அத்தியாயம் - 3
சென்னையில்
தன்னைச் சுற்றி சூழ்ச்சி வலை பின்னப்படுவதை அறியாமல், எப்போதும் போல் அன்றும் காலையில் எழுந்தவுடன், காலைக் கடனை முடித்து தன் தந்தை ரூமுக்கு சென்று காலை வணக்கம் செலுத்தினாள். பின் அவருடனே சிட் அவுட்டில் அமர்ந்து காபியை பேசிக்கொண்டே அருந்தினாள். இது தான் இவர்களின் தினம் தோறும் நடக்கும் வாடிக்கை. பின் தன் தந்தையிடம் விடைப் பெற்று காலேஜுக்கு செல்ல கிளம்பினாள்.
காலேஜ் கேண்டினில் ஷாலினியின் பேச்சை ரசித்துக் கொண்டிருந்தாள் பத்மினி. “ஏன்டி பீச்சில் இவள் பேசுனதே டிவியில் காமிச்சாங்க பார்த்திங்களா?. பெற்றவர்கள் நடத்தி வைக்கும் திருமணம் தான் சிறந்ததாம்! நூத்தி கிழவி மாதிரி பேசுனாடி.”
அதற்க்கு மற்றொரு தோழி வரா, “சரி அவள் தான் திருமணத்தை பற்றி நூத்து கிழவி மாதிரி பேசியிருக்கா? உன்னுடைய ஒபினியன் என்ன?” “இப்போ கேட்டியே இது சரியான கேள்வி, முதலில் சூப்பரான ஒரு பையனை காதலிக்கனும்.”
அதற்க்கு வரா “ஏய் இரு, இரு நீ சூப்பரான பையனை லவ் பண்றது ஒகே, அவன் திருப்பி உன்னை லவ் பண்னுவானன்னு யோசிக்க மாட்டியா?” அதற்கு ஷாலினி மனதினில் நம்ம தோழிக்கு இவ்வளவு அறிவு இருக்க கூடாது என்று நினைத்துக்கொண்டே “சரி, சரி ஒரு சுமாரான பையனை காதலிக்கனும், எங்க காதலுக்கு அவங்க வீட்டிலேயும், சம்மதிக்ககூடாது. எங்க வீட்டிலேயும் சம்மதிக்ககூடாது”
அதற்கு வரா “அப்ப உங்களுக்கு யார் கல்யாணம் செய்து வைப்பாங்க” என்ற கேள்விக்கு, “அது தான்டி சொல்ல வருகிறேன். முந்திரிக்கொட்டை மாதிரி நடுவுலே… நடுவுலே… என்னை டிஸ்ட்டப் பண்ணாதே. அப்புறம் எனக்கு ஒரு ப்லோவா வராது.” அதுக்கு ஒன்றும் சொல்லாமல் தலையைய் மட்டும் அசைத்தாள். அமைதியா இருக்காங்களாமா அதை இப்படி சிம்பாளிக்கா காமிக்கிறா. அஃது என்று தன் பேச்சை தொடர்ந்தால்.
“இரண்டு பேரும் ஓடி போவோம். அப்போ எங்க அப்பாவின் ஆட்களும், அவங்க அப்பாவின் ஆட்களும் எங்களை தேடுவாங்க. அந்த பிட்வின் கேப்பில் ரொமன்ஸ் பண்ற த்ரில்லிங் இருக்கே சூப்பரோ, சூப்பர். இதெல்லாம் இந்த அரஞ்டு மேரஜில் வருமா?” என்று தான் ஏன் லவ் மேரஜித்தான் சிறந்தது என்ற தன் வலுவான காரணத்தை கூறினாள்.
இவை அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த பத்மினி. “ஷாலு இன்னும் த்ரில்லிங்கா இருக்க நான் உனக்கு ஒரு யோசனை சொல்லவா?” என்ற பத்மினியை ஷாலினி ஒரு மார்கமாக பார்த்தால். ஏன் என்றால் அவளை பற்றி நன்கு அறிந்திருந்தாள். பத்மினி அனைத்தையும் பொறுமையாகத்தான் கேட்பாள். ஆனால் திருப்பி அவள் பதில் அளித்தால் மற்றவர்கள் பல்பு வாங்க வேண்டியதுதான்.
இதை அறியாத வரா, “ சொல்லு பத்தூ நீ சொன்னா சரியா தான் இருக்கும். ஏன்னா நம்ம கிளாஸில் நீதான் டாப்பார்.” அதற்க்கு ஷாலினி “அது தான் அவள் சொல்லிட்டாலே சொல்லும்மா சொல்லு” மனதினில் எப்படியும் பல்பு கொடுக்க போரா அது எத்தனை வோல்ட்டேஜ் அப்படின்னு பார்க்கலாமே.
