Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட....6

  • Thread Author
அத்தியாயம்…6

குணசேகரிடம் பேசியில் பேசி விட்டு வைத்த சாண்டில்யன் தான் அமர்ந்திருந்த அந்த ஈச்சிசேரில் கண் மூடி சாய்ந்து கொண்டான்.. அவன் இரு கைகளும் அந்த ஈச்சிசாரின் கை பிடியில் இருந்த அந்த யானை முகப்பை தான் தடவி கொண்டு இருந்தது…

சாண்டில்யன் கண் மூடி இருந்தாலுமே அவன் ஏதோ யோசித்து கொண்டு இருக்கிறான் என்பதை அவள் கண் அசைவானது அந்த மூடிய விழிகளிலுமே மிக தெளிவாக தெரிந்தது..

அவன் யோசிக்கும் விசயம் அந்த அளவுக்கு நல்ல மாதிரியாக இல்லை என்பது அவ்வப்போது அவன் தொண்டை குழியின் அசைவிலும்.. மார்பகத்தின் பெரும் மூச்சாக எடுத்து விட்டதால் மார்பகம் அதிகம் அளவு ஏறி இறங்கிய விதத்தில் தெரிந்ததால்,,

அந்த வீட்டை பார்த்து கொள்ளும் கன்னியப்பன்… சாப்பிட அழைக்க வந்தவன் அழைக்காது தயங்கி நின்றவனிடம்..

கண் முழி திறவாது…. “கன்னிப்பா சமச்சிட்டா எடுத்து வெச்சிட்டு போயிடு..” என்று சொன்னான்..

ஆனால் கன்னியப்பன் அந்த இடத்தை விட்டு போகாது அங்கேயே நின்று கொண்டு இருக்க.. கண்னை திறந்து பார்த்த சாண்டில்யன்.. “கன்னிப்பா…” என்று அவனின் பெயரை அழுத்தி உச்சரித்து அவனின் கோபத்தை காட்டினான்..

ஆனால் அந்த கன்னியப்பனுக்கு சாண்டில்யனின் கோபத்தை விட சோமசுந்தரம் ராஜ ராஜஸ்வரியின் மீது இருந்த அந்த விசுவாசம் தான் முன் நின்றது போல..

அதனால்… “ நேத்து கூட இப்படி தான் சொன்னிங்க ஆனா நான் எடுத்து வெச்சது அப்படியே இருந்தது… இந்த பதினைந்து நாளாவே நான் சமச்சி வைக்கிறது மறு நாள் நாய்க்கு தான் போடுறேன் சின்ன ஐய்யா..” என்று சொன்னான்..

கன்னியப்பனின் இந்த பேச்சில் முதலில்.ம் என்று சலிப்பது போல சொன்னவன் பின்..

“அப்போ நாளையில் இருந்து நீ சமைக்காதே.” என்று விட.

“நான் சமைக்க கஷ்டம் என்று சொல்லலே ஐய்யா.. நீங்க சாப்பிடாது இருக்கிறது தான் கஷ்டமா இருக்கு… அம்மா வேலை செய்றவங்க வயித்தையே காய விட மாட்டாங்க… அவங்க மகன் இது போல வயித்த காய வெச்சிட்டு இருக்கிறது என்னவோ போல இருக்கு ஐய்யா…” என்ற கன்னியப்பனின் இந்த பேச்சு சாண்டில்யனிடம் வேலை செய்தது..

“எடுத்து வை ரொம்ப எல்லாம் இல்ல ரசம் சாதம் மட்டு எடுத்து வை…” என்று சொன்னவன் சொன்னது போல கன்னியப்பன் எடுத்து வைத்த ரச சாதத்தை சாண்டில்யன் சாப்பிட்ட பின் தான் கன்னியப்பன் அந்த இடத்தை விட்டே அகன்றான்.

மீண்டும் அதே ஈச்சி சேரில் சாய்ந்து கொண்ட சாண்டியல்யனுக்கு ஏதோ தன் தந்தையின் மார்பிலேயே தலை சாய்த்து கொண்டு இருப்பது போலான ஒரு உணர்வு… இந்த ஈச்சிசேரில் தான் அவனின் தந்தை தன் ஒய்வு நேரத்தில் படுத்து கொண்டு இருப்பார்…



மீண்டும் கண்ணை மூடிக் கொண்டவனுக்கு கடந்த நாட்களில் நடந்த விசயங்களே ஒன்றன் பின் ஒன்றாக நியாபகத்தில் வந்தது…

இங்கு வந்த நாட்களில் அவன் திரும்ப திரும்ப நடந்த விசயங்களையே தான் யோசித்து கொண்டு இருக்கிறான். இந்த நாய்கள் தன் உடலில் இருக்கும் காயத்தை இன்னுமே கடித்து கடித்து காயம் படுத்தி கொள்வது போல.

