Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட...24.1

  • Thread Author
அத்தியாயம்….24…1

ஸ்ருதிகா ஸ்ரீ ஒரு வித தயக்கத்துடன் தான் மெத்தையில் இருந்த குழந்தைகளை காட்டி பேசியது..

ஆனால் தன் கேள்விக்கு பதில் சொல்லாது சட்டென்று தன்னை தூக்கியதுமே கொஞ்சம் பயந்து போனவளாக தான் சாண்டில்யன் கழுத்தை சுற்றி தன் கைகளை வளையமாக மாற்றி கொண்டாள்… பின் அதிர்ந்து கணவன் முகத்தையும் பார்த்தவள் பின் குழந்தைகளையும் ஒரு வித அச்சத்துடன் பார்த்தாள்..

இவை அனைத்தையுமே பார்த்த சாண்டில்யன்.. “ பேங்கிங்க தூங்கிட்டாங்க டா..” என்று சொன்னவன் பின் ஒவ்வொரு அடியை பால்கனியை நோக்கி அடி எடுத்து வைத்தவன்..

“எனக்கும் தெரியும் டா.. பேபிங்க முன் எப்படி நடந்துக்கனும்…” என்று சொன்ன கணவனின் பேச்சில்.

“ அய்யோ நான் உங்களை தப்பா எல்லாம் நினைக்கல….” என்று பதறி பதில் அளித்தவனிடம் சாண்டில்யன்..

“ம் தப்பு ஆச்சே… என்னை நீ தப்பா தான் நினைக்கனும்… டா.. அதுவும் இன்னைக்கு நமக்கு என்ன ஆனா நாள்.. இன்னைக்கு எல்லாம் நீயும் நானுமே தப்பு தப்பா தான் நினைக்கனும்… ஆனா பேபிங்க முன்னாடி இல்ல.. அதுக்கு தான் நமக்கான இடம் இருக்கே.. இருபது வயசுல இருந்தே… இந்த இடம் இதற்க்காக தான் காத்துட்டு இருக்க டா…” என்று சொல்லி கொண்டே மூடி இருந்த பால் கனியை திறந்தான்..

இத்தனை பேச்சுக்களும் சாண்டில்யன் கைக்குள் ஸ்ருதிகா ஸ்ரீ இருந்த வண்ணம் தான் பேசியது.

அதே கோலத்திலேயே பால்கனியா…? என்று சாதாரணமாக… தான் பார்த்த பால்கனி போல இருக்கும் என்று நினைத்து தான் கணவன் பால் கனி என்று சொன்ன கதவு திறந்த போது பார்த்தாள்..

ஆனால் அவள் பார்த்த நொடி.. அவள் கண்களில் அப்படி ஒரு வியப்பு… ஆச்சரியம் , மகிழ்ச்சி என்று அனைத்தும் கலந்த பாவனையில் பார்த்தவள் அதே பாவனை மாறாது தன் கணவனை பார்த்தாள் பெண்ணவள்..

பெண்ணவள் கணவனை பார்த்த போது சாண்டில்யன் மனைவியின் முகத்தையே தான் ஆசையுடன் பார்த்திருந்தான்.

இதை இதை தானே சாண்டில்யன் எதிர் பார்த்தது.. பார்த்து பார்த்து பழகிய.. இன்னும் கேட்டால் இது இப்படியாக தான் இருக்க வேண்டும் என்று அவனே திட்டம் இட்டு கட்டிய அவன் அறையில் பால்கனி… அதில் இருந்த தோட்டம். அதன் வடிவம்.. எப்படி எது போல எந்த எந்த செடி கொடி இருக்க வேண்டும்.. என்று தோட்ட கலை கலைஞவை வர வழைத்து செய்த அவனே..

