அத்தியாயம்…17
ஸ்ரீ காந்தினால் தன் கையில் இருந்த அந்த விவாகரத்து நோட்டிஸ்ஸோடு அதில் இருந்த விசயம் தான் அவனை இன்னுமே மதி இழக்க செய்தது… கடந்த இரண்டு நாட்களாக பாவனா நடந்து கொண்டு இருக்கும் விதத்தை பார்த்தே புரிந்து கொண்டு விட்டான்..
இவள் தன்னை விட மாட்டாள் என்பது.. ஒரு விளையாட்டாக தான் இந்த தொடர்பை வைத்து கொண்டு இருந்தான்.. ஆனால் விளையாடி பார்க்க இது மைதானம் கிடையாதே… வாழ்க்கை என்று நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் பொட்டில் அடித்து சொல்வது போல சொல்லி கொண்டு இருந்தது.
ஸ்ரீ காந்த் இப்படி அதிர்ந்து போன தோற்றத்தை பார்த்த பவானி…. “ எது செய்தா… இந்த விளைவு வரும் என்று தெரியாம தான் எல்லாம் செய்தியா என்ன….?” என்று சொன்ன பவானியின் பார்வை பாவனாவின் முகத்தை தொட்டு பின் அவளின் வயிற்றை பார்த்தவர் இறுதியாக..
ஸ்ரீ காந்த் கையில் இருக்கும் விவாகரத்து பத்திரத்தையும் பார்த்து விட்டு கணவன் செனற அறைக்கு சென்று விட்டார்..அனிதா தன் கணவன் சொன்னது போல குழந்தைக்கு ஊட்டி முடித்த பின் மாடிக்கு சென்று விட..
இதோ பாவனா ஸ்ரீ காந்த் மட்டுமே அந்த கூடத்தில் தனித்து இருந்தனர்… பாவனாவுக்கும் தெரியும் அது விவாகரத்து நோட்டிஸ் என்று.. மற்றவர்களை போல் அவள் அதிர எல்லாம் இல்லை..இன்னும் கேட்டால் கொஞ்சம் நிம்மதி தான் அவளுக்கு.
அதில்.. “என்ன அதையே பார்த்துட்டு இருக்கிங்க ஸ்ரீ.. கைய்யெழுத்து போட்டுட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பிரச்சனையை முடிக்க பாருங்க…” என்று சொன்னவளிடம் கோபமாக பார்த்த ஸ்ரீ காந்த்…
“ என்ன பிரச்சனை முடிக்க பார்க்க.. இனி தான் எனக்கு பிரச்சனையே…?” என்று கோபமாக சொன்னவன் பின்..
தன் கையில் இருந்த அந்த விவாகரத்து பத்திரத்தை அவள் பக்கம் நீட்டி… “ இதுல என்ன இருக்கு தெரியுமா…? நான் ஒரு பொம்பள பொறுக்கி… என் பெண் என் கிட்ட இருப்பது பாதுகாப்பு இல்லை என்று இருக்கு….” என்று சத்தமாக கத்தினான்..
இது மாடியில் இருந்த அனிதாவின் காதில் தெளிவாகவே விழுந்தது.. மாடியில் இருப்பவள் காதில் விழும் போது கீழ் தளத்தில் இருக்கும் அவனின் பெற்றோர் காதில் விழாமலா இருந்து இருக்கும்.. விழுந்தது.. வயதான காலத்தில் இன்னும் என்ன என்ன எல்லாம் கேட்க வேண்டி இருக்கோ என்று நினைத்து தங்கள் அறையில் கண்ணை மூடிக் கொண்டனர்..
ஆனால் காதை மூட முடியாது போனதால் அடுத்து அடுத்து கூடத்தில் நடந்த பேச்சு வார்த்தைகளை அனைத்தும் கேட்க நேர்ந்தது…
பாவனா… “ செட்டில்மெண்ட் ரொம்ப டிமெண்ட பண்றாளா என்ன….?” அவளுக்கு அவள் பிரச்சனை என்பது போல கேட்டாள்..
அவள் கேட்டது அவன் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை..
அவன் பாட்டுக்கு.. “ எனக்கு தெரியும்.. டைவஸ் ஆனா குழந்தைகள் அம்மா கிட்ட தான் வளரனும் என்று தான் சொல்லுவாங்க. ஆனாலும் அப்பாவும் குழந்தைகளை பார்க்கலாம். ஒரு குறிப்பிட்ட நாட்கள் வைத்து கொள்ளலாம் என்று சட்டம் இருக்கு… ஆனா இது போல. சுத்தமா என் பொண்ணுங்களை என் கிட்ட இருந்து பிரிக்க பார்க்கிறாளா..? என்று அத்தனை கோபமாக கத்த.
பாவனா… “ விடு ஸ்ரீ..” என்றாள்.
