Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட....16

  • Thread Author
அத்தியாயம்…16

மறு நாளே வாசு தேவ்வுக்கும், ஸ்ரீ காந்துக்கும் தான் பைல் செய்த அந்த விவாகரத்து நோட்டிஸ் அவர்கள் கையில் கிடைக்கும் மாறு ஏற்பாடு செய்து விட்ட சாண்டில்யன் அடுத்து என்ன என்று யோசித்தவனின் கண் முன் வந்து நின்றது சுமதியின் மாமியார் சாந்தி தான்…

வாசு தேவ் தனக்கு இத்தனை செய்ய அவனுக்கு தன் மீது இருக்கும் பொறாமை காரணம் என்றால், சாந்திக்கு தன் பெயரில் இருக்கும் சொத்து காரணம்.. வாசு தன் சொத்து மீது ஆசைப்பட்டு இருந்து இருந்தால் கூட அவன் ஏதோ ஒரு கணக்கில் விட்டு விடுவான்..

ஆனால் இந்த பொம்பளை… சாண்டில்யனுக்கு மனதளவில் கூட சாந்திக்கு அவர் வயதுக்கு கூட மரியாதை கொடுக்க முடியவில்லை…

இன்னும் கேட்டால் தன் ஜாதகத்தின் உண்மை விசயம் தெரியும் வரை… சுமதியின் மாமியார் எல்லாம் அவன் வாழ்க்கையின் நினைவில் கூட வைத்து கொள்ள முடியாத ஒரு ஆள்.. நான் இவர்களுக்கு என்ன செய்து விட்டேன் என்று எனக்கு இப்படி ஒரு அநியாயத்தை செய்து இருக்காங்க.. அதுவும் ஸ்ருதிகா ஸ்ரீயின் இன்றைய நிலைக்கும் இந்த பொம்பளையும் ஒரு காரணம்.. இது எல்லாம் செய்ய என்ன காரணம்.. அடுத்தவன் வீட்டு சொத்து கிடைக்கும் என்று தானே…

என்ன செய்யலாம்….? என்ன செய்யலாம்…? என்று யோசித்தவன் பின் வேதநாயகத்தை அழைத்து மீண்டும் கிரிமினல் கேஸ் எடுக்கும் போது அவர்களை பற்றி அறிய என்று வைத்து இருக்கும் நபர்களை கொண்டு சாந்தியின் பின் பலத்தை ஆராய சொன்னான்…

அவர்களுமே இரண்டே நாளில் சாந்தி பிறந்ததில் இருந்து கல்யாணம் குழந்தை என்று அனைத்து விவரங்களையும் இரண்டே நாளில் திரட்டி கொண்டு வந்து தந்து விட்டார்கள்..

இவர்களின் மீது இருக்கும் இந்த திறமையின் மீது சாண்டில்யனுக்கு இருக்கும் நம்பிக்கை தான் சாந்தியை பற்றி விவரங்களை திரட்ட இவர்களை அனுப்பியது…

சாண்டில்யனின் அந்த நம்பிக்கையை மெய்பிக்கும் வகையாக தான் இதோ சாந்தியை பற்றிய அனைத்து விவரங்களையும் கொண்டு வந்து தந்து விட்டார்கள்..

அதில் இருந்த சாந்தியை பற்றிய விவரம் இது தான்… பிறந்தது ஒரு ஏழ்மையான குடும்பம்… ஆனால் திருமணம் செய்து கொண்டு போனது இவர்களோடு கொஞ்சமே கொஞ்சம் வசதியான குடும்பத்தில் தான்..

ஆனால் அந்த குடும்பத்திலும் மற்றவர்கள் எல்லாம் நல்ல மாதிரியாக சம்பாதிக்க.. சாந்தியின் கணவனுக்கு மட்டும் அந்த திறமை இல்லை..

அதனால் சாந்திக்கு தாய் வீடும் வசதி இல்லாது.. இங்குமே கணவன் திறமையாக சம்பாதிக்காததினால், நான்கு மருமகள்களில் சாந்தியை இவளின் மாமியார் கொஞ்சம் கீழாக தான் நடத்தி இருந்து இருக்கிறார்கள்…

பின் பெரியவர்கள் இறந்து போக. அந்த வீடு பெண்களுக்கும் பங்காகக ஆறாக பிரிக்கப்பட்டு இவர்களுக்கு கிடைத்தது என்னவோ சொர்ப்பம் தான்..

