Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

டீசர்

  • Thread Author
டீசர்….

தன் பெண்ணின் நடத்தையை பற்றியே தவறாக பேசிய வாசு தேவ்வின் பேச்சில் கணபதி வசந்திக்கு அப்படி ஒரு கோபம். அதுவும் கணபதிக்கு தன்னை பார்த்து தன் மகளுக்கு நான் என்ன வேலை பார்ப்பதாக சொல்லி விட்டான் என்று அவர் தன் மனைவி வசந்தியிடம் இரவு முழுவதும் சொல்லி சொல்லி மாய்ந்து போய் விட்டார்…

இருவருக்குமே அந்த இரவு உறக்கம் இல்லாது தான் கழிந்தது.. சொந்தத்தில் கட்டி கொடுத்தவனின் முக மூடி கழண்டு விழுந்து தன் மகளின் வாழ்க்கை இப்படி போய் விட்டது என்பதே ஒரு பெற்றோருக்கு ரண வேதனை கொடுப்பது தான்..

இதில் தப்பை அவன் வைத்து கொண்டு தன்னை பார்த்து அப்படி பேசுவதா…? இதுவும் சேர்ந்து கொள்ள அவர்கள் மனது ஆரவில்லை…

இதில் விடிந்தும் இதே தன் மகளின் வாழ்க்கை.. அதை தொடர்ந்து வாசு தேவ் பேசிய பேச்சு இதே யோசனையுடன் தான் இருந்தார்கள்..

இதில் காலை உணவாக வந்து சாப்பிடும் அறையில் அமர்ந்து சாப்பிடும் போது குடும்பமாக மாளவிகா தன் கணவன் குழந்தைக்கு பரிமாறி கொண்டு இருப்பதை பார்த்ததும்..

சட்டென்று.. இவன் அண்ணன் தானே.. தன் மகளின் வாழ்க்கையை பாழாக்கியது. தன் மீது தவறை வைத்து கொண்டு தன் மகள் மீது பழியை போட்டு விட்டது.. கூடவே சொந்த தாய் மாமன் என்று கூட பாராது தன் கணவனிடம் அப்படியான வார்த்தையை கேட்டது… என்று இது வரை மாளவிகாவை தன் மருமகளாக பார்த்து கொண்டு இருந்த வசந்திக்கு.. தன் மகளின் வாழ்க்கை இவளை கொண்டும் தான் இந்த நிலைக்கு வந்து விட்டது என்று நினைத்தார்.

கூடவே மாளவிகாவை தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் முன். அடிக்கடி மாளவிகாவை வாசு தேவ் இங்கு கொண்டு வந்து விட்டு செல்வது..

திரும்ப வாசு தேவ் வந்து அழைத்து செல்லாது ஏதாவது வேலை இருப்பதாக சொல்லி விட்டு..

“ அத்த மாளவிகாவை தன் மகனை வீட்டிற்க்கு கொண்டு வந்து விடும் மாறு சொன்னது… சந்தியாவுடன் எங்காவது அழைத்து செல்லும் மாளவிகா ஏதாவது ஒரு காரணம் வைத்து கொண்டு இவர்கள் இருவரையும்… தன் மகன் கமல கண்ணன் அழைத்து செல்லும் மாறு செய்தது..

அன்று சொந்தம்… உறவு… வருவது போவது என்று அதை சாதாரணமாக நினைத்த வசந்திக்கு இதிலும் ஏதாவது இருக்குமோ என்ரு யோசிக்க வைத்தது..

அவர் யோசனை இப்படி இருந்ததில் மாளவிகா… “ அத்த அத்த உங்களுக்கும் டிபன் வைக்கட்டுமா….?” என்று கேட்டவள் வசந்தியிடம் பதில் வராது தன்னையோ யோசனையுடன் பார்த்து கொண்டு இருந்த அத்தையின் பார்வை புரியாது அவளே வசந்தியின் முன் தட்டை வைத்தவள்.

முதலில் அவளே செய்த பீட்ரூட் அல்வாவை வைத்தவள்…” அத்த இதை நானே செய்தேன்…” என்று வேறு சொல்ல.

அப்போது தான் தன் யோசனையில் இருந்து நிகழ்வுக்கு வந்த வசந்தி… “ என்ன இது.?” என்று தன் தட்டில் இருக்கும் இனிப்பை காட்டி கேட்டார்.. கேட்டவரின் குரலில் அத்தனை கோபம்..

இப்போது தான் தன் அத்தையின் குரலில் இருந்த பேதம் தெரிந்து.

“அத்த இன்னைக்கு எங்க கல்யாண நாள்… அதனால் அல்வா செய்தேன்…” என்று மாளவிகா சொன்னது தான் தாமதம் தன் முன் இருந்த தட்டை வீசி எரிந்து விட்டார்.

“என் மகள் வாழ்க்கையை தொலச்சிட்டு நிற்கிறா… நீ கல்யாண நாளை கொண்டாடுறியா டி….” என்று கத்த.

கமலக்கண்ணன். “ ம்மா கொஞ்சம் அமைதியா இருங்கம்மா…” என்று தன் அன்னையின் தோள் தொட்டு சமாதானம் படுத்த முயல…

தன் மகன் தொடுதலில் அந்த அன்னை உடைந்து அழுது விட்டார்… கணவன் சொன்னதில் மேலோட்டமாக பாதியை மட்டுமே கூறியவர்..

நேற்று வாசு தேவ் சொன்ன வார்த்தையிலும் இன்று மாளவிகா அடிக்கடி வந்து சென்றதையும் கூட்டிம்கழித்து பார்த்து. இவன் தன் தங்கைக்கு மாமா வேலையை பார்த்துட்டு என் புருஷனை சொல்றானா…

இவளுமே ஒரு பெண் இந்த வீட்டில் இப்படி இருக்க கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாது கல்யாண நாள் கொண்டாடுகிறாளா என்ற ஆத்திரத்தில் தன் மகனின் வாசு தேவ் கணபதியை பார்த்து கேட்ட கேள்வியை சொல்லி விட.

விளைவு மாளவிகா பெட்டி படுக்கையுடன் இங்கு இருந்து தன் அண்ணன் வீட்டிற்க்கு செல்லும் படி ஆகி விட்டது…..


 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
184
இவங்களை மறந்துட்டோமே.... வாசு கூட சேர்ந்துகிட்டு சாண்டில்யனை ஒதுக்கி வச்சாங்க தானே..... யாரோ மாதிரி விஷேசத்துல தனிச்சு நிக்கும் போது எவ்வளவு வேதனை பட்டுருப்பான்.... அவங்க தப்பையும் உணரணும் தானே... நல்லா வாங்கட்டும்...
 
Active member
Joined
May 7, 2025
Messages
36
நைஸ் டீசர் 🤩🤩🤩
சாண்டில்யன் என்ற ஒருத்தனுக்கு ஜோடி சேர்த்து முடிக்கும் குள்ள கதையில் உள்ள மற்ற அத்தனை ஜோடியையும் பிரிக்கும் நிலைமை வந்துடும் போல 😕😕😕
 
Top