Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட...8

  • Thread Author
அத்தியாயம்….8

சாண்டில்யன் மன அமைதி தேடி தான் தன் அன்னை தந்தையின் இல்லத்திற்க்கு சென்றது..

ஆனால் அங்கு நடந்த ஒவ்வொரு விசயத்திலும், அதுவும் தான் தனித்து இங்கு நிற்பது தன்னை வளர்த்தவர்களுக்கு தான் மிக பெரிய துரோகத்தை செய்து விட்டதாக தான் நினைத்தான்..

அந்த சமயம் பார்த்து குணசேகரன் அழைக்க…. குணசேகரனோடு சம்மந்தப்பட்ட தன் தந்தையோடான சில நினைவுகளும் வந்து போயின.

அதோடு அது என்னவோ… குணசேகரனுக்கு தான் செய்யும் இந்த செயல் தன் அன்னை தந்தைக்கே செய்வதாக தான் அவன் நினைத்தான்..

காரணம் அவனின் தந்தை தன் ஜூனியர் பற்றி பெரும் பாலும் வீட்டில் பேச மாட்டார்.. ஆனால் இந்த குணசேகரனை பற்றி அடிக்கடி வீட்டில் பேசுவார்..

இவன் ஒரு முறை இதை பற்றி கேட்டே விட்டான்.. அப்போது சோமசுந்தரம்.. “ படிச்ச குடும்பத்தில் இருக்கும் ஒருவன் படிக்கிறது பெரிய விசயம் கிடையாது சாண்டில்யா.. இப்போ நீ இது படி இது படிச்சா இப்படி ஆகலாம். என்று உன்னை நானுமே உன் அம்மாவுமே கைட் பண்ணுவோம்.. ஆனா குணா அப்படி இல்லேப்பா… அவன் அப்பா அம்மாவுக்கு கையெழுத்து கூட இட தெரியாது.. அப்படி பட்டவர் மகன் இன்னைக்கு படிச்சி திறமையா இருக்கும் போது.. அதுவும் என் கிட்ட இன்னும் இன்னும் விசயத்தை கத்துக்குறதுல இருக்கும் அவன் ஆர்வத்தை பார்க்கும் போது… அது என்னவோ.. நீயே ஜெயிப்பது போல எனக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்குதுப்பா…” என்று சொன்னது அவனின் நியாபகத்தில் வந்தது..

கூடவே தன் அன்னையும் தந்தையும் கடைசியாக ஒன்றாக சேர்ந்து சென்று ஒரு விழா என்றால் அது குணசேகரனின் நிச்சயத்திற்க்கு தான்.. அங்கு சென்று வந்து அன்னை பேசிய பேச்சு. இன்றுமே அவனின் நியாபகத்தில் இருக்கிறது.

எப்போதுமே குழந்தைகளை பற்றி மட்டும் பேசிக் கொண்டு இருப்பவர் அன்று ஒரு பெண்ணை பற்றி… அதுவும்..

“அந்த பெண் அழகா இருக்காடா.. பட்டு பாவடை தாவணி கட்டிட்டு… பார்க்க அவ்வளவு அழகா இருந்தாடா…” என்று சொன்ன போது சாண்டில்யன்..

“அப்போ கடைசியா நீங்க உங்க மகனுக்கு பொண்ணை பார்த்துட்டிங்க பேஷ் பேஷ்…” என்று சொன்ன போது ராஜ ராஜேஷ்வரி…

“நான் போய் பெண் கேட்டு அவள் அப்பா அம்மா சம்மதிச்சா கூட அந்த பெண்… சம்மதிக்க மாட்டா சாண்டில்யா…” என்று சொன்ன அன்னையிடம் சாண்டில்யன் அன்று.

“என்னம்மா நீங்கலே உங்க மகனை பத்தி இப்படி சொல்றிங்க…?” என்று கேட்டான்..

