Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட....12...2

  • Thread Author
அத்தியாயம்…12…2

கோகுல் முனு முனுத்த வார்த்தை ஸ்ரீ காந்த் காதில் நன்றாகவே விழுந்தது… இருந்தும் சண்டை பிடிக்கும் நிலையில் அவனின் நிலை இல்லை… காரணம் அவனின் கை பேசிக்கு அவனின் ப்யூட்டியிடம் இருந்து தொடர்ந்தார் போல… மெசஜ் வந்து விழுந்த வண்ணம் இருந்தது..

“என்னால முடியல ஸ்ரீ”’

“ எழுந்து சமைக்க முடியல…”

“சாப்பிட்டாலும் வாந்தி வாந்தியா வருது…”

“நீங்க வீட்டுக்கு வந்து போங்கலேன்..”

“ இன்னைக்கு நீங்க லீவ் போட்டு விடுங்க” ’ என்பது போலான மெசஜை பார்த்து தலையில் கை வைத்து கொண்டான்…

ஸ்ரீ காந்தின் எதிர் இருக்கையில் கோகுல் அமர்ந்து கொள்ள அனிதா தோசையை சுட்டு சுட்டு போட்ட வண்ணம் இருக்க.. தன் பக்கத்தில் இருக்கும் தன் குழந்தையிடம் ஏதோ பேசிக் கொண்டே தான் சாப்பிட்டு கொண்டே இடை இடைடே தன் தம்பியின் முகபாவனையையும் பார்த்த வண்ணம் இருந்தான்…

ஸ்ரீ காந்த்தின் கை பேசிக்கு மெசஜ் வந்த ஒசையும்.. அதை பார்த்து தம்பிக்காரன் முகத்தில் தெரியும் அந்த டென்ஷனையும் பார்த்தவனுக்கு புரிந்து விட்டது… மெசஜ் யாரிடம் இருந்து வருகிறது என்று…

“குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பது ஏது….?” என்று ரத்தக்கண்ணீர் படத்தில் வரும் பாட்டை வேறு பாட..

சரியாக அதே சமயம் அவர்களின் அன்னை பவானி ஸ்ரீ காந்த் கேட்ட காபியை தன் சின்ன மகன் முன் கொண்டு வைத்து வைத்தவள்..

தன் கழுத்தில் வந்த வியர்வையை தன் முந்தியை கொண்டு துடைத்து கொண்டே ஸ்ரீ காந்த் பக்கத்தில் அமர்ந்தவர் நோகும் தன் காலை பிடித்து கொண்டே.

“ஏன்டா சும்மா இருக்க மாட்டியா….?” என்று தன் பெரிய மகனை அதட்டினார்…

“நான் சும்மா இருப்பேன்.. ஆனா மத்தவங்க சும்மா இருக்கனுமே. தோ உங்க சின்ன மகனுக்கு நீங்க காபி போட்டு கொடுத்து அவன் குடித்தாலுமே சரியாகாது . ஏதோ ஏழரை அவன் போனுக்கு வந்து இருக்கு.” என்றதும்..

பவானி பதட்டத்துடன்… “ என்ன டா ஸ்ருதிகா ஏதாவது திட்டுவது போல போட்டு இருக்காளா என்ன…” என்று கேட்க..

சின்ன மகனோ.. அவள் என்னை அழைக்கவில்லையே என்று நினைத்து அவன் அன்னையை பார்த்தான் என்றால், அவரின் பெரிய மகன்…

“அந்த பெண் இனி சட்டை செய்யாது.. பாருங்க…” என்று சொல்லி விட்டான்..

“என்ன டா நீ இப்படி சொல்ற…? நம்ம பேத்திங்க அவள் கிட்ட இருக்குடா. என்ன நீ இப்படி பொறுப்பு இல்லாம பேசுற…?” என்று சொல்லி பாவனி தன் பெரிய மகனை திட்டினார்…

“நான் பொறுப்பா தான் இருக்கேன் ம்மா.. அதனால தான் நான் என் பொண்டாட்டியோட உடை பார்க்கல.. அவளின் சூழல் பார்க்கிறேன்… என் புத்தியை மேய விடாது.. என் பொண்ணுக்கு என்ன செய்யனுமோ அதை செய்துட்டு இருக்கேன்…” என்று சொன்னான்..