தன் அறையில் பால் கனியை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அவன் கண்கள் வியப்பில் விரியும் .. ஆனால் அதே சமயம்.. இந்த தோட்டத்தை நான் எதற்க்காக இப்படியாக வடிவமைத்தேன் என்று நினைவு வரும் போது வியந்த முகம் அதற்க்கு எதிர் பதமாக வாடி விடும்…

ஆம் அந்த பால்கனி ஊட்டி கோடைக்கானல் போல் குளுமையாக பச்சேல் என்று புல் வெளிகளும்… அனைத்து பூக்களும் கலந்த வண்ணமயமாக காட்சி அளித்தது..

இதில் என்ன ஆச்சரியம் என்றால் தொட்டியில் எல்லாம் வைக்காது… அந்த பால்கனியில் மண்… கொட்டு சுற்றியிலும் அனைத்து ரோஜாக்கள் அனைத்து வண்ண நிறத்தில் இருந்தது என்றால் நான்கு மூலையில் இரண்டு பக்க மூலையில் குண்டு மல்லியும்.. மற்ற இரண்டு பக்க மூலையில் ஜாதி மல்லியும்… நட்டு அது ஒன்றாக நடுவில் கூடாரமாக பந்தல் போல கொடியை படர விட்டு.. அது ஒரு அறை போலவே இருந்தது.. அதுவும் அத்தனை அடர்த்தியாக..

அப்படி செய்தது.. தன் அன்னை தந்தை வாழும் காதல் வாழ்க்கையை பார்த்து வளர்ந்தவன் மனதில் அவன் விடலை பருவ வயதிலேயே.. அத்தனை அத்தனை ஆசைகள் கொட்டி கிடந்தன. அதற்க்கு உரம் சேர்ப்பது போல. அவனின் அன்னை அவனின் இருபதாவது வயதில் இருந்தே குழந்தைகள் பற்றி பேச. அவனின் கனவுகள் இன்னுமே விரிந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இது போலாம ஆசைகளில் அவனின் படிப்பு பாதிக்கவில்லை.. அதே போல் மற்ற பெண்களை தவறான கண்ணோட்டத்தில் அவன் பார்த்தது இல்லை..

தன் மொத்த ஆசையையும் காதலையும் காமத்தையுமே தனக்கு வரும் மனைவியிடம் கொட்டி தீர்க்க வேண்டும்…

சாண்டில்யன் ஒரு கலா ரசிகன்… சாப்பிடும் உணவு ஆகட்டும் அவன் இருக்கும் இடம் ஆகட்டும் என்று அனைத்திலுமே ஒரு அழகு இருக்கும்..

ஏன் அவன் கேட்கும் பாடல்.. இப்படிப்பட்டவன் தன் மனைவியோடு வாழும் அந்த வாழ்க்கையை பற்றி எத்தனை ரசனையாக யோசித்து இருப்பான்.

இந்த தோட்டம் அமைக்கும் போது அவனின் வயது இருபத்தி மூன்று.. அப்போது அவனின் அப்பா அம்மா இருந்தனர்.

இந்த தோட்டத்தை வடிவமைத்த பின் தன் பெற்றோர்களிடம். “இங்கு தான் ம்மா என் தேன் நிலவு.” என்று கூட அந்த வயதிலேயே சொல்லி இருக்கிறான்.

அவனின் அம்மா கூட.. “ ஏன்டா வீட்டில் கீழே அம்மா அப்பாவை வைத்து கொண்டி.. நீ தேன் நிலவு கொண்டாடுவீயாடா… கஞ்சப்பினாரி.. வெளி நாட்டுக்கு கூட்டிட்டு போகலேன்னாலும்.. ஊட்டி கொடைக்கானல் இது போலாவது கூட்டிட்டு போகனும் டா…” என்று சொல்லி கிண்டல் கூட செய்து இருக்கிறார்..

அதன் பின் அவர்கள் இறந்து இவன் மட்டுமே தனித்து வந்த நாட்கள்.. என்று நினைத்து கொண்டு இருந்தவன் தன் கையில் இருந்து கொண்டே இன்னுமே ஆச்சரியத்துடன் தன் பால்கனி தோட்டத்தை பார்த்து கொண்டு இருந்தவளை பார்த்தவனுக்கு அவன் தேகம் முழுவதுமே சிலிர்த்தது.

