அத்தியாயம்…20.1
மாளவிக்காவுக்கு கணவனின் நிலையும் புரிந்தது தான்… தங்கையின் வாழ்க்கை இப்படி ஆகி இருக்க… அதுவும் அதற்க்கு முழு காரணமாக தன் அண்ணன் இருக்கும் போது பெரியவர்களின் கோபத்தில் தன்னை ஏதாவது பேசுவார்கள்… தனக்கும் மனம் வருந்தும்…
தனக்கு ஆதரவாகவும் பேச முடியாத நிலையில் தான் கணவன் உள்ளான்… அதுவும் தன் அண்ணன் அவன் அப்பாவிடம் அப்படி பேசி விட்ட பின் தனக்கு ஆதரவாக பேசுவது சரியில்லை தான்..
ஆனால் நான் ஆள் மயக்க தான் அவங்க வீட்டுக்கு சென்றேன்.. என்று அவன் அம்மா சொன்னதற்க்காகவது ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி இருந்து இருக்கலாமே.. அது நினைத்தாலே… மனது ஆறவில்லை..
இதோ கணவன் அம்மா வீட்டுக்கு போ என்று சொன்னவன் அப்படியே எல்லாம் விட்டு விடவில்லை.. அவனே ஒலா கார் புக் செய்து காருக்கும் பணம் செலுத்தி.. தன் கையிலுமே பணம் கொடுத்து தான் அனுப்பி வைத்தான்..
இருந்துமே இது போல பிரச்சனையில் அன்னை வீட்டிற்க்கு.. அதுவும் அன்னை இல்லாது… மாளவிக்காவுக்கு தன் அம்மா இல்லாதது இன்று இன்னும் பெரியதாக தெரிந்தது..
கூட வாசுவிடம் பேச கூட பிடிக்கவில்லை.. சாண்டில்யனோடு இது வரை சரியாக பேசாது.. இப்போது பேசினால், அதுவும் தான் பேசினால் இதுவுமே தன் காரியத்திற்க்காக தான் பேசுகிறான் என்று தவறாக நினைத்து விட்டால்,
இப்போது என் அம்மா வீடு என்று எந்த உரிமையில் நான் அங்கு செல்கிறேன். இத்தனை எண்ண ஓட்டத்தின் இடையில் தான் மகளோடு தன் அம்மா வீட்டி வாசலில் நின்றவள் ஓட்டுனருக்கு கணவன் பணம் கொடுத்து விட்டதால் தன் இரண்டு சூட் கேசை எடுத்து கீழே இறக்கி வைத்ததும் கார் சென்று விட்டது.
தன் வீட்டு வாசலில் நின்றவளுக்கோ… வீட்டிற்க்குள் கால் எடுத்து வைக்க ஒரு மாதிரியாக இருந்தது… இந்த நேரத்தில் வீட்டவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று தெரியும்..
வீட்டவர்கள் என்றால் வாசுவும் சாண்டில்யனும் தான்.. வேறு யாரு இங்கு இருக்கிறார்கள்.. ஒரு பணிப்பெண் மட்டும் இருப்பார்… ஒரு காலத்தில் இந்த வீட்டில் எத்தனை பேர் இருந்தது என்று நினைக்கும் போதும் கண்கள் கலங்கி தான் போய் விட்டது.
அதற்க்குள் வீட்டை பார்த்து கொள்ளும் பணிப்பெண் வெளியில் வந்தவள் மாளவிகாவை பார்த்து விட.
“வாங்க மேடம்…” என்று வர வேற்றவள்.. அவள் கையில் இருந்த பெட்டையை வாங்கி கொண்டு உள்ளே வைக்க சென்று விட்ட பின்னும் மாளவிகா செல்லவில்லை…
அப்போது தான் அவர்கள் வீட்டின் காம்புவுண்ட்டுக்குள் கார் ஒன்று நுழைந்தது.. பார்த்த உடனே சாண்டில்யனின் கார் என்று தெரிந்து விட.
இப்போது வேறு வித கலக்கம் மாளவிக்காவுக்குள்… வீட்டில் சேர்ப்பானா என்று.. இனி இது சாண்டில்யன் வீடு தானே… வாசு செய்ததிற்க்கு நானுமே உதவி செய்தேன் என்று நினைத்து விட்டாள்..