அதற்க்குள் சாந்தியின் மூத்தார்களும் நாத்தனார்களும் தங்களுக்கு என்று தனிப்பட்டு சொத்தை சம்பாதித்து வைத்து கொண்டனர்.

அதனால் தனி தனியாக சென்ற போது மற்றவர்கள் அவர்களுக்கு சொந்தமான வீட்டிற்க்கு குடி செல்ல சாந்தி தன் இரண்டு மகள் ஒரு மகனோடு வாடகை வீட்டிற்க்கு தான் சென்றது.

இரண்டு பெண்களை கவர்மெண்ட் பள்ளியில் சேர்த்து படிக்கவைத்த சாந்தி மகனை மட்டும் பணம் கட்டி படிக்க வைக்கும் தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்..

கோயில் அருகில் வாடகை பார்த்து கொண்டு சென்றதால், சாந்தி கோயில் வாசலில் முதலில் பூ கடை.. பின் மாலை கட்டி விற்க. கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரம் சூடு பிடித்தது..

காசு பணமும் சேர ஆரம்பித்தது… இதில் எந்த இடத்திலும் தன் கணவனை எதிர் பார்க்கவில்லை சாந்தி…

பெண்கள் சுமாராக தான் படித்தனர்.. அதனால் படித்து முடித்ததும்.. இரண்டு பேருக்கும் மாப்பிள்ளையை பார்த்து திருமணத்தை முடித்து வைத்து விட்டார்,,

மகனோ பெண்களுக்கும் சேர்த்து வைத்து படிக்க . மகனை நன்றாக அவன் விரும்பிய படிப்பையே படிக்க வைத்தார்.. கூடவே கோயிலுக்கு பக்கத்தில் வந்த ஒரு இடத்தை வாங்கியும் போட்டார்..

இது வரை சாந்தி செய்தது பாராட்டுக்குறியது தான்.. ஆனால் அடுத்து தான் நம் சாண்டில்யனுக்கு எதிராக செயல் படும் ஆரம்ப புள்ளியாக சின்ன வயது முதல் கூடவே படித்த நம் வாசு தேவ்வின் நட்பு ஆனது வீடு வரை வந்தது..

வாசு தேவ் அனைவரிடமும் ஒரு முக மூடியை போட்டு கொண்டு தான் பழகி இருந்து இருக்கிறான். ஏன் பெற்றவர்களுக்கே அவனின் உண்மையான முகத்தை காட்டியது கிடையாது.

ஆனால் தன் நண்பன் விமலிடம் மட்டும் தன் மன ஆதங்கம் அனைத்தையும் கொட்டி விடுவான்.. சாண்டில்யனை குறிப்பிட்டு..

அவன் என்ன டா பெரிய இவன்… அவன் அந்த வீட்டிற்க்கும் முக்கியம் இந்த வீட்டிற்க்கும் முக்கியமா டா…. அங்கு தான் போனான் லே… திரும்ப திரும்ப ஏன் இங்கு வரான்.. என் தங்கச்சி கிட்ட வேறு பேசுறான் டா…

அவன் ஏதோ வாங்கி வந்தான் டா… என் இரண்டாவது தங்கச்சியும் பல்லை இளிச்சிட்டு வாங்கிட்டா.. நாளைக்கு இவங்களுமே நான் முக்கியம் இல்ல… அவன் தான் வேண்டும் என்று யோயிடுவானா…? என்று தன் வாசு தேவ் தன் மனதின் ஆதங்கம் கோபம் என்று அனைத்தையும் விமலிடம் கொட்டி விடுவான் போல..

விமலுக்கு தன் அம்மா மீது தனி பாசம் உண்டு… தனித்து இத்தனை செய்தது தன் அம்மா மட்டும் தான் என்பது அவனுக்கு தெரியும்.. அதோடு பாசமும்.. அதனால் விமலும் தன் அம்மாவிடம் ஒன்றும் மறைக்காது அனைத்தும் பேசுவான். அப்படி பேசியதில் வாசு தேவ் சாண்டில்யனை பற்றியும் பேச…

சாந்திக்கு இடம் மட்டும் வாங்கி போட்ட இடத்தில் அதில் பெரியதாக வீடு கட்ட என்ற ஆசை வந்த சமயம் அது.

