அத்தியாயம்…12.1
தன் மன கண்ணில் ஸ்ருதிகா ஸ்ரீயின் அந்த தோற்றம் வந்து நிற்க… சாண்டில்யன் எதை பற்றியும் யோசிக்கவில்லை… நேரம் காலம் கூட பார்க்காது குணசேகரனுக்கு அழைத்து விட்டான்..
சாண்டில்யனுக்கு தான் நேரம் காலம் தெரியாது.. ஆனால் குணசேகரனுக்கும் அவன் மனைவிக்கும்… அப்போது தான் தம்பதியர்கள் நீண்ட நாட்கள் கழித்து தம்பதியர்கள் சுகித்து உறங்கிய சமயம் அது…
அனைத்தும் முடிந்து உறங்கும் சமயம்… குணசேகரன் தன் மனைவி கலாவதியிடம்… “ இது போலான சமயத்தில் தான் எனக்கு வயசு ஆகுறதே தெரியுது கலா… ரொம்ப டையடா இருக்கு…” என்று சொல்லி தான் தூங்கியது….
அதனால் குணசேகரனுக்கு தன் கை பேசியில் ஒசை எங்கோ கனவில் கேட்பது போல தோன்றியது.. கலாவதிக்கோ… அது கூட கேட்காது ஆழ்ந்த உறக்கத்திற்க்கு சென்று விட்டாள்…
தன் கை பேசி ஒசை அடங்கும் சமயம் தான் குணசேகரனுக்கு கனவில் கிடையாது நிஜத்தில் தான் கேட்கிறது என்று தன் கை பேசியை எடுத்து யார் அழைத்தது என்று கூட பாராது அழைப்பை ஏற்றான்… ஒரு வித பதட்டத்துடன் தான்..
பின் என்ன இந்த நேரத்தில் அழைப்பு வருவது.. சும்மா எல்லாம் பேச இருக்காதே… தன் கை பேசியை காதில் வைத்த பின் தான்….
சாண்டில்யன். “குணசேகரன்..” என்ற அழைப்பில் யார் என்று பார்த்தவனுக்கு அழைத்தது சாண்டில்யன் என்றதுமே இன்னுமே பதட்டம் கூடி போனது..
அதில் சாவகாகமாக படுத்து கொண்டு இருந்தவன் தான் இருக்கும் நிலையை மறந்து எழுந்து நின்று விட்டான்.. அதில் மனைவிக்கும் சேர்த்து போர்த்தி இருந்த போர்வை முற்றிலுமாக விலகி விட. கலாவதியின் தூக்கமும் கூடவே விலகி போனதில் …
கலாவதி. கோபத்துடன்.. “இப்போ தானே எனக்கு வயசு ஆகுது முடியல என்று சொன்னிங்க திரும்ப என்ன… பெண்ணை உங்க அம்மா அப்பா ரூமுக்கு அனுப்பும் போதே நான் உஷாரா ஆகி இருக்கனும்.” என்று கத்தியவளின் இந்த பேச்சு சாண்டில்யனுக்கும் கேட்டது..
அய்யோ என்றான நிலை தான் சாண்டில்யனுக்கு, அவனை விட குணசேகரனின் நிலை இன்னுமே மோசம் என்று தான் சொல்ல வேண்டும்.. அடியே என்ன என்னடி பேசி தொலச்சி இருக்கே.. என்று அதை நினைத்து பதட்டம் பட்டாலுமே, இந்த நேரத்தில் சாண்டில்யன் அழைத்ததில் என்ன விசயம் என்று தெரியாது பதட்டத்துடனே..
“சாண்டில்யா ஸ்ருதிகாவுக்கு ஏதாவது பிரச்சனையா..?” என்று தன் பதட்டம் குறையாது கேட்டதினால் அது அவனின் குரலிலும் எதிர் ஒலித்தது..
பாதி தூக்கத்தில் இருந்த கலாவதியின் காதில் தன் தங்கையின் பெயர் விழவும் அலறி அடித்து எழுந்து அமர்ந்தவள்… தன் கணவன் பேசியில் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து இன்னுமே பதறி போனவளாக..
“என்னங்க என்ன பிரச்சனை…?” என்று தன் மீது அங்கு இருக்கும் இரவு உடையை உடுத்திக் கொண்டே கேட்டாள். கலாவதியின் பதட்ட குரலும் கை பேசியில் அந்த பக்கத்தில் இருந்த சாண்டில்யனின் காதில் விழுந்தது..
அதில் கடவுளே என்று தலையில் அடித்து கொள்ளலாம் போல ஆனது… குணசேகரன். “ என்ன என்று கேட்டுட்டு இருக்கேன் தானே..?” குணசேகரன் மனைவியை கண்டிக்கும் குரல் கேட்க.
சாண்டில்யன் உடனே.. “ ண்ணா பிரச்சனை ஒன்னும் இல்லே.. ஸ்ருதி வந்தாங்க.. பேச வேண்டியது எல்லாம் பேசிட்டேன்.. நாளைக்கு சைன் போட வர சொல்லி இருக்கேன். அதே போல சேப்பா தான் வீட்டிற்க்கு போய் சேர்ந்துட்டாங்க…” என்று அவசர அவசரமாக அவர்களின் பயத்தை போக்கிய பின்பே.
சாண்டில்யன் அடுத்து… “சாரி ண்ணா சாரி ண்ணா. சாரி.. எனக்கு இருக்கும் குழப்பத்தில் நான் தான் டைம் பார்க்காம கால் பண்ணிட்டேன்…” என்று மன்னிப்பையே கேட்டது.