கோகுல் ஸ்ருதிகா ஸ்ரீயை நேரில் பார்த்து பேசவில்லை என்றாலும்.. என்ன செய்கிறாள் என்று விசாரித்து தெரிந்து கொண்டான்..

அதுவும் அவள் தன் தாய் வீட்டில் கூட இல்லை என்று தெரிந்ததில் குழந்தைகளை வைத்து எப்படி சமாளித்து கொள்வாளோ என்று தான் நினைத்தது… ஆனால் கூட ஸ்ருதியின் அம்மாவும் இருக்கிறார்கள் என்று தெரிந்ததில் கொஞ்சம் நிம்மதி….

அடுத்து ஸ்ருதி நேற்று சாண்டில்யனை பார்த்து விட்டு வந்ததுமே தெரியும்.. சாண்டில்யன் ஒரு திறமையான வக்கீல் என்பதும் கேள்வி பட்டு இருக்கிறான். கூடுதல் தகவலாக குணசேகரனுக்கும் தெரிந்தவன் என்று தெரிந்ததில் கோகுலுக்கு கொஞ்சம் நிம்மதி தான்..

என்ன செய்வது எல்லாம் சரியாக அமைந்தும் அதை பாதுகாத்து வைத்து கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது.. அவனுக்கு தெரிந்து கண்டிப்பாக நாளையே விவாகரத்து கேட்டு நோட்டீஸ் வந்து விடும் என்பது அவனுக்கு தெரிந்து விட்டது…

அனைத்தும் நினைத்து தன் தலையில் தானே மண்ணை வாறி போட்டு கொண்டு விட்டானே என்று தான் நினைத்தான்.

பின் அலுவலகத்திற்க்கு கிளம்பி விட்டான்.. கிளம்பும் போது மறக்காது தன் மனைவி அனிதாவிடம்..

“நானுமே உன் ட்ரஸ் நல்லா இல்ல. வீட்டில் வந்தால் மகிழ்ச்சி இல்ல என்று சொல்லிட்டு இருந்து இருந்தா. அன்னைக்கு ஸ்ருதி கிட்ட இனி தான் தப்பு செய்ய மாட்டேன் என்று சொல்லிட்டாருலே என்று உன் மச்சினருக்கு சப்போர்ட் பேசி இருந்து இருக்க மாட்ட…” என்ற கணவனின் அந்த பேச்சில் அனிதா தன் தவறை உணர்ந்தாள்..

“சாரிங்க..” என்று சொன்னவளிடம் ஒரு தலையசைப்பு மட்டும் கொடுத்தவன் தன் அன்னையிடம் விடை பெற வேண்டி தன் அன்னையை பார்த்தான்..

அவரோ முகத்தில் கவலை அப்பி கிடக்க… இதில் கால் வலி வேறு போல… தன் ஒரு கை கொண்டு தன் காலையே அமுக்கி கொண்டு இருப்பதை பார்த்தவன்..

வீட்டோடு தங்கி இருப்பது போல ஒரு வேலைக்காரியை பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டே அலுவலகம் கிளம்பியவன்.. மனதில் தம்பியை கொண்டு.

