அத்தியாயம்…19
சாந்திக்கு தன் வீட்டின் பாதி இடிப்பட்ட வீட்டை பார்க்க பார்க்க அவருக்கு மயக்கமே வந்து விட்டது…
அதுவும் யாரின் முன் கெளரவமாக வாழ நினைத்தோளோ அவர்கள் முன் நிலையில் இது போலான கோலத்தில் நிற்பதில். இயலாமையில் கோபம் வந்தது.
அதுவும் தான் அழும் போது… விமலின் பேசிக்கு சாண்டில்யனிடம் இருந்து அழைப்பு வர.
இந்த சமயத்தில் என்ன இவன்.. அதுவும் இது வரை தன் கை பேசியில் அவன் பெயரை பதிவு செய்த நாள் முதல் இன்று வரை இந்த எண்ணில் இருந்து இது வரை அழைக்காத அழைப்பு வந்ததில் விமலுக்கு ஒரு சந்தேகம் வந்தது..
அதில் சட்டென்று அழைப்பை ஏற்று விட்டவனிடம் சாண்டில்யன்… “ உன் அம்மா கிட்ட கொஞ்சம் போனை கொடுக்கிறிங்கலா மச்சான்… உன் அம்மாவுக்கே போனை போட்டு இருப்பேன் ஆனா பாவம் கையில் ஒன்னும் இல்லாது நடுத்தெருவில் நிற்கிறார் என்று சொன்னாங்க.. அது தான் உனக்கு போனை போட்டேன் மச்சான்.. உன் அம்மா கிட்ட கொடு ராசா..” என்று வேறு சாண்டில்யன் நக்கல் தோணியில் பேசியவனின் இந்த பேச்சு விமலுக்கு புதியது…
சாண்டில்யனை பற்றி விமலுக்கு அனைத்து விவரமும் தெரிந்து இருந்தாலும். அந்த அளவுக்கு இருவரும் பேசியது கிடையாது தானே…
அதனால் சாண்டில்யன் இது போல எல்லாம் பேசுவான் என்று கிரகிக்கவே விமலுக்கு நேரம் பிடித்தது… புரிந்த பின்…
“இதுக்கு எல்லாம் நீயா காரணம்…” இதை விமல் அதிர்வுடன் தான் கேட்டது…
“பின்னே. சம்மந்தமே இல்லாம நீயும் உன் அம்மாவும் என் வாழ்க்கையில் கும்மி அடிப்பிங்க… எல்லாம் தெரிந்தும் என்னை என்ன விரல் சுப்பிட்டு இருக்க சொல்றியா.?” என்று முதல் பேசிய நக்கல் தோணி மாறி கோபத்துடன் கேட்டான்.
சாண்டில்யனின் இந்த பேச்சில் விமல் தன் அதிர்வில் இருந்து விடுப்பட்டு அவனுமே கோபமாக
“பொட்ட மாதிரி பின்னாடி செய்து முடித்து இருக்க.?” என்று ஆவேசமாக பேசியவனின் இந்த சத்தமான பேச்சில், சாந்தி மட்டும் அல்லாது சுமதியுமே தன் கணவனின் பேச்சை கவனித்தாள்..
விமல் பேசிய இந்த பேச்சுக்கு சாண்டில்யன் கோபம் எல்லாம் படவில்லை…சிரித்து கொண்டே…
“நான் பொட்டையா…? ஆம்பிள்ளையா… ? என்று காண்பிக்க தான் உன் அம்மா விடலையே மச்சான்.. ஆனா இனி தெரிஞ்சிப்ப எல்லா விதத்திலுமே நான் ஆம்பிள்ளை தான் என்று….” என்று சொன்னவன் பின்..
நிறுத்தி நிதானமாக…. “ நீயும் உன் நண்பன் வாசுவும் உன் ஆத்தா கூட சேர்ந்து எனக்கு பின் நீங்க பார்த்த பொட்ட வேலையை நீ என் கிட்ட சொல்றியாடா…?” என்று கேட்டவனிடம்..
“டேய் டேய் உன்னை நான் உன்னை நான்…” என்று பேசியிலேயே விமல் கத்த…
சாண்டில்யனோ… “ ஒன்னும் புடுங்க முடியாது.. உன் ஆத்தா கிட்ட கொடுடா. நான் உன் கத்தலை விட உன் ஆத்தா கத்தல கேட்க தான் டா ஆவலா இருக்கேன்…” என்று சொன்ன போது சாந்திக்கு புரிந்து விட்டது பேசுவது சாண்டில்யன் தான் என்று..
விமலுமே “ம்மா இதுக்கு எல்லாம் காரணம் சாண்டில்யன் தான் ம்மா..” என்று வேறு சொல்ல.
சாந்தி கை பேசியை தன் மகனிடம் இருந்து பரித்து கொண்டவர்.
“ ஏன்டா..” என்று சாந்தி ஆரம்பித்தது தான் தாமதம்…
சாண்டில்யன். “ எனக்கு மரியாதை ரொம்ப ரொம்ப முக்கியம் புரியுதா…? வீடு கடை போச்சி.. அடுத்து என்ன.. ஆ உனக்கு ரொம்ப ரொம்ப பெருமைலே… உன் மகன் சி.ஏ படிச்சி இருக்கான் என்று … இங்கு கூட ஒருவன்.. நான் வக்கீலாம்.. அவன் ஆடிட்டராம்.. அத்தனை பெருமை… அடுத்து அது தான் ஆப்பூ…” என்றது தாமதம் சாந்திக்கு இப்போது வீடு இடிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பது கூட பின் தங்கி விட்டது..
சாந்தி தன் மகனிடம்… “ ஏன்டா விமல். அந்த சண்டாளன் உன் வேலையில கூட ஏதோ செய்யிறதா சொல்றான் டா..” என்று கூப்பாடு போட.
இத்தனை நேரம் திக் பிரம்மையாக வீடு இல்லாது தன் மகளுடன் நின்று கொண்டு இருந்த சுமதி மாமியாரின் இந்த பேச்சில் அனைத்தும் புரிந்து விட…
சொன்னாள்… “ நீங்க செய்யும் போது இனித்தது லே… இப்போ கசக்குதோ என்று…” சுமதியின் இந்த பேச்சு கை பேசியின் வாயிலாக சாண்டில்யனுக்கு தெளிவாகவே கேட்டது..
சாண்டில்யன் இது வரை கூட பிறந்தவனின் செயலை நினைத்து என்ன தான் கோபத்தில் அனைத்தும் செய்து கொண்டு இருந்தாலும்.. மனதில் ஓரம் தன் இரு தங்கைகளுமே பொய்த்து இருப்பார்களோ… என்ற பயம் இருக்க தான் செய்தது..
அப்படி தான் தனிமையில் இருக்க அவர்களின் பங்கும் இருக்கிறது என்று தெரிந்தால், தான் என்ன செய்வது…? அவனால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை…. வசும்மா… என்னை மன்னிப்பார்களா. என்று வேறு யோசனை… வாசு தேவ்வுக்கும் சாந்திக்கும் கட்டம் கட்ட திட்டம் வகுக்கும் போது எல்லாம் சாண்டில்யன் மனதில் சிறிது குற்றவுணர்வு கூட இல்லை. ஆனால் இதில் தன் தங்கைகளுக்கும் பங்கு இருந்தால், அதை அவனால் நினைக்க கூட முடியவில்லை..
சுமதியின் இந்த பேச்சில் சாண்டில்யன் மனது கொஞ்சம் நிம்மதி அடைந்த அதே வேலை இப்போது தன் பெண்ணுடன் நடுத்தெருவில் நிற்பாள் என நினைக்கும் போதே தன் காரின் சாவீயை எடுத்து கொண்டு… இடிப்பட்ட சாந்தியின் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்..
சாந்தியின் விட்டிற்க்கு வந்த விருந்தாளிகள் வீடு இடிப்படும் முன்னவே தங்கள் பொருட்களை எடுத்து கொண்டு யாரிடமும் சொல்லாது சென்று விட்டனர்… செல்லும் முன்.. அரசாங்க இடத்தில் கடையும் வீட்டையும் கட்டிட்டா இத்தனை பீத்திக்கிட்ட… என்று வேறு கேட்டு விட்டு தான் சென்றனர்…
இது தான் உறவுகள்.. இவர்கள் முன் நிலையில் தான், தாங்கள் மிக கெளரவமாக வாழ வேண்டும் என்று சாந்தி அத்தனை வேலைகளை பார்த்தது..
