Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட...24.3

  • Thread Author
அத்தியாயம்…24.3

தம்பி மகன் அப்படி கேட்டதும்.. “ என் செல்லத்தை பிடிக்காதவங்க உண்டா… ரொம்ப பிடிக்குமே…” என்று சொல்லி தூக்கி கொண்டான்..

சாண்டில்யனுக்கு பொதுவாகவே குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.. அவனுக்கு குழந்தைகளின் மீதான இந்த பிடித்தம் அவனின் அம்மா குழந்தைகளை பற்றியே எப்போதும் பேசிக் கொண்டு இருந்ததினால் கூட உண்டாகி இருக்கலாம்..

ஆனால் அது என்னவோ தங்கை குழந்தைகளை விட தம்பி குழந்தை மீது கொஞ்சம் பாசம் அதிகம் உண்டாகியது…காரணம்.. வாசுவாக கூட இருக்கலாம்..

வாசு செய்த தவறுக்கு தான் சாண்டில்யன் அவனுக்கு தண்டனை கொடுத்தது.. அதுவும் ஸ்ருதிகா ஸ்ரீ காந்த் விவாகரத்து கிடைத்த அடுத்த வாரமே சந்தியா வாசு தேவ் விவாகரத்து கோர்ட்டில் வந்தது..

வாசு தேவ் நீதிமன்றம் என்று கூட பாராது நீதிபதியின் முன் நிலையிலேயே சந்தியாவை அத்தனை பேச்சு பேசி கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விட்டான்..

தாக்கவும் வந்தான்.. அதை பார்த்த நீதிபதி எந்த பேச்சும் பேசாது விவாகரத்து கொடுத்து விட்டார். இப்போது வாசு தேவ் மனநிலை காப்பகத்தில் இருக்கிறான்..

அதனால் இனி இந்த குழந்தை சமூகத்தில் எத்தனை எத்தனை பிரச்சனைகளை எல்லாம் சமாளிக்க வேண்டுமோ… இந்த குழந்தை செய்த பாவம் தான் என்ன..? ஏன் சந்தியா கூட என்ன பாவம் செய்தாள்.. தன்னை திருமணம் செய்கிறேன் என்று சொன்னது தப்பா….

வாசு தேவ் இத்தனையும் செய்தது.. தன் மீது இருக்கும் பொறாமையினால் தானே.. இந்த பிரச்சனையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது சந்தியாவும் அவள் குழந்தையும் தானே… அதனால் இவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைவும் அவனுக்குள் இருந்து கொண்டு தான் இருந்தது…

இதில் குழந்தையுமே என்னை பிடிக்காதா…? என்று கேட்டதில் உருகி விட்டான் தான்.

பின் குழந்தைகளோடு செயற்கை நீர் விழ்ச்சியில் ஆட்டம். சமையலம்மா செய்து வைத்த அசைவ உணவில் என்ன என்ன இருக்கிறதோ அனைத்தும் உணவில் இடம் பெற்று இருக்க. மதியம் ஒரு பிடி பிடித்து பின் மதியம் குழந்தைகள் கூடத்திலேயே படுத்து உறங்கி விட…

ஸ்ருதிகா ஸ்ரீயும் சாண்டில்யனுமே அங்கே படுத்து கொள்ள குணசேகரன் தான்..

“என்ன சாண்டில்யா இது.. போ ஸ்ருதிகாவை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ.. நானும் இங்கு வந்ததில் இருந்து பார்த்துட்டு தான் இருக்கேன்… நீயும் ஸ்ருதியும் தனியாவே இல்ல… நேத்து மேரஜ் ஆனவன் போலவா இருக்க…” என்று கேட்டவனிடம் சிரித்தவன்..

“ண்ணா நான் எங்களுக்கு உண்டான நேரத்தை எடுத்து கொள்வேன் ண்ணா… குழந்தைகள் கூட இருப்பது பிரச்சனை இல்ல..” என்று குணசேகரனிடம் சொன்னவன்

“நாம இங்கு தூங்குவதில் உனக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா டா…?” என்று அனைவரின் முன் நிலையிலும் கேட்டான்..