“பேசாமே நீ கல்யாணம் பண்ண கூட்டிட்டு போறவன் ஒரு தீவிரவாதியா இருந்தா கூட சேர்ந்து போலீசும் தேடும். இன்னும் கொஞ்சம் த்ரில்லிங்கா இருக்கும்”. என்ற தோழியை கொலைவெறியோடு பார்த்தாள் ஷாலினி.
இவை அனைத்தையும், பக்கத்தில் இருந்த ஒருவன் தன் லேடஸ்ட்டு ஐபோனில் வீடியோ எடுத்துக் கொண்டிந்தான் காபி அருந்தியவாறே.
“சரி, சரி நாம் கொஞ்சம் படிப்ப பத்தியும் பேசலாமா? ஏன்னா நம்ம படிக்கதான் காலேஜ் வந்து இருக்கோம்னு நினைக்கிறேன்.” என்ற பத்மினியை பார்த்து ஷாலினி, “நாங்க மட்டும் என்ன கபடி ஆடவா வந்தோம். நாங்களும் படிக்கதாம்மா வந்து இருக்கோம்.” என்ற ஷாலினியிடம் “கொஞ்சம் சீரியஸா நான் சொல்வதை கேட்கிறீர்களா…” என்ற பத்மினியின் கேள்விக்கு பிறகு அங்கு அமைதி நிலவியது.
“ஷாலு எங்க அப்பா, ஒரு ஆடிட்டர் பத்தி சொல்லி இருக்கார் அவர் சிபாரிசுக்கு எல்லாம் மதிப்பு கொடுக்க மாட்டாராம். உண்மையான திறமை இருக்கிறவங்களுக்குதான் தன் அஸிஸ்டெண்டா சேர்த்துப்பராம். எனக்கு அவர் கிட்ட சேரனுமின்னு ஆசை.
பி. காமில் நல்ல பெர்சென்டேஜ் எடுத்தா அவரே நல்ல கோச்சிங் கிளாஸ் சேர்த்து விட்டு பின் தன் அஸிஸ்டெண்டாகவும் சேர்த்துப்பாராம். அதனால் நான் நல்லா படிச்சி நல்ல மார்க்கு வாங்கவேண்டும் “ என்ற தோழியை எப்போதும் போல் பெருமையுடன் பார்த்தாள் ஷாலினி.
ஷாலினிக்கு தெரியும் பத்மினி எப்படியும் நினைத்ததை முடிப்பாள் என்று. ஆம், அவள் தான் பத்தாம் தேர்வில் மாநிலத்திலேயே இரண்டாம் இடம் வந்தாள். அவள் காமெர்ஸ் குரூப் எடுத்தற்க்கு ஏன் முதல் குரூப் எடுக்கவில்லை, உன் மார்க்குக்கு எம்.பி.பி.எஸ் கண்டிப்பா கிடைக்கும் என்று அனைவரும் சொல்லியும், இவள் இந்த குரூப்பையே எடுத்து படித்தாள்.
அதுவும் அவள் அப்பா எனக்கு இரண்டாவதை விட முதல் தான் பிடிக்கும் என்று சொன்ன காரணத்திற்க்காகவே பன்னிரெண்டாவது தேர்வில் மாநிலத்திலேயே முதல் இடத்தை பிடித்தாள்.
பத்மினியின் தந்தை கேசவமூர்த்தி. சென்னையிலேயே பத்மினி த்ரி ஸ்டார் ஓட்டலை மூன்று இடத்தில் நடத்தி வருகிறார். அவருக்கு அது என்னவோ தெரியவில்லை எப்போதும் ஆடிட்டருக்கும் அவருக்கும், செட்டே ஆகாது.
எப்போதும் இயர்ரெண்டில் பிரச்சினையில் தான் முடியும். அதுக்காகவே தன் தந்தையின் பிரச்சினையை தீர்ப்பற்க்கு இவள் இந்தப் படிப்பை தேர்ந்தெடுத்தால் என்றால், தன் தந்தையே அந்த ஆடிட்டரைப் பற்றி இவ்வளவு பெருமையாக சொல்லும் போது அந்த முயற்ச்சியில் வெற்றி பெறாமல் இருப்பாளா?
அவளுக்கு தன் தந்தையே உலகம். தன் தோழியைப்பற்றி பெருமையுடன் நினைத்துக் கொண்டே வகுப்பறைக்கு தன் தோழிகளுடன் சென்றாள் ஷாலினி. பத்னிமியின் இந்த தந்தை பாசமே அவள் வாழ்க்கையில் சதுரங்கம் விளையாடப் போவது பாவம் அந்த பாச தோழிக்கு தெரியாது.
பத்மினி தன் தந்தை, தோழி, படிப்பு என்று தன் வாழ்க்கையை அனுபவித்து வாழந்தாள். இடையிடையே தன் பாட்டியையும் வெறுப்பேற்ற மறப்பதில்லை. அவளுக்கு பாட்டியை மிகவும் பிடிக்கும் அதுவும் அவள் தாய் தன்னுடைய ஐந்தாம் வயதில் ஜுரம் என்று படுத்தார் பின் அவர் உடம்பு சரியாகவே இல்லை.
