Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட...11

  • Thread Author
அத்தியாயம்…11

சாண்டில்யன் நான் எல்லாம் பார்த்து கொள்கிறேன் என்று அந்த வார்த்தையை சொன்ன பின் தான் நான் எந்த அர்த்தத்தில் இதை சொன்னேன் என்று அவன் யோசிக்கும் போதே ஸ்ருதிகா ஸ்ரீ….

“மாமாவும் அது தான் சொன்னார் சார்…” என்று சொல்லி இருந்தாள்… சாண்டியனுக்கு குணசேகரன் சொன்ன அந்த அர்த்தத்தில் தான் சொல்லவில்லை என்பது அவன் மனம் சொன்னது..

என்ன சாண்டில்யா… பாதிக்கப்பட்ட ஒரு பெண் உன் கிட்ட உதவிக்கு.. உதவி என்ற வார்த்தை கூட கிடையாது.. இது உன் தொழில்… வந்தால் நீ இப்படி எல்லாமும் நினைப்பியா…? இது தான் உன் அம்மாவின் வளர்ப்பா.. ஒன்றுக்கு இரண்டு அம்மாவிடம் வளர்ந்தவன் டா நீ… மத்தவங்களை விட நீ இன்னுமே நல்லவனா இருக்கனும்.. உனக்கு குடும்பம் இல்லை என்று மத்தவங்க குடும்பத்தை நீ உன் குடும்பமா நினச்சிப்பியா என்ன…? என்று அவன் மனம் கேட்ட அந்த கேள்விக்கு பதிலாக சாண்டில்யன் அன்று இரவே..

குணசேகரனிடமே…. ஸ்ருதிகா எனக்கானவள் என்று சொல்வான் என்று நினைத்து பார்க்கவில்லை.

பின் குழந்தைகளை அழைத்து சென்ற பெண்மணியும் வந்து விட.. சாண்டில்யன் தன்னிடம் இருந்து மீட்டு .. ஸ்ருதிகாவிடம்..

“நாளைக்கு நான் இப்போ உங்க கிட்ட சொன்ன விசயத்தை எல்லாம் டைப் செய்து இவங்க கிட்ட ரெடியா இருக்கும்.. நீங்க சைன் பண்ணிட்டா கேஸை பைல் பண்ணிடலாம்…” என்று விட.

அனைத்திற்க்கும் தலையாட்டிய ஸ்ருதிகா ஸ்ரீ… மீண்டும் தன் கை பையை தோளில் மாட்டிக் கொண்டவள்.. தன் இரு கை பிடிகளிலும் இரு குழந்தைகளின் கையை கெட்டியாக பிடித்து கொண்டு நடந்து செல்பவளையே பார்த்து கொண்டு இருந்த சாண்டில்யன்…

“பத்திரமா போய் சேர்ந்துடுவிங்கலே…” வரும் போதே பெண்ணவள் இப்படியாக தான் வந்தாள்.. போகும் போதும் அப்படியே செல்ல போகிறாள் என்று அவன் மனது சொன்னாலுமே, என்னவோ தனித்து இரு குழந்தைகளோடு பெண்ணவள் செல்வது அவனை என்னவோ செய்தது…

சாண்டில்யனின் இந்த கேள்வியில்… அவன் நினைத்ததே தான் பெண்ணவள் சொன்னாள்..

“வரும் போது தனியா தான் வந்தேன் சார்…” என்று சொல்லி விட்டு இரண்டு அடி எடுத்து வைத்தவள் என்ன நினைத்தாளோ.. பெண்ணவளின் நடை நின்றது.. மீண்டுமே திரும்பி ஆடவனை பார்த்தாள்.. அப்போது சாண்டில்யனுமே அவளையே தான் பார்த்திருந்தவன் பெண்ணவளின் நடை நின்றதுமே ஏதாவது பிரச்சனையா என்று இவன் அவளை நோக்கி இரண்டு அடி எடுத்து வைக்க… பெண்ணவள் திரும்பியதும்.. இவன் தன் நடைக்கு தடை செய்து விட்டது என்ன என்பது போல பார்த்தவனிடம்…

ஸ்ருதிகா ஸ்ரீ… “நாளைக்கு நீங்களும் இருப்பிங்க தானே….?” என்று கேட்டவளிடம்.

