Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட...10.2

  • Thread Author
அத்தியாயம்….10…2

இங்கு ஸ்ருதிகா ஸ்ரீ தன்னை பார்க்காது குழந்தையை தூக்கி கொண்டு போகும் பெண்ணையே பார்த்து கொண்டு இருப்பதை பார்த்த சாண்டில்யன்…

“ஸ்ருதிகா ஸ்ரீ…” என்று அவளின் பெயரை சாண்டில்யன் அழைத்த பின் தான் ஸ்ருதிகா அவனை நிமிர்ந்து பார்த்தது…

சாண்டில்யனின் பார்வையில் பெண்ணவள் என்ன கண்டாளோ… “இல்ல குழந்தைங்க அடம் பிடித்தால் அவங்க எப்படி சமாளிப்பாங்க என்று தான்…” தன் பேச்சை இழுக்க…

இப்போது சாண்டியன்… “நீங்க ரொம்பவே சமாளிக்கிறிங்க ஸ்ருதிகா ஸ்ரீ… உங்க குழந்தைங்க புத்திசாலி மட்டும் இல்ல.. சமத்துமே….” என்று சொன்னவன் பின்..

“எனக்கு குழந்தைகளோட மதிப்பு தெரியும் ஸ்ருதிகா ஸ்ரீ…” என்று சாண்டில்யன் சொல்ல.

ஸ்ருதிகா ஸ்ரீ உடனே… “ உங்களுக்கு எத்தனை குழந்தைகள் சார்…?” என்று கேட்டு விட்டாள்.. ஸ்ருதிகா ஸ்ரீ இது போல எல்லாம் சட்டென்று யாரிடமும் கேட்டு விட மாட்டாள்..

ஸ்ருதிகா ஸ்ரீயின் பேச்சு எல்லாம் அவளின் திருமணத்திற்க்கு முன் தான் அதிகம் பேசியது எல்லாம்… திருமணம் முடிந்ததில் இருந்து அமைதியாகி போனாள்… ஸ்ரீ காந்த் அமைதியாக இரு என்று எல்லாம் சொல்லவில்லை தான்..

ஆனால் அது என்னவோ அவளிடம் இருந்த அந்த கல கலப்பு துரு துருப்பு எல்லாம் மறைந்து போய் விட்டது…

இப்போது சாண்டில்யனிடம் கேட்ட பின்.. அதுவும் தான் கேட்டதும் சாண்டில்யனிடம் வந்து போன அந்த பாவனையை பார்த்து .. ஏதோ தவறாக கேட்டு விட்டோம் என்பது பெண்ணவளுக்கு புரிந்தது.. அதனால் மன்னிப்பு கேட்க முயலும் போதே சாண்டில்யனிடம் இருந்து…

“நம்ம கிட்ட இல்லாத ஒன்றின் மதிப்பு தான் நமக்கு இன்னும் அதிகமா தெரியும்… ஸ்ருதிகா ஸ்ரீ…” என்று விட்டான்.

அதன் பின் ஸ்ருதிகாவும் அதை பற்றி பேச என்ன யோசிக்க கூட இல்லை.. காரணம்… சாண்டில்யன்… தான் எதற்க்கு விவாகரத்து கேட்கிறேன் என்று கேட்டதினால்,

பெண்ணவளுக்கு உடனே… அதை பற்றி பேச முடியவில்லை.. பெண்ணவளின் அந்த தயக்கம்.. சாண்டில்யனுக்கும் தெரிந்தது தான்.. கூடவே குணசேகரன் தன் மைத்துனி என்று தானே சொன்னார்..

தன் அம்மா குணசேகரன் நிச்சயத்துக்கு சென்று வந்த அன்று குணசேகரன் மைத்துனியை பற்றி தானே பேசிட்டு இருந்தாங்க என்ற யோசனையும் வர.. அதில் சாண்டில்யனின் பார்வை இன்னுமே கூர்மையாக ஸ்ருதிகா ஸ்ரீ மீது படிந்தது..

