அத்தியாயம்….22…2
குணசேகரன் வீட்டை விட்டு வெளியில் வந்த பின் தான் மூச்சை இழுத்து விட்டு கொண்டவனாக..
“என்ன ராசா…” என்று கேட்டது..
சாண்டில்யனோ தான் கேட்க நினைத்ததை கேட்காது… “ என்ன ண்ணா வீட்டில் இருக்க…இன்னைக்கு கோர்ட்டுக்கு போகலையா…?” என்று கேட்டான்.. குணசேகரனும் அவன் பயந்தது போல் கேட்காது வேறு கேட்கிறானே என்ற ஆசுவாசத்தில்…
“பெண்ணுக்கு லீவு சாண்டில்யா… கலாவுமே நாம பேமிலியா வெளியில் போய் ரொம்ப நாள் ஆகுது என்று சொல்லிட்டு இருந்தா.. அது தான் ஒரு பத்து நாளுக்கு லீவு எடுத்து இருக்கேன்.. இன்னைக்கு சும்மா ஒரு நாள் அவுட்டிங்க தான்.. இனி தான் ஒரு ஒன் வீக் போவது போல எங்காவது புக் செய்யனும்…” என்று இருப்பதை அப்படியே ஒப்புவித்தான்.. அந்த அப்பாவி குணசேகரன்..
ஆனால் அடப்பாவீயான நம் சாண்டில்யனோ.. அதையே பிடித்து கொண்டு…
“நான் ப்ளைட் டிக்கெட் புக் செய்யிறேன் அண்ணா…” என்று நல்ல விதமாக தான் சொன்னான்..
சாண்டில்யன் இது போல நல்ல விதமாக பேசும் போதே நம் குணசேகரன் முழித்து கொண்டு இருந்து இருக்க வேண்டும்.. பாவம் அவன் ( என்னை போல) சூதுவாது தெரியாதவனாக..
“இன்னும் எங்கே என்றே டிசைட் செய்யல சாண்டில்யா. அதுவும் இல்லாம நான் செய்துக்குறேன் சாண்டில்யா…” என்று சொன்னதும் தான் சாண்டில்யா..
“அது எப்படி ண்ணா. என் விசயதுக்கு சென்னைக்கு வரும் போது நான் தானே ண்ணா புக் செய்யனும்.. அது தானே முறை.” என்று சாண்டில்யன் சொன்ன போது தான் குணசேகரனுக்கு தாமதமாக மூளையில் பல்ப் எரிந்தது…
“ஏய் என்ன டா. என்ன விசயம்.? நான் சென்னைக்கு வரேன் என்று சொல்லவே இல்லையே டா. அதுவும் இல்லாம இந்த முறை என்ன பஞ்சாயத்து டா.” என்று கேட்டதும் மறுப்பக்கம் சாண்டில்யன் இயல் இசை தன்னை அழைக்கும் உறவை சொன்னவன் பின்
“நீங்க இங்கு சென்னைக்கு வந்து எங்க வீட்டில் தங்கனும் ண்ணா… நம்ம மைதிலி என்னை அப்பா என்று கூப்பிட்டா கண்டிப்பா நம்ம இசை இயல் கூட அப்படியே கூப்பிடுவாங்க ண்ணா.. எனக்கு அவங்க என்ன அப்பா என்று கூப்பிட ஆசையா இருக்கு ண்ணா….” கடைசி வார்த்தை சொல்லும் போது சாண்டியனின் குரல் கர கரத்து விட்டது..
சாண்டில்யனின் இந்த பேச்சில் குணசேகரனுக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது.. அப்போது தான் கலாவதி அங்கு வந்தது…தன் கணவனின் முகத்தை பார்த்து விட்டு என்ன என்று கேட்க.
அவன் சாண்டில்யன் சொன்னதை சொன்னதும் கணவனிடம் இருந்து பேசியை வாங்கியவள்..
“தம்பி நாங்க வரோம்.. இவர் கிட்ட என்ன வள வல பேச்சு.” என்று ஒரே வார்த்தையில் முடித்து கொண்டு போய் விட்டாள்..
மீண்டும் கை பேசியை காதில் வைத்த குணசேகரன் தான். “ அது தான் உன் அண்ணி சொல்லிட்டா தானே… இன்னும் என்னப்பா வரோம்..” என்று சொன்னவனிடம் சாண்டில்யன் கவலை படாதிங்க ண்ணா உங்களுக்கு தனி ரூம் என்ன தனியா ஒரு தளமே கொடுத்துடுறேன் மைதிலியும் என் கூட படுக்க வெச்சிக்கிறேன். இப்போ ஹாப்பி தானே..” என்று கேட்டு விட்டு தான் போனை வைத்தது.