தாங்குவாளா. என்ற எண்ணமும் கூடவே அவனுக்கு எழுந்தது… அத்தனை வேட்கை அவன் மனதில் கொட்டி கிடந்தது..

சாண்டியல் தன் மனைவியை தூக்கிய வண்ணமே கூடாரம் போல் இருக்கும் அந்த மல்லிகை பூ பந்தலின் உள் நுழைந்தாள்..

இன்னுமே ஆச்சரியம் படும்படி… அங்கு ஒரு மர ஊஞ்சல்… அந்த மர ஊஞ்சலை தாங்கும் சங்கிலியை சுற்றிலுமே மல்லிகை கொடி பிணைந்து அதை பார்க்க பார்க்க ஸ்ருதிகா ஸ்ரீயின் மனம் ஏதோ ஒரு புது உலகத்திற்க்குள் நுழைந்தது போலான உணர்வு அவளுக்குள்..

அது கொடுத்த தாக்கத்தில் தன் ஒற்றை விரலை அவன் உதட்டின் மீது வைத்தவள் பின் அந்த விரலை தன் உதட்டின் மீது வைத்து கொண்டாள்…

இதை இதை தானே ஆணவன் எதிர் பார்த்தது.. பெண்ணவள் விரலால் செய்தவன் ஆணவன் தன் உதட்டை கொண்டு செயலில் காட்ட…பெண்ணவள் கண் மூடிக் கொண்டாள்.. அந்த முத்தம் கொடுத்த தாக்குதலே.. அவளை ஏதோ இன்னுமே மாய உலகத்திற்க்குள் அழைத்து செல்வது போல இருந்தது…

“கண்ணை திறந்து என்னை பார் டா…” என்று சொல்ல. மெல்ல மெல்ல கண்ணை திறந்தவளின் கன்னம் மட்டும் அல்லாது அவளின் உதடுமே சிவந்து போய் இருந்தது… ஆணவன் செய்த செயலின் பலனாக.

பார்த்தவளின் கண்களுக்கு கணவன் நின்று கொண்டு இல்லாது ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு இருக்க, அவன் மடி மீது தான் அமர்ந்து கொண்டு இருப்பதை தான் அவள் உணர்ந்தாள்..

கணவன் எப்போது ஊஞ்சலில் அமர்ந்தான்.. தன்னை எப்போது அவனின் மடி மீது கிடத்திக் கொண்டான் என்பதே தெரியாத அளவுக்கு அவளுக்கு முத்தத்தில் மூழ்கடித்தவன். பின் மொத்தமாக அவளுக்குள் புகுந்து. தன்னை மட்டும் அல்லாது அவளையுமே மறக்கடித்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

அனைத்துமே நடந்தது அந்த ஊஞ்சலில் தான். அத்தனை பெரிய மர ஊஞ்சல் அது.. முதலில் மடி மீது வைத்து கொண்டு இருந்தவன். அந்த மர பலகையில் அவளை படுக்க வைக்கும் போதே… எதற்க்கு என்று உணர்ந்தவள்.

தயக்கமாக. “ எப்படி. எப்படி.?” என்று திக்கி திணறி கேட்டவளுக்கு வாய் வழி மூலமாக பதில் சொல்லாது எப்படி என்று செயல் வழி மூலமாக பதில் அளித்தான்..

அதுவும் ஒவ்வொரு படியாக முன்னேறும் போது அதற்க்கு அவன் விளக்கம் அளித்து கொண்டே அவன் செய்த செயல் அனைத்துமே… அவளுக்கு வெட்கத்தை தான் பரிசளித்தான்..