அவளுக்கு இது ஒரு வகையில் நிம்மதி தானே.. இனி முதல் வாழ்க்கையின் எந்த சொச்சமும் அவர்களின் வாழ்க்கையில் பின் தொடராது தானே…
ஆனால் ஸ்ரீ காந்த் விடுவதாக இல்லை… ஸ்ருதிகா ஸ்ரீ இருக்கும் வீடு தெரிந்து அவள் வீட்டின் முன் நின்று விட்டான்..
வெளியில் நின்று கொண்டே…. “ ஏய் ஸ்ருதிகா ஏய் ஸ்ருதிகா…” என்று கத்தினான்..
அப்போது வீட்டில் அனைவரும் தான் இருந்தனர்.. ஸ்ருதிகா குளித்து கொண்டு இருந்ததினால், குளியல் அறையில் தண்ணீர் வரும் சத்தத்தில் அவள் காதில் ஸ்ரீ காந்த் தன் பெயரை கத்தி அழைத்தது கேட்கவில்லை..
ஆனால் கூடத்தில் குழந்தைகளோடு இருந்த ஷண்முகமதிக்கு கேட்க… அவர் சட்டென்று குழந்தைகளை தான் பார்த்தார்…
விளையாடி கொண்டு இருந்த குழந்தைகளும்… தந்தையின் குரலில் முதலில் அடையாளம் கண்டு கொண்டு இயல் இசை இருவரின் முகத்திலும் சட்டென்று முதலில் மகிழ்ச்சி வந்தது தான்.
பின் இருக்காதா… தந்தையானவனை குழந்தைகளின் நியாபகத்தில் இருக்க தானே செய்யும்.. என்ன தான் அப்பாவை கேட்டால், அம்மா அழுகிறார்கள் என்று கேட்காது விட்டாலும், மனதில் நினைக்கும் தானே.. அதனால் ஐய் ப்பா என்று இரு குழந்தைகளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு தங்கள் கையில் இருந்த விளையாட்டு பொருளை வைத்து விட்டு இருவரும் கை பிடித்து கொண்டு வாசலுக்கு ஒடி வந்து நின்று விட்டனர்…
தந்தையின் குரலை கேட்ட குழந்தைகளுக்கு அதில் இருக்கும் கோபத்தை இனம் காண முடியவில்லை… என்ன தான் அவர்கள் புத்திசாலியான குழந்தைங்களாக இருந்தாலும், குழந்தைகள் தானே…
ஆனால் ஷண்முகமதிக்கு தெரியுமே.. அதுவும் எதனால் என்பதும் இரண்டு நாட்கள் முன் தன் மகள் இந்த காரணமாக தான் விவாகரத்து கேட்பதாக கேஸ் பைல் பண்ணி இருக்கு என்று சொன்னதினால் ஸ்ரீ காந்த் ஏன் சத்தம் இடுகிறான் என்று புரிந்தவருக்கு குழந்தைகளை அறைக்குள் அழைத்து சென்று விடலாம் என்று நினைக்கும் முன் இரண்டு சிட்டுக்களும் ஒன்று போல் கை பிடித்து கொண்டு சென்று விட.
பாவம் மூப்பின் காரணமாக அமர்ந்து கொண்டு இருந்தவருக்கு, இருக்கையை விட்டு சட்டென்று எழ முடியாது போக அவர் எழுந்து சமீபத்தில் தான் கீழே விழுந்தவர் என்ற காரணத்தினால் விரைந்து நடக்கவும் முடியாது மெல்ல நடந்து சென்றதில்.
குழந்தைகள் இரண்டும் ஆசையோடு தன் தந்தையை பார்க்க வெளியில் சென்றவர்கள். மிக சத்தமாக. அதுவும் தன் அன்னையின் பெயரை சொல்லி கத்தி கொண்டு இருப்பதை பார்த்து விட்டு குழந்தைகள் பயந்து போய் விட்டார்கள்.
அதில் பின் வந்த பாட்டியிடம் தங்களை மறைத்து கொண்ட குழந்தைகள்.. பயத்துடன் பாட்டியின் இடையில் எட்டி எட்டி வேறு பார்த்து கொண்டு இருக்க…
தன் பேத்திகளின் இந்த செய்லகளையும்.. அவர்களின் பயத்தையும் பார்த்த அந்த பாட்டிக்கு..
கடவுளே என் வயதுக்கு இன்னும் என்ன என்ன எல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ என்று தான் மனதிற்க்குள் அழ முடிந்தது..
ஒரு மனிதன் கோபத்தில் மதி இழக்க செய்யும் என்று சொல்வது உண்மை என்பது போல் தான் குழந்தைகள் வந்து நிற்பதையோ.. தன்னை பார்த்து பயப்படுகிறார்கள் என்று கூட உணராது இன்னும் இன்னும்..
