Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட....21..1

  • Thread Author
அத்தியாயம்…21.1

சாண்டில்யன் தான் தன் தம்பி வாசு தேவ்வை கவனிக்கவில்லை.. ஆனால் வாசு தேவ்வின் பார்வையும், அவனின் மொத்த கவனமும் சாண்டில்யனிடம் தான் இருந்தது… அதுவும் ஸ்ருதிகா ஸ்ரீ வந்ததுமே அவன் முகத்தில் வந்து போன அந்த பாவனையும்.. கூடவே ஸ்ருதிகா ஸ்ரீ மட்டும் அல்லாது அவளின் குழந்தைகள் மீது செலுத்திய சாண்டில்யனின் பார்வையில் தெரிந்த அந்த பாசத்தை பார்த்தவனுக்கு…

அவன் அவனாக இல்லாது போனான்.. எது எது அவனுக்கு இல்லாது தனித்து நிற்க வேண்டும் என்று அவன் நினைத்தானோ… இன்று அனைத்துமாக தன் எதிரில் அவன் நிற்க.. இன்று அவன் எதிரில் தான் அனைத்துலும் தோற்று போனவனாக தான் தனித்து நிற்கிறோம்.. அன்றும் சரி.. இன்றும் சரி.. அவன் தான் ஜெயித்து கொண்டு இருக்கிறான் என்று நினைத்த நொடி..

வாசு தேவ்வின் மூளை இல்ல டா இல்ல. அப்போ நீ சின்ன பையன். உனக்கு ஒன்னும் தெரியாது என்பதை விட உன்னால் ஒன்னும் செய்ய முடியாது..

ஆனால் இப்போ… இப்போ உனக்கு ஒன்னும் இல்லாது நிற்கிற… இனி இழக்க உன்னிடம் என்ன இருக்கு… குடும்பம் சொத்து.. உறவுகள்… தொழில் என்று உன்னை முடக்கி போட்டு விட்டான்..

ஆம் வாசு தேவ் விமல் இருவரையுமே ஒரு விசயத்தில் வசமாக சிக்க வைத்து விட்டு தான் அந்த வீட்டை இடிக்கும் வேலையிலேயே சாண்டில்யன் இறங்கியது…

ஆடிட்டர் பொதுவாக தங்களிடம் கணக்குகளை ஒப்படைக்கும் வாடிக்கையாளர்களுக்கு தான் உண்மையாக இருப்பார்கள்.. என்ன என்ன வழியில் கணக்கு காண்பித்தால், அவர்கள் குறைந்த வருமான வரி கட்டலாம் என்று யோசித்து அதன் படி தான் கணக்கு காண்பித்து வருமான வரி கட்டும் படி பைல் செய்து கொடுப்பது.. இது ஒரு பொதுவான விசயம் தான்.

அதை தான் விமலும் வாசு தேவ்வும் செய்தது.. ஆனால் ஒன்றை நோண்ட ஆரம்பித்தால், அதுவும் பெரிய இடத்தில் தெரிந்தவர்கள் இருக்கும் பட்சத்தில் இதை வைத்து மாட்டி விட நினைத்தால் மாட்டி விடலாம்…

சாண்டில்யன் அதை தான் செய்தது.. ஒரு புகழ் பெற்ற அழகுநிலையம்.. அனைத்து இடத்திலும் கிளைகள் உள்ளது…

அவர்கள் சம்பாத்தியத்தில் பத்தில் ஒரு பங்கு கூட கணக்கில் காட்டாது… வரியாக இந்த சில வருடங்கள் கட்டிக் கொண்டு இருக்கிறது.. அந்த பிராண்டட் அழகுநிலையம்..

இதில் என்ன ஒரு விசயம் என்றால், அந்த அழகுநிலையமே… ஆடிட்டரிடமே ஒரு சில கணக்குகளை காட்டவில்லை. அதாவது ஒரு சில இடங்கள் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் தான் வைத்து உள்ளனர்… கணவன் மகன் மகள் பெயரில் உள்ள இடம்…

அது வாடகை போல. அதற்க்கு வாடகை தருவதை கணக்கில் ஆட்டிடர் காண்பித்து இருக்கின்றனர்...

