Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட...18

  • Thread Author
அத்தியாயம்….18

அனைத்திலும் தோற்று விட்ட தோற்றத்தில் தான் அன்று ஸ்ரீ காந்த் வீடு வந்து சேர்ந்தது.. ஒரு பொருள் தன் கையில் இருக்கும் போது அதனின் மதிப்பு தெரியாது… தன் கை விட்டு சென்ற பின் தான் அதன் மதிப்பு தெரியும்.. அது போல ஸ்ருதிகா ஸ்ரீயின் அருமை ஸ்ரீ காந்த் இப்போது தான் உணர்ந்தான்.. .

அதுவும் சாண்டொல்யன் சொன்ன முதலில் பெண் பார்த்தது நான் தான்.. அன்று மிஸ் செய்து விட்டேன் இன்று என் மிஸ்ஸஸ் ஆக்காது விட மாட்டேன் என்ற அந்த பேச்சில் இது வரை.. ஸ்ருதிகா ஸ்ரீயை சாதாரணமால நினைத்து கொண்டு இருந்தவளின் உயர்வு இப்போது அவனுக்கு விளங்கியது… சாண்டில்யன் சொன்ன போது அவன் கண்களில் தெரிந்த அந்த பிடித்தம் உரிமை.. இரண்டு குழந்தைகளுக்கு தாயானவளை குழந்தையோடு தாங்கி கொள்ள. அனைத்து தகுதியும் நிறைந்து இருக்கும் தான் இருக்கிறேன் என்று நின்றவனின் தோற்றத்தில் ஸ்ரீ காந்த் அமைதியாக வந்து விட்டாலும்.. அவன் மனதுக்கு அமைதி கிட்டவில்லை.. ஆனால் காலம் கடந்த பின்… என்ன யோசித்து என்ன பயன்…?

இதோ வீட்டில் வந்தவன் தன் அறைக்கு வந்தான்.. ஸ்ருதிகா ஸ்ரீ இருக்கும் போது இருப்பது போல அறை சுத்தமாக இல்லாத போதிலும்.. இவனே ஒரளவுக்கு சரி செய்து வைத்திருந்தவனின் அறை இப்போது இன்னும் மோசமாக இருந்தது..

பாவனா கப்போர்ட்டில் இருந்து எடுத்த உடைகள் அனைத்தும் கட்டிலில் இரைந்து கிடந்தது.. அதை பார்த்து எங்கு படுப்பது என்று இவன் யோசனை செல்ல… பாவனாவோ…

“ ஸ்ரீ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்.. உன் அம்மா என்னை அசிங்கம்மா பேசுறாங்க…” என்று சொல்ல ஸ்ரீ காந்துக்கு இப்போது அனைத்திற்க்கும் தலையாட்டும் நிலையில் இருப்பதால் சரி என்று விட்டான்…

அடுத்த இடி சுமதி மாமியாரின் வீட்டில் விழுந்தது… சாந்திக்கு இன்னுமே மெனக்கெட்டு தான் சாண்டில்யன் செய்து முடித்தது… இது வரை தன் அதிகாரத்தையோ தன் தந்தையின் பெயரையோ எதற்க்கும் பயன் படுத்தியது கிடையாது..

ஆனால் சாந்தி விசயத்தில் செய்தான்.. அனைவரையும் விட அந்த பெண்மணி தனக்கு செய்தது மிக பெரிய கொடுமை.. நான் என்ன செய்தேன் அந்த பொம்பளைக்கு.. உன் பணத்தாசைக்கு நான் பலி ஆக வேண்டுமா.. மற்றவர்கள் சொத்துக்கு ஆசைப்பட்டால் என்ன நடக்கும் என்று அந்த பொம்பளைக்கு காட்ட நினைத்தான்..

சாண்டில்யனின் தந்தை சோமசுந்தரத்தின் மிக நெருங்கிய நண்பர் அறநிலையத்தில் முக்கிய பதவியில் இருக்கிறார். கூட முந்தைய அறநிலைய அமைச்சராக இருந்தவரையும் அவனின் தந்தைக்கு தெரியும்.. அவனின் தந்தைக்கு தெரிந்தவர்கள் என்றால் கண்டிப்பாக சாண்டில்யனுக்கும் தெரியும் தான்.