எவ்வளவு வைத்தியம் பார்த்தும் முடியவில்லை. அதுவும் மருத்துவர் மருந்தால் மட்டும் குணம் படுத்த முடியாது. அதற்கு அவர்களுடைய ஒத்துழைப்பும் வேண்டும் அவர்களுக்கு தான் உயிர் வாழ்வதில் சிறிதும் விருப்பமில்லாத பட்சத்தில் எங்களாலும் ஒன்றும் பண்ணுவதற்க்கு இல்லை, என்று கை விரித்து விட்டனர். பின் உடல் நிலை இன்னும் மோசமாகி இறந்தே விட்டார்!!
இதெல்லாம் எப்போதாவது அப்பா வீட்டில் இருக்கும் பட்சத்தில் பாட்டி தன் தந்தையிடம் தன் ஆதங்கத்தை சொல்லுவார். மகராசி மனதில் இருக்கும் வேதனையை வெளியில் சொல்லாமலேயே போய் சேர்ந்து விட்டார் என்று. அவளுக்கு அப்போது எல்லாம் அப்பாவை திருமணம் செய்துக்கொண்டு அவர் எப்படி மனவேதனையில் இறக்க முடியும்?
இந்த பாட்டிதான் தவறாக புரிந்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று தன் மனதில் நினைத்துக் கொள்வாள். அப்போது மட்டும் பாட்டியின் மீது கோபம் வரும். அதை தவிர பாட்டியை பத்மினிக்கு மிகவும் பிடிக்கும்.
இதைப்பற்றி பேச்சு எடுத்தால் தந்தையும் எதுவும் சொல்ல மாட்டார்கள், பாட்டியும் எப்போதாவது ஏதாவது சொல்ல வந்தால் தந்தைக்கும், பாட்டிக்கும் இதனால் சண்டை வருவதால் இவளும் அதைப்பற்றி கேட்பதை விட்டு விட்டாள்.
அவளை பொருத்த வரை வாழ்க்கை அழகாக செல்கிறது. தாயுக்கு தாயாக தந்தையே அவளுக்கு அன்பு செலுத்துவதாலும், தந்தையின் மீது நம்பிக்கை இருப்பதாலும் அந்த பேச்சை எடுப்பதில்லை.
டெல்லி
வேக நடையுடன் தன் ரூமுக்கு வந்த பிரதாப் அசோக்கை அழைத்தவாறே தன் சீட்டில் அமர்ந்தான். பின் அசோக் வந்ததும் பைலை பார்த்துக்கொண்டே, “என்ன அசோக் சென்னையில் டிடெக்டிவ் வைத்து விசாரிக்க சொன்னனே அதுபற்றி என்னவானது. அவுங்களோட புல்டீடையில் வேண்டும்.
இன்னும் எனக்கு இங்க இரண்டு நாளில் வேலை முடிஞ்சுடும். பிறகு ஆறு மாதம் சென்னையில் தான் இருக்க போகிறேன். அங்க த்ரி ஸ்டார் ஒட்டல் ஒன்று விலைக்கு வருது அதை விலைபேசிட்டு இருக்கேன். அனேகமா நம்ம டீலீங் முடிந்துவிடும்.
அதனால் அங்கும் நம்ம புது பிரான்ச் ஒன்று ஒப்பன் பண்ணபோகிறோம். நீ சீக்கிரம் இந்த டீடையில்ஸ் கொடுத்தால் இரண்டு வேலையும் ஒன்றாய் முடித்துவிடுவேன்.” என்று கூறினான்.
என்னவோ தன் வாழ்க்கையும் வேலைமாதிரி திட்டம் தீட்டும் தன் முதளாளியை வேதனையுடன் பார்த்திருந்தான். தன் கேள்விக்கு பதில் வாரமல் போகேவே, தலை நிமிர்ந்து அசோக்கை ஏறிட்டான்.
அவன் முகத்தை பார்த்தே அவன் எண்ண போக்கை புரிந்துக் கொண்ட பிரதாப் “அசோக் நான் சொல்லுவதை மட்டும் செய். இந்த சென்டிமென்ட்டு எல்லாம் எனக்கு பிடிக்காது என்ன புரிந்ததா? ஏன்னா இனிமே நிறைய இது மாதிரி வேலைப்பார்க்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறையும் என்னால் உனக்கு விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாது. புரிந்ததா? அப்புறம் வீட்டில் இதைப்பற்றி மூச்சு விடகூடாது.” என்று ஆணையிட்டான்.