அதை அவர்கள் ஆடிட்டரிடம் சொல்லவில்லை… இதில் இவர்களும் தங்களின் படித்த அறிவை காட்ட வேண்டி வரியை குறைத்து கட்டுவது போல கணக்கு எழுதி காட்ட.. இதுவும் அதுவும் சேர்ந்து ஒரு பெரிய தொகை அரசாங்கத்தை ஏமாற்றுவது போல ஆகி விட.. இது மத்திய அரசு விசயம்… சும்மா விடுவார்களா… இவர்கள் ஆடிட்டங்க் கம்பெனிக்கே வக்கீல் நோட்டிஸ் வந்து விட்டது…

அந்த கேஸ் கோர்ட்டில் முடியும் வரை இனி இவர்கள் இருவருமே ஆடிட்டிங்க செய்ய முடியாது.. குற்றம் நிருபனம் ஆனால் இனி இவர்கள் வாழ் நாள் முழுவதுமே ஆடிட்டிங்க செய்ய முடியாது என்ற அனைத்து வெறியும் ஒன்று சேர… வாசு தேவ் மொத்தமாக தன் நிலை இழந்து விட்டவன்..

அங்கு டீப்பாவின் மீது இருந்த கத்தியை எடுத்து விட்டான்..

தன்னை நோக்கி நடந்து வரும் இரு குழந்தைகளையும் நோக்கி கை நீட்டி.. “ வாட செல்லங்கலா…” என்று சாண்டில்யன் அழைத்ததில், இயல் இசை தன் அன்னையின் இசைவுக்கு ஸ்ருதிகா ஸ்ரீயின் முகத்தை பார்த்த குழந்தைகள் அங்கு சம்மதம் கிடைத்து விட குதுகலமாகவே தான் குழந்தைகள் இரண்டும் சாண்டில்யனை நோக்கி வந்தது.. அதை ஒரு புன் சிரிப்புடன் கை கட்டி பார்த்து கொண்டு இருந்தாள் ஸ்ருதிகா ஸ்ரீ..

அதுவும் தன் குழந்தைகளை பார்த்ததும் சாண்டில்யனின் கண்களில் தெரிந்த அந்த மகிழ்ச்சியை… அவனை நோக்கி வந்து கொண்டு இருந்த குழந்தைகளை ரசனையுடன் பார்த்து நின்று கொண்டு இருந்த சாண்டில்யனை ஸ்ருதிகா ஸ்ரீ ரசனையுடன் பார்த்து கொண்டு இருந்த சமயம் தான்..

குழந்தைகள் இரண்டும் வாசு தேவ் அருகில் சென்ற சமயம் தான் வாசு தேவ் அவன் பக்கத்தில் இருந்த டீப்பாவின் மீது இருந்த கத்தியை எடுத்தது… எடுத்ததும் அவன் பக்கமாக வந்து கொண்டு இருந்த இசையை ஒரு கை கொண்டு தன்னை நோக்கி இழுத்தும் தூக்கியும் கொண்ட வாசு தேவ்வின் மற்றோரு கையில் இருந்த கையில் இருந்த கத்தியை இசையின் கழுத்தின் மீது வைத்து விட்டான்…இது எல்லாம் ஒரு நொடியில் நடந்து முடிந்து விட்டது…

இதை யாருமே எதிர் பார்க்கவில்லை.., அவன் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த விமல் கூட.