அப்போதும் அவன் மனம் சொன்னது.. இந்த பெண்ணை நான் எங்கோ பார்த்து இருக்கிறேன்.. அம்மா இந்த பெண்ணை பற்றி வாய் வழி மூலமாக தானே சொன்னாங்க.. ஆனால் இந்த பெண் முகமும் எனக்கு பரிட்சயமா தெரியுதுதே.

இவை அனைத்தையும் சாண்டில்யன் ஸ்ருதிகா ஸ்ரீயை பார்த்து கொண்டே தான் யோசித்தது..

அவனின் இந்த பார்வை ஸ்ருதிகா ஸ்ரீக்கு இன்னுமே தயக்கத்தை கொடுக்க… அதில் பெண்ணவள்..

“என் மாமா உங்க கிட்ட எல்லாம் சொல்லிட்டதா சொன்னாங்கலே சார்.” என்று சொல்ல…

இப்போது சாண்டில்யன் தன் யோசனை அனைத்தையும் தள்ளி வைத்தவனாக. “ டைவஸ் உங்களுக்கு தானே வேண்டும் ஸ்ருதிகா ஸ்ரீ…?” என்று கேட்டதில் ஸ்ருதிகா ஸ்ரீ பதறி விட்டாள்..

அதில்.. “ எனக்கு தான் சார். எனக்கு தான்..” என்ற ஸ்ருதிகா ஸ்ரீயின் இந்த பேச்சில் திணறல் அதிக இருந்தது… இதுவுமே அந்த ஆண்மகனுக்கு பிடிக்கவில்லை..

அதில் தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து இருந்தவன் தன் முன் இருக்கும் டேபுலின் நெருங்கி வந்தவன் தன் இரு கைகளையும் அதில் பதித்து கொண்ட பின்…

“நீங்க உங்க இந்த டைவஸ்ல ஸ்டாங்கா தானே இருக்கிங்க ஸ்ருதிகா ஸ்ரீ….” என்று கேட்டவனுக்கு உடனே ஸ்ருதிகாவிடம் இருந்து பதில் வந்தது..

“ஆமாம் சார்…”

“அப்போ என்ன நடந்தது என்று நீங்க தான் சொல்லனும் ஸ்ருதிகா ஸ்ரீ..” என்று சொன்னவனின் யோசனை முன் ஸ்ருதிகா தன் அன்னையிடம் பேசிய பேச்சில் சென்றது.

அதில்… “லாயர் பொய் பேசினாலும்… லாயர் கிட்ட பொய் பேச கூடாது…” என்றவனின் பேச்சு பெண்ணவளுக்கு சுத்தமாக நியாபகம் இல்லை..

ஸ்ருதிகா ஸ்ரீ இதை பற்றி ராஜ ராஜேஸ்வரியிடம் பத்து வருடங்கள் முன் பேசியது.. அவர் சாண்டில்யன் அம்மா என்று கூட தெரியாது.. அப்படி இருக்க சாண்டில்யனின் இந்த பேச்சு பெண்ணவளுக்கு எப்படி புரிந்து இருக்க போகிறது… அதனால் கிண்டல் போல பேசுகிறான் என்று தான் ஸ்ருதி சாண்டில்யன் பற்றி நினைத்தது.

அதனால் மெல்ல புன்னகைக்க. அந்த புன்னகை கவர்ச்சியாக இல்லை என்றாலும், அழகாக இருந்தது.. அதில் சாண்டில்யன் முகத்திலும் ஒரு புன்னகை…

இப்போ சொல்லலாமே.. என்று சொன்னதுமே… ஸ்ருதிகா ஸ்ரீயும் தன்னுடையது பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணத்தில் ஆரம்பித்து.. தன் ஐடி வேலையை விட்டு திருமணம் செய்து கொண்டது முதல் ஸ்ரீ காந்த் வீட்டின் நிலை என்று அனைத்தும் சொன்னவள் தான் பதிவு செய்து வைத்திருந்ததை சாண்டில்யன் கேட்கும் படியாகவும் செய்தாள்…

சாண்டில்யனும் அந்த பதிவை முழுமையாக கேட்ட பின்… “உங்க ட்ரஸ் சென்ஸ் நல்லா தானே இருக்கு. உங்க அப்பிரியன்ஸ் பத்தி ஏன் இப்படியான ஒரு பேச்சு….?”

