Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட....21...2

  • Thread Author
அத்தியாயம்….21.2

காவலர்கள் வந்ததை பார்த்ததும் தான் சாண்டியன் மயங்கி சரிந்தது… வாசு தேவ்… தான் என்ன நடந்தது என்று புரியாது குழம்பி போனான்.. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் தான் குத்த தான் முயன்றேன் ஆனால் குத்தவில்லை என்று..

ஏன் இப்படி தன்னையே காயப்படுத்தி கொள்கிறான் என்பதை அங்கு வந்த காவலரை பார்த்து தான் வாசு தேவ்வுக்கு புரிந்தது..

அதில் பதட்டத்துடன் தன் கையில் இருந்த கத்தியை கீழே போட்டு விட்டு… அனைத்து குற்றவாளியும் சொல்லும் வசனத்தை..

“இல்ல நான் குத்தல . நான் குத்தல…” என்று அப்போது உண்மையை தான் சொன்னான்.. ஆனால் அதை ஏற்று கொள்ள தான் அங்கு யாரும் இல்லை..

“நாங்க தான் பார்த்தோமேடா…” என்று வாசு தேவ்வை ஒரு அடி அடித்து விட்டார் வந்த காவலர்.. காரணம் அந்த காவலருக்கு சாண்டியனையும் தெரியும்..

அவனின் தந்தை சோமசுந்தரத்தையும் தெரியும்.. அதனால் அடித்து தான் வாசு தேவ்வை இழுத்து கொண்டு சென்றது..

எப்போதும் அனைத்திற்க்கும் துணை நிற்கும் விமல் இன்று… வாசு தேவ்… “ விமல் நீ சொல்லுடா. சொல்லுடா. நீ பக்கத்தில் இருந்து பார்த்தே தானே.. அவனே தானே என் கை வைத்து குத்திக் கொண்டான்…” என்று கத்தலுக்கு விமல் ஒன்றும் பேசாது அமைதியாக நின்று விட்டான்..

காவலர் தான்…” அவர் என்ன உன்னை மாதிரி லூசா டா…” என்று இன்னுமே இரண்டு அடி அடித்து தான் காவல் நிலையத்திற்க்கு கூட்டி கொண்டு சென்றது..

உண்மையில் விமல் மிகவும் பயந்து போய் தான் விட்டான் சாண்டில்யனின் இந்த அவதாரத்தில்.. இத்தனை ஆண்டுகள் அவனை ஏமாற்றியதில் விமல் சாண்டில்யனை மிக எளிதாக தான் நினைத்து கொண்டான்..

அதுவும் வாசு தேவ் என்ன சொன்னாலும் கேட்டு ஒதுங்கி நின்றவனை பார்த்து விமலே ஒரு முறை வாசுவிடம்.

“என்ன டா நீ சொன்ன பில்டப்பில் உன் அண்ணனை ஸ்கெச் செய்ய நிறைய கஷ்டப்படனும் என்று நினைத்தேன்.. ஆனா அவன் என்ன என்றால் இப்படி எல்லாத்துக்கும் தலையாட்டியா இருக்கான்… எப்படி டா இவன் கேஸ் வாதாடி ஜெயிக்கிறான்…

நான் நினைக்கிறான் அந்த சோமசுந்தர ஜூனியரை தான் இவனும் இன்று வரை தனக்கு கீழ் வைத்து இருக்கான் போல. அவங்க எடுத்து கொடுக்கும் பாயிண்டை எல்லாம் ஜட்ஜ் முன்ன பேசி பெயரை இவன் தட்டி சென்று விடுகிறான் போல “ என்று கிண்டல் கூட செய்து இருக்கிறான் சாண்டியன பற்றி…

அவனுக்கு தெரியாத ஒரு விசயம்.. உறவு. ரத்த சம்மந்தமான அந்த உறவை வைத்து தான் இவர்கள் மீது சிறிதளவு கூட சந்தேகம் படாது இருந்து விட்டது… அப்படி உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தார்கள் அவனின் அன்னையும் தந்தையுமான ராஜ ராஜேஸ்வரியும், சோமசுந்தரமும்..