ஏன் என்றால் சோமசுந்தரம் முக்கியமான நபர்களை சந்திக்க போகும் போதோ இல்லை அவர்கள் தன்னை பார்க்க வரும் போதோ தன் மகனை அருகில் இருப்பது போல பார்த்து கொள்வார்..

அதோடு அவனின் தந்தை அரசாங்க வக்கீலாக இருந்ததினால், அறநிலைக்கு ஆதரவாக வாதாடியதில் அதில் வேலை பார்த்தவர்களில் பெரும் பாலோர் சோமசுந்தரத்திற்க்கு தெரியும்..

அதனை வைத்து தான் அனைத்தும் செய்து முடித்தான்.. ஒரே வாரத்தில்… அனைத்தும் சட்டப்படி தான் செய்தது.. சட்டத்திற்க்கு புரம்பாக எதுவுமே செய்யவில்லை. என்ன ஒன்று விரைந்து இவ்வளவு சீக்கிரம்… நடவடிக்கை எடுத்தது.. இவன் சொன்னதினால் தான்.

இவனுக்கு ஆதரவான ஒரு விசயம் என்ன என்றால், கடந்த ஒரு வருடமாகவே… கோயிலின் அருகில் இருக்கும் ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற கோரி நோட்டிஸ் அனுப்பி உள்ளது..

என்ன ஒன்று அதில் சாந்தியின் இடம் இல்லை.. ஏன் என்றால் சாந்தி வீடு தெருவை ஓட்டி இல்லை… கொஞ்சம் உள் தான் உள்ளது.

சாந்தி முன் பூ கடையாக வைத்து இருந்தவர் இப்போது அதே இடத்தில் வலைத்து போட்டு ஒரு பெரிய பூக்கள் மட்டும் அல்லாது மாலை.. என்று ரக ரகமாக பெரிய கடையாக கட்டி விட்டு இருந்தார்.. அதனால் அந்த கடைக்கு மட்டும் தான் கடையை காலி செய்ய வேண்டும் என்று சாந்திக்கு அரசாங்கத்தின் மூலம் நோட்டிஸ் சென்று இருந்தது..

சாண்டில்யன் அதில் வீட்டையும் சேர்த்து அரசாங்க அச்சீட்டில் எழுதி விட்டான் அவ்வளவே.. அதோடு அதை ஆர போடாது உடனடியாக இடிக்க ஏற்பாடு செய்து விட்டு அமைதியாகி விட.

இதோ இவனின் இந்த அமைதி சாந்தி வீட்டில் ஒரு பூகம்பத்தை கிளப்பி விட்டது.. சாந்தி வீட்டில் எப்போதும் போல தான் அன்றைய விடியல் இருந்தது.

சுமதி முன் எல்லாம் தன் மாமியாரை கேட்டு தான் அனைத்தையும் செய்வாள்.. அத்தனை ஒரு மரியாதை சுமதிக்கு தன் மாமியாரிடம்.. காரணம் கணவன் திறமை இல்லாது தனி ஒரு பெண்மணியாக குடும்பத்தை கட்டி காத்து இத்தனை தூரம் கொண்டு வந்ததை நினைத்து..

அதே போல் தன் கணவன் மீதும். முதலில் தன் அண்ணன் வாசு தேவ் உனக்கு என் பிரண்ட் விமலை பார்த்து இருக்கேன்.. “ என்று சொன்ன போது வீட்டில் பார்த்த வரன். விமல் அவள் வீட்டிற்க்கு வரும் போது பார்த்து இருக்கிறான்… தோற்றம் பிடித்தம் தான்.. அதே போல் படிப்பும் தன் அண்ணன் படிப்பு… சுமதி படிப்பில் சுமார் ரகம் தான். அதனால் சி.ஏ படிக்கும் தன் அண்ணனின் படிப்பே… தன் அண்ணன் மீது அவளுக்கு ஒரு பிரமிப்பை கொடுத்த போது அதே படிப்பு உடையவன் மாப்பிள்ளையாக கொண்டு வந்தால், முழு மனதோடு சம்மதித்து தான் திருமணம் செய்து கொண்டது..