இனம் ஒன்று என்பதால் சாந்திக்கு ஒரு திட்டம் மனதில் தோன்றியது.. வாசு தேவ்வும் சாந்தி வீட்டிற்க்கு வந்து செல்வார் தான்.

அப்போது பேச்சு வாக்கில் பேசுவது போல… வாசுவிடம்.

“விமல் சொன்னான் பா.. அது என்ன அந்த பையன் உன் உரிமையை மொத்தமா பரிப்பது போல செய்யிறான்.. இது சரியில்ல..” என்று வாசு தேவ்வுக்கு ஆதரவாக பேச..

வாசு தேவ்வுக்கு சாந்தியை மிகவும் பிடித்து விட.. விமலிடம் தன் மன உணர்வுகளை பகிர்ந்து கொள்வது போல சாந்தியிடமும் சொல்ல ஆரம்பித்தான்…

சாந்தி கொடுத்த ஐடியா தான் இது.. அதாவது உன் தங்கை எப்போவும் உன் கூடவே இருக்கனும் என்றால் உனக்கு வேண்டிய இடத்தில் உன் தங்கையை திருமணம் செய்து வை என்று…

அப்படி திட்டம் போட்டு கொடுத்து.. தன் மகன் விமலுக்கு வாசு தங்கையை திருமணம் செய்து வைத்து தனக்கு மருமகளாக்கி கொண்டது.. கூடவே வாசு தேவ் தனிப்பட்டு தொடங்கிய தன் அலுவலகத்தில் எந்த பணமும் போடாது பார்ட்னர் ஆக்கியது என்று… அனைத்திற்க்கும் திட்டம் போட்டு தந்தது சாந்தி தான்.

கூடவே உன் இன்னொரு தங்கையை உன் மாமன் மகனுக்கு கட்டி வை.. அவங்க பிடி உன் கிட்ட இருக்கனும் என்றால் அந்த வீட்டு பெண்ணை நீ கட்டிக்கோ… இடையில் ஸ்ருதிகா மீது வாசு தேவ்வுக்கு வந்த விருப்பத்தை தன் மகன் மூலம் அறிந்து கொண்ட சாந்தி…

“உனக்கு காதல் பெருசு என்றால் அந்த சாண்டில்யன் கிட்ட நீ தோத்து தான் போயிடனும்.” என்று சொல்ல.

வாசு தேவ்வுக்கு இது போதாத. தன் காதலை ஸ்ருதிகா ஸ்ரீயிடம் சொல்லாது விட… பின் என்ன அனைத்துமே சாந்தி சொன்னது போல கச்சிதமாக என்பதை விட மிக கச்சிதமாகவே செய்து முடித்து கொண்டு விட்டார்..

தான் வாங்கி போட்ட அந்த இடத்தில் அத்தனை பெரிய வீடு கட்டினார்…. அதற்க்கும் வாசு உதவி செய்தான்… என்ன ஒன்று அத்தனை பெரிய வீடு கட்ட தான் வாங்கிய இடம் அத்தனை பெரியதாக இல்லை என்ற காரணத்தினால், பக்கத்தில் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தையும் சேர்த்து கட்டி கொண்டார்.

அனைத்தையும் பார்த்து கொண்டு வந்த சாண்டில்யன்.. கடைசியாக கோயிலுக்கு சொந்தமான இடம் என்ற இடத்தை வேதநாயகத்திடம் சுட்டி காட்டியவன்.

“இதற்க்கு உண்டான ஏற்பாட்டை கவனி.” என்று விட்டான்…

சாண்டில்யன் நேற்றே அவன் செய்ய வேண்டியது அனைத்தும் செய்து முடித்து வீடு வந்தவனுக்கு அன்று ஏனோ ஒரு நிம்மதியான உறக்கம் அவனை தக்ஷுவி கொண்டது… எப்போதும் போல் தான் பாடல்களை கேட்டு கொண்டே தன் இரவின் தினம் செய்யும் பணிகளை செய்தது..

ஆனால் இன்று எப்போதும் இருக்கும் அந்த வெறுமை உணர்வு அவனுக்குள் எழவில்லை… இன்றும் இதோ இப்போதும் இந்த அறையில் அவன் தனியாக தான் இருக்கிறான்..