ஆனால் இன்று விமல் தான் நினைத்ததிற்க்கு எதிர் பதமாக இன்று ஒரு நாள் மட்டுமே அவன் சாண்டில்யனை செய்த அனைத்தையும் நேரிடையாக கண்டதில் விமல் மிகவும் பயந்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்…

ஆம் வாசு தேவ் சொன்னது போல அவன் விமல் பார்த்தான் தான். அதாவது வாசு கத்தியை குத்த முயற்சித்தான் தான்…ஆனால் தன்னை தானே குத்திக் கொண்டது சாண்டில்யன் தான் என்பதை…

வாசு தேவ் காவல் நிலையம் அழைத்து செல்வதற்க்குள் இங்கு சாண்டில்யனை கவனிக்க மருத்துவர் ஒருவர் வீட்டிற்க்கு வந்து விட்டார்.. இதுவுமே சுமதி அழைப்பின் பெயரில் தான் அவங்க குடும்ப மருத்துவர் வந்தது..

ஸ்ருதிகா ஸ்ரீ அது வரை நின்ற இடத்தில் இருந்து அதிர்ந்து போய் தான் இருந்தாள்… காரணம் விமல் கவனித்தது போல அவளுமே கவனித்ததில், வாசு சாண்டில்யனை காயப்படுத்தவில்லை.. சாண்டில்யன் தான் தன்னை தானே காயம் படுத்தி கொண்டான் என்பதை…

என்ன ஒன்று பாவம் அவன் மயங்கி விழுந்ததை கூட அதில் ஒன்றாக தான் ஸ்ருதிகா ஸ்ரீ நினைத்து விட்டாள்…காரணம் அது வரை நின்று கொண்டு இருந்தவன் சரியாக காவலர் வந்த போது விழுந்ததில், அதுவும் விழும் முன் தன்னை பார்த்து ஒரு கண் சிமிட்டல் வேறு… அதனால் காயம் படுத்திக் கொண்டது போல இதுவும் ஒன்றோ என்று தான் நினைத்து விட்டாள்…(நீங்களுமே அப்படி தானே நினைத்திங்க…)

பின் தான் மருத்துவர் வந்து பரிசோதித்த பின் தான். தெரிந்தது உண்மையில் சாண்டில்யன் மயக்கத்தில் தான் வீழ்ந்தான் என்பது..

அடுத்து என்ன..? அனைத்தும் அத்தனை விரைவாக நடந்து முடிந்து இருந்தது.. இரண்டு தங்கைகள் ஸ்ருதிகா ஸ்ரீ.. அனைவரும் சேர்ந்து தான் மருத்துவரின் சொல் படி மருத்துவமனையில் சாண்டில்யனை சேர்த்தது.

மருத்துவமனையில் எடுத்த பரிசோதனையின் முடிவாக சாண்டில்யனின் மயக்கத்திற்க்கு அதிக அளவில் ரத்தம் வெளியேறியது ஒரு காரணம் என்றால், மற்றொரு காரணம் அவன் இரண்டு நாட்களாக சாப்பிடாததுமே. சொன்னது சாண்டில்யனின் ஜூனியர் வேதநாயகம்..

“சார் இரண்டு நாளாவே ரொம்ப டென்ஷனாவே இருந்தார்.. நான் கூட எதுக்கு இப்படி விரைந்து எல்லாம் செய்யனும் என்று தான் சொன்னேன்.. ஆனா அவர் சொன்னது…” என்று இது வரை தடை இல்லாது சொல்லி கொண்டு வந்தவன் பின் தயங்கி கொண்டே ஸ்ருதிகா ஸ்ரீயை பார்த்து கொண்டே தான்..