சாந்தியும் விமலும் இடிப்பட்ட வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்து பாதி பட்டா வீட்டை இடிக்காது விட்டார்கள் அல்லவா அங்கு கொண்டு சென்று வைத்து கொண்டு இருந்தாலும், சாந்தி புலம்பிக் கொண்டு தான் இருந்தார்…
அந்த இடைப்பட்ட நேரத்தில் சாண்டில்யன் தன் காரை சுமதியின் பக்கம் வந்து நிறுத்தினான்… காரை நிறுத்திய சாண்டில்யன் காரை விட்டு இறங்க வில்லை.. அதே சமயம் தங்கையிடம் காரில் ஏறு என்றும் சொல்லவில்லை… ஆனால் தன் தங்கையையே பார்த்து கொண்டு இருந்தான்…
சுமதியுமே தன் அண்ணனிடம் பேசவில்லை… பேசவில்லை என்பதை விட பேச முடியவில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்…
ஆனால் அவளால் அண்ணனை போல சாண்டில்யன் முகத்தையும். அவன் கண்ணையும் சிறிது நேரத்திற்க்கு மேல் தொடர்ந்தார் போல பார்க்க முடியவில்லை…
இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் இடிப்பட்ட வீட்டில் இருந்து பொருட்களை எடுத்த சாந்தி தன் மகனிடம்..
“எங்கேடா உன் பொண்டாட்டி அவளையும் எடுத்து வைக்க சொல்.. அதோ அந்த மூளையில் பீரோ இருக்கு பாரு… அது சாவீ கிடைக்குமோ கிடைக்காதோ… பீரோ பாதி உடைந்தது போல் தான் இருக்கு மிச்சத்தையும் உடச்சிடு..” என்று சொன்னவர் பின் எதோ நியாபகம் வந்தளாக.
“டேய் அதுல நகை வெச்சி இருப்பாளே.. அவளை கூப்பிடுடா….” என்று சொல்லியர் தன் கையில் இருந்த பொருட்களை கீழே போட்டு விட்டு வெளியில் வந்தளுக்கு அண்ணனும் தங்கையும் பார்க்கும் பார்வை கண்ணில் பட்டு விட. சும்மா இருப்பாரா.
அத்தனை திட்டு சாண்டில்யனை நோக்கி திட்டியவர்.. கடைசியாக “எந்த முகத்தை வெச்சிட்டு இங்கு வந்தேடா…?” என்று கோபமாக கேட்டார்..
சாந்தி திட்ட திட்ட சாண்டில்யன் வாயை திறக்கவில்லை… பார்வை மாறாது தன் தங்கையையே தான் பார்த்து கொண்டு இருந்தான்.. அவனுக்கு ஒரு சிலது தெரிய வேண்டி இருந்தது..
அவன் நினைத்தது போல் தான் சாந்தி எந்த முகத்தை வெச்சிட்டு வந்தே…? என்று சாண்டில்யனை பார்த்து கேட்ட போது.
சுமதி…. “ ஒவ்வொரு இடத்திற்க்கும் தகுந்தது போல முகத்தை மாற்றி கொண்டு இருக்க. அவர் நீங்க கிடையாது..” என்று சூடாக தன் மாமியார் கணவனை பார்த்து கேட்டவள்..
பின்.. “ என்னை பார்க்க… என்னை கூட்டிட்டு போக வந்தாரு…” என்று சுமதி சொன்னதும் விமலிடன் அத்தனை பதட்டம்… அதில்.
“ சுமதி நான் வேறு இடம் ஏற்பாடு செய்யிறேன்… அவன் உன்னையும் என்னையும் பிரிக்க பார்க்கிறான்…” என்று காரில் அமர்ந்து கொண்டு கிண்டலாக தன்னை பார்த்து கொண்டு இருந்த சாண்டில்யனை கை காட்டி சொன்னான்..
“ஓ. அப்படியா…?” என்று சுமதி கேட்கவும் தன் பேச்சை மனைவி நம்பவில்லை என்று…
“நம்புடி…. உன் அண்ணனையும் அண்ணியையும் பிரிச்சி வெச்சிட்டான் டி….” என்று அழுவது போலான நினையில் விமல் கதற,. அப்போதும் நம்பாத பார்வை தன்னை பார்த்து கொண்டு இருந்தவளை நம்ப வைக்க வேண்டி தன் மகளின் தலை மீது கை வைக்க போனவனின் கையை தட்டி விட்ட சுமதி.
“உன்னை என்னால நம்ப முடியாது… உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி பதிமூன்று வருடம் ஆகுது… ஆனா இது வரை நீயும் என் அண்ணன் வாசுவும் செய்த விசயத்தை என் கிட்ட சொல்லி இருக்கிங்கலா…?” என்று கேட்டதும்..
சாந்திக்கு கோபம் வந்து விட்டது…. “ என்ன டி புருஷன் காரனை நீ வா போன்னு பேசிட்டு இருக்க… மரியாதை கொடுத்து பேசு… “ என்று சொன்னது தான் தாமதம்.
இத்தனை ஆண்டுகள் தன் மாமியாரின் உழைப்பில் உயர்ந்த குடும்பம் இது என்று அத்தனை மரியாதை கொடுத்து கொண்டு இருந்த சுமதி தன் மாமியாரின் முன் ஒற்றை விரலை நீட்டி.
“நீ பேசாதே… நீ பேசவே கூடாது… என் அண்ணன் சொத்துக்கு நீங்க உரிமை எடுக்க பார்ப்பிங்கலோ… யாரே வேணா மன்னிப்பேன்.. ஆனா உன்னை என்னால.. “ எனும் போது நீட்டி கொண்டு இருந்த சுமதியின் விரலை சாந்து பிடிக்க பார்த்தார்.
இடையில் பிடிக்க விடாது சாண்டில்யன் சாந்தியின் கையை தட்டி விட்டவன்… சுமதியின் தோள் மீது கை போட்டு கொண்டவன்.
“காரில் ஏறு சுமதி.” என்று சொன்னான்..
இத்தனை நேரம் கோபத்தில் ஆவேசமாக கத்தி கொண்டு இருந்த சுமதி.. அண்ணனின் இந்த தோள் பற்றிலில் உடைந்து அழுது விட்டாள்..
என்ன தான் அண்ணனுக்கு நடந்த துரோகத்தில் அவளுக்கு பங்கு இல்லை என்றாலுமே, நானும் தானே வாசுவுடன் சேர்ந்து அண்ணனை விலக்கி வைத்து விட்டேன்..
அதுவும் இப்போது இப்படி தனித்து நிற்பது தன் மாமியார் தன் கணவனால் எனும் போது இன்னுமே உடைந்து போய் விட்டாள்..
“ண்ணா சாரி ண்ணா. சாரி…” என்று அழுத்தவளின் கண் துடைத்தவன்..
“இங்கு எதுவும் பேச வேண்டாம் சுமதி.. காரில் ஏறு பாரு என் மருமகள் ரொம்ப பயந்து போய் நிற்கிறா…” என்ற பேச்சில் சுமதி இன்னுமே வெடித்து அழுது விட்டாள்..
“ண்ணா இது போல என் பொண்ணை மருமகள் என்று கூப்பிடும் போது உன் மகனையோ மகளையோ உறவு வெச்சி கூப்பிட முடியல.. இந்த உறவு முறை வெச்சி கிண்டலா பேச முடியலேயேண்ணா…” என்று சுமதி சொல்லும் போது சாண்டில்யன் கண் முன் இயல் இசை இருவர் வந்து நின்றனர்..
அதில் தன்னால் அவன் உதடு.. “ அப்படி இல்லேன்னு சொல்லிட முடியாது..” என்று மெல்ல முனு முனுத்தான்.. நல்ல வேலை சுமதியின் காதில் அது விழவில்லை..
விமல் மீண்டும்…” சுமதி… நாம எது என்றாலும் பேசி தீர்த்து கொள்ளலாம்.. அவன் கூட போகாதே..” என்று சொல்ல சொல்ல சுமதி தன் கணவனின் பேச்சை கேளாது தன்மகளோடு சாண்டில்யனின் காரில் ஏறி அமர்ந்தாள்… சுமதி அமர்ந்ததும் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்த சாண்டில்யனும் விமலை திரும்பி பார்த்தவன்.
வாய் அசைவில்.. “வரட்டுமா..” என்று சொன்னதோடு விமலையும் பார்த்து கண் அசைத்தவன்..
