அத்தியாயம்….20…2
வாசு தேவ்… இந்த கை தட்டலின் ஓசையில் தான் சாண்டில்யன் மாளவிகா சுமதி அவனை பார்த்தது… பார்த்தவர்கள் ஒன்றும் பேசவில்லை.. ஆனால் கூட வந்த விமல்..
“வாசு நீ என்ன செய்துட்டு இருக்க.. நான் உன்னை என்ன சொல்லி கூட்டிட்டு வந்தேன்.. நீ என்ன செய்துட்டு இருக்க…?” என்று தன் நண்பனை கோபமாக பேசினான்.. முதல் முறை விமல் இது போல வாசுவை கோபமாக கேட்டான்..
அதற்க்கு வாசு தேவ்…. நீ என்னை “என்ன செய்ய சொன்ன.. எனக்கு என் பொண்டாட்டி என் குழந்தை வேண்டும்… அவள் ஏதோ தப்பா நினச்சி இருக்கா… நீ என் தங்கையை விரும்பி தான் கல்யாணம் செய்த.. இதை தானே சொல்ல சொன்னே.... நானுமே இவள் இங்கு தனியா குழந்தையை வெச்சிட்டு அழுதுட்டு இருப்பா… இருப்பதை தானே சொல்ல போறோம் என்று வந்தேன்.. ஆனா ஆனா…” என்று ஒரு வித பதட்டத்துடன் சொன்னவன்..
பின் வாசு தேவ்… “ இது போல ஒரு காட்சி பார்த்த பின் வேறு என்ன செய்ய சொல்ற டா…. நன்றி கெட்டதுங்க.. இதுங்களுக்காக நான் என்ன எல்லாம் செய்து இருக்கேன்… என் பாதி உழைப்பை இதுங்களுக்காக தான் செய்தேன் டா.. எதுக்காக எப்போவும் இவங்களுக்கு நான் தான் தெரியனும். அவங்களை பொறுத்த வரை நான் ஒருத்தன் தான் அண்ணாவா இருக்கனும். ஒரு அண்ணா என்பது மட்டும் தான் அவங்க நினைப்பில் இருக்கனும் என்று தானே நான் இத்தனையும் செய்தேன்.. ஆனா இதுங்க இதுங்க நின்றி கெட்டதுங்க டா.” என்று தன் இரு தங்கைகளையும் கை காட்டி சொல்ல…
இப்போது மாளவிகா.. “ எங்களுக்காக என்ன செய்தே சொல்… செய்தது எல்லாம் உன் சுய நலத்துக்காக மட்டும் தான்.. நீங்க செய்ததின் விளைவு இப்போ என்ன ஆச்சு…?உங்க வாழ்க்கையையும் வீண் அடித்ததோடு எங்க வாழ்க்கையையும் இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கு..” என்று அழுது கொண்டே சொன்னாள்..
அவளுக்கு தன் கணவனை அத்தனை பிடிக்கும்… வாசு எதை வைத்து அவளை கமலக்கண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தானோ.. ஆனால் இவளுக்கு சின்ன வயதில் இருந்தே கமலக்கண்ணன் என்றால் அத்தனை பிடித்தம். தன் பிடித்தத்தை வாய் விட்டு சொல்லாமலேயே தன் வாசு அண்ணன் நிறை வேற்றி வைத்ததில், எத்தனை மகிழ்ந்து போனாள்..
ஆனால் அது எல்லாம் ஒரு காரணத்திற்க்காக தான் எனும் போது… அதுவும் தன் காதலை தன் பிடித்ததை இன்று தன் மாமியார் அத்தனை கொச்சைப்படுத்த காரணம் என்ன…? வாசு தன் மாமனாரை பார்த்து கேட்ட கேள்வி தானே.. அது போல கேட்கலாமா.?
கூடவே இன்று என்ன மாதிரியான நாள்.. திருமண நாளான இன்று தன் கணவனுக்கு என்ன என்ன மாதிரியான சர்பிரைஸ் சொன்ன நினைத்து கொண்டு இருந்தேன்.. ஆனால் எதுவும் இல்லாததோடு இனி என் வாழ்க்கை .அந்த வீட்டில் இருக்கும் பெண் என் அண்ணனால் வாழ்க்கை தொலைத்து நிற்கும் போது, நான் அந்த வீட்டில் எப்படி நிம்மதியாக வாழ முடியும்.. அதுவும் இது போலான நேரத்தில் என்று நினைத்து கொண்டவளின் கை தன் வயிற்றின் மீது தன்னால் படிந்தது..