அதே போல் தனக்கு எந்த விசயமும் தெரியாமலேயே இருந்து இருக்கலாம்.. குறைந்த பட்சம் தனக்கு தெரிந்ததை தன் வசும்மாவிடமாவது சொல்லாமல் இருந்து இருக்கலாம்.. இதை வசும்மா இறந்த தினத்தில் இருந்து இன்று வரை எத்தனையோ முறை இதை நினைத்து விட்டான்..

ஆனால் நடந்து முடிந்த ஒரு விசயத்தை மாற்றி அமைக்கும் சக்தி மனிதனுக்கு இருந்து இருந்தால், மனித வாழ்க்கையில் வரும் பெரும்பாலான பிரச்சனையை தீர்த்து இருந்து இருக்கலாமே..

அன்று அந்த ஜோதிடர் அனைத்துமே புட்டு புட்டு வைத்த பின் கூட… வக்கீலாக தனக்கு கிடைத்த செய்தி உண்மையா என்று தெரிந்து கொள்ள இன்னொரு ஜோதிடரை அனுகினான்.. அவருமே இந்த ஜாதகம் சுத்த ஜாதகம் என்று தான் சொன்னார்… அவர் கூடவே ஒரு சில கணக்கு செய்து…

இனி விரைவில் நீ குடும்பஸ்தனாக ஆகும் யோகம் வந்து விட்டது என்று சொன்னதை நினைத்து இப்போது விரக்தியாக சிரித்து கொண்டான் சாண்டில்யன்…

பின் என்ன அந்த ஜோதிடர் தன்னை குடும்பஸ்தனாக ஆவாய் என்றார் ஆனால் மறு நாளே என் மீது உண்மையான பாசம் வைத்து இருந்த அந்த ஒரு உறவுமே… என்னை விட்டு போய் விட்டது…

ஆம் அன்று சாண்டில்யன் ஒன்றுக்கு இரண்டு ஜோதிடரை பார்த்து தெளிவுப்படுத்தி கொண்டவனுக்கு மனது நிம்மதி அவனிடம் இருந்து போய் விட. வீட்டிற்க்கு செல்ல கூட அவனுக்கு விருப்பம் இல்லை..

இத்தனை நாள் தன்னை ஒதுக்கி வைத்து இருந்த போது கூட அதை அவன் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை… சிறு வயது முதலே அவர்கள் தானே ஒன்றாக வளர்ந்தார்கள் என்று அவர்கள் பக்கமாக தான் யோசித்தான் சாண்டில்யன். அதனால் வருத்தம் மட்டுமே அவனிடம் இருந்தது…

ஆனால் இது.. இது ஒரு வித பச்சை துரோகம் அல்லவா.. தனித்து இருந்தவனுக்கு மனைவியாக ஒரு துணை கூட அருகில் இல்லையே என்று எத்தனை நாள் அவன் தனக்கு என்று ஒரு குடும்பம் வேண்டும் ஏங்கி இருக்கிறான் என்பது அவன் மனது மட்டுமே அறிந்த ரகசியம் அல்லவா…

அதுவும் அதே வீட்டில் தன்னை விட சிறியவர்களாக இருப்பவர்கள் குடும்பமாக இருப்பதை பார்த்து அவன் மனம் ஏங்கியும் இருக்கிறதே..

கூடவே நீதிமன்றத்தில் தன்னிடம் தோத்தவர்கள் தன்னை தாக்கும் ஆயுதமாக தன் உடம்பில் ஏதாவது பிரச்சனையா..? என்பது போல தன்னிடம் நேராக பேசவில்லை என்றாலும் அவன் காதில் வந்து விழுந்ததே.. இத்தனையும் எதனால் ஒன்றும் புரியாது அன்று கடற்கரையில் இருந்த போது தான் அவனின் வசும்மா அழைத்தது…

அழைப்பை ஏற்றவன். “ வசும்மா இன்னும் தூங்காது என்ன செய்துட்டு இருக்கிங்க.?” என்று கொஞ்சம் கோபமாக தான் இதை சாண்டில்யன் வசுமதியிடம் கேட்டது.