“கொஞ்சம் வயசான பெண்மணியை தான் பார்க்க வேண்டும் என்றும் நினைத்து கொண்டான்…
கோகுல் கிளம்பி சென்ற பின் தான் ஸ்ரீ காந்த் தன் முன் இருந்த காபி க்ளாஸை எடுத்தது… அதில் கை வைத்ததுமே பிச்சு பிச்சு என்று இருக்க..
“ம்மா க்ளாஸை கழுவினிங்கலாம்மா…?” என்று கேட்டான்.. முகத்தை ஒரு மாதிரியாக வைத்து கொண்டு…
“வேலைக்காரி கழுவி வெச்சதில் இருந்து தான் டா ஊத்திட்டு வந்து கொடுத்தேன்….” என்று சொன்ன போது ஸ்ரீ காந்த்..
“ஸ்ருதிகா கொடுக்கும் போது இப்படி இருக்காதேம்மா பாத்திரம் எல்லாம் பள பளன்னு இருக்குமே….” என்று சொன்னது தான் தாமதம்..
இந்த வயதான காலத்தில் இத்தனை வேலைகள் செய்ய உள்ளதே என்ற கோபத்தில் இருந்த பவானி.. அதுவும் கூட இந்த கால் வலி வேறு.. இதில் துலக்கலையா.? துடைக்கலையான்னு..? கேள்வி வேறா. இதுல ஸ்ருதி இருக்கும் போது வேறா..
“ அது தான் டா ஸ்ரீ… இது எல்லாம் சுத்தமா பள பள என்று வைத்து கொண்டதினால் தான் அவள் தன்னை பள பள என்று அலங்கரிக்க நேரம் இல்லாது போய் விட்டது..” என்று சொல்லி விட்டார்…
பின் என்ன… பவானி சமையல் கட்டுக்கு போயே ஐந்து ஆண்டுகள் ஆகிறது… அனைத்துமே ஸ்ருதி பார்த்து கொள்வாள்.. இவன் ஊர் மேய… அடுத்து என்ன நினைத்து இருந்து இருப்பாரோ. மகனை முறைத்தவர் சென்று விட்டார்…
காபி க்ளாஸ் தான் அப்படி என்றால், அதில் இருந்த காபி.. இதை குடித்தால் வாந்தி வருவது நிச்சயம் என்று நினைத்து குடிக்காது வைத்து விட்டு அவனுமே சென்று விட்டான்.. அது தான் மெசஜ் மேல மெசஜ் வருதே…
இங்கு சாண்டில்யன் காலையில் நீதிமன்றத்திற்க்கு செல்லும் நேரத்தை விடவே விரைந்து கிளம்பி விட்டான்.. விரைந்து கிளம்பினாலும்.. என்றும் இல்லாது தன்னை பார்த்து பார்த்து ட்ரஸ் செய்து கொண்டு தான்.. அந்த வெள்ளை பேன்ட் வெள்ளை சட்டை இதில் என்ன பார்த்து பார்த்து என்று அவன் மனது சொன்னாலும்.. முகத்திற்க்கு கூடுதலாக கவனத்தை செலுத்தினான்..

முகத்தில் ஏதாவது சுருக்கம் இருக்கிறதா என்று… பார்த்தான். நல்ல வேலை இல்லை. அதே போல தலையில் வெள்ளை முடி இருக்கிறதா… அதுவும் இல்லவே இல்ல.. மற்றவர்கள் சொல்வது போல உனக்கு வயசு தெரியவே இல்ல டா.. என்று கண்ணாடியில் தெரியும் தன் உருவத்திடம் சொல்லி கொண்டவன்..

பின் அவனே… நீ எப்படி இருந்தாலும் ஸ்ருதி உன்னை பார்க்க போறது இல்ல.. முதல்ல அவள் பிரச்சனையில் இருந்து வெளியில் வந்தா தான் மத்தது எல்லாம்..

இப்போது ஸ்ருதிகா ஸ்ரீ தனக்கு விவாகரத்து எந்த பிரச்சனையும் இல்லாது சீக்கிரம் கிடைக்க வேண்டும் என்று அவள் நினைப்பதை விட சாண்டில்யன் நினைத்தான்…

அதற்க்கு உண்டான வேலைகளை நடுயிரவு குணசேகரனிடம் பேசிய உடனே ஆரம்பித்து விட்டான்… விவாகரத்து எளிதில் வாங்கி விடலாம்… அதே போல் குழந்தைகளும் தாயுடன் தான் இருக்க வேண்டும் என்று தான் சட்டம் சொல்கிறது..

ஆனால் தந்தையுமே பார்க்க அனுமதிக்க வேண்டும் என்ற ஒன்று உள்ளதே… அதை இல்லாது எப்படி இதை கொண்டு செல்லலாம் என்பது தான் இப்போது அவனின் யோசனையே..

இதே யோசனையுடன் சாப்பிட்டும் இடத்தில் அமர்ந்த போது மீண்டுமே வாசு தேவ் சாண்டில்யன் எதிரில் வந்து அமர்ந்தான்..

கடவுளே. இந்த கொசு தொல்ல வேறு… முழுசா நசுக்கி விட்டு விடலாம் என்று பார்த்தா, நம்ம வசும்மா மகனா போயிட்டான் என்று நினைக்கும் போதே.

