Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட....10.1

  • Thread Author
அத்தியாயம்…10…1

ஸ்ரீ காந்த் தன் மனைவி கடைசியாக தன்னிடம் வேண்டியது விவாகரத்து தான் என்று கேட்டதை அவனால், இன்று வரை கூட நம்ப முடியவில்லை.. காரணம் தன் மனைவி ஸ்ருதிகா ஸ்ரீயை பற்றி அவன் வடித்து வைத்து இருந்த பிம்பமே வேறு… பெண் பார்க்க சென்ற போது ஸ்ருதியின் தோற்றம் அவனுக்கு பிடிக்க தான் செய்தது.. பிடித்து தான் திருமணம் செய்து கொண்டதும்..

ஆனால் மனைவி வேலைக்கு செல்வதில் அவனுக்கு விருப்பம் கிடையாது… காரணம் வீட்டில் இருக்கும் பெண் தான் அப்போதைக்கு அவனின் தேவையாக இருந்தது… அப்போது தான் அண்ணன் மகள் அப்படி பிறந்து இருக்க.. வயதானவர்களால் ஒன்றும் முடியாது வீடே ஆட்டம் கண்டு கொண்டு இருந்த சமயம் அது.. என்ன தான் இரண்டு மூன்று வேலையாட்கள் வைத்தாலும், அவர்கள் பின் ஒருவர் இருந்தால் தான் வேலையே நடக்கிறது. அதுவும் சுத்தம் சுத்தமாக இல்லாது தான் செய்து விட்டு செல்வர்…

அப்படி இருக்க தனக்கு வரும் மனைவியும் வேலைக்கு சென்றால், அதுவும் ஐடியில்.. தன் விருப்பதை கூறினான் ஸ்ரீ காந்த்…

தன் விருப்பதை சொல்லி விட்டு வந்தவனுக்கு நம்பிக்கை இல்லை.. பெண் வேலையை விட்டு திருமணத்திற்க்கு சம்மதிக்க கூடும் என்று.. இரண்டு நாட்கள் கழித்து சம்மதம் என்று சொல்ல ஸ்ரீ காந்த் ஸ்ருதிகா ஸ்ரீயை விரைந்து திருமணத்தை முடித்து கொண்டான்…

காரணம் இந்த காலத்தில் வேலைக்கு செல்லாத பெண் கிடைப்பது கஷ்டம் என்பதினால், ஸ்ரீ காந்த் வேலையாட்களை வேலை வாங்கவாவது வீட்டில் மனைவி இருக்க வேண்டும் என்று தான் நினைத்தது..

ஆனால் பெண்ணே… அனைத்தும் பார்த்து கொண்டதில், அவனுக்கு மகிழ்ச்சியே… முன் போல வீடு அலங்கோலமாக இல்லாது வீடு வீடாக இருந்ததில், மனது நிம்மதி ஆனது தான்.

ஆனால் திருமணம் முடிந்து மூன்று மாதம் வரை கண்ணுக்கு நிறைவாக தெரிந்த மனைவி பின் மசக்கை என்று ஆனதில் வீட்டு வேலைகள் செய்து கொண்டு சோர்ந்து சோர்ந்து படுத்து கொண்ட போது..

சரி இது போல இருக்கவும் தன்னை பார்த்துக் கொள்ளவில்லை என்று நினைத்து கொண்டாலுமே, வேலை செய்யும் இடத்திலும் வழியில் பார்க்கும் பெண்கள் அனைவரும் நீட்டாக இருக்க.. வீட்டிற்க்கு வந்தால் மனைவியின் இந்த தோற்றம் என்ன இது என்பது போல் தான் இருந்தது..

பின் அதுவே குழந்தை பிறந்தும் இருக்க… ஸ்ரீ காந்துக்கு இது மனைவியின் மீது இருந்த பிடிப்பு கொஞ்சம் கொஞ்சல் குறையலாயிற்று…

மனைவியின் மீது இருக்கும் அந்த பிடிப்பை கொஞ்ச கொஞ்சம் குறைக்க உதவியது… ஸ்ருதிகா ஸ்ரீயின் தோழி பாவனா என்றால் அது பொய் இல்லை…

ஸ்ரீ காந்த் முதல் முதலில் பாவனாவை பார்த்தது தன் மனைவியின் சீமந்தத்தில் தான். அதுவும் இத்தனை நாளாக நலுங்கிய நையிட்டியில் பார்த்து கொண்டு இருந்த தன் மனைவி… தான் பெண் பார்த்த அன்றைய நாளை விட இன்னுமே அழகோடு மெருகோடு இருந்தவளை பார்த்து கொண்டே தான் இருந்தான்..