தன் மாமியாருமே வாசு செய்ததிற்க்கு தானே தன்னை திட்டினார்கள்.. இதில் மொத்தமாக பாதிக்கப்பட்டு நிற்பது சாண்டில்யன் தான்.. அந்த கோபத்தில்.. இதை எல்லாம் நினைக்க நினைக்க. தன் அனாதாரவான நிலை அவளுக்கு உரைக்க. அப்படியே நின்று விட..
அவள் மகள் சுரேகா … “ ம்மா ம்மா… பெரியம்மா பெரியம்மா..” என்று சுமதி வந்து இருப்பதை சொன்னது கூட அவள் உணரும் நிலையில் இல்லை.
இங்கு காரில் வந்த சாண்டில்யன் தன் வீட்டின் உள் காரை செலுத்தும் போதே மாளவிகாவை கவனித்து விட்டான்.. சுமதியுமே தான்..
அவளை பார்த்த போது தான் சுமதியின் நியாபகத்திற்க்கு வந்தது இன்று அவளுடைய திருமண நாள் என்பது… சாண்டில்யனுக்கு உண்மையில் இன்று அவளின் திருமண நாள் என்று தெரியாது ஆனால் மகளுடன் தன் காரை பார்த்த வாறு கண்கலங்கி நின்று இருந்த அந்த கோலம் சாண்டில்யனின் மனதை சுட்டது.. இந்த நினைவுகள் எல்லாம் ஒரு சில நிமிடங்கள் தான்..
கார் நின்றதுமே சாண்டில்யன் சுமதியை பார்த்தவன் என்ன நினைத்தானோ… அவள் கை தொட்டு…
“ என்ன நடந்தாலும், என்ன நடந்து இருந்தாலுமே உங்க இரண்டு பேருக்கு நான் இருக்கேன் புரியுதா…?” என்று அழுத்தமாக கேட்க..
சுமதி அழுது கொண்டே தலை அசைத்து புரியுது என்று சொன்னவளிடம்.
“போ போய் இதை அவள் கிட்ட சொல்லு.. அங்கும் ஏதோ பிரச்சனை தான் போல. இவன் பார்த்த வேலைக்கு என்ன என்ன எல்லாம் பண்ணி வைத்து இருக்கான்… “ வாசு தேவ்வை பற்றி சொன்னவள் பல்லை கடித்து கொண்டான்.
சாண்டில்யனுக்கு தலையாட்டிய சுமதி தன் மகளோடு மாளவிகா அருகில் செல்லும் வரை மாளவிக்காவின் பார்வை சாண்டியனிடம் தான் இருந்தது…
தான் வந்ததையும் தங்கை கவனிக்கவில்லை.. தன்னை பார்த்து விட்டு அவளின் மகள் சொல்வதையும் அவள் உணர வில்லை என்பதை சுமதி புரிந்து கொண்டவள்.. தங்கையின் அருகில் சென்று அவள் தோள் தொடவும் தான் அவள் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த சுமதியை திரும்பி பார்த்தது… அதுவும் ஒரு வித அதிர்வுடன் யார் என்று திரும்பி பார்த்தவள் அவளின் பார்வையில் தன் அக்கா சுமதி தெரியவும்..
இத்தனை நேரம் காரில் வருகிறோம்.. ஓட்டுனர் இருக்கிறார்… பெண் பயந்து விடுவாள்… கணவனிடம் ஏதாவது பேசினால், தங்கையின் பிரச்சனையின் கோபத்தின் காரணமாக தன்னை அவனும் ஏதாவது சொல்லி விட்டாள். இத்தனை நேரம் தன் துக்கத்தை எல்லாம் தொண்டை குழியில் அடக்கி வைத்து கொண்டு இருந்த மாளவிகா தன் அக்காவை பார்த்த உடன் ஒரு கேவலாக வெளி வந்தது..
சுமதியை கட்டி பிடித்து கொண்ட மாளவிகா.. ஓ என்று அழுது விட்டாள். அன்னை அழுவதில் பயந்த சுரேகாவை பார்த்த சாண்டில்யன் சுமதியின் பெண் சாக்ஷியிடம்ம்.