சரி என்று தலையசைத்து தன் கேபினுக்கு சென்று அமர்ந்தான் அசோக். தன் வேலையை மடிகணினியில் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சென்னையில் இருந்து ஒரு மின் அஞ்சல் வந்தது. அதன் அவசியத்தை சற்று முன்பு தான் பிரதாப்பின் வாயிலாக காதில் ரத்தம் வரும் வரை சொற்பொழிவுக் கேட்டுக் கொண்டதால், தன் வேலையை உடனே நிறுத்திவிட்டு பிரதாப்பின் கேபினுக்கு அனுமதிக் கேட்டுக் கொண்டு நுழைந்தான்.
அசோக்கை பார்த்தவுடன் என்ன என்று தன் ஒற்றை புருவத்தை மேல் நோக்கி கேள்வி எழுப்பினான். எப்போதும் போல் அவன் அந்த செயலில் அவன் கம்பிரத்தையும், மேனரிசத்தையும் தான் வந்த வேலையையும் மறந்து ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அசோக்கை புரிந்ததால் சிரித்துக் கொண்டே “என்னை பிறகு ரசிக்கலாம். இப்போது வந்த விஷயத்தை சொல்” என்றான். அசோக் மனதினில் ஆண் மகன் நானே என்னை மறந்து ரசிக்கின்றபோது, பெண்கள் அவனின் மேல் அவர்களாகவே வந்து விழுவதற்க்கான காராணம் விளங்கியது.
“என்ன அசோக் என்ன பார்த்தது இன்னும் பத்தலையா இல்லே நீ என் பின்னாடியே சுத்துவதை பார்த்து மற்றவர்கள் சொல்வது போல அவனா நீ?.”என்ற பிரதாப்பை பார்த்து.
“ஏய்…” என்றான் தன் நிலை மறந்து. ஆம், அவன் எப்போதும் வேலை நேரத்தில் நண்பனுக்கு உண்டான சலுகையை எடுத்துக் கொள்ள மாட்டான். அவனிடம் வேலை பார்க்கும் மற்றவர்களை போல தான் அழைப்பான். ஆனால் இன்று நண்பனின் இந்த பேச்சில் அதிர்ந்து இவ்வாறு அழைத்து விட்டான். பின் என்ன அவனாவது சில பல விஷயத்தை பார்த்து விட்டான்.
இவன் இன்னும் கட்ட பிரம்மாசாரியே, அவன் தன் திருமண வாழ்க்கையை பற்றி பல கனவு கண்டுள்ளான். இவன் இந்த பேச்சால் யாரும் பெண் கொடுக்கவில்லை என்றால் அந்த அதிர்ச்சியில் தான் அழைத்து விட்டான். அவன் கவலை அவனுக்கு.
பின்பு தன் நிலைக்கு வந்த அசோக் சாரி சார் என்று தான் வந்த விஷயத்தைப்பற்றி சொன்னான். “சார் சென்னையில் இருந்து நம்ம கேட்ட டிடையில்ஸ் அனுப்பி இருக்காங்க” என்று சொல் தன் காதில் விழுந்த அடுத்த நொடி தன் வேலையை அனைத்தையும் மூடிவைத்து அசோக்கை தன் பக்கதில் தானே சேர் இழுத்து போட்டு அமரவைத்தான்.
அவன் முகத்தில் அப்படி ஒரு டென்ஷன் அவனிடம் பழகிய இத்தனை வருடங்களில் இந்த முகபாவம் அசோக்குக்கு புதியது.
தானும் தன் சிந்தனையை அனைத்தையும் ஓரம் கட்டி விட்டு அவன் பக்கத்தில் அமர்ந்து, தன் லேப் டாப்பை திறந்து மெயில் ஒப்பன் செய்து பிரதாப் பக்கம் நகர்த்தினான். பிரதாப் தன் பார்வையை அதில் பதித்தவாறு “போட்டோவுடன் தானே அனுப்பி இருக்கிறார்கள்” என்ற கேள்விக்கு…. “ஆமாம் சார் சில நீங்க சொல்லாதையும் அனுப்பச் சொல்லி இருந்தேன் சார்” என்ற பதிலில் கேள்வியாய் அவனை பார்த்தான் .
“பார்த்தா உங்களுக்கே தெரிஞ்சுடும் சார்“, என்ற பதிலில் தன் கவனத்தை திரும்பவும் லேப்டாப்பில் செலுத்தினான். அதில் இருக்கும் செய்தியை கவனமாக படித்து உள்வாங்கிக்கொண்டான். அதில் முதல் வரியில் அக்குடும்பத்தின் தலைவன் கேசவமூர்த்தி தொழில், பல ஸ்டார் ஓட்டலின் முதலாளி என்பதை படித்து அசோக்கை பார்த்தான்.
