Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

டீசர்

  • Thread Author
அத்தியாயம்…19

தன் இரு பக்கமும் அணைத்து கொண்டு நின்ற தன் இரு தங்கைகளை சாண்டில்யனுமே அணைத்துக் கொண்டான்… தங்கைகள் அழுகுகிறார்கள் என்பது அவர்களின் உடல் குலுங்கள் தன் உடல் உணர்த்தியதில் தெரிந்து கொண்டவன்…

“சுமும்மா.. மா…” தன் இரு தங்கைகளை சின்ன வயதில் சாண்டில்யன் இப்படி தான் அழைப்பான்.. இந்த அழைப்பு மிகவும் சின்ன வயதாக இருந்த தங்கைகளுக்கு நியாபகத்தில் இல்லை என்றாலும், ஏழு வயதில் அழைத்த சாண்டில்யனுக்கு நன்றாகவே நியாபகத்தில் உள்ளது..

அந்த அழைப்பு அவன் உதடு உச்சரிக்கும் போதே.. பழைய நியாபகங்கள் சாண்டில்யன் மனதில் அணி வகுத்து நின்றது…

அப்போது எல்லாம் சான்டி சான்டி என்று தான் அழைத்து வாறு அவனின் தங்கைகள் இவன் பின்னாடி தான் சுற்றுவார்கள் .. ஏன் வாசுவே தான் தத்து எடுக்கும் முன்… தன்னுடன் நன்றாக தான் பேசுவான். ஆனால் தன் குடும்பத்தை அந்த தத்து என்ற ஒரு விசயம் பிரித்து விட்டதா…?

இல்லை இல்லை இல்லவே இல்லை வாசு தேவ்வின் பொறாமை சின்ன வயதில் இருந்தே அவன் மனதில் இருந்து இருக்கிறது.. நான் தான் முதன்மையில் நிற்க வேண்டும் என்ற எண்ணம்..

அதற்க்காக என்ன என்ன வேலைகள் செய்து வைத்து இருக்கிறான்… இதோ தன் இரண்டு தங்கைகள் மீது பாசம் பாசம் என்று பேசிக் கொண்டு இருந்த அந்த வாசு தேவ் எங்கே….?
 
Top