அத்தியாயம்…22.1
சாண்டில்யனுக்கு இயல் இசை அழைத்த அத்தனை அழைப்பை காட்டிலும் மாமா என்ற அழைப்பு அத்தனை வேதனையை கொடுத்தது… கண் மூடிக் கொண்டான்… அவர்கள் குழந்தைகள்.. அவர்கள் வயதுடையவர்கள் அழைக்கும் அழைப்பை கேட்டு அப்படியே அழைப்பது இயல்பு… அவர்கள் மீது தப்பு கிடையாது தான்..
இருந்தும் தான் அவர்களுக்கு என்ன என்பது சொல்ல முடியாத இந்த சூழல் அவனுக்கு வேதனையை கொடுத்தது.
அவனை காட்டிலும் முதல் முறை சுரேகா சாண்டில்யனிடம் சென்று… “ மாமா மாமா இன்னைக்கு எங்காவது வெளியில் கூட்டிட்டு போறிங்கலா…?” என்று கேட்ட போது
“சாண்டில்யன் சரி என்று அவன் சொன்னதுமே… சுரேகா பின் ஓடி வந்த இசையுமே..
“மாமா மாமா போகலாம் வெளியில் போகலாம்.. இயல் வா வா மாமா நம்மை வெளியில் கூட்டிட்டு போறாங்க…” என்று கை தட்டி சிரித்தவளிடம் சாண்டில்யன் சிரித்தான் தான்…
ஆனால் நம் ஸ்ருதிகா ஸ்ரீ தான்.. மகளின் அந்த அழைப்பில் அய்யோ என்று வாய் மீது கை வைத்து கொண்டது..
மனது அந்த ரணத்திலுமே… ஸ்ருதிகா ஸ்ரீயின் இந்த அய்யோ என்ற பாவனையே அவளின் மனதை அவனுக்கு தெளிவாக புரிந்ததில் கொஞ்சம் நிம்மதி தான்.
பின் தான் மாளவிகாவும்… சுமதியும் தன் குழந்தைகளை பார்த்து தானே இயல் இசையும் தன் அண்ணனை மாமா என்று கூப்பிடுறாங்க நினைத்து தன் பெண்களை கண்டிக்க..
“மாமாவை மாமா தானே கூப்பிடனும்..?” என்று கேட்டது..
விமலும் அப்போது அங்கு தான் இருந்தான். என்ன தான் வேறு வழி இல்லாதும் சாண்டில்யனை பார்த்து பயந்தும் அடங்கி போய் இருந்தாலுமே, குணம் என்ற ஒன்று இருக்கிறது தானே…
அந்த குணம் அன்றுஅவனுக்கு தலை தூக்கியது.. கிண்டலாக.. “ இப்போ எல்லாம் ப்ரோ ப்ரோ கூப்பிட்டு பின் லவ் பண்ணி கல்யாணம் செய்துக்குறாங்க தானே… அது போல ஆகும் போல.” என்று சொல்ல.
சாண்டில்யன் ஒன்றும் விமலிடம் பேசவில்லை.. தன் தங்கையை ஒரு பார்வை பார்த்தான் அவ்வளவே.. மத்ததை எல்லாம் அவனின் தங்கை பார்த்து கொண்டாள்..
தூக்கிய அந்த தலையே இல்லாதது போல… சுமதி தன் தங்கையிடம்…
“ஏன்டி மாலு இந்த வயசானவங்களை முதியோர் இல்லத்துல சேர்ப்பது போல.. இந்த வீணா பேசிட்டு திரியுதுறவங்களை சேர்ப்பது போல ஏதாவது ஒரு இல்லம் இருக்கா…?” என்று கேட்க.
மாளவிகாவும்… “ அது போல இல்லம் இல்ல.. ஆனா வாசு அண்ணா இருக்கும் இடத்துக்கு அனுப்பி வைக்கலாம்…” என்று தன் அக்காவிடம் சொன்னவள் பின் சாண்டில்யனை பார்த்து..
“நீங்க என்ன நினைக்கிறிங்க….?” என்று கேட்க..
அதற்க்கு சாண்டில்யன் விமலை ஒரு பார்வை பார்த்து கொண்டே “ சுமதி என்ன சொல்றா தெரியலையே என்ன தான் இருந்தாலும்..” என்று அவன் இழுக்கும் போதே சுமதி.