ஆம் அவள் இரண்டாம் கருவை சுமந்து கொண்டு இருக்கிறாள்…
மாளவிகாவின் பேச்சை கேட்ட வாசு தேவ் அதற்க்கும் குதித்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
“எல்லாம் சுய நல பேய்கள்.. நான் மட்டும் என்ன சுகமாவா இருக்கேன். நீயாவது பிடித்தவனை கல்யாணம் செய்து கொண்டாய்.. ஆனால் நான் பிடித்த பெண்ணை.” என்று சொல்லும் போது தான் அங்கு ஸ்ருதிகா ஸ்ரீ தன் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் தாயோடு அங்கு வந்து சேர்ந்தது...
அங்கு அவளை பார்த்த பின்.. அதுவும் சிரித்த முகத்துடன் சாண்டில்யன் அதுவும் வாசு இத்தனை பேச்சுக்கும் ஒன்றும் சொல்லாது ஏன் அங்கு வாசு என்ற ஒருவன் இருப்பதையே கண்டு கொள்ளாது ஏன் ஸ்ருதிகா ஸ்ரீயை சிரித்த முகத்துடன்.
“வெல்கம் யுவர் அவுஸ்.” என்று அழைத்தவனை பார்த்த நம் வாசுவுக்கு இன்னும் எப்படி இருக்கும்…..? உண்மையில் அவன் மன நலம் பாதிக்கப்பட்டு தான் உள்ளானா என்பது போலான பேச்சுக்களை தான் வாசு பேசியது…..
அதுவும் ஸ்ருதிகா ஸ்ரீ சாண்டில்யனின் இரு பக்கமும் இரு தங்கைகள் இருக்க சிரித்த முகத்துடன் அவன் வர வேற்றதில் ஸ்ருதிகா ஸ்ரீயின் முகத்திலும் ஒரு நிறைவான புன்னகை.. சாண்டியனின் முகத்தில் எப்போதும் ஒரு ஆளுமை இருக்கும்… அதில் சந்தேகம் இல்லை.. ஆனால் மகிழ்ச்சி… ஒரு நிறைவு.. அவள் பார்த்தது கிடையாது..
இன்று அதை இரண்டையும் பார்த்ததில் ஸ்ருதிகாவுக்கு மனம் நிறைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.. பின் இருக்காதா.. அவளின் மாமா குணசேகரன் மூலம் சாண்டில்யனை பற்றி அனைத்தும் தெரிந்ததில் இருந்து அவளின் மனது ஒரு நிலையில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..
இன்னும் கேட்டால் அவளுக்கு அவளே உன் வாழ்க்கையே இப்போது அந்தரங்கத்தில் தான் தொங்கி கொண்டு இருக்கிறது ஸ்ருதிகா…ஸ்ரீ… உனக்குமே வாழ்க்கை நியாயம் செய்யவில்லை.. இதில் உனக்கு இரன்டு பெண் குழந்தைகள் வேறு… என்று கடைசியாக இரண்டு பெண் குழந்தைகள் என்பதை நினைக்கும் போது தான் இன்னுமே சாண்டில்யனுக்கு நடந்த அநியாயங்களை அதிகம் அவளுக்கு நினைக்க தோன்றியது.
தனக்காவது வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வாக நம் வாழ்க்கை வாழ ஒரு உந்து சக்தியாக நம் பெண்கள் இருக்கிறார்கள்..
ஆனால் அவனுக்கு.? அதுவும் அவனின் அம்மா அவன் இருபதாவது வயது முதலே…. குழந்தைகளை பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது, தன்னால் அவனுக்கு அது போலான ஆசைகள் வந்து இருக்கும் தானே..
அதனால் தானே முதல் முறை சந்தித்த போது தன் குழந்தைகளை பார்த்து அவன் சொன்ன இல்லாதவர்களுக்கு தான் அதன் மதிப்பு தெரியும் என்று சொன்னது. என்று நினைக்க கூடாது நினைக்க கூடாது என்று ஸ்ருதிகா ஸ்ரீ சாண்டில்யனை பற்றி நினைத்து கொண்டு இருந்தாள்..
ஒரு பக்கம் நான் என்ன செய்து கொண்டு இருக்கிறேன். அவனுக்கு நடந்தது அநியாயம் தான்.. ஆனால் நான் ஏன் அவனை பற்றியே இப்படி நினைத்து கொண்டு இருக்கிறேன். அதுவும் அவன் கண்களில் தன் குழந்தைகளை பார்த்து ஏக்கம் கண்டதை நினைத்தவளுக்கு பேசாது ஒரு குழந்தையை அவனிடம் கொடுத்து விடலாமா என்று நினைக்கும் அளவுக்கு இது போலான ஒரு நினைப்பு தப்பு தானே..
