து பெற்ற பின்.. தான் அம்மா வீட்டில் இருக்க கூடாது.. வேறு வீடு பார்த்து தான் செல்ல வேண்டும் என்ற முடிவோடு தான் இருந்தாள்..

ஆனால் அண்ணன் ஒன்றும் தன்னை பேசவில்லை என்றாலும், அண்ணி பேசுவதற்க்கு அமைதியாக இருப்பதே விவாகரத்து வரை கூட தன்னால் இங்கு தாக்கு பிடிக்க முடியாது என்பது தெளிவாக புரிந்து விட்டது…

அண்ணன் குழந்தைகளுக்கும் தன் குழந்தைகளுக்கும் ஒரே வயது தான்… முதலில் எல்லாம் இங்கு வந்தால் குழந்தைகளின் விளையாட்டு பொருட்களை தன் குழந்தைகளுக்கு கொடுக்க சொல்லும் அண்ணி.. இப்போது…

“அவள் உடைத்து விடுவான்.. நம்ம ரூமுல போய் வெச்சிடு..” என்று தன் குழந்தைகளிடம் சொன்னதை கேட்டவள்..

இங்கு இருந்தால் நம் குழந்தைகளின் மனது தான் பாதிக்க கூடும் என்பது தெளிவாக புரிந்து விட்டது..

அவள் தனியாக போக முடிவு செய்து விட்டாள்.. இவளின் அனைத்து முடிவுக்குமே இவளின் அக்கா மாமா உறுதுணையாக இருந்தனர்..

அண்ணன்கள் இதற்க்கு மட்டும்… “ நீங்க தனியா வீடு பார்த்து வெச்சிட்டு போயிடுவே… நாளை பின்ன தனியா இருக்கும் பெண் கிட்ட யாராவது பிரச்சனை செய்தா பக்கத்தில் நாங்க தான் இருக்கோம்.. நாங்க தான் ஓடி போய் பார்க்கனும்.. இது எல்லாம் யோசித்து தான் நான் அவன் தான் இனி இது போல செய்ய மாட்டேன் என்று சொல்றான்லே என்று சொல்லி வாழ சொன்னது… இப்போ ஆள் ஆள் கேள்வி வேறு கேட்பானுங்க.. இதுல வீட்டு பெண்ணை தனியா தத்தளிக்க விட்டு விட்டோம் என்று எங்க மீது தான் பழியை போடுவாங்க..” என்று இரண்டு அண்ணங்களும் பேசியதில் ஸ்ருதியின் அக்கா கலாவதி ஏதோ பேச ஆரம்பித்தாள் தான்..

ஆனால் ஸ்ருதி… “ க்கா வேண்டாம் க்கா விடுங்க..” என்று விட்டாள்..

அவளுக்கு ஒன்று மாற்றி ஒன்று பேசினால் பேச்சுக்கள் போய் கொண்டே தான் இருக்கும்.. ஒரு முடிவு எடுக்கும் முன் மற்றவர்களிடம் பேசுவது சரி.. ஆனா எடுத்த முடிவுக்கு அதுவும் எதிர் பக்கம் பேச்சானது தன் முடிவுக்கு எதிராக இருக்கும் போது பேச்சை வளர்ப்பதில் அவளுக்கு விருப்பம் இல்லை.. அதனால் அக்காவை பேச விடாது செய்தவள்..

பின் தன் இரண்டு அண்ணங்களையும் பார்த்து…. “ என் இந்த முடிவு நான் எடுத்தது தான் ண்ணா. அதனால இதுல நல்லது கெட்டது எது என்றாலும் நானே பார்த்துக்குறேன்.” என்று கூறி விட்டாள்..

அதை எல்லாம் கேட்ட அவளின் அம்மா தான் அழுது கொண்டு இருந்தார்.. அவருக்குமே மருமகனின் அந்த பேச்சை கேட்டது நெஞ்சே வெடித்து விடும் போல தான் இருந்தது..

அதுவும் தன் மகள் மாடா அந்த வீட்டுக்கு தேய… இவர் இப்படி ஒரு காரியம் செய்து வைப்பாரா என்று தான் நினைத்தது… இருந்துமே மகள் விவாகரத்து செய்து விட்டாள் மகளின் எதிர்காலம். இரண்டு பெண்குழந்தைகளை வைத்து அவள் என்ன செய்வாள்… இதை எல்லாம் நினைத்து அவரா அழுக மட்டும் தான் முடிந்தது…

கலாவதியும் குணசேகரனும் பத்து நாட்களுக்கு மட்டும் தான் சென்னையில் இருப்பது போல வந்தது… ஸ்ருதியின் இந்த பிரச்சனையால் இன்னுமே பத்து நாட்கள் இங்கு இருக்கும் படியாகி விட்டது…

அவன் டெல்லியில் அரசாங்க வக்கீல்… இனி தன் வேலையை விட்டு இங்கு இருக்க முடியாத சூழல்… குணசேகரன் படித்தது எல்லாம் செங்கல்பட்டில் தான்… படித்து முடித்து லாயராக ப்ராக்ட்டிஸ் செய்தது அப்போது அரசாங்க வக்கீலாக இருந்த சோமசுந்தரத்திடம் தான்.