பின் சாந்தியை பார்த்து… “ எனக்கு தெரிந்த முதியோர் அட்ரஸ் இருக்கு.. அங்கு போய் சேர்ந்துக்குறிங்கலா.. நான் ரெக்கமெண்ட் பண்ணா உங்களை நல்லா கவனிப்பாங்க…” என்று சொல்லி சாந்தியின் வயித்தெரிச்சலையும் கிளப்பி விட்டு தான் தன் காரை எடுத்தது சாண்டில்யன்…
காரை தன் வீடு நோக்கி செலுத்த. ஏதோ பேச முயன்ற தங்கையிடம் மட்டும்.. “ இப்போ ஒன்னும் வேண்டாம் சுமதி… குழந்தை இருக்கு பாரு.. ஏற்கனவே அந்த வீடு கடை இடிச்சதுல.. இப்போ பேசிய பேச்சில் எல்லாம் பார்த்து ரொம்ப பயந்து போய் இருக்கா… அவள் முன் இன்னுமே பேசி இன்னுமே பயப்பட வைக்க வேண்டாமே…” என்று மெல்ல தங்கையிடம் பேசியவன்… தங்கையின் பெண்..
சாக்ஷியிடம் அவள் மனநிலையை மாற்ற வேண்டி… அவள் பள்ளி படிப்பு பிடித்தது.. பிடிக்காதது என்று பேச்சு கொடுக்க.
சாக்க்ஷியும் முதலில் பேச தயங்கினாலும் பின்.. கேட்ட கேள்விக்கு தன் தாய் மாமனுக்கு பதில் அளித்தாள்…
இங்கு மாளவிகா வீட்டிலும் புது புயல் வீசியது…
தன் பெண்ணின் நடத்தை பற்றியே தவறாக பேசிய வாசு தேவ்வின் பேச்சில் கணபதி வசந்திக்கு அப்படி ஒரு கோபம். அதுவும் கணபதிக்கு தன்னை பார்த்து தன் மகளுக்கு நான் என்ன வேலை பார்ப்பதாக சொல்லி விட்டான் என்று அவர் தன் மனைவி வசந்தியிடம் இரவு முழுவதும் சொல்லி சொல்லி மாய்ந்து போய் விட்டார்…
இருவருக்குமே அந்த இரவு உறக்கம் இல்லாது தான் கழிந்தது.. சொந்தத்தில் கட்டி கொடுத்தவனின் முக மூடி கழண்டு விழுந்து தன் மகளின் வாழ்க்கை இப்படி போய் விட்டது என்பதே ஒரு பெற்றோருக்கு ரண வேதனை கொடுப்பது தான்..
இதில் தப்பை அவன் வைத்து கொண்டு தன்னை பார்த்து அப்படி பேசுவதா…? இதுவும் சேர்ந்து கொள்ள அவர்கள் மனது ஆரவில்லை…
இதில் விடிந்தும் இதே தன் மகளின் வாழ்க்கை.. அதை தொடர்ந்து வாசு தேவ் பேசிய பேச்சு இதே யோசனையுடன் தான் இருந்தார்கள்..
இதில் காலை உணவாக வந்து சாப்பிடும் அறையில் அமர்ந்து சாப்பிடும் போது குடும்பமாக மாளவிகா தன் கணவன் குழந்தைக்கு பரிமாறி கொண்டு இருப்பதை பார்த்ததும்..
சட்டென்று.. இவன் அண்ணன் தானே.. தன் மகளின் வாழ்க்கையை பாழாக்கியது. தன் மீது தவறை வைத்து கொண்டு தன் மகள் மீது பழியை போட்டு விட்டது.. கூடவே சொந்த தாய் மாமன் என்று கூட பாராது தன் கணவனிடம் அப்படியான வார்த்தையை கேட்டது… என்று இது வரை மாளவிகாவை தன் மருமகளாக பார்த்து கொண்டு இருந்த வசந்திக்கு.. தன் மகளின் வாழ்க்கை இவளை கொண்டும் தான் இந்த நிலைக்கு வந்து விட்டது என்று நினைத்தார்.
கூடவே மாளவிகாவை தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் முன். அடிக்கடி மாளவிகாவை வாசு தேவ் இங்கு கொண்டு வந்து விட்டு செல்வது..
திரும்ப வாசு தேவ் வந்து அழைத்து செல்லாது ஏதாவது வேலை இருப்பதாக சொல்லி விட்டு..
“ அத்த மாளவிகாவை தன் மகனை வீட்டிற்க்கு கொண்டு வந்து விடும் மாறு சொன்னது… சந்தியாவுடன் எங்காவது அழைத்து செல்லும் மாளவிகா ஏதாவது ஒரு காரணம் வைத்து கொண்டு இவர்கள் இருவரையும்… தன் மகன் கமல கண்ணன் அழைத்து செல்லும் மாறு செய்தது..
அன்று சொந்தம்… உறவு… வருவது போவது என்று அதை சாதாரணமாக நினைத்த வசந்திக்கு இதிலும் ஏதாவது இருக்குமோ என்று யோசிக்க வைத்தது..
அவர் யோசனை இப்படி இருந்ததில் மாளவிகா… “ அத்த அத்த உங்களுக்கும் டிபன் வைக்கட்டுமா….?” என்று கேட்டவள் வசந்தியிடம் பதில் வராது தன்னையே யோசனையுடன் பார்த்து கொண்டு இருந்த அத்தையின் பார்வை புரியாது அவளே வசந்தியின் முன் தட்டை வைத்தவள்.
முதலில் அவளே செய்த பீட்ரூட் அல்வாவை வைத்தவள்…” அத்த இதை நானே செய்தேன்…” என்று வேறு சொல்ல.
அப்போது தான் தன் யோசனையில் இருந்து நிகழ்வுக்கு வந்த வசந்தி… “ என்ன இது.?” என்று தன் தட்டில் இருக்கும் இனிப்பை காட்டி கேட்டார்.. கேட்டவரின் குரலில் அத்தனை கோபம்..
இப்போது தான் தன் அத்தையின் குரலில் இருந்த பேதம் தெரிந்து.
“அத்த இன்னைக்கு எங்க கல்யாண நாள்… அதனால் அல்வா செய்தேன்…” என்று மாளவிகா சொன்னது தான் தாமதம் தன் முன் இருந்த தட்டை வீசி எரிந்து விட்டார்.
“என் மகள் வாழ்க்கையை தொலச்சிட்டு நிற்கிறா… நீ கல்யாண நாளை கொண்டாடுறியா டி….” என்று கத்த.
கமலக்கண்ணன். “ ம்மா கொஞ்சம் அமைதியா இருங்கம்மா…” என்று தன் அன்னையின் தோள் தொட்டு சமாதானம் படுத்த முயல…
தன் மகன் தொடுதலில் அந்த அன்னை உடைந்து அழுது விட்டார்… கணவன் சொன்னதில் மேலோட்டமாக பாதியை மட்டுமே கூறியவர்..
நேற்று வாசு தேவ் சொன்ன வார்த்தையிலும் இன்று மாளவிகா அடிக்கடி வந்து சென்றதையும் கூட்டி கழித்து பார்த்து. இவன் தன் தங்கைக்கு மாமா வேலையை பார்த்துட்டு என் புருஷனை சொல்றானா…
இவளுமே ஒரு பெண் இந்த வீட்டில் இப்படி இருக்க கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாது கல்யாண நாள் கொண்டாடுகிறாளா என்ற ஆத்திரத்தில் தன் மகனின் வாசு தேவ் கணபதியை பார்த்து கேட்ட கேள்வியை சொல்லி விட்டார்…
“இவள் அண்ணன் காரன் உன் அப்பாவை பார்த்து அப்படி கேட்கிறான் டா….” என்று சொல்லி அழ கமலக்கண்ணன் மாளவிகாவை பார்த்தான்..
கணவனின் பார்வையில் மாளவிகா.. “ சத்தியமா இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லேங்க. நானே நேத்து சுமதி அக்கா கிட்ட இதை பத்தி தான் பேசிட்டு இருந்தேன்.. இப்படி வாசு அண்ணா செய்து வைப்பார் என்று நான் நினைக்கலேங்க…” என்று சொல்லி அழுது விட்டாள்…..
ஆனால் வசந்தி விடவில்லை.. “ என்ன தெரியாது.. என்ன தெரியாது என்று கேட்கிறேன்…? சின்ன வயசுல எல்லாம் நீ இங்கு வந்து இருக்கியா சொல்லு…” என்று கேட்ட வசந்திக்கு மாளவிகா பதில் சொல்லவில்லை..
