Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட....22.2

  • Thread Author
அத்தியாயம்….22…2

குணசேகரன் வீட்டை விட்டு வெளியில் வந்த பின் தான் மூச்சை இழுத்து விட்டு கொண்டவனாக..

“என்ன ராசா…” என்று கேட்டது..

சாண்டில்யனோ தான் கேட்க நினைத்ததை கேட்காது… “ என்ன ண்ணா வீட்டில் இருக்கிங்க …இன்னைக்கு கோர்ட்டுக்கு போகலையா…?” என்று கேட்டான்.. குணசேகரனும் அவன் பயந்தது போல் கேட்காது வேறு கேட்கிறானே என்ற ஆசுவாசத்தில்…

“பெண்ணுக்கு லீவு சாண்டில்யா… கலாவுமே நாம பேமிலியா வெளியில் போய் ரொம்ப நாள் ஆகுது என்று சொல்லிட்டு இருந்தா.. அது தான் ஒரு பத்து நாளுக்கு லீவு எடுத்து இருக்கேன்.. இன்னைக்கு சும்மா ஒரு நாள் அவுட்டிங்க தான்.. இனி தான் ஒரு ஒன் வீக் போவது போல எங்காவது புக் செய்யனும்…” என்று இருப்பதை அப்படியே ஒப்புவித்தான்.. அந்த அப்பாவி குணசேகரன்..

ஆனால் அடப்பாவீயான நம் சாண்டில்யனோ.. அதையே பிடித்து கொண்டு…

“நான் ப்ளைட் டிக்கெட் புக் செய்யிறேன் அண்ணா…” என்று நல்ல விதமாக தான் சொன்னான்..

சாண்டில்யன் இது போல நல்ல விதமாக பேசும் போதே நம் குணசேகரன் முழித்து கொண்டு இருந்து இருக்க வேண்டும்.. பாவம் அவன் ( என்னை போல) சூதுவாது தெரியாதவனாக..

“இன்னும் எங்கே என்றே டிசைட் செய்யல சாண்டில்யா. அதுவும் இல்லாம நான் செய்துக்குறேன் சாண்டில்யா…” என்று சொன்னதும் தான் சாண்டில்யா..

“அது எப்படி ண்ணா. என் விசயதுக்கு சென்னைக்கு வரும் போது நான் தானே ண்ணா புக் செய்யனும்.. அது தானே முறை.” என்று சாண்டில்யன் சொன்ன போது தான் குணசேகரனுக்கு தாமதமாக மூளையில் பல்ப் எரிந்தது…

“ஏய் என்ன டா. என்ன விசயம்.? நான் சென்னைக்கு வரேன் என்று சொல்லவே இல்லையே டா. அதுவும் இல்லாம இந்த முறை என்ன பஞ்சாயத்து டா.” என்று கேட்டதும் மறுப்பக்கம் சாண்டில்யன் இயல் இசை தன்னை அழைக்கும் உறவை சொன்னவன் பின்

“நீங்க இங்கு சென்னைக்கு வந்து எங்க வீட்டில் தங்கனும் ண்ணா… நம்ம மைதிலி என்னை அப்பா என்று கூப்பிட்டா கண்டிப்பா நம்ம இசை இயல் கூட அப்படியே கூப்பிடுவாங்க ண்ணா.. எனக்கு அவங்க என்ன அப்பா என்று கூப்பிட ஆசையா இருக்கு ண்ணா….” கடைசி வார்த்தை சொல்லும் போது சாண்டியனின் குரல் கர கரத்து விட்டது..

சாண்டில்யனின் இந்த பேச்சில் குணசேகரனுக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது.. அப்போது தான் கலாவதி அங்கு வந்தது…தன் கணவனின் முகத்தை பார்த்து விட்டு என்ன என்று கேட்க.

அவன் சாண்டில்யன் சொன்னதை சொன்னதும் கணவனிடம் இருந்து பேசியை வாங்கியவள்..

“தம்பி நாங்க வரோம்.. இவர் கிட்ட என்ன வள வல பேச்சு.” என்று ஒரே வார்த்தையில் முடித்து கொண்டு போய் விட்டாள்..

மீண்டும் கை பேசியை காதில் வைத்த குணசேகரன் தான். “ அது தான் உன் அண்ணி சொல்லிட்டா தானே… இன்னும் என்னப்பா வரோம்..” என்று சொன்னவனிடம் சாண்டில்யன் ..