“டேய் டேய் என்ன டா செய்யிற.. கத்தியை கீழே போடுறா…” என்று வாசுதேவ்வின் அனைத்து செயல்களுக்கும் துணை நின்று செய்த அவனே அதிர்ந்து போய் கத்தினான் என்றால், மற்றவர்களின் நிலை… அதுவும் குறிப்பாக ஸ்ருதிகா ஸ்ரீ, சாண்டில்யனின் நிலை சொல்லவும் வேண்டுமா…

ஸ்ருதிகா ஸ்ரீ அதிர்ச்சியில் அவள் கண்கள் நிலை குத்தி நின்று விட்டது… அவளின் பார்வை மொத்தமும்.. தன் குழந்தை கழுத்தின் கீழ் இருந்த கத்தியின் மீது மட்டுமே இருந்தது.. அதிர்ச்சியில் அவள் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை..

சாண்டில்யனுமே அதிர்ந்து நின்று விட்டாலும், இயல் பயத்தில் ஓடி வந்து தன் காலை பிடித்து கொண்டதில் சடுதியில் தன்னை சமாளித்தவனாக. பக்கத்தில் நின்று கொண்டு இருந்த மாளவிகாவிடம்.

“இயலை ரூமுக்கு கூட்டிட்டு போ…” என்று சொன்னவனிடம் மாளவிகா. ஏதோ சொல்ல முற்பட..

“மாளவிகா குழந்தை முன் எதுவும் வேண்டாம் போ..” என்று கத்தியதும் தான் மாளவிகா இயலை அழைத்து கொண்டு அங்கு இருந்த அறைக்கு சென்று கதவு அடைத்து கொண்டது…

இத்தனை பேச்சுக்கும் சாண்டில்யனின் பார்வை இசை மீதும் வாசுவின் மீது இருந்தது.. இசையை பார்க்கும் போது குழந்தை பயந்து விட்டதோ என்று ஒரு வித பரிதவிப்புடன் பார்த்தான் என்றால், வாசுவை பார்க்கும் போது அவனின் மனநிலையை அனுமானிக்கும் ஆராய்ச்சி பார்வை பார்த்தான்… நல்ல வேலை இசை பயபடவில்லை…

ஆனால் குழந்தை தன்னை ஒரு வித எதிர் பார்ப்புடன் பார்த்து கொண்டு இருந்த அந்த பார்வையில் அந்த ஆண்மகனின் உள்ளம் துடித்து போனது என்பது உண்மை…

சாண்டில்யன் இருவரையும் மாறி மாறி பார்த்த அந்த பார்வையை வாசு தேவ்.. சாண்டில்யன் பயந்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்..

அதில் வாசு தேவ் அப்படி ஒரு சிரிப்பு சிரித்து வைத்தான்..

“என்ன டா… பயம் வருதோ…?” என்று கேட்டவனிடம்..

சாண்டியல்யன்.. “ நீ என்ன செய்துட்டு இருக்க என்று உனக்கு புரியுதா வாசு…” என்று தன் பேச்சில் நிதானத்தை கொண்டு வந்து கேட்டவனிடம்..

“நான் செய்யிறது எனக்கு தெரியும் டா… ஆனா இப்போ நீ என்ன செய்ய போற என்று தான் உனக்கு தெரியல… இப்போ அதை நான் உனக்கு சொல்றேன்… நான் சொன்னதை நீ செய்தே ஆக வேண்டும்” என்று சாண்டில்யனிடம் சொன்னவன்..

தன் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த விமலனிடம்… “ உன் கையில் இருக்கும் அந்த ரட்சாபந்த்தை கழட்டி அவன் கிட்ட கொடு…” என்று சொன்னான்…

அன்று ரட்சாபந்த தினம்… வாசு தேவ் அலுவலகத்தில் இருப்பது தெரிந்து விமல் வீடு இடிக்கபட்டது சொல்லவும்.. மனைவியை சாண்டில்யனோடு சென்று விட்டாள்.. அவளை எப்படியாவது சமாதானம் செய்து தன்னுடன் அனுப்பும் மாறு கூற அங்கு சென்ற போது அங்கு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்..இவனை எப்போதும் அண்ணா அண்ணா என்று அழைக்கும்… இவன் நிலை புரியாது கை பிடித்து இதை கட்டி விட்டு விட்டாள்..