“எனக்கு என் பேமிலி வேண்டும்… நான் பேமிலியா இருக்கும் போது என் மனசுல எந்த காழ்புணர்வும் இருக்க கூடாது… இதுக்காக கூட அவங்களை விட்டு விட முடியல.. ஏன்னா இதுல நான் மட்டுமே பாதிக்கப்படல ஸ்ருதிகாவும் தான். பின் குழந்தைகள்..” என்று எப்போதும் தன்னிடம் அளந்து அளந்து பேசும் சாண்டில்யன் அன்று மித மிஞ்சிய மன உளைச்சலில் தன்னிடம் சொன்னதை வேதநாயகம் சாண்டில்யன் குடும்பத்திடம் தெரிவித்தான்..

சாண்டில்யன் மருத்துவமனைக்கு வந்த ஒரு அரை மணி நேரத்திலேயே கண் முழித்து விட்டான். பின் ஒன்றும் இல்லை.. என்று எத்தனையோ முறை சொன்ன போதும் கை காயத்தையும்.. பின் ஏன் மயங்கின என்று ஒரு முறை செக் செய்து விடலாம்…” என்று இப்படி சொன்ன வேறு யாரும் கிடையாது நம் ஸ்ருதிகா ஸ்ரீ தான்..

இன்றும் அவளின் இரு கை பிடித்து கொண்டு இயல் இசை நின்று கொண்டு இருந்தனர்… சாண்டில்யன் எப்போதும் மற்றவர்களை பேச விடாது தடுப்பவன் இன்று ஸ்ருதிகா ஸ்ரீ தன் மீது இருக்கும் அக்கறையில் பேசிய அந்த பேச்சை கேட்க விட்டு ரசித்தான்..

இன்னுமே பேச மாட்டாளா என்று கூட இருந்தது.. அதோடு இயல் இசை மருத்துவமனை மெத்தையில் சாண்டில்யனின் இரு பக்கமும் அமர்ந்து கொண்டு சாண்டில்யனின் காயத்தை தொட்டு தொட்டு பார்த்து..

“வலிக்குதா அங்கிள்…” என்று கேட்ட போது மழையும் வெயிலும் ஒருங்கே உணர்வது போலான மனநிலையில் தான் சாண்டில்யன் உணர்ந்தான்..

தன் உடல் மீது அந்த பிஞ்சி கைகள் பட்ட போது மோட்சத்தை தொட்டு விட்டு வந்தது போல உணர்ந்த அதே வேளயில், குழந்தைகளின் அழைப்பான அங்கிள் என்ற அந்த அழைப்பானது… மேல் உலகில் பாவத்தின் பலனாக சூடான கொப்பரையில் போட்டு எடுப்பது போலவும் உணர்ந்ததில் கண்கள் ஒரு மாதிரி கலங்கி தான் போயின.

கலங்கி என்றால் கண்ணீர் எல்லாம் வரவில்லை.. அவன் வர விடவில்லை என்று கூட சொல்லலாம்..ஆனால் அதை வர விடாது அடக்கியது கண்கள் சிவந்து போய் ஒரு மாதிரி முகம் ஜிவு ஜிவு என்று தெரிந்ததில் ஸ்ருதிகா ஸ்ரீக்கும் அவனின் நிலை தெரிந்தது தான்.

ஆனால் அவளாலும் என்ன செய்ய முடியும்..? முதலில் நான் இப்போது செய்து கொண்டு இருப்பதே சரியா….? தவறா….? என்ற மனப்பான்மையில் தான் ஸ்ருதிகா ஸ்ரீ இருந்தாள். இதில் குழந்தைகள் சாண்டில்யனை அங்கிள் என்ற அந்த அழைப்பு பெண்ணவளுக்கே என்னவோ போல் உள்ளது என்றால், சாண்டில்யனுக்கு அது எத்தனை ரணத்தை கொடுக்கும் என்பதை பெண்ணவள் உணர்ந்தாள் தான்.. ஆனால் கைய்யறு நிலை என்பது போல நின்றவளை பார்த்த சாண்டில்யன் தன் வேதனையை மறைத்து அவளை பார்த்து சிரித்தவன் பின் மெல்ல.