இன்னும் தன் மனதை ஸ்ருதிகா ஸ்ரீயிடம் திறக்க கூட இல்லை… அதற்க்கு காலமும் இது இல்லை என்பதும் அவனுக்கு தெரியும்… முதலில் அவள் பட்ட அந்த காயம் ஆற வேண்டும்.. ஆனால் அதற்க்கு என்று நீண்ட காலங்கள் அவளுக்கு கொடுக்க அவன் நினைக்கவில்லை..

அப்படி நினைக்கும் வயதும் அவனுக்கு இல்லை என்பது வேறு விசயம்…. முதலில் ஸ்ரீ காந்திடம் இருந்து ஸ்ருதிகாவுக்கு விவாகரத்து கிடைக்க வேண்டும்.. அதன் பின் தான் எப்படி ஸ்ருதிகாவை நெருங்குவது எப்படி யோசிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தவனுக்கு வாசு அவன் வேலையை மிக எளிதாக முடித்து விட்டான்..

தனக்கு தெரியாது தன் பின் அத்தனை கெடுத்தலை செய்தவன்… இன்று தனக்கு தெரிந்து… தனக்கு அவன் பேசுவது நன்மையில் தான் முடியும் என்று உணராது அனைத்தும் அவன் வாயாலேயே சொல்லி தன் வேலையை அவன் எளிதாக்கி விட்டான் தான். ஆனால் அதிலும் வாசுவும் ஸ்ருதிகாவை.. அதற்க்கு அடுத்து அதை பற்றி நினைக்க கூட சாண்டில்யனுக்கு பிடிக்கவில்லை… இருந்தும் வாசு தன்னை மீறி சாண்டில்யனுக்கு ஒரு விதத்தில் நன்மை செய்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்..

அதன் தாக்கத்தில் இன்று அமைதியான மனதுடன்.. ‘ நேற்று வரை நீ யாரோ நான் யாரோ இன்று முதல் நீ வேரோ நான் வேரோ… “ என்ற பாடலை கேட்டு கொண்டே சாண்டில்யனின் கண்கள் உறக்கத்தில் தழுவியது என்றால், அவன் ஆழ் மனது முழித்து கொண்டு அந்த பாடலின் வரிகளின் அர்த்தத்தை தனக்கு ஏற்றது போல மாற்றி கொண்டதாக..

“இதே படுக்கையில் என் கைக்குள் உன்னை வைத்து இந்த பாடலை நான் பாட வேண்டும்..” என்று அவன் மனது ஆசைப்பட்டது..

ஆனால் சாண்டில்யனுக்கு முற்றிலும் மாறுப்பட்ட மனநிலையில் தூங்கி எழுந்த ஸ்ரீ காந்த்… என்ன டா இது வாழ்க்கை.. இன்னைக்காவது பாவனா என்னை ஒழுங்கா வேலை பார்க்க விடுவாளா.. இல்ல. தொந்திரவு செய்வாளா….? பேசாம உடம்பு சரியில்லை என்று வீட்டில் இருந்து விடலாமா.? என்று அவன் நினைக்கும் போதே… கூடத்தில் ஏதோ பிரச்சனை போல.

பெரிய குரலில் பேசிக் கொண்டு இருக்கும் சத்தம் அவனுக்கு கேட்டது.. சே வீட்டிலும் நிம்மதி இல்ல போல…

ஸ்ருதி இருக்கும் வரை இந்த வீட்டில் ஒரு சத்தம் கேட்டு இருக்கும்… வீடே அமைதியா இருக்கும் என்று நினைக்கும் போதே தன் வீட்டில் வேறு ஒரு குரல்.. அதுவும் பாவனா குரல் போல இருக்க.

இங்கு அவள் எங்கு வர போறா. என்று அவன் நினைக்கும் போது அவன் அறையின் கதவு பட பட என்று தட்டும் சத்தம் கேட்டது..

இவன் என்ன இது இப்படி விடாது தட்டுறாங்க.

“இரு வரேன் வரேன்..” என்று இவனுமே சிடு சிடு என்று குரல் கொடுத்து கொண்டு தான் தன் அறையின் கதனை திறந்தான் ஸ்ரீ காந்த்.. திறந்தவன் முன் பெட்டி படுக்கையுடன் அவனின் ப்யூட்டி நின்று கொண்டு இருந்தாள்..