காரணம் வசந்தி கேட்டது உண்மை தான்.. சின்ன வயதில் தாய் மாமன் வீட்டிற்க்கு அவ்வளவாக வந்தது கிடையாது தான். மாளவிகா அமைதியாக நிற்க..
வசந்தி மீண்டுமே..” நீ எப்போ இங்கு வர ஆரம்பித்தே.. உன் கல்யாண வயசுல.. அங்கு அங்கு சின்ன வயசுல உறவு முறை வீட்டிற்க்கு போய் அங்கு இருக்கும் தன் வயசு பிள்ளைங்க கூட விளையாடுவாங்க.. பெரிய பெண்ணா ஆகிட்டா வர மாட்டாங்க.. அதுவும் உறவு முறையில் அங்கு வயசு பையன் இருந்தா கண்டிப்பா கூச்சப்பட்டு வர மாட்டாங்க..
ஆனா நீ… சின்ன வயசுல இங்கு என்ன என்று கூட எட்டி பார்த்தது கிடையாது… கல்யாண வயசுல இங்கு வந்து தங்குவே என் மவனை கூட்டிட்டு வந்து விட சொல்லுவான் .உன் அண்ணன்.. அவன் உன்னை கூட்டி கொடுத்துட்டு… என் புருஷனை சொல்லுவானா அவன்..” என்று வசந்தி கத்திய கத்தலில் மாளவிகா கூனி குறுகி போய் விட்டாள்…
வசந்தியின் பேச்சில் கணபதி தான். “ வசந்தி என்ன இது.. அவள் நம்ம மருமகள் அதை நியாபகத்தில் வெச்சிட்டு பேசு… நீ அவளை அசிங்கப்படுத்தவில்லை. நம்ம குடும்பத்தை அசிங்கப்படுத்துற புரியுதா.? என்று தன் மனைவியை அடக்க பார்த்தார்.
ஆனால் வசந்தி நேற்று வாசு தன் கணவனை பார்த்து கேட்ட அந்த கேள்வியே திரும்ப திரும்ப அவர் காதில் கேட்டு கொண்டு இருக்க…..
விடுவேனா என்று…. “நீங்களுமே இவன் அண்ணனுக்கு தாய் மாமன் தான்… அது பார்த்தானா அவன். உங்க வயசுக்கு கூட மரியாதை கொடுக்கலையே எனும் போது..” கடைசி வார்த்தை வசந்திக்கு கேவலாக வெளி வர…
இத்தனை நேரம் அன்னையின் பேச்சில் சந்தியாவுமே அழுது கொண்டு இருந்தவள் எழுந்து ஒரு பக்கம் அவள் நின்று கொள்ள மறுப்பக்கம் கமலக்கண்ணன் நின்று கொண்டான்..
தன் இரு பிள்ளைகளின் பாசத்தில் இன்னுமே அவர் உடைந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்..
அதில்… தன் மகனிடம்.. “ அவன் சொல்றான் டா… பிடித்த பெண்ணிடம் காதல் சொல்லாது, அவன் சகிச்சிட்டு இருட்டில் இருட்டில் இவள் இவள்….” என்று சொன்னவர் முற்றிலுமாக உடைந்து விட்டார்..
அன்னையின் இந்த பேச்சில் சந்தியா கூனி குறுகி போய் தான் நின்று விட்டார்… இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து ஒரு குழந்தை பெற்ற பின்… உன்னுடன் நான் வாழ்ந்த வாழ்க்கை இது தான் என்று கணவன் சொல்ல கேட்பது எத்தனை ரணமானது அது… சந்தியாவுமே உடைந்து போய் விட.
கமல கண்ணனும்.. “ அவன் அப்படியா சொன்னான்.? சொன்னான்..?” என்று அத்தனை கோபம் வாசு தேவ் மீது..
அதில் தன் மனைவியிடம் தங்கள் அறையில்.. “ இங்கு நிலமை சரியில்ல மாலு.. நீ கொஞ்ச நாளுக்கு உன் அம்மா வீட்டில் போய் இரு…” என்று சொல்லவும் மாளவிகா தன் கணவனை அதிர்ந்து போய் தான் பார்த்தாள்..
எது எப்படியோ… மாளவிகா கமலக்கண்ணனை விரும்பி திருமணம் செய்து கொண்டாள்.. படிப்பு முடித்ததும்… அம்மா தன்னிடம்..
“வாசு உன்னை நம்ம கமலாவுக்கு கொடுக்க சொல்றான்.. எனக்குமே வெளியில் மாப்பிள்ளை பார்த்தால் எப்படியோ… இப்போ உன் அக்காவை வாசு பிரண்டுக்கு கல்யாணம் செய்து வைத்தோம்.. அவங்க வீட்டில் அவளை நல்ல மாதியா பார்த்துக்குறாங்க. மூத்த மாப்பிள்ளை பத்தி ஒரு குறை சொல்லவும் முடியாது… ( அப்போது பாவம் அவருக்குமே விமல் குடும்பத்தை பற்றி தெரியாது தானே….)
மூத்த மாப்பிள்ளையும் தங்கம்… இப்போ கமலா நான் பார்த்த வளர்ந்த பையன். என் அண்ணன் பையன். நீ என்ன சொல்ற..?” என்று மாளவிகா அன்னை கேட்ட போது.. மாளவிகா உண்மையில் பிடித்து தான் கமலக்கண்ணனை திருமணம் செய்து கொண்டது..
இதில் வசந்தி சொன்னது போல ஒரு சில விசயங்கள் நடந்தது தான். அது… “ நான் மாமா வீட்டுக்கு போறேன் மாலு. வீட்டில் தனியா தானே இருக்க போர் அடிக்கும்.. அங்குன்னா சந்தியா கூட இருக்கலாம்.. அவள் கூட வெளியுல் எங்காவது போய் கூட வரலாம்..” என்று வாசு தேவ் தன்னை அழைத்த போது..
மாளவிகா. உண்மையில் மகிழ்ச்சியுடன் தான் கிளம்பி தன் தாய் மாமா வீட்டிற்க்கு வந்தது… வந்தால் சந்தியாவுடன் இருக்கலாம் என்பதை விட கமலக்கண்ணனை பார்க்கலாமே என்று நினைத்து..
கூட வாசு அண்ணா அங்கு போவது சந்தியாவை பார்க்கவோ.. என்று நினைத்தும் கொண்டாள்.. ஏன் என்றால் அவளின் அன்னை இவளிடம் வாசுவுக்கு பெண் எடுத்து பெண் கொடுக்க ஆசை மாலு என்று அவர் சொல்லி இருந்ததும் காரணம்.. ஆனால் தான் வாசு தன்னை அழைத்த போது எல்லாம் மகிழ்ச்சியுடன் தாய் மாமன் வீட்டிற்க்கு சென்றாள்..
அன்று அனைத்துமே நல்லவிதமாக தான் இருந்தது.. வாசுவின் உண்மை முகம் தெரியும் வரை.. ஆனால் இப்போது அனைத்தும் வேறு பக்கமாக பார்க்கும் போது.. அதுவும் வாசு தேவ் தன் மாமாவை பார்த்து. கண்டிப்பாக அது போல கேட்டு இருக்க கூடாது. அதுவும் அவனே அந்த வேலையை பார்த்து விட்டு..
அதனால் தான் தன் மாமியார் நாக்கை பிடுங்கி கொள்வது போல தன்னை பார்த்து கேட்ட போது அவளாள் வாயை திறக்க முடியவில்லை…
இப்போது தன்னை தன் வீட்டுக்கு போ என்று கணவன் சொல்ல மாளவிகா தன் கணவனை பரிதவிப்புடன் ஒரு பார்வை பார்த்தாள்.. மனைவியன் இந்த பார்வை கமலக்கண்ணனுக்கு கஷ்டமாக இருந்தது.
“மாலும்மா கொஞ்ச நாள் போய் இரு என்று தான் சொல்றேன்…” என்று சொன்னவன் . பின்..
“உன்னை பார்க்க பார்க்க அம்மா இன்னுமே அதிகம் தான் பேசுவாங்க மாலு.. அது உனக்கும் மன கஷ்ட்டத்தை தான் கொடுக்கும்…
விளைவு மாளவிகா பெட்டி ..படுக்கையுடன் இங்கு இருந்து தன் அண்ணன் வீட்டிற்க்கு செல்லும் படி ஆகி விட்டது…..
அங்கு தான் செல்ல வேண்டும் வேறு வழீல்லை.. இதோ தன் மகள் சுரேகாவுடன் வந்து விட்டவள் பின் சாண்டில்யன் கார் வந்து நின்றது..