“தங்கையை வீட்டுக்குள் கூட்டிட்டு போடா செல்லம்.” என்றதுமே… சிறிது பெரிய பெண்ணான சாக்ஷியும் நிலையை புரிந்து கொண்டு..
“வா சுரேகா நாம போய் விளையாடலாம்.” என்று அவளின் கவனத்தை திசை திருப்பி வீட்டிற்க்குள் அழைத்து சென்று விட்டாள்..
குழந்தைகள் வீட்டுக்குள் சென்ற பின் தான் சாண்டில்யன் தன் இரு தங்கைகளின் அருகிலேயே சென்றது… அப்போது தான் மாளவிகா அனைத்தும் சொல்லி அழுது கொண்டு இருந்தாள்..
சாண்டில்யனை பார்த்ததுமே…. மாளவிகாவுக்கு இன்னுமே அழுகை வந்தது… இது தன்னை நினைத்து கிடையாது… கொஞ்ச நேரம் யாருல் இல்லாது தனித்து நின்றதே தனக்கு இத்தனை கலக்கத்தை கொடுத்ததே… இத்தனை ஆண்டுகள் ஒரு குடும்பம் இல்லாது… அதுவும் அப்படி இருக்க காரணமே… தன் சொந்த தம்பி எனும் போது சாண்டில்யனின் மனது எப்படி துடித்து போய் இருக்கும்… நினைத்த உடனே கண்கள் கலங்கி தன் அண்ணனையே பார்க்க.. சாண்டியனுமே மாளவிகாவையே பார்த்து கொண்டு இருந்தவன் என்ன நினைத்தானோ.. தன் இரு கை களையும் விரித்தான்…
தன் அண்ணனின் இரண்டு பக்கமும் தங்கைகள் வந்து அவனை அணைத்து கொள்ள. குடும்பம் என்பது வெறும் அம்மா அப்பா கணவன் மனைவி குழந்தைகள் மட்டுமே இல்லையே… அதில் கூட பிறந்தவர்களுமே அவன் குடும்பம் தானே…
தன் தங்கைகளுக்கு நியாபகம் இல்லாது இருக்கலாம். ஆனால் இவன் இந்த வீட்டை விட்டு தன் அத்தையின் வீட்டிற்க்கு தத்து பிள்ளையாக போன போது இவனின் வயது ஏழு தானே…
இதோ இந்த பக்கம் தோள் சாய்ந்து அழுத்து கொண்டு இருக்கிறாளே மாளவிகா இரண்டரை வயது குழந்தை.
சாண்டில்யா என்று சொல்ல வராது.. சாணி சாணி… உண்மையில் பல்லு பாதி முளைத்து மீது முளைக்காத இடை வெளியில் அந்த பெயர் அழைப்பு அவ்வளவு அழகாக இருக்கும்.. அதே போல் தான் சுமதி..
“சான்டி சான்டி…” என்று இவள் பின்னே தான் சுற்றி திரிவார்கள்… இவனின் அம்மா ராஜ ராஜேஷ்வரி கூட.
“ஏன்டிம்மா நான் எத்தனை அழகான பெயரா சாண்டில்யன் என்று வைத்தேன்.. நீங்க இப்படி கூப்பிடுறிங்கலே…” என்று சொன்ன போது அப்போது சாண்டில்யனுக்கு அத்தையாக மட்டும் இருந்த ராஜ ராஜேஸ்வரியிடம்..
“அத்த பாப்பாவுக்கு எப்படி கூப்பிடட்டுமோ அப்படி கூப்பிடட்டும் அத்த…” என்று சொல்லி விடுவான்..
அது எல்லாம் அவனின் நினைப்புக்கு வர அணைத்து கொண்டு இருந்த மாளவிகாவின் தலை மீது ஒரு முத்தம் வைக்க… அதில் மாளவிகா இன்னும் முற்றிலுமாக உடைந்து விட்டவளாக.. அவளின் அழுகை இன்னுமே அதிகரித்து போனதில் அவளின் உடல் குலுங்கியது.
அதில் சாண்டில்யா.. “ பாப்பா. என்ன டா.?” என்று கேட்டது தான்..
“ண்ணா வேண்டாம் ண்ணா.. இது போல என்னை பாசமா எல்லாம் கூப்பிடாதேண்ணா எனக்கே ஒரு மாதிரி வெட்கமா இருக்கு..” என்று அவள் இன்னுமே உடைந்து விட்டாள்..