இதில் முக்கியனான விசயமாக பார்த்தது தன் சின்ன அண்ணன் வாசு தேவ்வின் நண்பன் விமல்.. அவளுக்கு சிறு வயது முதலே தன் சின்ன அண்ணனை அத்தனை பிடிக்கும்.. காரணம் தன் மீது மட்டும் அல்லாது தன் தங்கையையுமே அத்தனை அக்கறையாக பார்த்து கொள்வான்.

பெரிய அண்ணன் தன் சுய நலம் என்று தங்கள் அத்தை வீட்டிற்க்கு தத்து பிள்ளையாக சென்ற போது அத்தனை அழுகை. சுமதியும் மாளவிகாவும் அழுக.. அன்றையில் இருந்து இன்று வரை அத்தனை பாசம் தங்கள் மீது வாசுதேவ் காட்டி இருக்கிறான்…

அதுவும் திருமணம் முடித்து மனைவி குழந்தை என்று வந்த பின்னுமே தங்கள் மீது அவன் காட்டும் அக்கறையில்.. அப்படி ஒரு பூரிப்பு இருவருக்கும்..

ஆனால் இன்று அத்தனையும் வெட்ட வெளிச்சம் ஆகியதில், வாசு தங்கள் மீது காட்டிய அந்த அக்கறை எல்லாமே ஒரு காரணத்திற்க்காக எனும் போது.. அவளாள் தாங்க முடியவில்லை என்பதை விட முதலில் நம்ப முடியவில்லை என்பது தான் நிஜம்….

இதில் சாண்டில்யனின் திருமணத்தின் தடையாக இருந்தது தன் மாமியார் என்றதில், முதலில் அவளாள் நம்பவே முடியவில்லை…

வீட்டிற்க்கு வந்து தன் கணவனிடம் சண்டை பிடித்தான்…” அப்போ என் பெரிய அண்ணன் சொத்துக்காக தான் என்னை நீங்க கல்யாணம் செய்து கொண்டதா…? உங்க அம்மா கூட என்னை நல்ல மாதிரியாக பார்த்து கொண்டது அதற்க்காக தானா…?” என்று கேட்ட போது..

விமல்… “உன்னை பிடித்து தான் நான் கல்யாணம் செய்து கொண்டேன் சுமதி… நாம வாழ்ந்த வாழ்க்கை உனக்கு அதை உணர்த்தவில்லையா..? நம்ம பெண்ணே வயதுக்கு வந்துட்டா இப்போ உனக்கு இந்த சந்தேகம் வரலாமா…” என்று கேட்ட போது .

சுமதி… “ இத்தனை வருஷம் இங்கு இருந்து கூட உங்க அம்மாவை பத்தி எப்போ தானே தெரியுது.. இந்த வீடு கூட உழச்சது வாங்கினதா.. இல்லை யார் கிட்டவாவது ஏமாத்தி வாங்கினதோ…?” என்று சொன்னவள்..

மாமியாரிடம் முகம் கொடுக்கவில்லை. சுமதி இது வரை சாண்டில்யன் தான் தங்களை தள்ளி நிறுத்தி விட்டான் என்று நினைத்து கொண்டு இருந்தவளுக்கு சதியால் தள்ளி நிற்கும் படியானது என்று தெரிந்ததும்..

சாண்டில்யனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தான் நினைத்தான்.

ஆனால் எந்த முகத்தை வைத்து கொண்டு தன் பெரிய அண்ணனின் முகத்தை பார்ப்பது… அவன் முகத்தை பார்க்க கூட எனக்கு தகுதி இல்லை.. அதுவும் இப்போது திருமணம் குடும்பம் என்று இல்லாது சாண்டில்யன் தனித்து நிற்பதின் பெரும் பங்கு தன் குடும்பதினரால் என்று நினைக்கும் போது தான்.. அவளால் எப்படி சாண்டில்யனிடம் பேசுவது என்று தயங்கி நிற்கிறாள்..

தன் மாமியார் பற்றி தெரிந்த மறுநாளே தன் தங்கை மாளவிகாவை அழைத்து.. “ நீயாவது பெரிய அண்ணன் கிட்ட பேசலாம் தானே மாலு… பெரிய அண்ணன் விசயத்தில் மாமா வீடு எந்த தப்பும் செய்யாத போது… நீ பேசலாம் தானே.. எனக்கு தான் அவர் முகத்தை பார்க்க கூட மூஞ்சி இல்லை..” என்று பேசியில் அழைத்து சொன்ன போது ..

