Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட....24.4

  • Thread Author
அத்தியாயம்….24.4

அந்த மருத்துவர் கேட்ட கேள்விக்கு ஸ்ரீ காந்தினால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.. மனது திக் திக் என்று அடித்து கொண்டது.. காரணம் அவனுக்கு அடுத்து மருத்துவர் என்ன சொல்லுவார் என்பது ஒரளவுக்கு பிடிப்பட்டு விட்டது.. ஆனால் எந்த அளவுக்கு பாதிப்பு தெரியவில்லை…

இது போல பாதிப்பான குழந்தைகள் ஆண் என்ன.? பெண்… என்ன.. பாதிப்பு பாதிப்பு தான்.. ஆனால் பெண் குழந்தைகள் என்றால், பாதிப்பின் அதிகம் என்பதை விட அனைத்திலுமே இன்னுமே பாதுகாக்க வேண்டி உள்ளது..

சமீபத்தில் அண்ணன் குழந்தைக்கு ஏதோ உடல் நிலை சரியில்லை என்று வீட்டில் தானும் அண்ணனும் இல்லாத போது தெரிந்த ஆட்டோவை அழைத்து சென்று உள்ளனர்..

ஆனால் அந்த ஆட்டோ ஓட்டுனர் குழந்தையை தூக்கும் போதும் இறக்கும் போதும் குழந்தையின் மீது அவன் கை படிந்த விதம்.. அண்ணி மருத்துவமனையில் இருந்தே அண்ணனுக்கு பேசியில் அழைத்து விட..

அதில் ஒரு பிரச்சனை ஆனது.. அந்த ஆட்டோ ஓட்டுனர் அவ்வளவு திமிராக…

“கேளும்மா குழந்தையை கேளு.. நான் எங்கு கை வைத்தேன் என்று..” குழந்தைக்கு பத்து வயது ஆக போகிறது.. ஆனால் அந்த குழந்தை சொல்லும் நிலையில் இருந்தால், இவனின் உதவியை எல்லாம் கேட்டு இருந்து இருப்பேனா.. வீட்டில் வந்து அண்ணி அப்படி ஒரு அழுகை… கூட.. இப்போவே இது போல இன்னும் குழந்தை பெரியவள் ஆனா நான் என்ன செய்வேன்..

முன் எல்லாம் இது போல என்றால், இதுல குழந்தைக்கு பேட் கூட வைக்க தெரியாதே என்று தான் நினைப்பேன்…

ஆனா இப்போ.. இது போல எல்லாம் பிரச்சனை வந்தா…” என்று சொல்லி சொல்லி அண்ணி அழுத அழுகை எல்லாம் ஸ்ரீ காந்தின் நியாபகத்திற்க்கு வந்தது..

உண்மையில் ஸ்ரீ காந்த்துக்கு தான் வாழ்ந்த வாழ்க்கையின் நிதர்சனத்தை அன்று தான் உணர்ந்தான்.. கூடுதலாக தன் குழந்தைகள் இயல் இசையை ஸ்ருதிகா நன்றாக பார்த்து கொள்வாளா என்பதை விட. பாதுகாப்பாக பார்த்து கொள்வாளா என்ற பயம் தான் அவனுக்கு அதிகம் ஏற்பட்டது..

ஆனால் இன்று… இந்த குழந்தைக்கும்… ஆம் ஸ்ரீ காந்த் பாவனாவுக்கு பிறந்தது பெண் குழந்தை… அந்த குழந்தையை கையில் ஏந்தும் போது ஸ்ரீ காந்திக்கு முன் தன் இரு குழந்தைகளையும் கையில் ஏந்தியது தான் நியாபகத்திற்க்கு வந்தது..

ஆனால் வந்த நியாபகத்தை பகிர என்ன…? முகத்தில் கூட காட்ட முடியாத நிலையில் தான் அவன் நிலை இருந்தது.

காரணம் பாவனா… சொன்ன.. “இனி உங்களுக்கு ஒரு குழந்தை தான்.. இந்த குழந்தை இது தான் உங்க நியாபகம் மட்டும் தான் இருக்கனும்..” என்று சொன்னது தான்..

ஆனால் இனி… வாழ்க்கை முழுவதுமே இந்த பெண் குழந்தையிடம் தான் கணவனும் மனைவியும் கவனம் செலுத்தி ஆக வேண்டும் என்று தான் மருத்துவர் சொன்னது.