“நீ என்ன டா செய்வ…? சொல்..? சின்ன வயசுல என் கூட தான் நீ சுத்திட்டு இருப்ப. ஒரு நாள் உன்னை விட்டு நான் போயிட்டேன். பக்கத்துல யார் இருக்கிறாங்களோ.. அவங்க பேச்சை தானே நீ கேட்ப டா பாப்பா… “ என்று சாண்டில்யன் சொல்ல சொல்ல. அதுவும் உண்மை தானே.
வாசு தேவ் தானே… சின்ன வயது முதலே இரு தங்கைகளையும் மூளை சலவை செய்தது.. சுமதியும் கூட.
“ஆனா ண்ணா அவள் தான் சின்ன பெண்… ஆனா நானுமே..” என்று சொன்ன சுமதி சொன்ன போது..
“ஆமா ஆமா அவள் சின்ன பெண் நீ ரொம்ப பெரிய பெண்ணா.. நீயுமே அப்போ சின்ன பெண் தானேடா…” என்று சொன்னவன் பின் அவனே.
“நான் இங்கு இருந்து போகும் போது கொஞ்சம் உங்க கிட்ட விளக்கி சொல்லி இருந்து இருக்கனும்..” என்று சாண்டில்யன் சொன்னதுமே இரு பக்கமுன் இருந்த தங்கைகள் உடனே.
“ண்ணா நீங்களுமே சின்ன பையன் தானே ண்ணா.. அதுவும் வீட்டுக்குள்ளே இத்தனை பெரிய வில்லன் இருப்பான் என்று நீங்க நினச்சிங்கலா என்று கேட்க…?” இப்படியாக இவர்கள் பேசிக் கொண்டு இருந்த போது தான் அங்கு வாசுவும் விமலும் வந்தது.
அதுவும் மூன்று பேர்களும் கட்டி அணைத்து கொண்டு இருப்பதை பார்த்த வாசு தேவ்..
கை தட்டியவனாக..“ அட அட என்ன அருமையாக காட்சி.. யப்பா யப்பா..” என்று சொன்னாண்…
மாளவிக்காவுக்கு கணவனின் நிலையும் புரிந்தது தான்… தங்கையின் வாழ்க்கை இப்படி ஆகி இருக்க… அதுவும் அதற்க்கு முழு காரணமாக தன் அண்ணன் இருக்கும் போது பெரியவர்களின் கோபத்தில் தன்னை ஏதாவது பேசுவார்கள்… தனக்கும் மனம் வருந்தும்…
தனக்கு ஆதரவாகவும் பேச முடியாத நிலையில் தான் கணவன் உள்ளான்… அதுவும் தன் அண்ணன் அவன் அப்பாவிடம் அப்படி பேசி விட்ட பின் தனக்கு ஆதரவாக பேசுவது சரியில்லை தான்..
ஆனால் நான் ஆள் மயக்க தான் அவங்க வீட்டுக்கு சென்றேன்.. என்று அவன் அம்மா சொன்னதற்க்காகவது ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி இருந்து இருக்கலாமே.. அது நினைத்தாலே… மனது ஆறவில்லை..
இதோ கணவன் அம்மா வீட்டுக்கு போ என்று சொன்னவன் அப்படியே எல்லாம் விட்டு விடவில்லை.. அவனே ஒலா கார் புக் செய்து காருக்கும் பணம் செலுத்தி.. தன் கையிலுமே பணம் கொடுத்து தான் அனுப்பி வைத்தான்..
இருந்துமே இது போல பிரச்சனையில் அன்னை வீட்டிற்க்கு.. அதுவும் அன்னை இல்லாது… மாளவிக்காவுக்கு தன் அம்மா இல்லாதது இன்று இன்னும் பெரியதாக தெரிந்தது..