மாளவிகா… “ இல்ல க்கா சின்ன வயசுல… அவர் என் கிட்ட நிறைய முறை பேசி இருக்காருக்கா.. நான் தான் இந்த வாசு சொன்னதை நம்பி சரியா பேசியது கிடையாது.. சரி அது தான் சின்ன வயசு என்றாலும் பெரியவளாகி கூட நாம பெரிய அண்ணன் கிட்ட பேசினது இல்லையேக்கா… இப்போ நானுமே எந்த முகத்தை வைத்து கொண்டு அண்ணனிடம் பேசிவது…” என்று விட்டாள்..

அனைத்து நினைத்து தான் சுமதிக்கு அத்தனை ஆத்திரம். வரும் ஆத்திரத்திற்க்கு குழவி கல்லை எடுத்து மாமியார் தலையில் போட்டு விடலாம் என்று கூட நினைத்தாள்.. அத்தனை கோபம் மாமியாரின் மீது இருந்தது..

ஆனால் தன் முழு கோபத்தை வெளிப்படையாக காட்ட முடியாத அளவுக்கு மாமியாரின் ஓரவத்திகள் மூன்று பேரும் தன் குடும்பத்தோடு ஒரு வாரம் இங்கு தான் இருக்கிறார்கள்..

இவர்கள் வீட்டை விரிவு செய்து கிரகபிரவேசம் செய்த போது தான் சுமதி இந்த உறவையே பார்த்தது… இன்னும் கேட்டால் நெருங்கிய உறவு. மாமனாரின் அண்ணன் அண்ணிகள் உறவு …

கணவனிடம் கேட்ட போது… “ அவங்க வசதி சுமதி.. அப்பாவுக்கு அந்த அளவுக்கு திறமை இல்லை…நம்ம கூட ஓட்டிக்கிட்டா காசு பணம் கேட்க போறாங்க என்று அவ்வளவா வர போக மாட்டாங்க..” என்றவனிடம்

“அப்போ இப்போ எதுக்கு கூப்பிட்டிங்க…?” என்று தன் குடும்பத்தை பற்றி இப்படி நினைத்தவர்களுடன் ஏன் சேர்க்க வேண்டும் என்று கோபமாக தான் கேட்டாள்..

அப்போது விமல் சொன்னது… “ என் அம்மாவுக்கு அவங்க முன் தலை நிமிர்ந்து நிற்கனும்.. இன்னும் கேட்டால் அவங்களே நம்ம அன்னாந்து பார்க்கும் படி நாம இருக்கனும் விமல். உன் தங்கைக்கு தான் படிப்பு வரல.. நீ நல்லா படிக்கனும்.. என்று என் சின்ன வயசுல இருந்தே அம்மா இதை தான் சொல்லி வளர்ப்பாங்க… இப்போ நாம வசதியா இருக்கிறோம்.. காட்ட நினைக்கிறாங்க. அம்மா ஆசையை ஏன் கெடுப்பானேன்..” என்று அப்போது விமல் சொன்னது சுமதிக்கு சரி என்றே பட்டது..

அன்று தங்கள் பெரிய வீட்டை பார்த்து தன் மாமியாரின் ஒரவத்திகள்…

“ சுமது பரவாயில்லை.. நீ அப்போ கஷ்டப்பட்டதுக்கு இப்போ நல்லா இருக்க… நம்ம விமல் சி.ஏ படிப்பு படிச்சி இருக்கானாமே… என் மகன் சொன்னான்.. அது எல்லாம் லேசு பட்ட படிப்பு இல்ல என்று.. உன் மருமகள் நல்ல மாதிரி சாந்தி..” என்று சொல்ல சொல்ல சாந்திக்கு அப்படி ஒரு பெறுமை..

இந்த தன் பெருமையை அடிக்கடி காட்ட வேண்டியே… வருடம் வருடம் விடுமுறைக்கு அழைத்து விடுவார்.