“எனக்கு அது எல்லாம் ஒன்னும் இல்ல ண்ணா…” என்று சொல்லி விட. பின் விமல் வாயை திறப்பான்…
தனிமையில் தான் மனைவியிடம். “ என்ன டி உன் அண்ணன் கூட சேர்ந்துட்டு நீ இப்படி பேசுற..?” என்று ஆதாங்கமாக கேட்ட போது..
“நீங்க உங்க அம்மா கூட சேர்ந்துட்டு என்ன என்ன செய்திங்க. அது பார்க்கும் போது நாங்க செய்யிறது ரொம்ப கம்மி தான்..” என்று இனி வாயை பொத்து என்பது போல சுமதி பேசி கொண்டு இருந்த போது தான் முதியோர் இல்லத்தில் இருந்து விமலுக்கு அழைப்பு வந்தது அழைத்தது நம் சாந்தியே தான்..
விமல் மனைவியின் பேச்சிலேயே கடுப்பாக இருக்க.. இதில் சாந்தி வேறு விமல் போனை எடுத்த உடன்..
“நீ என்ன டா நினச்சிட்டு இருக்க..? இங்கு கொண்டு வந்து தள்ளிட்ட எனக்கு என்ன என்று போயிட்ட. இங்கு ஏசி இல்ல. சாப்பாடு கூட வாய்க்கு உரைப்பா கொடுக்க மாட்டேங்குறாங்கடா.. டிவி கூட இந்த நேரத்திற்க்கு தான் பார்க்கனும் என்று சொல்றாங்க. நான் பார்க்கும் சீரியல் எல்லாம் பார்க்க முடியல டா.. என்னை இங்கு இருந்து கூட்டிட்டு போடா…” என்று கட கட என்று சாந்தி குற்றப்பத்திரிக்கை வாசித்தார்…
அதற்க்கு விமல்.. “ அங்கு இருந்து வந்துட்டா நீ எங்கே இருப்ப… சொல்..?” என்று கேட்டதற்க்கு சாந்தியிடன் பதில் இல்லை…
ஆம் அன்று மற்றவர்கள் சொத்துக்கு ஆசைப்பட்டு அத்தனை திட்டம் தீட்டியவர்.. இன்று இடம் இல்லாது முதியோர் இல்லத்தில் இருக்கும் படியான நிலையில் தான் சாந்தி இன்று இருக்கிறார்.
இரண்டு பெண்கள் இருக்கிறாகள் தான்.. சாந்தி பெண்களை கட்டி கொடுத்த பின் கூட தன் பூமாலையில் வந்த வருமானத்தில் பெரும் பகுதி தன் இரண்டு பெண்களுக்கு தான் கொடுத்தது..
காரணம். விமல் நன்கு படித்து ஒரு கெளரவமாக தொழில் பார்க்கிறான். அதோடு மனைவி பக்கத்தில் இருந்து ஒரு பெரும் சொத்து தங்கைக்கு கொடுப்பதாக வாசு சொன்னதில் விமலுக்கு என்ன…? அவன் வசதியாக தான் இருப்பான்..
அதனால் தன் இரண்டு பெண்களை தான் கஷ்டப்பட்ட காலத்தில் தன்னிடம் இருப்பதை வைத்து கட்டி கொடுத்ததினால், பின் தான் சம்பாதித்த வருமானத்தை பெண்களிடம் தான் கொடுத்தார்.
இப்போது எங்கு செல்வது என்று தவித்து பெண்கள் வீட்டிற்க்கு சென்ற போது இரு பெண்களுமே.. கை விரித்து விட்டனர்.