அசோக்கும் அப்போது பிரதாப்பைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். இருவரும் புன்னகையுடன் பார்வையை பரிமாறிக் கொண்டனர். கேசவா உன் தொழிலே உன்னிடம் நெருங்குவதற்க்கு தோதாக அமைந்திருக்கிறதே இதில் இருந்தே நான் நினைப்பதை சீக்கிரம் முடித்து விடலாம் என்று மகிழ்ந்து அடுத்ததை படிக்க ஆரம்பித்தான்.
அதில் கொடுத்த அறிக்கையில் தன்னிலை மறந்து சிலையாய் அமர்ந்து விட்டான். ஆம் அதில் தலைவி என்ற இடத்துக்கு நேர் இறந்து பதினைந்து வருடம் என்று இருந்தது.
என்னதான் அக்கா மேல் கோபம் இருந்தாலும், எட்டு வயது வரை தாயிக்கு தாயாக வளர்த்தவளாயிற்றே. ஆம் சிறு வயதில் எதற்க்கும் தன் அன்னையை விட தன் அக்காவையே தேடுவான்.
அதனால் தான் தன்னை விட்டு சென்றவுடன் அந்த பிரிவை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை. அதுவும் அதற்க்கு காரணமான கேசவமூர்த்தியை தன் வாழ்நாளில் மன்னிக்கவே மாட்டான்.
தன் தாயும் தந்தையும் இப்போது தான் பல வருடங்களுக்கு பிறகு கொஞ்சம் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். இந்த விஷயத்தை கேள்விப் பட்டால் அவர்கள் எப்படி தாங்கி கொள்வார்கள் என்று நினைத்து, கவலையில் அவனால் அடுத்து சிந்திக்க கூட முடியவில்லை.
அசோக் தான் அவன் சிந்தனையை கலைத்து நடப்புக்கு கொண்டு வந்தான் . “சார்” என்ற அழைப்புக்கு தன்னிலை அடைந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அடுத்து நடக்க வேண்டியதை செயல்படுத்த முன்னிலும் அதிக முனைப்புடன் ஈடுபட எண்ணினான். ஆம், என் தாய், தந்தையிடம் இருந்து தன் மகளை பிரித்தது போல் அவரிடம் இருந்து அவர் மகளை கண்டிப்பாக பிரிப்பேன் என்று மனதில் உறுதிக் கொண்டான்.
பின் மகள் பத்மினி என்று இருந்ததுக்கு நேர் எதிர் பி.காம் தேர்ட் இயர் என்று இருந்தது. பின் அதில் இருந்த அவள் போட்டோவையே சிறிது நேரம் பார்த்திருந்தான். அவள் முகத்தை பார்க்க பார்க்க மனதில் ஏதோ ஒரு மாற்றம்.
இது வரை உணர்ந்திராத அமைதி நிலைவியது, இவனின் முகபாவனையையே கவனித்துக் கொண்டிருந்த அசோக் நண்பன் திருமண வாழ்க்கையில் வெற்றி அடைந்து விடுவான் என்று மனதில் மகிழ்ச்சி அடைந்தான்.
இந்த மகிழ்ச்சியிலேயே அவள் பேசுவதை ரெக்கார்ட் செய்ததை போட்டு விட்டான். அவற்றில் அவள் தன் தோழிகளுடன் பேசும் வீடியோவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
தோழிகள் பேசுவதை முகத்தில் ஒரு புன்சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருப்பதையும், பின் அவள் தோழி சொன்னதற்க்கு அவளின் பதில் அடியும் கேட்டவுடன் வந்த சிரிப்பை அசோக்கை நினைத்து அடக்கிக்கொண்டான். ஆனாலும் இதழ் ஓரத்தில் வெளிப்பட்ட இதழ் விரிவை பார்த்து விட்டு அந்த நண்பன் மனது நிம்மதி அடைந்தது.
பின் அவன் கவலை அவனுக்கு அவன் பின்னாடி சுத்துற பொண்ணுங்களை கழட்டி விடுறது எல்லாம் இவன் வேலை தானே…. எவ்வளவு கஷ்டமான வேலையை கூட பார்த்து விடலாம். ஆனால் இந்த வேலை பார்ப்பது என்பது அவனால் வெளியில் சொல்லக் கூட முடியவில்லை.இவன் வாழ்க்கையில் செட்டில் ஆயிட்டால் இந்த கஷ்டத்தில் இருந்து அவனுக்கு விடுதலை கிடைத்து விடும் இல்லையா?.
“சார்… சார்…. “ என்ற அழைப்புக்கு தன் நிலையடைந்து இருந்த பிரதாப் நண்பனிடம் தன் முகபாவத்தை மாற்றிக் கொண்டு தன் கெத்தை விடாமல் “என்ன அசோக் “ என்று வினாவினான். மனதினில் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கெத்துன்னு நான் பார்க்க தானே போகிறேன் மச்சான் என்று நினைத்துக் கொண்டான். வெளியில் “ஒன்னும் இல்லே சார்.”என்று பதில் அளித்திருந்தான்.