அதற்க்கு ராஜ ராஜேஸ்வரி… “ நான் சொன்ன பெண் குணாவின் மச்சினிச்சி தான் சாண்டில்யா … அவள் அக்காவையே ஒரு வக்கீலுக்கு கட்டி கொடுக்கனுமா. வாயை திறந்தாலே பொய் தானே வரும்.. கோர்ட்டில் பொய் பேசும் பழக்கத்தில் வீட்டிலுமே அது போல தான் பேசுவாங்க…. கிரிமினலா பார்த்து பார்த்து நம்ம எது செய்தாலுமே அதை சந்தேகமா தான் நம்மளை பார்ப்பாங்க என்று சொல்லுச்சாம். நம்ம குண தான் பெண் கிட்ட பேசி பழகினதை விட பெண் தங்கை கிட்ட தினம் போன் செய்து… நான் நல்லவன் வல்லவன் என்று சொல்லி சொல்லி அந்த பெண்னை மலை இறக்கினான் என்று குணா தான் சாண்டில்யா அந்த பெண்ணை பத்தி சொன்னது… அக்காவுக்கே சொன்ன அவள் எப்படி ஒரு வக்கீலை கல்யாணம் செய்துக்க சம்மதிப்பா…”

அன்னை மகனின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த சோமசுந்தரம் தான் கடைசியாக..

“அந்த பெண் இப்போ தான் காலேஜ் படிச்சிட்டு இருக்கு ராஜேஸ்வரி…” என்ற போது கூட அவன் அன்னை விடவில்லை..

அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளாது என்று தன்னிடம் கிண்டல் செய்த அன்னை அன்று.

“அந்த பெண் சின்ன பெண் என்றால், என் மகன் மட்டும் என்ன நூத்து கிழவனா…?. என் மகனுக்கு அந்த பெண் தான் என்றால், அதை யாராலும் மாத்த முடியாது..” என்று சொன்ன அன்னையின் வார்த்தை காதில் இன்றும் அவனுக்கு நியாபகத்தில் இருக்கிறது..

அதை நினைத்து சிரித்து கொண்டான்… பின் அங்கு இருக்க முடியவில்லை.. கூடவே சென்னையில் அவன் சென்று தான் வாதட்டும் சில கேஸ்கள் நிலுவையில் இருக்கிறது.. இதற்க்கு மேல் தங்கள் பக்கம் வாய்தா வாங்கினால் அது தங்கள் பக்கம் பலவீனமாக பொய் விடும்.. கூடவே குணசேகரன்…

தான் டெல்லிக்கு சென்று விட்டேன் என்று நேற்றும் சொல்லி இருக்க. இதோ சாண்டில்யன் சென்னைக்கு தன் வசும்மா இருந்த வீட்டிற்க்கு சென்று விட்டான்.

இவன் வருகையை அந்த வீட்டில் இருப்பவர்கள் பெரும் ஆவளோடு எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தனர் போல.

இவன் போகும் போதே இரவு எட்டு மணி கடந்து விட்டது… அந்த சமயத்தில் அனைவருமே அந்த வீட்டின் கூடத்தில் தான் இருந்தனர்…

அனைவரும் என்றால் பெண் கொடுத்த சம்மந்தி முதல் பெண் எடுத்த சம்மந்தி வரை இருந்தனர்.. சம்மந்திங்களே இருக்கும் போது அந்த வீட்டின் பெண்ணும் மாப்பிள்ளையும் இருக்க தானே செய்வர்…

வசும்மா இறந்து பதினைந்து நாள் சாங்கியம் அனைத்தும் முடித்து தானுமே செங்கல்பட்டு சென்று வந்தாயிற்று.. இன்னுமே இவர்கள் எல்லாம் அவர் அவர் வீட்டிற்க்கு போகவில்லையா…? என்று நினைத்து கொண்டே தான் சாண்டில்யன் தன் அறைக்கு வந்தான்..

தான் வரும் போதே ஒருவருக்குள் ஒருவர் சைகை செய்து கொண்டதை கவனித்து கொண்டே தான் வந்தது.. இதுவுமே நினைத்தான் தான் சுமதி மாளவிகா வீட்டவர்கள் எப்போதுமே இங்கு தான் அதிகம் இருப்பது என்பதையும்.. இதை எல்லாம் முன் பார்த்தாலுமே, பெரியதாக அதை யோசித்தது இல்லை..