“என்னம்மா இது கட்டி கொடுத்த இடத்தில் நீங்க இருக்கலாமா…? இது எங்களுக்கும் பிரச்சனை தானே…” என்று சொல்லி தான் சாந்தியின் பெண்கள் என்பதை நிருபித்தனர்…
விமலோ.. “ நானே தொழிலும் இல்லாம வீடும் இல்லாம சாண்டில்யன் வீட்டில் இருக்கேன் ம்மா. அதுவும் சாண்டில்யன் இருக்கும் வீட்டில் இருக்க எனக்கு கொஞ்சம் பயமா வேறு இருக்கு… என்ன ஒன்னு சுமதி தாலி பாக்கியம் பார்த்து உயிருக்கு உத்திரவாதம் என்று நான் காலம் தள்ளுறேன்..” என்று சொல்லி தான் விமல் சாந்தியை முதியோர் இல்லத்தில் சேர்த்தது…
சொத்துக்கு ஆசைப்பட்டும் மற்றவர்கள் முன் கெளரவமாக இருக்க வேண்டும் என்று செய்த செயல்கள் அனைத்தும் இன்று சாந்திக்கே பாதகமாக அழைந்து விட்டது.
ஆசைப்படலாம் தப்பு கிடையாது.. ஆனால் பேராசை பட கூடாது.. அதே போல் தான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கலாம். அதில் தப்பு இல்லை.. ஆனால் தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால்,
அதுவும் நம் சாந்தியோ.. ஆசையை மற்றவர்களுக்கு சொந்தமான சொத்தில் வைத்தது.. கூட மற்றவர்களின் வாழ்க்கைக்கு குறுக்கே நின்று தன் வாழ்க்கையை வலமாக்க நினைத்தது தான் இன்று.. அனைவரும் இருந்தும் முதியோர் இல்லத்தில் இருக்கிறார்.
விமல் பேசி முடித்ததுமே சுமதி.. மீண்டும்.. “ என்னவாம் உன் அம்மாவுக்கு..” என்று ஒரு மாதிரி இழுவை இழுத்ததிலேயே.. விமல் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டான்..
அதன் பின் இருக்கும் இடம் தெரியாது தான் அந்த வீட்டிற்க்கு வருவது தெரியாது போவது தெரியாது என்று காலம் கடந்தது அவனுக்கு… சாண்டில்யனுமே விமலை விட காரணம் அவன் செத்த பாம்பு என்பது ஒரு காரணம் என்றால், மற்றொரு காரணம்.. சுமதியின் கணவன் குழந்தை இருக்கிறது…என்பதினால் தான்.
.( நானுமே இவர்களுக்கு விவாகரத்து கொடுத்து பிரிக்காததிற்க்கு காரணம்.. அப்புறம் நம் நாயகனை கிரிமினல் லாயர் என்று நீங்க ஏத்துக் கொள்ள மாட்டிங்க. பொண்டாட்டி புருஷனை பிரிச்சி விடுபவனா தான் நீங்க பார்ப்பிங்க என்பதினால் தான்..)
சாண்டில்யனுக்கு பின் அனைத்து பொழுதுகளிலுமே, குழந்தைகள் தன்னை அழைத்த அந்த அழைப்பே காதில் கேட்டு கொண்டு இருந்தது.. கூடவே ஸ்ருதிகா ஸ்ரீ… மகள்கள் தன்னை அப்படி அழைக்கும் போது பெண்ணவளின் மனம் வாடும் என்பதால்,.. யோசித்து பார்த்தவனுக்கு மனதில் ஒரு திட்டம் உண்டானது..
உடனே டெல்லிக்கு ஒரு போனை போடு.. ஆனால் அன்று நடுயிரவு எல்லாம் கிடையாது.. நீதிமன்றத்தில் இருக்கும் தன் கேபினில் இருந்து கொண்டு தான் குணசேகரனை அழைத்தது..
ஆனால் குணசேகரன் அன்று நீதிமன்றம் செல்லவில்லை.. வீட்டில் தான் இருந்தான்.. காரணல் குழந்தைக்கு பள்ளியில் தேர்வு முடிந்து விடுமுறை விட்டு இருந்ததால், குடும்பத்துடன் வெளியில் எங்காவது செல்லலாம் என்று ஒரு திட்டம்..
தன் வீட்டின் கூடத்தில் அமர்ந்து கொண்டு இருந்த குணசேகரன்…. “ என்ன இன்னுமா ரெடியாகல..” என்று தான் இருந்த இடத்தில் இருந்தே மனைவிக்கு ஒரு குரல் கொடுத்தான்..
கலாவதியுமே அங்கு இருந்தே…. “ஏங்க இங்கே வாங்க…” என்று பதில் குரல் கொடுக்க. பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம்..