அவரின் இழப்புக்கு டெல்லியில் இருந்து அவசரமாக செங்கல்பட்டு வந்து பார்த்து போகும் அளவுக்கு அவரிடம் அவனுக்கு மரியாதை இருந்தது..

தான் இந்த அளவுக்கு இருக்கிறேன் என்றால், அதற்க்கு அவர் ஒரு முக்கியகாரணம். அதை தன் மனைவி மகளிடமும் அவன் அவ்வப்போது சொல்வது உண்டு…

குணசேகரனுக்கு சோமசுந்தரத்திடம் பழகிய அளவுக்கு அவர் மகன் சாண்டில்யனிடம் பேசியது கிடையாது.

பார்த்தால் ஒரு சிரிப்பு அவ்வளவே… ஆனால் குணசேகரன் சாண்டில்யனிடம் அதிகம் பேசவில்லை என்றாலும் அவனின் இருபத்தியெழாவது வயது வரை..

அதாவது சோமசுந்தரம் இருக்கும் வரை அவர் வாய் வழியாக சாண்டில்யனை பற்றி அனைத்து விவரங்களும் குனசேகரனுக்கு தெரியும்..

சோமசுந்தரத்திற்க்கு கொஞ்ச நேரம் ஓய்வு கிடைத்தால் கூட போதும்.. “ குணா சாண்டில்யன் இன்னைக்கு என்ன கேட்டான் தெரியுமா…? என்ன சொன்னான் தெரியுமா…? இது போலான பேச்சுக்கள் தான் இருக்கும்…

குணசேகரனின் இருபத்தி ஐந்து வரை அவரிடம் இருந்து இது போலான பேச்சுக்களை நேரில் கேட்ட குணசேகரன்.. இரண்டு வருடங்களாக இவன் வேலை மாற்றமாக டெல்லிக்கு வந்து விட.. பின் பேசியில் மூலமாக கேட்டு கொண்டு இருந்தவன்…

சாண்டில்யன் தற்போது இருப்பது சென்னையில் இருப்பது தெரிந்ததும்… இன்று அதை நம்பியே தன் மைத்துனியின் வழக்கை அவனிடம் கொடுக்கும் முடிவில் இருந்தான்…

ஸ்ருதி விவாகரத்து என்று உறுதியாக நின்று விட. குணசேகரனுக்குமே அது தான் சரி என்று இருந்தது… அதனால் தன் மைத்துனி அனைத்துக்குமே துணையாக இருக்க முடிவு செய்த குணசேகரன் கூட இருக்க முடியாத காரணத்தினால் சாண்டில்யனை தேடிய போது தான் அவனுக்கு கிடைத்த தகவல்..

அவனின் வசும்மா இறந்து விட்டார் என்பது… இறந்து பதினைந்து நாள் சென்று விட்டதாகவும்.. ஆனால் அவருக்கு இன்னுமே மனது தேரவில்லை என்ற காரணத்தினால் சாண்டில்யனின் அப்பா அம்மா வீட்டிற்க்கு சென்று உள்ளதாகவும்…

முக்கியமான விசயத்தை தவிர வேறு எந்த விசயத்திற்க்கும் என்னை தொந்தரவு செய்ய கூடாது என்று சொல்லி விட்டு சென்றதாகவும் குணசேகரனிடம் சாண்டில்யணின் ஜூனியர் வேதநாயகம் தகவலாக சொன்னார்.

குணசேகரனுக்கு இப்போது என்ன செய்ய வேண்டும் என்பது புரியவில்லை… பின் தான் டெல்லியின் வக்கீலாக பணியாற்றுகிறேன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவன் தான் சாண்டில்யன் தந்தையிடம் தான் ஜூனியராக பிராக்ட்டிஸ் எடுத்தேன் என்று சொல்லவும்..