“நான் மயங்கி விழுந்ததையுமே நீ ட்ராமா என்று தானே நினைத்த.?” என்று ஸ்ருதிகா ஸ்ரீயை கணித்தவனாக கேட்டான்..

“ஆம்.” என்று தலையாட்டியவன் பின் ஏதோ ஒரு நினைப்பில் தன்னை அறியாது.

“ம் பின்னே நீங்க விழும் போது கண் அடிச்சிட்டு தானே விழுந்திங்க. அப்போ அப்படி தான் நினைக்க தோன்றும்…” என்று வேறு சேர்த்து கூறினாள்…

ஸ்ருதிகாவின் இந்த பேச்சில் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த மாளவிகா சுமதி, ஏன் விசயம் தெரிந்து அங்கு வந்த சந்தியா கூட… ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு பின்… ஒரு சேர அந்த அறையை விட்டு செல்ல பார்க்க..

ஸ்ருதிகா ஸ்ரீக்கோ அவள் பேசிய பின் தான் அவள் பேச்சில் இருந்த அர்த்தம் புரிந்து ..

“ அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல…. “ என்று சொல்லி அவர்களை போக விடாது தடுத்தாள் தான். ஆனால் அவர்களோ… “ இல்ல நாங்க இங்கு இருக்கும் கேண்டினில் காபி குடிக்க தான் போறோம்…” என்று சொன்னதும்..

சாண்டில்யனுடன் இப்போது இப்படி.. அதுவும் இந்த பேச்சு பேசிய பின் எப்படி தனித்து இங்கு இருப்பது.. அது மருத்துவமனையின் அறையாக இருந்தாலும் எப்படி என்று தயங்கியவள்..

“நானும் உங்க கூட காபி குடிக்க வரேனுங்க…” என்று சொன்னவளிடம் சந்தியா தான்..

“அத்தான் கூட யாராவது ஒருத்தர் இருக்கனும் ஸ்ருதிகா.. அதுவும் இல்லாம அத்தான் பக்கத்தில் இருக்கும் குழந்தைங்க அழுதா… அத்தானால என்ன செய்ய முடியும்…?” என்று கேட்டவள் பின் அவளே..

“நீங்க அத்தான் கூட இருங்க… நாங்க குடிச்சிட்டு உங்களுக்கும் வாங்கிட்டு வரோம்..” என்று சொன்னவள் பின்.

“உங்களுக்கு . காபியா…? டீயா…?” என்று வேறு கேட்டாள்..

அவள் உண்மையில் எதாவது குடிக்க நினைத்தால் தானே தனக்கு காபி வேண்டுமா டீ வேண்டுமா என்று சொல்லுவாள்.. இங்கு இருந்து அவர்களுடன் செல்ல ஒரு காரணமாக தானே அவள் அப்படி சொன்னது..

அதனால் சந்தியா என்ன கேட்கிறாள் என்று கூட புரியாது பேந்த பேந்த விழிக்க.

சாண்டில்யன் தான்… “காபி சந்தியா. அதுவும் ஸ்டாங்கா ஷூகர் கம்மியா இருக்கனும்.. கொஞ்சம் ஆறினா கூட குடிப்பா தான்.. ஆனால் சூடா குடிக்க தான் பிடிக்கும்… அதனால காபியை ப்ளாஸ்க்குல வாங்கிட்டு வா….” என்றவனின் பேச்சுக்கு சிரித்து கொண்டே தலையாட்டிய சந்தியா அங்கு இருந்த ப்ளாஸ்க்கை மறக்காது எடுத்து கொண்டு சென்றாள்..