சாண்டில்யன் நினைத்தது போல தான் குணசேகரன் கலாவதியிடம்.. “ டைம் பார்க்காம பண்ணிட்டு இருக்காரு.. நீ தூங்கு “ என்று மனைவியிடம் சொல்லி கொண்டு இருந்தான் குணசேகரன்.. இதுவுமே சாண்டில்யனுக்கு கேட்டது.
ஆனால் குணசேகரன் மனைவியிடம் பேசியது மட்டும் தான் சாண்டில்யனுக்கு கேட்டது.. அவன் மனதில் நினைத்த சாண்டில்யனின் இந்த அண்ணா என்ற அழைப்பு.
அதோடு சாண்டில்யனின் இத்தனை நீண்ட பேச்சு.. குணசேகரனுக்கு புதியது.. சாண்டில்யனை அவனின் டீன் ஏஜ்ஜில் இருந்தே குணசேகரன் பார்த்து இருக்கிறான். கவனித்தும் இருக்கிறான்..
சாண்டில்யனுக்கு தான் குணசேகரனை அவ்வளவாக தெரியாது… ஆனால் குணசேகரனுக்கு சாண்டில்யனின் அனைத்து விசயங்களும் தெரியும்.. சோமசுந்தரத்தின் மூலம்..
அதுவும் தன்னை அண்ணா என்று அழைத்து பேசியது… யோசிக்கும் போதே சாண்டில்யனின் கேட்ட.
“ஸ்ருதிகா ஸ்ரீயின் ஜாதகம் எங்க வசும்மா கைக்கு உங்க மூலம் தான் வந்ததா ண்ணா…?” என்று கேட்டு விட்டான்…
குணசேகரனுக்கு இதற்க்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.. தன் மனைவியிடம் இதை பற்றி அனைத்தும் பேசி விட்டான்.. மனைவியிடம் பேசும் போது இலகுவாக தான் இருந்தது… ஆனால் .. சாண்டில்யனிடம்… என்று குணசேகரன் நினைக்கும் போதே. சாண்டில்யனின் அந்த “ “ “ ப்ளீஸ் ண்ணா சொல்லுங்க…” என்று சொன்னவன் தன் வீட்டில் வாசுவும் சுமதி மாமியாரும் செய்த அனைத்தும் சொல்லி முடித்தவன்.
“இப்போவாவது சொல்றிங்கலா..?” என்று சாண்டில்யன் கேட்ட போது… குணசேகரன் சாண்டில்யன் சொன்ன விசயத்தை அதிர்ந்து போய் விட்டான்….
குணசேகரனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. சாண்டில்யனின் அம்மா அப்பா இறப்புக்கு இவனே இங்கு இருந்து சென்று இருந்தான்…
சாண்டில்யனிடம் பேச நினைத்தான் தான்.. ஆனால் அந்த அளவுக்கு பழக்கம் இல்லாததினால் பேசாது வந்து விட்டான்.. தன் அம்மா அப்பாவை பார்க்க செல்லும் போது எல்லாம் சாண்டில்யனை பார்த்து விட்டு வரலாம் என்று எத்தனையோ முறை நினைத்து இருக்கிறான்…
பின் அவன் சென்னையில் அவனின் வசும்மா வீட்டில் தான் இருக்கிறான் என்று தெரிந்ததில் மனதில் ஒரு நிம்மதி… காரணம் சோமசுந்தரத்தின் பெரும்பாலான பேச்சு. இதுவாக தான் இருக்கும்..
“அவன் அம்மா இப்போவே மருமகளை பார்த்து விட ஆசை குணா.. பேரன் பிள்ளைகளை கொஞ்ச ஆசை…” இப்படியான பேச்சுக்கள் தான் இருக்கும்.. இப்படி எதையும் பார்க்காது சென்று விட்டார்களே… தன்னிடமே அத்தனை பேசுபவர்கள் சாண்டில்யனிடம் இதை பற்றி எத்தனை பேசி இருந்து இருப்பார்கள்.. என்று நினைத்து இருக்கிறான்..
அதனால் தான் சாண்டில்யனின் முப்பதாவது வயதில் அவனுக்கு பெண் பார்க்கிறார்கள் என்று தூரத்து உறவு முறையில் கேள்வி பட்டது.. ( இருவருமே ஒரே இனத்தவர்கள் தான்…)
குணசேகரன் ஒரு உறவு முறை மூலம் ஸ்ருதிகா ஸ்ரீ ஜாதகத்தை கொடுத்தது… அதுவும் கொடுக்கும் முன்பே சாண்டில்யனின் பிறந்த நாள் நேரத்தில் இருந்து அதையும் பெரும் கதையாக சோமசுந்தரம் சொன்னதினால் குணசேகரனுக்கும் தெரிய.. . பொருத்தம் பார்த்து விட்டு பொருந்தி இருக்கிறது என்று தெரிந்த பின் தான் கொடுத்ததே.
தன் மாமனாரிடம் சாண்டில்யனை பற்றி பேசி… ஆனால் கொடுத்த ஒரே வாரத்தில் பொருத்தம் இல்லை என்ற செய்தி வந்ததில், நாம் பார்த்து விட்டு பொருந்து இருக்கிறது என்று சொன்ன பின் தானே கொடுத்ததே. ஒரு சமயம் பொருளாதாரத்தில் அவர்களை விட கீழே இருக்கிறார்கள் என்று ஏதாவது ஒன்று சொல்ல வேண்டும் என்று இப்படி சொல்லி விட்டார்கள் போல என்று நினைத்து விட்டான்.. ஆனால் அதன் பின் இத்தனை சூழ்ச்சி இருக்கும் என்று குணசேகரன் நினைத்தும் பார்க்கவில்லை..