இந்த பேச்சு பெண்ணவளுக்கு சங்கடத்தை கொடுக்கும் என்று தெரிந்தே தான் கேட்டான். ஒரு சிலதை இவள் தெளிவு படுத்தி கொள்ல வேண்டி இருந்தது.

ஸ்ருதிகா ஸ்ரீ தயங்கினாலும் “தான் வீட்டில் பகலிலே கூட இரவு உடையில் தான் இருப்பேன்…” என்று சொன்னதுமே சாண்டில்யன் சிரித்து விட்டான்…

பின்… “ இந்த காரணத்துக்காக ஆண்கள் வேறு பெண்ணை பார்க்கனும் என்றால், இந்த காலத்தில் பாதிக்கு பாதி பேர் வேறு பெண்ணை தேடி போக வேண்டியது தான்…” என்று சொன்னவன் பின்…

“அந்த பெண் உங்க பிரண்ட்…” என்று தனக்கு தானே சொல்வது போல சாண்டில்யன் சொல்ல.

அதற்க்கு ஸ்ருதிகா ஸ்ரீ… “ பிரண்ட் அந்த வார்த்தையை சொல்லாதிங்க சார்.” என்று சொன்னவளின் வார்த்தையில் அத்தனை கசப்பு…

மீண்டுமே சாண்டில்யன் “துரோகமே வலிக்கும் தான்.. ஆனா அந்த துரோகம் நம்ம நெருங்கினவங்க செய்தா இன்னும் வலிக்க தான் செய்யும்…” என்று சொன்னவனின் வார்த்தையிலும் கசப்பு தெரிந்தது…

குனிந்து இருந்த ஸ்ருதிகா சாண்டில்யனின் இந்த பேச்சில் நிமிர்ந்து அவனை பார்ப்பதற்க்குள் அவனின் முக பாவனை மாற்றி கொண்டவனாக அடுத்து வக்கீலாக மட்டும் தான் அவனின் அடுத்து அடுத்த பேச்சு இருந்தது.. குழந்தைகள் எத்தனை நேரம் தான் தெரியாத பெண்ணுடம் இருக்கும் என்று…

“நீங்க சொல்றதை பார்த்தா அவர் மீச்சுவலா டைவஸ் கொடுக்க மாட்டார் போல..” என்று கேட்டவனுக்கு ..

ஸ்ருதிகா ஸ்ரீ “ தெரியலையே சார்…” என்று சொல்ல..

“தெரிந்து இருக்கனும் ஸ்ருதிகா ஸ்ரீ… உங்களுக்கு தெரிந்து இருக்கனும்… தெரிந்தால் தான் கொஞ்சம் தெளிவு கிடைக்கும்… எப்போ உங்களை கல்யாணம் செய்ய உங்க வேலையை விட்டா தான் என்று சொன்னாரோ.. அப்போவே நீங்க தெளிந்து இருந்து இருக்கனும்… என்னை பொறுத்த வரை உங்களை கல்யாணத்திற்க்கு முன்பே…. உங்கள் தன் மானத்தை எடுத்துட்டார் என்று தான் சொல்லுவேன்..

அவருக்கு மனைவியை தேடல… அவர் வீட்டிற்க்கு வேலை செய்ய ஒரு பெண்ணை அவர் தேடி இருக்கார்… அவர் எதிர் பார்ப்பையும் நீங்க சரியாவே பூர்த்தி செய்து இருக்கிங்க… அவர் வீட்டு சூழ்நிலைக்கு உங்களுக்கு விவாகரத்து கொடுக்க அவர் ஒத்து கொள்ள மாட்டார் என்று தான் எனக்கு தோனுது…” என்று சாண்டில்யன் சொல்லிக் கொண்டு இருக்க..

ஆனால் ஸ்ரீ காந்த் தான் விரும்பாமலேயே ஸ்ருதிகா ஸ்ரீக்கு விவாகரத்து கொடுக்கும் படியான சூழல் உருவாகி விட்டது…

ஸ்ரீ காந்த் பாவனாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றவன் அனைத்தை பரிசோதனைகளும் முடிந்து… பின்…

“மூன்று மாதம் முடிவடைந்து விட்டது..” என்று அந்த மருத்துவர் சொன்ன நொடி ஸ்ரீ காந்த்.