“என் வீட்டில் இருக்கும் போது ஊமை போல இருந்துட்டு… இப்போ என்ன என்ன வேலை எல்லாம் பார்க்குற டி…” அவன் பார்க்க கூடாத வேலைகளை எல்லாம் பார்த்து விட்டு ஸ்ருதியை சத்தம் போட்டான்..
வீட்டிற்க்குள் ஸ்ருதிகா ஸ்ரீ தன் குளியலை முடித்து விட்டு ஒரு காட்டன் புடவையை கட்டி, நெற்றியில் ஒரு பொட்டு இட்டுக் கொண்டவள்..
தன் தலையில் கட்டி இருந்து துண்டை கழட்டி தன் தலை முடியை துவட்டிக் கொண்டே படுக்கை அறையில் சாற்றி இருந்த கதவை திறந்து கூடத்திற்க்கு வந்து பார்த்த போது அங்கு யாரும் இல்லாது இருப்பதை பார்த்த போது தான் ஸ்ரீ காந்த் சத்தமும் காதில் கேட்டது.
அதில் குழந்தைகளை நினைத்து தான் பயந்து போய் வெளியில் வந்து பார்த்தாள்.. அவள் நினைத்தது போலவே குழந்தைகள் பயந்து கொண்டு இருப்பதை பார்த்து தன் அன்னையிடம்..
“ம்மா முதல்ல குழந்தைகளை கூட்டிட்டு உள்ளே போம்மா….” என்று சொல்ல.
ஷண்முகமதியோ… ஸ்ரீ காந்த்தை ஒரு வித தயக்கத்துடன் பார்த்து கொண்டு போகாது நிற்பதை பார்த்து …
“ம்மா இங்கு நான் பார்த்துக்குறேன்.. முதல்ல குழந்தைகளை அழச்சிட்டு உள்ளே போங்க…” என்று அழுத்தமாக சொன்னதில் ஷண்முகமதி.
“வாடா செல்லங்கலா…” என்று குழந்தைகளை அழைத்தார்..
ஆனால் குழந்தைகள் இரண்டும் இப்போது அன்னையின் இரு கையையும் கெட்டியாக பிடித்து கொண்டவர்கள்.
“ம்மா நீங்களும் வாங்கம்மா. வீட்டுக்குள் போய் லாக் பண்ணிக்கலாம்…” என்று தன் அன்னையையுமே அழைத்தது..
அதில் ஸ்ருதிகா கத்தி கொண்டு இருந்த ஸ்ரீ காந்த்தை ஒரு மாதிரி கேவலமாக பார்த்தாள் என்றால் ஸ்ரீ காந்த்.. பளிச் என்று புடவை கட்டிக் கொண்டு.. இருந்த மனைவியின் இந்த தோற்றத்தை முதலில் ஆச்சரியமாக பார்த்தவன் பின் அதற்க்கும் சேர்த்து வைத்து கத்த தொடங்கினான்..
“உன்னை இது போல தானே டி.. இருக்க சொன்னேன்.. என் கூட இருக்கும் போது அந்த இத்து போன நையிட்டியில் சுத்திட்டு இருந்தவ.. இப்போ எப்படி ட்ரஸ் பண்ற. அங்கு அங்கு பொம்பளைங்க புருஷன் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்க தான் ட்ரஸ் பண்ணுவாங்க.. ஆனா நீ நான் இல்லாத போது யார் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்க இது போல ட்ரஸ் பண்ணிட்டு இருக்க டி…” என்று அடுத்து என்ன சொல்லி கத்தி கொண்டு இருந்து இருப்பானோ…
அங்கு வந்து நின்ற சாண்டில்யனால் அவன் பேச்சு நின்று விட்டது… ஸ்ரீ காந்த் சாண்டியனை பார்த்தவன் யாரு இது என்பது போல பார்க்க.
அவனோ அங்கு அவன் ஒருத்தன் இருக்கிறான் என்பதே சட்டை செய்யாது ஸ்ருதிகா ஸ்ரீயிடம்…
“ஸ்ருதி நீ வீட்டிற்க்குள் போ.. குழந்தைங்க பயப்படுத்து பாரு….” என்று குழந்தைகளின் பயந்த முகத்தை பார்த்து கொண்டே சொல்ல.
ஸ்ருதிகா ஸ்ரீயும் குழந்தை பயப்படுவதில் சட்டென்று தன் குழந்தைகளை அழைத்து கொண்டு ஸ்ருதிகா ஸ்ரீ வீட்டிற்க்குள் உள் நுழையும் போது ஸ்ரீ காந்த்..