அப்போ பாவனா குரல் போல இருக்கு என்று நாம நினைத்தது சரி தான் போல என்று ஸ்ரீ காந்த் எண்ணி முடிக்கும் முன் பாவனா இவனை இடித்து கொண்டு இவனை தான்டி இவனின் அறைக்குள் தன் பெட்டி படுக்கையோடு நுழைந்து விட்டாள்..

இவனின் அறையில் வெளியில் நின்று கொண்டு இருந்த பவானி.. . “ என்ன டா இது கருமம்… அந்த பெண் வயிறு பெருசா இருக்கு… இது எல்லாம் என்னடா அசிங்கம்…” என்று கத்தி கொண்டு இருந்தார்…

ஸ்ரீ காந்தோ தன் அன்னையின் கத்தலை எல்லாம் கேட்கும் நிலையில் இல்லை.. தன் அறைக்குள் நுழைந்து தங்கள் கப்போர்ட்டில் இருக்கும் துணிகளை எடுத்து வீசி ஏரிந்து விட்டு தன் சூட் கேசில் இருந்த துணிகளை அந்த கப்போர்ட்டில் அடுக்கி கொண்டு இருக்கும் பாவனாவையே அதிர்வுடன் பார்த்தான்..

பின் கட்டிலில் வீசி எரிந்த துணிகளில் கிடக்கும் தன் மனைவியின் நையிட்டியை பார்த்தவனுக்கு இப்போது அந்த உடை அவனுக்கு அருவெருப்பை தரவில்லை. அமைதியை தந்தது…

இந்த உடையில் என் முன் வந்து நின்று விடு ஸ்ருதி.. நான் தப்பு பண்ண மாட்டேன்.. எனக்கு நிம்மதி வேண்டும். என்று நினைத்து கொண்டு இருந்தவனின் செவியில் அவன் அன்னை பேசிய பேச்சான…

“என்ன டா.. இது.. கூத்து…? அவள் உண்டாகி இருக்காளா… இது எல்லாம் என்ன டா…” என்று கத்தி கொண்டு இருந்தார்..

“ம்மா ப்ளீஸ்ம்மா.. ப்ளீஸ் நான் பேசுறேன் ம்மா….” என்று தன் அன்னையிடம் கெஞ்சிக் கொண்டு இருக்க..

அவனின் இந்த கெஞ்சலை கேட்ட பாவனா தான் அடுக்கி கொண்டு இருந்த வேலையை இடையில் விட்டு விட்டு ஸ்ரீ காந்துக்கும் பவானிக்கும் இடையில் வந்து நின்றவள்..

பவானியிடம்… “ இப்போ உங்களுக்கு என்ன தெரியனும்… என் கிட்ட கேளுங்க நான் சொல்றேன்.. ஆமாம் நான் உண்டாகி தான் இருக்கேன்.. இது நீங்க கேட்டதற்க்கு உண்டான பதில்… நீங்க கேட்காத கேள்விக்கும் நான் பதில் சொல்றேன்… இந்த குழந்தைக்கு அப்பா உங்க மகன்….” என்று சொல்ல..

இத்தனை நேரம் அமைதியாக கூடத்தில் வைத்து தன் குழந்தைக்கு உணவை ஊட்டிக் கொண்டு இருந்த அனிதா.

பாவனா சொன்ன உன் மகனின் குழந்தை என்ற பேச்சுக்கு மட்டும்…

“தெளிவா சொல்லும்மா… உங்க இரண்டாவது மகனோட குழந்தை என்று சொல்லுங்க….” என்று சொல்ல ஸ்ரீ காந்துக்கு அவமானமாக போய் விட்டது.. இது என்ன இனி இருக்கு என்பது போல..

ஸ்ரீ காந்த்… “ இங்கு ஏன் வந்தே ..” என்று தன் அன்னை பக்கத்தில் நிற்கிறார் என்று அமைதியாக கேட்டான்..

ஆனால் அதற்க்கு பதில் பாவனா… “ வேறு எங்கு போக சொல்ற ஸ்ரீ.. குழந்தையின் அப்பா வீட்டில் தானே இருக்கனும்.. அதோடு என் வயிறு நல்லாவே தெரியுது ஸ்ரீ… அக்கம் பக்கத்து வீட்டவங்க எல்லாம் என்னை ஒரு மாதிரி பார்க்கிறாங்க.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ… அவ்வளவு சீக்கிரம் என் கழுத்தில் ஒரு தாலியை கட்டி விடு ஸ்ரீ.. நம்ம குழந்தை ஒரு கெளரவத்தோடு தான் பிறக்கனும்…” என்று சத்தமாக பவானி கேட்பது போல பேச..