வாசு தேவ்…. “ எப்போ நீ வீட்டை விட்டு போக போற. நான் என் பொண்டாட்டியையும் குழந்தையையும் இங்கு கூட்டிட்டு வரனும்…” என்று பேச்சை ஆரம்பிக்க.

சாண்டில்யன் அதற்க்குள் சாப்பிட்டு முடித்து விட்டான்.. இன்று சீக்கிரம் நீதி மன்றம் செல வேண்டும்.. நேற்று ஸ்ருதிகா ஸ்ரீயிடம் சொன்னதோடு இன்னும் ஒன்று இரண்டு பாயிண்டை அவன் சேர்க்க வேண்டும்.. அதனால் அவசரமாக சாப்பிட்டு முடித்து அவன் கிளம்பும் போது வழி மறித்து மீண்டும்..

“இந்த வீட்டை விட்டு எப்போ போற..?” என்று கேட்ட வாசுதேவ்விடம்..

“அது தான் நான் கேட்கிறேன்.. நீ எப்போ வீட்டை காலி செய்து தர போற…?” என்று கேட்டான்..

“நான் ஏன் போகனும்… நீ தான் இடையில் இந்த வீட்டை விட்டு போனவன்.. நான் பிறந்ததில் இருந்து இந்த வீட்டில் தான் இருக்கேன்…” என்று மூச்சை பிடித்து கொண்டு பேசியவனிடம்…

“சட்டம் என்ன சொல்லுது.. அது சொல்லு தம்பி…” என்று விட்டான்…

“அதே சட்டம் தான் வாரிசு இல்லேன்னா…” என்று அடுத்து வாசு தேவ் என்ன பேசி இருந்து இருப்பானோ…. சாண்டில்யன் இடை தடுத்து.

“இல்லேன்னா தானே..” என்று சொன்னவன் வாசு தேவ்வின் அந்த சின்ன தொப்பையில் ஒரு சின்ன குத்து விட்டு.

“வழி விடு…” என்று சொல்லி சென்றவனின் முதுகையே பார்த்து கொண்டு இருந்த வாசு தேவ் முதலிம் நம் மனைவி குழந்தையை அழைத்து கொண்டு வருவோம்.. பின் தங்கைகளை வைத்து இவனிடம் பேசலாம் என்று நினைத்தான். சாண்டில்யன் முன் போல் தூரம் விலகி நிற்பான் என்று சாண்டில்யனை பற்றி மிக எளிதா மதிப்பீடு செய்து விட்டான் வாசுதேவ்..

முன் தன் வாழ்க்கையில் விளையாடியதிலேயே சாண்டில்யனுக்கு இதற்க்கு காரணமானவர்கள் மீது அத்தனை கோபத்தில் இருந்தவன்.. இதனால் தன்னோடு ஸ்ருதிகா ஸ்ரீயுமே பாதிக்கப்பட்டு இருக்கிறாள்.. அதுவும் தனக்கும் தன் அன்னை தந்தை என்று அனைவருக்கும் அத்தனை பிடித்த பெண்ணை இழக்க இவர்களே காரணம் என்றதில் சும்மா விட்டு விடுவானா என்ன…?

சாண்டில்யன் தன் கேபின் வந்த போது அவனுக்கும் முன்பே அவனின் ஜூனியர் வேதநாயகம் வந்து இருந்தான். சாண்டில்யன் வர சொல்லி இருந்தான்..

சாண்டில்யன் வந்ததுமே வேதநாயகம்… “ என்ன சார் ஏதாவது பிரச்சனையா..?” என்று கேட்டான்.

பின் என்ன பெரிய பெரிய கிரிமனல் கேஸ்ஸை எல்லாம் வாதாடி ஜெயித்தும் இருக்கிறார்கள்… அப்படி இருக்க ஒரு விவாகரத்து கேஸ்… இது போல கணவன் துரோகம் என்ற இந்த காரணம் கொண்டே எத்தனையோ விவாகரத்து கேஸ் எடுத்து இருக்கிறார்கள்..