பிரதாப் மனதினில் எவ்வளவு சீக்கிரம் அவளை தன் சொந்தம் ஆக்கிக்கொள்ள முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சொந்தம் ஆக்கிக்கொள்ள வேண்டும். அப்போது தான் கேசவமூர்த்தியை பழிவாங்க முடியும், என்று தான் அவசரப்படுவதற்க்கு அதுதான் காரணம் என்று தானே ஒரு காரணத்தை கற்ப்பித்துக் கொண்டான்.
“அசோக் சீக்கிரம் சென்னையில் அந்த ஒட்டல் முதளாளியிடம் அப்பாயின்மென்ட் வாங்கிடு. பிறகு அவற்றை பொருத்து பிளைட்டுக்கு டிக்கட் புக் பண்ணிடு”. என்று கூறினான். “சரி சார்” என்ற அசோக், பிரதாப் சொன்ன வேலையை பார்க்க தன் கேபினுக்கு சென்றான்.
பிரதாப்பின் ஆர்வதை பார்த்த அசோக், சொன்ன வேலையை இரண்டு மணி நேரத்தில் அனைத்தையும் முடித்து விட்டிருந்தான். பிரதாப்பும் ஆறு மாதத்துக்கு உண்டான வேலையை யார் யார் பார்க்க வேண்டும் என்று பிரித்துக் கொடுத்திருந்தான்.
அவன் சென்னை கிளம்புவதற்க்கு வேண்டிய அனைத்து வேலையும் முடிந்து இருந்தது. மனதினில் ஒருபுறம் அமைதி மறுபுறம் கொந்தளிப்பு என்று இருவேறு மனநிலையில் வீட்டிற்க்கு சென்றான். தன் அன்னையிடம் அக்கா இறந்த விசயத்தை சொல்ல வேண்டாம் என்று முதலிலேயே முடிவு செய்திருந்தான்.
ஆனால் தன் தந்தையிடம் கண்டிப்பாக சொல்ல வேண்டும். எப்படி அவர் உடல் நிலையை பாதிக்காதவாறு சொல்வது என தன் ரூமில் யோசித்துக் கொண்டிருந்தான்.
லஷ்மி அம்மாள் சாப்பிட வாப்பா என்று கூப்பிடும் வரை இதே நினைப்பு தான். பின்பு எப்படியாவது சொல்லித் தானே ஆக வேண்டும் என்று டைனிங் ஆளுக்கு சென்றான்.
“என்னா கண்ணா உடம்பு ஏதாவது சரியில்லையா?“ என்று பாசத்துடன் விசாரிக்கும் தாயிடம் தன் முகத்தை காட்டாமல் தலை குனிந்தான். எப்போதும் ஏதாவது மறைப்பதாக இருந்தால் அவன் தன் தாய் முகத்தை நிமிர்ந்து பார்க்க மாட்டான்.
மகனின் குணம் அறிந்த தீனதயாளன் “விடு பத்தூ. சென்னைக்கு கிளம்புவதால் இங்கு முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கும் அந்த டென்ஷனாக கூட இருக்கும் “ என்று மனைவிக்கு பதில் அளித்தவாரே தன் மகனை யோசனையுடன் பார்த்தார்.
தீனதயாளனுக்கு தன் மகனின் அனைத்து குணமும் தெரியும், பெண்கள் சவகாசம் உள்பட. ஆனால் ஒரு வயதுக்குப் பிறகு தன் மகனே ஆனாலும், அனைத்து விசயத்தையும் கேட்க முடிவதில்லை. அதுவும் அவன் தொழிலில் எடுக்கும் முடிவில். தான் தொழிலை அவனிடம் கொடுக்கும் போது இருந்த வளர்ச்சியை விட, பல மடங்கு பெருகியிருக்கிறது.
மேலும் அவனே தன் வாழ்வை சீர்குலைய விட மாட்டான் என்றும், யார் யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று தன் மகனுக்கு தெரியும் என்ற காரணத்தால், தனக்கு தெரிந்ததாகவே காட்டிக்கொண்டது இல்லை. தன் மனைவிக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார்.
இதையெல்லாம் ஜீரணம் செய்துக்கொள்ள அவளால் முடியாது என்ற காரணத்தால் மூடிமறைத்தார். மேலும், இந்த பெண்கள் பழக்கத்தில் இருந்து விடு பட மறைமுகமாக இரண்டு வருடமாகவே திருமணத்திற்க்கு முயற்சித்துக் கொண்டுத்தான் இருக்கிறார். ஆனால் அதுக்கு மகன் சம்மதம் கிடைக்க வேண்டுமே!
இப்போது மகன் கண்டிப்பாக மிக விரைவில் திருமணம் செய்துக் கொள்வான் என்று தன் மகனின் நடவடிக்கையில் அறிந்துக் கொண்ட விசயம் அவ்வளவு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. மாறாக சிறு சஞ்சலமே மனதில் இருந்தது. சந்தோஷமாக திருமணம் செய்துக் கொண்டால் மகிழ்ச்சியே.