ஸ்ருதிகா ஸ்ரீக்கு தான் சாண்டில்யன் உடனான உறவு முறையில் குழம்பி தவித்து கொண்டு இருப்பது.. ஆனால் சாண்டில்யன் ஸ்ருதிகா ஸ்ரீக்கும் தனக்கும் உண்டாம உறவு என்ன என்பதில் மிக தெளிவாகவே இருந்தான்.. அதனால் தான் ஸ்ருதிகா ஸ்ரீயின் மீது அவளின் அனுமதி இல்லாமலேயே அவளிடம் உரிமையை எடுத்து கொண்டான்…

இதோ மருத்துவமனை வாசம் முடிந்து வீடு வந்து விட்டனர்.. சுமதி மாளவிகா இங்கு தான் இருக்கிறார்கள்… சந்தியாவுமே இங்கு தான் உள்ளாள்..

சாண்டில்யன் சந்தியாவிடமும் அவளின் தாய் மாமன் அத்தையிடமும் தீர்க்கமாக சொல்லி விட்டான்..

வாசுதேவ் சந்தியாவுக்கும் இடையில் தான் பிரிவு… சந்தியாவுக்கும், அவள் குழந்தைக்கும் இங்கு அனைத்து உரிமையும் இருக்கிறது என்பது..

சந்தியாவை பற்றி பேசிய சாண்டில்யன் தப்பி தவறி கூட மாளவிகா பற்றி பேசவில்லை.. காரணம் சந்தியாவுடைய வாழ்க்கை வாசுவுடன் முற்று புள்ளி வைத்தது..

ஆனால் மாளவிகாவுடையது அப்படி இல்லையே. அதுவும் அவள் இரண்டாவது குழந்தை உண்டாகி இருக்கிறாள் என்று சுமதி சொன்னதில், கமலக்கண்ணன் எந்த அளவு மாளவிகா மீது விருப்பம் இருக்கிறது என்பது தெரிய வேண்டி இருந்தது.. அதனால் எது என்றாலுமே கமலக்கண்ணன் வந்து பேசட்டும் என்று காத்திருந்தான்…

ஸ்ருதிகா ஸ்ரீ… இருந்தது என்னவோ முதலில் சாண்டில்யன் தனித்து இருந்த வீட்டில் தான்.. ஆனால் அந்த வீடு தூங்க மட்டுமே செல்வது போல பார்த்து கொண்டனர்.. மாளவிகா சுமதி சந்தியா மூன்று பெண்களின் கூட்டணி…

இதற்க்கும் பெரும் உதவியாக இருந்தது இயல் இசை தான்… இங்கு குழந்தைகள் இருக்க… சுபாஷ் அண்ணன் சுரேகா அக்கா சாக்ஷி அக்கா என்று இங்கு ஓடி வந்து விட்ட பின்..

இரு குழந்தைகளில் யாராவது.. “ம்மா வாங்கம்மா. இங்கு வாங்கம்மா..” என்று இங்கு அழைத்து கொள்வர்.

ஸ்ருதிகா ஸ்ரீயின் அன்னைக்கு அங்கு இருந்த அனைவரின் நோக்கமும் புரிந்தது தான். ஏன் அவரின் மாப்பிள்ளை குணசேகரன் கூட இதை சொல்லி தானே…

“அத்த நீங்க பாட்டுக்கு இங்கு இருந்தா. எப்படி அத்த அவங்க ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்வது.. சாண்டில்யா பத்தி கவலை இல்ல… இப்போ தாலி கட்டு என்று சொன்னா கூட கட்டி விடுவான் தான்.. என்ன ஒன்னு.. அந்த டைவஸ் இன்னும் கைக்கு வரல.. அதுக்கு தான் சகல வெயிட்டிங்க. ஆனா நம்ம பக்கம்.. இந்த ஸ்ருதிகா ஸ்ரீயை தான் கொஞ்சம் நாம தேத்த வேண்டி இருக்கு.. அதுக்கு நீங்க அங்கு இருந்தா தான் சரி வரும் அத்த…” என்று மாப்பிள்ளை சொன்னது ஒரு வகையில் ஷண்முகமதிக்கு மகிழ்ச்சி அளித்தது தான்..