நடுயிரவு அழைத்து ஸ்ரீ காந்த் பற்றி மட்டும் அல்லாது அந்த பெண்ணை பற்றியும் முழு விவரமும் சேகரி… என்று சொன்னால், அதுவும் உடனடியாக…

ஒரு சில கிரிமினல் கேச் எடுத்து நடத்தும் போது எதிர்தரப்பு பற்றி அறிய… ஒரு சிலரை நியமித்து இருக்கிறார்கள். சில சமயம் யாருக்காக கேஸ் எடுத்து நடத்துகிறோமோ… அவர்கள் சொல்வது உண்மை தானே என்று அறிய கூட அவர்களின் உதவியை நாடுவார்கள் தான்.. அதற்க்கு கூட நடுயிரவில் எல்லாம் விசாரிக்க சொன்னது இல்லை…

அப்படி இருக்க இது ஒரு சாதாரண விவாகரத்து கேஸ். இதற்க்கு ஏன் இப்படி இவர் மெனக்கெடுகிறார்… அதுவும் கிரிமினல் கேஸ்ஸை பின் தொடர்வது போல இவர்களை பின் தொடர சொல்கிறார்.. என்று நினைத்தாலும் சரி சரி என்ற வேதநாயகம் சாண்டில்யன் சொன்னது போல அவர்களுக்கு அழைத்து சொல்லி விட்டு இன்று சீக்கிரம் வர சொன்னதற்க்கு ஏற்ப இதோ வந்தும் நின்று விட்டான்..

நேற்று ஸ்ருதிகா ஸ்ரீயிடம் சொன்னது போல டைப் செய்து அதை பிரிண்டவுட்டும் எடுத்தும் தயாராக இருந்ததை தூரம் எடுத்து வைத்து விட்டு அவனே கணினியின் முன் அமர்ந்து அதனுடம் இரண்டு மூன்று பாயிண்டை சேர்த்தவன்..

“ ம் இதை பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வா…” என்றதை அப்படியே செய்து முடித்தான் வேதநாயகம்..

அதற்க்குள் ஸ்ரீ காந்த் பற்றியும் பாவனா பற்றியும் அவர்களை பின் தொடர சொன்ன நபர்கள் இப்போது வரை கண்டுப்பிடித்த விசயங்களை மெயிலுக்கு அனுப்பி இருந்தனர்…

இன்று மாலைக்குள் அனைத்து விவரங்களையும் கொடுத்து விடுவோம் என்ற தகவலோடு… அவசரமாக தன் மெயிலுக்கு வந்த விசயத்தை படித்தவனுக்கு தான் இருக்கும் இடம் மறந்து கத்த வேண்டும் போல் இருந்தது..

ஆனால் கத்தாதே போதே. அவன் முகம் அவனின் சந்தோஷத்தை காட்டி கொடுத்து விட்டது போல..

அதனால் வேதநாயகம் அதில் அப்படி என்ன தான் இருக்கு என்று எக்கி எக்கி பார்க்க தன் முன் இருந்த கணினியை வேதநாயகம் பார்க்க ஏதுவாக வைத்து விட்டு இப்போ படி என்பது போல சைகை செய்தான்..

ஆனால் வேதநாயகம் இப்போது படிக்காது சாண்டில்யன் முகத்தை தான் பார்த்தான்.. கோபமாக சொல்கிறாரோ என்று..

ஆனால் சாண்டில்யனோ… “ படி வேதா…” என்றதும் தான் படித்தது.

படித்தவனுக்கு இதில் என்ன இருக்கு பாவனா கர்பமா இருக்கு என்று சொல்லி இருக்காங்க.. விவாகரத்துக்கு உண்டான காரணமே ஸ்ரீ காந்த் அந்த பெண்ணோடு தொடர்பில் இருந்தது தானே… அப்படி இருந்தா அது தொடர்பா இதுவும் வரும் தானே… என்று நினைத்தவன் ஒன்றும் சொல்லாது போக.