பின் சாண்டில்யன் எப்படியோ இரண்டே நாளில் குணசேகரன் குடும்பத்தை தன் வீட்டிற்க்கு அழைத்து கொண்டான். அந்த வீட்டில் இன்னுமே கல கலப்பு கூடியது..
என்ன தான் சுமதி மாளவிகா சந்தியா குழந்தைகளுடன் விளையாடினாலும் இசைக்கும் இயலுக்கும் குழந்தையில் இருந்து பார்த்த பெண் தன் பெரியம்மா பெண் மைதிலி தானே…
மைதிலியை பார்த்ததும்… “ அக்கா அக்கா .” என்று அழைத்து கொண்டு ஆசையுடன் மைதிலியின் இரு பக்கமும் இரு கையை பிடித்து கொண்டனர்…
சுமதி மாளவிகா சந்தியா குழந்தைகளுடன் மைதிலியும் கூட்டணி வைத்து கொள்ள.. பின் என்ன வீடே இன்னும் கலை கட்டியது.. மைதிலியும் தந்தை சொல்படி சாண்டில்யனை..
“அப்பா..” என்று அழைத்தாள்..
சாண்டில்யன் இயல் இசைக்காரணமாக தான் மைதிலியை தன்னை அப்பா என்று அழைக்க சொன்னது..
ஆனால் மைதிலி அப்பா என்று அழைத்த அந்த அழைப்பில் சாண்டில்யன் பூரித்து தான் போய் விட்டான்..
தூக்கி கொஞ்சும் அளவுக்கு பெண் இல்லை மைதிலி… அதனால் கன்னத்தை தொட்டு. “ என் செல்லதுக்கு என்ன வேண்டும்…” என்ற்ய் ஆசையாக கேட்ட போது அவனின் செல்லமான மைதிலி..
“எனக்கு இங்கு தான் பிடித்து இருக்கு அப்பா.. டெல்லி பிடிக்கல.. இங்கு தான் ஜாலி நாங்க இங்கே இருக்கனும்…” என்று சொல்ல.
சாண்டியல் குணசேகரனை பார்த்து கொண்டே… “ அதுக்கு என்ன செய்துட்டா போச்சு…” என்று சொன்னவன் எதிரில் குணசேகரன் தலை மீது கை வைத்து அமைர்ந்து கொண்டாலும், அவனுக்குமே அவனின் அப்பா அம்மாவுக்கு டெல்லி பிடிப்பது இல்லை.. வந்தாலுமே ஒரு வாரம் தங்கி விட்டு..
“எங்களுக்கு நம்ம ஊரு தான் பா..” என்று சொல்லி விட்டு சென்று விடுவர்..
டெல்லிக்கு சென்னை எவ்வளவோ மேல் அல்லவா.. இங்கு இருந்தால் தாய் தந்தையரை தங்களோடு வைத்து கொள்ளலாம்..
அதோடு உறவின் அருமை தனித்து இருக்கும் போது தானே தெரியும்.. அதன் தொட்டு தன் பெண்ணுக்கு அனைத்து உறவுமே வேண்டும் என்று.. அவனும் சென்னைக்கு மாற்றல் வாங்க சம்மதித்தான்..
மைதிலி சாண்டில்யனை அப்பா என்று அழைப்பதை பார்த்து இசையும் இயலுமே…
மற்ற குழந்தைகளிடம்.. “ மாமா தப்பு அப்பா தான் சரி…” என்று அனைவரையும் பார்த்து சொன்னவர்கள் சாண்டில்யனிடம்..
“ஆமாம் தானேப்பா…” என்றும் கேட்க… சாண்டில்யன் இதற்க்கு தானே ஆசைப்பட்டானே.. இயல் இசையை அள்ளி எடுத்து கொஞ்சி தீர்த்து விட்டான்..
“ஆமா பட்டுங்கலா.. ஆமாம் அப்பா தான் சரி. அப்பா தான் சரி…” என்று அப்படி ஒரு சந்தோஷம் அவன் முகத்தில்..
***********************************************************************ஸ்ரீ காந்துக்கு ஸ்ருதிகா ஸ்ரீயிடம் விவாகரத்து வாங்கமலேயே பாவனாவின் கழுத்தில் தாலி கட்டும் படியாகி விட்டது…
குணசேகரன் வீட்டை விட்டு வெளியில் வந்த பின் தான் மூச்சை இழுத்து விட்டு கொண்டவனாக..