“ஏய் நில்லுடி அவன் சொன்னா போயிடுவீயா. நில்லு டி நில்லுடி…” என்று அவன் கத்த கத்த ஸ ஸ்ருதிகா ஸ்ரீ வீட்டிற்க்குள் சென்றதோடு மட்டும் அல்லாது கதவையும் அடைத்து கொண்டாள்..
அது வரை சாண்டில்யனின் பார்வை ஸ்ரீ காந்த் பக்கம் திரும்பவே இல்லை.. ஸ்ருதிகா ஸ்ரீ கதவை அடைத்த பின் தான்.
“குட்…” என்று சொன்னவன் பின் ஸ்ரீ காந்த் பக்கம் பார்த்து… “ நீ உனக்கு வந்த நோட்டிஸை சரியா படிச்சி பார்த்தியா இல்லையா…? இந்த வழக்கு சம்மந்தம்மா எந்த ஒரு காரணத்திற்க்காவும் என் கட்சிக்காரரை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள கூடாது என்று எழுதி இருந்தேன் தானே…..” என்று சாண்டில்யன் பேச பேச தான்…
சாண்டில்யன் வந்து நின்ற அந்த தோரணை… அதுவும் ஸ்ருதிகா ஸ்ரீயிடம் அத்தனை உரிமையாக பேசியது.. ஸ்ருதிகா ஸ்ரீயுமே இவன் பேச்சை கேட்டு நடந்து கொண்டது என்று பார்த்து கொண்டு இருந்தவனுக்கு சாண்டில்யனின் இந்த பேச்சில் அவன் யார் என்று தெரிந்து விட்டது.
அதில் அவனை ஒரு மாதிரி பார்வை பார்த்த ஸ்ரீ காந்த்.. “ வக்கீல் பேச்சு எல்லாம் நீதிமன்றத்தில் தான் இருக்கும்.. அதுவும் பெண்களுக்கு டைவஸ் வாங்கி தருவது என்றால் வீடு வரை வந்து தான் நீங்க வாங்கி தருவீங்கலோ….?” என்று ஒரு வித எள்ளலாக கேட்டான்..
அதற்க்கு சாண்டில்யன் அவனை விட மிக நக்கலாம குரலில்… “ மத்த பெண்களுக்கு கிடையாது.. ஆனா ஸ்ருதிக்கு மட்டும் தான் நான் இந்த ஆபர் கொடுக்கிறேன்…” என்ற இந்த பதிலில் ஸ்ரீ காந்த் ஆடி தான் போய் விட்டான்.
தான் இது போல பேசினால், என்ன இது பேச்சு என்று திட்டுவான்… கோபக்காரன் என்றால் அடிக்க வருவான் என்று பார்த்தால், இவன் என்ன என்று அவன் யோசிக்கும் போதே…
சாண்டில்யன்…. “ரொம்ப எல்லாம் யோசிக்காதே… இனி யோசித்தும் ஒன்னும் வேலைக்கு ஆகாது. உன்னை யோசிக்கவும் விட மாட்டா உன் வீட்டில் இருக்கும் அந்த பெண்… “ என்று சாண்டில்யன் பேச பேச ஸ்ரீ காந்த் முகத்தில் அத்தனை அதிர்வு..
அதில்.. “ அப்போ எனக்கு அனுப்பிய அந்த நோட்டிஸ்ஸில்…. நான் ஒரு பல பெண்களோடு தொடர்பில் இருக்கேன்.. என்று அது போல…” என்று கேட்டவன் குரலிலுமே அத்தனை அதிர்வு…
சாண்டில்யன் அவனின் அந்த அதிர்வை உள்வாங்கியவனாக …. “ ஆமாம் நான் தான் அந்த பாயிண்டை மென்ஷன் பண்ணேன். ஸ்ருதிகாவும் உடனே ஒத்து கொண்டாள்…” என்ற சாண்டில்யனின் பேச்சில் ஸ்ருதிகா ஸ்ரீயிடம் இருக்கும் உரிமை அவனுக்கு அபட்டமாக தெரிந்தது.
அதில்.. “ ஏன்..? என்று கேட்டவனுக்கு சாண்டில்யன் சிரித்து கொண்டே…
“எனக்கு ஸ்ருதிகாவும் வேண்டும்.. இரண்டு குழந்தைகளும் வேண்டும்.. இனி இயல் இசைக்கு நான் மட்டுமே அப்பாவா இருக்கனும்.. இப்போ புரியுதா..?” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவனிடம் ஸ்ரீ காந்த்.