“ டாக்டர் அபார்ட் பண்ணடிலாம்..” என்று சொல்ல.

அந்த மருத்துவர் ஸ்ரீ காந்த்தை ஒரு பார்வை பார்த்து விட்டு பின் பாவனாவிடம்…

“உங்களுக்கு ஏற்கனவே இரண்டு முறை அபார்ட் ஆகி இருக்கா…?” என்று கேட்டார்..

அதற்க்கு பாவனா.. “ ஆமாம் டாக்டர்..” என்று கூறினாள் பாவம் ஸ்ரீ காந்துக்கு அது தெரியாது தானே…

ஆம் பாவனானுக்கு அவள் செய்த திருமணத்தில் இரண்டு முறை அபார்ட் ஆகிய பின் தான் மூன்றாவதாக குழந்தை பிறந்தது.

இப்போது அந்த மருத்துவர் அதை தான் சொன்னது…

“உங்க கர்ப பை ரொம்ப வீக்கா இருக்கு.. இந்த குழந்தையை நீங்க அபார்ட் செய்தா. அடுத்த குழந்தை பிறப்பது கஷ்டம்… இப்போ இந்த அபார்ட் செய்வதில் உங்களுக்கு கூட பிரப்பலம் வரலாம்” என்று சொல்லி விட..

பின் என்ன ஸ்ரீ காந்த் பாவனாவை அபார்ட் செய்யாது அவள் வீட்டிற்க்கு அழைத்து வந்தவன். பின் உடனே தன் வீட்டிற்க்கு கிளம்பி விட்டான்.. முன் எல்லாம் கொஞ்சம் தனிமை கிடைத்தாலும் ஸ்ரீ காந்த் பாவனாவை கட்டி அணைக்காது முத்தம் இடாது செல்ல மாட்டான்..

ஆனால் இன்று அவள் வீட்டிற்க்குள் அழைத்தும் செல்லாது தன் வீட்டிற்க்கு வந்த போது அவனின் அன்னையும், அவனின் அண்ணனும் சண்டை போட்டு கொண்டு இருந்தனர்.. .

சாதாரணமாக ஸ்ரீ காந்தின் அண்ணன் கோகுல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் இருப்பான்.. அதுவும் குழந்தை இப்படி பிறந்து விட்டதில், அவன் இன்னுமே அமைதியாகி போனான்…

இன்று ஸ்ரீ காந்த் வீட்டிற்க்குள் நுழையும் போது அவனின் சத்தம் தான் அதிகமாக கேட்டது…

அதுவும் தங்கள் அன்னையிடம்.. “ எப்போ என்ன தான் செய்ய சொல்றிங்க. அவள் வேண்டும் என்றா செய்யாது போகுறா.. உங்களுக்கே தெரியும்.. எங்க குழந்தை கிட்ட அவள் எப்போவும் இருக்கனும்.. இதுல தோசை சுடல இட்லி சிட்டுட்டா… அதுவும் நேத்தும் இட்லி தான்… அப்பாவுக்கு தனியா சமைக்கல. என்னம்மா இது என்ன… “ என்று சத்தமாக பவானியிடம் சண்டை இட்டு கொண்டு இருக்க.

ஸ்ரீ காந்தை பார்த்ததும் கோகுல் அமைதியாகி விட்டான். அது மரியாதையினால் கிடையாது. வெருப்பினால்… ஸ்ருதியின் மூலம் விசயம் தெரிந்ததில் இருந்து கோகுல் தன் தம்பியின் முகத்தை கூட பார்ப்பதை விட்டு விட்டான்.

அதுவும் அந்த ரெக்கார்ட் செய்ததில் ஸ்ருதிகாவை பற்றி கிண்டலாக பேசியது கேட்டதில் அப்படி ஒரு ஆத்திரன் அவனுக்கு.. என்ன மாதிரு அருமையான பெண் ஸ்ருதிகா…

தம்பிக்கு திருமணம் முடிந்து ஸ்ருதிகா இந்த வீட்டிற்க்கு வந்த போது கூட கோகுல் ஸ்ருதிகாவிடம் பெரியதாக எதிர் பார்ப்பு வைத்து இருக்கவில்லை…

என்ன செய்து விட முடியும்… வீட்டின் நிலை தெரிந்து தனி குடித்தம் வேண்டும் என்றால் தன் தம்பியை அழைத்து கொண்டு செல்வாள் என்று தான் கோகுல் நினைத்தது.