.அதுவும் சாண்டில்யனின் இருபதாவது வயதிலேயே அவன் திருமணத்தை பற்றி பேசியதை கேட்ட கொண்டு இருந்தவனுக்கு இந்த துரோகம்.. சாண்டில்யன் சொன்னதும் இவை அனைத்தும் நினைத்து பார்த்து சிலையாக நின்று விட.
சாண்டில்யனின். “ ண்ணா ண்ணா..” என்ற அழைப்பில் இப்போது குணசேகரன் அவனை அடுத்து கேட்க வைக்காது அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தான்..
“உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன் சாண்டில்யா.. உன் அம்மாவும் அப்பாவும் என்னுடைய எங்கேஜ்மெண்ட்க்கு வந்து இருந்தாங்க…” என்று குணசேகரன் சொன்னதுமே சாண்டில்யன்..
“ம் தெரியும் ண்ணா. என் அம்மாவும் அப்பாவும் ஒன்னா சேர்ந்து அட்டெண் பண்ண பங்கஷனும் அது தான்…” என்று சொன்னான்…
“ம் என்றவன் பின்.. அன்னைக்கு உன் அம்மா ரொம்ப நேரம் ஸ்ருதிகா கிட்ட பேசிட்டு இருந்தாங்க.”
சாண்டில்யனுக்கு தான் இது தெரியுமே… அமைதியாக குணசேகரன் சொன்னதை கேட்டு கொண்டான்.
அடுத்து சொன்ன செய்தி சண்டில்யனுக்கே புதிய விசயம்.. “ போகும் போது ஸ்ருதியை பத்தி என் கிட்ட அப்படி ஒரு பேச்சு சாண்டில்யா.. ரொம்ப துரு துரு என்று இருக்கா… எனக்கு பெண் குழந்தைங்க என்றால் ரொம்ப பிடிக்கும் குணா… ரொம்ப சின்ன பெண்ணா இருக்கா… இப்போ தான் காலேஜ் பஸ்ட் இயர் என்று சொன்னா.. படிக்கிற பெண்ணை பெண் கேட்பது நல்லா இருக்காது குணா… இல்லேன்னா இப்போவே உன் மாமனார் கிட்ட பெண் கேட்டு இருந்து இருப்பேன்…” என்று குணசேகரன் சொல்லி கொண்டு போக சாண்டில்யனுக்கு என்ன என்று சொல்ல தெரியாத ஒரு நிலை..
பின் அடுத்து குணசேகரனின் பேச்சில் கவனத்தை செலுத்த. “ ஆனா உன் மச்சினிச்சி படிச்சி முடிக்கும் வரை என்னால காத்துட்டு இருக்க முடியாது குணா… அடுத்த வாரம் சாண்டில்யாவோட பிறந்த நாள் வருது.. பெண்ணை பார்க்க ஆரம்பித்து விடலாம் என்று நினைக்கிறேன்.. ஆனா உன் மச்சினிச்சியை எனக்கு பிடிச்சி இருக்கு குணா யாருக்கு கொடுத்து வைத்து இருக்கோ…” என்று சொன்னாங்க சாண்டில்யா..
அதனால தான் உன் முப்பதாவது வயதில் உனக்கு பெண் தேடுறாங்க என்று தெரிந்ததும் ஸ்ருதி ஜாதகத்தை உனக்கு பொருத்தம் பார்த்து கொடுத்தது.. நீங்க பொருந்தல எனும் போது….” குணசேகரன் தான் நினைத்ததை சொல்ல வில்லை..
ஆனால் சாண்டில்யன் கேட்டான்.. “என்னை தெரியும் தானே ண்ணா. என் கிட்ட வந்து சொல்லி இருந்து இருக்கலாமே….” அவன் பேச்சில் அத்தனை ஆதங்கம் ஸ்ருதிகா ஸ்ரீ தான் முதலில் தனக்கு பார்த்த பெண் என்று தெரிந்ததிலே சாண்டில்யனுக்கு சொல்ல முடியாத வேதனை என்பதை விட.. ஒரு பொக்கிஷத்தை இழந்த உணர்வு என்று சொன்னால் சரியாக இருக்கும்…
அப்படி இருக்க தன் அம்மாவுக்கு ஸ்ருதியை இத்தனை பிடித்தம் என்று தெரிந்ததில் வாய் அடைத்து போக.
குணசேகரன் என்ன நினைத்தானோ… “என்ன செய்யிறது சாண்டில்யா யாருக்கு யார் என்று இருக்கு தானே.. அதோட ஒருத்தன் பொண்ட்டாட்டியை இன்னொருத்தன் கட்ட முடியாது என்று சொல்லுவாங்க…” என்று குணசேகரன் சொன்ன நொடி…
சாண்டில்யன்… “ ஆமாம் ண்ணா ஆமாம்.. ஒருத்தனோட பொண்டாட்டி இன்னொருத்தனோட கூட வாழ முடியாது தான்…” என்று சொல்லி விட்டு கை பேசியை சாண்டில்யன் வைத்து விட்டான்.