அது போல வந்து இருக்க.. இந்த முறை சுமதி முகத்தை தூக்கி வைத்து கொண்டு தான் கடமைக்கு சமைத்து வைப்பவள்.. தன் அறைக்கு சென்று விடுவாள்..

சாந்திக்கு மருமகளின் கோபம் ஏன் ஏதற்க்கு என்று தெரிந்ததால், உறவு முறைக்கு முன் ஒன்றும் கேட்காது இருந்து விட்டாள்… எந்த உறவுக்கு முன் தான் பெருமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தோமோ.. அவர்கள் முன் தங்கள் மனஸ்தாபத்தை காட்ட அவள் விரும்பவில்லை..

இவர்கள் சென்ற உடன் மருமகளிடம் பேசுவோம்… இந்த சொத்து எல்லாம் உங்களுக்கு தானே… உங்க நல்லதுக்கு தான் இது எல்லாம் செய்தேன் என்று சொன்னால் சரியாகி விடுவாள் என்று சாந்தி நினைத்து கொண்டால்..

இதில் சாந்தியின் பெரிய ஓவரத்தி.. “ என்ன சாந்தி உன் மருமகள் முகத்தை ஒரு முழம் நீளத்திற்க்கு வெச்சிட்டு இருக்கா.. எங்க கூட முன்ன மாதிரி பேசல.. போன முறை லீவுக்கு வந்த போது எல்லாம் சமையல் முடிஞ்சதும் எங்களோட உட்காந்து பேசுவா… சரி நம்ம மருமகள் தான் பிடாரி மாதிரி வந்து இருக்கும் சாந்தி மருமகள் தங்கம் என்று நான் நம்ம உறவு முறை கிட்ட எல்லாம் பெருமையா சொல்லிட்டு இருந்தேன்.” என்று சொன்ன போது சாந்தி..

“அய்யோ அது எல்லாம் இல்லேக்கா… அவள் அம்மா செத்து கொஞ்ச நாள் தான் ஆகுதுல. அந்த வருத்தம் க்கா அவளுக்கு..” என்று சமாளித்து விட்டவள்..

மகனிடம் தனியே… “என்ன டா உன் பொண்டாட்டி கிட்ட நீ சொல்ல மாட்டியாடா. வந்தவங்க எதிர்க்க நான் அசிங்கப்படனுமா..? யார் முன்ன நான் கெளரவமா இருக்கனும் என்று நினச்சனோ… அவங்க முன்னாடி அசிங்கம் படுத்த பார்க்கிறா..?” என்று திட்ட..

அதற்க்கு விமல்.. “ ம்மா சத்தமா பேசாதே.. நம்ம பண்ண விசயம் தெரிந்ததில் இருந்து அவளே கோபத்தை அடக்கி வெச்சிட்டு இருக்கா….” என்று தாயை அடக்கி விட்டான் விமல்..

ஆனால் யாரின் முன் அசிங்கப்பட கூடாது.. மற்றவர்கள் முன் கெளரவமாக ( கெளரமம் என்றால் அவர்களை பொறுத்த வரை காசு சொத்து இருந்தால் கிடைக்கும் என்று நினைத்து விட்டார்கள்) வாழ நினைத்தாரோ அவர்கள் முன்னவே வீடு இடிப்படு நடுத்தெருவில் நிற்கும் படியான நிலை சூழல் சாந்திக்கு வந்து விட்டது..

சுமதி காலை டிபனாக இட்லி சட்னி அரைத்து விட்டு எப்போதும் போல தன் மகளுடன் வந்து விட்டாள்.

இனி மதியம் தான் சமையல். அது ஒரு பதினொன்னரை மணிக்கு தொடங்கினால் ஒரு மணி நேரத்தில் முடித்து விடலாம் என்று தன் அறைக்கு வந்து விட்டாள்..

முன் எல்லாம் காலை உணவே அப்படி அமர்க்கலப்படும் இவர்கள் எல்லாம் வந்து விட்டால், மதியமும் அசைவு இல்லாது போட மாட்டாள்.. ஆனால் இவர்கள் முன் கெளரமாக இருக்க சொத்து சேர்க்க தானே என் பெரிய அண்ணனை அசிங்கப்படுத்தினே… இப்போ அசுங்கப்படு என்று நினைப்பு.