சாந்திக்கு தன் வீட்டின் பாதி இடிப்பட்ட வீட்டை பார்க்க பார்க்க அவருக்கு மயக்கமே வந்து விட்டது…
அதுவும் யாரின் முன் கெளரவமாக வாழ நினைத்தோளோ அவர்கள் முன் நிலையில் இது போலான கோலத்தில் நிற்பதில். இயலாமையில் கோபம் வந்தது.
அதுவும் தான் அழும் போது… விமலின் பேசிக்கு சாண்டில்யனிடம் இருந்து அழைப்பு வர.
இந்த சமயத்தில் என்ன இவன்.. அதுவும் இது வரை தன் கை பேசியில் அவன் பெயரை பதிவு செய்த நாள் முதல் இன்று வரை இந்த எண்ணில் இருந்து இது வரை அழைக்காத அழைப்பு வந்ததில் விமலுக்கு ஒரு சந்தேகம் வந்தது..
அதில் சட்டென்று அழைப்பை ஏற்று விட்டவனிடம் சாண்டில்யன்… “ உன் அம்மா கிட்ட கொஞ்சம் போனை கொடுக்கிறிங்கலா மச்சான்… உன் அம்மாவுக்கே போனை போட்டு இருப்பேன் ஆனா பாவம் கையில் ஒன்னும் இல்லாது நடுத்தெருவில் நிற்கிறார் என்று சொன்னாங்க.. அது தான் உனக்கு போனை போட்டேன் மச்சான்.. உன் அம்மா கிட்ட கொடு ராசா..” என்று வேறு சாண்டில்யன் நக்கல் தோணியில் பேசியவனின் இந்த பேச்சு விமலுக்கு புதியது…
சாண்டில்யனை பற்றி விமலுக்கு அனைத்து விவரமும் தெரிந்து இருந்தாலும். அந்த அளவுக்கு இருவரும் பேசியது கிடையாது தானே…
அதனால் சாண்டில்யன் இது போல எல்லாம் பேசுவான் என்று கிரகிக்கவே விமலுக்கு நேரம் பிடித்தது… புரிந்த பின்…
“இதுக்கு எல்லாம் நீயா காரணம்…” இதை விமல் அதிர்வுடன் தான் கேட்டது…
“பின்னே. சம்மந்தமே இல்லாம நீயும் உன் அம்மாவும் என் வாழ்க்கையில் கும்மி அடிப்பிங்க… எல்லாம் தெரிந்தும் என்னை என்ன விரல் சுப்பிட்டு இருக்க சொல்றியா.?” என்று முதல் பேசிய நக்கல் தோணி மாறி கோபத்துடன் கேட்டான்.
சாண்டில்யனின் இந்த பேச்சில் விமல் தன் அதிர்வில் இருந்து விடுப்பட்டு அவனுமே கோபமாக
“பொட்ட மாதிரி பின்னாடி செய்து முடித்து இருக்க.?” என்று ஆவேசமாக பேசியவனின் இந்த சத்தமான பேச்சில், சாந்தி மட்டும் அல்லாது சுமதியுமே தன் கணவனின் பேச்சை கவனித்தாள்..
விமல் பேசிய இந்த பேச்சுக்கு சாண்டில்யன் கோபம் எல்லாம் படவில்லை…சிரித்து கொண்டே…
“நான் பொட்டையா…? ஆம்பிள்ளையா… ? என்று காண்பிக்க தான் உன் அம்மா விடலையே மச்சான்.. ஆனா இனி தெரிஞ்சிப்ப எல்லா விதத்திலுமே நான் ஆம்பிள்ளை தான் என்று….” என்று சொன்னவன் பின்..
நிறுத்தி நிதானமாக…. “ நீயும் உன் நண்பன் வாசுவும் உன் ஆத்தா கூட சேர்ந்து எனக்கு பின் நீங்க பார்த்த பொட்ட வேலையை நீ என் கிட்ட சொல்றியாடா…?” என்று கேட்டவனிடம்..
“டேய் டேய் உன்னை நான் உன்னை நான்…” என்று பேசியிலேயே விமல் கத்த…
சாண்டில்யனோ… “ ஒன்னும் புடுங்க முடியாது.. உன் ஆத்தா கிட்ட கொடுடா. நான் உன் கத்தலை விட உன் ஆத்தா கத்தல கேட்க தான் டா ஆவலா இருக்கேன்…” என்று சொன்ன போது சாந்திக்கு புரிந்து விட்டது பேசுவது சாண்டில்யன் தான் என்று..
விமலுமே “ம்மா இதுக்கு எல்லாம் காரணம் சாண்டில்யன் தான் ம்மா..” என்று வேறு சொல்ல.
சாந்தி கை பேசியை தன் மகனிடம் இருந்து பரித்து கொண்டவர்.
“ ஏன்டா..” என்று சாந்தி ஆரம்பித்தது தான் தாமதம்…
சாண்டில்யன். “ எனக்கு மரியாதை ரொம்ப ரொம்ப முக்கியம் புரியுதா…? வீடு கடை போச்சி.. அடுத்து என்ன.. ஆ உனக்கு ரொம்ப ரொம்ப பெருமைலே… உன் மகன் சி.ஏ படிச்சி இருக்கான் என்று … இங்கு கூட ஒருவன்.. நான் வக்கீலாம்.. அவன் ஆடிட்டராம்.. அத்தனை பெருமை… அடுத்து அது தான் ஆப்பூ…” என்றது தாமதம் சாந்திக்கு இப்போது வீடு இடிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பது கூட பின் தங்கி விட்டது..
சாந்தி தன் மகனிடம்… “ ஏன்டா விமல். அந்த சண்டாளன் உன் வேலையில கூட ஏதோ செய்யிறதா சொல்றான் டா..” என்று கூப்பாடு போட.
இத்தனை நேரம் திக் பிரம்மையாக வீடு இல்லாது தன் மகளுடன் நின்று கொண்டு இருந்த சுமதி மாமியாரின் இந்த பேச்சில் அனைத்தும் புரிந்து விட…
சொன்னாள்… “ நீங்க செய்யும் போது இனித்தது லே… இப்போ கசக்குதோ என்று…” சுமதியின் இந்த பேச்சு கை பேசியின் வாயிலாக சாண்டில்யனுக்கு தெளிவாகவே கேட்டது..
சாண்டில்யன் இது வரை கூட பிறந்தவனின் செயலை நினைத்து என்ன தான் கோபத்தில் அனைத்தும் செய்து கொண்டு இருந்தாலும்.. மனதில் ஓரம் தன் இரு தங்கைகளுமே பொய்த்து இருப்பார்களோ… என்ற பயம் இருக்க தான் செய்தது..
அப்படி தான் தனிமையில் இருக்க அவர்களின் பங்கும் இருக்கிறது என்று தெரிந்தால், தான் என்ன செய்வது…? அவனால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை…. வசும்மா… என்னை மன்னிப்பார்களா. என்று வேறு யோசனை… வாசு தேவ்வுக்கும் சாந்திக்கும் கட்டம் கட்ட திட்டம் வகுக்கும் போது எல்லாம் சாண்டில்யன் மனதில் சிறிது குற்றவுணர்வு கூட இல்லை. ஆனால் இதில் தன் தங்கைகளுக்கும் பங்கு இருந்தால், அதை அவனால் நினைக்க கூட முடியவில்லை..
சுமதியின் இந்த பேச்சில் சாண்டில்யன் மனது கொஞ்சம் நிம்மதி அடைந்த அதே வேலை இப்போது தன் பெண்ணுடன் நடுத்தெருவில் நிற்பாள் என நினைக்கும் போதே தன் காரின் சாவீயை எடுத்து கொண்டு… இடிப்பட்ட சாந்தியின் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்..
சாந்தியின் விட்டிற்க்கு வந்த விருந்தாளிகள் வீடு இடிப்படும் முன்னவே தங்கள் பொருட்களை எடுத்து கொண்டு யாரிடமும் சொல்லாது சென்று விட்டனர்… செல்லும் முன்.. அரசாங்க இடத்தில் கடையும் வீட்டையும் கட்டிட்டா இத்தனை பீத்திக்கிட்ட… என்று வேறு கேட்டு விட்டு தான் சென்றனர்…
இது தான் உறவுகள்.. இவர்கள் முன் நிலையில் தான், தாங்கள் மிக கெளரவமாக வாழ வேண்டும் என்று சாந்தி அத்தனை வேலைகளை பார்த்தது..