“உன் அம்மா என்னத்த பண்ணலாமே. இருப்பது தான் இருக்க போகுது..” என்று சொல்ல..
பெண்ணோ… “ ம்மா.” என்று ஒரு குரல் கொடுக்க ஆரம்பிக்கும் போதே மகளின் வாயை பொத்திய குணசேகரன்..
“தாயே பரதேவதையே…சும்மா இரும்மா.” என்று சொன்னவனிடம் மகள்..
“நான் நீங்க சொன்னதை சொல்லாம இருக்கனும் என்றால் இன்னைக்கு நாம வெளியே போறோம் லே.. நான் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுக்கனும்..” என்று சொன்ன பெண்ணிடம்..
“சரி சரி…” என்று ஒத்து கொண்டாலும். மகளின் தலையில் அடித்து… “நீ மேல என்ன படிக்கனும் என்று கேட்ட லே… பொலிடிக்கல் படி.. இப்போவே அதுக்கு உண்டான தகுதி உன் கிட்ட இருக்கு…” என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே மீண்டும் மனைவியிடம் இருந்து ஒரு குரல்..
“ஏங்கேகேகே…” என்று அழுத்தி வந்தது.. இந்த அழைப்புக்கு போகவில்லை என்றால் அவ்வளவு தான் என்று நினைத்தவன்.. இங்கு இருந்தே..
“தோம்மா…மா..மா..” என்று அழைத்து கொண்டே தங்களின் அறைக்கு சென்ற போது மனைவி அப்படியும் இப்படியுமாக அதாவது கலாவதி அழைத்தது ஜாக்கெட் போட்ட பின் ப்ராவின் பட்டை ஜாக்கெட்டின் பின் பக்கம் தெரிகிறது.. அதை சரி செய்ய என் கை எட்டவில்லை.. சரி செய்து விடுங்க என்பதற்க்காக தான்.
ஆனால் நம் குணா தான் குணமானவன் ஆச்சே.. முடியல முடியல என்று அனைத்தும் முடித்து விடுபவன்.. அன்றுமே..
“கலா கல்யாணத்தப்ப உன்னை எப்படி பார்த்தேனோ.. அப்படியே இருக்க டி..” என்று சொல்லி கொண்டே ஆசையாக மனைவியை நெருங்கும் சமயத்தில் தான் நம் சாண்டில்யன் அவனுக்கு போனை போட்டது..
இந்த முறை அழைப்பது யார் என்று பாராதே சொல்லி விட்டான் தன் மனைவியிடம்…
“உன் மச்சினன் சாண்டில்யன் தான் டி…” என்று… மனைவி சொன்னதை செய்து கொண்டே…
“என்ன சாண்டில்யா என்ன விசயம்…” என்று குணசேகரன் கேட்டு கொண்டே பின் பக்கம் மனைவியின் பிராவை தன் விரல் கொண்டு உள்ளே தள்ளினான்..
அப்போது அவனின் நகம் மனைவியின் முதுகை கீரி விட.. வலியில்.
“என்னங்க ஒழுங்கா உ***** தள்ள முடியாதா… வலிக்குது…” என்று வேறு சொல்ல.
பேசியில் அந்த பக்கம் இருந்த சாண்டில்யன்… “ண்ணா ராங்கனா டைமில் கால் பண்ணிட்டேனா…?” என்று கேட்டதில் குணசேகரன் பதறி போய்.
“அட நீ ராங்கா நினச்சி இருக்க சகல….” என்று சொல்லி கொண்டே அந்த அறையை விட்டு வெளியில் போக பார்த்தவனிடம் மீண்டுமே கலாவதி.
கண்ணாடி வழியாக பின் பக்கம் திரும்பி பார்த்து கொண்டே. “ என்னங்க ப்ரா பட்ட தெரியுதுங்க…” என்று சொல்ல.
“அடியே நீ இருக்கியே இருக்கியே…” என்று கத்தி விட்டு அந்த வீட்டின் வெளி வந்த பின்…
“என்ன ராசா என்ன.? இப்போ என்ன எனக்கு ஆப்பு வெச்சி இருக்க…?” என்று கேட்டான்..