பழிவாங்க வேண்டும் என்ற காரணத்தால் செய்துக்கொள்ளும் திருமணம் இருவர் வாழ்வையுமே அழித்து விடுமே என்று கவலைக் கொண்டார். தன் மகனின் மனநிலை அறியாமல்.
தன் மகனிடம் தனிமையில் அதுவும் சென்னை போவதற்க்குள் பேச வேண்டும் என்ற காரணத்தால், தான் சாப்பிட்டவுடன் ”பிரதாப் சாப்பிட்டவுடன் ஆபிஸ் ரூமுக்கு வா உன்னிடம் பிஸ்னஸ் விஷயமாக பேச வேண்டும்.” என்று சொல்லி விட்டு சென்றார். அவர் அழைத்ததில் இருந்தே தன்னிடம் தாய்க்கு தெரியாமல் பேசவே அழைக்கிறார் என்று புரிந்துக் கொண்டான்.
தந்தை சென்றவுடன் “அம்மா நாளைக்கு நான் சென்னைக்கு போகிறே எப்படியாவது உங்கள் பேத்தியை கண்டிப்பா அழைச்சிட்டு வருகிறேன்“ என்றதற்க்கு “கண்ணா அப்போ சாந்திப்பா?” என்று தன் அன்னை கூறியவுடன் தான் தன் முட்டாள் தனம் தெரிந்தது.
மனதில் வேதனையுடன் கண்டிப்பாக உங்கள் மகளையும் அழைச்சிட்டு வருகிறேன் என்று பொய்யான வாக்குறுதி அளித்தான். பின்பு இதற்கு மேலும் சாமளிக்க முடியாது என்பாதாலும் தன் தந்தையுடன் வேறு பேசவேண்டிய அவசியத்தாலும்,
“அம்மா டைம் ஆகுது பாருங்க நீங்க மாத்திரை போடவேண்டிய நேரம். போய் மாத்திரை போட்டுக்கிட்டு தூங்க போங்க. நானும் அப்பாகிட்ட பேசிட்டு தூங்கனும் நாளைக்கு சீக்கிரம் வேற எழுந்து கிளம்பனும்” என்று கூறி தாயை அனுப்பிவிட்டு தந்தையை காண தயக்கத்துடன் சென்றான்.
தனக்காக காத்திருந்த தந்தையின் பக்கத்தில் தயங்கியவாறே வந்து மெல்ல அமர்ந்தான். மகனின் முகத்தில் கலக்கத்தையும், அவனின் தயக்கத்தையும் பார்த்து தான் கேட்கவேண்டியதை விடுத்து. “என்ன பிரதாப் ? என்ன விஷயம்” என்று கேட்டவுடன் எப்படியும் சொல்லித்தான் ஆக வேண்டும் என்பாதால் “அப்பா சென்னையில் அவர்கள் குடும்பத்தை பற்றி விசாரிக்க ஒரு டிடக்டிவிடம் சொல்லி இருந்தேன்.
மகன் பேச்சியில் இருந்தே கேசவமூர்த்தியின் குடும்பம் தான் என்று தெரிந்தே அவர் அவனின் தந்தை என்று நிருப்பிக்கும் வகையாக… ”எந்த குடும்பத்தை பற்றியப்பா விசாரிக்க சொல்லியிருந்தாய்?” என்று எதிர் கேள்வி கேட்டார்.
“அப்பா ப்ளீஸ் நான் சொல்வதை கொஞ்சம் அமைதியாக கேளுங்க. உங்களுக்கு எந்த குடும்பம் என்று நன்றாக தெரியும். காலையில் தான் நான் கேட்ட டீடையில்ஸ் கிடைத்தது. அதில்…. அதில்….”
“என்ன பிரதாப் எதுவா இருந்தாலும் சொல்லுப்பா”.
“அப்பா அக்கா ….. அக்கா….. பதினைந்து வருஷம் முன்னாடியே இறந்துட்டாங்கப்பா.”
அப்படியே முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருக்கும் தந்தையை “அப்பா... அப்பா...” அவரை தொட்டு அசைத்தவுடன் வேதனைடன் “எப்படியாவது நான் இறப்பதற்க்குள் என் மகளை பார்த்துவிடுவேன் என்று நம்பி இருந்தேன். ஆனால் நான்…. நான்… இப்படி ஆகும் என்று நினைக்கவே இல்லப்பா.
அத்தோட… எப்படி உங்க அம்மா கிட்டே சொல்லுவேன்னு தெரியலேயேப்பா.” என்று கூறிய அப்பாவின் வேதனையை கண்டு மனதில் மிகவும் பாரமாக உணர்ந்தான்.