“கவலை படாதிங்க ண்ணா உங்களுக்கு தனி ரூம் என்ன தனியா ஒரு தளமே கொடுத்துடுறேன் மைதிலியும் என் கூட படுக்க வெச்சிக்கிறேன். இப்போ ஹாப்பி தானே..” என்று கேட்டு விட்டு தான் போனை வைத்தது.

பின் சாண்டில்யன் எப்படியோ இரண்டே நாளில் குணசேகரன் குடும்பத்தை தன் வீட்டிற்க்கு அழைத்து கொண்டான். அந்த வீட்டில் இன்னுமே கல கலப்பு கூடியது..

என்ன தான் சுமதி மாளவிகா சந்தியா குழந்தைகளுடன் விளையாடினாலும் இசைக்கும் இயலுக்கும் குழந்தையில் இருந்து பார்த்த பெண் தன் பெரியம்மா பெண் மைதிலி தானே…

மைதிலியை பார்த்ததும்… “ அக்கா அக்கா .” என்று அழைத்து கொண்டு ஆசையுடன் மைதிலியின் இரு பக்கமும் இரு கையை பிடித்து கொண்டனர்…

சுமதி மாளவிகா சந்தியா குழந்தைகளுடன் மைதிலியும் கூட்டணி வைத்து கொள்ள.. பின் என்ன வீடே இன்னும் கலை கட்டியது.. மைதிலியும் தந்தை சொல்படி சாண்டில்யனை..

“அப்பா..” என்று அழைத்தாள்..

சாண்டில்யன் இயல் இசை காரணமாக தான் மைதிலியை தன்னை அப்பா என்று அழைக்க சொன்னது..

ஆனால் மைதிலி அப்பா என்று அழைத்த அந்த அழைப்பில் சாண்டில்யன் பூரித்து தான் போய் விட்டான்..

தூக்கி கொஞ்சும் அளவுக்கு பெண் இல்லை மைதிலி… அதனால் கன்னத்தை தொட்டு. “ என் செல்லதுக்கு என்ன வேண்டும்…” என்று ஆசையாக கேட்ட போது அவனின் செல்லமான மைதிலி..

“எனக்கு இங்கு தான் பிடித்து இருக்கு அப்பா.. டெல்லி பிடிக்கல.. இங்கு தான் ஜாலி நாங்க இங்கே இருக்கனும்…” என்று சொல்ல.

சாண்டியல் குணசேகரனை பார்த்து கொண்டே… “ அதுக்கு என்ன செய்துட்டா போச்சு…” என்று சொன்னவன் எதிரில் குணசேகரன் தலை மீது கை வைத்து அமர்ந்து கொண்டாலும், அவனுக்குமே அவனின் அப்பா அம்மாவுக்கு டெல்லி பிடிப்பது இல்லை.. வந்தாலுமே ஒரு வாரம் தங்கி விட்டு..

“எங்களுக்கு நம்ம ஊரு தான் பா..” என்று சொல்லி விட்டு சென்று விடுவர்..

டெல்லிக்கு சென்னை எவ்வளவோ மேல் அல்லவா.. இங்கு இருந்தால் தாய் தந்தையரை தங்களோடு வைத்து கொள்ளலாம்..

அதோடு உறவின் அருமை தனித்து இருக்கும் போது தானே தெரியும்.. அதன் தொட்டு தன் பெண்ணுக்கு அனைத்து உறவுமே வேண்டும் என்று.. அவனும் சென்னைக்கு மாற்றல் வாங்க சம்மதித்தான்..

மைதிலி சாண்டில்யனை அப்பா என்று அழைப்பதை பார்த்து இசையும் இயலுமே…

மற்ற குழந்தைகளிடம்.. “ மாமா தப்பு அப்பா தான் சரி…” என்று அனைவரையும் பார்த்து சொன்னவர்கள் சாண்டில்யனிடம்..

“ஆமாம் தானேப்பா…” என்றும் கேட்க… சாண்டில்யன் இதற்க்கு தானே ஆசைப்பட்டானே.. இயல் இசையை அள்ளி எடுத்து கொஞ்சி தீர்த்து விட்டான்..

“ஆமா பட்டுங்கலா.. ஆமாம் அப்பா தான் சரி. அப்பா தான் சரி…” என்று அப்படி ஒரு சந்தோஷம் அவன் முகத்தில்..

***********************************************************************ஸ்ரீ காந்துக்கு ஸ்ருதிகா ஸ்ரீயிடம் விவாகரத்து வாங்கமலேயே பாவனாவின் கழுத்தில் தாலி கட்டும் படியாகி விட்டது…காரணம் அக்கம் பக்கத்தவர்கள் மட்டும் அல்லாது அந்த வீட்டில் பெண் ஸ்வேதாவை எடுத்த சம்மந்தி வீட்டவர்கள்..