கூட வாசுவிடம் பேச கூட பிடிக்கவில்லை.. சாண்டில்யனோடு இது வரை சரியாக பேசாது.. இப்போது பேசினால், அதுவும் தான் பேசினால் இதுவுமே தன் காரியத்திற்க்காக தான் பேசுகிறான் என்று தவறாக நினைத்து விட்டால்,
இப்போது என் அம்மா வீடு என்று எந்த உரிமையில் நான் அங்கு செல்கிறேன். இத்தனை எண்ண ஓட்டத்தின் இடையில் தான் மகளோடு தன் அம்மா வீட்டி வாசலில் நின்றவள் ஓட்டுனருக்கு கணவன் பணம் கொடுத்து விட்டதால் தன் இரண்டு சூட் கேசை எடுத்து கீழே இறக்கி வைத்ததும் கார் சென்று விட்டது.
தன் வீட்டு வாசலில் நின்றவளுக்கோ… வீட்டிற்க்குள் கால் எடுத்து வைக்க ஒரு மாதிரியாக இருந்தது… இந்த நேரத்தில் வீட்டவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று தெரியும்..
வீட்டவர்கள் என்றால் வாசுவும் சாண்டில்யனும் தான்.. வேறு யாரு இங்கு இருக்கிறார்கள்.. ஒரு பணிப்பெண் மட்டும் இருப்பார்… ஒரு காலத்தில் இந்த வீட்டில் எத்தனை பேர் இருந்தது என்று நினைக்கும் போதும் கண்கள் கலங்கி தான் போய் விட்டது.
அதற்க்குள் வீட்டை பார்த்து கொள்ளும் பணிப்பெண் வெளியில் வந்தவள் மாளவிகாவை பார்த்து விட.
“வாங்க மேடம்…” என்று வர வேற்றவள்.. அவள் கையில் இருந்த பெட்டையை வாங்கி கொண்டு உள்ளே வைக்க சென்று விட்ட பின்னும் மாளவிகா செல்லவில்லை…
அப்போது தான் அவர்கள் வீட்டின் காம்புவுண்ட்டுக்குள் கார் ஒன்று நுழைந்தது.. பார்த்த உடனே சாண்டில்யனின் கார் என்று தெரிந்து விட.
இப்போது வேறு வித கலக்கம் மாளவிக்காவுக்குள்… வீட்டில் சேர்ப்பானா என்று.. இனி இது சாண்டில்யன் வீடு தானே… வாசு செய்ததிற்க்கு நானுமே உதவி செய்தேன் என்று நினைத்து விட்டாள்..
தன் மாமியாருமே வாசு செய்ததிற்க்கு தானே தன்னை திட்டினார்கள்.. இதில் மொத்தமாக பாதிக்கப்பட்டு நிற்பது சாண்டில்யன் தான்.. அந்த கோபத்தில்.. இதை எல்லாம் நினைக்க நினைக்க. தன் அனாதாரவான நிலை அவளுக்கு உரைக்க. அப்படியே நின்று விட..
அவள் மகள் சுரேகா … “ ம்மா ம்மா… பெரியம்மா பெரியம்மா..” என்று சுமதி வந்து இருப்பதை சொன்னது கூட அவள் உணரும் நிலையில் இல்லை.
இங்கு காரில் வந்த சாண்டில்யன் தன் வீட்டின் உள் காரை செலுத்தும் போதே மாளவிகாவை கவனித்து விட்டான்.. சுமதியுமே தான்..
அவளை பார்த்த போது தான் சுமதியின் நியாபகத்திற்க்கு வந்தது இன்று அவளுடைய திருமண நாள் என்பது… சாண்டில்யனுக்கு உண்மையில் இன்று அவளின் திருமண நாள் என்று தெரியாது ஆனால் மகளுடன் தன் காரை பார்த்த வாறு கண்கலங்கி நின்று இருந்த அந்த கோலம் சாண்டில்யனின் மனதை சுட்டது.. இந்த நினைவுகள் எல்லாம் ஒரு சில நிமிடங்கள் தான்..
கார் நின்றதுமே சாண்டில்யன் சுமதியை பார்த்தவன் என்ன நினைத்தானோ… அவள் கை தொட்டு…
“ என்ன நடந்தாலும், என்ன நடந்து இருந்தாலுமே உங்க இரண்டு பேருக்கு நான் இருக்கேன் புரியுதா…?” என்று அழுத்தமாக கேட்க..
சுமதி அழுது கொண்டே தலை அசைத்து புரியுது என்று சொன்னவளிடம்.