அதை தான் கழட்டி கொடு என்று வாசு தேவ் விமலனிடம் சொன்னது..

பாவம் விமலுக்கு தெரியவில்லை.. இது என்ன இந்த நேரத்தில் குழந்தையின் கழுத்துக்கு கீழே கத்தி வைத்து கொண்டு என்ன என்னவோ சொல்கிறான்.. அனைவரும் சொல்வது போல உண்மையில் மெண்டல் ஆகி விட்டானா என்று நினைத்து விட்டான்.

விமலுக்கு தான் அந்த ரட்சா பந்தத்தை ஏன் கழட்டி தன்னிடம் கொடுக்க சொன்னான் என்பது தெரியவில்லை…ஆனால் சாண்டில்யனுக்கு தெரிந்து விட்டது.. தெரிந்த விசயம் அவனை அத்தனை உஷ்ணம் ஆக்கியது… ஆனால் எதையும் முகத்தில் காட்டாது…

விமல் கழட்டி கொண்டு இருக்கும் அந்த ரட்சாபந்தை வாங்க அவர்களை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்து விட்டான் ...

ஆனால் அதற்க்குள் வாசு தேவ் சாண்டில்யனை பார்த்து… “ ஏய் ஏய் கிட்டே வராதே.. எனக்கு தெரியும் டா. நான் எதுக்கு அந்த ரட்சாபந்தை உனக்கு கொடுக்க சொன்னேன்.. என்று எதுக்கு என்னை நோக்கி வர என்றும் எனக்கு தெரியும்… “ என்று கிண்டலுடன் சொன்னவன்.

பின். “ பார்க்கிறேன்… அய்யாவுக்கு குழந்தை என்றால் ரொம்ப பிடிக்குமாமே… அது எந்த அளவுக்கு பிடிக்கும் என்று இப்போ நான் பார்க்கிறேன்… நீ இப்போ என்ன செய்யிற.. விமல் கொடுக்கும் அந்த ரட்சா பந்தை ஸ்ருதி கையில் கட்டி உன் தங்கையா ஏத்துக்க. புரியுதா…?” என்று ஒரு வித எள்ளலாக கேட்டான்..

சாண்டில்யன் யூகித்ததை தான் வாசு தேவ் சொன்னான்.. ஆனால் அவன் யூகித்த விசயத்தை வாசு தேவ் சொல்லும் போது சாண்டியனுக்கு அப்படி இருந்தது.. அதுவும் ஸ்ருதியை தங்கையா…. அந்த வார்த்தைக்கே இவனை அடித்து தொய்த்து எடுக்க வேண்டும் போல இருந்தது..

ஆனால் அவன் கையில் குழந்தை இருக்கே.. தன் அத்தனை கோபத்தையும் அடக்கி கொண்டவனாக விரைத்து போய் நின்று கொண்டு இருந்தான்..

“என்ன டா இன்னுமா கழட்டுற….?” என்று வாசு தேவ் இன்னும் தன் கையில் இருப்பதை கழட்டி கொண்டு இருந்த விமலை பார்த்து கோபமாக கேட்டான்…

கழட்ட முயற்ச்சி செய்து கொண்டே. “ நீ ரொம்ப தப்பு செய்யிற வாசு…” என்று சொல்லிக் கொண்டே பயத்தில் கழட்ட முயற்சி செய்து கொண்டு இருந்த விமலின் கையில் அத்தனை நடுக்கம்…

அவனின் இந்த பேச்சில் வாசு தேவ்வின் பார்வை விமலின் பக்கம் சென்றது.. விமலில் பார்வை செல்லும் முன்பே சாண்டில்யன் விமலை அனுமானித்து விட்டான்… பயந்து விட்டான் என்று..