“இது என்ன குடும்பம்…” என்று அசிங்கமாக கேட்டு விட்டு தான் சென்றனர்.. வினோத்….

ஸ்ரீ காந்திடம்… “ என் பெண் வளர்ந்த பெண் ஸ்ரீகாந்த்… இந்த பொண்ணு யாரு மாமாவோட அபரா என்று கேட்கிறா.. கூட அப்போ மாமா நல்லவர் இல்லையா..? இதுக்கு முன் என் கன்னத்தை எல்லாம் தொட்டு பேசுவாரே… அப்போ அது பேட் டச்சா.. ? என்று வேறு கேட்கிறா….இதுக்கு நான் மகளுக்கு என்ன பதில் சொல்ல ஸ்ரீ காந்த்…” என்று கோபமாக கேட்டு கொண்டு இருக்கும் போதே பாவனாவும் கோபமாக..

“என்ன இது எங்க வீட்டுக்கே வந்து எங்களையே இப்படி பேசுறிங்க…?” என்று கேட்க.

அந்த வீட்டின் மாப்பிள்ளை பாவனாவை திரும்பி கூட பார்க்கவில்லை.. ஏன் ஸ்வேதா தன் கணவனிடம் பாவனா பேசுவதே பிடிக்காது…

ஸ்ரீ காந்திடம்.. “ ண்ணா எது என்றாலும் என் புருஷன் கிட்ட நீ பேசு.. ஏன்னா உன்னை விட என் வீட்டுக்காரர் அழகா இருக்கார் வேறு..” என்று சொல்லி விட்டாள்.. உண்மையில் அவளுக்கு அந்த பயம் இருக்க தான் செய்தது… அத்தனை நெருக்கமான தோழிக்கே துரோகம் செய்தவளாயிற்றே… தான் எல்லாம் எம்மாத்திரம்….ஸ்வேதா இப்படியாக தான் யோசித்தது..

இதில் பாவனா வீட்டு மாப்பிள்ளையிடம்… “ எங்க வீட்டிற்க்கு வந்து எங்களையே இப்படி பேசுவீயா…?” என்று கேட்டதில், ஸ்ரீ காந்தின் அப்பா வெங்கடராமன்..

“ம்மா இது என் வீடும்மா. இன்னும் என் பெயரில் தான் இருக்கு. இவர் இந்த வீட்டு மாப்பிள்ளை.. புரியுதா.? ஆனா இத்தனை உரிமையுடன் பேசும் நீ தான் இவனுக்கு யார் என்று தெரியல…” தன் இளைய மகன் ஸ்ரீ காந்தை காட்டி கேட்டதும்..

பாவனா. “ நீங்க என் கழுத்தில் தாலி கட்டினா தான் ஆச்சு..” என்று ஸ்ரீ காந்திடம் வம்படி செய்து தாலி வாங்கி கொண்டாள்..

ஸ்ரீ காந்த் குடும்பமும் இதற்க்கு செல்லும் படியாகி விட்டது.. காரணம் என்ன தான் இருந்தாலும் தன் மகன் மகனை விட முடியாது தானே..

அதுவும் ஸ்ரீ காந்தை பாவனா தனிமையில் அத்தனை மிரட்டி விட்டாள்… “ என்ன அப்படியே கழட்டி விட பார்க்கிறிங்கலா…? ஸ்ருதிகா ஸ்ரீயே விலகி போன பின்… இன்னும் என்ன உங்களுக்கு பிரச்சனை…?” என்று கேட்டதற்க்கு ஸ்ரீ காந்த்….

“இன்னும் டைவஸ் கிடைக்கல பாவனா.. ஸ்ருதிகா ஸ்ரீ கம்பிளையண்ட் கொடுத்தா பிரச்சனை ஆகிடும்…” என்று சொன்ன போது தான் பாவனா…

“ஓ அவளுக்கு தான் கம்பிளையண்ட் கொடுக்க தெரியுமா.? ஏன் நான் கொடுத்தால் அந்த கம்பிளையண்ட்டை போலீஸ் ஏத்துக்காதா….?ஏன் கூட பழகி குழந்தை கொடுத்துட்டு ஏமாத்த பார்க்கிறார் என்று சொன்னா என்ன செய்வீங்க….?” என்று பாவனா மிரட்டியதில் ஸ்ரீ காந்த் உண்மையில் பயந்து போய் விட்டான் தான்.