சாண்டில்யனுக்கு இயல் இசை அழைத்த அத்தனை அழைப்பை காட்டிலும் மாமா என்ற அழைப்பு அத்தனை வேதனையை கொடுத்தது… கண் மூடிக் கொண்டான்… அவர்கள் குழந்தைகள்.. அவர்கள் வயதுடையவர்கள் அழைக்கும் அழைப்பை கேட்டு அப்படியே அழைப்பது இயல்பு… அவர்கள் மீது தப்பு கிடையாது தான்..
இருந்தும் தான் அவர்களுக்கு என்ன என்பது சொல்ல முடியாத இந்த சூழல் அவனுக்கு வேதனையை கொடுத்தது.
அவனை காட்டிலும் முதல் முறை சுரேகா சாண்டில்யனிடம் சென்று… “ மாமா மாமா இன்னைக்கு எங்காவது வெளியில் கூட்டிட்டு போறிங்கலா…?” என்று கேட்ட போது
“சாண்டில்யன் சரி என்று அவன் சொன்னதுமே… சுரேகா பின் ஓடி வந்த இசையுமே..
“மாமா மாமா போகலாம் வெளியில் போகலாம்.. இயல் வா வா மாமா நம்மை வெளியில் கூட்டிட்டு போறாங்க…” என்று கை தட்டி சிரித்தவளிடம் சாண்டில்யன் சிரித்தான் தான்…
ஆனால் நம் ஸ்ருதிகா ஸ்ரீ தான்.. மகளின் அந்த அழைப்பில் அய்யோ என்று வாய் மீது கை வைத்து கொண்டது..
மனது அந்த ரணத்திலுமே… ஸ்ருதிகா ஸ்ரீயின் இந்த அய்யோ என்ற பாவனையே அவளின் மனதை அவனுக்கு தெளிவாக புரிந்ததில் கொஞ்சம் நிம்மதி தான்.
பின் தான் மாளவிகாவும்… சுமதியும் தன் குழந்தைகளை பார்த்து தானே இயல் இசையும் தன் அண்ணனை மாமா என்று கூப்பிடுறாங்க நினைத்து தன் பெண்களை கண்டிக்க..
“மாமாவை மாமா தானே கூப்பிடனும்..?” என்று கேட்டது..
விமலும் அப்போது அங்கு தான் இருந்தான். என்ன தான் வேறு வழி இல்லாதும் சாண்டில்யனை பார்த்து பயந்தும் அடங்கி போய் இருந்தாலுமே, குணம் என்ற ஒன்று இருக்கிறது தானே…
அந்த குணம் அன்றுஅவனுக்கு தலை தூக்கியது.. கிண்டலாக.. “ இப்போ எல்லாம் ப்ரோ ப்ரோ கூப்பிட்டு பின் லவ் பண்ணி கல்யாணம் செய்துக்குறாங்க தானே… அது போல ஆகும் போல.” என்று சொல்ல.
சாண்டில்யன் ஒன்றும் விமலிடம் பேசவில்லை.. தன் தங்கையை ஒரு பார்வை பார்த்தான் அவ்வளவே.. மத்ததை எல்லாம் அவனின் தங்கை பார்த்து கொண்டாள்..
தூக்கிய அந்த தலையே இல்லாதது போல… சுமதி தன் தங்கையிடம்…
“ஏன்டி மாலு இந்த வயசானவங்களை முதியோர் இல்லத்துல சேர்ப்பது போல.. இந்த வீணா பேசிட்டு திரியுதுறவங்களை சேர்ப்பது போல ஏதாவது ஒரு இல்லம் இருக்கா…?” என்று கேட்க.
மாளவிகாவும்… “ அது போல இல்லம் இல்ல.. ஆனா வாசு அண்ணா இருக்கும் இடத்துக்கு அனுப்பி வைக்கலாம்…” என்று தன் அக்காவிடம் சொன்னவள் பின் சாண்டில்யனை பார்த்து..
“நீங்க என்ன நினைக்கிறிங்க….?” என்று கேட்க..
அதற்க்கு சாண்டில்யன் விமலை ஒரு பார்வை பார்த்து கொண்டே “ சுமதி என்ன சொல்றா தெரியலையே என்ன தான் இருந்தாலும்..” என்று அவன் இழுக்கும் போதே சுமதி.