அவன் கேள்விக்கு பதில் அளிக்காத வசும்மா.. “ நீ கடற்கரையிலா இருக்க சாண்டில்யா..?” அலையில் ஒசையில் கேட்டவரிடம்.

“ம்.” என்று மட்டும் சொல்ல.

“சாண்டில்யா ஏதாவது பிரச்சனையா. நேத்து சுமதி பொண்ணு சடங்குக்கு போய் வந்து நீ என்னை பார்க்கவே வரல.. வேலைக்காரி இப்போ தான் சொன்னா நீ சாப்பிட கூட இங்கு வரல என்று.. போன இடத்தில் யாராவது ஏதாவது சொன்னாங்கலா சாண்டில்யா…?” என்று கேட்டவரிடம்..

அது எல்லாம் ஒன்றும் இல்லை என்று மகன் சொல்லாது இருக்க.. வசுமதிக்கு அதில் இருந்தே புரிந்து கொண்டு விட்டார்.. மகனுக்கு ஏதோ பிரச்சனை என்று..

இத்தனை பேசியதற்க்கே வாங்கிய மூச்சு அடங்காது இருக்க மேலும்.. “ சாண்டில்யா நீ அம்மா கிட்ட வா. நான் உன்னை பார்க்கம தூங்க மாட்டேன்..” என்று அன்று வசுமதி தான் சாண்டில்யனை என்னை பார்த்தே ஆக வேண்டும் என்று அழைத்தது.

மகனும் நடுயிரவு தன் வசும்மாவை பார்க்க அவர் அறைக்கு சென்றான்.. அது வரை மகனிடம் சொன்னது போலவே தூங்காது முழித்து கொண்டு இருந்தவரை பார்த்த சாண்டில்யன்.

“ஏம்மா நீங்களுமே…” என்று ஏதோ சொல்ல வந்த சாண்டில்யன் சொல்லாது விடுக்க

“என்ன சாண்டில்யா.? நீயுமே என்றால், வேறு யாரால் உனக்கு பிரச்சனை சாண்டில்யா…?” என்று கேட்ட வசும்மாவுக்கு உடனே பதில் அளிக்கவில்லை…

ஆனால் வசும்மா விடாது கேட்கவும் தான் பாக்கெட்டில் வைத்திருந்த தன் ஜாதகத்தை எடுத்து தன் வசும்மாவிடம் கொடுத்தான்..

“ஜாதகமா…? யாருடைய ஜாதகம் சாண்டில்யா…? இது…?” என்று கேட்டார்.. ஜாதகம் புதியதாக எழுதி இருந்ததால் சாண்டில்யனுடையதா இருக்கும் என்பதை அவர் என்று நினைக்கவில்லை… அதனால் கேட்டார்..

“என் ஜாதகம் தான் வசும்மா…” என்று சொல்லவும்.. அவனின் வசும்மாவின் முகம் அப்படி ஒரு வேதனை தெரிந்தது..

இந்த ஜாதகத்தினால் தானே.. தன் மகனுக்கு இன்று வரை திருமணமே நடக்கவில்லை… அதை சொல்லவும் செய்தார்…

இப்போது சாண்டில்யன் வாயை திறந்தான்.. “ நான் கொடுத்த ஜாதகத்தை கொஞ்சம் திறந்து பாருங்க வசும்மா…” என்று சொன்னவன் குரலின் மாற்றத்தில் கை நடுங்க அதை திறந்தார்..

அப்போது சாண்டில்யன் “ அதுல நான் பிறந்த நாள் தேதி இடம் எல்லாம் சரியா இருக்கா என்று பாருங்க வசும்மா…” என்று சொன்னதும்..

வசும்மாவும் பார்த்தார்.. “ எல்லாம் சரியா தான் இருக்கு சாண்டில்யா…? “ என்று சொன்னவரிடம்..

“அப்போ அதுக்கு கீழே வருவதும் உண்மையா தான் இருக்கும் தானே வசும்மா..” என்று இடக்காக கேட்ட சாண்டில்யனின் இந்த பேச்சு புதியதாக இருந்தது…

“நீ என்ன சொல்ற சாண்டில்யா எனக்கு ஒன்னும் புரியல. நீ பேசுறதும் சரி நடந்துக்குறதும் சரி ஒரு மாதிரியா இருக்கு..” என்று சொன்ன வசும்மாவிடம்..