அதுவும் வாசு தேவ்… வலது பக்கம் நின்று கொண்டு இருந்த விமலை பார்த்து “ என்ன டா.. நீயுமே எனக்கு துரோகம் செய்ய பார்க்கிறியா என்ன….? இது கழட்ட இத்தனை நேரம் பிடிக்கிற… என்ன நீயும் இவன் பக்கம் சாய்ந்து விட்டாயா….?” என்று கேட்டவன்..

இடது பக்கம் நின்று கொண்டு இருந்த சாண்டியனை வாசு தேவ் திரும்பி பார்த்த சமயம் சாண்டில்யன் வாசு தேவ்வின் வலது பக்கம் பார்த்து…

“விமல் வேண்டாம் ரிஸ்க்.. அவன் கையில் குழந்தை இருக்கு…” என்று ஒரு வித பதட்டத்துடன் சொல்லி கொண்டே வாசு தேவ்வை நோக்கி செல்ல..

வாசு தேவ்வோ சட்டென்று தன் வலது பக்கம் திரும்பி பார்க்க வாசு அருகில் வந்து விட்ட சாண்டில்யன்… வாசு தேவ் குழந்தை பிடித்து கொண்டு இருந்த கையை பிடித்து விட்டான்.

வாசு தேவ்வோ… அந்த கத்தியை சாண்டில்யன் புஜத்தில் குத்துவது போல வர சடுதியில் வாசுவின் கை பிடியில் இருந்த குழந்தையை வாசுவின் பிடியில் இருந்து விடுவித்து விட்டான்.



கீழே இறங்கிய குழந்தை.. இத்தனை நேரம் பயம் இருந்தாலுமே, தைரியமாக இருந்த இசை.. அழுதுக் கொண்டே தன் அன்னையிடம் ஓடி ஸ்ருதிகா ஸ்ரீயின் கையை மிக கெட்டியாக பிடித்துக் கொண்டு விட்டது…

அந்த பிடியில் தான் அதிர்ச்சியில் நின்று கொண்டு இருந்த ஸ்ருதிகா ஸ்ரீ தன் நிலைக்கு வந்தாள்.. வந்தவள் தன் கை பிடித்து கொண்டு பாதுக்காப்பாக இசை நின்று கொண்டு இருப்பதை பார்த்து ஒரு நிம்மதி பெரும் மூச்சு விட்ட அதே வேளயில் சட்டென்று அவளின் பார்வை சாண்டில்யன் வாசு தேவ்வின் பக்கம் சென்றது..

அங்கு அவள் கண்ட காட்சி… இது தான் வாசு தேவ் கையில் இருந்த கத்தி சாண்டில்யனின் கை புஜத்தில் அழுத்தி கொண்டு இருப்பதை தான்..

பாவம் அவளுக்கு தெரியாத ஒரு விசயம் வாசு தேவ் சாண்டில்யனை காயம் படுத்தும் நோக்கத்துடன் தான் கத்தியை அவன் கையின் புஜத்தில் வைத்தது..

வைத்தது மட்டும் தான் அவன். இசை பாதுக்காப்பாக அவள் அன்னையிடம் சென்று விட்டதை பார்த்ததும்.. அவன் கை பிடித்து தடுக்க எல்லாம் இல்லை. இன்னுமே தன் புஜத்தில் அழுத்தி கொண்டு இருந்தான்.

கத்தி முனையானது சதை பற்றில் மெல்ல மெல்ல ஊன்றி கொண்டு சென்றதில், ரத்தம் முதலில் சிறிதாக வெளி வர ஆரம்பித்து பின் ரத்தமானது அதிக அளவில் வந்து கொண்டு இருந்தது..

வாசு தேவ்… “ ஏய் ஏய் நீ என்ன டா செய்யிற. என்ன டா செய்யிற..?” என்று நடப்பது புரியாது கேட்டவன் காதில் சாண்டில்யன் அவன் காதுக்கு மட்டும் கேட்கும் படியான மெல்ல.