தெரியும் ஸ்ருதிகா ஸ்ரீ.. இனி தன் பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டாள் என்று… ஆனால் அது என்னவோ பாவனா கழுத்தில் தாலி கட்டுவதை நினைக்கும் போதே..ஏதோ ஒப்பவில்லை..

ஸ்ருதிகா ஸ்ரீ தன் பக்கம் திரும்ப மாட்டாள் என்று நினைத்தவன் அதே போல இனி பாவனா தன்னை விட மாட்டாள் என்பதும் புரிந்து கொண்டவன் வேறு வழி இல்லாது தான் தன் அம்மா அப்பா அண்ணன் அண்ணி என்று தன் குடும்பத்தவர் கை காலில் விழுந்து அவர்களை அழைத்து கொண்டு தான் தன் குடும்ப குலதெய்வக்கோயில் முன் ஸ்ரீ காந்தன் பாவனா கழுத்தில் தாலியை கட்டினான்.

ஸ்ரீ காந்த் செய்வதை அனைத்துமே உடனுக்கு உடன் சாண்டில்யனுக்கு தெரிய வந்தது தான்.. அதில் இதுவும் தெரிந்தது தான். இருந்தும் எதுவும் யாருக்கும் சொல்லவில்லை… இனி ஸ்ருதிகா ஸ்ரீ வாழ்க்கையில் ஸ்ரீ காந்த் இல்லை என்று ஆன பின்.. இனி அவனின் பேச்சை ஸ்ருதிகா ஸ்ரீயிடம் எடுக்க கூட அவன் விரும்பவில்லை..

அடுத்து ஸ்ரீ காந்த் பாவனாவுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது….

இங்கு சாண்டில்யன் மைதிலியிடம் சொன்னது போலவே குணசேகரனை சென்னைக்கு மாற்றலாகி வரவழைத்து விட்டான்..

ஆனால் இங்கு இல்லாது சாண்டில்யன் பக்கத்து தெருவில் இருக்கும் ஒரு வீடு விலைக்கு வர… சாண்டில்யன் குனசேகரன் சென்னைக்கு நிரந்தரமாக வரும் போது நேராக அங்கு வந்து தங்கும் அளவுக்கு அந்த வீட்டை வீடியோ காலில் மட்டும் குணசேகரனுக்கு காட்டி அவனுக்கு அவன் குடும்பத்திற்க்கும் பிடித்தம் தான் என்று தெரிந்த பின்…

அதையே வாங்கி விட்டான். அவன் பெயரில், பதிவு செய்யாது உயிலாக நான் இன்னாருக்கு கொடுக்கிறேன் என்பது போலான ஒரு உயிலை எழுதி விட்டான்..

ஆம் அது சாண்டில்யன் வீடு தான்.. அவனின் தந்தை சோமசுந்தரன் வாங்கியது… பின் அந்த வீட்டில் அனைத்து வசதிகளும் குணசேகரன் வரும் முன்னவே செய்து முடித்து விட்டான்..

குணசேகரனும் டெல்லியில் இருந்து குடும்பமாக சென்னைக்கு வந்து விட்டனர்… அந்த வீட்டை பற்றி தெரிந்து கொண்ட குணசேகரன் தான்..

“சாண்டில்யா அத்தனை பணம் வேண்டாம் சாண்டில்யா. அந்த அளவுக்கு பணம் போட்டு வாங்க இப்போ என் கிட்ட அந்த அளவுக்கு பணம் இல்ல.. என் கிட்ட இருப்பதற்க்கு ஒரு அப்பார்ட்மெண்ட் அவ்வளவு தான் முடியும்… இது வேண்டாம்..” என்று மறுத்த போது சாண்டில்யன் அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டான்..

“என்னை முதன் முதலில் அப்பா என்று அழைத்த குழந்தை மைதிலி.. இந்த வீடு உங்களுக்காக கிடையாது என் பெரிய பெண் மைதிலிக்காக…” என்று சீரியஸாக பேசிக் கொண்டு வந்த சாண்டில்யன் முடிவில்.

“ண்ணா இந்த வீடு தான் வசதின்னா அப்பார்ட்மெண்ட் என்றால் என்ன தான் நாம மூன்று பெட் ரூம் இருப்பதா வாங்கினா கூட அத்தனை வசதி படாது.” என்று சொன்னவனிடம் வெள்ளந்தியான நம் குணசேகரன்.

“ஏன் சாண்டில்யா.?” என்று கேட்டான்.