இரண்டு பேருமே வக்கீல்கள்.. இதில் இரண்டு பேருக்குமே வக்கில் தொழிலில் வாய் ஜாலத்தை கற்பித்தது ஒருவரே எனும் போது சாண்டில்யன் என்ன அர்த்தத்தில் சொன்னான் என்பது குணசேகரனுக்கு புரிந்து விட்டது.. புரிந்த விசயம் அவனுக்கு மகிழ்ச்சி தான். ஆனால் ஸ்ருதி இப்போது தான் ஒரு உறவில் இருந்து வெளி வர பார்க்கிறாள்.. அதுவும் ஒரு பெரிய துரோகத்தை சந்தித்து விட்டு.. அதோடு இரு பெண் குழந்தைக்கும் அன்னை.. அனைத்தும் யோசித்து கொண்டே தான் குணசேகரன் தூங்கியது…
ஸ்ரீ காந்த் கோகுல் பேச்சில் கோபம் வந்தாலும் ஒன்றும் பேச முடியவில்லை.. அதோடு ஏற்கனவே பாவனா விசயத்தில் மூளை குழம்பி போய் வந்தவனுக்கு கொஞ்சம் படுத்தால் தேவலாம் போல இருக்க.. தன் அறைக்கு வந்தவனுக்கு இப்போது மூளை குழப்பத்தோடு தலை வலியும் வந்து விடும் போல் ஆகி விட்டது..
அப்படி இருந்தது அவன் அறை… தலையணை ஒரு பக்கமும்.. கட்டிலில் இருக்க வேண்டிய போர்வை ஒரு மூலைக்கும்.. தரை எங்கும் பொருட்கள் சிதறியும்… பார்க்க பார்க்க அய்யோ என்றான நிலை..
இந்த அறையில் இரு சின்ன குழந்தைகள் இருந்த போது கூட தன் மனைவி அத்தனை சுத்தமாக இந்த அறையை வைத்து இருந்தது அவனின் நியாபகத்திற்க்கு வந்தது..
ஸ்ரீ காந்துக்கு எப்போதும் எதிலும் சுத்தமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும்… என்ன செய்வது இன்று அந்த குப்பையில் நடுவில் தான் ஸ்ரீ காந்த் படுத்து உறங்கியது..
இன்று தொடக்கம் தான் இது இன்னுமே உனக்கு இருக்கிறது என்று தெரியாது தான் நாளை இப்படி தான் என்பதை இன்றே பழக ஆரம்பித்து இருந்தான்.
ஸ்ரீ காந்த் மறு நாள் எழும் போதே இரவு தலை வலியில் தொடர்ச்சியில் தான் எழுந்தது.. சரி கொஞ்சம் தன் அறையை சுத்தம் செய்தால் இந்த தலை வலி குறையும் போல. இதை பார்க்க பார்க்க தான் தனக்கு வெறுப்பாக இருக்கிறது என்று சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.. அவன் சுத்தம் செய்ய முடிக்கவே இரண்டு மணி நேரம் அவனுக்கு பிடித்தது.. இன்னும் கேட்டால் ஸ்ருதியை இந்த அறையை வைத்து கொண்டு இருந்ததில் பாதி அளவுக்கு கூட அவன் அந்த அறையை சுத்தம் செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும்..
பின் தான் நேரத்தை கவனித்தது.. அவன் அப்போது தான் ஆபிசுக்கு நேரம் ஆனதை உணர்ந்தவன் குளித்து விட்டு ஐயன் செய்த உடை இருக்கும் கப்போர்டை பார்த்த போது தான் தெரிந்தது..
எந்த உடையுமே ஐயன் செய்து இல்லை… வாரத்திற்க்கு ஒரு முறை ஐயன் செய்பவன் வீடு தேடி வந்து விடுவான்.. இல்லை என்றால் ஸ்ருதி மறக்காது அவனை அழைத்து கொடுத்து விட்டு விடுவாள்.. அதே போல வந்த பின் அழகாக அடுக்கியும் வைத்து விடுவாள்…
இப்போது ஒன்றும் இல்லாது போக அவசரத்திற்க்கு அவனே ஒரு சட்டையை எடுத்து ஐயன் செய்ய நினைக்க.. ஐயன் பாக்ஸ் எங்கு என்று தெரியவில்லை..
தேடி தேடி பார்த்தவன் பின் கிடைக்காது அலுவலகத்திற்க்கு நேரம் ஆனதை உணர்ந்து ஐயன் செய்யாத சட்டையையே போட்டு கொண்டான்.
அவன் அலுவலகம் செல்ல ஆரம்பித்ததில் இருந்து முதல் முறை இன்று தான் ஐயன் செய்யாத உடையை உடுத்திக் கொண்டு அலுவலகம் கிளம்பி உள்ளான்…
தன் கசங்கி போன சட்டையை நீவி விட்ட வாரே கூடத்திற்க்கு வந்தவன் சாப்பிடும் இடத்தில் அமர்ந்தான்.. பக்கத்தில் அமர்ந்து இருந்த அவனின் அன்னை..
“என்ன டா தோசை சுட்டு கொண்டு வரவா…?” என்று கேட்டு கொண்டே… அமர்ந்திருந்தவர் எழுந்து கொள்ள தந்தையின் தட்டில் இருந்த தீஞ்ச தோசையை பார்த்த ஸ்ரீ காந்த்…
“இல்லேம்மா வேண்டாம்.. ஒரு காபி மட்டும் கொஞ்சம் ஸ்டாங்கா.. ஷூகர் கம்மியா போட்டு எடுத்துட்டு வாங்கம்மா. தலை வலி இன்னுமே போகல..” என்று சொல்ல.