“எனக்கு அது எல்லாம் ஒன்னும் இல்ல ண்ணா…” என்று சொல்லி விட. பின் விமல் வாயை திறப்பான்…
தனிமையில் தான் மனைவியிடம். “ என்ன டி உன் அண்ணன் கூட சேர்ந்துட்டு நீ இப்படி பேசுற..?” என்று ஆதாங்கமாக கேட்ட போது..
“நீங்க உங்க அம்மா கூட சேர்ந்துட்டு என்ன என்ன செய்திங்க. அது பார்க்கும் போது நாங்க செய்யிறது ரொம்ப கம்மி தான்..” என்று இனி வாயை பொத்து என்பது போல சுமதி பேசி கொண்டு இருந்த போது தான் முதியோர் இல்லத்தில் இருந்து விமலுக்கு அழைப்பு வந்தது அழைத்தது நம் சாந்தியே தான்..
விமல் மனைவியின் பேச்சிலேயே கடுப்பாக இருக்க.. இதில் சாந்தி வேறு விமல் போனை எடுத்த உடன்..
“நீ என்ன டா நினச்சிட்டு இருக்க..? இங்கு கொண்டு வந்து தள்ளிட்ட எனக்கு என்ன என்று போயிட்ட. இங்கு ஏசி இல்ல. சாப்பாடு கூட வாய்க்கு உரைப்பா கொடுக்க மாட்டேங்குறாங்கடா.. டிவி கூட இந்த நேரத்திற்க்கு தான் பார்க்கனும் என்று சொல்றாங்க. நான் பார்க்கும் சீரியல் எல்லாம் பார்க்க முடியல டா.. என்னை இங்கு இருந்து கூட்டிட்டு போடா…” என்று கட கட என்று சாந்தி குற்றப்பத்திரிக்கை வாசித்தார்…
அதற்க்கு விமல்.. “ அங்கு இருந்து வந்துட்டா நீ எங்கே இருப்ப… சொல்..?” என்று கேட்டதற்க்கு சாந்தியிடன் பதில் இல்லை…
ஆம் அன்று மற்றவர்கள் சொத்துக்கு ஆசைப்பட்டு அத்தனை திட்டம் தீட்டியவர்.. இன்று இடம் இல்லாது முதியோர் இல்லத்தில் இருக்கும் படியான நிலையில் தான் சாந்தி இன்று இருக்கிறார்.
இரண்டு பெண்கள் இருக்கிறாகள் தான்.. சாந்தி பெண்களை கட்டி கொடுத்த பின் கூட தன் பூமாலையில் வந்த வருமானத்தில் பெரும் பகுதி தன் இரண்டு பெண்களுக்கு தான் கொடுத்தது..
காரணம். விமல் நன்கு படித்து ஒரு கெளரவமாக தொழில் பார்க்கிறான். அதோடு மனைவி பக்கத்தில் இருந்து ஒரு பெரும் சொத்து தங்கைக்கு கொடுப்பதாக வாசு சொன்னதில் விமலுக்கு என்ன…? அவன் வசதியாக தான் இருப்பான்..
அதனால் தன் இரண்டு பெண்களை தான் கஷ்டப்பட்ட காலத்தில் தன்னிடம் இருப்பதை வைத்து கட்டி கொடுத்ததினால், பின் தான் சம்பாதித்த வருமானத்தை பெண்களிடம் தான் கொடுத்தார்.
இப்போது எங்கு செல்வது என்று தவித்து பெண்கள் வீட்டிற்க்கு சென்ற போது இரு பெண்களுமே.. கை விரித்து விட்டனர்.