இவனின் அந்த பார்வையை அவனின் மனைவி ஸ்ருதிகா கவனித்தாளோ இல்லையோ… பாவனா கவனிக்கவே செய்தாள்.. அவளின் அந்த கவனம் ஸ்ரீ காந்தை இன்னுமே அவளை கவனிக்க செய்தது…

பாவனாவின் அம்மா அவள் கை குழந்தையாக இருக்கும் போதே இறந்து விட்டார்.. அவளின் ஐந்து வயது வரை அப்பா பாட்டி தாத்தா பெரியப்பா பெரியம்மா என்று கூட்டு குடும்பமாக இருக்கும் வரை அவள் சந்தோஷமாக தான் இருந்தாள்..

பின் சித்தி அதன் தொடர்ச்சியாக அனைத்தும் அவள் வாழ்க்கை மாறி போனதில், அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.. எனக்கு மட்டும் ஏன்.. இது எப்போதும் பாவனா நினைத்து கொள்வது..

இன்று அவளின் அந்த நினைப்பு அதிகப்படுத்தியது ஸ்ரீ காந்த் ஸ்ருதியை பார்த்த அந்த பார்வை… அவளை விட நான் அழகு.. ஆனால் என் கணவன் என்னை இது போல பார்க்கவில்லையே… இது போல யோசித்து கொண்டே ஸ்ரீ காந்த்தை பார்த்து கொண்டே இருக்க..

அந்த சமயம் தான் ஸ்ரீ காந்த் பாவனாவை பார்த்தது.. பின் மனைவி தன் தோழி என்று அறிமுகம படுத்த… பாவனாவின் அந்த நேர்த்தியான உடையும் அவளின் தோற்றத்தையும் பார்த்து தன் மனைவி இது போலவே எப்போதும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து கொண்டான்.

ஸ்ரீ காந்த் தன் மீது செலுத்திய அந்த நொடி பார்வை பாவனாவுக்கு எதையோ பெரியதாக வென்ற நினைப்பு… பின் அந்த பார்வை தொடர. பின் வேறு மாதிரி கதையாக மாறி போக..

இதோ இன்று தன் அறையில் மனைவி குழந்தைகள் இல்லாது தனித்து இருப்பது… ஒரு வித வெறுமையை தோற்று வித்தது.. பின் நாட்கள் செல்ல செல்ல. வீடு வீடாகவே இல்லை…

ஸ்ருதி தன்னை மட்டும் தான் அலங்கரித்து கொள்ள மாட்டாள்.. ஆனால் வீட்டை அப்படி சுத்தமாக வைத்து கொள்வாள்… ஆனால் இப்போது போட்ட பொருள் போட்ட இடத்தில் இருக்க.. உணவு சரியாக இல்லாது.. வீட்டில் வேறு பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது…

ஸ்ரீகாந்த் கூட கோபத்தில் அது போல விவாகரத்து என்று சொல்லி விட்டாள்.. அது போல எல்லாம் நடக்காது…. அன்று மனைவியின் வீட்டவர்கள் கூட மன்னித்து வாழ் என்று தானே சொன்னார்கள்…

அண்ணன் மனைவிகள் எல்லாம் பார்த்து கொள்ள மாட்டார்கள். வேலைக்கும் போகாது. எப்படி இரண்டு குழந்தைகளை வைத்து காலம் தள்ள முடியும்.

இப்போதைய இந்த தைரியம் கூட அவளின் மாமா அந்த வக்கீலினால் தான். அவன் டெல்லிக்கு போய் விட்டால், மனைவி தன் வீடு வந்து விடுவாள் என்று நினைத்து கொண்டு இருந்தவனுக்கு செய்தியாக…

ஸ்ருதிகா ஸ்ரீ அம்மா வீட்டில் இல்லை தனியே வீடு எடுத்து இருக்கிறாள் என்ற செய்தியில் அவனின் அந்த நம்பிக்கை ஆட்டம் காண..