சுமதி கணவனிடம் கூட சரியாக பேசுவது இல்லை… இங்கு இருப்பது கூட என் மகளுக்காக மட்டும் தான் என்று கணவனிடம் சொல்லி விட்டாள்..

தன் அறையில் தன் மகளிடம் பேசிக் கொண்டு இருந்த சமயம் தான். தெருவில் ஒரே கூச்சலும், குழப்பமான குரலும் கேட்டு என்ன ஏது என்று புரியாது தன் அறையில் இருந்து வெளியில் வந்தது..

கூடத்தில் சாந்தி தன் மகனிடம். “ நீ கடைக்கு ஓடு விமல்.. நான் நம்ம ஏரியா கவுன்சலர் கிட்ட பேசுறேன். மாமூல் அவ்வளவு வாங்கி போட்டுக்குறான் லே.” என்று திட்டி கொண்டே தான் அந்த ஏரிய கவின்சிலருக்கு சாந்தி போனை போட்டது.. இன்னும் கேட்டால் முன் கடைக்கு நோட்டிஸ் விட்டது அதை இடிக்க வந்து இருக்கிறார்கள். மற்ற கடைகளும் இடிப்பதால் அனைவரும் சேர்ந்து கடைகளை இடிக்க விடாது அந்த புல்டோசர் முன் நிற்கிறார்கள் என்று கேள்வி பட்டு தான் இந்த சாந்தி அம்மா இத்தனை பேச்சு பேசுவது.. இன்னும் அடுத்து தன் வீடு என்று தெரியாத போதே இத்தனை திட்டு என்றால். வீடும் என்று தெரிந்தால், அதுவும் எதிலும் சாண்டில்யன் மறைவாக எல்லாம் செய்யாது.. இதற்க்கு பின் நான் தான் இருக்கேன் என்று தன்னை காட்டி கொண்டே செய்தவனை சாந்தியினால் ஒன்றும் செய்ய முடியாது நிற்கும் சூழல் வந்தால், அதையும் பார்க்கலாம்..

அந்த ஏரியா கவுன்சிலருக்கு அழைக்க அதுவோ அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாக ஒரு இனிமையான குரல் சொல்ல.. அவரை கண்ட மேனிக்கு திட்டிக் கொண்டே தான் தன் மகன் பின்னே சாந்தி செல்ல பார்த்தது.

ஆனால் விசயம் தெரிந்து.. அதாவது கடையை இடிக்க வந்து இருக்கிறார்கள் என்று தெரிந்த சாந்தியின் ஓரவத்திகள்.

“ என்ன சாந்தி இது இப்படி ஆகிடுச்சி… “ என்று வெளியில் வருத்தமாக பேசினாலும், உள்ளுக்குள் மனது குளு குளு என்று தான் இருந்தது.. ஒருவர் தன்னை விட கீழே இருந்து விட்டு தன்னை விட மேலே வந்தால், என்ன தான் எதிரில் நல்ல மாதிரியாக பேசினாலும், உள்ளுக்குள் அந்த புகைச்சல் இருக்க தானே செய்யும்.

பாம்pin கால் பாம்பு அறியும் என்பது போல தன் ஓரவத்திகளின் மனது சாந்திக்கு புரிந்தது தான். ஆனால் அதை எல்லாம் யோசிக்கும் நேரம் இது அல்ல என்று..

“ அக்கா இது எல்லாம் போய் வந்து பேசுறேன்..” என்று சொல்லி விட்டு தங்கள் கடை இருக்கும் பகுதிக்கு சென்ற சுமதி.. அங்கு வந்து இருந்த போலீஸ் படையை பார்த்து அதிர்ந்து போய் விட்டார்..

முன்பு இரு முறையும் இது போல புட்டோசர் வந்து நின்று கடையை இடிக்க போகிறோம் என்று வந்து நின்ற போது அனைவரும் சேர்ந்து இடிக்க விடாது கலாட்டா செய்ய.. மீடியாவும் வந்து விட. இதில் எதிர் கட்சி அரசியல் கட்சிகளும் கூட சேர்ந்து கொண்டதில் இரு முறையும் வந்த வேலையை முடிக்காது சென்று விட்டனர்..