“ம் இருப்பேன்…” என்று சொன்னவனின் முகத்தில் ஒரு நிறைவான புன்னகை… இதை அவனின் ஜூனியர் வேதநாயகம் ஒரு அதிர்வோடு பார்த்து கொண்டு இருந்தான்..

அவனின் அதிர்வுக்கு காரணம்… ஒன்று நாளை ஒரு கேஸ் விசயமாக முக்கியமானவரை பார்க்க வேண்டி சாண்டில்யனே நேரில் செல்ல வேண்டி இருந்தது..

அந்த முக்கியமான நபருக்காக நாளை இவர்கள் நடத்தும் முக்கியமான கேசுக்கு..

சாண்டில்யன் தன்னிடம்… “ வாய்தா வாங்கிடு…” என்று சொல்லியும் விட்டான்..

ஆனால் இப்போது இதை இரண்டையும் விடுத்து இந்த பெண்ணுக்காக என்ன இது அதிர்ந்து பார்த்தான் என்றால், மற்றோரு விசயத்தையும் வேதநாயகம் கவனித்தது.. அது சாண்டில்யனின் இந்த சிரிப்பு முகத்தில் விட சாண்டில்யனின் கண்களில் வேதநாயம் அதிகம் கண்டதே… அதுவும் கொஞ்ச நாட்களாக முகத்தில் ஒரு உயிர்ப்பே இல்லாது இருந்தவரின் இந்த சிரிப்பு வேதநாயகத்திற்க்கு அதிர்ச்சியை தர தானே செய்யும்…

சாண்டில்யனின் அந்த புன்னகை அவன் வீடு வரும் வரை வாடாது இருந்தது.. வீடு வந்தவன் அங்கு உள்ளவர்களை பார்த்த பின் மீண்டும் ஒரு இறுக்கம் அவனுள்..

எதுவும் பேசாது அமைதியாக தான் சாப்பிட்டு கொண்டு இருந்தான்… வேண்டும் என்றோ இல்லை உண்மையில் அவனின் தம்பி வாசுதேவ்வுக்கு சாண்டில்யன் மீது கோபமா தெரியவில்லை.

கோபமான முகத்தோடு தான் அவனின் எதிரில் அமர்ந்தான் வாசு தேவ்… அவன் அமரும் நேரம் சாண்டில்யன் சாப்பிட்டு முடித்து இருந்தான்..

அதனால் எழ பார்த்தவனிடம்… “ நான் உன் கிட்ட பேசனும் சாண்டில்யா..?” என்று சொன்னவனின் பேச்சை காதில் வாங்காது எழுந்து சென்ற சாண்டில்யனிடம்..

“உனக்கு அமையாத வாழ்க்கை எனக்கு அமஞ்சிடுச்சி என்று உனக்கு பொறாமை தானே….?” என்று கேட்டவனின் இந்த கேள்வியில் யோசனை முகத்துடன் வாசுதேவ்வை பார்த்த சாண்டில்யன் என்ன நினைத்தானோ…

அவன் எதிரில் வந்து அமர்ந்தவன்… “ உனக்கு என்ன தான் பிரச்சனை வாசு…? முதல்ல நீ ஒரு நல்ல சைக்காரிஸ்ட்ட போய் பாரு…” என்று சாண்டில்யன் சொன்னது தான் தாமதம்…

“என்ன ஒன்னு போல இரண்டு பேரும் அதையே சொல்றிங்க…?” என்று சொன்னவனிடம் சாண்டில்யன் யார் அந்த இன்னொருவர் என்று கேட்கவில்லை…