பவானிக்கு இதற்க்கு மேல் கேட்கும் தைரியம் இல்லாது தன் பெரிய மகன் எதிரில் சென்று அமர்ந்து கொண்டார்.

கோகுல்.. “ என்னம்மா வந்துட்டிங்க..?” என்று கேட்டவனுக்கு பதில் சொல்லும் நிலையில் அவர் இல்லாது போக..

அடுத்த இடியாக ஸ்ரீ காந்த் பெயருக்கு ஒரு வக்கீல் நோட்டிஸ் அது எங்கு இருந்து யார் அனுப்பியது என்பது அதை பிரித்து பார்க்காத போதே தெரிந்து விட்டது.

இனி ஸ்ருதிகா ஸ்ரீயிடம் சமாதானம் பேசி கூட இங்கு இனி வர வழைக்க முடியாது என்று இடிந்து போய் அமர்ந்து விட்டார். தலைக்கு மேல் சென்ற பின் ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன …? இனி குடும்பம் என்ன ஆகுமோ.. இத்தனை நேரம் இங்கு நடந்த கூத்தை பார்த்து கொண்டு இருந்த அந்த வீட்டின் தலைவர் ஸ்ரீ காந்த் தந்தை வெங்கடராமன் தன் தலை விதியை நொந்து கொண்டு தன் அறைக்கு சென்று விட்டார்…..

கோகுலும் அனிதாவிடம்.. “ இனி குழந்தையை மேலயே வைத்து பார்த்து கொள்.. கீழே நீ இல்லாம குழந்தையை விட்டு செல்லாதே…” என்று தன் வீடு போல சட்டமாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த பாவனாவை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றான்.. தம்பி தன் கையில் வக்கீல் நோட்டிசை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டு இருப்பதை பார்த்த வாறு..

அதில் அப்படி என்ன அதிர்ச்சியான விசயம் இருக்கிறது என்று பார்த்து விட்டு சென்ற கோகுலுக்கு தெரியாது..

ஆனால் அதில் இருந்ததை படித்து பார்த்த ஸ்ரீ காந்துக்கு தெரியும் தானே… அதில் தனக்கு தன் கணவனிடம் இருந்து விவாகரத்துக்கு சொன்ன காரணம் தன் கணவன் இல்லீகல் ரிலேஷன் ஷீப்பில் இருக்கிறான் என்பது மட்டும் குறிப்பிடவில்லை…

பல பெண்களுடன் தொடர்பில் உள்ளார். எனக்கு அவருடன் குடும்பம் நடத்த முடியாது… அதற்க்கு முக்கியகாரணமாக அவருக்கு ஏதாவது நோய் வந்து அது தனக்கும் வந்து விட போகிறது என்ற பயம் ஒரு காரணம் என்றால், மற்றோரு காரணம். எனக்கு இரண்டும் பெண் குழந்தைகள்… என்று குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு இருப்பதாக அவள் லாயர் நோட்டிஸ் விட்டு இருக்க.

நான் காமூகனா…?” என்று தன்னையே கேட்டு கொண்டு இருந்தவனுக்கு கோபம் அப்படி வந்தது.. அதுவும் தன் பெண்களை… எப்படி எப்படி இது போல தைரியமா பொய்யான காரணத்தை சொல்லி இருக்கிறாள்..

என்று ஸ்ருதிகா ஸ்ரீ இருக்கும் வீட்டை தெரிந்து கொண்டு.. அக்கம் பக்கம் பார்க்க அத்தனை கலாட்டா செய்து விட்டான்..

