Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட...23.2

  • Thread Author
அத்தியாயம்….23.2

சாண்டில்யனுக்கு ஸ்ருதிகா ஸ்ரீயினை பிடித்து இருந்தது… இந்த பிடித்தம் பெண்ணவளின் மீது அவனுக்கு எப்போது வந்தது…? எப்படி…? உண்மையில் அவனுக்கு தெரியவில்லை…

தனக்கு என்று பார்த்த ஸ்ருதிகா ஸ்ரீயின் புகைப்படத்தை பார்த்து அந்த பிடித்தம் அவனுக்கு வந்ததா…? அப்போது அந்த அளவுக்கு அவனுக்கு பெண்ணவளின் மீது பிடித்தம் என்றால், ஜாதகம் என்று காரணம் காட்டினாலுமே, தன் பிடித்தம் அதில் அவன் உறுதியாக இருந்து இருக்க வேண்டாமா…? அவனுக்கு அவனே இதை பல முறை இத்தனை நாளில் கேட்டு கொண்டு இருக்கிறான்..

அதே சமயம் அத்தனை பிடித்தம் என்றால் பெண்ணை தன் கேபின் வாசலில் பார்த்ததுமே கண்டு பிடித்து இருந்து இருக்க வேண்டுமே… ஆனால் எங்கோ பார்த்த நியாபகம் அவனுக்குள் எழுந்தது தான்.. அந்த நியாபகத்தை தட்டி எழுப்ப அவனுக்கு ஒரு பாடல் தேவைப்பட்டது…

அந்த பிடித்தம் எந்த வகையில் சார்ந்தது என்று அவனுக்கு இன்று வரை தெரியவில்லை தான்.. ஆனால் இன்று இப்போது ஸ்ருதிகா ஸ்ரீயின் பெண்ணவளை அவனுக்கு அத்தனை பிடித்தம்.. இரு குழந்தைகளுக்கு தாயாக அவளை அப்படியே ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவனுக்கு அவளை பிடித்தம் தான்..

ஆனாலுமே அவளை இது வரை சாண்டில்யன் முகத்தை தான்டி பார்த்தது கிடையாது… பார்க்க அத்தனை ஆசைகள்.. அவனுமே ரத்தமும் சதையும் இருக்கும் சாதாரண மனிதன் தானே….

எத்தனை எத்தனை ஆசாபாசங்கள் அவனுக்குள் இருந்தது… அது அவன் மனம் மட்டுமே அறிந்த ரகசியம்… ஆனாலுமே முப்பத்தியெழு வயது வரை சுத்த பிரம்மச்சாரியாக இருக்கும் நிலை.. அது கொடுமை தானே.

பின்னும் பிடித்த பெண் தன் கண் முன் இருந்துமே அவன் அவளை வேறு நோக்கத்துடன் பார்க்கவில்லை…

அதற்க்கு காரணம் இன்னுமே விவாகரத்து வாங்காது பெண்ணவளை பார்ப்பது தான் அவளுக்கு கலங்கம் ஏற்படுத்துவது போல் என்று நினைத்தான்..

இன்று அனைத்துக் கடந்து அவனின் மனதில் அத்தனை உல்லாசம்.. அதுவும் பெண்ணவளுக்குமே தன் மீது விருப்பம் என்று தெரிந்ததில் அவன் மனதின் இருந்த உல்லாசம் அளவு கூடி தான் போயின… அதன் தாக்கம் தான் ஆணவனின் பார்வை பெண்ணவளின் மீது சகட்டு மேனிக்கு பாய்ந்தது..

இன்னும் இன்னுமே அவனின் பார்வை அவளை ஆழமாக பார்க்க. அவனின் அந்த பார்வை ஸ்ருதிகா ஸ்ரீக்கு ஒரு வித கூச்சத்தை கொடுத்தது..