ஆனால் இன்னொரு வகையில் ஊர் என்ன சொல்லும்.. கூடவே சாண்டில்யன் மட்டுமே சம்மதித்தால் போதுமா.. அதுவும் சாண்டில்யன் திருமணம் முடியாது போக அவன் குடும்பம் தான் காரணம் எனும் போது தாங்கள் அன்று சென்றால், தன் பெண்ணை வைத்து ஏதாவது கதை கட்டி விட்டால் என்ன செய்வது என்ற பயம் இருந்தது தான்..

ஆனால் இன்று வந்த நாள் பிரச்சனையாக இருந்தாலும், பின் இதோ இந்த ஒரு மாதத்தில் அனைவரும் தன் மகளை ஏற்று கொண்டது போல நடத்திய விதத்தில் அந்த தாய்க்கு அத்தனை நிம்மதி… குழந்தைகளோடு ஒன்றோடு ஒன்றாக விளையாடிக் கொண்டு இருப்பதை பார்த்த அந்த பெண்மணிக்கு சொல்ல முடியாத ஒரு நிம்மதி. இது அத்தனைக்கும் மேல் சாண்டில்யன். என்ன என்று சொல்ல…

தினம் தினம் சாண்டில்யனை பார்த்து கொன்டு இருந்த ஷண்முகமதிக்கு கடவுளே தன் மூத்த மாப்பிள்ளை இவரை ஸ்ருதிகா ஸ்ரீக்கு பார்த்த போதே முடிந்து இருந்து இருக்கலாமே.. இன்று என் மகள் இப்படியான ஒரு நிலையை சந்திக்க வேண்டி இருந்து இருக்காதே… என்று அவர் நினைக்காத நாள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

அதுவும் தன் பேத்திகளை பார்த்ததுமே சாண்டில்யனின் முகத்தில் தெரியும் அந்த அன்பு… தன் பேத்திகளின் சொந்த அப்பன் முகத்தில் கூட இது வரை பார்த்தது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

இதில் ஒரே ஒரு குறை என்று சொன்னால், அது குழந்தைகள் சாண்டில்யனை ஒரு சில சமயம் அங்கிள் என்று அழைப்பது… ஒரு சில சமயம் சுபாஷ் இவனை பெரிப்பா என்று அழைக்க.. அவர்களும் அதே சில சமயம் அழைத்தார்கள்.. ஆனால் அனைத்தையுக் விட உச்சமாக சாக்ஷியும் சுரேகாவும் சாண்டில்யனை மாமா என்று அழைத்த போது அவர்களும் அவனை மாமா என்று அழைக்க… அதை தான் அவனால் தாங்க முடியவில்லை..

அண்ணன் முகத்தை பார்த்து விட்டு மாளவிகாவும், சுமதியும் தத்தம் குழந்தைகளை..

“மாமாவை மாமா என்று கூப்பிடாதே… பாரு இயல் இசை கூட உங்களை போலவே கூப்பிடுறாங்க…” என்று கூட அதட்டினார்கள்..

பாவம் அதற்க்கு குழந்தைகள் தான் குழம்பி போய்… “ மாமாவை மாமா என்று தானே கூப்பிடனும்..” என்று கேட்டதற்க்கு பாவம் பெரியவர்களால் தான் அவர்களுக்கு சரியான பதிலை சொல்ல முடியவில்லை…




 
New member
Joined
Jun 14, 2024
Messages
3
குடும்பத்தோடு எல்லோரும் சேர்ந்து பெரியப்பா என்று அழையுங்கள். அப்போது தான் சீக்கிரம் குழந்தைகளும் அப்படி கூப்பிடும்.
 
Top