ஸ்ரீ காந்த்தினால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.. பெற்ற குழந்தையை கவனிக்காது காமத்தின் மோகத்தில் இருந்த தனக்கு இந்த தண்டனை தேவை தான் என்று அவன் இருந்தான்..

ஆனால் பாவனாவினால் அதை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை ..

“எப்படி எப்படி என் குழந்தைக்கு இப்படி…… இல்ல இல்ல நீங்க நல்லா பார்த்து சொல்லுங்க.. எனக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கு. அந்த குழந்தை நல்லா தான் இருக்கு.. இந்த குழந்தைக்கு மட்டும் எப்படி வந்தது…” என்று மருத்துவமனையிலேயே.. பாவனா ஒரு ஆட்டம் ஆடி தீர்த்து விட்டாள் என்று சொல்ல முடியாது..

ஏன் என்றால் வீட்டிற்க்கு வந்துமே அன்று மட்டும் அல்லாது தினம் தினம் இதை வைத்துமே வீட்டில் பிரச்சனை வந்தது…

ஒரு நாள் பாவனா ஸ்ரீ காந்திடம். “ நல்லா லூசு குடும்பத்தில் வந்து மாட்டிக்கிட்டேன்.. இங்கு பிறக்கும் குழந்தை எல்லாமே லூசா இருக்கு..” என்று சொன்னதும் கோகுல் பாவனாவை அடிக்க பாய்ந்து விட்டான்.. இடையில் ஸ்ரீ காந்த் வந்து தான் தடுத்து நிறுத்தியது…

அவன் மனைவியும் கூட “பார்த்து பேசு… புரியுதா..? என் குழந்தையை பத்தி இது போல பேச உனக்கு உரிமை இல்லை” என்று அவள் சொன்ன போது கூட பாவனா அடங்காது..

“லூச லூசு தானே சொல்ல முடியும்..” என்று விட்டாள்..

அவ்வளவு தான் இந்த முறை ஸ்ரீ காந்த் தடுத்தும் கோகுல் பாவனாவை அடித்து விட்டான்..

பின் என்ன.. குடும்பம் காவல் நிலையத்தில் போய் நின்று விட்டது.. ஆம் பாவனா கோகுல் தன்னை அடித்ததும் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டாள்..

அந்த வீட்டு பெரியவர்களுக்கோ.. போதும் இனி இருந்து என்ன என்ன எல்லாம் நாங்க பார்க்க வேண்டி இருக்கோ.. அழைத்து கொள்ளடா என்பது போலான நிலையில் தான் இருந்தனர்.

காவல் நிலையம் தான் பெண் ஒரு புகார் அளித்தால் போதுமே குடும்பத்தையே அழைத்து காவல் நிலையத்தில் வைத்து விட்டது..

ஆனால் அடித்த கோகுல் பயப்படவில்லை.. பேசியில் சாண்டில்யனை அழைத்தான் சிறிது நேரம் தான் கோகுல் சாண்டில்யனிடம் பேசியது..

பின் காவலர் முன்.. “ஆமாம் நான் அடித்தேன்…” தன் குழந்தையை காட்டி.. என் குழந்தையை தப்பா பேசினா.. நான் அடித்தேன்…” என்று சொன்னவனின் பேச்சில் அந்த காவலர் ஒரு நிமிடம் கோகுலை பார்த்தார்..

கோகுலின் தோற்றம் அவன் பேசியது.. அவன் மீது அந்த காவல் அதிகாரிக்கு மரியாதை தோற்றத்தை தான் அளித்தது.

கூட குழந்தை.. குழந்தையை பார்த்த போதே தெரிந்து விட்டது.. ஏதோ பிரச்சனை என்று..

அப்போது கூட.. “ இருந்தாலும் பெண் மீது.. அதுவும் தம்பி பெண்டாட்டியை அடிப்பிங்கலா…?” என்று கேட்டவருக்கு..

கோகுல்.. “ பெண்.. என்று ஆரம்பித்தவன்.. பின்.. “ பெண் கூட சொல்ல முடியாது சார்… இன்னொன்னு சொன்னிங்கலே.. தம்பி பெண்டாட்டி என்று.. என் தம்பிக்கு டைவஸ் ஆகிடுச்சி சார்…” என்றதும்..

அந்த காவலர்.. “அப்போ இந்த பெண்….” என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது கோகுல் … பாவனானின் கையில் இருந்த குழந்தையை சுட்டி காட்டி…. “ இந்த குழந்தைக்கு பத்து மாசம் ஆகுது… ஆனா என் தம்பிக்கு விவாகரத்து ஆகி நாளு மாசம் தான் ஆகுது..” என்று சொன்ன நொடி அந்த காவலர் பாவனாவை பார்த்த பார்வையில் அத்தனை மரியாதை இல்லை..