கணவனை பிரிந்து கொஞ்ச நாள் தான் ஆகவில்லை… இன்னொருவனை பற்றி இப்படி நினைக்கிறேன்.. அப்போ நான் எந்த மாதிரியான பெண்… என்று தனக்கு தானே மிகவும் குழம்பி போனவள்..
கடைசியாக தன் அக்கா கலாவதிக்கு அழைத்து விட்டாள்.. அவளுமே நடுயிரவு தான் தன் அக்காவை ஸ்ருதிகா ஸ்ரீ அழைத்தது…
நல்ல வேலை அன்று சாண்டில்யன் கேட்டது போல எந்த பேச்சையும் ஸ்ருதிகா ஸ்ரீ கேட்கும் படியான சூழல் அங்கு இல்லை.
கலாவதிக்கு அந்த நேரத்தில் தங்கையின் அழைப்பில் பதட்டத்துடன் தான் அதை எடுத்து ..
“ஸ்ருதி என்ன பிரச்சனை…? அவன் ஏதாவது வந்து பிரச்சனை செய்கிறானா.?” என்று ஸ்ரீ காந்த் தான் நடுயிரவு தன் தங்கை இருக்கும் வீட்டிற்க்கு வந்து விட்டானோ என்று பயந்து போய் கேட்டது… தங்கை இரு சிறு குழந்தைகளை வைத்து கொண்டு இருக்கிறாள்.. துணைக்கு வயதான அம்மா.. இந்த நேரத்தில் என்ன செய்வது என்ற பயம்…
கலாவதி ஸ்ரீ காந்த் அவன் மறு நாள் வருவதை முன் கூட்டியே தெரிந்த தீர்க்கதரிசியாக தான் சொன்னது.
ஸ்ருதிகா ஸ்ரீக்கு தான் அவன் நினைப்பே இல்லையே.. அதனால். “ யாருக்கா இங்கு வர போறா.” என்று கேட்டதில் தான் கலாவதிக்கு கொஞ்சம் நிம்மதி ஆனது.
பின் என்ன விசயம்.. என்று கேட்டதும்… ஸ்ருதிகா ஸ்ரீ அனைத்தையும் சொல்லி விட்டாள்..
“ஒரு சமயம் எனக்கு பார்த்த முதல் மாப்பிள்ளை அவர்… என்றதினால் தான் எனக்கு இப்படி எல்லாம் தோனுதோ…? இது தப்பு இல்லையா…?” என்று வேறு கேட்டு வைக்க..
ஸ்ருதிகா ஸ்ரீயின் இந்த குழப்பமான பேச்சு கலாவதிக்கு தெளிவான தீர்வு கிடைத்து விட்டதாக தான் நினைத்தாள்..
அதனால் அவள் வழியிலேயே… “ இது ல என்ன தப்பு இருக்கு ஸ்ருதி… நீ அவர் நிலையில் இருந்து யோசிக்கிற.. இதுல என்ன தப்பு இருக்கு…? சொல்… அதுவும் இல்லாம முதல் பிரச்சனை.. அதாவது அந்த வாசு உன்னை வைத்து கூட சாண்டில்யன் சாருக்கு இப்படி செய்து இருக்கான்.. உனக்கு அந்த யோசனை இருக்க தானே செய்யும்.. இதுல என்ன தப்பு இருக்கு..? நீ நினைப்பது தப்பே இல்ல… எல்லாம் சரி தான்…” என்று அவளின் குற்றவுனர்ச்சியை போக்கியதோடு. சாண்டில்யனை பற்றி இது போல் நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. உன்னை வைத்தும் தானே வாசு அது போல செய்தது என்று சாண்டில்யனை நினைக்க தூண்டி விட்டாள்..
மனைவியின் பேச்சை கேட்டு கொண்டு படுத்து கொண்டு இருந்த குணசேகரன் மனைவியின் பேச்சை ரசித்து கொண்டு இருந்தவன் கலாவதி பேசி முடித்து கை பேசி வைத்த நொடி இருக்கி அணைத்து ஒரு முத்தம் வைத்து விட்டு..
“என் ராசாத்தி என்னம்மா பாயிண்ட் பாயிண்டா பேசுறா…நல்ல வேல உன் அப்பா உன்னை லா படிக்க வைக்கல.. இல்லேன்னா… என் நீ ஃபீல்ட்டே காலி பண்ணி இருப்ப.” என்று சொன்னதும்..