“போ போய் இதை அவள் கிட்ட சொல்லு.. அங்கும் ஏதோ பிரச்சனை தான் போல. இவன் பார்த்த வேலைக்கு என்ன என்ன எல்லாம் பண்ணி வைத்து இருக்கான்… “ வாசு தேவ்வை பற்றி சொன்னவள் பல்லை கடித்து கொண்டான்.
சாண்டில்யனுக்கு தலையாட்டிய சுமதி தன் மகளோடு மாளவிகா அருகில் செல்லும் வரை மாளவிக்காவின் பார்வை சாண்டியனிடம் தான் இருந்தது…
தான் வந்ததையும் தங்கை கவனிக்கவில்லை.. தன்னை பார்த்து விட்டு அவளின் மகள் சொல்வதையும் அவள் உணர வில்லை என்பதை சுமதி புரிந்து கொண்டவள்.. தங்கையின் அருகில் சென்று அவள் தோள் தொடவும் தான் அவள் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த சுமதியை திரும்பி பார்த்தது… அதுவும் ஒரு வித அதிர்வுடன் யார் என்று திரும்பி பார்த்தவள் அவளின் பார்வையில் தன் அக்கா சுமதி தெரியவும்..
இத்தனை நேரம் காரில் வருகிறோம்.. ஓட்டுனர் இருக்கிறார்… பெண் பயந்து விடுவாள்… கணவனிடம் ஏதாவது பேசினால், தங்கையின் பிரச்சனையின் கோபத்தின் காரணமாக தன்னை அவனும் ஏதாவது சொல்லி விட்டாள். இத்தனை நேரம் தன் துக்கத்தை எல்லாம் தொண்டை குழியில் அடக்கி வைத்து கொண்டு இருந்த மாளவிகா தன் அக்காவை பார்த்த உடன் ஒரு கேவலாக வெளி வந்தது..
சுமதியை கட்டி பிடித்து கொண்ட மாளவிகா.. ஓ என்று அழுது விட்டாள். அன்னை அழுவதில் பயந்த சுரேகாவை பார்த்த சாண்டில்யன் சுமதியின் பெண் சாக்ஷியிடம்ம்.
“தங்கையை வீட்டுக்குள் கூட்டிட்டு போடா செல்லம்.” என்றதுமே… சிறிது பெரிய பெண்ணான சாக்ஷியும் நிலையை புரிந்து கொண்டு..
“வா சுரேகா நாம போய் விளையாடலாம்.” என்று அவளின் கவனத்தை திசை திருப்பி வீட்டிற்க்குள் அழைத்து சென்று விட்டாள்..
குழந்தைகள் வீட்டுக்குள் சென்ற பின் தான் சாண்டில்யன் தன் இரு தங்கைகளின் அருகிலேயே சென்றது… அப்போது தான் மாளவிகா அனைத்தும் சொல்லி அழுது கொண்டு இருந்தாள்..
சாண்டில்யனை பார்த்ததுமே…. மாளவிகாவுக்கு இன்னுமே அழுகை வந்தது… இது தன்னை நினைத்து கிடையாது… கொஞ்ச நேரம் யாருல் இல்லாது தனித்து நின்றதே தனக்கு இத்தனை கலக்கத்தை கொடுத்ததே… இத்தனை ஆண்டுகள் ஒரு குடும்பம் இல்லாது… அதுவும் அப்படி இருக்க காரணமே… தன் சொந்த தம்பி எனும் போது சாண்டில்யனின் மனது எப்படி துடித்து போய் இருக்கும்… நினைத்த உடனே கண்கள் கலங்கி தன் அண்ணனையே பார்க்க.. சாண்டியனுமே மாளவிகாவையே பார்த்து கொண்டு இருந்தவன் என்ன நினைத்தானோ.. தன் இரு கை களையும் விரித்தான்…
தன் அண்ணனின் இரண்டு பக்கமும் தங்கைகள் வந்து அவனை அணைத்து கொள்ள. குடும்பம் என்பது வெறும் அம்மா அப்பா கணவன் மனைவி குழந்தைகள் மட்டுமே இல்லையே… அதில் கூட பிறந்தவர்களுமே அவன் குடும்பம் தானே…
தன் தங்கைகளுக்கு நியாபகம் இல்லாது இருக்கலாம். ஆனால் இவன் இந்த வீட்டை விட்டு தன் அத்தையின் வீட்டிற்க்கு தத்து பிள்ளையாக போன போது இவனின் வயது ஏழு தானே…
இதோ இந்த பக்கம் தோள் சாய்ந்து அழுத்து கொண்டு இருக்கிறாளே மாளவிகா இரண்டரை வயது குழந்தை.