எத்தனை பேச்சுக்களை கூட ஒருவர் எதிர் கொண்டு விடலாம்… பதில் பேச்சும் பேசி விடலாம் தான்.. ஆனால் ஒரு சில பார்வைகளின் தாக்கம் மற்றவர்களுக்கு மூச்சு அடைக்க வைத்து விடும்.. அது போலான நிலையில் தான் ஸ்ருதிகா ஸ்ரீ இருந்தாள்…

அதுவும் சாண்டில்யன் வந்ததில் இருந்து ஒரு வார்த்தை கூட பேசாது தன்னையே பார்த்து கொண்டு இருப்பதில் ஏதோ புதுப்பெண்ணுக்கு ஏற்படுமே நாணம் அது போலான ஒரு உணர்வை அது அவளுக்கு கொடுத்தது.

இது போல் பெண்ணவள் நினைக்கும் போது தான்.. அதாவது சாண்டில்யன் பார்த்த பார்வையில் அவளின் மேனியில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும் போது தான் இதை நினைத்தது..

நான் டீன் ஏஜில் இல்லை… இரண்டு குழந்தைக்கு தாய்.. அனைத்துமே பார்த்தவள் நான். இது என்ன புதியகாத புதுப்பெண் போல் வெட்கப்படுகிறேன் என்று அவள் மனது நினைக்கும் போது தான் பெண்ணவளின் மனது இதை சொன்னது.

அதாவது சாண்டில்யன் திருமணம் ஆகாதவன்.. கட்ட பிரம்மச்சாரி.. ஆனால் நான்… என்று அவள் சிந்தனை ஓடும் போதே அவள் முகத்தில் ஒரு அதிர்வு ஒடியது.. திடுக்கிட்டு… சாண்டில்யன் பார்க்கும் இந்த பார்வையில் தயங்கி கொண்டு இருந்த பெண்ணவளின் பார்வை ஆணவனின் முகத்தை நேர்க் கொண்டு பார்த்தது..

சாண்டில்யன் உல்லாச மனநிலையில் அவனின் பார்வை பெண்ணவளின் மீது வட்டம் அடித்தாலுமே ஸ்ருதிகா ஸ்ரீயின் முகம் யோசனைக்கு சென்ற போதே… சாண்டில்யனின் பார்வை அவளின் முகத்தினிலேயே நிலையாக நிலைத்து நின்று விட்டது..

அதனால் பெண்ணவள் அதிர்ந்து அவனை பார்த்த போது சாண்டில்யன் தன் இலகு தன்மையை மாற்றி கொண்டவனாக…

தான் இருந்த இருக்கையை கொஞ்சம் முன் நகர்த்து பெண்ணவளை ஒட்டியது போல செய்து கொண்டவன்.. ஸ்ருதிகா ஸ்ரீயின் விரலை பற்றினான்..

விரலை பற்றினான் என்றால் ஒற்றை விரலை மட்டுமே தான் பற்றினான்.. தாலி கட்டிய பின்… மாப்பிள்ளை பெண்ணவளின் ஒற்றை விரலை கொண்டு அக்னியை வலம் வரும் பற்றல் அது…

பற்றிய இருவரின் கையின் மீது தான் சாண்டில்யனின் பார்வை இருந்தது.. அங்கு பெண்ணவளின் கை மட்டுமே நடுங்க வில்லை ஆடவன் கையிலும் அத்தனை நடுக்கம்…

ஆனாலுமே சாண்டில்யன் அந்த பிடித்த விரலை விடவில்லை… பெண்ணவளும் அத்தனை நடுக்கத்திலும் சாண்டில்யனிடம் இருந்து தன் விரலை விடுவித்து கொள்ள முயலவில்லை…

சிறிது நேரம் இருவரின் பார்வையில் பிடித்து கொண்ட அந்த விரல்கள் மீதே தான் இருந்தது… சிறிது நேரம் கழித்து இருவரின் அந்த தொடுகை கைக்கு பழகி விட்டது போல.. கொஞ்சம் கொஞ்சமாக கை நடுக்கம் குறைந்தது..

அதன் பின் தான் மீண்டுமே.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.. ஆனால் இப்போதுமே அந்த விரல் பற்றிக் கொண்டு இருந்ததை விடுவித்து கொள்ளவில்லை..

சாண்டில்யன் எந்த மேல் பூச்சும் இல்லாது ஸ்ருதிகா ஸ்ரீயிடம்…

“ஸ்ருதிகா நாம மேரஜ் செய்து கொள்ளலாமா…?” என்று கேட்டு விட்டான்..