கலாவதி… “ ஏன் நீங்க படிச்ச படிப்பை படிக்க வயசு வரம்பு எல்லாம் இருக்கா என்ன.? நான் நினைச்சா இப்போ கூட படிச்சிட்டு என் மச்சினர் கிட்ட ஜூனியரா சேர்ந்து உங்களை காலி செய்து விடுவேன்…” என்று சொன்ன மனைவியின் பேச்சை இன்னுமே கணவன் ரசித்தான். பின் மனைவியை ரசித்தான். அதன் பின்…
“முடியல முடியல என்று இப்போ எல்லாம் நீங்க ரொம்ப தான் பண்றிங்க.” என்ற மனைவியின் சிணுங்கலிலும் மனைவியின் புடவையின் வாசத்திலும் தான் அன்று குணசேகரன் உறங்கியது.
உறக்கம் கலைந்தது சாண்டில்யனின் கை பேசி ஓசையில் தான்.. அவன் எண்ணை பார்த்ததுமே பாவம் சகலைக்கு சகலமும் ஆடி போய் விட்டது..
தன் அறையை வேறு சுற்றி முற்றி பார்த்து கொண்டான்.. நான் சந்தோஷமா இருந்தாலே இவனுக்கு மூக்கு வேர்த்து விடுகிறதே… என்று நினைத்து.
இருந்தும் இந்த நேரத்தில் என்ன இது.. என்று எடுத்த உடனே சாண்டில்யன்.. இன்று ஸ்ரீ காந்த் கைக்கு நான் அனுப்பிய நோட்டிஸ் கிடைக்கும் ண்ணா… கண்டிப்பா நான் குறிப்பிட்ட அந்த பாயிண்டில் ஸ்ருதிகாவின் வீட்டிற்க்கு போவது உறுதி.. நான் என் ஆளை ஸ்ருதிகா வீட்டு கிட்ட நிற்க வைத்து இருக்கேன்.. பிரச்சனை என்று வந்தா கண்டிப்பா நான் உடனே நிற்பேன்.. நீங்க என்ன செய்யிறிங்க. இதையே ஒரு காரணமா வெச்சி ஸ்ருதிகா ஸ்ரீயை என் வீட்டு கிட்ட தங்க வைக்கிறிங்க.. ஓகே..” என்று குணசேகரன் சம்மதம் சொல்லாமலேயே இவனே அனைத்தும் திட்டம் இட.
குணசேகரன் தான். “ டேய் டேய்…” என்று கத்தும் படியாகி விட்டது…
பின் சாண்டில்யனே… “ இன்னைக்கு அந்த சாந்தியம்மாவோட சாந்தியை இன்னைக்கு தான் போக்க நாள் குறிச்சி வெச்சி இருக்கேன்… அதனால முதல் பிரச்சனை இது வருமா அது வருமா என்று தெரியல.. ஆனா இன்னைக்குள்ள இரண்டு பிரச்சனைக்கும் ஒரு தீர்வு கிடைத்து விடும் என்று சொல்லி விட்டான்.
இதோ அதன் படி தான் ஸ்ரீ காந்த் ஸ்ருதிகா ஸ்ரீயின் வீட்டின் முன் சத்தம் போட ஆரம்பித்த உடனே சாண்டில்யன் ஏற்பாடு செய்து இருந்த ஆள் சாண்டியனிடம் சொல்லி விட்டான்…
சொன்ன உடனே தயாராக இருந்ததினால், அங்கு வந்து நிலமையை சமாளித்து விட்டு குணசேகரனுக்கும் . “ இப்போ உங்க மைத்துனி கிட்ட பேசுங்க…” என்று ஒரு மெசஜை தட்டி விட்டு இடிப்பட்ட இடத்தில் நிற்கும் சாந்தியை பார்க்கும் பொருட்டு அங்கு சென்றவன்.. தன் தங்கை தனக்கு தீங்கு செய்யவில்லை என்று தெரிந்ததும் தங்கை மருமகளோடு வீடு வந்தவன்.. அவன் எதிர் பாராத ஒன்று இன்னொரு தங்கை தன் மகளோடு வந்தது… இதோ அவன் எதிர் பார்த்த அவனின் தேவதையின் வருகை. அதுவும் முக மலர்ச்சியுடன் தன்னை பார்த்த அந்த பார்வையும் சேர்ந்ததினால் வாசு தேவ் போன்ற சாத்தானின் பேச்சு எல்லாம் அவன் காதில் விழவில்லை..
அவன் எதிர் பார்த்த தங்கைகள். மருமகள்கள்… மனைவியாக வர இருப்பவள் தன் குழந்தைகள் என்று அனைவரும் அவன் கண் முன் நிற்க வாசு தேவ் எல்லாம் அவனின் பார்வைக்கு தெரியவே இல்லை….