“ அந்த ஜோசியர் என் ஜாதகத்தை கணிச்சி இருக்காரு… அது படிச்சா உங்களுக்கு எல்லாம் புரிந்து விடும் வசும்மா..” என்று சொன்னதுமே வசும்மா படித்து பார்க்க..

அதில் மிக சுத்தமான ஜாதகம்.. ராஜ யோகம் கூடிய ஜாதகம் இது என்று தான் அதில் இருந்தது..

“ஆனா சுமதி மாமியார் உனக்கு முதல்ல பார்த்த பெண் ஜாதகத்தை கொடுத்து பொருத்தம் பார்க்க கொடுத்த போது உன்னுடையது தோஷஜாதகம்.. பார்த்து தான் கல்யாணம் செய்யனும்.. அப்படி பார்க்காது செய்தா அந்த பொண்ணு கல்யாணம் ஆன மூன்றாம் மாசத்தில் இறந்துடுவா என்று தானே சொன்னாங்க..

அதனால தானே உனக்கு எந்த பொண்ணு ஜாதகமும் சேரல…” என்று வசும்மா பட பட என்று பேசியவரிடம்..

தன்னுடைய ஜாதகமான மற்றொரு ஜோதிடரிம் குறித்ததுமே கொடுத்த சாண்டில்யன்..

தன் வசும்மாவிடம் ஒன்று மட்டும் தான் கேட்டான்… “ எனக்கு முதன் முதலா பார்த்த பெண் பொருத்தம் பார்த்த போது அந்த ஜோதிடர் தப்பா சொல்லி இருந்தாலுமே அடுத்து அடுத்து பெண் பார்த்த போது பொருத்தம் பார்த்தாங்க தானே…

அது எல்லாமே ஒரே ஜோதிடர் கிட்ட தான் அவங்க காண்பித்தாங்கலா…?” என்று சாண்டில்யன் தன் வசும்மாவிடம் கேட்டான்..

“இல்ல .” என்று தலையாட்டிய வசுமதி.. ஒரு பெண் ஜாதகம் காஞ்சிப்புரத்துக்கு கல்யாணத்திற்க்கு போகும் போது ஒரு பெண் ஜாதகம் வந்தது… சாண்டில்யன் ஜாதகம் தான் எப்போதுமே என் கிட்ட இருக்குமே… அதனால காஞ்சிப்புரத்திலேயே பார்த்தேன்.. அவர் இந்த பையன் ஜாதகம் ரொம்ப ரொம்ப தோஷம் உள்ள ஜாதகம். என்னை பொறுத்த வரை கல்யாணம் செய்யாம இருப்பது தான் நல்லது என்று சொன்னதா என் கிட்ட வந்து சொன்னாங்க… அது கேட்டதுல இருந்து என் தூக்கம் போயிடுச்சே சாண்டில்யா. ஆனா இப்போ இது… ஏன் சாண்டில்யா அவங்க அப்படி செய்தாங்க… ஏன்..?” பாவம் வசுமதி பரிதவித்து போய் விட்டார்…

தலையில் அடித்து கொண்டும் அழுதார்.. “ பாவீ பாவீ அந்த விபத்துல நான் செய்து இருந்து இருந்தா கூடா நல்லா இருந்து இருக்குமே…

நான் தானே நீ இங்கு இரு என்று சொன்னேன்.. நீ அங்கேயே இருந்து இருந்தா கூட இந்த நேரம் உனக்கு என்று ஒரு குடும்பம் அமைந்து இருக்குமே சாண்டில்யா.. ..” என்று அழுதவருக்கு மூச்சு வாங்க.

அப்போது தான் சாண்டில்யன் தன் தவறை உணர்ந்தான்… வசும்மா.. வசும்மா ப்ளீஸ் இதையே நினச்சிட்டு நீங்க இன்னுமே உடம்பை கெடுத்துகாதிங்க….” என்று அவரை சாண்டில்யன் சமாதானம் படுத்த வசுமதி.. அமைதியாகி தான் போனார்..