ஆனால் அவன் கேட்காமலேயே வாசு தேவ்… “ அவளுமே நான் போய் கூப்பிட்டா இதையே தான் சொல்றா… என்ன நீ அவள் கிட்ட பேசுனியா. இல்லை அவள் உன் கிட்ட பேசுனியா….? ஏற்கனவே உன்னை தான் என்று பிடிக்கும் என்று சொன்னவ தானே… அவள் நினைப்பு எனக்கு தெரியாதுன்னு… உன்னை பத்தி என் கிட்டயே சொல்றா.. உனக்கு வயசு தெரியலையாம்.. என்ன தைரியம். நீயுமே அவள் எதிர்க்க தான் இங்கும் அங்கும் நடந்துட்டு இருக்க.. உனக்கு எக்ஸ்ஸைஸ் செய்ய மொட்ட மாடி தான் கிடைத்ததா.. எது என்றாலும் உன் ரூமில பண்ணிக்க வேண்டியது தானே.. நான் சொன்னதும் பக்கத்துல போனியே… அப்படியே போய் இருக்க வேண்டியது தானே திரும்ப ஏன் இந்த வீட்டில் வந்து தங்குற…” என்று ஆவேசத்துடன்.. வாசு தேவ் அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டு போனான்..

முடிவில்… “ நீ இந்த வீட்டை விட்டு எப்போ போவ என்று சொல்லு…. நான் என் பொண்டாட்டி காலில் விழுந்தாவது என் பொண்டாட்டியையும் குழந்தையையும் நான் இங்கு கூட்டிட்டு வந்துடுவேன்…” என்று சொல்ல..

சாண்டில்யன் வாசு தேவ் பேச்சில் இருந்து ஒரு விசயம் தெளிவாக புரிந்தது… அது… மனைவியின் மீதான வாசு தேவ்வின் சந்தேகம்… அதோடு தான் இங்கு வந்த போது தன்னை பார்க்க ஆட்கள் எல்லாவ் வருகிறார்கள்… வீட்டு பெண்கள் சாதாரணமாக இருக்க முடியவில்லை என்பது காரணம் கிடையாது.. .

தான் இங்கு இருந்தால் தன்னை தினம் தினம் தன் மனைவி இவனை பார்க்கும் சூழல் உண்டாகும்.. அது இவனுக்கு பிடிக்காதே காரணம்…

புரிந்தவன் வாசு தேவ்விடம் சொன்னது இது தான்… “ நான் உன்னை பார்த்து பொறாமை படல வாசு.. நீ தான் என்னை பார்த்து பொறாமை மட்டு உன் நிம்மதியை கெடுத்துட்டு இருக்க.” என்றதும் மீண்டுமே வாசுதேவ்..

“உன்னை பார்த்து நான் பொறாமை படுறேன்னா. நல்லா இருக்கே… இத்தனை வயசு வரை ஒன்டி கட்டையா தான் இருக்க.. இத்தனை சொத்து இருந்து என்ன பிரயோசனம்… மனைவி குழந்தைகள் இல்லாது…. நான் பார்த்து உன்னை பொறாமை படுறேன்னா.. நல்ல காமெடி தான்…” என்று சொன்ன அந்த வார்த்தை சாண்டில்யனை பலமாக தாக்கியது என்பது தான் உண்மை..

ஆனால் அதை முகத்தில் காட்ட கூடாது என்று திமிரை தன் முகத்தில் கொண்டு வந்து நிறுத்தியவன். ….

“ பார்த்து வாசு இத்தனை செய்து அமைத்து கொண்ட வாழ்க்கை உன் சந்தேக புத்தியால் உன்னை விட்டு போயிட போகுது… நான் உன்னை சைக்கோ என்று தான் நினச்சேன்… அதனால தான் சைக்கரிஸ்ட்டை பார்க்க சொன்னேன்.. ஆனா உனக்குள் இருக்கும் இந்த சந்தேகம் போக எத்தனை நல்ல சைக்கரிஸ்ட்டு கிட்ட போனாலும் சரியாகது..” என்று சொன்னவனின் பேச்சு அதை விட திமிராகவே இருந்தது…

கடைசியாக போகும் போது… “ஒன்டி கட்டை.. இந்த நிமிஷம் நான் அதை நினைத்தால் மாற்றிக் கொள்ள முடியும்…” என்று கடைசியாக சொல்லி விட்டு…

அடுத்து அவனை பார்க்க கூட பிடிக்காது தன் அறைக்கு வந்து விட்டான்… வரும் போது இருந்த இதமான மன நிலை முற்றிலும் மாறியது போலான ஒரு நிலை…

தன்னை தானே ஏதாவது செய்தால் தான் உண்டு.. இல்லை என்றால் தனக்கு பைத்தியம் பிடித்து விடும்..