வாசு தேவ்… இந்த கை தட்டலின் ஓசையில் தான் சாண்டில்யன் மாளவிகா சுமதி அவனை பார்த்தது… பார்த்தவர்கள் ஒன்றும் பேசவில்லை.. ஆனால் கூட வந்த விமல்..
“வாசு நீ என்ன செய்துட்டு இருக்க.. நான் உன்னை என்ன சொல்லி கூட்டிட்டு வந்தேன்.. நீ என்ன செய்துட்டு இருக்க…?” என்று தன் நண்பனை கோபமாக பேசினான்.. முதல் முறை விமல் இது போல வாசுவை கோபமாக கேட்டான்..
அதற்க்கு வாசு தேவ்…. நீ என்னை “என்ன செய்ய சொன்ன.. எனக்கு என் பொண்டாட்டி என் குழந்தை வேண்டும்… அவள் ஏதோ தப்பா நினச்சி இருக்கா… நீ என் தங்கையை விரும்பி தான் கல்யாணம் செய்த.. இதை தானே சொல்ல சொன்னே.... நானுமே இவள் இங்கு தனியா குழந்தையை வெச்சிட்டு அழுதுட்டு இருப்பா… இருப்பதை தானே சொல்ல போறோம் என்று வந்தேன்.. ஆனா ஆனா…” என்று ஒரு வித பதட்டத்துடன் சொன்னவன்..
பின் வாசு தேவ்… “ இது போல ஒரு காட்சி பார்த்த பின் வேறு என்ன செய்ய சொல்ற டா…. நன்றி கெட்டதுங்க.. இதுங்களுக்காக நான் என்ன எல்லாம் செய்து இருக்கேன்… என் பாதி உழைப்பை இதுங்களுக்காக தான் செய்தேன் டா.. எதுக்காக எப்போவும் இவங்களுக்கு நான் தான் தெரியனும். அவங்களை பொறுத்த வரை நான் ஒருத்தன் தான் அண்ணாவா இருக்கனும். ஒரு அண்ணா என்பது மட்டும் தான் அவங்க நினைப்பில் இருக்கனும் என்று தானே நான் இத்தனையும் செய்தேன்.. ஆனா இதுங்க இதுங்க நின்றி கெட்டதுங்க டா.” என்று தன் இரு தங்கைகளையும் கை காட்டி சொல்ல…
இப்போது மாளவிகா.. “ எங்களுக்காக என்ன செய்தே சொல்… செய்தது எல்லாம் உன் சுய நலத்துக்காக மட்டும் தான்.. நீங்க செய்ததின் விளைவு இப்போ என்ன ஆச்சு…?உங்க வாழ்க்கையையும் வீண் அடித்ததோடு எங்க வாழ்க்கையையும் இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கு..” என்று அழுது கொண்டே சொன்னாள்..
அவளுக்கு தன் கணவனை அத்தனை பிடிக்கும்… வாசு எதை வைத்து அவளை கமலக்கண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தானோ.. ஆனால் இவளுக்கு சின்ன வயதில் இருந்தே கமலக்கண்ணன் என்றால் அத்தனை பிடித்தம். தன் பிடித்தத்தை வாய் விட்டு சொல்லாமலேயே தன் வாசு அண்ணன் நிறை வேற்றி வைத்ததில், எத்தனை மகிழ்ந்து போனாள்..
ஆனால் அது எல்லாம் ஒரு காரணத்திற்க்காக தான் எனும் போது… அதுவும் தன் காதலை தன் பிடித்ததை இன்று தன் மாமியார் அத்தனை கொச்சைப்படுத்த காரணம் என்ன…? வாசு தன் மாமனாரை பார்த்து கேட்ட கேள்வி தானே.. அது போல கேட்கலாமா.?
கூடவே இன்று என்ன மாதிரியான நாள்.. திருமண நாளான இன்று தன் கணவனுக்கு என்ன என்ன மாதிரியான சர்பிரைஸ் சொன்ன நினைத்து கொண்டு இருந்தேன்.. ஆனால் எதுவும் இல்லாததோடு இனி என் வாழ்க்கை .அந்த வீட்டில் இருக்கும் பெண் என் அண்ணனால் வாழ்க்கை தொலைத்து நிற்கும் போது, நான் அந்த வீட்டில் எப்படி நிம்மதியாக வாழ முடியும்.. அதுவும் இது போலான நேரத்தில் என்று நினைத்து கொண்டவளின் கை தன் வயிற்றின் மீது தன்னால் படிந்தது..