ஆனால் இந்த ஐந்து ஆண்டுகளின் அந்த பெண் இந்த வீட்டில் பொருந்து போனதோடு மட்டும் அல்லாது ஒரு முக சுலிப்பு கூட இல்லாது அனைத்தையும் அந்த பெண் தானே பார்த்து கொண்டது.. அப்படி பட்ட பெண்ணுக்கு எப்படி இவனால் துரோகம் செய்ய முடிந்தது… அதுவும் காரணமாக.. சீ தன் தம்பியின் செயலை நினைத்தாலே கோகுலின் மனதில் இப்படி தான் தோன்றும்..

அதனால் பேசாது தன் குழந்தையின் உடையை சரி செய்வது போல பாவனையில் முகத்தை திருப்பி கொண்டான்.

அதனால் ஸ்ரீ காந்த் பவானியிடம் தான். “ என்னம்மா பிரச்சனை..?” என்று கேட்டது…

சின்ன மகன் கேட்டது தான் தாமதம் பவானி ஒரு முழ நீளத்திற்க்கு தன் மூத்த மருமகள் அனிதாவின் மீது குற்றப்பத்திரிக்கை வாசிக்க தொடங்கி விட்டார்.

“தினம் தினம் இட்லின்னா. எப்படி ஸ்ரீ காந்த் சாப்பிடுவது.. அதுவும் அந்த இட்லி கல்லு மாதிரி இருக்கு… ஸ்ருதி இருக்கும் போது இட்லி எப்படி பூ போல இருக்கும் “ என்று பவானி சொல்ல… சொல்ல…

ஸ்ரீ காந்த்… “ அப்போவும் வேலையாள் தானே ஆட்டுவாங்கம்மா ..” என்று சொன்னது தான் அனிதா இது வரை அமைதியாக இருந்தவன்..

தன் மச்சினனின் இந்த பேச்சுக்கு …” வேலையாள் தான் ஆட்டுவாங்கப்பா.. ஆனா ஊர வைக்கும் பதம் ஸ்ருதி தான் அரிசி உளுந்து ஊர வைப்பா.. அதே போல வேலையாள் அரைக்கும் போது ஸ்ருதி தான் கழுவி கொடுப்பா…

வேலையாள் அரைத்தாலுமே… ஸ்ருதியும் பக்கத்து வேலையை பார்த்து கொண்டே வேலைக்காடி கிட்ட இட்லிக்கு மைய்யா அரைக்காதிங்க என்று சொல்லுவா… தோசைக்கு நல்லா அரைந்த பின் எடு என்று சொல்லுவா.. அதே போல உளுந்து அலவு கூட தோசைக்கும் இட்லிக்கும் அளவு சொல்லி அப்படி எடுத்து வை என்று தனி தனியா சொல்லிட்டே… மத்த வேலையை பார்ப்பா.. ஆனா என்னால அது போல முடியுமா தம்பி…

நான் சமையல் அறையில் வேலை பார்த்துட்டு இருக்கும் பொது ஹாலில் அசிங்கம் செய்துட்டா… நாத்தம் வந்து ஓடி வந்து பார்த்தா அதை சுத்தம் செய்த பின்.. மீண்டும் வேலை.. என்னால எப்படி முடியும்…

இதுலா மாமாவுக்கு தனியா சமை என்றால் எப்படி..” என்று அனிதா சொல்லும் போதே வெங்கடராமன்…

“எனக்கு எல்லாம் தனியா சமைக்க வேண்டாம் ம்மா. அவள் அப்படி தான் சொல்லுவா….” என்று சொல்ல..