மீண்டும் ஒரு ஏன் போட… “ ஏன்னா எனக்கு முதலுல் முடிவுமா பார்த்த பெண் ஸ்ருதிகா ஸ்ரீ… அப்போ தான் மிஸ் பண்ணிட்டேன்.. இனி அவளை என் மிஸ்ஸாஸ ஆக்காது விட மாட்டேன்..” என்று விட்டான்…
ஸ்ரீ காந்தினால் தன் கையில் இருந்த அந்த விவாகரத்து நோட்டிஸ்ஸோடு அதில் இருந்த விசயம் தான் அவனை இன்னுமே மதி இழக்க செய்தது… கடந்த இரண்டு நாட்களாக பாவனா நடந்து கொண்டு இருக்கும் விதத்தை பார்த்தே புரிந்து கொண்டு விட்டான்..
இவள் தன்னை விட மாட்டாள் என்பது.. ஒரு விளையாட்டாக தான் இந்த தொடர்பை வைத்து கொண்டு இருந்தான்.. ஆனால் விளையாடி பார்க்க இது மைதானம் கிடையாதே… வாழ்க்கை என்று நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் பொட்டில் அடித்து சொல்வது போல சொல்லி கொண்டு இருந்தது.
ஸ்ரீ காந்த் இப்படி அதிர்ந்து போன தோற்றத்தை பார்த்த பவானி…. “ எது செய்தா… இந்த விளைவு வரும் என்று தெரியாம தான் எல்லாம் செய்தியா என்ன….?” என்று சொன்ன பவானியின் பார்வை பாவனாவின் முகத்தை தொட்டு பின் அவளின் வயிற்றை பார்த்தவர் இறுதியாக..
ஸ்ரீ காந்த் கையில் இருக்கும் விவாகரத்து பத்திரத்தையும் பார்த்து விட்டு கணவன் செனற அறைக்கு சென்று விட்டார்..அனிதா தன் கணவன் சொன்னது போல குழந்தைக்கு ஊட்டி முடித்த பின் மாடிக்கு சென்று விட..
இதோ பாவனா ஸ்ரீ காந்த் மட்டுமே அந்த கூடத்தில் தனித்து இருந்தனர்… பாவனாவுக்கும் தெரியும் அது விவாகரத்து நோட்டிஸ் என்று.. மற்றவர்களை போல் அவள் அதிர எல்லாம் இல்லை..இன்னும் கேட்டால் கொஞ்சம் நிம்மதி தான் அவளுக்கு.
அதில்.. “என்ன அதையே பார்த்துட்டு இருக்கிங்க ஸ்ரீ.. கைய்யெழுத்து போட்டுட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பிரச்சனையை முடிக்க பாருங்க…” என்று சொன்னவளிடம் கோபமாக பார்த்த ஸ்ரீ காந்த்…
“ என்ன பிரச்சனை முடிக்க பார்க்க.. இனி தான் எனக்கு பிரச்சனையே…?” என்று கோபமாக சொன்னவன் பின்..
தன் கையில் இருந்த அந்த விவாகரத்து பத்திரத்தை அவள் பக்கம் நீட்டி… “ இதுல என்ன இருக்கு தெரியுமா…? நான் ஒரு பொம்பள பொறுக்கி… என் பெண் என் கிட்ட இருப்பது பாதுகாப்பு இல்லை என்று இருக்கு….” என்று சத்தமாக கத்தினான்..
இது மாடியில் இருந்த அனிதாவின் காதில் தெளிவாகவே விழுந்தது.. மாடியில் இருப்பவள் காதில் விழும் போது கீழ் தளத்தில் இருக்கும் அவனின் பெற்றோர் காதில் விழாமலா இருந்து இருக்கும்.. விழுந்தது.. வயதான காலத்தில் இன்னும் என்ன என்ன எல்லாம் கேட்க வேண்டி இருக்கோ என்று நினைத்து தங்கள் அறையில் கண்ணை மூடிக் கொண்டனர்..
ஆனால் காதை மூட முடியாது போனதால் அடுத்து அடுத்து கூடத்தில் நடந்த பேச்சு வார்த்தைகளை அனைத்தும் கேட்க நேர்ந்தது…
பாவனா… “ செட்டில்மெண்ட் ரொம்ப டிமெண்ட பண்றாளா என்ன….?” அவளுக்கு அவள் பிரச்சனை என்பது போல கேட்டாள்..
அவள் கேட்டது அவன் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை..
அவன் பாட்டுக்கு.. “ எனக்கு தெரியும்.. டைவஸ் ஆனா குழந்தைகள் அம்மா கிட்ட தான் வளரனும் என்று தான் சொல்லுவாங்க. ஆனாலும் அப்பாவும் குழந்தைகளை பார்க்கலாம். ஒரு குறிப்பிட்ட நாட்கள் வைத்து கொள்ளலாம் என்று சட்டம் இருக்கு… ஆனா இது போல. சுத்தமா என் பொண்ணுங்களை என் கிட்ட இருந்து பிரிக்க பார்க்கிறாளா..? என்று அத்தனை கோபமாக கத்த.
பாவனா… “ விடு ஸ்ரீ..” என்றாள்.