ஆனால் இப்போது ஒவ்வொரு புள்ளியாக இணைத்து பார்க்கும் போது ஏதோ ஒரு கணக்கு இருக்கிறது என்பது அவனுக்கு புரிந்தது…

சுமதியை தன்னுடன் படித்தவனுக்கே கட்டி கொடுத்தது.. மாளவிகாவை தன் தாய் மாமன் மகனுக்கு கொடுத்தது.. அந்த வீட்டு பெண்ணை வாசு திருமணம் செய்து கொண்டது.. என்று அனைத்துமே எதோ ஒரு புள்ளியில் இணைகிறது..

பேசட்டும்.., அவர்களாகவே பேச்சை ஆரம்பிக்கட்டும் என்று எந்த வித பதட்டகும் இல்லாது நிதானமாகவே தன் பயணம் கலைப்பு நீங்க நிதானமாகவே குளித்து முடித்து விட்டு சாப்பிடும் இடத்திற்க்கு வந்தான்.

ஒன்பது மணிக்கு தன் முன் இருந்த பரோட்டோவை பார்த்த சாண்டில்யன்.. வேலை செய்யும் பெண்மணியை அழைத்து…

“எனக்கு நையிட் எப்போவும் லைட்டா தான் சாப்பிடுவேன்.. எனக்கு அது போல இருப்பது போல பார்த்துக்கோங்க…” என்று சொன்ன சாண்டில்யன் அங்கு இருந்த பழங்களை மட்டும் எடுத்து கொண்டு தன் இரவு உணவை முடித்து கொண்டான்..

இந்த அவனின் செயல்களுமமே அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு புதியதாக தான் தோன்றியது சுமதியின் மாமியார் சாந்தி வாசுவிடம்..

“எப்போவும் நம்ம வீட்டில் பசங்க ஆசை படுறாங்க என்று பரோட்டா செய்வது தானே வாசு.. இவன் என்ன புதுசா ஆர்டர் எல்லாம் போடுறான். முன் இது போல இல்லையே வாசு..” என்று சாந்தி என்னவோ வாசுவிடம் மெல்ல சொல்வது போல தான் இருந்தது.

ஆனால் பாருங்கள் சாந்தி சத்தமாக பேசி பேசியே பழகி விட்டவர். அதனால் அவரின் அந்த மெல்ல பேச்சு கூட சாண்டில்யன் காதில் மிக தெளிவாகவே விழுந்தது…அடுத்து பேச்சு இல்லாது ஒரு அமைதி .. சாண்டில்யன் புரிந்து கொண்டான். வாசு பேச்சால் இல்லாது சைகையினால் சுமதி மாமியாரை அமைதியாக இரு என்று சொல்லி இருப்பான் என்று…

சாண்டில்யனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. மாளவிகா மாமியாரோடு வாசு இந்த அளவுக்கு பழக்கம் இருந்தால் கூட பரவாயில்லை ஏன் என்றால் மாளவிகா மாமியார் தான் இவனின் மாமியாரும்…

கூட தாய் மாமன் மனைவி என்று ஒரு உறவும்…இருக்க அந்த நெருக்கம் என்று சொல்லலாம்..

ஆனால் சுமதி மாமியார்… தன் நண்பனின் மனைவி… எப்படி..? என்று மனதில் யோசித்தாலுமே வெளியில் எதையும் காட்டி கொள்ளாது அமைதியாக பழ வகைகளை சாப்பிட்டு முடித்து விட்டு.

சமையல் செய்பவரிடம்… “ ஒரு க்ளாஸ் பால் ப்ளாஸ்க்கில் ஊத்தி கொடுங்க என்று கேட்டவன் அதை கைய்யோடு வாங்கி கொண்டு தூங்க தன் அறைக்கு வர பார்க்கும் போது தான் வாசு தேவ் வாயை திறந்தான்..