ஆனால் அப்போது பேருக்கு இரு போலீஸ் மட்டுமே வந்து இருந்தனர்.. ஆனால் இந்த முறை ஏன் இத்தனை போலீஸ் என்று சாந்தி தன் மகனிடம் கேட்க.

விமலோ.. அங்கு கம்பீரமாக நின்று கொண்டு இருந்த ஒரு இளைஞனை கை காட்டி… “ அவர் தான் நம் மாவட்ட கலெக்ட்டர்.. இன்று ஒரு முடிவோடு தான் வந்து இருக்காங்க போல…” என்றதிலேயே சாந்தி… கடை நமக்கு இல்லை போல. என்று நினைத்தவருக்கு. இத்தனை பணம் விரையம் என்று கணக்கு போட்டு உட்கார்ந்து விட்டார்.

இந்த முறை யாராலும் தடுக்க முடியாது.. ஆக்கிரமிப்பு அனைத்து கடைகளும் இடித்து தள்ளி விட்டது…

இனி அவ்வளவு தான் எனும் போது அந்த மாவட்ட கலெக்ட்டர் தன் பக்கத்தில் நின்று கொண்டு இருப்பவரிடம் ஒரு பேப்பரை கொடுக்க.

ஒரு சில அதிகாரிகள் சில காவலர்கள்.. அந்த இடித்த கடையின் பின் பக்கம் சென்றனர்.. சாந்தியோ யார் எங்கு போகிறார்கள் என்று கூட பாராது தன் இடிப்பட்ட கடையையே பார்த்து கொண்டு இருக்க…

சாந்திக்கு தெரிந்த பெண் மணி ஒருவர் ஓடி வந்து.. “ சாந்திம்மா சாந்திம்மா உங்க வீட்டை கூட இடிக்க போறாங்கலாம்..” என்றது தான் தாமதன் அம்மா மகன் இருவரும் விழுந்து அடித்து கொண்டு ஓடி போய் பார்த்தனர்.

அந்த எரியாவின் பஞ்சாயித்து ஆபிசில் இருந்து வந்த ஒரு சர்வே அதிகாரி தன் கையில் இருந்த ஒரு வரைப்படத்தை பார்த்த வாறு.. சாந்தி கட்டி முடித்து இருந்த வீட்டின் முக்கால் பாக வரை காட்டி…

“ இது எல்லாம் கோயில் சொத்துக்கு சொந்தமானது.. இது வரை இடிங்க…” என்றதும் விமல் அந்த அதிகாரி பக்கம் ஓடி சென்று..

“சார் என்ன சார் சொல்றிங்க. நீங்க கடை இடிக்க மட்டும் தானே நோட்டிஸ் வந்தது..?” என்று கோபமாக கேட்டான்..

“கோயில் சொத்தில் வீட்டை கட்டிக்கிட்டவனுக்கு இந்த கோபம் எல்லாம் கூடாது தம்பி.” என்று சொன்ன அந்த அதிகாரி..

“ஆ சீக்கிரம் வேலையை ஆரம்பிங்க..” என்று சொல்லி விட்டார். அதற்க்குள் சாந்தி வீட்டிற்க்குள் இருந்த அனைவரும் வெளியில் வந்து விட்டனர்.

இதில் நம் சுமதியுமே அடக்கம் தன் பெண்ணின் கையை பிடித்து கொண்டு தன் வீட்டை இடிக்கப்படுவதை வேதனையும் பார்த்து கொண்டு நின்று விட்டாள்..

சாந்தியோ குய்யோ முய்யோ என்று அத்தனை சத்தம்.. அத்தனை அழுகை.. தன் இத்தனை வருட உழைப்பை எல்லாம் சேர்த்து தானே இந்த வீட்டில் போட்டு இருந்தார்.

சாந்தியின் கணவர்.. “ நான் அன்னைக்கே சொன்னேன் தானே சாந்தி… நம்ம இடத்தில் மட்டும் சின்னதா கட்டிக்கிட்டா போதும்..” என்று..

அவ்வளவு தான்.. “ இது போல திறமை இல்லாதவனை கட்டிக்கிட்டு…. “ என்று ஆரம்பித்த பாட்ட பெரும் பாட்டாக தொடர்ந்தது….