சாந்தியும் விமலும் இடிப்பட்ட வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்து பாதி பட்டா வீட்டை இடிக்காது விட்டார்கள் அல்லவா அங்கு கொண்டு சென்று வைத்து கொண்டு இருந்தாலும், சாந்தி புலம்பிக் கொண்டு தான் இருந்தார்…
அந்த இடைப்பட்ட நேரத்தில் சாண்டில்யன் தன் காரை சுமதியின் பக்கம் வந்து நிறுத்தினான்… காரை நிறுத்திய சாண்டில்யன் காரை விட்டு இறங்க வில்லை.. அதே சமயம் தங்கையிடம் காரில் ஏறு என்றும் சொல்லவில்லை… ஆனால் தன் தங்கையையே பார்த்து கொண்டு இருந்தான்…
சுமதியுமே தன் அண்ணனிடம் பேசவில்லை… பேசவில்லை என்பதை விட பேச முடியவில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்…
ஆனால் அவளால் அண்ணனை போல சாண்டில்யன் முகத்தையும். அவன் கண்ணையும் சிறிது நேரத்திற்க்கு மேல் தொடர்ந்தார் போல பார்க்க முடியவில்லை…
இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் இடிப்பட்ட வீட்டில் இருந்து பொருட்களை எடுத்த சாந்தி தன் மகனிடம்..
“எங்கேடா உன் பொண்டாட்டி அவளையும் எடுத்து வைக்க சொல்.. அதோ அந்த மூளையில் பீரோ இருக்கு பாரு… அது சாவீ கிடைக்குமோ கிடைக்காதோ… பீரோ பாதி உடைந்தது போல் தான் இருக்கு மிச்சத்தையும் உடச்சிடு..” என்று சொன்னவர் பின் எதோ நியாபகம் வந்தளாக.
“டேய் அதுல நகை வெச்சி இருப்பாளே.. அவளை கூப்பிடுடா….” என்று சொல்லியர் தன் கையில் இருந்த பொருட்களை கீழே போட்டு விட்டு வெளியில் வந்தளுக்கு அண்ணனும் தங்கையும் பார்க்கும் பார்வை கண்ணில் பட்டு விட. சும்மா இருப்பாரா.
அத்தனை திட்டு சாண்டில்யனை நோக்கி திட்டியவர்.. கடைசியாக “எந்த முகத்தை வெச்சிட்டு இங்கு வந்தேடா…?” என்று கோபமாக கேட்டார்..
சாந்தி திட்ட திட்ட சாண்டில்யன் வாயை திறக்கவில்லை… பார்வை மாறாது தன் தங்கையையே தான் பார்த்து கொண்டு இருந்தான்.. அவனுக்கு ஒரு சிலது தெரிய வேண்டி இருந்தது..
அவன் நினைத்தது போல் தான் சாந்தி எந்த முகத்தை வெச்சிட்டு வந்தே…? என்று சாண்டில்யனை பார்த்து கேட்ட போது.
சுமதி…. “ ஒவ்வொரு இடத்திற்க்கும் தகுந்தது போல முகத்தை மாற்றி கொண்டு இருக்க. அவர் நீங்க கிடையாது..” என்று சூடாக தன் மாமியார் கணவனை பார்த்து கேட்டவள்..
பின்.. “ என்னை பார்க்க… என்னை கூட்டிட்டு போக வந்தாரு…” என்று சுமதி சொன்னதும் விமலிடன் அத்தனை பதட்டம்… அதில்.
“ சுமதி நான் வேறு இடம் ஏற்பாடு செய்யிறேன்… அவன் உன்னையும் என்னையும் பிரிக்க பார்க்கிறான்…” என்று காரில் அமர்ந்து கொண்டு கிண்டலாக தன்னை பார்த்து கொண்டு இருந்த சாண்டில்யனை கை காட்டி சொன்னான்..
“ஓ. அப்படியா…?” என்று சுமதி கேட்கவும் தன் பேச்சை மனைவி நம்பவில்லை என்று…
“நம்புடி…. உன் அண்ணனையும் அண்ணியையும் பிரிச்சி வெச்சிட்டான் டி….” என்று அழுவது போலான நினையில் விமல் கதற,. அப்போதும் நம்பாத பார்வை தன்னை பார்த்து கொண்டு இருந்தவளை நம்ப வைக்க வேண்டி தன் மகளின் தலை மீது கை வைக்க போனவனின் கையை தட்டி விட்ட சுமதி.
“உன்னை என்னால நம்ப முடியாது… உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி பதிமூன்று வருடம் ஆகுது… ஆனா இது வரை நீயும் என் அண்ணன் வாசுவும் செய்த விசயத்தை என் கிட்ட சொல்லி இருக்கிங்கலா…?” என்று கேட்டதும்..
சாந்திக்கு கோபம் வந்து விட்டது…. “ என்ன டி புருஷன் காரனை நீ வா போன்னு பேசிட்டு இருக்க… மரியாதை கொடுத்து பேசு… “ என்று சொன்னது தான் தாமதம்.
இத்தனை ஆண்டுகள் தன் மாமியாரின் உழைப்பில் உயர்ந்த குடும்பம் இது என்று அத்தனை மரியாதை கொடுத்து கொண்டு இருந்த சுமதி தன் மாமியாரின் முன் ஒற்றை விரலை நீட்டி.
“நீ பேசாதே… நீ பேசவே கூடாது… என் அண்ணன் சொத்துக்கு நீங்க உரிமை எடுக்க பார்ப்பிங்கலோ… யாரே வேணா மன்னிப்பேன்.. ஆனா உன்னை என்னால.. “ எனும் போது நீட்டி கொண்டு இருந்த சுமதியின் விரலை சாந்து பிடிக்க பார்த்தார்.
இடையில் பிடிக்க விடாது சாண்டில்யன் சாந்தியின் கையை தட்டி விட்டவன்… சுமதியின் தோள் மீது கை போட்டு கொண்டவன்.
“காரில் ஏறு சுமதி.” என்று சொன்னான்..
இத்தனை நேரம் கோபத்தில் ஆவேசமாக கத்தி கொண்டு இருந்த சுமதி.. அண்ணனின் இந்த தோள் பற்றிலில் உடைந்து அழுது விட்டாள்..
என்ன தான் அண்ணனுக்கு நடந்த துரோகத்தில் அவளுக்கு பங்கு இல்லை என்றாலுமே, நானும் தானே வாசுவுடன் சேர்ந்து அண்ணனை விலக்கி வைத்து விட்டேன்..
அதுவும் இப்போது இப்படி தனித்து நிற்பது தன் மாமியார் தன் கணவனால் எனும் போது இன்னுமே உடைந்து போய் விட்டாள்..
“ண்ணா சாரி ண்ணா. சாரி…” என்று அழுத்தவளின் கண் துடைத்தவன்..
“இங்கு எதுவும் பேச வேண்டாம் சுமதி.. காரில் ஏறு பாரு என் மருமகள் ரொம்ப பயந்து போய் நிற்கிறா…” என்ற பேச்சில் சுமதி இன்னுமே வெடித்து அழுது விட்டாள்..
“ண்ணா இது போல என் பொண்ணை மருமகள் என்று கூப்பிடும் போது உன் மகனையோ மகளையோ உறவு வெச்சி கூப்பிட முடியல.. இந்த உறவு முறை வெச்சி கிண்டலா பேச முடியலேயேண்ணா…” என்று சுமதி சொல்லும் போது சாண்டில்யன் கண் முன் இயல் இசை இருவர் வந்து நின்றனர்..
அதில் தன்னால் அவன் உதடு.. “ அப்படி இல்லேன்னு சொல்லிட முடியாது..” என்று மெல்ல முனு முனுத்தான்.. நல்ல வேலை சுமதியின் காதில் அது விழவில்லை..
விமல் மீண்டும்…” சுமதி… நாம எது என்றாலும் பேசி தீர்த்து கொள்ளலாம்.. அவன் கூட போகாதே..” என்று சொல்ல சொல்ல சுமதி தன் கணவனின் பேச்சை கேளாது தன்மகளோடு சாண்டில்யனின் காரில் ஏறி அமர்ந்தாள்… சுமதி அமர்ந்ததும் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்த சாண்டில்யனும் விமலை திரும்பி பார்த்தவன்.
வாய் அசைவில்.. “வரட்டுமா..” என்று சொன்னதோடு விமலையும் பார்த்து கண் அசைத்தவன்..