அன்று தன் படுக்கையில் படுக்கும் முன் சாண்டில்யன்… நீண்ட நாட்கள் கழித்து அதாவது தன் வசும்மா இறந்ததில் இருந்து தன் தனிமையை போக்கும் பாடல்களை கேட்கவே மறந்து விட்டவன்.. இன்று ஏனோ கேட்க நினைத்தான்..

அதுவும் பழைய பாடல்களை கலெக்ஷனை ஓட விட்டவள் குளித்து முடித்து விட்டு இலகுவான இரவு உடையை அணிந்து கொள்ளும் வரை… சிவாஜி கணேஷனின் பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக கேட்டு கொண்டே தன் வேலைகளை தன் பாட்டுக்கு செய்து முடித்தவன்..

தன் படுக்கையில் படுக்கும் ஆயுத்தமான போது தான் இன்று பார்த்த ஸ்ருதிகாஸ்ரீயின் நியாபகமாக…

ஸ்ருதியை பார்த்ததில் இருந்து.. எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே. பார்த்த மாதிரி இருக்கே என்று நினைத்து கொண்டு இருந்தவன்.. அப்போதும் அதே நினைக்கும் போது தான் சிவாஜியின் மற்றோரு பாடலான…

“பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை..” என்ற பாடல் கேட்ட நொடி படுக்கையில் அமர்ந்து இருந்தவன் சட்டென்று எழுந்து நின்று விட்டான்..

இந்த பெண்.. இந்த பெண்… நினைக்கும் போதே மூச்சு முட்டுவது போலான ஒரு உணர்வு… திருமணம் என்று பேசி அவன் பார்த்த ஓரே பெண்…. அதுவும் நேரில் கிடையாது.. புகைப்படத்தில் தான்… ஸ்ருதிகா ஸ்ரீயை பார்த்தான்..

வசும்மா ஸ்ருதிகா ஸ்ரீயின் புகைப்படத்தை தன்னிடம் கொடுத்த போது..

“இப்போ தான் காலேஜ் முடிச்சு இருக்கா..” என்று சொல்லி விட்டு தன்னிடம் கொடுத்தது..

“இப்போ தான் படிப்பு முடிச்சு இருந்தா எனக்கு முப்பது ஆகுதே… எப்படி..?” என்று சுணங்கி கொண்டு தான் அந்த புகைப்படத்தை அவன் கையில் வாங்கியது.

வாங்கியவன் அந்த புகைப்படத்தை சட்டென்று எல்லாம் சாண்டில்யன் பார்க்கவில்லை… வசும்மா அடுத்த சொன்ன தகவலாக.

“உனக்கு பெண் பார்க்க சொல்லி உன் விசுப்பா வழி உறவில் தான் சொல்லி வெச்சி இருந்தேன் சாண்டில்யா… என்னால தான் ஓடி பெண் தேட முடியாது ஒரு மூலையில் உட்கார வெச்சிட்டானே அந்த ஆண்டவன்.. அதனால அவர் கிட்ட தான் உனக்கு ஒரு நல்ல பெண்ணா இருந்தா சொல்லுங்க என்று சொன்னேன்.. அவர் கிட்ட தான் உங்க அப்பா கிட்ட ஜூனியரா இருந்தவரோட உறவு பெண்ணாம்… உனக்கு பெண் பார்க்குறதா கேள்விப்பட்டு அவர் கொடுத்து இருக்கார்… வாங்கும் போது கூட பெண் சின்ன பெண்ணா இருக்காம் என்று சொன்னாராம்.. ஆனா அந்த தம்பி.. பரவாயில்லை இந்த பெண்ணை சாண்டில்யனோட அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்… என்று சொல்லி கொடுத்து இருக்கார்..” என்று சொன்ன நொடி சாண்டில்யன் தன் கையில் இருந்த புகைப்படத்தை பார்த்தான்..