ஸ்ருதிகா ஸ்ரீ எதற்க்கு இதை கேட்கிறான் என்று பார்க்க. சாண்டில்யன் விளக்கமாக. குணசேகரன் சொன்னதை சொல்ல. அதற்க்கு குணசேகரன் அவனை முறைத்து பார்த்தான் என்றால்,

ஸ்ருதிகா ஸ்ரீக்கு ஒரு மாதிரி வெட்கமாக போய் விட்டது.. அதுவும் இது அவளுக்கு இரண்டாவது திருமணம்.. அதிலும் இரண்டு பெண் குழந்தைகளின் தாய்… இந்த பேச்சு அவளுக்கு அதிக கூச்சத்தை கொடுத்தது. தலை குனிந்து கொள்ள…அதை சாண்டில்யன் கவனித்தான்.

பின் தனிமை கிடைத்ததும் மனைவியிடம் என்ன என்று கேட்ட போது… ஸ்ருதிகா ஸ்ரீயும்..

“என்னவோ எனக்கு இது முதல் கல்யாணம் போல…” என்று சொன்னவளை முறைத்த சாண்டில்யன்..

பின்.. “ இனி இது போல பேச கூடாது டா. புரியுதா.. அப்படி பார்த்தா இப்போ எனக்கு முப்பத்தியெழு வயசு… என்னவோ சின்ன பையன் போல என்று நான் நினைக்கிறேன்னா.. உண்மையை சொல்லனும் என்றால் நீ என் பக்கத்தில் இருந்தா எனக்கு டீன் ஏஜ் போல தான் பீல் ஆகுது…” என்று சொன்னவனின் மார்பில் சாய்து கொண்டாள் ஸ்ருதிகா ஸ்ரீ..

அவளும் சொன்னாள்… “ எனக்குமே அப்படி தான் இருக்கு சாண்டில்யா..” என்று..

“அப்போ என்ன டா… அனுபவிப்போம்…” என்று சொன்னதற்க்கு ஏற்ப தான் அவர்கள் வாழ்வை அனுபவித்து வாழ்ந்தனர்.

சென்னையில் பாதி நாட்கள் இருந்தார்கள் என்றால், பிள்ளைகளுக்கு பள்ளிக்கு விடுமுறை கிடைத்தால் போதும் குழந்தைகளோடு ஊருக்கு வந்து விடுவான்..

அனைவரும் … “குழந்தைகள் எதற்க்கு…?” உங்களுக்கும் தனிமை தேவை தானே… அதுவும் இயல் இசை என்றால் கூட பரவாயில்லை…” என்று இப்படி யாராவது சொன்னால் ஸ்ருதிகா ஸ்ரீ முறைப்பாள்..

“அது என்ன இயல் இசை என்றால் பரவாயில்லை என்று… மத்தவங்களுமே குழந்தைகள் தானே அண்ணி… கூட்டிட்டு போனா எல்லோரையும் கூட்டிட்டு போகனும்.. இல்லை என்றால் யாரையும் இல்லை..” என்று சொன்ன போது குணசேகரன்.. முந்தி கொண்டு..

“அதை தான் நான் சொல்றேன் தனியா போங்க என்று… எங்கே கேட்கிறான் உன் புருஷன்…” என்று சொன்ன போது மட்டும் கணவனும் மனைவியும் ஒன்று போல் சிரித்து கொள்வார்கள்..

அதற்க்கும் குணசேகரன்.. “ நல்ல ஒத்துமை டா உங்களுக்கு…” என்று சொல்வான்..

ஆனால் குணசேகரன் பயப்படுவது போல இவர்களுக்கு தனிமை கிட்டாது எல்லாம் இல்லை.. குழந்தைகளோடு மனைவி விளையாடும் போது சேலையின் நடுவில் தெரியும் அந்த இடுப்பை லேசாக அவளை கடந்து செல்லும் போது அதை தொட்டு விட்டு செல்வதும்..

மனைவிக்கும் அது பிடித்தம் என்றாலும் கோபமாக இருப்பது போல கணவனை முறைத்து பார்ப்பதும்.

செயற்க்கை குளத்தில் குழந்தைகளுக்கு நீச்சல் சொல்லி கொடுக்கிறேன் என்று சொல்லி கொடுத்து கொடுக்கும் போது குழந்தைகள் சித்தி ம்மா அத்த.” என்று முறை வைத்து அழைத்து.

“நீங்களும் வாங்க..” என்று அழைக்கும் போது சாண்டில்யன் கள்வனாக.

“நான் இல்லேப்பா குழந்தைகள் தான் ஆசைப்படுகிறார்கள் ..” என்று சொல்லி விட்டு குழந்தைகள் ஆசைக்கு இவள் குளத்தில் இறங்கினால், மனைவிக்கு நீச்சல் கத்து கொடுக்கிறேன் என்று..