அப்போது தான் அங்கு வந்த கோகுல்… “ இப்போ தானே ஆரம்பித்து இருக்கு…” என்று மெல்ல முனு முனுத்தான்…
தன் மன கண்ணில் ஸ்ருதிகா ஸ்ரீயின் அந்த தோற்றம் வந்து நிற்க… சாண்டில்யன் எதை பற்றியும் யோசிக்கவில்லை… நேரம் காலம் கூட பார்க்காது குணசேகரனுக்கு அழைத்து விட்டான்..
சாண்டில்யனுக்கு தான் நேரம் காலம் தெரியாது.. ஆனால் குணசேகரனுக்கும் அவன் மனைவிக்கும்… அப்போது தான் தம்பதியர்கள் நீண்ட நாட்கள் கழித்து தம்பதியர்கள் சுகித்து உறங்கிய சமயம் அது…
அனைத்தும் முடிந்து உறங்கும் சமயம்… குணசேகரன் தன் மனைவி கலாவதியிடம்… “ இது போலான சமயத்தில் தான் எனக்கு வயசு ஆகுறதே தெரியுது கலா… ரொம்ப டையடா இருக்கு…” என்று சொல்லி தான் தூங்கியது….
அதனால் குணசேகரனுக்கு தன் கை பேசியில் ஒசை எங்கோ கனவில் கேட்பது போல தோன்றியது.. கலாவதிக்கோ… அது கூட கேட்காது ஆழ்ந்த உறக்கத்திற்க்கு சென்று விட்டாள்…
தன் கை பேசி ஒசை அடங்கும் சமயம் தான் குணசேகரனுக்கு கனவில் கிடையாது நிஜத்தில் தான் கேட்கிறது என்று தன் கை பேசியை எடுத்து யார் அழைத்தது என்று கூட பாராது அழைப்பை ஏற்றான்… ஒரு வித பதட்டத்துடன் தான்..
பின் என்ன இந்த நேரத்தில் அழைப்பு வருவது.. சும்மா எல்லாம் பேச இருக்காதே… தன் கை பேசியை காதில் வைத்த பின் தான்….
சாண்டில்யன். “குணசேகரன்..” என்ற அழைப்பில் யார் என்று பார்த்தவனுக்கு அழைத்தது சாண்டில்யன் என்றதுமே இன்னுமே பதட்டம் கூடி போனது..
அதில் சாவகாகமாக படுத்து கொண்டு இருந்தவன் தான் இருக்கும் நிலையை மறந்து எழுந்து நின்று விட்டான்.. அதில் மனைவிக்கும் சேர்த்து போர்த்தி இருந்த போர்வை முற்றிலுமாக விலகி விட. கலாவதியின் தூக்கமும் கூடவே விலகி போனதில் …
கலாவதி. கோபத்துடன்.. “இப்போ தானே எனக்கு வயசு ஆகுது முடியல என்று சொன்னிங்க திரும்ப என்ன… பெண்ணை உங்க அம்மா அப்பா ரூமுக்கு அனுப்பும் போதே நான் உஷாரா ஆகி இருக்கனும்.” என்று கத்தியவளின் இந்த பேச்சு சாண்டில்யனுக்கும் கேட்டது..
அய்யோ என்றான நிலை தான் சாண்டில்யனுக்கு, அவனை விட குணசேகரனின் நிலை இன்னுமே மோசம் என்று தான் சொல்ல வேண்டும்.. அடியே என்ன என்னடி பேசி தொலச்சி இருக்கே.. என்று அதை நினைத்து பதட்டம் பட்டாலுமே, இந்த நேரத்தில் சாண்டில்யன் அழைத்ததில் என்ன விசயம் என்று தெரியாது பதட்டத்துடனே..
“சாண்டில்யா ஸ்ருதிகாவுக்கு ஏதாவது பிரச்சனையா..?” என்று தன் பதட்டம் குறையாது கேட்டதினால் அது அவனின் குரலிலும் எதிர் ஒலித்தது..
பாதி தூக்கத்தில் இருந்த கலாவதியின் காதில் தன் தங்கையின் பெயர் விழவும் அலறி அடித்து எழுந்து அமர்ந்தவள்… தன் கணவன் பேசியில் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து இன்னுமே பதறி போனவளாக..
“என்னங்க என்ன பிரச்சனை…?” என்று தன் மீது அங்கு இருக்கும் இரவு உடையை உடுத்திக் கொண்டே கேட்டாள். கலாவதியின் பதட்ட குரலும் கை பேசியில் அந்த பக்கத்தில் இருந்த சாண்டில்யனின் காதில் விழுந்தது..
அதில் கடவுளே என்று தலையில் அடித்து கொள்ளலாம் போல ஆனது… குணசேகரன். “ என்ன என்று கேட்டுட்டு இருக்கேன் தானே..?” குணசேகரன் மனைவியை கண்டிக்கும் குரல் கேட்க.
சாண்டில்யன் உடனே.. “ ண்ணா பிரச்சனை ஒன்னும் இல்லே.. ஸ்ருதி வந்தாங்க.. பேச வேண்டியது எல்லாம் பேசிட்டேன்.. நாளைக்கு சைன் போட வர சொல்லி இருக்கேன். அதே போல சேப்பா தான் வீட்டிற்க்கு போய் சேர்ந்துட்டாங்க…” என்று அவசர அவசரமாக அவர்களின் பயத்தை போக்கிய பின்பே.
சாண்டில்யன் அடுத்து… “சாரி ண்ணா சாரி ண்ணா. சாரி.. எனக்கு இருக்கும் குழப்பத்தில் நான் தான் டைம் பார்க்காம கால் பண்ணிட்டேன்…” என்று மன்னிப்பையே கேட்டது.