சாண்டில்யனே… “ நீ என்ன நினைக்கிற என்று எனக்கு தெரியுது வேதா… நேத்து ஸ்ருதிகா சொன்னதில் இருந்து எனக்கு தெரிந்த விசயம்… ஸ்ரீ காந்த் விவாகரத்துக்கு அவ்வளவு சீக்கிரம் சம்மதிக்க மாட்டான் என்று தான். ஆனா இனி சம்மதித்து தான் ஆக வேண்டும்.. அந்த பெண் பாவனா சும்மா விட மாட்டா. ஸ்ருதி சொன்னது தெரியாம பாவனா போனை அணைக்கவில்லை என்று.. ஆனால் என் அனுமானம் அவங்க உறவு ஸ்ருதிக்கு தெரியனும் என்று தான் வேண்டும் என்று அணைக்காது விட்டு இருக்கா… ஸ்ரீ காந்த் வைரத்தை தவர விட்டுட்டு கூழகல்லை கையில் எடுக்க போறான்…” என்று ஆழ்ந்து சொன்னவனின் பேச்சை வேதநாயகம். நம்ப முடியாது தான் பார்த்திருந்தான்..

சாண்டில்யன் பொதுவாக கேஸ் எடுத்தால், அது தன் தொழில் அவ்வளவு தான்.. தன் கட்சிக்காரருக்கு உண்மையாக வாதாடுவான் அவ்வளவு தான்… ஆனால் இது போல எமோஷனல் .. இது அவன் புதியதாக பார்க்கிறான்..

இனி அவன் புதியது புதியதாக தான் பார்க்க போகிறான் என்று தெரியவில்லை… அதன் செயலாக சாண்டில்யன் கை பேசிக்கு ஒரு மெசஜ் வர.

சாண்டில்யன் வேதநாயகத்திடம்… “ ஸ்ருதி நம் சங்கர் ஆட்டோவில் வந்து இருக்காங்க போய் கூட்டிட்டு வா..” என்று சொல்ல.

“நம்ம சங்கரா ஸ்ருதிக்கு சங்கர தெரியுமா..?” என்று கேட்ட வேதநாயகத்திற்க்கு பதில் அளிக்காது…

“ஸ்ருதி இல்ல. ஸ்ருதிகா ஸ்ரீ மேடம்… அப்படி சொல்லி பழகு.. போ சீக்கிரம் இரண்டு குழந்தைகளோடு எப்படி வருவா…” என்று சாண்டில்யன் சொன்னதுமே சென்றான் தான்.

ஆனால் முனு முனுத்து கொண்டு.. இவர் மட்டும் அவள் இவள் என்று சொல்லுவாராம்…. இது வரை வர தெரிந்த ஸ்ருதிகா ஸ்ரீ மேடத்திற்க்கு ஒரு நாள் அடி எடுத்து வைக்க தெரியாதா..? அதுவும் நேத்து அவங்க தனிதா தான் வந்து போனாங்க. இதுல சங்கர ஸ்ருதிகா ஸ்ரீ மேடத்திற்க்கு தெரியுமா என்று கேட்டாலும் பதில் இல்ல.. ஒரு நையிட்ல அப்படி என்ன தான் நடந்து இருக்கும் என்று புலம்பி கொண்டே தான் சென்றது..

சாண்டில்யனுக்கு வேதநாயகத்தின் அந்த புலம்பல் கேட்கவில்லை என்றாலும் என்ன நினைத்து கொண்டு இருப்பான் என்று தெரியும்..

சாண்டில்யனுக்கு இன்று காலை எழும் போதே நேற்று ஸ்ருதிகா ஸ்ரீ தனித்து அந்த உச்சி வெயிலில் இரு குழந்தைகளையும் அழைத்து சென்ற காட்சியே வந்து நிற்க.

யோசிக்காது உடனே குணசேகரனை அழைத்து விட்டான்.. பாவம் இப்போதும் குணசேகரன் தூங்கி கொண்டு தான் இருந்தான்.

தூக்க கலக்கத்திலேயே தான் சாண்டில்யனின் அழைப்பை ஏற்றது…

சாண்டில்யன் எடுத்த உடனே.. “ என்ன அண்ணா இன்னும் எழுந்துக்கலையா… விடிந்து விட்டதே…” என்று சொன்னான்..

அதில் கடுப்பாகி போன குணசேகரன்… “ என்னை எங்கு தூங்க விட்ட சாண்டில்யா…?” என்று கேட்க.