கதைக்கு டீசர் போல இரவு நடப்பதற்க்கு இது ஒத்திகை டா. குழந்தைகள் கவனம் தங்கள் மீது இல்லாது போது கணவனின் கைகள் தன் மீது அத்து மீறும் போது எல்லாம் முகம் சிவந்து ஒரு வித அவஸ்த்தையுடன் இருப்பவளை பார்ப்பதில் பூரித்து போய்.. என்று சாண்டில்யன் வாழ்க்கை பகலில் இப்படி இன்ப மயமாக ஆக்கி கொண்டான் என்றால் இரவில். பகலில் குழந்தைகள் போடும் ஆட்டத்தில் இரவு விரைவாக தூங்கி விட்ட பின்..

அதற்க்கு பின் இரவு முழுவதுமே அவர்கள் இருவர் வசமே… இருவருமே பால்கனிக்கு அடைக்கலம் அடைந்த பின்.. ஒருவருக்கு ஒருவர்… அடைக்கலமாகி. அந்த இரவை இன்னுமே இனிமை சேர்த்து கொண்டாடி தீர்த்து விடுவார்கள்..
ஸ்ரீ காந்த் இல்லம்.. அவன் அறையில் . அவன் மெத்தையில் ஆறு மாத குழந்தை தூங்கி கொண்டு இருந்தது.. குழந்தையின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு இருந்த ஸ்ரீ காந்த்.. தன் தலைக்கு டை அடித்து கொண்டு இருந்த இப்போதைய மனைவி பாவனாவையே வெறுமையாக பார்த்து கொண்டு இருந்தான்…

மனதிற்க்குள் கிளி மாதிரி பொண்டாட்டி தேவதையாக குழந்தைகள் என்று இருக்கும் போது.. உன் சபல புத்தியால் தானே மேல வந்து பெண் கிடைக்கிறதே என்று தொட்டுக்க நினைத்த. ஆனா உன் இந்த சபல புத்தியினால் சொர்க்கமான உன் வாழ்க்கை நரகம் ஆகிடுச்சி..

அதுவும் எது அழகு அழகு என்று நீ நினச்சிட்டு இருந்தியோ… அந்த அழகு இன்று சாயம் போய் பல்லு இளிச்சிட்டு நிற்குது பாரு… என்று மனதில் நினைத்து கொண்டே தலைக்கு டை அடித்து கொண்டு இருந்த தன் மனைவியையே பார்த்து கொண்டு இருந்தவனின் நினைவுகள் ஐந்து மாதத்திற்க்கு முன் சென்றது…

குழந்தை பிறந்து வீடு வந்து ஒரு மாதம் ஆன நிலை.. முதலில் எல்லாம் எந்த அளவுக்கு வீட்டில் வேலை செய்யாது இஸ்த்திரி செய்த சட்டை பேன்ட் போட்டு கொண்டு..

உணவை கையில் கொடுத்தால் சாப்பிட்டு விட்டு சென்றானோ.. இப்போது எல்லாம் முற்றிலும் அனைத்துமே மாறி போன நிலையில் தான் அப்போதே அவன் வாழ்க்கை இருந்தது..

வீட்டில் பிரச்சனை.. இதன் மூலம் அலுவலகத்திலும் வேலையில் கவனத்தை செலுத்த முடியாது அங்கும் பிரச்சனையாக இவனுக்கு பின் இருந்த ஒருவனுக்கு பிரமோஷம் கொடுக்கப்பட்டது..

அதுவும் ஸ்ருதிகா ஸ்ரீயை எதற்க்கு எல்லாம் காரணம் காட்டி திட்டினானோ.. இப்போது அவன் நிலையும் அப்படி தான் இருக்கிறது.

சரியாக தன்னை பராமரிக்காது முதலில் தன் வயதை விட சின்னவனாக தெரிந்தவன். இந்த ஒரு வருடத்தில் பார்ப்பதற்க்கு அவனின் வயதை விட அதிகமாக தெரிந்தான்.

தன் நிலை தான் இப்படி என்றால் பாவனா.. குழந்தை பிறந்த பின் வீடு வந்தவளை பார்த்த்து கொள்ள வேண்டி ஸ்ரீ காந்த் அலுவலக வேலையை வீட்டில் இருந்தே பார்த்து கொண்டு இருந்த போது தான் அவன் ஒன்றை கவனித்தது.