அதற்க்கு குணசேகரன் காதில்… “ மைதிலி வளர்ந்துட்டு வரா ண்ணா உங்களுக்கு வேறு நேரம் காலம் தெரியாம…” என்று சாண்டில்யன் சொல்லி கொண்டு வரும் போது தான் குணசேகரன் எதை வைத்து அவன் சொன்னான் என்பதே புரிந்தது.

“டேய் டேய்…” என்று குணசேகரன் கத்த கத்த சாண்டில்யன்..

“இப்போ தங்கும் இந்த வீடு டூப்ளெக்ஸ் வீடுன்னா….உங்களுக்கு கொஞ்சம் பிரவேஸி கிடைக்கும்.. உங்க அப்பா அம்மா கீழ் ரூமில் தான் தங்குவாங்க.. கண்டிப்பா மைதிலி தன் தாத்தா பாட்டி கூட தான் தங்குவா…மேல் போஷன் உங்களுக்கு மட்டும் தான்..” என்று சாண்டில்யன் சொல்ல சொல்ல. உண்மையில் குணசேகரனின் முகம் வெட்கத்தில் சிவந்து விட்டது தான்..

அதை சாண்டில்யன் மனதார ரசித்தவன். அதை குணசேகரனிடம் சொல்லவும் செய்தான்..

“நீங்க இது போல வெட்கப்படுவது அழகா இருக்குண்ணா…” என்று..

அதற்க்கு குணசேகரன்.. “ இது போல நீயும் வெட்கப்படும் காலம் ரொம்ப தூரம் இல்ல சாண்டில்யா…” என்று…

குணசேகரன் சொன்னது நடப்பதற்க்கு ஏதுவாக தான் அடுத்து அடுத்து நடந்தது..

விவாகரத்திற்க்கு உண்டான நாள்.. முதலில் ஸ்ருதிகா ஸ்ரீ, ஸ்ரீ காந்த் தான் முதலில் கிடைத்தது..

தத்தமவர்கள்.. வாழ விருப்பம் கிடையாது என்று சொல்ல… அவர்களுக்கு உடனே கிடைத்து விட்டது.. இழப்பீடாக ஸ்ருதிகா ஒன்றும் கேட்காததில் நீதிபதி ஏன் என்று கேட்ட போது மட்டும் ஸ்ருதி ஸ ஸ்ரீ சாண்டில்யனை பார்த்து கொண்டே..

“இல்ல வேண்டாம்…” காரணம் சொல்லாது மறுத்து விட்டாள்..

சாண்டில்யனோ அவள் கண் பார்வையில் தான் நின்று கொண்டு இருந்தான்… எப்போதும் தாயிடம் இரு கை பற்றிக் கொண்டு இருக்கும் இயலும் இசையும் இப்போது தந்தையின் இரு தோள் பிடித்து கொண்டு ஒய்யாரமாக இருந்தனர்..

அந்த காட்சியை பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது..

“குழந்தையை ஏன் ண்ணா அங்கு எல்லாம் அழச்சிட்டு போற. வேண்டாம்…” என்று தான் சுமதியும் மாளவிகாவும் சொன்னது.

ஆனால் அது என்னவோ சாண்டில்யன்.. “ இல்ல நான் அழச்சிட்டு போவேன்…” என்று தன் இரு தங்கையிடம் சொன்னவன் ஸ்ருதிகா ஸ்ரீ முகத்தை பார்த்தான்..

கேட்கவில்லை.. அழச்சிட்டு போகலாமா என்று.. ஆனால் அந்த பார்வை அவளிடம் கேட்டதோ… ஸ்ருதிகா ஸ்ரீயும் தலை அசைத்து தன் சம்மதத்தை கூறி விட்டாள்..

இது வரை அவர்கள் இருவரும் பேசியதை விரல் விட்டு எண்ணி விடலாம்.. அவர்களுக்குள் நடந்த பேச்சுக்கள் என்பது அதிகம் எல்லாம் கிடையாது.. ஆனால் பார்வை… பார்வையிலேயே புரிந்து கொண்டு விடுவார்கள்..

(இதன் தொடர்ச்சி இரவு கொடுக்கிறேன் பா…)




 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
188
கொடுத்து விட்டேன் பா... தாமதம் ஆகிவிட்டது
எல்லாம் நம்ம குணாவோட திருதிருத்தலை பாக்கறதுக்கு தான் ஜீ வெயிட்டிங் ப்பா 🥰 🥰 🥰.
நானும் வந்துட்டேன் 🥳 🥳 🥳
 
Top