ஸ்ரீ காந்த் தான்.. “ வேலையாள் பார்க்கலாமே…” என்று சொன்னதற்க்கு அனிதாவும் பவானியும்…

“மூன்று நாளா சமையல் செய்ய ஆளுக்கு வேறு பார்த்துட்டு தான் இருக்கோம். ஆனா யாருமே வர மாட்டேங்குறாங்க…” ( ஏன்னா வீடு அந்த மாதிரி வீடு அது… ) என்று சொன்ன அனிதா பின்..

“தம்பி நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க. ஸ்ருதியை எப்படியாவது சமாதானம் படுத்தி கூட்டிட்டு வந்துடுப்பா… குழந்தைங்களை பத்தியும் யோசிக்கனும் லே…” என்று அனிதா சொன்ன நொடி…

இத்தனை பேச்சுக்கும் இவர்கள் பக்கம் பார்க்காது நின்று கொண்டு இருந்த கோகுல் மனைவியின் இந்த பேச்சுக்கு கோபத்துடன்… அவள் பக்கம் திரும்பியவள்..

“இது சொல்ல உனக்கு நான் கூசலையா டி..?” என்று கேட்டான்…

உண்மையில் அனிதாவுக்கு புரியவில்லை தான் என்ன தவறாக பேசினோம் என்று தான் கணவனை பார்த்தாள்…

“நான் உனக்கு அது போல துரோகம் செய்துட்டு… வா வாழு என்று சொன்னா வாழுவீயாடி…?” என்று கேட்டதற்க்கு அனிதாவினால் வாய் திற்க்க முடியவில்லை.

இதில் பவானியுமே… “ நடந்தது நடந்து முடிந்து விட்டது.. இப்போ என்ன டா பண்ண முடியும்.. இனி நான் அது போல நடக்க மாட்டேன் என்று எல்லார் காலிலும் விழுந்துட்டான்… குழந்தைகளுக்காவது கொஞ்சம் அனுசரித்து வாழ்ந்து தான் ஆக வேண்டும்..” என்று அவரும் ஒன்று சொல்ல.

கோகுல் .. “ ம்மா இந்த வீட்டு பெண்கள் நீங்க இரண்டு பேர் தான்.. இது போல ஒரு விசயம் கணவன் செய்தால் அந்த பெண் மனசு எப்படி பாதிக்கப்படும் என்று உங்களுக்கு தான் நல்லா தெரியும்.. ஆனா நீங்களே இப்படி பேசினா.. இது தான் சொல்வாங்க பெண்ணுக்கு பெண் தான் எதிரி என்று.. என்னை பொறுத்த வரை ஸ்ருதி எடுத்த முடிவு சரியே..” என்று விட்டான்..

மீண்டும் பவானி. “ நீ என்ன கோகுல் உன் தம்பி பக்கம் பேசாது அந்த பெண் பக்கம் பேசுற…?” என்று கேட்ட பவானியிடம்..

ஒரே வார்த்தையில்..” ஏன்னா நான் அந்த பெண் கைய்யால சாப்பிட்டு இருக்கேன் ம்மா… ஸ்ருதி தன் வீட்டவங்களோடு இந்த வீட்டிற்க்கு வந்த போதே அந்த பெண் பக்கம் நான் பேசி இருந்து இருப்பேன் ம்மா.. ஆனா பாருங்க ஒரு சிலர் தான் செய்த தப்பை மறைக்க அதே தப்பை மத்தவங்க மேல திருப்பி போட்டு விடுவாங்க…

நான் ஸ்ருதி பக்கம் பேசி இருந்தா உங்க சின்ன மகனே… எல்லோரும் அமைதியா இருக்க நீ மட்டும் அவள் சார்பா பேசுறியே என்ன விசயம் என்று கூட கேட்டு இருக்கலாம்.. அதனால தான் நான் அன்னைக்கு அமைதியா இருந்தேன்.. இந்த வீடு செய்த பாவமா போதும்.. இன்னும் அந்த பெண் நடத்தையை வேறு ஏன் விவாதிக்கனும் என்று தான் எதுவும் பேசல… ஏற்கனவே நான் என்ன பாவம் செய்தேன்னோ.. குழந்தை இப்படி பிறந்து இருக்கு.. இன்னும் ஒரு பெண் பாவத்தை நான் தேடிக்கனுமா…?” என்ற கோகுலின் இந்த பேச்சு அனைவரையும் செருப்பால் அடித்தது போல இருந்தது…



சாண்டில்யன் ஸ்ருதிகா ஸ்ரீயிடம் பேசி விட்டு பின் எந்த அடிப்படையில் விவாகரத்து வாங்குவது என்பதை தெளிவாக ஸ்ருதிகாவிடம் பேசியவன் பின் ஸ்ருதிகா ஸ்ரீ முன்பேர் குணசேகரனை கை பேசியில் அழைத்து… பேச..