அதை நம்பி தான் அன்று அவன் தான் தங்கி இருந்த பகுதிக்கு சென்றது… ஆனால் விடியகாலையில் வசும்மா வீட்டில் கேட்ட அலறல் சத்தத்தில் சாண்டில்யன் ஓடி போய் பார்த்ததில் வேலையாட்கள் இரண்டு பேர்.. அவனின் தம்பி தம்பி மனைவி கையில் குழந்தையோக வசும்மா அறையில் இருப்பதை பார்த்து அவனுமே அங்கு சென்று பார்த்த போது.. அவர் தன் கடைசி மூச்சை நிறுத்தி ரொம்ப நேரம் ஆகி விட்டது என்பது அவரின் ஜில்லட்ட உடலை தொட்டு பார்த்த போது தெரிந்தது…

தன் வசும்மா கையை பிடித்த சாண்டில்யன் அப்படியே அவர் பக்கத்தில் அமர்ந்து விட்டான். அழவில்லை.. ஆனால் ஏன் வசும்மா ஏன். ஏன் இப்படி..?” என்று தன் மனதிற்க்குள் அத்தனை அழுகை.. அத்தனை கேள்விகள்.. ஆனால் வெளியில் அத்தனை அமைதியாக தன் வசும்மா முகத்தையே பார்த்திருந்தான்…

அவனின் தம்பி வாசு தேவ் தான் வசுமதியை பார்த்து கொண்டு இருந்த அந்த தாதியிடம் கேள்விகளாக கேட்டு கொண்டு இருந்தான்.

அதற்க்கு அந்த தாதி… “ நையிட் பன்னிரெண்டு மணி வரை அம்மா நல்ல மாதிரியா தான் இருந்தாங்க சார்… பின் அவங்க தூங்கிய பின் தான் நான் தூங்கினேன்..” என்று சொல்லி கொண்டு இருந்தவரிடம் வாசு தேவ்..

“ஏன் அவ்வளவு நேரம் அம்மா முழிச்சிட்டு இருந்தாங்க. மாத்திரை போட்டதும்மா அம்மாவுக்கு தூக்கம் வந்துடும்மே.” என்று வாசு தேவ் கேட்ட போது அந்த தாதி பெண்..

“பெரிய சார் நையிட் வந்தாங்க.. அவர் கிட்ட பேசிய பின் தான் தூங்கவே செய்தாங்க.” என்று அந்த தாதி பெண் தன்னை சொன்னதுமே.. வாசு தேவ் அடுத்து அந்த தாதி பெண்ணிடம் ஒன்னும் கேட்கவில்லை.. தன்னை ஒரு பார்வை பார்த்தான்.

பின் அடுத்து நடக்கும் விசயங்களை பார்க்க சென்று விட்டான்…

வயதான பெண்மணி. நிறைய நாட்கள் படுக்கையிலேயே இருந்ததால் அன்றே அவரின் பூத உடலை எடுக்க முடிவு செய்தனர்.. முடிவு எல்லாம் அரை மணி நேரத்தில் இரு பெண்களும் வீட்டு மாப்பிள்ளைகளும் வந்து விட்டனர்.. .

அவர்கள் வந்த பின்..வாசு தேவ் அவர்கள் சேர்ந்து . தான் இந்த முடிவை எடுத்தனர்… இவனிடன் எந்த ஒரு அபிப்பிராயத்தையும் கேட்கவில்லை..

இறுதி யாத்திரைக்கு உண்டான பணம் முழுவதுமே வாசு தேவ் உடையது தான்… முன் எல்லாம் அவன் வாங்க மாட்டான்.. இது வரை தன்னிடம் ஒன்றுமே வாங்கியது இல்லை என்று தெரிந்தும் கேட்பவன் இன்று எதுவும் கேட்க வில்லை..

வசும்மாவின் உடலை கூடத்தில் கிடத்தி விட்டு அவருக்கு செய்ய வேண்டிய முறை எல்லாம் செய்த பின்.. இரு மகள்களும் வசும்மாவின் தலை மாட்டில் அமர்ந்து கொண்டனர்.

வாசுவும் வீட்டு இரண்டு மாப்பிள்ளைகளும் சொல்ல வேண்டியவர்களுக்கு எல்லாம் சொல்லி விட்டு இறுதியாத்தைரைக்கு தேவையான வேலைகளை செய்து கொண்டு இருந்தனர்..

இவன் ஒன்றும் செய்யாது அந்த கூடத்தில் இருக்கும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டவன் தன் அன்னையின் முகத்தை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தான்..

முன் எல்லாம் இது போல தன்னை தனித்து விடும் போது எல்லாம் அவனின் மனது பரிதவித்து போகும்.. ஆனால் இந்த முறை அப்படி எல்லாம் அவன் மனது தவிக்கவில்லை..