அவளுக்கு இது ஒரு வகையில் நிம்மதி தானே.. இனி முதல் வாழ்க்கையின் எந்த சொச்சமும் அவர்களின் வாழ்க்கையில் பின் தொடராது தானே…
ஆனால் ஸ்ரீ காந்த் விடுவதாக இல்லை… ஸ்ருதிகா ஸ்ரீ இருக்கும் வீடு தெரிந்து அவள் வீட்டின் முன் நின்று விட்டான்..
வெளியில் நின்று கொண்டே…. “ ஏய் ஸ்ருதிகா ஏய் ஸ்ருதிகா…” என்று கத்தினான்..
அப்போது வீட்டில் அனைவரும் தான் இருந்தனர்.. ஸ்ருதிகா குளித்து கொண்டு இருந்ததினால், குளியல் அறையில் தண்ணீர் வரும் சத்தத்தில் அவள் காதில் ஸ்ரீ காந்த் தன் பெயரை கத்தி அழைத்தது கேட்கவில்லை..
ஆனால் கூடத்தில் குழந்தைகளோடு இருந்த ஷண்முகமதிக்கு கேட்க… அவர் சட்டென்று குழந்தைகளை தான் பார்த்தார்…
விளையாடி கொண்டு இருந்த குழந்தைகளும்… தந்தையின் குரலில் முதலில் அடையாளம் கண்டு கொண்டு இயல் இசை இருவரின் முகத்திலும் சட்டென்று முதலில் மகிழ்ச்சி வந்தது தான்.
பின் இருக்காதா… தந்தையானவனை குழந்தைகளின் நியாபகத்தில் இருக்க தானே செய்யும்.. என்ன தான் அப்பாவை கேட்டால், அம்மா அழுகிறார்கள் என்று கேட்காது விட்டாலும், மனதில் நினைக்கும் தானே.. அதனால் ஐய் ப்பா என்று இரு குழந்தைகளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு தங்கள் கையில் இருந்த விளையாட்டு பொருளை வைத்து விட்டு இருவரும் கை பிடித்து கொண்டு வாசலுக்கு ஒடி வந்து நின்று விட்டனர்…
தந்தையின் குரலை கேட்ட குழந்தைகளுக்கு அதில் இருக்கும் கோபத்தை இனம் காண முடியவில்லை… என்ன தான் அவர்கள் புத்திசாலியான குழந்தைங்களாக இருந்தாலும், குழந்தைகள் தானே…
ஆனால் ஷண்முகமதிக்கு தெரியுமே.. அதுவும் எதனால் என்பதும் இரண்டு நாட்கள் முன் தன் மகள் இந்த காரணமாக தான் விவாகரத்து கேட்பதாக கேஸ் பைல் பண்ணி இருக்கு என்று சொன்னதினால் ஸ்ரீ காந்த் ஏன் சத்தம் இடுகிறான் என்று புரிந்தவருக்கு குழந்தைகளை அறைக்குள் அழைத்து சென்று விடலாம் என்று நினைக்கும் முன் இரண்டு சிட்டுக்களும் ஒன்று போல் கை பிடித்து கொண்டு சென்று விட.
பாவம் மூப்பின் காரணமாக அமர்ந்து கொண்டு இருந்தவருக்கு, இருக்கையை விட்டு சட்டென்று எழ முடியாது போக அவர் எழுந்து சமீபத்தில் தான் கீழே விழுந்தவர் என்ற காரணத்தினால் விரைந்து நடக்கவும் முடியாது மெல்ல நடந்து சென்றதில்.
குழந்தைகள் இரண்டும் ஆசையோடு தன் தந்தையை பார்க்க வெளியில் சென்றவர்கள். மிக சத்தமாக. அதுவும் தன் அன்னையின் பெயரை சொல்லி கத்தி கொண்டு இருப்பதை பார்த்து விட்டு குழந்தைகள் பயந்து போய் விட்டார்கள்.
அதில் பின் வந்த பாட்டியிடம் தங்களை மறைத்து கொண்ட குழந்தைகள்.. பயத்துடன் பாட்டியின் இடையில் எட்டி எட்டி வேறு பார்த்து கொண்டு இருக்க…
தன் பேத்திகளின் இந்த செய்லகளையும்.. அவர்களின் பயத்தையும் பார்த்த அந்த பாட்டிக்கு..
கடவுளே என் வயதுக்கு இன்னும் என்ன என்ன எல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ என்று தான் மனதிற்க்குள் அழ முடிந்தது..
ஒரு மனிதன் கோபத்தில் மதி இழக்க செய்யும் என்று சொல்வது உண்மை என்பது போல் தான் குழந்தைகள் வந்து நிற்பதையோ.. தன்னை பார்த்து பயப்படுகிறார்கள் என்று கூட உணராது இன்னும் இன்னும்..