குணசேகரனும்.. “ சாண்டில்யா உனக்கு தெரியாது இல்ல… உனக்கு எப்படி கேஸ் பைல் பண்ணா சீக்கிரம் டைவஸ் கிடைக்குமோ… அப்படி பண்ணி விடு… எனக்கு அவன் அவ்வளவு சீக்கிரத்தில் டைவஸ் கொடுக்க மாட்டான் என்று தான் நினைக்கிறேன்…” என்று சொன்னவனிடம் சாண்டில்யனும்..

“எனக்குமே அது தான் தோனுது.” என்ற பின் சாண்டில்யனின் கை பேசி ஸ்ருதிகா ஸ் ஸ்ரீயிடம் கை மாற.

குணசேகரன்.. “ ஸ்ருதிகா சாண்டில்யன் என்ன சொல்றரோ அது போல செய் ம்மா… எவ்வளவு சீக்கிரம் இதை முடித்து விடுகிரோமோ அவ்வளவு சீக்கிரம் நல்லது.. ஏன்னா குழந்தைங்க இதனால அல்லாட கூடாது பாரு.” என்று குணசேகரன் சொன்ன நொடி… ஸ்ருதிகா ஸ்ரீயின் கண்களில் இருந்து கண்ணீர் கரை கட்டி நிற்க..

சாண்டில்யனுக்கு.. ஸ்ருதிகா ஸ்ரீயை அது போல பார்க்க என்னவோ போல் இருந்தது… ஸ்ருதிகா ஸ்ரீயை விட மிக மிக மோசமான நிலையில் வாழ்ந்த பெண்களை எல்லாம்.. இதோ இதே இருக்கையில் அமர்ந்து கொண்டு கேட்டு இருக்கிறான்.. அவர்களின் கண்ணீரையும் பார்த்து இருக்கிறான்.

சட்டப்படி அந்த பெண்களுக்கு என்ன நியாயம் வாங்கி தர முடியுமோ.. அது வாங்கி தந்து இருக்கிறான்.. அவ்வளவு தான். ஆனால் ஸ்ருதிகா ஸ்ரீயின் இந்த கண்ணீர்… அவன் மனதை பலமாக தாக்கியது…

அந்த தாக்கத்தில் “எல்லாம் நான் பார்த்துக்குறேன்…” என்ற வார்த்தை அவன் வாயில் இருந்து தன்னால் வந்தது..
 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
170
கோகுல் 🤗🤗🤗🤗 உனக்கு மட்டுமாச்சும் மனசாட்சி இருக்கே ☹️☹️☹️☹️☹️ இன்னும் நல்லா செருப்பால் அடிச்ச மாதிரி கேள்வி கேளு 😑 😑 😑

இவங்களுக்கு பக்குவமா இட்லி மாவு அரைச்சு பூ மாதிரி இட்லி அவிச்சு கொடுக்க ஆளு இல்லை என்று தான் கவலைபடுறாங்க 😖😖😖😖😖😖😖😖

ஏம்மா அனிதா உனக்கு நன்றியே இல்லையா 😡 🤬 😕


சாண்டில்யன் டைவோர்ஸ் வாங்க ஸ்ட்ராங்கான ஆதாரம் கிடைச்சிருக்கு 🤗🤗🤗🤗அதை எப்படியாவது கண்டு பிடிச்சிட்டு🧐😣🧐🧐
 
Last edited:
Well-known member
Joined
May 11, 2024
Messages
167
ஸ்ரீ காந்த் அண்ணா கோகுல் சொன்னது போல் பேச கூடியவன்தான் இனி சாண்டில்லியன் ஸ்ருதிக்கு டைய்வர்ஸ் வாங்கி கொடுத்துருவான் இனி 🤔🤔🤔🌺🌺🌺
 