பார்த்த உடன் வசிகரிக்கும் முகம் இல்லை தான்.. ஆனால் கலையாக அழகாக… மூக்கு முழி எல்லாம் திருத்தமாக… அந்த புன்னகை… குழந்தை சிரிப்பது போல சிரித்தவளின் இரண்டு பக்கம் கன்னத்திலுமே குழி விழ சிரித்தவளின் அந்த முகம் அவனை வசிகரித்தது.

கூடுதல் தகவலாக தன் அன்னை தந்தை இருவருக்குமே ஏதோ ஒரு வகையில் இந்த பெண் தொடர்புடைய பெண் என்பதே அவனின் பிடித்தத்தை கூட்ட.

“ ம் அவங்களுக்கு என் வயசு ஒரு பிரச்சனை இல்லேன்னா பாருங்க வசும்மா…” என்று விட்டான்..

ஆனால் அடுத்து அடுத்து ஜாதகம் சேரவில்லை என்பதில் திரும்ப அந்த புகைப்படத்தை அவன் பார்க்கவில்லை… இப்போது அந்த புகைப்படத்தை அவன் எங்கு வைத்து இருக்கிறான் என்பது கூட அவனுக்கு நியாபகம் இல்லை… சுத்தமாக அவன் மறந்து விட்டான்..

ஸ்ருதிகா ஸ்ரீயின் அந்த முகம் அவன் மனதை விட்டு அகலாது அவன் மனதில் ஆழ எங்கோ மறைந்து பிடித்து இருந்து இருக்கிறது போல…

இப்போது ஒன்றன் பின் ஒன்றாக அது மேல் எழும்பி அவன் முன் விசுவரூபம் எடுத்து வந்து நின்று விட்டது… மனது அமைதி வேண்டி தான் பாடல்கள் கேட்க நினைத்தது.

ஆனால் அது இன்னுமே அவன் மனநிம்மதியை கெடுத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்…

இப்போது எழுந்து சென்று தன் தம்பியின் கழுத்தை நெருக்கி கொள்ள வேண்டும் என்ற ஆத்திரம்… சுமதியின் வீட்டிற்க்கு சென்று அவள் மாமியாரை கன்னம் கன்னமாக அரைய வேண்டும் என்ற வெறி…

நீங்க செய்த செயல் என்னை மட்டுமே தனி மரமா நிற்க வைக்கவில்லையாடா.. அந்த பெண்ணையுமே.. நினைத்த நொடி.. அவன் கன்னம் உஷ்ணத்தை உணர்ந்தது… அந்த உஷ்ணம் கோபத்தினாலா….? இல்லை கோபத்தினாலும், ஆத்திரத்தினாலும் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்ததால் அந்த கண்ணீர் அத்தனை உஷ்ணமாக இருக்கிறதா என்று தெரியவில்லை..

இப்போது அவனுக்கு மூச்சு அடைப்பது போல இருந்தது… இந்த நிலை இப்படியே இருந்தால் தனக்கு ஏதாவது ஆகி விடும் என்பதுமே அவன் மனம் சொன்னது..

இல்லை இல்லை எனக்கு எதுவுமே ஆக கூடாது.. ஸ்ருதிகா ஸ்ரீ… அவன் உதடு அவளின் பெயரை உச்சரிக்க. அவன் மனக்கண்ணிலோ… பெரிய கை பையை தோள் மீது மாட்டி கொண்டு தன் இரு கை பிடியில் தன் இரு குழந்தைகளையும் பிடித்து கொண்டு சென்ற காட்சியே வந்து நின்றது.










