Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Paniyum Pathikume....8 teesar

  • Thread Author
அத்தியாயம்….8

நகை கடையின் முதலிலேயே தான் அந்த முத்து செட்… பகுதி இருந்தது… அதனால் பெண்ணவள் அதை தான்டி அவளின் கால்கள் செல்ல இயலாது தங்கி நின்று விட்டவளை பார்த்த ஜெயேந்திரன் …

“என்ன சீரா…” என்று கேட்ட போது பெண்ணவள் எந்த வித தயக்கமும் இல்லாது… “ எனக்கு முத்து செட் போடனும் என்று ரொம்ப நாளா ஆசை.. அதுவே வாங்கிடலாமா….” என்று கேட்ட பெண்ணவளுக்கு துளியும் சந்தேகம் கிடையாது… ஜெயேந்திரனும் அவனின் வீட்டவர்களும் மறுக்க மாட்டார்கள் என்று… காரணம் புடவை கடையில் மாப்பிள்ளை வீட்டவர்கள் விலை சொன்னதோடு சரி… விருப்பம் தன்னுடையதும் ஜெயேந்திரனின் விருப்பமாக தானே விட்டு விட்டார்கள்.. அதோடு முத்து செட்…. அத்தனை விலையும் இருக்காது.. அம்மா சொல்வது போல பார்வையாகவும் இருக்கும்… அந்த நம்பிக்கையில் கேட்டவளின் பாதமானது… அந்த முத்து நகைகள் இருக்கும் இடத்திற்க்கே நகர தொடங்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..

ஆனால் ஜெயேந்திரன் பக்கம் நின்று கொண்டு இருந்த கெளசல்யா…. “ கல்யாணத்திற்க்கு ஈடு கட்ட எல்லாம் அது வாங்க முட்டியாதும்மா… அதோடு கல்யாணம் செலவு எல்லாம் ஜெய்யோடது கிடையாது… இவன் அப்பா தான் செலவு செய்யிறது… அதனால மத்த மருமகள்களுக்கு செய்தது போலவே வாங்கி கொடுத்து விடுகிறோம்…” என்று சொன்னதில் வசீகராவின் முகம் இத்தனை நேரம் இருந்த அந்த ஒளி சிறிது குறைந்ததோடு தங்களின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த தன் அம்மா அக்கா ஏதாவது பேசி விடுவார்களோ என்ற பயம் வேறு வந்ததில் தன் முகம் மாறாது.

ஒரு வழியாக. “ சரிங்க அத்தை …” என்று கடினப்பட்டு சிரித்தவள்… ஜெயெந்திரனின் அண்ணிகள் அக்காக்கள் இருக்கும் பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள்..

ஜெயேதிரனும் வசீகரா கஷ்டப்பட்டு சாதாரணம் போல் காட்டி கொண்டு செல்வதை கவனித்தான் தான்.. ஆனாலும் இங்கு எதுவும் செய்ய முடியாது.. அவனுக்கு அவன் அன்னையை பற்றி நங்கு தெரியும்… அதோடு கூட்டு குடும்பத்தில் இது போல ஒரு சிலது விட்டு சென்று தான் ஆக வேண்டும்.. என்று நினைத்தவனின் மனம் ஆனது… காலையில் இருந்து பிரகாசித்து கொண்டு இருந்த தன் சீராவின் முகம் இப்படி வாட விட்டதில் அவனுக்கு ஒரு மாதிரியாக தான் இருந்தது.. இருந்தும் அமைதியாகி விட்டான்..

சுபத்ராவுக்கு அந்த முத்து செட்.. ஒரு நாளு சவரன் இருக்குமா…? ஏன் மத்த மருமகளுக்கு வாங்கி கொடுத்தது போல் தான் வாங்கி கொடுக்கனுமா..? அவங்க போல் தான் நம்ம பொண்ணும் நகை போட்டுட்டு போக போறாளா….?அதையும் வாங்கி கொடுத்து இதுவும் வாங்கி கொடுக்கலாம் தானே… என்று மனதிற்க்குள் நினைத்தாலுமே எதையும் வாய் திறந்து சொல்லவில்லை..

சுபத்ராவுக்கு கணவன் சொன்னது போல்.. ஒன்று தான் ஏதாவது பேசினால் திருமணம் நின்று போய் விடுமோ என்ற பயம்… அதற்க்கும் காரண.. சொந்தத்தில் சொல்லியாகி விட்டது… தன் சின்ன பொண்ணுக்கும் இடம் முடிந்து விட்டது என்று… கூடவே இப்போது அமைதியாகி இருந்து நாளை பின்னே… இதை வைத்து வசீயை பேசுவார்களோ என்று.. என்ன தான் இருந்தாலுமே, தன் பெண் அல்லவா… திருமணம் முடிந்து பெண் கஷ்டப்படுவதை எந்த தாய் தான் விரும்புவாள்..,.

அதன் தொட்டு சுபத்ரா அமைதி காத்தார் என்றால், நம் கீர்த்தனா… கெளசல்யா.. அது எல்லாம் வேண்டாம் என்றதும் வசீயின் முகம் சோம்பி விட்டதில்.. இது தான் உனக்கான மாப்பிள்ளை… இதே என் கணவனோ என் கணவன் வீட்டவர்கள் இருந்தால், கண்டிப்பாக.. நான் கேட்டால் முத்து செட் என்ன வைர செட்டே வாங்கி கொடுத்து இருப்பார் என்று நினைத்தவளின் மனது இப்போது தான் அமைதி கொண்டது..

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க… கெளசல்யா மத்த மருமகளுக்கு வாங்கி கொடுத்தது போல் தான் பத்து சவரனின் கேரள செட் ஆரம் நெக்லஸ்… கம்பல் என்று செட்டாக வாங்கி கொடுத்தார்… ஆனால் டிசைன் நம் வசீகராவுக்கு விருப்பத்திற்க்கே விட்டு விட்டார்…

வசீகராவுமே தன் வருங்கால ஓரவத்தி, நாத்தனார்கள் ஆலோசனையான..

“இது நல்லா இருக்கு.. பார்.. இது எடுப்பா இருக்கு. இது புது டிசைனா இருக்கு.. நாம வாங்கும் போது இது இல்லையே…” என்று மற்ற ஓரவத்தியிடம் பேசிக் கொண்டு இருந்ததும்.. பெண்ணவளின் முகம் தெளிந்து விட்டது தான். ஆனால் முன் இருந்த அந்த பூரிப்பு தான் இல்லை..

ஒரு வழியாக வாங்கி கொண்டு அவர் அவர் சென்று விட்டனர்… ஜெயெந்திரனும்..

“பார்த்து போ போயிட்டு மெசேஜ் செய்..” என்று சொன்னானே ஓழிய.. அந்த முத்து செட் பற்றி வாய் திறக்கவில்லை… அது பெண்ணவளுக்கு குறையாகவே தான் இருந்தது..
 
Top