குணசேகரனின் இந்த தகவல் சாண்டில்யனின் ஜூனியர் வேதநாயகத்திடம் நன்றாகவே வேலை செய்தது.. தங்கள் முன் மாட்டப்பட்டு இருந்த சோமசுந்தரந்தின் படத்தை பார்த்த பின்…

சாண்டில்யன் அவசியம் என்றால் மட்டும் தன்னை அழைக்கலாம் என்ற வார்த்தையை இதற்க்கு பயன் படுத்திக் கொண்டார்…

சாண்டில்யனை அழைத்த அவனின் ஜூனியர். சுற்றி வளைக்காது எடுத்த உடனே… “ சார் உங்க அப்பா கிட்ட ஜூனியரா இருந்தவர் இங்கு வந்து இருக்கார் சார்..” என்றதுமே

அழைப்பின் மறுப்பக்கம் இருந்த சாண்டில்யன்… பெயர் என்ன என்று கேட்டான்.

“குணசேகரன் சார்.. இப்போ டெல்லியில் லாயரா இருக்கார்.” என்று சொன்னதுமே சாண்டில்யனுக்கு நியாபகத்தில் வந்து விட்டது..

சோமசுந்தரம் குணசேகரிடம் சாண்டில்யனை பற்றி பேசியது போல இவனிடமும் குணசேகரனை பற்றி பேசி உள்ளார்…

“ரொம்ப திறமையானவன்..” என்றும் சொல்லி இருக்கிறார்..

அதோடு குணசேகரின் நிச்சயத்திற்க்கு என்று அவனின் அன்னையும் தந்தையும் சென்னைக்கு சென்று வந்தது கூட அவனுக்கு நியாபகம் இருக்கிறது..

இவனின் அம்மா.. அங்கு நடந்த ஒரு விசயத்தை சொல்லி கிண்டலாக சிரித்தும் உள்ளார்….

அதனால் குணசேகர் பெயர் அவனின் நியாபகத்தில் இருக்க….” ம்.. தெரியும் வேதா . என்ன விசயம்..” என்று கேட்டான்..

அவன் இருந்த மனநிலைக்கு யாரிடமும் பேச பிடிக்கவில்லை தான்..

ஆனால் தந்தை என்று வந்த போது தவிர்க்கும் எண்ணம் இல்லாது கேட்க.

சிறிது நேரத்திற்க்கு எல்லாம் வேதநாயகத்திடம் இருந்து குணசேகரிடம் கை பேசி மாறியது..

குணசேகரன் முறையாக சாண்டில்யனிடம் தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டவன்…

முதலில் அவனின் வசும்மா இறப்புக்கு வருத்தம் தெரிவித்த பின்.. தன் மைத்துனி பற்றி அனைத்தும் சொல்லி முடித்தவன்..

“நான் டெல்லிக்கு இன்னும் இரண்டு நாளில் கிளம்பிடனும்… “ என்றும் சொல்லி முடிக்க.

சிறிது நேரம் யோசித்த சாண்டில்யன்… முதல் கேள்வியாக… “ அவங்க இந்த முடிவில் உறுதியா தானே இருக்காங்க.. அப்புறம் குழந்தை.. சமூகம் பேமிலி சென்டிமெண்ட் என்று பின் வாங்க மாட்டாங்க… தானே…” என்று முதலில் அதை உறுதி பட தெரிந்து கொள்ள கேட்டான்..

“ரொம்ப ரொம்ப ஸ்டாங்கா இருக்கா… நானே இப்படியான ஒரு போல்ட் பர்சனை நான் பார்த்தது இல்லை.. அவள் அண்ணன் அத்தனை சொல்லியும் கூட அவள் முடிவில் அவள் உறுதியா இருக்கா…” என்று சொன்னதுமே..

“ சரி நான் இன்னும் பத்து நாளில் சென்னை வந்துடுவேன்.. என் போன் நம்பரை வேதாவிடம் வாங்கிக்கோங்க. உங்க சிஸ்ட்டர்ன்லா நம்பரை வேதாவிடம் கொடுத்துட்டு போங்க…” என்று சொன்னதுமே..

குணசேகரன்.. சிறிது தயங்கி… “ நீங்க தான் கொஞ்சம் பார்த்துக்கனும்… ஏன்னா ஸ்ருதி மாமியார் வீட்டு பக்கம் இந்த விவாஜரத்துல விருப்பம் கிடையாது.. இது மீச்சுவல்லா டைவஸ் கிடைக்காது என்று தான் எனக்கு தோனுது… “ என்று சொன்னவனிடம்..