பின் சாந்தியை பார்த்து… “ எனக்கு தெரிந்த முதியோர் அட்ரஸ் இருக்கு.. அங்கு போய் சேர்ந்துக்குறிங்கலா.. நான் ரெக்கமெண்ட் பண்ணா உங்களை நல்லா கவனிப்பாங்க…” என்று சொல்லி சாந்தியின் வயித்தெரிச்சலையும் கிளப்பி விட்டு தான் தன் காரை எடுத்தது சாண்டில்யன்…
காரை தன் வீடு நோக்கி செலுத்த. ஏதோ பேச முயன்ற தங்கையிடம் மட்டும்.. “ இப்போ ஒன்னும் வேண்டாம் சுமதி… குழந்தை இருக்கு பாரு.. ஏற்கனவே அந்த வீடு கடை இடிச்சதுல.. இப்போ பேசிய பேச்சில் எல்லாம் பார்த்து ரொம்ப பயந்து போய் இருக்கா… அவள் முன் இன்னுமே பேசி இன்னுமே பயப்பட வைக்க வேண்டாமே…” என்று மெல்ல தங்கையிடம் பேசியவன்… தங்கையின் பெண்..
சாக்ஷியிடம் அவள் மனநிலையை மாற்ற வேண்டி… அவள் பள்ளி படிப்பு பிடித்தது.. பிடிக்காதது என்று பேச்சு கொடுக்க.
சாக்க்ஷியும் முதலில் பேச தயங்கினாலும் பின்.. கேட்ட கேள்விக்கு தன் தாய் மாமனுக்கு பதில் அளித்தாள்…
இங்கு மாளவிகா வீட்டிலும் புது புயல் வீசியது…
தன் பெண்ணின் நடத்தை பற்றியே தவறாக பேசிய வாசு தேவ்வின் பேச்சில் கணபதி வசந்திக்கு அப்படி ஒரு கோபம். அதுவும் கணபதிக்கு தன்னை பார்த்து தன் மகளுக்கு நான் என்ன வேலை பார்ப்பதாக சொல்லி விட்டான் என்று அவர் தன் மனைவி வசந்தியிடம் இரவு முழுவதும் சொல்லி சொல்லி மாய்ந்து போய் விட்டார்…
இருவருக்குமே அந்த இரவு உறக்கம் இல்லாது தான் கழிந்தது.. சொந்தத்தில் கட்டி கொடுத்தவனின் முக மூடி கழண்டு விழுந்து தன் மகளின் வாழ்க்கை இப்படி போய் விட்டது என்பதே ஒரு பெற்றோருக்கு ரண வேதனை கொடுப்பது தான்..
இதில் தப்பை அவன் வைத்து கொண்டு தன்னை பார்த்து அப்படி பேசுவதா…? இதுவும் சேர்ந்து கொள்ள அவர்கள் மனது ஆரவில்லை…
இதில் விடிந்தும் இதே தன் மகளின் வாழ்க்கை.. அதை தொடர்ந்து வாசு தேவ் பேசிய பேச்சு இதே யோசனையுடன் தான் இருந்தார்கள்..
இதில் காலை உணவாக வந்து சாப்பிடும் அறையில் அமர்ந்து சாப்பிடும் போது குடும்பமாக மாளவிகா தன் கணவன் குழந்தைக்கு பரிமாறி கொண்டு இருப்பதை பார்த்ததும்..
சட்டென்று.. இவன் அண்ணன் தானே.. தன் மகளின் வாழ்க்கையை பாழாக்கியது. தன் மீது தவறை வைத்து கொண்டு தன் மகள் மீது பழியை போட்டு விட்டது.. கூடவே சொந்த தாய் மாமன் என்று கூட பாராது தன் கணவனிடம் அப்படியான வார்த்தையை கேட்டது… என்று இது வரை மாளவிகாவை தன் மருமகளாக பார்த்து கொண்டு இருந்த வசந்திக்கு.. தன் மகளின் வாழ்க்கை இவளை கொண்டும் தான் இந்த நிலைக்கு வந்து விட்டது என்று நினைத்தார்.
கூடவே மாளவிகாவை தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் முன். அடிக்கடி மாளவிகாவை வாசு தேவ் இங்கு கொண்டு வந்து விட்டு செல்வது..
திரும்ப வாசு தேவ் வந்து அழைத்து செல்லாது ஏதாவது வேலை இருப்பதாக சொல்லி விட்டு..
“ அத்த மாளவிகாவை தன் மகனை வீட்டிற்க்கு கொண்டு வந்து விடும் மாறு சொன்னது… சந்தியாவுடன் எங்காவது அழைத்து செல்லும் மாளவிகா ஏதாவது ஒரு காரணம் வைத்து கொண்டு இவர்கள் இருவரையும்… தன் மகன் கமல கண்ணன் அழைத்து செல்லும் மாறு செய்தது..
அன்று சொந்தம்… உறவு… வருவது போவது என்று அதை சாதாரணமாக நினைத்த வசந்திக்கு இதிலும் ஏதாவது இருக்குமோ என்று யோசிக்க வைத்தது..
அவர் யோசனை இப்படி இருந்ததில் மாளவிகா… “ அத்த அத்த உங்களுக்கும் டிபன் வைக்கட்டுமா….?” என்று கேட்டவள் வசந்தியிடம் பதில் வராது தன்னையே யோசனையுடன் பார்த்து கொண்டு இருந்த அத்தையின் பார்வை புரியாது அவளே வசந்தியின் முன் தட்டை வைத்தவள்.
முதலில் அவளே செய்த பீட்ரூட் அல்வாவை வைத்தவள்…” அத்த இதை நானே செய்தேன்…” என்று வேறு சொல்ல.
அப்போது தான் தன் யோசனையில் இருந்து நிகழ்வுக்கு வந்த வசந்தி… “ என்ன இது.?” என்று தன் தட்டில் இருக்கும் இனிப்பை காட்டி கேட்டார்.. கேட்டவரின் குரலில் அத்தனை கோபம்..
இப்போது தான் தன் அத்தையின் குரலில் இருந்த பேதம் தெரிந்து.
“அத்த இன்னைக்கு எங்க கல்யாண நாள்… அதனால் அல்வா செய்தேன்…” என்று மாளவிகா சொன்னது தான் தாமதம் தன் முன் இருந்த தட்டை வீசி எரிந்து விட்டார்.
“என் மகள் வாழ்க்கையை தொலச்சிட்டு நிற்கிறா… நீ கல்யாண நாளை கொண்டாடுறியா டி….” என்று கத்த.
கமலக்கண்ணன். “ ம்மா கொஞ்சம் அமைதியா இருங்கம்மா…” என்று தன் அன்னையின் தோள் தொட்டு சமாதானம் படுத்த முயல…
தன் மகன் தொடுதலில் அந்த அன்னை உடைந்து அழுது விட்டார்… கணவன் சொன்னதில் மேலோட்டமாக பாதியை மட்டுமே கூறியவர்..
நேற்று வாசு தேவ் சொன்ன வார்த்தையிலும் இன்று மாளவிகா அடிக்கடி வந்து சென்றதையும் கூட்டி கழித்து பார்த்து. இவன் தன் தங்கைக்கு மாமா வேலையை பார்த்துட்டு என் புருஷனை சொல்றானா…
இவளுமே ஒரு பெண் இந்த வீட்டில் இப்படி இருக்க கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாது கல்யாண நாள் கொண்டாடுகிறாளா என்ற ஆத்திரத்தில் தன் மகனின் வாசு தேவ் கணபதியை பார்த்து கேட்ட கேள்வியை சொல்லி விட்டார்…
“இவள் அண்ணன் காரன் உன் அப்பாவை பார்த்து அப்படி கேட்கிறான் டா….” என்று சொல்லி அழ கமலக்கண்ணன் மாளவிகாவை பார்த்தான்..
கணவனின் பார்வையில் மாளவிகா.. “ சத்தியமா இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லேங்க. நானே நேத்து சுமதி அக்கா கிட்ட இதை பத்தி தான் பேசிட்டு இருந்தேன்.. இப்படி வாசு அண்ணா செய்து வைப்பார் என்று நான் நினைக்கலேங்க…” என்று சொல்லி அழுது விட்டாள்…..
ஆனால் வசந்தி விடவில்லை.. “ என்ன தெரியாது.. என்ன தெரியாது என்று கேட்கிறேன்…? சின்ன வயசுல எல்லாம் நீ இங்கு வந்து இருக்கியா சொல்லு…” என்று கேட்ட வசந்திக்கு மாளவிகா பதில் சொல்லவில்லை..