ஆம் அவள் இரண்டாம் கருவை சுமந்து கொண்டு இருக்கிறாள்…
மாளவிகாவின் பேச்சை கேட்ட வாசு தேவ் அதற்க்கும் குதித்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
“எல்லாம் சுய நல பேய்கள்.. நான் மட்டும் என்ன சுகமாவா இருக்கேன். நீயாவது பிடித்தவனை கல்யாணம் செய்து கொண்டாய்.. ஆனால் நான் பிடித்த பெண்ணை.” என்று சொல்லும் போது தான் அங்கு ஸ்ருதிகா ஸ்ரீ தன் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் தாயோடு அங்கு வந்து சேர்ந்தது...
அங்கு அவளை பார்த்த பின்.. அதுவும் சிரித்த முகத்துடன் சாண்டில்யன் அதுவும் வாசு இத்தனை பேச்சுக்கும் ஒன்றும் சொல்லாது ஏன் அங்கு வாசு என்ற ஒருவன் இருப்பதையே கண்டு கொள்ளாது ஏன் ஸ்ருதிகா ஸ்ரீயை சிரித்த முகத்துடன்.
“வெல்கம் யுவர் அவுஸ்.” என்று அழைத்தவனை பார்த்த நம் வாசுவுக்கு இன்னும் எப்படி இருக்கும்…..? உண்மையில் அவன் மன நலம் பாதிக்கப்பட்டு தான் உள்ளானா என்பது போலான பேச்சுக்களை தான் வாசு பேசியது…..
அதுவும் ஸ்ருதிகா ஸ்ரீ சாண்டில்யனின் இரு பக்கமும் இரு தங்கைகள் இருக்க சிரித்த முகத்துடன் அவன் வர வேற்றதில் ஸ்ருதிகா ஸ்ரீயின் முகத்திலும் ஒரு நிறைவான புன்னகை.. சாண்டியனின் முகத்தில் எப்போதும் ஒரு ஆளுமை இருக்கும்… அதில் சந்தேகம் இல்லை.. ஆனால் மகிழ்ச்சி… ஒரு நிறைவு.. அவள் பார்த்தது கிடையாது..
இன்று அதை இரண்டையும் பார்த்ததில் ஸ்ருதிகாவுக்கு மனம் நிறைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.. பின் இருக்காதா.. அவளின் மாமா குணசேகரன் மூலம் சாண்டில்யனை பற்றி அனைத்தும் தெரிந்ததில் இருந்து அவளின் மனது ஒரு நிலையில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..
இன்னும் கேட்டால் அவளுக்கு அவளே உன் வாழ்க்கையே இப்போது அந்தரங்கத்தில் தான் தொங்கி கொண்டு இருக்கிறது ஸ்ருதிகா…ஸ்ரீ… உனக்குமே வாழ்க்கை நியாயம் செய்யவில்லை.. இதில் உனக்கு இரன்டு பெண் குழந்தைகள் வேறு… என்று கடைசியாக இரண்டு பெண் குழந்தைகள் என்பதை நினைக்கும் போது தான் இன்னுமே சாண்டில்யனுக்கு நடந்த அநியாயங்களை அதிகம் அவளுக்கு நினைக்க தோன்றியது.
தனக்காவது வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வாக நம் வாழ்க்கை வாழ ஒரு உந்து சக்தியாக நம் பெண்கள் இருக்கிறார்கள்..
ஆனால் அவனுக்கு.? அதுவும் அவனின் அம்மா அவன் இருபதாவது வயது முதலே…. குழந்தைகளை பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது, தன்னால் அவனுக்கு அது போலான ஆசைகள் வந்து இருக்கும் தானே..
அதனால் தானே முதல் முறை சந்தித்த போது தன் குழந்தைகளை பார்த்து அவன் சொன்ன இல்லாதவர்களுக்கு தான் அதன் மதிப்பு தெரியும் என்று சொன்னது. என்று நினைக்க கூடாது நினைக்க கூடாது என்று ஸ்ருதிகா ஸ்ரீ சாண்டில்யனை பற்றி நினைத்து கொண்டு இருந்தாள்..
ஒரு பக்கம் நான் என்ன செய்து கொண்டு இருக்கிறேன். அவனுக்கு நடந்தது அநியாயம் தான்.. ஆனால் நான் ஏன் அவனை பற்றியே இப்படி நினைத்து கொண்டு இருக்கிறேன். அதுவும் அவன் கண்களில் தன் குழந்தைகளை பார்த்து ஏக்கம் கண்டதை நினைத்தவளுக்கு பேசாது ஒரு குழந்தையை அவனிடம் கொடுத்து விடலாமா என்று நினைக்கும் அளவுக்கு இது போலான ஒரு நினைப்பு தப்பு தானே..