அவன் அப்பா தான் அவனுக்கு ரோல் மாடல். அவர் எதற்கும் அவ்வளவு சீக்கிரம் மனம் தளரவிட மாட்டார். அப்படிப் பட்டவர் இன்று வேதனையுடன் கலங்கியிருப்பதை பார்த்து அவர் வேதனையை போக்க முடியாத தன்நிலையை கண்டு வெட்கினான். அப்பா உங்கள் வேதனையை அந்த கேசவமூர்த்திக்கு கண்டிப்பாக நான் தருவேன் என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
“இந்த விஷயத்தை உன் அம்மா கேள்விப்பட்டால்! எப்படி தாங்கிக் கொள்வாள் என்று தெரியவில்லை. இப்போது உன் அம்மாவுக்கு எதுவும் தெரிய வேண்டாம். நானே சமயம் பார்த்து சொல்லிக் கொள்கிறேன்.
ஆனா, நீயும் உன் அம்மா மனசு கஷ்டப்படுத்துவது மாதிரி ஏதாவது செஞ்சி வைச்சா, நான் சும்மா இருக்க மாட்டேன்.” என்று மகனை பார்த்து கண்டிப்புடன் கூறினார்.
“அப்பா! நான் என்னப்பா செய்யப் போறேன். அதுவும் அம்மா மனசு கஷ்டப்படும் மாதிரி” என்று தன் தந்தையை பார்த்து கேட்டான்.
“பிரதாப் மாப்…. கேசவமூர்தியை பழி வாங்க நீ என்ன பிளான் பண்றேன்னு தெரியாதுன்னு நினைச்சியா? இல்லே உன் பழக்க வழக்கங்கள், உன் நைட் ஷெட்யூல் எதுவுமே இந்த அப்பாவுக்கு தெரியாதுன்னு நீ நினைச்சி இருக்கேல்லே. நான் உன் அப்பாடா! தோளுக்கு மேல் வந்த பையனை எதுவும் சொல்ல முடியலே, அதுவும் இந்த மாதிரி விஷயத்தில் “ அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் விட்ட தன் தந்தையை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்தான்.
“நீ சென்னைக்கு எதுக்கு போகிறாய் என்ற காரணம் தெரிஞ்சும், நான் சும்மா இருக்கிறதுக்கு காரணம், அந்த டி.வி நிகழ்ச்சியில் என் பேத்தியை பார்த்ததில் இருந்து எனக்கும் அந்த நினைப்புதான். ஆனால் உன்னை மாதிரி பழி வாங்க இல்லை.” என்று கூறிய தந்தையிடம்…
“அப்பா ஏன் பழி வாங்கன்னு நினைக்கிறிங்க. பார்த்தவுடன் எனக்கும் பிடித்து இருக்கலாம் இல்லையா”? என்று அவன் மனதில் இருப்பது அதுதான் என்ற உண்மை தெரியாமலேயே தன் தந்தையிடம் கூறினான்.
யோசனையுடன் மகனை பார்த்த வாரே “நீ சொல்வது உண்மைன்னா என்னைவிட சந்தோஷம் படுறவங்க யாரும் இல்லை. ஆனால் வேற மாதிரி உன் நடவடிக்கை இருந்ததுன்னா….” மேற்க்கொண்டு எதுவும் சொல்லாமல் மகனின் முகத்தையே பார்த்திருந்தார்.
தந்தையின் பார்வையை சந்திக்க முடியாமல் வேறு எங்கோ! பார்த்த வாரே “அப்பா கவலையே படவேண்டாம். என் மனைவியை நான் நல்ல படியாகவே பார்த்துப்பேன்.” என்று கூறினான். அவ்வாறு அவன் கூறும் போது அவன் மனதில் அப்படி ஒரு நிம்மதி.
மகன் முகத்தில் தோன்றிய முகபாவத்தில் அந்த தந்தையின் மனதில் ஏதோ விளங்குவது போல் இருந்தது. ஆனால் அது மகனுக்கே விளங்கவில்லை என்றும் புரிந்தது. இனிமேலாவது நல்லது நடந்தால் சரி என்று நினைத்து, ”சரிப்பா டைம் ஆயிடுச்சி போய் தூங்குப்பா நாளைக்கி சீக்கிரம் எழுந்தா தானே டைமுக்கு பிளைட்டை பிடிக்க முடியும்.“ என்று தன் சம்மதத்தை மறைமுகமாக தந்தார்.
மகிழ்ச்சியுடன் குட் நைட் உரைத்து விடைப்பெற்று தூங்க சென்றான். ரூமுக்கு வந்தவுடன் அவனால் தூங்க முடியவில்லை. தான் நினைத்தது சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று அவனையறியாமலேயே ஒரு பதட்டம், உள்ளுக்குள் உருவானது. தான் நினைத்ததை சீக்கிரம் முடிக்க வேண்டும், என்று நினைத்தப்படியே உறங்கினான்.