தெரியும் ஸ்ருதிகா ஸ்ரீக்கு தெரியும்.. இதை தான் சாண்டில்யன் தன்னிடன் கேட்பான்.. அதற்க்காக தான் தனித்து பேச இங்கு அழைத்து வந்தான் என்று அனைத்துமே தெரியும்..

ஆனால் இது போல எதுவும் பேசாது… சட்டென்று இப்படி கேட்டு விடுவான் என்று பெண்ணவள் எதிர்பார்க்கவில்லை.. ஆனாலும் இது அவளுக்கு பிடித்து தான் இருந்தது..

“ம்…” என்று சொல்ல தான் ஆசை . ஆனால் அதை அவளாள் இப்போது சட்டென்று சொல்ல முடியவில்லை.

முன் தெரியாத அனைத்தும் இப்போது தெரிந்தது.. அதாவது சாண்டில்யனுக்கு இது வரை திருமணம் ஆகவில்லை.. ஆனால் தனக்கு.

எப்போதுமே பொதுவாக நம் சமூகத்தில் ஒரு விதி இருக்கிறது.. ஒரு ஆண் ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தையோடு அவனுக்கு மனைவி இல்லாத பட்சத்தில் திருமணம் ஆகாத ஒரு கன்னி பெண்ணை திருமணம் செய்து கொண்டால், அதை ஒன்றும் சொல்ல மாட்டார்கள்..

இன்னும் கேட்டால் இதில் என்ன இருக்கிறது என்பது போல சாதாரணமாக தான் கடந்து செல்வார்கள்..

ஆனால் இதே தன்னை போல குழந்தையோடு இது வரை திருமணம் ஆகாத ஆடவனை மணப்பது என்பது…

அவனுக்கு என்ன குறை..? ஏன் இப்படி..? அதுவும் குழந்தையோடு இது தேவையா…?” இது போல கேள்விகள் எழும்..

முன் தோன்றாத விசயம் தோன்றியதி இப்போது பெண்ணவள் தடுமாறி போய் விட்டாள்..

கூடவே.. சாண்டில்யன் அழைத்த அழைப்பு.. ஸ்ருதி.. ஸ்ரீ காந்த் அழைப்பான்.. அது வேறு அவளின் நியாபகத்தில் வந்து விட…

இப்போது சாண்டில்யன் தான் கேட்ட கேள்வியை கேட்க வில்லை.. புதியகாத.

அவளின் தலையை தட்டி… “ இதுக்குள்ளே என்ன போட்டு குழப்பி கொண்டு இருக்க..?” என்று கேட்டதற்க்கு பதிலாக ஸ்ருதிகா ஸ்ரீ..

“உங்க கிட்ட புதுசா கொடுக்க என் கிட்ட எதுவும் இல்லை…” என்று பட்டென்று சொல்லி விட்டாள்.

சாண்டில்யன் என்ன புதுசு…? என்ன பழசு…?” என்று எல்லாம் பெண்ணவளிடம் கேட்கவில்லை.. அவனுக்குமே புரிந்து விட்டது தான்.. ஆனால் இது போல அவளிடம் அவன் எதிர் பார்க்கவில்லை… சாண்டில்யன் அதை சொல்லவும் செய்தான் பெண்ணவளிடம்…

பின்… “இது எல்லோரும் சொல்றது தான்.. இன்னும் கேட்டால் ரொம்ப பழசுமே… இப்போ ஒரு பெண்ணை ரேப் செய்துட்டாங்க. அப்போ அந்த பெண்ணுக்கு நாளைக்கு கல்யாணம் ஆன கொடுக்க… உன் அகராதி படி புதுசா ஒன்னும் இல்ல என்று அந்த பெண் கடைசி வரை கல்யாணம் செய்யாம இருக்கனுமா…?” என்று கேட்டவனிடம் பெண்ணவள் சட்டென்று..

“என்னை யாருமே ரேப் செய்யல … நானுமே மனம் ஒத்து தான்..” என்று அவள் சொல்லும் போதே அவளின் பேச்சை கை நீட்டி தடுத்தான்.