 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
170
சுமதி மாளவிகா இரண்டு பேரும் தயங்கி கிட்டே இருக்காமல் ஓடி போய் அண்ணன் காலில் விழுந்திடுங்க ☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️

சாந்தி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 நீ பூந்தி ஆகுறது நல்லா இருக்கு 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️
 
Last edited:
Member
Joined
Apr 2, 2025
Messages
18
Un purusanuku thiramai ila.. sari.. nee munneranum ninaicha ellam sari tha .. adhuku aduthavan kudiya kedukka ninaichala nalla அனுபவி...😡😡😡

Paravala சுமதி, மாளவிகா ரெண்டு பேரும் கொஞ்சம் மனசாட்சி படி பேசுறாங்க 😍
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
184
நல்லா வேணும் சாந்திக்கு இவங்க கௌரவமா வாழ அடுத்தவன் சொத்தை கொள்ளை அடிக்க பார்த்தாங்க இப்போ மொத்தமா போச்சு 😅😅😅
 
Active member
Joined
May 7, 2025
Messages
36
அருமையான பதிவு 🤩🤩🤩
சாந்தி..... அடுத்தவன் சொத்துக்கு ஆசை பட்டது போதாதென்று 😨😨😨 கோயில் சொத்தில் கை வைத்ததின் பலன் 😟😟😟பேராசை பெரு நஷ்டமா போச்சா 😠😠😡😡
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
173
அருமையான பதிவு 😍 😍 😍.
கோயில் சொத்தை அபகரிச்சா குலமே நாசமாகுமாம்.
சுமதி மாமியா உனக்கு தேவைதான்.🫤🫤🫤🫤😬😬😬😬
சுமதி மாமியா மைண்ட் வாய்ஸ் 👇 👇 1000015333.jpg 1000015334.jpg
 
Active member
Joined
May 12, 2025
Messages
16
சாந்தி - இதெல்லாம் என்ன. இனி நீ பாட போற பாட்டு இருக்கே. சிங் இன் த ரெயின்னு சீன் ஓட்டினா ஆச்சா. அனேகமாக உன் புருஷன்,புள்ளைங்க எல்லாம் அனேகமா தனியா விட்ருவாங்க. ஆல்ரெடி மருமக தள்ளி தான் இருக்கா.
 
Well-known member
Joined
Jun 2, 2024
Messages
115
En life la kooda intha Shanthi character irkaanga...name kooda athe than...soththu sugam mela avlo peraasai...avungaloda mindset um idhe than veedu, car, jewellery irntha than gouravam nu nenaikira character.Atha vachu mathavungalyum eda poduvaanga and mattam thattuvaanga (Including my mom).Semma bandha kaamipaanga....aana reality la enga sonthakaaranga and therinjavunga mathiyila avlo nalla mariyathai illa...pinnadi romba avungala solli solli joke panuvaanga...naanum en family um avungaloda perusa move pana maatom...avunga behaviour ah paathu romba kaduppa varum...ipo avungalum konjam konjam ah damage aayitu vaaranga due to increasing living cost...

Enna porutha varaikum kaasu panam elam mukkiyam illa...mathavungaluku kedu nenaikaama mattam thattama vaalntha athu than gouravam...
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,244
En life la kooda intha Shanthi character irkaanga...name kooda athe than...soththu sugam mela avlo peraasai...avungaloda mindset um idhe than veedu, car, jewellery irntha than gouravam nu nenaikira character.Atha vachu mathavungalyum eda poduvaanga and mattam thattuvaanga (Including my mom).Semma bandha kaamipaanga....aana reality la enga sonthakaaranga and therinjavunga mathiyila avlo nalla mariyathai illa...pinnadi romba avungala solli solli joke panuvaanga...naanum en family um avungaloda perusa move pana maatom...avunga behaviour ah paathu romba kaduppa varum...ipo avungalum konjam konjam ah damage aayitu vaaranga due to increasing living cost...

Enna porutha varaikum kaasu panam elam mukkiyam illa...mathavungaluku kedu nenaikaama mattam thattama vaalntha athu than gouravam...
நானும் இது போலானவர்களை பார்த்து இருக்கேன் பா
 
Top