இதில் சாண்டில்யனுக்கு ஒரு நன்மையாக “இங்கு இருப்பது ஸ்ருதிகா ஸ்ரீக்கு பாதுகாப்பு கிடையாது அத்த. சாண்டில்யன் வீட்டில் காம்பவுண்ட் உள்ளயே ஒரு வீடு இருக்கு… நீங்க அங்கு போய் இருங்க…” என்று விசயம் கேள்வி பட்டதும் குணசேகரன் கை பேசியில் அழைத்து தன் அத்தை ஷண்முகமதியிடம் சொல்லி விட்டான்…
 
Well-known member
Joined
Jul 14, 2024
Messages
392
♥️♥️♥️

என்ன விசித்திரம் காந்துக்கு எரிச்சலைத் தந்த நைட்டி நிம்மதியத்தருது! சலனம் சிறிதோ பெரிதோ அதற்கு ஏற்ப தான் விளைவுகளும் இருக்கும். மாமியார்க்கு வேலை செய்ய ஆள் வராதுனு புரிஞ்சிடுச்சு. அவன் அவன் எடுக்கற முடிவும் சாண்டிக்கு சாதகமா தானிருக்குப்பா. ஆனாலும் இந்த பாவனா அட்டூழியத்துக்கு முடிவில்லையா?
God vaippaar ma end card intha Dog kku (dog enna mannikkanum)
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
187
சாண்டில்யனுக்கு சுக்ர திசை அடிக்குது 🤩🤩🤩🤩
அவன் அவன் என்ன பண்ணினாலும் நம்மாளு காட்டுல மழை தான் 😂😂😂
குடுக்குறதெய்வம் கதவு ஜன்னல் எல்லாம் பிச்சுக்கிட்டு குடுக்குது 🤪🤪🤪🤪🤪

பாவனா 😡😡😡😡 எவ்வளவு தெனாவட்டா திமிரா நல்லவ மாதிரி அவ பிள்ளைக்கு நியாயம் கேட்குறா 😤😤😤😤 இவளுக்கும் எதாவது ஆப்பு வைக்கணும்..... 🥶🥶🥶
 
Well-known member
Joined
Jul 14, 2024
Messages
392
சாண்டில்யனுக்கு சுக்ர திசை அடிக்குது 🤩🤩🤩🤩
அவன் அவன் என்ன பண்ணினாலும் நம்மாளு காட்டுல மழை தான் 😂😂😂
குடுக்குறதெய்வம் கதவு ஜன்னல் எல்லாம் பிச்சுக்கிட்டு குடுக்குது 🤪🤪🤪🤪🤪

பாவனா 😡😡😡😡 எவ்வளவு தெனாவட்டா திமிரா நல்லவ மாதிரி அவ பிள்ளைக்கு நியாயம் கேட்குறா 😤😤😤😤 இவளுக்கும் எதாவது ஆப்பு வைக்கணும்..... 🥶🥶🥶
Aappu self ahh avale vachachu ma
Don't worry
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
177
Marandhutten your honour 😔😔😔
Ineme ippadi nadakkaama parthukkuren ejamaan
பங்குஊஊஊ.. என்னாது அப்புடி நடக்காம பாத்துக்கிறீங்களா???😜😜😜😜😂😂😂😂 அப்ப இனி மேட்டு மூனு கமண்ட்ஸ் கிடையாதா பங்கு. அஞ்சு இல்லை ஆறு கமண்ட்ஸ் க்கு அப்பறந்தான் இடம் கிடைக்குமா பங்கு உதி மச்சீக்கு☺️☺️☺️☺️🤭🤭🤭
 
Well-known member
Joined
Jul 14, 2024
Messages
392
பங்குஊஊஊ.. என்னாது அப்புடி நடக்காம பாத்துக்கிறீங்களா???😜😜😜😜😂😂😂😂 அப்ப இனி மேட்டு மூனு கமண்ட்ஸ் கிடையாதா பங்கு. அஞ்சு இல்லை ஆறு கமண்ட்ஸ் க்கு அப்பறந்தான் இடம் கிடைக்குமா பங்கு உதி மச்சீக்கு☺️☺️☺️☺️🤭🤭🤭
En en intha kolai veri ma
First comment and half page riply ithu taan udhaya ma style 😎😎😎
Nirmala appadi ya 😔😔😔
Eppovo oru time taan first comment poduren 😁😁😁
Writer's kku udhaya ma comment pottu encarege pannurangha 🤗🤗🤗
Naama appadi ye irrukku ra idam theriyaama irrukku rom 😌😌😌
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
307
Bavana kku oru paal parcel…
Sri kanth ku oru mor parcel
 
Well-known member
Joined
May 11, 2024
Messages
171
அருமை 👌👌👌👌👌, சாண்டில்லியனுக்கு எல்லாம் சாதகமக அமைகிறது சூப்பர் 👌👌👌👌🌺🌺🌺
 
Top