“என்னம்மா இது கட்டி கொடுத்த இடத்தில் நீங்க இருக்கலாமா…? இது எங்களுக்கும் பிரச்சனை தானே…” என்று சொல்லி தான் சாந்தியின் பெண்கள் என்பதை நிருபித்தனர்…
விமலோ.. “ நானே தொழிலும் இல்லாம வீடும் இல்லாம சாண்டில்யன் வீட்டில் இருக்கேன் ம்மா. அதுவும் சாண்டில்யன் இருக்கும் வீட்டில் இருக்க எனக்கு கொஞ்சம் பயமா வேறு இருக்கு… என்ன ஒன்னு சுமதி தாலி பாக்கியம் பார்த்து உயிருக்கு உத்திரவாதம் என்று நான் காலம் தள்ளுறேன்..” என்று சொல்லி தான் விமல் சாந்தியை முதியோர் இல்லத்தில் சேர்த்தது…
சொத்துக்கு ஆசைப்பட்டும் மற்றவர்கள் முன் கெளரவமாக இருக்க வேண்டும் என்று செய்த செயல்கள் அனைத்தும் இன்று சாந்திக்கே பாதகமாக அழைந்து விட்டது.
ஆசைப்படலாம் தப்பு கிடையாது.. ஆனால் பேராசை பட கூடாது.. அதே போல் தான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கலாம். அதில் தப்பு இல்லை.. ஆனால் தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால்,
அதுவும் நம் சாந்தியோ.. ஆசையை மற்றவர்களுக்கு சொந்தமான சொத்தில் வைத்தது.. கூட மற்றவர்களின் வாழ்க்கைக்கு குறுக்கே நின்று தன் வாழ்க்கையை வலமாக்க நினைத்தது தான் இன்று.. அனைவரும் இருந்தும் முதியோர் இல்லத்தில் இருக்கிறார்.
விமல் பேசி முடித்ததுமே சுமதி.. மீண்டும்.. “ என்னவாம் உன் அம்மாவுக்கு..” என்று ஒரு மாதிரி இழுவை இழுத்ததிலேயே.. விமல் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டான்..
அதன் பின் இருக்கும் இடம் தெரியாது தான் அந்த வீட்டிற்க்கு வருவது தெரியாது போவது தெரியாது என்று காலம் கடந்தது அவனுக்கு… சாண்டில்யனுமே விமலை விட காரணம் அவன் செத்த பாம்பு என்பது ஒரு காரணம் என்றால், மற்றொரு காரணம்.. சுமதியின் கணவன் குழந்தை இருக்கிறது…என்பதினால் தான்.
.( நானுமே இவர்களுக்கு விவாகரத்து கொடுத்து பிரிக்காததிற்க்கு காரணம்.. அப்புறம் நம் நாயகனை கிரிமினல் லாயர் என்று நீங்க ஏத்துக் கொள்ள மாட்டிங்க. பொண்டாட்டி புருஷனை பிரிச்சி விடுபவனா தான் நீங்க பார்ப்பிங்க என்பதினால் தான்..)
சாண்டில்யனுக்கு பின் அனைத்து பொழுதுகளிலுமே, குழந்தைகள் தன்னை அழைத்த அந்த அழைப்பே காதில் கேட்டு கொண்டு இருந்தது.. கூடவே ஸ்ருதிகா ஸ்ரீ… மகள்கள் தன்னை அப்படி அழைக்கும் போது பெண்ணவளின் மனம் வாடும் என்பதால்,.. யோசித்து பார்த்தவனுக்கு மனதில் ஒரு திட்டம் உண்டானது..
உடனே டெல்லிக்கு ஒரு போனை போடு.. ஆனால் அன்று நடுயிரவு எல்லாம் கிடையாது.. நீதிமன்றத்தில் இருக்கும் தன் கேபினில் இருந்து கொண்டு தான் குணசேகரனை அழைத்தது..
ஆனால் குணசேகரன் அன்று நீதிமன்றம் செல்லவில்லை.. வீட்டில் தான் இருந்தான்.. காரணல் குழந்தைக்கு பள்ளியில் தேர்வு முடிந்து விடுமுறை விட்டு இருந்ததால், குடும்பத்துடன் வெளியில் எங்காவது செல்லலாம் என்று ஒரு திட்டம்..
தன் வீட்டின் கூடத்தில் அமர்ந்து கொண்டு இருந்த குணசேகரன்…. “ என்ன இன்னுமா ரெடியாகல..” என்று தான் இருந்த இடத்தில் இருந்தே மனைவிக்கு ஒரு குரல் கொடுத்தான்..
கலாவதியுமே அங்கு இருந்தே…. “ஏங்க இங்கே வாங்க…” என்று பதில் குரல் கொடுக்க. பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம்..