“என் வீட்டில் இருக்கும் போது ஊமை போல இருந்துட்டு… இப்போ என்ன என்ன வேலை எல்லாம் பார்க்குற டி…” அவன் பார்க்க கூடாத வேலைகளை எல்லாம் பார்த்து விட்டு ஸ்ருதியை சத்தம் போட்டான்..
வீட்டிற்க்குள் ஸ்ருதிகா ஸ்ரீ தன் குளியலை முடித்து விட்டு ஒரு காட்டன் புடவையை கட்டி, நெற்றியில் ஒரு பொட்டு இட்டுக் கொண்டவள்..
தன் தலையில் கட்டி இருந்து துண்டை கழட்டி தன் தலை முடியை துவட்டிக் கொண்டே படுக்கை அறையில் சாற்றி இருந்த கதவை திறந்து கூடத்திற்க்கு வந்து பார்த்த போது அங்கு யாரும் இல்லாது இருப்பதை பார்த்த போது தான் ஸ்ரீ காந்த் சத்தமும் காதில் கேட்டது.
அதில் குழந்தைகளை நினைத்து தான் பயந்து போய் வெளியில் வந்து பார்த்தாள்.. அவள் நினைத்தது போலவே குழந்தைகள் பயந்து கொண்டு இருப்பதை பார்த்து தன் அன்னையிடம்..
“ம்மா முதல்ல குழந்தைகளை கூட்டிட்டு உள்ளே போம்மா….” என்று சொல்ல.
ஷண்முகமதியோ… ஸ்ரீ காந்த்தை ஒரு வித தயக்கத்துடன் பார்த்து கொண்டு போகாது நிற்பதை பார்த்து …
“ம்மா இங்கு நான் பார்த்துக்குறேன்.. முதல்ல குழந்தைகளை அழச்சிட்டு உள்ளே போங்க…” என்று அழுத்தமாக சொன்னதில் ஷண்முகமதி.
“வாடா செல்லங்கலா…” என்று குழந்தைகளை அழைத்தார்..
ஆனால் குழந்தைகள் இரண்டும் இப்போது அன்னையின் இரு கையையும் கெட்டியாக பிடித்து கொண்டவர்கள்.
“ம்மா நீங்களும் வாங்கம்மா. வீட்டுக்குள் போய் லாக் பண்ணிக்கலாம்…” என்று தன் அன்னையையுமே அழைத்தது..
அதில் ஸ்ருதிகா கத்தி கொண்டு இருந்த ஸ்ரீ காந்த்தை ஒரு மாதிரி கேவலமாக பார்த்தாள் என்றால் ஸ்ரீ காந்த்.. பளிச் என்று புடவை கட்டிக் கொண்டு.. இருந்த மனைவியின் இந்த தோற்றத்தை முதலில் ஆச்சரியமாக பார்த்தவன் பின் அதற்க்கும் சேர்த்து வைத்து கத்த தொடங்கினான்..
“உன்னை இது போல தானே டி.. இருக்க சொன்னேன்.. என் கூட இருக்கும் போது அந்த இத்து போன நையிட்டியில் சுத்திட்டு இருந்தவ.. இப்போ எப்படி ட்ரஸ் பண்ற. அங்கு அங்கு பொம்பளைங்க புருஷன் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்க தான் ட்ரஸ் பண்ணுவாங்க.. ஆனா நீ நான் இல்லாத போது யார் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்க இது போல ட்ரஸ் பண்ணிட்டு இருக்க டி…” என்று அடுத்து என்ன சொல்லி கத்தி கொண்டு இருந்து இருப்பானோ…
அங்கு வந்து நின்ற சாண்டில்யனால் அவன் பேச்சு நின்று விட்டது… ஸ்ரீ காந்த் சாண்டியனை பார்த்தவன் யாரு இது என்பது போல பார்க்க.
அவனோ அங்கு அவன் ஒருத்தன் இருக்கிறான் என்பதே சட்டை செய்யாது ஸ்ருதிகா ஸ்ரீயிடம்…
“ஸ்ருதி நீ வீட்டிற்க்குள் போ.. குழந்தைங்க பயப்படுத்து பாரு….” என்று குழந்தைகளின் பயந்த முகத்தை பார்த்து கொண்டே சொல்ல.
ஸ்ருதிகா ஸ்ரீயும் குழந்தை பயப்படுவதில் சட்டென்று தன் குழந்தைகளை அழைத்து கொண்டு ஸ்ருதிகா ஸ்ரீ வீட்டிற்க்குள் உள் நுழையும் போது ஸ்ரீ காந்த்..