கணவனை பிரிந்து கொஞ்ச நாள் தான் ஆகவில்லை… இன்னொருவனை பற்றி இப்படி நினைக்கிறேன்.. அப்போ நான் எந்த மாதிரியான பெண்… என்று தனக்கு தானே மிகவும் குழம்பி போனவள்..
கடைசியாக தன் அக்கா கலாவதிக்கு அழைத்து விட்டாள்.. அவளுமே நடுயிரவு தான் தன் அக்காவை ஸ்ருதிகா ஸ்ரீ அழைத்தது…
நல்ல வேலை அன்று சாண்டில்யன் கேட்டது போல எந்த பேச்சையும் ஸ்ருதிகா ஸ்ரீ கேட்கும் படியான சூழல் அங்கு இல்லை.
கலாவதிக்கு அந்த நேரத்தில் தங்கையின் அழைப்பில் பதட்டத்துடன் தான் அதை எடுத்து ..
“ஸ்ருதி என்ன பிரச்சனை…? அவன் ஏதாவது வந்து பிரச்சனை செய்கிறானா.?” என்று ஸ்ரீ காந்த் தான் நடுயிரவு தன் தங்கை இருக்கும் வீட்டிற்க்கு வந்து விட்டானோ என்று பயந்து போய் கேட்டது… தங்கை இரு சிறு குழந்தைகளை வைத்து கொண்டு இருக்கிறாள்.. துணைக்கு வயதான அம்மா.. இந்த நேரத்தில் என்ன செய்வது என்ற பயம்…
கலாவதி ஸ்ரீ காந்த் அவன் மறு நாள் வருவதை முன் கூட்டியே தெரிந்த தீர்க்கதரிசியாக தான் சொன்னது.
ஸ்ருதிகா ஸ்ரீக்கு தான் அவன் நினைப்பே இல்லையே.. அதனால். “ யாருக்கா இங்கு வர போறா.” என்று கேட்டதில் தான் கலாவதிக்கு கொஞ்சம் நிம்மதி ஆனது.
பின் என்ன விசயம்.. என்று கேட்டதும்… ஸ்ருதிகா ஸ்ரீ அனைத்தையும் சொல்லி விட்டாள்..
“ஒரு சமயம் எனக்கு பார்த்த முதல் மாப்பிள்ளை அவர்… என்றதினால் தான் எனக்கு இப்படி எல்லாம் தோனுதோ…? இது தப்பு இல்லையா…?” என்று வேறு கேட்டு வைக்க..
ஸ்ருதிகா ஸ்ரீயின் இந்த குழப்பமான பேச்சு கலாவதிக்கு தெளிவான தீர்வு கிடைத்து விட்டதாக தான் நினைத்தாள்..
அதனால் அவள் வழியிலேயே… “ இது ல என்ன தப்பு இருக்கு ஸ்ருதி… நீ அவர் நிலையில் இருந்து யோசிக்கிற.. இதுல என்ன தப்பு இருக்கு…? சொல்… அதுவும் இல்லாம முதல் பிரச்சனை.. அதாவது அந்த வாசு உன்னை வைத்து கூட சாண்டில்யன் சாருக்கு இப்படி செய்து இருக்கான்.. உனக்கு அந்த யோசனை இருக்க தானே செய்யும்.. இதுல என்ன தப்பு இருக்கு..? நீ நினைப்பது தப்பே இல்ல… எல்லாம் சரி தான்…” என்று அவளின் குற்றவுனர்ச்சியை போக்கியதோடு. சாண்டில்யனை பற்றி இது போல் நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. உன்னை வைத்தும் தானே வாசு அது போல செய்தது என்று சாண்டில்யனை நினைக்க தூண்டி விட்டாள்..
மனைவியின் பேச்சை கேட்டு கொண்டு படுத்து கொண்டு இருந்த குணசேகரன் மனைவியின் பேச்சை ரசித்து கொண்டு இருந்தவன் கலாவதி பேசி முடித்து கை பேசி வைத்த நொடி இருக்கி அணைத்து ஒரு முத்தம் வைத்து விட்டு..
“என் ராசாத்தி என்னம்மா பாயிண்ட் பாயிண்டா பேசுறா…நல்ல வேல உன் அப்பா உன்னை லா படிக்க வைக்கல.. இல்லேன்னா… என் நீ ஃபீல்ட்டே காலி பண்ணி இருப்ப.” என்று சொன்னதும்..