“இப்போ நீ என்ன சொல்ற ஸ்ருதிகா ஸ்ரீ… நீ ஓழசு நான் புதுசுன்னா….? சரி வா கிளம்பலாம்.. நாளைக்கு இதே இடத்தில் நாம வரலாம்.. இதே கேள்வியை நான் உன் கிட்ட கேட்பேன்… நீ எனக்கு ஒகே என்று தான் சொல்லனும்.. ஏன்னா நாளைக்கு நானுமே பழசாகிட்டு வரேன்…” என்று சொன்னவனின் பேச்சு புரியவே பெண்ணவளுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது..

புரிந்த நொடி… “ என்ன பேச்சு சாண்டில்யா..” என்று அதட்டுவது போல பேசிய அந்த பேச்சை சாண்டில்யன் ரசித்தான். அதுவும் அவள் தன் பெயரை அத்தனை அழுத்தம் திருத்தமாக சொன்னதை ரசித்தான்.

சாண்டில்யனுக்கு தன் பெயரை அத்தனை பிடிக்கும்.. தன் பெயரை யாராவது சுருக்கி அழைத்தால் அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது… தன் பெயரில் ஒரு கம்பீரம் இருப்பதை அவன் உணர்வான்..

இன்று ஸ்ருதிகா ஸ்ரீ தன்னை அழைத்ததில் இன்னுமே அவன் பெயர் அவனுக்கு அத்தனை பிடித்தது… அவளின் அம்மா தான்.. இது போல அழுத்தம் திருத்தமாக அவனின் பெயரை அழைப்பார்…

இன்று அதே போலான ஒரு அழைப்பில் தாங்கள் பேசிக் கொண்டு இருப்பதையே மறந்தவனாக.

“திரும்ப அதே போல என்னை கூப்பிட் ஸ்ருதிகா ஸ்ரீ..” என்று கேட்ட போது பொங்கிய பாலில் தண்ணீரை ஊற்றியது போல ஸ்ருதிகா ஸ்ரீ…

“நான் உங்க பெயரை கூப்பிடும் போது இப்படி ரசிக்கிறிங்க…ஏன்.?” என்று கேட்ட போது சாண்டில்யன்..

“ஏன்னா உன்னை போல தான் என் அம்மாவும் கூப்பிடுவாங்க…” என்று சொன்னான்..

அதற்க்கு ஸ்ருதிகா ஸ்ரீ.. “ ஆனா நீங்க என்னை எந்த பெயர் கூப்பிடாலும்.. வேறு ஒருவன் என்னை கூப்பிடுவான்.. அது தான் நியாபகத்தில் வருது சாண்டில்யன்..” என்று சொன்ன போது சாண்டில்யனுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது…

“இப்போ நீ எந்த மாதிரியும் கூப்பிட வேண்டாம். நானுமே உன்னை எந்த மாதிரியுமா கூப்பிடல. முதல்ல நாம கல்யாணம் செய்துக்கலாம்… செய்த பின் உனக்கு என் நியாபகமும் நன் பெண்கள் நியாபகம் மட்டுமே வரது போல செய்யிறேன்… உடனே படுக்கை இது போல நினச்சிடாதே… ஆனா அது இல்லாதுமே இல்ல… நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவன் இல்லை.. இப்போ அவங்கலே அது போல இல்ல…

எனக்குமே எல்லா ஆசையும் இருக்கு… உன்னை ரொம்ப யோசிக்க விட்டா. நீ என்ன என்னவோ யோசிக்கிற. முதல்ல நாம கல்யாணம் செய்து கொள்ளலாம்..” என்று சொன்னவன் அடுத்து ஸ்ருதியை சாண்டில்யன் யோசிக்க எல்லாம் விடவில்லை.

மற்றவர்களுமே இதற்க்கு தானே காத்து கொண்டு இருந்தது.. அதுவும் குணசேகரன் சோமசுந்தரன் ராஜ ராஜேஷ்வரி வாழ்ந்த வீட்டிலேயே மிக எளிமையாக திருமணத்தை முடித்து விட்டான்.