வீட்டில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனையாக போய்.. அவனின் அம்மா… “ உன் பொண்டாட்டி காலில் விழுந்து நீ கூட்டிட்டு வர. உன்னால தானே அவள் போனா…. வயதான காலத்தில் இன்னுமே நான் சின்ன பெண் போல சிடுக்கு சிடுக்கு என்று வேலை செய்ய முடியுமா.?” என்று கத்த.

ஸ்ரீ காந்த் தலை மீது கை வைத்து அமர்ந்து கொண்டான்.. தன் இந்த நிலைக்கு காரணம் பாவனா என்று கோபத்துடன் தான் அன்று அவன் அவள் வீட்டிற்க்கு சென்றது..

முன் எல்லாம் மோகத்துடன் சென்றவன்.. இன்று மனைவி தன்னை பிரிந்து சென்றதில் கோபத்துடன் சென்றான்…

சென்ற உடனே… “ நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்து இருக்கலாமே பாவனா…?” என்று கேட்டான்.

அவன் கேட்டது.. அன்று ஸ்ருதிகாவிடன் கை பேசியில் பேசியதும் அதை அணைத்து இருந்து இருக்கலாமே.. அதனால் தானே இப்போது பிரச்சனை என்று நினைத்து தான்..

ஆனால் பாவனாவோ…. “ நானுமே இதை எதிர் பார்க்கவில்லை ஸ்ரீ.. இப்படி ஆகும் என்று…” என்று சொன்னது அவள் கர்பமாக இருப்பதை நினைத்து,..

பின்.. “ உங்களுக்கு எப்படி தெரியும் ஸ்ரீ . நானுமே கவனிக்காது தான் என்ன இது உடம்பு ஒரு மாதிரி பண்ணுதே… என்று ஒரு சந்தேகத்தில் தான் இன்னைக்கு காலையில் கிட் வாங்கி டெஸ்ட் செய்து பார்த்தேன்…” என்று பாவனா சொல்ல சொல்ல முதலில் இவள் என்ன சொல்கிறாள் என்று கேட்டு கொண்டு இருந்த ஸ்ரீ காந்த் பாவனா கிட். என்று சொன்னதுமே தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.

இது என்ன புது பிரச்சனை… “ என்ன பாவனா…. இது….?” என்று கேட்டவனின் அருகில் அமர்ந்து கொண்ட பாவனா…

“ என் கிட்ட இப்படி இருந்தா குழந்தை வரும் என்று உங்களுக்கு தெரியாதா ஸ்ரீ…?” என்று கொஞ்சம் காட்டமாக தான் பாவனா ஸ்ரீ காந்தை பார்த்து கேட்டது..

அதற்க்கு ஸ்ரீ காந்த்… “உனக்கும் தெரியும் தானே.. நீயுமே… இது எல்லாம் தெரியாத அளவுக்கு விவரம் இல்லாத பெண் இல்லை தானே… ஏற்கனவே நீயுமே தாய் ஆகி இருக்க தானே…” என்று கேட்டு விட்டான்…

அவனின் இந்த பேச்சுக்கு பாவனா ஸ்ரீ காந்த்தை அழுத்தமான ஒரு பார்வை பார்க்க… பாவனாவின் அந்த பார்வையில் ஸ்ரீ காந்த்..

“ஓகே ஓகே எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்கு பாவனா… ஆபிசில் கூட வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை…” என்று சொல்லி அவளை சமாதானம் படுத்தினான்..

ஒரு சில ஆண்களுக்கு தெரிவது இல்லை… வீட்டில் அனைத்தும் சரியாக இருந்தால் தான்.. ஆண்கள் தன் கேரியரின் முன்னேற முடியும் என்று… அது தெரியாது தான் ஒரு சில ஆண்கள் வீட்டில் இருக்கும் மனைவிகளிடம்.

“ நீ வீட்டில் சும்மா தானே இருக்க.?” என்று சும்மா வார்த்தைகளை விட்டு விடுகிறார்கள்…

ஸ்ரீ காந்த்துக்கு ஸ்ருதிகா ஸ்ரீ இல்லாது வீட்டில் நிம்மதி இல்லாது போக அது வேலை செய்யும் இடத்திலும் பாதிக்கலாயிற்று.. இனி அவன் இது போல தான் திரிய வேண்டும் என்று தெரியாது பாவனாவை சமாதானம் செய்த பின்.