கலாவதி… “ ஏன் நீங்க படிச்ச படிப்பை படிக்க வயசு வரம்பு எல்லாம் இருக்கா என்ன.? நான் நினைச்சா இப்போ கூட படிச்சிட்டு என் மச்சினர் கிட்ட ஜூனியரா சேர்ந்து உங்களை காலி செய்து விடுவேன்…” என்று சொன்ன மனைவியின் பேச்சை இன்னுமே கணவன் ரசித்தான். பின் மனைவியை ரசித்தான். அதன் பின்…
“முடியல முடியல என்று இப்போ எல்லாம் நீங்க ரொம்ப தான் பண்றிங்க.” என்ற மனைவியின் சிணுங்கலிலும் மனைவியின் புடவையின் வாசத்திலும் தான் அன்று குணசேகரன் உறங்கியது.
உறக்கம் கலைந்தது சாண்டில்யனின் கை பேசி ஓசையில் தான்.. அவன் எண்ணை பார்த்ததுமே பாவம் சகலைக்கு சகலமும் ஆடி போய் விட்டது..
தன் அறையை வேறு சுற்றி முற்றி பார்த்து கொண்டான்.. நான் சந்தோஷமா இருந்தாலே இவனுக்கு மூக்கு வேர்த்து விடுகிறதே… என்று நினைத்து.
இருந்தும் இந்த நேரத்தில் என்ன இது.. என்று எடுத்த உடனே சாண்டில்யன்.. இன்று ஸ்ரீ காந்த் கைக்கு நான் அனுப்பிய நோட்டிஸ் கிடைக்கும் ண்ணா… கண்டிப்பா நான் குறிப்பிட்ட அந்த பாயிண்டில் ஸ்ருதிகாவின் வீட்டிற்க்கு போவது உறுதி.. நான் என் ஆளை ஸ்ருதிகா வீட்டு கிட்ட நிற்க வைத்து இருக்கேன்.. பிரச்சனை என்று வந்தா கண்டிப்பா நான் உடனே நிற்பேன்.. நீங்க என்ன செய்யிறிங்க. இதையே ஒரு காரணமா வெச்சி ஸ்ருதிகா ஸ்ரீயை என் வீட்டு கிட்ட தங்க வைக்கிறிங்க.. ஓகே..” என்று குணசேகரன் சம்மதம் சொல்லாமலேயே இவனே அனைத்தும் திட்டம் இட.
குணசேகரன் தான். “ டேய் டேய்…” என்று கத்தும் படியாகி விட்டது…
பின் சாண்டில்யனே… “ இன்னைக்கு அந்த சாந்தியம்மாவோட சாந்தியை இன்னைக்கு தான் போக்க நாள் குறிச்சி வெச்சி இருக்கேன்… அதனால முதல் பிரச்சனை இது வருமா அது வருமா என்று தெரியல.. ஆனா இன்னைக்குள்ள இரண்டு பிரச்சனைக்கும் ஒரு தீர்வு கிடைத்து விடும் என்று சொல்லி விட்டான்.
இதோ அதன் படி தான் ஸ்ரீ காந்த் ஸ்ருதிகா ஸ்ரீயின் வீட்டின் முன் சத்தம் போட ஆரம்பித்த உடனே சாண்டில்யன் ஏற்பாடு செய்து இருந்த ஆள் சாண்டியனிடம் சொல்லி விட்டான்…
சொன்ன உடனே தயாராக இருந்ததினால், அங்கு வந்து நிலமையை சமாளித்து விட்டு குணசேகரனுக்கும் . “ இப்போ உங்க மைத்துனி கிட்ட பேசுங்க…” என்று ஒரு மெசஜை தட்டி விட்டு இடிப்பட்ட இடத்தில் நிற்கும் சாந்தியை பார்க்கும் பொருட்டு அங்கு சென்றவன்.. தன் தங்கை தனக்கு தீங்கு செய்யவில்லை என்று தெரிந்ததும் தங்கை மருமகளோடு வீடு வந்தவன்.. அவன் எதிர் பாராத ஒன்று இன்னொரு தங்கை தன் மகளோடு வந்தது… இதோ அவன் எதிர் பார்த்த அவனின் தேவதையின் வருகை. அதுவும் முக மலர்ச்சியுடன் தன்னை பார்த்த அந்த பார்வையும் சேர்ந்ததினால் வாசு தேவ் போன்ற சாத்தானின் பேச்சு எல்லாம் அவன் காதில் விழவில்லை..
அவன் எதிர் பார்த்த தங்கைகள். மருமகள்கள்… மனைவியாக வர இருப்பவள் தன் குழந்தைகள் என்று அனைவரும் அவன் கண் முன் நிற்க வாசு தேவ் எல்லாம் அவனின் பார்வைக்கு தெரியவே இல்லை….