சாண்டில்யன் நினைத்தது போல தான் குணசேகரன் கலாவதியிடம்.. “ டைம் பார்க்காம பண்ணிட்டு இருக்காரு.. நீ தூங்கு “ என்று மனைவியிடம் சொல்லி கொண்டு இருந்தான் குணசேகரன்.. இதுவுமே சாண்டில்யனுக்கு கேட்டது.
ஆனால் குணசேகரன் மனைவியிடம் பேசியது மட்டும் தான் சாண்டில்யனுக்கு கேட்டது.. அவன் மனதில் நினைத்த சாண்டில்யனின் இந்த அண்ணா என்ற அழைப்பு.
அதோடு சாண்டில்யனின் இத்தனை நீண்ட பேச்சு.. குணசேகரனுக்கு புதியது.. சாண்டில்யனை அவனின் டீன் ஏஜ்ஜில் இருந்தே குணசேகரன் பார்த்து இருக்கிறான். கவனித்தும் இருக்கிறான்..
சாண்டில்யனுக்கு தான் குணசேகரனை அவ்வளவாக தெரியாது… ஆனால் குணசேகரனுக்கு சாண்டில்யனின் அனைத்து விசயங்களும் தெரியும்.. சோமசுந்தரத்தின் மூலம்..
அதுவும் தன்னை அண்ணா என்று அழைத்து பேசியது… யோசிக்கும் போதே சாண்டில்யனின் கேட்ட.
“ஸ்ருதிகா ஸ்ரீயின் ஜாதகம் எங்க வசும்மா கைக்கு உங்க மூலம் தான் வந்ததா ண்ணா…?” என்று கேட்டு விட்டான்…
குணசேகரனுக்கு இதற்க்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.. தன் மனைவியிடம் இதை பற்றி அனைத்தும் பேசி விட்டான்.. மனைவியிடம் பேசும் போது இலகுவாக தான் இருந்தது… ஆனால் .. சாண்டில்யனிடம்… என்று குணசேகரன் நினைக்கும் போதே. சாண்டில்யனின் அந்த “ “ “ ப்ளீஸ் ண்ணா சொல்லுங்க…” என்று சொன்னவன் தன் வீட்டில் வாசுவும் சுமதி மாமியாரும் செய்த அனைத்தும் சொல்லி முடித்தவன்.
“இப்போவாவது சொல்றிங்கலா..?” என்று சாண்டில்யன் கேட்ட போது… குணசேகரன் சாண்டில்யன் சொன்ன விசயத்தை அதிர்ந்து போய் விட்டான்….
குணசேகரனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. சாண்டில்யனின் அம்மா அப்பா இறப்புக்கு இவனே இங்கு இருந்து சென்று இருந்தான்…
சாண்டில்யனிடம் பேச நினைத்தான் தான்.. ஆனால் அந்த அளவுக்கு பழக்கம் இல்லாததினால் பேசாது வந்து விட்டான்.. தன் அம்மா அப்பாவை பார்க்க செல்லும் போது எல்லாம் சாண்டில்யனை பார்த்து விட்டு வரலாம் என்று எத்தனையோ முறை நினைத்து இருக்கிறான்…
பின் அவன் சென்னையில் அவனின் வசும்மா வீட்டில் தான் இருக்கிறான் என்று தெரிந்ததில் மனதில் ஒரு நிம்மதி… காரணம் சோமசுந்தரத்தின் பெரும்பாலான பேச்சு. இதுவாக தான் இருக்கும்..
“அவன் அம்மா இப்போவே மருமகளை பார்த்து விட ஆசை குணா.. பேரன் பிள்ளைகளை கொஞ்ச ஆசை…” இப்படியான பேச்சுக்கள் தான் இருக்கும்.. இப்படி எதையும் பார்க்காது சென்று விட்டார்களே… தன்னிடமே அத்தனை பேசுபவர்கள் சாண்டில்யனிடம் இதை பற்றி எத்தனை பேசி இருந்து இருப்பார்கள்.. என்று நினைத்து இருக்கிறான்..
அதனால் தான் சாண்டில்யனின் முப்பதாவது வயதில் அவனுக்கு பெண் பார்க்கிறார்கள் என்று தூரத்து உறவு முறையில் கேள்வி பட்டது.. ( இருவருமே ஒரே இனத்தவர்கள் தான்…)
குணசேகரன் ஒரு உறவு முறை மூலம் ஸ்ருதிகா ஸ்ரீ ஜாதகத்தை கொடுத்தது… அதுவும் கொடுக்கும் முன்பே சாண்டில்யனின் பிறந்த நாள் நேரத்தில் இருந்து அதையும் பெரும் கதையாக சோமசுந்தரம் சொன்னதினால் குணசேகரனுக்கும் தெரிய.. . பொருத்தம் பார்த்து விட்டு பொருந்தி இருக்கிறது என்று தெரிந்த பின் தான் கொடுத்ததே.
தன் மாமனாரிடம் சாண்டில்யனை பற்றி பேசி… ஆனால் கொடுத்த ஒரே வாரத்தில் பொருத்தம் இல்லை என்ற செய்தி வந்ததில், நாம் பார்த்து விட்டு பொருந்து இருக்கிறது என்று சொன்ன பின் தானே கொடுத்ததே. ஒரு சமயம் பொருளாதாரத்தில் அவர்களை விட கீழே இருக்கிறார்கள் என்று ஏதாவது ஒன்று சொல்ல வேண்டும் என்று இப்படி சொல்லி விட்டார்கள் போல என்று நினைத்து விட்டான்.. ஆனால் அதன் பின் இத்தனை சூழ்ச்சி இருக்கும் என்று குணசேகரன் நினைத்தும் பார்க்கவில்லை..