“உன் அம்மா என்னத்த பண்ணலாமே. இருப்பது தான் இருக்க போகுது..” என்று சொல்ல..
பெண்ணோ… “ ம்மா.” என்று ஒரு குரல் கொடுக்க ஆரம்பிக்கும் போதே மகளின் வாயை பொத்திய குணசேகரன்..
“தாயே பரதேவதையே…சும்மா இரும்மா.” என்று சொன்னவனிடம் மகள்..
“நான் நீங்க சொன்னதை சொல்லாம இருக்கனும் என்றால் இன்னைக்கு நாம வெளியே போறோம் லே.. நான் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுக்கனும்..” என்று சொன்ன பெண்ணிடம்..
“சரி சரி…” என்று ஒத்து கொண்டாலும். மகளின் தலையில் அடித்து… “நீ மேல என்ன படிக்கனும் என்று கேட்ட லே… பொலிடிக்கல் படி.. இப்போவே அதுக்கு உண்டான தகுதி உன் கிட்ட இருக்கு…” என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே மீண்டும் மனைவியிடம் இருந்து ஒரு குரல்..
“ஏங்கேகேகே…” என்று அழுத்தி வந்தது.. இந்த அழைப்புக்கு போகவில்லை என்றால் அவ்வளவு தான் என்று நினைத்தவன்.. இங்கு இருந்தே..
“தோம்மா…மா..மா..” என்று அழைத்து கொண்டே தங்களின் அறைக்கு சென்ற போது மனைவி அப்படியும் இப்படியுமாக அதாவது கலாவதி அழைத்தது ஜாக்கெட் போட்ட பின் ப்ராவின் பட்டை ஜாக்கெட்டின் பின் பக்கம் தெரிகிறது.. அதை சரி செய்ய என் கை எட்டவில்லை.. சரி செய்து விடுங்க என்பதற்க்காக தான்.
ஆனால் நம் குணா தான் குணமானவன் ஆச்சே.. முடியல முடியல என்று அனைத்தும் முடித்து விடுபவன்.. அன்றுமே..
“கலா கல்யாணத்தப்ப உன்னை எப்படி பார்த்தேனோ.. அப்படியே இருக்க டி..” என்று சொல்லி கொண்டே ஆசையாக மனைவியை நெருங்கும் சமயத்தில் தான் நம் சாண்டில்யன் அவனுக்கு போனை போட்டது..
இந்த முறை அழைப்பது யார் என்று பாராதே சொல்லி விட்டான் தன் மனைவியிடம்…
“உன் மச்சினன் சாண்டில்யன் தான் டி…” என்று… மனைவி சொன்னதை செய்து கொண்டே…
“என்ன சாண்டில்யா என்ன விசயம்…” என்று குணசேகரன் கேட்டு கொண்டே பின் பக்கம் மனைவியின் பிராவை தன் விரல் கொண்டு உள்ளே தள்ளினான்..
அப்போது அவனின் நகம் மனைவியின் முதுகை கீரி விட.. வலியில்.
“என்னங்க ஒழுங்கா உ***** தள்ள முடியாதா… வலிக்குது…” என்று வேறு சொல்ல.
பேசியில் அந்த பக்கம் இருந்த சாண்டில்யன்… “ண்ணா ராங்கனா டைமில் கால் பண்ணிட்டேனா…?” என்று கேட்டதில் குணசேகரன் பதறி போய்.
“அட நீ ராங்கா நினச்சி இருக்க சகல….” என்று சொல்லி கொண்டே அந்த அறையை விட்டு வெளியில் போக பார்த்தவனிடம் மீண்டுமே கலாவதி.
கண்ணாடி வழியாக பின் பக்கம் திரும்பி பார்த்து கொண்டே. “ என்னங்க ப்ரா பட்ட தெரியுதுங்க…” என்று சொல்ல.
“அடியே நீ இருக்கியே இருக்கியே…” என்று கத்தி விட்டு அந்த வீட்டின் வெளி வந்த பின்…
“என்ன ராசா என்ன.? இப்போ என்ன எனக்கு ஆப்பு வெச்சி இருக்க…?” என்று கேட்டான்..