“என் அப்பா எனக்கு கிரிமினல் கிட்ட எப்படி பேசி ஜெயிக்கனும் என்று என் சின்ன வயசுல இருந்து சொல்லி கொடுத்து இருக்காருடா… இது வரை கிரிமினல் கிட்ட என் பேச்சில் ஜெயித்தேன். இன்னைக்கு தான் என் நடவடிக்கையில் ஜெயிச்சிட்டு இருக்கேன் டா….” என்று சொன்னவன் பின்..

“வெளியில் கிரிமினல் பார்வை வைத்தே நான் அவன் எப்படி பட்டவன் என்று எனக்கு தெரிந்து விடும் டா.. ஆனா உன்ன இத்தனை வருஷம்.. என் கூடவே இருக்கும் ஒரு கிரிமினல இனம் காண முடியாது இருந்ததுக்கு… என் ஏழு வருட வாழ்க்கையை தொலச்சிட்டு நிற்கிறேன் டா..” என்று சொன்னவனின் பார்வை ஸ்ருதிகா ஸ்ரீ பக்கம் சென்றது.

அங்கு ஒரு வித பயத்துடன் தன்னை பார்த்து நின்று கொண்டு இருந்தளை பார்த்து கண் ஜாடை செய்தவன்.

பின் தன் வலியை பொருட்படுத்தாது வாசு தேவ் கைய் மீது இன்னுமே ஒரு அழுத்தம் கொடுக்க.

அந்த கத்தியானது அவனின் எலும்பில் தொட்டு விட்டு இன்னும் ஆழ செல்ல முடியாத காரணத்தினால் நின்று விட.. அத்தனை ரத்தம் வந்தும் மயங்காது நின்று கொண்டு இருந்த சாண்டில்யன். சுமதி வாசு தேவ் குழந்தையை பிடித்து வைத்து கத்தியை காட்டி மிரட்டும் போதே காவல் நிலையத்திற்க்கு போன் செய்து விட. சரியாக அவர்கள் வந்த சமயம் அந்த காவலர்கள் முன் நிலையில் மயங்கி சரிந்தான்….










 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
185
தானா வந்து சிக்கிட்டான் மொத்தமா வாசு கதை முடிஞ்சுது 😂😂😂😂

இனி ஜெயிலு மெண்டல் ஹாஸ்பிடல்ன்னு மாத்தி மாத்தி ஷிப்ட் ஆகிட்டு இருக்க வேண்டியது தான் 🤣🤣🤣🤣

இசை குட்டி சூப்பர் 🥰
 
Active member
Joined
May 28, 2025
Messages
21
ஹாய் விஜி சிஸ் கத்தில குத்து வாங்கி மயக்கம் போட்டானே சாண்டி அவனுக்கு என்னாச்சு ப்பா?🤔🤔🤔
அது தெரியாமல் தானே தவிச்சுட்டு இருக்கோம் ஆப்பிள் வாங்குவோமா ஆரஞ்சு வாங்குவோமா ஒரே யோசனை ஆஸ்பத்திரி எதுனு தெரியல விஜி மேம் சொன்னாங்கனா உடனே கிளம்ப வேண்டியது தான்
 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
174
அது தெரியாமல் தானே தவிச்சுட்டு இருக்கோம் ஆப்பிள் வாங்குவோமா ஆரஞ்சு வாங்குவோமா ஒரே யோசனை ஆஸ்பத்திரி எதுனு தெரியல விஜி மேம் சொன்னாங்கனா உடனே கிளம்ப வேண்டியது தான்
அவன் ஸ்ருதியோடு டூயட் பாடி கிட்டு இருப்பான் 😏 😏 நீங்கள் ஆப்பிள் ஆரஞ்சு வாங்கிட்டு போய் தொல்லை பண்ண கூடாது என்று தான் சொல்லல 🤭 🤫 🤭 🤫 🤭 🤫
 