“சாண்டில்யா நான் உன் கிட்ட பேசனும் என்று..” சொல்ல..

சாண்டில்யன் அங்கு மாட்டப்பட்டு இருந்த நேரம் காட்டியை பார்த்தவன்..

“நாளைக்கு பேசலாமா…?” என்று நிதானமாக கேட்டான்…

ஒருவன் வாயில் இருந்து உண்மையை வர வழைக்க வேண்டும் என்றால், நாம் அளவுக்கு மீறிய ஒரு நிதானத்தை கடை பிடிக்க வேண்டும்.. அதே சமயம் எதிரில் இருப்பவர்களின் நிதானத்தை இழக்கும் படியாகவும் நன் பேச்சும் செயலும் இருக்க வேண்டும்…

ஒருவர் நிதானம் இழக்கும் பொது தான் தன்னை மீறி பேசுவான். அவனின் தந்தை சோமசுந்தரன். அவன் வக்கீலாஅ முதல் கேஸை எடுத்த போது அவனுக்கு சொன்ன அறிவுரை இவை.. ஆனால் இதை வீட்டிலேயே செயல்படுத்துவோம் என்று அவன் அன்று நினைத்து இருக்கவில்லை….

சாண்டில்யன் கணித்தது போல் தான் வாசுதேவனின் நிதானம் பறந்து போயின..

“நானுமே வேலை இல்லாது வெட்டியா இல்ல சாண்டில்யா… அதுவும் இது ஆடிட்டிங் டைம்.. நானுமே டையாடா தான் இருக்கேன்…” என்று சொல்லி கொண்டு வந்தவனின் பேச்சை இடை நிறுத்தி சாண்டில்யன் முன்பை விட மிக நிதானமாகவே.

“அப்போ போய் தூங்க.. எனக்குமே நாளைக்கு ஒரு முக்கியமான கேஸ் இருக்கு..” என்று சொன்னான்…

வாசுதேவன் ஒரு மாதிரி சிரித்து கொண்டான்.. பின்… “ ஹலோ… நான் ஆடிட்டர்.. அதாவது ரொம்ப கஷ்டமான படிப்பை படிச்சி முடிச்சி.. அதுவும் எல்லாத்தையுமே பஸ்ட் அட்டெம்ட்ல முடிச்சவன்… படிப்புல கடைசியா இருக்கிறவங்க எடுக்கும் படிப்பை படிச்சிவன் எல்லாம் இது போல சீன் போட கூடாது..” என்று சொல்ல அவனின் அந்த பேச்சுக்கு மற்றவர்கள் சிரித்து கொண்டனர்..

அதுவும் சுமதியின் கணவன். அவனுமே ஆடிட்டர் தானே வாசுதேவ் இது போல பேசும் போது கை வேறு அடித்து கொண்டனர்.. இவனை வெறுப்பு ஏற்றுக்கிறார்கலாமா.

வாசுதேவ்வனின் இந்த பேச்சுக்கு சாண்டில்யன் கோபம் எல்லாம் படவில்லை. அதே நிதானத்தோடு.

“ அப்போ எதுக்கு வாசு என் கிட்ட பேசிட்டு இருக்க… உன் பொன்னான நேரத்தை உன்னை போல காஸ்லியான படிப்பை படிச்சவங்க கிட்டேயே செலவு செய்துக்கோயேன்..” என்று சொல்லி கொண்டே தன் அறைக்கு போக பார்த்தவனிடம்..

வாசு தேவ் கோபமாக… “ இந்த வீட்டை எங்க மூன்று பேர் பேருக்கு மாத்தி எழுதி கொடுத்துடு.. அதுக்கு அப்புறம் யாரும் உன் கிட்ட பேச்சு வைச்சிக்க போறோம்…” என்று பட படத்தவனின் பேச்சில் சாண்டில்யனுக்கு ஒன்று புரிந்தது..