“அவங்க பக்கம் உண்மை இருக்கும் பட்சத்தில் கண்டிப்பா அவங்களுக்கு பேபரா தான் எல்லாம் கொண்டு போவேன்… அதுக்கு முதல்ல நான் அவங்க கிட்ட பேசினா தான் ஒரு தெளிவு கிடைக்கும்.. ஒரு லாயரா.. அதுவும் நீங்க என் அப்பா கிட்ட பிராக்ட்டிஸ் செய்தவர்… இது பத்தி எல்லாம் உங்களுக்கு சொல்ல வேண்டிய தேவை இருக்காது என்று நினைக்கிறேன் என்றவனின் பேச்சில்..

“சரிங்க சார்..” என்றவனிடம் சாண்டில்யன்.

“ என் அப்பாவுடைய பேபரைட் ஜூனியர் நீங்க. சார் எல்லாம் வேண்டாம் பெயரை சொல்லியே கூப்பிடுங்க..” என்று விட்டு பேசியை வைத்தான்.
 
Well-known member
Joined
Mar 22, 2025
Messages
79
இனி சகலை தானே தம்பி முறையும் கூட அதனால் பேர் சொல்லியே கூப்பிடுங்க கலா வீட்டுகாரரே .

ஸ்ருதி மாமியார் சாதனாக்கு மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல் கவனிப்பு கொடுங்க விஜி மேம் அந்த பார்லருக்கு கொஞ்சம் தூக்கலா இருந்தால் படிக்கிற எங்களுக்கு மனசு ஆறுதலா இருக்கும்.
 
Well-known member
Joined
May 11, 2024
Messages
265
அவனிடம் விவாகரத்தை வாங்கி பிள்ளைகளை தான் வளர்த்து அவனை எந்த பொறுப்பும் இல்லாம சுதந்திரமா வாழ விடக்கூடாது. அவனிடம் குழந்தைங்களுக்காக அவனோட கடைசி பைசா வரை பிடுங்கனும். பணம் இல்லாம இவனோட அழுகு மூஞ்சிக்கு எவ வராளோ வரட்டும்.
 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
174
வசும்மா இறந்துட்டாங்களா 🤧🤧🤧🤧

ஸ்ருதி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கா 😑😑 அக்கா குடும்பம் துணையா இருக்கு😀😀😀😀

சாண்டில்யன் கிட்ட கேஸ் வந்திடுச்சு ☺️ ☺️ ☺️ ☺️ ஸ்ருதி கிட்ட பேசும் போது அவ உறுதிய தெரிஞ்சுக்குவ 😄😄😄😄

இனி காந்துக்கு அழகான பொண்டாட்டி கிடைப்பா சந்தோஷமா குடும்பம் நடத்தட்டும் 😖😖😖😖😖😖
 
Last edited:
New member
Joined
May 10, 2024
Messages
16
Hello madam. Idhu oru appreciation comment. Not relevant to this story. Complete aanadhum dhan padipen. Ippo unga kindle mogathin monam paditchutu iruken. Just started. Online la paditchuten erkanave. Ippo second time vaasickaren. Ungha way of writing impressed me a lot. Niraya stories repeated a padikaren madam. First time tamil novels writers la ungha competion story dhan paditchen
Super a irundhadhu. Appuram site la thedi ella stories um paditchutten then now in kindle and kadhaaruvi. Family politics stories e vidha vidhama kodukareengha. Thanks a lot madam. And eagerly looking forward to read your all forthcoming stories. Neenda aayulum, nalamum vazhamum, azhaghana karpanaighalum pera ellam valla iraivanai prarthikiren. Best wishes madam, with lots and lots of love - vidya.
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
177
Vaishu ma
Sir kku neengha taan eppadi koopidanum nnu solli tharanum
Enna neengha koopidarathu pola taan
யோவ் பங்கு உஉஉ...
சொல்லிடலாம்.🥳🥳🥳
அவ்வ்வ்.... இன்னான்னு சொல்லறது 🙄🙄🙄🙄🙄
பங்கு அந்த அலைஞ்சானுக்கு வேணா வண்டி(டை) வண்டி(டை) யா பேரு வக்கலாம்.
சகலபாடி ஆகறதுக்கு 🙄🙄🤪🤪🤪 இங்கன என்றாளோட மனசைப் பொறுத்து தான் 😎😎😎😎.
சோசியக்காரன் சொன்னது பலிக்கப் போகுதா பங்கு.
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
177
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஓ ஓஹ்ஹோ...
இந்த கடல்புறாவோட படைப்பாளி தான் நம்மாளுக்கு டைவர்ஸ் வாங்கித் தரப்போறாரா???🥳🥳🥳🥳.
அடேய் ஈரோபயலே அவனைய புழியற புழியல்ல பூமியில எந்த பொண்ணையுமே மேக்கப் போடலை ன்னு கேக்கவே கூடாது அந்த எடுபட்டபய😤😤😤😤😤
ஆத்தர் ஜீ உங்க டுவிஸ்ட் சூப்பரு.
 
