Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட...20..2 டீசர்

  • Thread Author

அத்தியாயம்….20…2

வாசு தேவ்… இந்த கை தட்டலின் ஓசையில் தான் சாண்டில்யன் மாளவிகா சுமதி அவனை பார்த்தது… பார்த்தவர்கள் ஒன்றும் பேசவில்லை.. ஆனால் கூட வந்த விமல்..

“வாசு நீ என்ன செய்துட்டு இருக்க.. நான் உன்னை என்ன சொல்லி கூட்டிட்டு வந்தேன்.. நீ என்ன செய்துட்டு இருக்க…?” என்று தன் நண்பனை கோபமாக பேசினான்.. முதல் முறை விமல் இது போல வாசுவை கோபமாக கேட்டான்..

“என்ன செய்ய சொன்ன.. எனக்கு என் பொண்டாட்டி என் குழந்தை வேண்டும்… அவள் ஏதோ தப்பா நினச்சி இருக்கா… நீ என் தங்கையை விரும்பி தான் கல்யாணம் செய்த.. இதே தானே சொல்ல சொன்னேன்.. நானுமே இவள் இங்கு தனியா குழந்தையை வெச்சிட்டு அழுதுட்டு இருக்கா… இருப்பதை தானே சொல்ல போறோம் என்று வந்தேன்.. ஆனா ஆனா…” என்று ஒரு வித பதட்டத்துடன் சொன்னவன்..

பின் வாசு தேவ்… “ இது போல ஒரு காட்சி பார்த்த பின் வேறு என்ன செய்ய சொல்ற டா…. நன்றி கெட்டதுங்க.. இதுங்களுக்காக நான் என்ன எல்லாம் செய்து இருக்கேன்…” என்று தன் இரு தங்கைகளையும் கை காட்டி சொல்ல…

இப்போது மாளவிகா.. “ எங்களுக்காக என்ன செய்தே சொல்… உங்க வாழ்க்கையையும் வீண் அடித்ததோடு எங்க வாழ்க்கையையும் இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்க..” என்று அழுது கொண்டே சொன்னாள்..

அவளுக்கு தன் கணவனை அத்தனை பிடிக்கும்… வாசு எதை வைத்து அவளை கமலக்கண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தானோ.. ஆனால் இவளுக்கு சின்ன வயதில் இருந்தே கமலக்கண்ணன் என்றால் அத்தனை பிடித்தம். தன் பிடித்தத்தை வாய் விட்டு சொல்லாமலேயே தன் வாசு அண்ணன் நிறை வேற்றி வைத்ததில், எத்தனை மகிழ்ந்து போனாள்..

ஆனால் அது எல்லாம் ஒரு காரணத்திற்க்காக தான் எனும் போது… அதுவும் தன் காதலை தன் பிடித்ததை இன்று தன் மாமியார் அத்தனை கொச்சப்படுத்த காரணம் என்ன…? வாசு தன் மாமனாரை பார்த்து கேட்ட கேள்வி தானே.. அது போல கேட்கலாமா.?

கூடவே இன்று என்ன மாதிரியான நாள்.. திருமண நாளான இன்று தன் கணவனுக்கு என்ன என்ன மாதிரியான சர்பிரைஸ் வைத்து இருந்தேன்.. ஆனால் எதுவும் இல்லாததோடு இனி என் வாழ்க்கை .. அந்த வீட்டில் இருக்கும் பெண் என் அண்ணனால் வாழ்க்கை தொலைத்து நிற்கும் போது நான் அந்த வீட்டில் எப்படி நிம்மதியாக வாழ முடியும்.. அதுவும் இது போலான நேரத்தில் என்று நினைத்து கொண்டவளின் கை தன் வயிற்றின் மீது படிந்தது..

ஆம் அவள் இரண்டாம் கருவை சுமந்து கொண்டு இருக்கிறாள்…

மாளவிகாவின் பேச்சை கேட்ட வாசு தேவ் அதற்க்கும் குதித்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

“எல்லாம் சுய நல பேய்கள்.. நான் மட்டும் என்ன சுகமாவா இருக்கேன். நீயாவது பிடித்தவனை கல்யாணம் செய்து கொண்டாய்.. ஆனால் நான் பிடித்த பெண்ணை.” என்று சொல்லும் பொதே அங்கு ஸ்ருதிகா ஸ்ரீ தன் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் தாயோடு அங்கு வந்து சேர்ந்தாள்..


 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
184
வாசு நிறுத்தாத பேசு நீ வாயைத் திறந்தாலே இப்போ எல்லாம் சாண்டிக்கு நல்லது தான் நடக்குது 😂😂😂😂
சட்டு புட்டுன்னு என்னத்தையாவது உளறி கல்யாணத்தை முடிச்சு வச்சுடு 🤣🤣🤣🤣
 
Top