காரணம் வசந்தி கேட்டது உண்மை தான்.. சின்ன வயதில் தாய் மாமன் வீட்டிற்க்கு அவ்வளவாக வந்தது கிடையாது தான். மாளவிகா அமைதியாக நிற்க..
வசந்தி மீண்டுமே..” நீ எப்போ இங்கு வர ஆரம்பித்தே.. உன் கல்யாண வயசுல.. அங்கு அங்கு சின்ன வயசுல உறவு முறை வீட்டிற்க்கு போய் அங்கு இருக்கும் தன் வயசு பிள்ளைங்க கூட விளையாடுவாங்க.. பெரிய பெண்ணா ஆகிட்டா வர மாட்டாங்க.. அதுவும் உறவு முறையில் அங்கு வயசு பையன் இருந்தா கண்டிப்பா கூச்சப்பட்டு வர மாட்டாங்க..
ஆனா நீ… சின்ன வயசுல இங்கு என்ன என்று கூட எட்டி பார்த்தது கிடையாது… கல்யாண வயசுல இங்கு வந்து தங்குவே என் மவனை கூட்டிட்டு வந்து விட சொல்லுவான் .உன் அண்ணன்.. அவன் உன்னை கூட்டி கொடுத்துட்டு… என் புருஷனை சொல்லுவானா அவன்..” என்று வசந்தி கத்திய கத்தலில் மாளவிகா கூனி குறுகி போய் விட்டாள்…
வசந்தியின் பேச்சில் கணபதி தான். “ வசந்தி என்ன இது.. அவள் நம்ம மருமகள் அதை நியாபகத்தில் வெச்சிட்டு பேசு… நீ அவளை அசிங்கப்படுத்தவில்லை. நம்ம குடும்பத்தை அசிங்கப்படுத்துற புரியுதா.? என்று தன் மனைவியை அடக்க பார்த்தார்.
ஆனால் வசந்தி நேற்று வாசு தன் கணவனை பார்த்து கேட்ட அந்த கேள்வியே திரும்ப திரும்ப அவர் காதில் கேட்டு கொண்டு இருக்க…..
விடுவேனா என்று…. “நீங்களுமே இவன் அண்ணனுக்கு தாய் மாமன் தான்… அது பார்த்தானா அவன். உங்க வயசுக்கு கூட மரியாதை கொடுக்கலையே எனும் போது..” கடைசி வார்த்தை வசந்திக்கு கேவலாக வெளி வர…
இத்தனை நேரம் அன்னையின் பேச்சில் சந்தியாவுமே அழுது கொண்டு இருந்தவள் எழுந்து ஒரு பக்கம் அவள் நின்று கொள்ள மறுப்பக்கம் கமலக்கண்ணன் நின்று கொண்டான்..
தன் இரு பிள்ளைகளின் பாசத்தில் இன்னுமே அவர் உடைந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்..
அதில்… தன் மகனிடம்.. “ அவன் சொல்றான் டா… பிடித்த பெண்ணிடம் காதல் சொல்லாது, அவன் சகிச்சிட்டு இருட்டில் இருட்டில் இவள் இவள்….” என்று சொன்னவர் முற்றிலுமாக உடைந்து விட்டார்..
அன்னையின் இந்த பேச்சில் சந்தியா கூனி குறுகி போய் தான் நின்று விட்டார்… இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து ஒரு குழந்தை பெற்ற பின்… உன்னுடன் நான் வாழ்ந்த வாழ்க்கை இது தான் என்று கணவன் சொல்ல கேட்பது எத்தனை ரணமானது அது… சந்தியாவுமே உடைந்து போய் விட.
கமல கண்ணனும்.. “ அவன் அப்படியா சொன்னான்.? சொன்னான்..?” என்று அத்தனை கோபம் வாசு தேவ் மீது..
அதில் தன் மனைவியிடம் தங்கள் அறையில்.. “ இங்கு நிலமை சரியில்ல மாலு.. நீ கொஞ்ச நாளுக்கு உன் அம்மா வீட்டில் போய் இரு…” என்று சொல்லவும் மாளவிகா தன் கணவனை அதிர்ந்து போய் தான் பார்த்தாள்..
எது எப்படியோ… மாளவிகா கமலக்கண்ணனை விரும்பி திருமணம் செய்து கொண்டாள்.. படிப்பு முடித்ததும்… அம்மா தன்னிடம்..
“வாசு உன்னை நம்ம கமலாவுக்கு கொடுக்க சொல்றான்.. எனக்குமே வெளியில் மாப்பிள்ளை பார்த்தால் எப்படியோ… இப்போ உன் அக்காவை வாசு பிரண்டுக்கு கல்யாணம் செய்து வைத்தோம்.. அவங்க வீட்டில் அவளை நல்ல மாதியா பார்த்துக்குறாங்க. மூத்த மாப்பிள்ளை பத்தி ஒரு குறை சொல்லவும் முடியாது… ( அப்போது பாவம் அவருக்குமே விமல் குடும்பத்தை பற்றி தெரியாது தானே….)
மூத்த மாப்பிள்ளையும் தங்கம்… இப்போ கமலா நான் பார்த்த வளர்ந்த பையன். என் அண்ணன் பையன். நீ என்ன சொல்ற..?” என்று மாளவிகா அன்னை கேட்ட போது.. மாளவிகா உண்மையில் பிடித்து தான் கமலக்கண்ணனை திருமணம் செய்து கொண்டது..
இதில் வசந்தி சொன்னது போல ஒரு சில விசயங்கள் நடந்தது தான். அது… “ நான் மாமா வீட்டுக்கு போறேன் மாலு. வீட்டில் தனியா தானே இருக்க போர் அடிக்கும்.. அங்குன்னா சந்தியா கூட இருக்கலாம்.. அவள் கூட வெளியுல் எங்காவது போய் கூட வரலாம்..” என்று வாசு தேவ் தன்னை அழைத்த போது..
மாளவிகா. உண்மையில் மகிழ்ச்சியுடன் தான் கிளம்பி தன் தாய் மாமா வீட்டிற்க்கு வந்தது… வந்தால் சந்தியாவுடன் இருக்கலாம் என்பதை விட கமலக்கண்ணனை பார்க்கலாமே என்று நினைத்து..
கூட வாசு அண்ணா அங்கு போவது சந்தியாவை பார்க்கவோ.. என்று நினைத்தும் கொண்டாள்.. ஏன் என்றால் அவளின் அன்னை இவளிடம் வாசுவுக்கு பெண் எடுத்து பெண் கொடுக்க ஆசை மாலு என்று அவர் சொல்லி இருந்ததும் காரணம்.. ஆனால் தான் வாசு தன்னை அழைத்த போது எல்லாம் மகிழ்ச்சியுடன் தாய் மாமன் வீட்டிற்க்கு சென்றாள்..
அன்று அனைத்துமே நல்லவிதமாக தான் இருந்தது.. வாசுவின் உண்மை முகம் தெரியும் வரை.. ஆனால் இப்போது அனைத்தும் வேறு பக்கமாக பார்க்கும் போது.. அதுவும் வாசு தேவ் தன் மாமாவை பார்த்து. கண்டிப்பாக அது போல கேட்டு இருக்க கூடாது. அதுவும் அவனே அந்த வேலையை பார்த்து விட்டு..
அதனால் தான் தன் மாமியார் நாக்கை பிடுங்கி கொள்வது போல தன்னை பார்த்து கேட்ட போது அவளாள் வாயை திறக்க முடியவில்லை…
இப்போது தன்னை தன் வீட்டுக்கு போ என்று கணவன் சொல்ல மாளவிகா தன் கணவனை பரிதவிப்புடன் ஒரு பார்வை பார்த்தாள்.. மனைவியன் இந்த பார்வை கமலக்கண்ணனுக்கு கஷ்டமாக இருந்தது.
“மாலும்மா கொஞ்ச நாள் போய் இரு என்று தான் சொல்றேன்…” என்று சொன்னவன் . பின்..
“உன்னை பார்க்க பார்க்க அம்மா இன்னுமே அதிகம் தான் பேசுவாங்க மாலு.. அது உனக்கும் மன கஷ்ட்டத்தை தான் கொடுக்கும்…
விளைவு மாளவிகா பெட்டி ..படுக்கையுடன் இங்கு இருந்து தன் அண்ணன் வீட்டிற்க்கு செல்லும் படி ஆகி விட்டது…..
அங்கு தான் செல்ல வேண்டும் வேறு வழீல்லை.. இதோ தன் மகள் சுரேகாவுடன் வந்து விட்டவள் பின் சாண்டில்யன் கார் வந்து நின்றது..