அது அவள் தலையில் வெள்ளை முடி அதிகமாக இருப்பதை பார்த்து விட்டு பாவம் கணவனாக கொஞ்சம் பதறி போய் தான்..

“பாவனா ( இப்போதூ எல்லாம் ப்யூட்டி என்ற அழைப்பு எல்லாம் இல்லை…) என்ன இது முடி வெள்ளையா இருக்கு.. குழந்தை பிறந்தா முடி கொட்டும் என்று தானே சொல்வாங்க. இது என்ன வெள்ளையா ஆகுது..” என்று கேட்டவனிடம்..

பாவனா பதறாது… “ இந்த டெலிவரி ஆஸ்பிட்டல் போனது… கொஞ்சம் உடம்பு டல்லா ஆனதில் இந்த ஒன் மந்தா டை அடிக்கல ஸ்ரீ…” என்ற பாவனாவின் பேச்சில் பாவம் நம் ஸ்ரீ காந்த் அதிர்ந்து தான் போய் விட்டான்.

தன் அதிர்ச்சியை அப்பட்டமாக காட்டியவனாக… “ என்ன டைய்யா.. என்ன பாவனா சொல்ற..?” என்று கேட்டதற்க்கு.

“என்ன புதுசா தெரியாதது போல கேட்குற. நான் என் முடிக்கு கலரிங்க பண்றது உங்களுக்கு தெரியும் தானே….”

பாவனாவின் முடி சில சமயம் செம்பட்டையாக இருக்கும். சில சமயம் அதை விட கொஞ்சம் அடர்ந்த நிறமாக கூட இருக்கும்…

அப்போது எல்லாம். “ ஸ்ரீ எனக்கு இந்த கலர் சூட் ஆகுதா..?” என்று கேட்ட போது.

“என் ப்யூட்டிக்கு எல்லா கலரும் சூட் ஆகும்.. ஏன்னா நீ தான் என் ப்யூட்டி ஆச்சே..” என்று கொஞ்சி இருக்கிறான்.

அது எல்லாம் நியாபகத்தில் வர. “ ம் தெரியும் தான்.. ஆனா அது கலரிங்க பாவனா. ஆனா இது.?” என்று கேட்டவனிடன் பாவனா கூலாக.

“இதுவும் கலர் தானே ஸ்ரீ ப்ளாக் கலர்… எனக்கு சின்ன வயசுலேயே முடி வெள்ளையா ஆகிடுச்சி ஸ்ரீ… என் டீன் ஏஜில் இருந்தே நான் டை அடிக்கிறேன்…” என்று சொன்னவளையே அன்றும் பார்த்தான்.. இதோ இன்றும் பார்த்து கொண்டு இருக்கிறான்..

இது என்ன டா.. உன் வாழ்க்கையில் இன்னுமே இருக்கு பாரு.. என்று.. குழந்தைக்கு தடுப்பூசி போட மருத்துவ மனைக்கு கணவன் மனைவியாக சென்ற போது,

பாவனாவுக்கு பிரசவம் பார்த்த டாக்டர்.. ஸ்ரீ காந்த பாவனாவிடம் கொஞ்சம் குழந்தையை பற்றி சில விசயங்கள் கேட்டவர்.. பின் குழந்தைகள் நல மருத்துவரை பார்க்க சொல்ல.இவர்களும் குழந்தை நல மருத்துவரை பார்த்தனர்..

அவர் பல பரிசோதனைகள் எழுதி கொடுக்க. அதில் கணவன் மனைவி இருவருமே பதறி தான் போய் விட்டனர்.

“என்ன டாக்டர்.. ஏன் சின்ன குழந்தைக்கு இத்தனை டெஸ்ட்.... ஏதாவது பிரச்சனையா…? என்று கேட்ட போது..

அதற்க்கு அந்த குழந்தை நல மருத்துவர்… “டெஸ்ட் ரிசல்ட் வந்தா தானே என்னாலுமே என்ன என்று சொல்ல முடியும்.. என்று சொன்னவர்.. பின் அனைத்து பரிசோதனை முடிவும் வந்த பின்..

அவர் கேட்ட முதல் கேள்வி.. “ உங்க வீட்டில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருக்கா….?” என்று கேட்டது தான்….
 
Well-known member
Joined
Mar 31, 2025
Messages
101
காந்தா😓😓😓 ......என்ன சொல்ல கர்மா தன் வேலையை செய்கிறது .....😢😢😢😢😢முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சொல்வது இதுதானோ
 
Top