“இப்போ தானே கரு உண்டாகி இருக்கும். நாம கலச்சிடலாம் பாவனா…. ஏற்கனவே நம் உறவின் ஆதாரமா அவள் கிட்ட ஒரு விசயம் மாட்டிட்டு இருக்கிறது.. அதுவே என்ன செய்யிறது என்று தெரியல… கோபத்தில் போய் இருக்கா.. டைவஸ் கேட்கிறா என்று நினச்சா. இப்போ உண்மையில் டைவஸ் செய்து விடுவா போல பாவனா.. இப்போ ஸ்ருதி அம்மா வீட்டில் இல்லை… தனியா வீடு எடுத்து இருக்கா.. எப்படி என்ன செய்து என் வீட்டிற்க்கு கூட்டிட்டு வர போறேன் என்று தெரியல… இதுல இந்த குழந்தை வேறு… என்றால் அவ்வளவு தான்…” என்று சொல்லி கொண்டு போகும் ஸ்ரீ காந்தையே பாவனா முகம் மாற பார்த்து கொண்டு இருந்தாள்..

அப்போ என்னை இவன் நிறந்தரமா வைப்பாட்டியாவே வெச்சி கொள்ள நினைக்கிறானா.. இதுக்கா நான் அத்தனை ப்ளான் பண்ணி எல்லாம் செய்தது..

ஆம் பாவனா தன் கை பேசியை தெரியாது எல்லாம் அணைத்து வைக்காது இல்லை… அனைத்துமே அவள் திட்டம் போட்டு தான் செய்தது..

ஸ்ருதிகா பேசுவதை ரெக்கார்ட் செய்கிறேன் என்று சொன்னதுமே அணைக்காது வைத்து ஸ்ரீ காந்திடம் கொஞ்சினாள்.. அதுவும் ஸ்ருதிகாவை ஸ்ரீ காந்த் சொன்னதை வேண்டும் என்றே அன்று அதை பற்றி பேசியது..

அதே போல இந்த குழந்தை உண்டாகி இருப்பது கூட தெரியாது எல்லாம் ஜனிக்கவில்லை.. பாவனாவுக்கு தெரியும்.. ஸ்ரீ காந்த் சொன்னது போல பாவனா ஒன்றும் ஒன்றும் தெரியாதவள் இல்லையே… ஏற்கனவே ஒரு குழந்தையை பெற்று எடுத்து இருக்கிறாள் தானே…

கூடவே ஸ்ரீ காந்த் சொன்னது போல இந்த குழந்தை கலைக்கும் காலம் எல்லாம் கடந்து போய் விட்டது.. அவள் குழந்தை உண்டாகிய பின் தான்.. தங்கள் உறவை ஸ்ருதிகா ஸ்ரீ அறியும் படியே செய்தது…

ஆனால் ஸ்ரீ காந்த் கேட்ட போது.. மாசம் நாங்கு கடந்து விட்டது ஸ்ரீ …” என்று சொல்ல ஸ்ரீ காந்த் உண்மையில் இப்போது தான் பேய் அரைந்தது போலான நிலையில் ஆகி விட்டான்..

திரும்பவும் ஸ்ரீ காந்த் பாவனாவை கோபித்து கொள்ள பதிலுக்கு பாவனா ஸ்ரீ காந்தை கோபித்து கொண்டாள்..

“நம்ம விசயம் ஸ்ருதிக்கு தெரிந்ததும்.. எனக்கே பயம் வந்து விட்டது ஸ்ரீ.. அதுவும் உன் அண்ணன் வந்து இங்கு கத்தி விட்டு போனதில் அக்கம் பக்கத்தவர்கள் எல்லாம் என்னை ஒரு மாதிரியா வேறு பார்க்கிறாங்க. எனக்கு இந்த யோசனையிலேயே… என் டேட் எல்லாம் நியாபகத்தில் வைக்கவில்லை.. நான் என்ன செய்வேன். உண்மைக்கு உன் அண்ணன் வந்து இங்கு கத்திட்டு போனதில் நான் உன் மீது கோபித்து கொள்ள வேண்டும் ஸ்ரீ. நீ உன் அண்ணனை கோபத்திக் கொள்ள வேண்டும்.” என்று கூற.. யார் யார கோபித்து என்ன லாபம்… மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு என்பது போல ஸ்ரீ காந்த் நன்றாகவே மாட்டி கொண்டு விட்டான்..