Active member
Joined
May 28, 2025
Messages
21
அவன் ஸ்ருதியோடு டூயட் பாடி கிட்டு இருப்பான் 😏 😏 நீங்கள் ஆப்பிள் ஆரஞ்சு வாங்கிட்டு போய் தொல்லை பண்ண கூடாது என்று தான் சொல்லல 🤭 🤫 🤭 🤫 🤭 🤫
அட கடவுளே இது தெரியாமல் நான் புலம்பிட்டே இருக்கேன் நல்ல வேளை சொன்னீங்க அவர் அடுத்து இயல் இசை இதன் பிறகு நாடகம் ரீலீஸ் பண்ணுற பிசியோ இருக்கட்டும் இருக்கட்டும் சகலைக்கு டஃப் கொடுக்கனும்ல
 
Well-known member
Joined
Jul 14, 2024
Messages
392
அது தெரியாமல் தானே தவிச்சுட்டு இருக்கோம் ஆப்பிள் வாங்குவோமா ஆரஞ்சு வாங்குவோமா ஒரே யோசனை ஆஸ்பத்திரி எதுனு தெரியல விஜி மேம் சொன்னாங்கனா உடனே கிளம்ப வேண்டியது தான்
அவன் ஸ்ருதியோடு டூயட் பாடி கிட்டு இருப்பான் 😏 😏 நீங்கள் ஆப்பிள் ஆரஞ்சு வாங்கிட்டு போய் தொல்லை பண்ண கூடாது என்று தான் சொல்லல 🤭 🤫 🤭 🤫 🤭 🤫
அட கடவுளே இது தெரியாமல் நான் புலம்பிட்டே இருக்கேன் நல்ல வேளை சொன்னீங்க அவர் அடுத்து இயல் இசை இதன் பிறகு நாடகம் ரீலீஸ் பண்ணுற பிசியோ இருக்கட்டும் இருக்கட்டும் சகலைக்கு டஃப் கொடுக்கனும்ல
Settai settai settai settai
Vaishu ma
Ivangha update keppangha nnu nenaichen
Attahasam pannurangha
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
176
அது தெரியாமல் தானே தவிச்சுட்டு இருக்கோம் ஆப்பிள் வாங்குவோமா ஆரஞ்சு வாங்குவோமா ஒரே யோசனை ஆஸ்பத்திரி எதுனு தெரியல விஜி மேம் சொன்னாங்கனா உடனே கிளம்ப வேண்டியது தான்
மச்சீ இப்பவே நாம சங்கடையும் பீடிங்பாட்டிலும் வாங்கி வச்சுக்கலாம்‌.
ஏன்னா நம்மாளோட உபசரணைல இருப்பாரு தொரை 🤭🤭🤭🤭
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
176
Settai settai settai settai
Vaishu ma
Ivangha update keppangha nnu nenaichen
Attahasam pannurangha
பங்கு இரண்டு நாளா சைட்டை எட்டிப்பாத்து பாத்து
கண்ணு எதிர்பாக்குது. அதனால நம்ம மச்சீஸ் 😁 😁 😁 😁 கொஞ்சம் சேட் (டை)
பண்ணறாங்க.
 
Well-known member
Joined
Jul 14, 2024
Messages
392
அப்போ நாங்க கேட்டதுக்கு பேர் என்ன மா
பங்கு இரண்டு நாளா சைட்டை எட்டிப்பாத்து பாத்து
கண்ணு எதிர்பாக்குது. அதனால நம்ம மச்சீஸ் 😁 😁 😁 😁 கொஞ்சம் சேட் (டை)
பண்ணறாங்க.
Settai settai settai
Vaishu மா
Neengha sonna correct ahh irrukkum
🙌🙌🙌
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,251
Settai settai settai settai
Vaishu ma
Ivangha update keppangha nnu nenaichen
Attahasam pannurangha
அவனுக்கு ஆப்பிள் வேண்டாம். ஆரஞசு வேண்டாம்.. ஸ்ருதிகா ஸ்ரீ தான் வேண்டும் பா
 
Top