திருமணம் எளிமையாக நடந்தாலுமே, அந்த ஊரின் மொத்த ஜனமும் வந்து விட்டனர்… வந்தவர்கள் அனைவருமே சொன்னது இதை தான்.

“உன் அம்மா இதை தான் ப்பா ஆசைப்பட்டாங்க… ஆனா நீ ரொம்ப தாமதம் படுத்திட்ட ப்பா.. அவங்க அடுத்த ஆசை இந்த வீடு நிறைய குழந்தைகள் இருக்கனும் என்பது தான். அதையாவது சீக்கிரம் செய்து விடுப்பா..” என்று சொன்னது தான்.

அப்போது தன் இரு பக்கமும் நின்று கொண்டு இருந்த இயல் இசையை காண்பித்து… கல்யாணம் முன்னவே என் அம்மாவின் ஆசை நிறைவேத்தி வெச்சிட்டேன் தாத்தா.” அந்த பெரியவரிடம்… சொன்ன போது முன்பே அந்த பெரியவருக்கு லேசு பாசாக விசயம் தெரிந்து இருந்தது தான்.

அந்த பெரியவருக்கு மட்டும் கிடையாது.. அந்த ஊருக்கே தெரியும்.. தெரியப்படுத்தி இருந்தான் குணசேகரன்…

“இந்த பெண்ணை தான் ராஜ ராஜேஸ்வரிக்கும் சோமசுந்தரத்திற்க்கும் சாண்டில்யனை திருமணம் செய்ய விருப்பம்… அதே வரமும் வந்தது.. பின் நடந்த விசயங்கள் என்று அனைத்துமே சொல்லி இருந்தான்..”

தெரியும் தான் எந்த மாதிரி பேசினால் எதிர் வினை என்ன மாதிரியாக கிடைக்கும் என்று..

அவன் எதிர் பார்த்தது போல் தான் அவனின் பேச்சுக்கு … “ என்ன தான் திட்டம் போடாலுமே பெரியவங்க ஆசை தான் கடைசியில் நடந்தது பார்த்திங்கலா.. சாண்டில்யனுக்கு இந்த பெண் தான் இருக்கு போல. அதனால் தான் இது வரை கூட கல்யாணம் செய்யாம தடையா வந்து இருக்கும்… ..இந்த வீட்டம்மாவுக்கும் குழந்தைங்க என்றால் ரொம்ப பிடிக்குமே.. அதுவும் பெண் குழந்தைங்க என்றால் இன்னும் பிடிக்கும்… அவங்களே வேத்துமை பார்க்காம தானே.. சாண்டில்யனை வளர்த்தாங்க.. அதோட குழந்தைகளும் தெய்வமும் ஒன்னு என்று சொல்லுவாங்க… இருக்கட்டும் நல்லதா இருக்கட்டும்… ஆனா ஒன்னு சாண்டில்யா இந்த குழந்தைங்க மட்டும் போதும் என்று இருந்திடாதிங்க…

இவங்க உன் குழந்தை என்பதிற்க்காக சொல்லலே… உன் அம்மாவுக்கு இந்த வீடு நிறைய குழந்தையா இருக்கனும் என்று ஆசை.” வாழ்த்தியவர்களின் ஆசி எல்லாம் இது போல தான் இருந்தது…
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
186
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍.
பார்ரா பயபுள்ள பேரு சுருக்கி கூப்பிட்டா புடிக்காதாம்.
அதுக்காக என்றாளு சாண்டில்யா ன்னா கூப்பிட முடியும்.
தாத்தா சொன்ன மாதிரி சாண்டியோட பர்பாமென்ஸ் இருக்குமா?😉😉😉😉🥰🥰
 
Active member
Joined
Apr 2, 2025
Messages
25
சும்மாவே இவன் வில்லங்கம்... இதுல வீடு பூர குழந்தை என்று சொல்லியே இவன இன்னும் உசப்பு ஏத்துராங்கயா🤷🤷😁😁😁🤭🤭🤭
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
310
Sick society…
Man pillaiyoda irunthu unmarried woman ah kalyanam panna ondumilla…
Adhuve woman na thappa pesuwanga 😏😏😫
 
Top