 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
170
வாசு பொண்டாட்டி மேல் நம்பிக்கை இல்லாமல் தான் இவ்வளவு நாளாக வாழ்ந்தியா 🤧🤧🤧🤧🤧

சாண்டில்யன் இடத்தில் வேற யாரும் இருந்தால் சந்தியா பத்தி என்ன நினைப்பாங்க 😔😔😔

சுமதி மாமியாரை பொம்பளையாலாம் நினைக்க வேண்டாம் 🤬🤬🤬 ஒரு சீன்லயாச்சும் கன்னம் கன்னமா அறையுற மாதிரி வைங்க ப்ளீச் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

சாண்டில்யன் குணா கிட்ட ஸ்ருதிய கல்யாணம் செய்ய பேசிட்டானா🤫🤫🤫🤫
 
Last edited:
Well-known member
Joined
Mar 22, 2025
Messages
79
அய்ய இந்த கொசுவை அடித்து கொள்ளுங்க பா இது வேற குறுக்க மறுக்க அடேய் வாசு ஓரமா போ எங்க போகஸ் பூராவும் இப்போ ப்யூட்டி அவளோட சேர்ந்த அந்த சாக்கடை குடும்பம் என்ன ஆக போகுதோ இடையே சுமதி மாமியார் இது தான் எங்க டார்கெட் இதுல நீயும் சேர்ந்து சேதாரத்தை வாங்கி கட்டாத.

விஜி மேம் இது டீசரா இல்லை 11.1 கொஞ்சம் தெளிவா சொல்லுங்க
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,246
அய்ய இந்த கொசுவை அடித்து கொள்ளுங்க பா இது வேற குறுக்க மறுக்க அடேய் வாசு ஓரமா போ எங்க போகஸ் பூராவும் இப்போ ப்யூட்டி அவளோட சேர்ந்த அந்த சாக்கடை குடும்பம் என்ன ஆக போகுதோ இடையே சுமதி மாமியார் இது தான் எங்க டார்கெட் இதுல நீயும் சேர்ந்து சேதாரத்தை வாங்கி கட்டாத.

விஜி மேம் இது டீசரா இல்லை 11.1 கொஞ்சம் தெளிவா சொல்லுங்க
அத்தியாயம்.. 11 பா
 
Well-known member
Joined
May 11, 2024
Messages
167
சாண்டில்லியன் முடிவு எடுத்து விட்டான் வாசுவின் பேசிய பேச்சால் தனுக்கு ஒரு குடும்பம் வேண்டும் என்று அவன் மனகண்ணில் ஸ்ரீ அவள் குழந்தைகள் தான் தெரிகின்றது இனி 🤔🤔🤔🌺🌺🌺🌺
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
184
வாசு பொறாமையோட சந்தேக புத்தி வேறயா.... யாரும் எதுவும் பண்ணாமலே இவனே இவன் வாழ்க்கையை அழிச்சுப்பான்.....

சுமதிக்கு சரியான தண்டனை கிடைக்கணும் 🥶🥶🥶🥶🥶

எவ்வளவு விளையாடிட்டிங்க சாண்டில்யன் வாழ்க்கையில இனி அவன் சந்தோசமா இருக்கிறதை பார்த்து இன்னும் வயிறெரிங்க 😤😤😤
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
173
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍.
இந்த வாசு பிசாசை( சந்தேக) அடிச்சு மொதல்ல தொரத்தோனும். சந்தியா இத்தனை நாளா எப்படி தான் இவனோட குப்பைய கொட்டினாளோ?
மிஸ்டர் சாண்டிக்கு ஸ்ருதிய யாரு ன்னு தெரிஞ்சிருச்சு.
 
Active member
Joined
May 12, 2025
Messages
16
இதுவரை செஞ்சதே தப்பு, இப்பவும் திருப்தியாகாம இப்படி இருந்தா எப்படி. கோவம்(தேவையில்லாதது) வரணும்னா கூட இவன பெத்தவங்க, அத்தை குடும்பம் மேல வரணும். அவங்களே இல்லை. சாண்டில்யன் சொன்னா மாதிரி இதெல்லாம் டாக்டர் கிட்ட போனா கூட திருந்தாத கேஸூங்க. சுமதி மாமியார் - இந்தம்மா யாரு இந்த குடும்பத்துல தலையிட. அதுக்கு ஒரு செம அடி கொடுக்கணும்.
 
Active member
Joined
May 7, 2025
Messages
36
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
வாசுவுக்கு முத்தி போச்சு 😮😮😮 இப்படியே போனால் அவன சங்கிலி போட்டு கட்ட வேண்டிய நிலைமை வந்தாலும் வரலாம் 😨😨😨
 
Top