சாண்டில்யா என்று சொல்ல வராது.. சாணி சாணி… உண்மையில் பல்லு பாதி முளைத்து மீது முளைக்காத இடை வெளியில் அந்த பெயர் அழைப்பு அவ்வளவு அழகாக இருக்கும்.. அதே போல் தான் சுமதி..
“சான்டி சான்டி…” என்று இவள் பின்னே தான் சுற்றி திரிவார்கள்… இவனின் அம்மா ராஜ ராஜேஷ்வரி கூட.
“ஏன்டிம்மா நான் எத்தனை அழகான பெயரா சாண்டில்யன் என்று வைத்தேன்.. நீங்க இப்படி கூப்பிடுறிங்கலே…” என்று சொன்ன போது அப்போது சாண்டில்யனுக்கு அத்தையாக மட்டும் இருந்த ராஜ ராஜேஸ்வரியிடம்..
“அத்த பாப்பாவுக்கு எப்படி கூப்பிடட்டுமோ அப்படி கூப்பிடட்டும் அத்த…” என்று சொல்லி விடுவான்..
அது எல்லாம் அவனின் நினைப்புக்கு வர அணைத்து கொண்டு இருந்த மாளவிகாவின் தலை மீது ஒரு முத்தம் வைக்க… அதில் மாளவிகா இன்னும் முற்றிலுமாக உடைந்து விட்டவளாக.. அவளின் அழுகை இன்னுமே அதிகரித்து போனதில் அவளின் உடல் குலுங்கியது.
அதில் சாண்டில்யா.. “ பாப்பா. என்ன டா.?” என்று கேட்டது தான்..
“ண்ணா வேண்டாம் ண்ணா.. இது போல என்னை பாசமா எல்லாம் கூப்பிடாதேண்ணா எனக்கே ஒரு மாதிரி வெட்கமா இருக்கு..” என்று அவள் இன்னுமே உடைந்து விட்டாள்..
“நீ என்ன டா செய்வ…? சொல்..? சின்ன வயசுல என் கூட தான் நீ சுத்திட்டு இருப்ப. ஒரு நாள் உன்னை விட்டு நான் போயிட்டேன். பக்கத்துல யார் இருக்கிறாங்களோ.. அவங்க பேச்சை தானே நீ கேட்ப டா பாப்பா… “ என்று சாண்டில்யன் சொல்ல சொல்ல. அதுவும் உண்மை தானே.
வாசு தேவ் தானே… சின்ன வயது முதலே இரு தங்கைகளையும் மூளை சலவை செய்தது.. சுமதியும் கூட.
“ஆனா ண்ணா அவள் தான் சின்ன பெண்… ஆனா நானுமே..” என்று சொன்ன சுமதி சொன்ன போது..
“ஆமா ஆமா அவள் சின்ன பெண் நீ ரொம்ப பெரிய பெண்ணா.. நீயுமே அப்போ சின்ன பெண் தானேடா…” என்று சொன்னவன் பின் அவனே.
“நான் இங்கு இருந்து போகும் போது கொஞ்சம் உங்க கிட்ட விளக்கி சொல்லி இருந்து இருக்கனும்..” என்று சாண்டில்யன் சொன்னதுமே இரு பக்கமுன் இருந்த தங்கைகள் உடனே.
“ண்ணா நீங்களுமே சின்ன பையன் தானே ண்ணா.. அதுவும் வீட்டுக்குள்ளே இத்தனை பெரிய வில்லன் இருப்பான் என்று நீங்க நினச்சிங்கலா என்று கேட்க…?” இப்படியாக இவர்கள் பேசிக் கொண்டு இருந்த போது தான் அங்கு வாசுவும் விமலும் வந்தது.
அதுவும் மூன்று பேர்களும் கட்டி அணைத்து கொண்டு இருப்பதை பார்த்த வாசு தேவ்..
கை தட்டியவனாக..“ அட அட என்ன அருமையாக காட்சி.. யப்பா யப்பா..” என்று சொன்னாண்…