மோகத்தில் அனைத்து கட்டத்தையும் கடந்து… பின் அங்கு காமம் கொஞ்சம் குறைந்து காதல் முன் வந்து நிற்க… அவளின் நெற்றியில் முத்தம் இட்டு…

“என்ன டா…” என்று கணவன் கேட்ட கேள்விக்கு… பதிலாக ஆணவனுக்கு அவன் சொல்லி கொடுத்த விதத்திலேயே பதில் அளித்த பெண்ணவளின் முகமும் பரிபூரணமாக நிறைந்து இருந்தது.

அதுவும் இந்த சங்கமம் ஆனது இரண்டு பேரின் முகத்திலும் அத்தனை ஒரு திருப்தி பூரிப்பு மகிழ்ச்சி என்று கொட்டி கிடந்தது..

அது அந்த மல்லிகை பூ பந்தலில் இருக்கும் சிறு சிறு இடைவெளியில் மூலம் நிலவு கொடுத்த அந்த வெளிச்சத்தில் தெரிய. மீண்டுமே தன் மனைவியை கட்டி அணைக்கும் போது தான்..

இசையிடம் இருந்து . “ப்பா..” என்ற அழைப்பு..

அதில் ஆணவனின் மோகம் முற்றிலுமாக விடைப்பெற்று ஒரு தந்தையாக அவன் முகத்தில் பதற்றம் குடி கொண்டது..

அதில் சங்கிலியில் சுற்றி இருந்த தன் வேஷ்ட்டியை அவசரமாக இழுத்ததில் கொஞ்சம் கிழிந்தது தான்.

ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாது தன் இடையில் ஒரு சுற்றி சுற்றி கொண்டு இருப்பவனை .. அலங்க மலங்க பார்த்து கொண்டு இருந்தவளின் கன்னம் பற்றி.

“சாரி டா. பேபி கூப்பிடுறா. உன்னை எப்படி இங்கு தூக்கிட்டு வந்தேன்னோ.. அப்படியே தான் உன்னை தூக்கிட்டு ட்டு போகனும் என்று நினைத்தேன்.. ஆனா பேபி முழிச்சிட்டா போல.. சாரி டா “ என்று சொல்லி நெற்றியில் மீண்டும் ஒரு முத்தம் வைத்தவன்…

“நீ கொஞ்ச நேரம் கழித்து சரி படுத்திட்டு வா டா..” என்று சொன்னவனின் கண்கள் ஒரு முறை பெண்ணவளின் மேனியை வலம் வந்த பின் தான் அறைக்கு சென்றது..

அங்கு மீண்டுமே.. “ப்பா..” என்று அழைத்தவளின் பக்கம் வந்தவன்..

“என்ன டா..” என்று கேட்க..

தன் ஒரு விரல் காட்டி “ உச்சா..” என்று சொல்லவும். அங்கு இருந்த குளியல் அறைக்கு அழைத்து சென்று பின் மீண்டும் மெத்தைக்கு வந்து குழந்தையை படுக்க வைத்து விட்டு.. குழந்தையில் காலில் உள்ள ஈரத்தை தன் வேஷ்ட்டி கொண்டு துடைத்து கொண்டு இருந்த போது தான் பெண்ணவள் அறைக்கு வந்தது…

பெண்ணவள் அந்த அறைக்கு வந்த போது.. பழைய நினைவு வரவே கூடாது.. வந்தால் என்ன செய்வது என்று பயந்து கொண்டு வந்தவளுக்கு பழைய நினைவு துளி கூட வர விடாது பார்த்ததோடு இதோ… தன் குழந்தைகளின் தந்தை இவன் தான். இவன் மட்டும் தான் என்று கண்களில் காதல் மின்ன தன்னவனை பார்த்து கொண்டு இருந்தாள் பெண்ணவள்..


 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
188
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பால்கனி ன்னு பாத்தா இந்த பயபுள்ள ஒரு மல்லி முல்லை ரோசா தோட்டத்தையே போட்டு வச்சிருக்கு☺️☺️☺️🫣🫣🫣🫣🫣.
இந்த ரொம் பார்ட்டிக்கு நாம ஒரு சாங் போட்டுருவோம்.
 
Top