.அதுவும் சாண்டில்யனின் இருபதாவது வயதிலேயே அவன் திருமணத்தை பற்றி பேசியதை கேட்ட கொண்டு இருந்தவனுக்கு இந்த துரோகம்.. சாண்டில்யன் சொன்னதும் இவை அனைத்தும் நினைத்து பார்த்து சிலையாக நின்று விட.
சாண்டில்யனின். “ ண்ணா ண்ணா..” என்ற அழைப்பில் இப்போது குணசேகரன் அவனை அடுத்து கேட்க வைக்காது அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தான்..
“உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன் சாண்டில்யா.. உன் அம்மாவும் அப்பாவும் என்னுடைய எங்கேஜ்மெண்ட்க்கு வந்து இருந்தாங்க…” என்று குணசேகரன் சொன்னதுமே சாண்டில்யன்..
“ம் தெரியும் ண்ணா. என் அம்மாவும் அப்பாவும் ஒன்னா சேர்ந்து அட்டெண் பண்ண பங்கஷனும் அது தான்…” என்று சொன்னான்…
“ம் என்றவன் பின்.. அன்னைக்கு உன் அம்மா ரொம்ப நேரம் ஸ்ருதிகா கிட்ட பேசிட்டு இருந்தாங்க.”
சாண்டில்யனுக்கு தான் இது தெரியுமே… அமைதியாக குணசேகரன் சொன்னதை கேட்டு கொண்டான்.
அடுத்து சொன்ன செய்தி சண்டில்யனுக்கே புதிய விசயம்.. “ போகும் போது ஸ்ருதியை பத்தி என் கிட்ட அப்படி ஒரு பேச்சு சாண்டில்யா.. ரொம்ப துரு துரு என்று இருக்கா… எனக்கு பெண் குழந்தைங்க என்றால் ரொம்ப பிடிக்கும் குணா… ரொம்ப சின்ன பெண்ணா இருக்கா… இப்போ தான் காலேஜ் பஸ்ட் இயர் என்று சொன்னா.. படிக்கிற பெண்ணை பெண் கேட்பது நல்லா இருக்காது குணா… இல்லேன்னா இப்போவே உன் மாமனார் கிட்ட பெண் கேட்டு இருந்து இருப்பேன்…” என்று குணசேகரன் சொல்லி கொண்டு போக சாண்டில்யனுக்கு என்ன என்று சொல்ல தெரியாத ஒரு நிலை..
பின் அடுத்து குணசேகரனின் பேச்சில் கவனத்தை செலுத்த. “ ஆனா உன் மச்சினிச்சி படிச்சி முடிக்கும் வரை என்னால காத்துட்டு இருக்க முடியாது குணா… அடுத்த வாரம் சாண்டில்யாவோட பிறந்த நாள் வருது.. பெண்ணை பார்க்க ஆரம்பித்து விடலாம் என்று நினைக்கிறேன்.. ஆனா உன் மச்சினிச்சியை எனக்கு பிடிச்சி இருக்கு குணா யாருக்கு கொடுத்து வைத்து இருக்கோ…” என்று சொன்னாங்க சாண்டில்யா..
அதனால தான் உன் முப்பதாவது வயதில் உனக்கு பெண் தேடுறாங்க என்று தெரிந்ததும் ஸ்ருதி ஜாதகத்தை உனக்கு பொருத்தம் பார்த்து கொடுத்தது.. நீங்க பொருந்தல எனும் போது….” குணசேகரன் தான் நினைத்ததை சொல்ல வில்லை..
ஆனால் சாண்டில்யன் கேட்டான்.. “என்னை தெரியும் தானே ண்ணா. என் கிட்ட வந்து சொல்லி இருந்து இருக்கலாமே….” அவன் பேச்சில் அத்தனை ஆதங்கம் ஸ்ருதிகா ஸ்ரீ தான் முதலில் தனக்கு பார்த்த பெண் என்று தெரிந்ததிலே சாண்டில்யனுக்கு சொல்ல முடியாத வேதனை என்பதை விட.. ஒரு பொக்கிஷத்தை இழந்த உணர்வு என்று சொன்னால் சரியாக இருக்கும்…
அப்படி இருக்க தன் அம்மாவுக்கு ஸ்ருதியை இத்தனை பிடித்தம் என்று தெரிந்ததில் வாய் அடைத்து போக.
குணசேகரன் என்ன நினைத்தானோ… “என்ன செய்யிறது சாண்டில்யா யாருக்கு யார் என்று இருக்கு தானே.. அதோட ஒருத்தன் பொண்ட்டாட்டியை இன்னொருத்தன் கட்ட முடியாது என்று சொல்லுவாங்க…” என்று குணசேகரன் சொன்ன நொடி…
சாண்டில்யன்… “ ஆமாம் ண்ணா ஆமாம்.. ஒருத்தனோட பொண்டாட்டி இன்னொருத்தனோட கூட வாழ முடியாது தான்…” என்று சொல்லி விட்டு கை பேசியை சாண்டில்யன் வைத்து விட்டான்.