“சரி சரி இன்னைய தூக்கத்தை நாளைக்கு சேர்த்து தூங்கிக்கலாம்… இப்போ நான் ஒரு ஆட்டோக்காரன் நம்பர் தரேன்… இப்போ அந்த ஆட்டோ ஸ்ருதி இருக்கு தெருவில் தான் நின்று கொண்டு இருப்பான்… அந்த ஆட்டோக்காரன் உங்களுக்கு தெரிந்தவன் போல இந்த நம்பரை ஸ்ருதியிடம் கொடுங்க. இனி எங்கு போனாலும் அந்த ஆட்டோவிலேயே போய் வரட்டும்…” என்று தான் சொல்ல வந்த விசயத்தை சொல்லி முடித்தவன்.

“ ஸ்ருதிக்கு இந்த ஆட்டோ சங்கர் நம்பரை கொடுத்துட்டு நீங்க தூங்குங்க அண்ணா…” என்று வேறு சொன்னான்..

“எங்கு இருந்து இனி தூங்க. நீ செய்யும் இந்த அலப்பரைய பார்த்தா… நீ ஸ்ருதியை கல்யாணம் செய்யும் வரை எனக்கு ரா தூக்கம் இல்ல போலவே…” சாண்டில்யன் தன்னிடம் பேசிய அந்த இலகுவான பேச்சில் குணசேகரனும் அது போல பதிலுக்கு பேச.

அதற்க்கும் சாண்டில்யன் விடாது… “ அதுவும் ஒரு வகையில் நல்லது தானே ண்ணா… “ என்றதும்..

‘போதும் பா. ஒரு நாளைக்கு இதுவே போதும்..” என்று சொன்னவன் பின் சாண்டில்யனிடன் தன் விளையாட்டு பேச்சை விட்டு விட்டு…

“சாண்டில்யா எல்லாம் நல்லப்படியா நடக்கும் தானே… கூடவே ஸ்ருதி மன நிலையும் ரொம்ப முக்கியம் சாண்டில்யா… இன்னுமே அந்த வாழ்க்கையில் இருந்து வெளி வராது… அடுத்த வாழ்க்கையை பத்தி பேசுறது நல்லதா என்று கூட எனக்கு தெரியல சாண்டில்யா..” என்று தன் ஒவ்வொரு பேச்சுக்கும் இடை வெளி விட்டு நிறுத்தி நிதானமாக பேசிய குணசேகரனை போலவே சாண்டில்யனும்.

நிதானமாக ஆனால் தன் பேச்சில் அழுத்தத்தை கூட்டி…. “ நானுமே இது நினச்சேன் தான் ண்ணா… ஒரு நாள் கூட இல்ல ண்ணா.. ஒரு நையிட். இது நல்லதா என்று.. ஆனா பாருங்க ண்ணா… அந்த வாழ்க்கை தான் இடையில் வந்தது… நான் கொஞ்சம் உஷாரா இருந்து இருந்தா… ஸ்ருதிகா ஸ்ரீ மிஸச் ஸ்ருதிகா ஸ்ரீ சாண்டில்யனா இன்னைக்கு இருந்து இருப்பாங்கன்னா.. இசையும் இயலும் என் வாழ்க்கையின் ராகமா இருந்து இருப்பாங்கன்னா… இடையில் வந்தது இடையில் போக போகுது. நான் எந்த சதியும் செய்து போக வைக்கல.. ஸ்ருதிகா ஸ்ரீ விருபத்தில் தான் இடையில் வந்தது போகுது. என்ன ஒன்னு. அதை நான் சீக்கிரம் முடிச்சிக்க பார்க்கிறேன்…” என்று சொன்னவன் முடிவில்..

“முடியலேன்னா.. இந்த தனிமை என்ன ரொம்ப கொல்லுது.. அதுவும் இந்த தனிமை என் முட்டாள் தனத்தினால் என்று நினைக்கும் போது என் மீதே எனக்கு அவ்வளவு கோபமா வருதுண்ணா…. கூடவே வாசுவை பார்க்கும் போது எல்லாம் நான் ஏமாந்தது. அதுல அவனை கொலை பண்ணிடுவேனோ என்ற பயம் வேறு வருதுண்ணா… என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்குலேண்ணா…?” என்று கேட்டவனிடம் குணசேகரன்.

“என்ன சாண்டில்யா… என் குரு சோமசுந்தரத்தோட மகன் சாண்டில்யா நீ.” என்று சொன்னவனிடம் சாண்டில்யன்.