தன் ஒரு உறவுமே என்னை விட்டு சென்று விட்டது.. அதில் ஒன்றில் மட்டுமே அவன் மனது நின்று விட்டது…

வாசு தேவ்வுமே சாண்டில்யனின் இந்த மாற்றத்தை கவனித்தான்.. தான் அதனால் அவனை கடக்கும் போது எல்லாம் வாசுதேவ்வின் பார்வை அவன் மீது ஆராய்ச்சியாக படிந்து படிந்து மீண்டது..

அதை கவனித்த தங்கைகளின் கணவன்மார்கள்..

“ என்ன வாசு ஏதாவது பிரச்சனையா..?” என்று கேட்டனர்.

“தெரியல. ஆனா பிரச்சனை வரும் என்று தான் நான் நினைக்கிறேன்…” என்று மட்டும் சொன்னான்…

அதற்க்கு அவனின் இரண்டு மச்சானும்… “ எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற…?” என்று கேட்டதற்க்கு வாசு தேவ்.

“நையிட் நம்ம அம்மா கிட்ட பேசி இருக்கான். அதுவும் நர்ஸை வெளியில் அனுப்பி விட்டு… காலையில் அம்மா இல்ல…” என்று சொன்னவன்.

பின்.. “ இது பற்றி எல்லாம் பேச இது நேரம் இல்ல. பொறுமையா பார்த்துக்கலாம்…” என்று விட.

ஆனால் பொறுமையாக பார்த்து கொள்ளலாம் என்று சொன்ன வாசுதேவ்வின் பொறுமையை முதலில் வசுமதியின் பூத உடலை பார்க்க வந்த உறவுகளும்.. நட்பு வட்டத்தினர்களும்.. தன்னிடம் துக்கம் விசாரிக்காது நேராக சாண்டில்யனிடம் சென்று அவன் கை பற்றி பேசி விட்டு செல்வதை பார்த்தே வாசு தேவ்வனின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது என்றால்,



அடுத்து வசுமதிக்கு கொல்லி வைக்க வாசு தேவ் தயாராகும் சமயம்.. இவர்களின் மூத்த தலை பங்காளி ஒருவர்…

“அம்மாவுக்கு தலை பிள்ளை தான் கொல்லி வைக்கனும் ப்பா… அதனால சாண்டில்யனுக்கு செய்யும் முறையை செய்ய ஆரம்பிங்க..” என்று இதற்க்கு என்று இருக்கும் ஆளிடம் செய்ய சொல்ல.

உடனே அந்த வீட்டின் பெண்ணான சுமதை எடுத்த சம்மந்தியான சாந்தி..

“அது எப்படிங்க.. அந்த பையனை தான் தத்து கொடுத்துட்டாங்கலே… அப்போ வாசு தேவ் தானே இந்த வீட்டுக்கு ஒரே மகனா ஆகுறான்… மூத்த பையனும் வாசு தான் இளைய பையனும் வாசு தான்….” என்ற இந்த பேச்சுக்கு இது வரை அன்னையின் முகத்தை மட்டுமே கை கட்டி பார்த்து கொண்டு இருந்த சாண்டில்யனின் பார்வை அந்த பெண்மணியின் பக்கம் சென்றது…

நேற்று இரவு அம்மா சொன்ன. சுமதியின் மாமாமியார் தான் ஜாதகம் பொருத்தம் பார்த்தது . அதன் பின் சொன்னது எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அவனின் நினைவுக்கு வந்தது…

இப்போது வசும்மாவிந் உடலை விட்டு கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு இருந்த சாண்டில்யன் தன் அன்னையின் உடலுக்கு அருகில் வந்து நின்று கொண்டான்…
 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
174
சுமதியோட மாமியார் தான் ஏதோ திருட்டு வேலை செஞ்சிருக்கு 🥶🥶🥶🥶🥶🥶🤭🤭🥶🥶🥶 வாசுவும் கூட்டா இருக்குமோ 🤔 🤔 🤔

சாண்டில்யன் பிரச்சினை செய்வான் என்று உறுதியா சொல்றானே வாசு 😖😖😖😖

சாண்டில்யன் அம்மாவுக்கு கொள்ளி போடுற உரிமைய விட்டு கொடுக்க கூடாது 🤭 🤭 🤭
 
Last edited:
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
187
பிடிக்கலைன்னா ஒதுங்கி இருந்து இருக்க வேண்டியது தானே அதை விட்டுட்டு கூட்டா சேர்ந்து என்ன வேலை பார்த்து இருக்குங்க 😡😡😡😡😡
சாண்டில்யன் இவங்களை சும்மா விடக் கூடாது 😤😤😤
 
Top