இரண்டு பேருமே வக்கீல்கள்.. இதில் இரண்டு பேருக்குமே வக்கில் தொழிலில் வாய் ஜாலத்தை கற்பித்தது ஒருவரே எனும் போது சாண்டில்யன் என்ன அர்த்தத்தில் சொன்னான் என்பது குணசேகரனுக்கு புரிந்து விட்டது.. புரிந்த விசயம் அவனுக்கு மகிழ்ச்சி தான். ஆனால் ஸ்ருதி இப்போது தான் ஒரு உறவில் இருந்து வெளி வர பார்க்கிறாள்.. அதுவும் ஒரு பெரிய துரோகத்தை சந்தித்து விட்டு.. அதோடு இரு பெண் குழந்தைக்கும் அன்னை.. அனைத்தும் யோசித்து கொண்டே தான் குணசேகரன் தூங்கியது…
ஸ்ரீ காந்த் கோகுல் பேச்சில் கோபம் வந்தாலும் ஒன்றும் பேச முடியவில்லை.. அதோடு ஏற்கனவே பாவனா விசயத்தில் மூளை குழம்பி போய் வந்தவனுக்கு கொஞ்சம் படுத்தால் தேவலாம் போல இருக்க.. தன் அறைக்கு வந்தவனுக்கு இப்போது மூளை குழப்பத்தோடு தலை வலியும் வந்து விடும் போல் ஆகி விட்டது..
அப்படி இருந்தது அவன் அறை… தலையணை ஒரு பக்கமும்.. கட்டிலில் இருக்க வேண்டிய போர்வை ஒரு மூலைக்கும்.. தரை எங்கும் பொருட்கள் சிதறியும்… பார்க்க பார்க்க அய்யோ என்றான நிலை..
இந்த அறையில் இரு சின்ன குழந்தைகள் இருந்த போது கூட தன் மனைவி அத்தனை சுத்தமாக இந்த அறையை வைத்து இருந்தது அவனின் நியாபகத்திற்க்கு வந்தது..
ஸ்ரீ காந்துக்கு எப்போதும் எதிலும் சுத்தமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும்… என்ன செய்வது இன்று அந்த குப்பையில் நடுவில் தான் ஸ்ரீ காந்த் படுத்து உறங்கியது..
இன்று தொடக்கம் தான் இது இன்னுமே உனக்கு இருக்கிறது என்று தெரியாது தான் நாளை இப்படி தான் என்பதை இன்றே பழக ஆரம்பித்து இருந்தான்.
ஸ்ரீ காந்த் மறு நாள் எழும் போதே இரவு தலை வலியில் தொடர்ச்சியில் தான் எழுந்தது.. சரி கொஞ்சம் தன் அறையை சுத்தம் செய்தால் இந்த தலை வலி குறையும் போல. இதை பார்க்க பார்க்க தான் தனக்கு வெறுப்பாக இருக்கிறது என்று சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.. அவன் சுத்தம் செய்ய முடிக்கவே இரண்டு மணி நேரம் அவனுக்கு பிடித்தது.. இன்னும் கேட்டால் ஸ்ருதியை இந்த அறையை வைத்து கொண்டு இருந்ததில் பாதி அளவுக்கு கூட அவன் அந்த அறையை சுத்தம் செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும்..
பின் தான் நேரத்தை கவனித்தது.. அவன் அப்போது தான் ஆபிசுக்கு நேரம் ஆனதை உணர்ந்தவன் குளித்து விட்டு ஐயன் செய்த உடை இருக்கும் கப்போர்டை பார்த்த போது தான் தெரிந்தது..
எந்த உடையுமே ஐயன் செய்து இல்லை… வாரத்திற்க்கு ஒரு முறை ஐயன் செய்பவன் வீடு தேடி வந்து விடுவான்.. இல்லை என்றால் ஸ்ருதி மறக்காது அவனை அழைத்து கொடுத்து விட்டு விடுவாள்.. அதே போல வந்த பின் அழகாக அடுக்கியும் வைத்து விடுவாள்…
இப்போது ஒன்றும் இல்லாது போக அவசரத்திற்க்கு அவனே ஒரு சட்டையை எடுத்து ஐயன் செய்ய நினைக்க.. ஐயன் பாக்ஸ் எங்கு என்று தெரியவில்லை..
தேடி தேடி பார்த்தவன் பின் கிடைக்காது அலுவலகத்திற்க்கு நேரம் ஆனதை உணர்ந்து ஐயன் செய்யாத சட்டையையே போட்டு கொண்டான்.
அவன் அலுவலகம் செல்ல ஆரம்பித்ததில் இருந்து முதல் முறை இன்று தான் ஐயன் செய்யாத உடையை உடுத்திக் கொண்டு அலுவலகம் கிளம்பி உள்ளான்…
தன் கசங்கி போன சட்டையை நீவி விட்ட வாரே கூடத்திற்க்கு வந்தவன் சாப்பிடும் இடத்தில் அமர்ந்தான்.. பக்கத்தில் அமர்ந்து இருந்த அவனின் அன்னை..
“என்ன டா தோசை சுட்டு கொண்டு வரவா…?” என்று கேட்டு கொண்டே… அமர்ந்திருந்தவர் எழுந்து கொள்ள தந்தையின் தட்டில் இருந்த தீஞ்ச தோசையை பார்த்த ஸ்ரீ காந்த்…
“இல்லேம்மா வேண்டாம்.. ஒரு காபி மட்டும் கொஞ்சம் ஸ்டாங்கா.. ஷூகர் கம்மியா போட்டு எடுத்துட்டு வாங்கம்மா. தலை வலி இன்னுமே போகல..” என்று சொல்ல.
அப்போது தான் அங்கு வந்த கோகுல்… “ இப்போ தானே ஆரம்பித்து இருக்கு…” என்று மெல்ல முனு முனுத்தான்…