ஸ்ருதிகா ஸ்ரீ சாண்டில்யனை பார்க்க நீதிமன்றம் சென்ற அன்று தான் ஸ்ரீ காந்த் பாவனைவை அழைத்து கொண்டு பெண் மருத்துவரை பார்க்க சென்றது..

(வெளியில் போயிட்டு வந்து இது வரை தான் அடிக்க முடிந்தது பா.)
 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
174
சாதனா தானே பாவனான்னு வருது 🤭🤭

அடேய் துரோகி நீ ஸ்ருதிக்கு செஞ்சதை இவ உனக்கு செய்யுறா இனி அனுபவிப்ப 🥶🥶🥶🥶🥶🥶

அடுத்தவ புருஷனை மயக்கி சந்தோஷமா வாழலாம் என்று நினைக்குற 😨😨😨இனி உனக்கும் நிம்மதி இல்லாத வாழ்க்கை தான் 😂😂😂😂😂😂😂

இரண்டு பேரும் அடிதடி ரணகளம் தான் 🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,252
Starting la sadhana irundhuchu ipo name bhavana agittu...

Epdiyoa podhu rendum.. unaku yetha alutta than sikki Iruka Srikanth😡😡

Shruthi ku life nalla maaruna sarii than😍
சாதனா என்ற பெயர் இன்னொருத்தர் கதையில் போகுது அது தான் பெயர் மாற்றி விட்டேன் பா..
 
Active member
Joined
May 7, 2025
Messages
38
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
அம்மாடி பாவனா.... அவன் கட்டின மனைவிக்கு துரோகம் செய்தான் 😠😠😡😡
நீ நம்பிய தோழிக்கு துரோகம் செய்த 😠😠😡😡

இதுல அவன் உனக்கு தாலி கட்டி பொண்டாட்டியாக வேறு ஆககிக்கனுமா...!!???
 
Last edited:
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
187
பாவனா திட்டம் போட்டு தான் ஸ்ருதி வாழ்க்கையை கெடுத்துருக்கா 😡 அவளை மட்டும் சொல்லி என்ன ஸ்ரீ காந்த் ம் இவ கூட சேர்ந்து பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணிட்டான்.....இனி
நிம்மதியே கிடைக்க கூடாது இவனுக்கு எல்லாம் 😤
இவளுக்கும் ஆசைப்பட்ட மாதிரி வாழ்க்கை அமைய கூடாது 😤
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
177
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேங்கப்பா பாவனா சரியான கைகாரி வேலைதான் பாத்திருக்கா.
மாமியாக்காரிக்கு மனசாட்சியே துளிகூட கிடையாது வூட்டுவேல செய்ய வேலைக்காரி வேணுமாம் அதனால ஸ்ருதி கூட்டி வரனுமாம் 😤😤😤😤😤😡😡😡😡😡😡.
அடேய் காந்தா நல்லா மாட்டுனேடா. இனி லோலோ ன்னு அலையப்போறேடா.
 
Well-known member
Joined
Mar 31, 2025
Messages
85
பாவனா திட்டம் போட்டு தான் ஸ்ருதி வாழ்க்கையை கெடுத்துருக்கா 😡 அவளை மட்டும் சொல்லி என்ன ஸ்ரீ காந்த் ம் இவ கூட சேர்ந்து பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணிட்டான்.....இனி
நிம்மதியே கிடைக்க கூடாது இவனுக்கு எல்லாம் 😤
இவளுக்கும் ஆசைப்பட்ட மாதிரி வாழ்க்கை அமைய கூடாது 😤
ஆமாம்
 
Well-known member
Joined
May 11, 2024
Messages
171
இப்படி துரோகம் செய்ற ஆளுக்கு இப்படி துரோகம் செய்யும் பெண்தான் கிடைப்பாள் ஸ்ரீ காந்த் நிலைமை இனி வாழ்கவில் நிம்மதி இருக்காது
 
Well-known member
Joined
Jun 2, 2024
Messages
119
Nalla poguthu story...enaku ennamo Bahavana ku Sri Kanth veetu nilavaram therila nu thonudhu..epdiyum adthavan vaalkaya keduka nenacha avalaum wife ku throgam pana avanum kettu seeralinja podhum 😏
 
Top