Well-known member
Joined
Mar 22, 2025
Messages
79
கோகுல் அவ கையால சாப்பிட்டதுக்கு நீ வைச்சு இருக்கிற நன்றி கூட உன் குடும்பத்தில் யாருக்குமே இல்லை பாரு

ஏம்மா அனிதா ஒரு இட்லி தோசைக்கு அவ செய்யுற பதத்தை இவ்வளவு பேசுறீயே அவ கையால தின்ன உனக்கு மட்டும் உப்பு போடாமலா சோறு தின்ன என்ன ஜென்மம் நீ.

சாண்டில்யன் எப்படியாவது அவனை நன்கு வைச்சு செய்யுங்க
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
173
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
எப்பா டேய் அண்ணங்காரனே உனக்காவது சோறு போட்ட கைக்கு துரோகம் செய்யக் கூடாது ன்னு நெனைப்பு இருக்கே 👏👏
முன்னாள் மாமியாக்காரியும் ஓரகத்தியும் வீணாப்போனவகளுக🤬🤬🤬🤬🤬🤬 இத்தனை வயசுக்கு அப்பறமேட்டு உன்ற புருஷன் வெளியே இதேபோல போயிட்டு வந்து மன்னிப்பு கேட்டா மன்னிச்சு சேத்துக்கோ முன்னாள் மாமியாளே 🫤🫤🫤🫤🫤🫤
தலைவலியும் நோவும் தனக்கு வந்தாதான் தெரியும்.
அடுத்தவிக ன்னா இளப்பமா பேசச் சொல்லுதோ😤😤😤😤😤😤.
மிஸ்டர் வக்கீலு என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது அந்த நாரப்பயலை நார்நாரா கிழிச்சு தோரணம் கட்டி தொங்கவுடு😏😏😏.
ஸ்ருதியையும் உன்ற வாயி தன்னப்போக்குல சொன்ன போல பத்திரமா பாத்துக்கோ.
 
Active member
Joined
May 12, 2025
Messages
16
ஏற்கனவே கெட்ட காலத்தினால தான் இப்படி ஒரு இல்லீகல் அஃபேர். இதுல அண்ணனையும், பொண்டாட்டியவும் தப்பா வேற பேசுவானா? டைவர்சுக்கு அப்பறம் தான் தெரியப்போகுது பவுசு. புதுமையான காரணம் தான் - நைட்டியோட இருந்தது தான் ஈர்ப்பு குறைஞ்சது . ஆமா இப்படி எல்லார்க்கும்க்ஷதனி சமையல், வீட்டு கவனிப்பு, இட்லிக்கு தனி, தோசைக்கு தனியாக மாவாட்டுவது. அனிதா,பவானி - உங்களுக்கெல்லாம் பாவனா வந்தா தான் தெரியும்
 
Member
Joined
Apr 2, 2025
Messages
18
Pudhu marumaga varuva avalta thani thani ya panna solli kettu sappudu.. nalla pannuva😡😡😡 anitha.. avanga vayasu apdi, apdi yosikurannga.. ana nee.. che.. ellam suyanala pisasu...

Gokul.. paravala.. nee naalum yosikira... Epdi intha family la sikkuna 🤷🤷

Sigiram mudichu vidu வக்கீல்...
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
184
இட்லி கல்லு மாதிரி இருக்குறது தான் இப்போ பவானிக்கு இருக்குற ஒரே பிரச்சனை போல....🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இத்தனை நாள் ஒரு இளிச்சவாய் தலையில மாவு ஆட்டினாங்க இப்போ அவ இல்லாம மாமியாருக்கும் மருமகளுக்கும் முட்டிக்கிது 😏😏😏

கோகுல் ஒருத்தன் தான் நியாயமா இருக்கான் இந்த வீட்ல......

ஸ்ரீகாந்த் அவனே டிவோர்ஸ் குடுத்துடுவான் போல சிக்கியிருக்க இடம் அப்படி 🤭🤭🤭
 
Top