“ஏய் நில்லுடி அவன் சொன்னா போயிடுவீயா. நில்லு டி நில்லுடி…” என்று அவன் கத்த கத்த ஸ ஸ்ருதிகா ஸ்ரீ வீட்டிற்க்குள் சென்றதோடு மட்டும் அல்லாது கதவையும் அடைத்து கொண்டாள்..
அது வரை சாண்டில்யனின் பார்வை ஸ்ரீ காந்த் பக்கம் திரும்பவே இல்லை.. ஸ்ருதிகா ஸ்ரீ கதவை அடைத்த பின் தான்.
“குட்…” என்று சொன்னவன் பின் ஸ்ரீ காந்த் பக்கம் பார்த்து… “ நீ உனக்கு வந்த நோட்டிஸை சரியா படிச்சி பார்த்தியா இல்லையா…? இந்த வழக்கு சம்மந்தம்மா எந்த ஒரு காரணத்திற்க்காவும் என் கட்சிக்காரரை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள கூடாது என்று எழுதி இருந்தேன் தானே…..” என்று சாண்டில்யன் பேச பேச தான்…
சாண்டில்யன் வந்து நின்ற அந்த தோரணை… அதுவும் ஸ்ருதிகா ஸ்ரீயிடம் அத்தனை உரிமையாக பேசியது.. ஸ்ருதிகா ஸ்ரீயுமே இவன் பேச்சை கேட்டு நடந்து கொண்டது என்று பார்த்து கொண்டு இருந்தவனுக்கு சாண்டில்யனின் இந்த பேச்சில் அவன் யார் என்று தெரிந்து விட்டது.
அதில் அவனை ஒரு மாதிரி பார்வை பார்த்த ஸ்ரீ காந்த்.. “ வக்கீல் பேச்சு எல்லாம் நீதிமன்றத்தில் தான் இருக்கும்.. அதுவும் பெண்களுக்கு டைவஸ் வாங்கி தருவது என்றால் வீடு வரை வந்து தான் நீங்க வாங்கி தருவீங்கலோ….?” என்று ஒரு வித எள்ளலாக கேட்டான்..
அதற்க்கு சாண்டில்யன் அவனை விட மிக நக்கலாம குரலில்… “ மத்த பெண்களுக்கு கிடையாது.. ஆனா ஸ்ருதிக்கு மட்டும் தான் நான் இந்த ஆபர் கொடுக்கிறேன்…” என்ற இந்த பதிலில் ஸ்ரீ காந்த் ஆடி தான் போய் விட்டான்.
தான் இது போல பேசினால், என்ன இது பேச்சு என்று திட்டுவான்… கோபக்காரன் என்றால் அடிக்க வருவான் என்று பார்த்தால், இவன் என்ன என்று அவன் யோசிக்கும் போதே…
சாண்டில்யன்…. “ரொம்ப எல்லாம் யோசிக்காதே… இனி யோசித்தும் ஒன்னும் வேலைக்கு ஆகாது. உன்னை யோசிக்கவும் விட மாட்டா உன் வீட்டில் இருக்கும் அந்த பெண்… “ என்று சாண்டில்யன் பேச பேச ஸ்ரீ காந்த் முகத்தில் அத்தனை அதிர்வு..
அதில்.. “ அப்போ எனக்கு அனுப்பிய அந்த நோட்டிஸ்ஸில்…. நான் ஒரு பல பெண்களோடு தொடர்பில் இருக்கேன்.. என்று அது போல…” என்று கேட்டவன் குரலிலுமே அத்தனை அதிர்வு…
சாண்டில்யன் அவனின் அந்த அதிர்வை உள்வாங்கியவனாக …. “ ஆமாம் நான் தான் அந்த பாயிண்டை மென்ஷன் பண்ணேன். ஸ்ருதிகாவும் உடனே ஒத்து கொண்டாள்…” என்ற சாண்டில்யனின் பேச்சில் ஸ்ருதிகா ஸ்ரீயிடம் இருக்கும் உரிமை அவனுக்கு அபட்டமாக தெரிந்தது.
அதில்.. “ ஏன்..? என்று கேட்டவனுக்கு சாண்டில்யன் சிரித்து கொண்டே…
“எனக்கு ஸ்ருதிகாவும் வேண்டும்.. இரண்டு குழந்தைகளும் வேண்டும்.. இனி இயல் இசைக்கு நான் மட்டுமே அப்பாவா இருக்கனும்.. இப்போ புரியுதா..?” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவனிடம் ஸ்ரீ காந்த்.
மீண்டும் ஒரு ஏன் போட… “ ஏன்னா எனக்கு முதலுல் முடிவுமா பார்த்த பெண் ஸ்ருதிகா ஸ்ரீ… அப்போ தான் மிஸ் பண்ணிட்டேன்.. இனி அவளை என் மிஸ்ஸாஸ ஆக்காது விட மாட்டேன்..” என்று விட்டான்…