“அப்போ நான் சொல்றது படி செய்ங்க. சங்கர் நம்பரரை ஸ்ருதி கிட்ட கொடுங்க. எப்போதுமே அந்த ஆட்டோ ஸ்ருதி இருக்கும் வீட்டு கிட்ட தான் இனி இருக்கும்…” என்று சொல்ல..

குணசேகரனும்.. ஸ்ருதிகா ஸ்ரீயிடம் போனை கொடுத்தவன்.. “ தோ பாரு ஸ்ருதிகா நான் தான் இரண்டு வீட்டில் இருந்தும் கூட்டிட்டு வந்தேன்.. உன் பாதுகாப்பு தான் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்… இனி இந்த ஆட்டோவில் தான் போகனும்..” என்று சொல்லி விட.

இதோ அவன் எதிர் பார்த்தது போல ஸ்ருதிகா ஸ்ரீயை எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தவனின் கண் முன்.. அவனின் தம்பி வாசுதேவ்வின் மனைவி சந்தியா தன் குழந்தையுடன் வந்து நின்று விட்டாள்…

“எனக்கும் டைவஸ் வேண்டும்..” என்று சொல்லி….
 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
170
வாசு &காந்து விதைச்சதை அறுவடை பண்ண ஆரம்பிச்சுட்டீங்க 😂😂😂😂😂😂😂

சாண்டில்யன் எப்படியும் சந்தியாவ சமாதான படுத்தி வாசு கூட சேர்த்து வைக்க தான் முயற்சி பண்ணுவான் 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

அனிதாவுக்கு உரைக்கிற மாதிரி சொல்லிட்டான் கோகுல் 🤗 🤗 🤗 🤗

பாவனா திட்டம் போட்டு ஸ்ருதி வாழ்க்கைய கெடுத்தா அதனால் அவளும் கஷ்டப்படணும் 🥶🥶🥶🥶 இந்த காந்து அவளுக்கு எந்த உதவியும் செய்யாமல் டார்ச்சர் பண்ணனும் 🤐 🤐 🤐 🤐

ஏம்மா ஸ்ருதி உன் வரவுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறான் கொஞ்சம் வேகமா வாம்மா 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 உனக்காக ஆட்டோ எல்லாம் ஏற்பாடு பண்ணிருக்கோம் 🤠☺️😉😉😉😉😉
 
Last edited:
Active member
Joined
May 12, 2025
Messages
16
♥️♥️♥️

காந்து இனி ஒரு வாய் தண்ணி கிடைக்குமா பாரு. வயசான வேலையாள் வைக்கணும்னு கோகுல் நினைச்சதுக்கு இன்னொருத்தனா இருந்தா ..... நீ தான் அப்படிலாம் கிடையாதே காந்து. சாண்டில்யன் ரூட் இனி பக்காவா க்ளியர் ஆகிடும். அட்ர சக்கை! வாசு உன் வைப் டைவர்ஸ் கேட்டு உங்கண்ணன் கிட்ட தான் போயிருக்காபா.
 
Last edited:
Active member
Joined
Mar 31, 2025
Messages
79
அடேய் வாசு பயலே உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் 😡😡😡😡😡....நல்லா போன வாழ்க்கையை நீயே மண்ணள்ளி போட்டுகிட்ட😬😬
 
Well-known member
Joined
Mar 22, 2025
Messages
79
இங்கேருமா உனக்கு டைவர்ஸ் மட்டும் தான் கிடைக்கும் அதுவும் வேதா சார் தான் டீல் செய்வார் அவ்வளவு தான்.
எங்க ஆளு வர நேரம் ஆயிடுச்சு இடத்தை காலி பண்ணு
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
185
வாசு 🤣🤣🤣🤣🤣 செம ஆப்பு 😂😂😂😂 அடுத்தவன் வாழ்க்கையை கெடுக்குறதை விட்டுட்டு பொண்டாட்டி கால்ல விழுந்து உன் வாழ்க்கையை காப்பாத்திக்கப் பாரு 🤭🤭🤭

வக்கீல் சார் லவ் மோடு ல இருக்காரு இப்போ உங்களுக்கு தூக்கம் முக்கியமா குணா 😝😝😝😝
 
Top