Well-known member
Joined
Jul 14, 2024
Messages
392
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஓ ஓஹ்ஹோ...
இந்த கடல்புறாவோட படைப்பாளி தான் நம்மாளுக்கு டைவர்ஸ் வாங்கித் தரப்போறாரா???🥳🥳🥳🥳.
அடேய் ஈரோபயலே அவனைய புழியற புழியல்ல பூமியில எந்த பொண்ணையுமே மேக்கப் போடலை ன்னு கேக்கவே கூடாது அந்த எடுபட்டபய😤😤😤😤😤
ஆத்தர் ஜீ உங்க டுவிஸ்ட் சூப்பரு.
Avan taan nadikkuran avanukku makeup poda oru monkey 🐒
(Monkey 🐒 enna mannikkanum)
Ivan ahh lam கெட்ட கெட்ட வார்த்தை ல திட்டனும்
Ingha illa ma manadukkulla 😡😡😡
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,252
Hello madam. Idhu oru appreciation comment. Not relevant to this story. Complete aanadhum dhan padipen. Ippo unga kindle mogathin monam paditchutu iruken. Just started. Online la paditchuten erkanave. Ippo second time vaasickaren. Ungha way of writing impressed me a lot. Niraya stories repeated a padikaren madam. First time tamil novels writers la ungha competion story dhan paditchen
Super a irundhadhu. Appuram site la thedi ella stories um paditchutten then now in kindle and kadhaaruvi. Family politics stories e vidha vidhama kodukareengha. Thanks a lot madam. And eagerly looking forward to read your all forthcoming stories. Neenda aayulum, nalamum vazhamum, azhaghana karpanaighalum pera ellam valla iraivanai prarthikiren. Best wishes madam, with lots and lots of love - vidya.
உண்மையில் உங்களின் இந்த பதிவு எனக்கு எவ்வளவு மனநிறைவை கொடுக்கிறது தெரியுமா... நான் ஏதாவது மன வருத்தமாக இருக்கும் போது ஒரு வாசகியா மத்தவங்க கதையை படிப்பேன்.. 2016 மத்தவங்க ளுக்கு இதே போல ஒரு ஆசுவாசத்தை என்னால் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. அப்படி நினைத்து தான் நான் எழுத ஆரம்பித்தேன் பா.. நன்றி நன்றி நன்றி🙏💕
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,252
Hello madam. Idhu oru appreciation comment. Not relevant to this story. Complete aanadhum dhan padipen. Ippo unga kindle mogathin monam paditchutu iruken. Just started. Online la paditchuten erkanave. Ippo second time vaasickaren. Ungha way of writing impressed me a lot. Niraya stories repeated a padikaren madam. First time tamil novels writers la ungha competion story dhan paditchen
Super a irundhadhu. Appuram site la thedi ella stories um paditchutten then now in kindle and kadhaaruvi. Family politics stories e vidha vidhama kodukareengha. Thanks a lot madam. And eagerly looking forward to read your all forthcoming stories. Neenda aayulum, nalamum vazhamum, azhaghana karpanaighalum pera ellam valla iraivanai prarthikiren. Best wishes madam, with lots and lots of love - vidya.
உண்மையில் உங்களின் இந்த பதிவு எனக்கு எவ்வளவு மனநிறைவை கொடுக்கிறது தெரியுமா... நான் ஏதாவது மன வருத்தமாக இருக்கும் போது ஒரு வாசகியா மத்தவங்க கதையை படிப்பேன்.. 2016 மத்தவங்க ளுக்கு இதே போல ஒரு ஆசுவாசத்தை என்னால் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. அப்படி நினைத்து தான் நான் எழுத ஆரம்பித்தேன் பா.. நன்றி நன்றி நன்றி🙏💕
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
177
Avan taan nadikkuran avanukku makeup poda oru monkey 🐒
(Monkey 🐒 enna mannikkanum)
Ivan ahh lam கெட்ட கெட்ட வார்த்தை ல திட்டனும்
Ingha illa ma manadukkulla 😡😡😡
பங்கு நெசக் கொரங்கு கோவிச்சுக்கப் போகுது. என்ற பேரை அவுனுக்கு எதுக்கு வச்சீங்கன்னு.
சேத்துல உருளுமே அதனோட பேரை வக்கலாம் பங்கு.
 
Top