“என்ன ராசா…” என்று கேட்டது..
சாண்டில்யனோ தான் கேட்க நினைத்ததை கேட்காது… “ என்ன ண்ணா வீட்டில் இருக்க…இன்னைக்கு கோர்ட்டுக்கு போகலையா…?” என்று கேட்டான்.. குணசேகரனும் அவன் பயந்தது போல் கேட்காது வேறு கேட்கிறானே என்ற ஆசுவாசத்தில்…
“பெண்ணுக்கு லீவு சாண்டில்யா… கலாவுமே நாம பேமிலியா வெளியில் போய் ரொம்ப நாள் ஆகுது என்று சொல்லிட்டு இருந்தா.. அது தான் ஒரு பத்து நாளுக்கு லீவு எடுத்து இருக்கேன்.. இன்னைக்கு சும்மா ஒரு நாள் அவுட்டிங்க தான்.. இனி தான் ஒரு ஒன் வீக் போவது போல எங்காவது புக் செய்யனும்…” என்று இருப்பதை அப்படியே ஒப்புவித்தான்.. அந்த அப்பாவி குணசேகரன்..
ஆனால் அடப்பாவீயான நம் சாண்டில்யனோ.. அதையே பிடித்து கொண்டு…
“நான் ப்ளைட் டிக்கெட் புக் செய்யிறேன் அண்ணா…” என்று நல்ல விதமாக தான் சொன்னான்..
சாண்டில்யன் இது போல நல்ல விதமாக பேசும் போதே நம் குணசேகரன் முழித்து கொண்டு இருந்து இருக்க வேண்டும்.. பாவம் அவன் ( என்னை போல) சூதுவாது தெரியாதவனாக..
“இன்னும் எங்கே என்றே டிசைட் செய்யல சாண்டில்யா. அதுவும் இல்லாம நான் செய்துக்குறேன் சாண்டில்யா…” என்று சொன்னதும் தான் சாண்டில்யா..
“அது எப்படி ண்ணா. என் விசயதுக்கு சென்னைக்கு வரும் போது நான் தானே ண்ணா புக் செய்யனும்.. அது தானே முறை.” என்று சாண்டில்யன் சொன்ன போது தான் குணசேகரனுக்கு தாமதமாக மூளையில் பல்ப் எரிந்தது…
“ஏய் என்ன டா. என்ன விசயம்.? நான் சென்னைக்கு வரேன் என்று சொல்லவே இல்லையே டா. அதுவும் இல்லாம இந்த முறை என்ன பஞ்சாயத்து டா.” என்று கேட்டதும் மறுப்பக்கம் சாண்டில்யன் இயல் இசை தன்னை அழைக்கும் உறவை சொன்னவன் பின்
“நீங்க இங்கு சென்னைக்கு வந்து எங்க வீட்டில் தங்கனும் ண்ணா… நம்ம மைதிலி என்னை அப்பா என்று கூப்பிட்டா கண்டிப்பா நம்ம இசை இயல் கூட அப்படியே கூப்பிடுவாங்க ண்ணா.. எனக்கு அவங்க என்ன அப்பா என்று கூப்பிட ஆசையா இருக்கு ண்ணா….” கடைசி வார்த்தை சொல்லும் போது சாண்டியனின் குரல் கர கரத்து விட்டது..
சாண்டில்யனின் இந்த பேச்சில் குணசேகரனுக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது.. அப்போது தான் கலாவதி அங்கு வந்தது…தன் கணவனின் முகத்தை பார்த்து விட்டு என்ன என்று கேட்க.
அவன் சாண்டில்யன் சொன்னதை சொன்னதும் கணவனிடம் இருந்து பேசியை வாங்கியவள்..
“தம்பி நாங்க வரோம்.. இவர் கிட்ட என்ன வள வல பேச்சு.” என்று ஒரே வார்த்தையில் முடித்து கொண்டு போய் விட்டாள்..
மீண்டும் கை பேசியை காதில் வைத்த குணசேகரன் தான். “ அது தான் உன் அண்ணி சொல்லிட்டா தானே… இன்னும் என்னப்பா வரோம்..” என்று சொன்னவனிடம் சாண்டில்யன் கவலை படாதிங்க ண்ணா உங்களுக்கு தனி ரூம் என்ன தனியா ஒரு தளமே கொடுத்துடுறேன் மைதிலியும் என் கூட படுக்க வெச்சிக்கிறேன். இப்போ ஹாப்பி தானே..” என்று கேட்டு விட்டு தான் போனை வைத்தது.