ஒரு விசயம் வெளியில் வந்து விட்டது.. அவன் கணக்கு படி வேறு ஒன்றும் இருக்கிறது என்று அவனின் உள்ளுணர்வு சொன்னது…




 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
177
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍.
அடப்பாவிகளா சொத்துக்காக கீழ்தரமான வேலையெல்லாம் செஞ்சிருக்கான் போலயே இந்த வாசுவோட கூட்டணி 😤😤😤😤😤
 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
174
ஸ்ருதி உன் வாயால் தான் நீ கெட்டுருக்க 🤭🤭🤭 வக்கீல் மாப்பிள்ளை வேண்டாம் என்று நீ சொன்னதால் ராஜிம்மா உன்னை சாண்டில்யனுக்கு பேசாமல் விட்டுட்டாங்க 🙁🙁🙁🙁🙁🙁

வாசு நீ சேர்த்து வச்சிருக்க ஜால்ரா கூட்டத்தை எல்லாம் பார்த்து எங்க ஹீரோ அசர மாட்டாரு 🤓🤓🤓🤓🤓🤓🤓

ஹீரோயினை ரொம்ப நாளா காணோம் 🧐 🧐 🧐 🧐
 
Last edited:
Well-known member
Joined
Mar 22, 2025
Messages
79
குடும்பஸ்தன் ஆகிட்டா சொத்துல பங்கு கொடுக்கனுமே என்று கூட பிறந்தவனை தனிமரமா நிறுத்திருக்காங்க.
கல்யாணம் செய்யலைனா சொத்துல பங்கு இல்லையா மா
 
Well-known member
Joined
May 11, 2024
Messages
171
அருமை 👌👌👌👌, ஒருவன் பேசில் உண்மை வர வேண்டும் என்றால் நித்தனமாக இருக்கவேண்டும் ஆனால் அவன் நிதானம்மில்லாமல் இருக்கவேண்டும் என்று சாண்டிலியன் நினைத்து மாதிரி வாசு சொத்து பிரச்சனை வந்து விட்டது அது சாண்டிலியன் பெயரில் உள்ளதோ அதற்கு தான் இத்தனையும் 🤔🤔🤔🌺🌺🌺
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,252
விஜி மேம் இது 7.2 தானே நீங்க ஏன் 8அப்படினு போட்டீங்க கதையில் நிறைய முடுச்சு இருக்கே
7 1 அத்தியாயம் கொடுத்தேன் பார்க்கிறேன் மா
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,252
விஜி மேம் இது 7.2 தானே நீங்க ஏன் 8அப்படினு போட்டீங்க கதையில் நிறைய முடுச்சு இருக்கே
7 மட்டும் தானே கொடுத்து இருக்கேன் மா
 
Well-known member
Joined
Mar 22, 2025
Messages
79
7 மட்டும் தானே கொடுத்து இருக்கேன் மா
அது தான் மேம் நானும் சொல்லுறேன் நீங்க தான் 24 எபிக்கு மேல் தாண்ட மாட்டீங்களே அப்போ 7,7.1,7.2 இது மாதிரி கொடுத்தால் தானே நல்லா இருக்கும் நீங்க அடுத்து 8கொடுக்கவும் கேட்டேன் மேம்
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,252
அது தான் மேம் நானும் சொல்லுறேன் நீங்க தான் 24 எபிக்கு மேல் தாண்ட மாட்டீங்களே அப்போ 7,7.1,7.2 இது மாதிரி கொடுத்தால் தானே நல்லா இருக்கும் நீங்க அடுத்து 8கொடுக்கவும் கேட்டேன் மேம்
இனி அப்படி தான் கொடுப்பேன் பா...
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
187
சொத்து பிரச்சனை தான்..... அப்பா அம்மா எதுவும் எழுதி வச்சிருப்பாங்க போல...🤔. கல்யாணம் பிள்ளைங்கன்னு எதுவும் இல்லன்னு அவனை ஒதுக்கீட்டு சொத்தை மொத்தமா எடுத்துக்க திட்டம் போட்டுருக்கானுங்க 😡
 
Top