பின் சாண்டில்யன் எப்படியோ இரண்டே நாளில் குணசேகரன் குடும்பத்தை தன் வீட்டிற்க்கு அழைத்து கொண்டான். அந்த வீட்டில் இன்னுமே கல கலப்பு கூடியது..
என்ன தான் சுமதி மாளவிகா சந்தியா குழந்தைகளுடன் விளையாடினாலும் இசைக்கும் இயலுக்கும் குழந்தையில் இருந்து பார்த்த பெண் தன் பெரியம்மா பெண் மைதிலி தானே…
மைதிலியை பார்த்ததும்… “ அக்கா அக்கா .” என்று அழைத்து கொண்டு ஆசையுடன் மைதிலியின் இரு பக்கமும் இரு கையை பிடித்து கொண்டனர்…
சுமதி மாளவிகா சந்தியா குழந்தைகளுடன் மைதிலியும் கூட்டணி வைத்து கொள்ள.. பின் என்ன வீடே இன்னும் கலை கட்டியது.. மைதிலியும் தந்தை சொல்படி சாண்டில்யனை..
“அப்பா..” என்று அழைத்தாள்..
சாண்டில்யன் இயல் இசைக்காரணமாக தான் மைதிலியை தன்னை அப்பா என்று அழைக்க சொன்னது..
ஆனால் மைதிலி அப்பா என்று அழைத்த அந்த அழைப்பில் சாண்டில்யன் பூரித்து தான் போய் விட்டான்..
தூக்கி கொஞ்சும் அளவுக்கு பெண் இல்லை மைதிலி… அதனால் கன்னத்தை தொட்டு. “ என் செல்லதுக்கு என்ன வேண்டும்…” என்ற்ய் ஆசையாக கேட்ட போது அவனின் செல்லமான மைதிலி..
“எனக்கு இங்கு தான் பிடித்து இருக்கு அப்பா.. டெல்லி பிடிக்கல.. இங்கு தான் ஜாலி நாங்க இங்கே இருக்கனும்…” என்று சொல்ல.
சாண்டியல் குணசேகரனை பார்த்து கொண்டே… “ அதுக்கு என்ன செய்துட்டா போச்சு…” என்று சொன்னவன் எதிரில் குணசேகரன் தலை மீது கை வைத்து அமைர்ந்து கொண்டாலும், அவனுக்குமே அவனின் அப்பா அம்மாவுக்கு டெல்லி பிடிப்பது இல்லை.. வந்தாலுமே ஒரு வாரம் தங்கி விட்டு..
“எங்களுக்கு நம்ம ஊரு தான் பா..” என்று சொல்லி விட்டு சென்று விடுவர்..
டெல்லிக்கு சென்னை எவ்வளவோ மேல் அல்லவா.. இங்கு இருந்தால் தாய் தந்தையரை தங்களோடு வைத்து கொள்ளலாம்..
அதோடு உறவின் அருமை தனித்து இருக்கும் போது தானே தெரியும்.. அதன் தொட்டு தன் பெண்ணுக்கு அனைத்து உறவுமே வேண்டும் என்று.. அவனும் சென்னைக்கு மாற்றல் வாங்க சம்மதித்தான்..
மைதிலி சாண்டில்யனை அப்பா என்று அழைப்பதை பார்த்து இசையும் இயலுமே…
மற்ற குழந்தைகளிடம்.. “ மாமா தப்பு அப்பா தான் சரி…” என்று அனைவரையும் பார்த்து சொன்னவர்கள் சாண்டில்யனிடம்..
“ஆமாம் தானேப்பா…” என்றும் கேட்க… சாண்டில்யன் இதற்க்கு தானே ஆசைப்பட்டானே.. இயல் இசையை அள்ளி எடுத்து கொஞ்சி தீர்த்து விட்டான்..
“ஆமா பட்டுங்கலா.. ஆமாம் அப்பா தான் சரி. அப்பா தான் சரி…” என்று அப்படி ஒரு சந்தோஷம் அவன் முகத்தில்..
***********************************************************************ஸ்ரீ காந்துக்கு ஸ்ருதிகா ஸ்ரீயிடம் விவாகரத்து வாங்கமலேயே பாவனாவின் கழுத்தில் தாலி கட்டும் படியாகி விட்டது…