“போம்மா..போ… ஒரு குடும்பத்தை அழிச்சிட்டு நாம நல்லா இருந்துட முடியாது.. இதுல குழந்தைங்க தான் பாதிப்புக்கு ஆளாகுது..” பாவனாவின் குழந்தையில் நிலயையும் பேச்சில் தெரிந்து கொண்டவராக சொல்ல.

பின் என்ன மீண்டும் ஸ்ரீ காந்த் குடும்பம் வீட்டிற்க்கு வந்தது..

அனிதா தீர்த்து சொல்லி விட்டார்… “ இன்னைக்கு இதை வைத்து போலீஸ் ஸ்டேஷனில் என் புருஷனை நிற்க வெச்சவ. நாளைக்கு என் புருஷன் மீது ஆபாண்டமா வேறு ஒரு பழியை போட்டும் நிற்க வைக்க மாட்டா என்று என்ன நிச்சயம்.. அதோடு என் புருஷனை பத்தி எனக்கு தெரியும் தான்.. ஆனாலுமே இந்த வீட்டு ஆம்பிள்ளை புத்தியுமே நான் பார்த்துட்டேன்.. அதே போல கூட பழகிய பெண்ணுக்கே இது போல செய்தவளுக்கு நான் எல்லாம் எம்மாத்திரம்… அதனால நாங்க தனியா போறோம்…” என்று சொல்ல ஸ்ரீ காந்தின் தந்தை..

“இன்ன வரை கூட இந்த வீடு என் மேல தான் இருக்கு.. இந்த வீட்டில் யார் இருக்கனும் யார் இருக்க கூடாது என்று சொல்ல உரிமை இன்னுமே எனக்கு இருக்கு.” என்று பொதுவாக சொன்னவர்..

பின் ஸ்ரீ காந்திடம்… “ நீ அந்த பெண்ணை கூட்டிட்டு தனியா போயிடு டா…” என்று விட்டார்..

அவரால் இன்னுமே பாவனாவை ஸ்ரீ காந்தின் மனைவியாக ஏற்றுக் கொள்ள அவர் மனது இடம் தரவில்லை… அதனால் பாவனாவை யாரோ போல் பெண் என்று தான் கூறுவார்..

பாவனா அதற்க்குமே. “ அது எப்படி என் புருஷனுக்கும் இந்த வீட்டில் உரிமை இருக்கு.” என்று ஒரு பஞ்சாயத்தை வைத்தாள்..

அதற்க்குமே . அவர் ஒரே வார்த்தையில்… “ இது நான் சம்பாதித்த சொத்து.. இது என் மகனுக்கு…? என்ன ஊரில் போறவன் வரவனுக்கு எழுதி வைக்க கூட எனக்கு உரிமை இருக்கு.” என்று விட்டார்..

அடுத்து என்ன ஸ்ரீ காந்த் பாவனா தனியா செல்லும் படியான நிலை… இங்கு இருந்தாவாவது பாட்டி தாத்தாவை சிறிது நேரம் பார்த்து கொள்ளும் படி சொல்லலாம்.

தனியே சென்று விட்டதில் அனைத்திற்க்குமே ஆள் வைக்கும் படியான நிலை.. ஆள் வைத்தாலுமே சரியாக செய்கிறார்களா என்றும் எந்த நேரமும் அவர்களை பார்த்து கொள்ள வேண்டும்..

ஸ்ருதிகா ஸ்ரீயை எதை வைத்து பாவனா பொறாமை பட்டாளோ.. அது எல்லாம் ஒன்றுமே இல்லை என்ற நிதர்சனத்தை பாவனா உணர்ந்த போது.. அனைத்துமே அவளின் கை மீறி சென்று விட்டு இருந்தது…

ஸ்ரீ காந்துக்கு வீட்டு பிரச்சனையினால் அலுவலகத்தில் கவனத்தை சரியாக செலுத்த முடியாது போய் விட்டது.. இதில் அவன் வேலையிலும் தப்பு தவறுமாக வர.. முதல் இரண்டு முறை வான் செய்தவர்கள்.. மூன்றாம் முறை வீட்டிற்க்கு அனுப்பி விட்டார்கள்..

பின் செய்த வேலையை விட கீழ் படியான வேலை தான் அவனுக்கு கிடைத்தது… அதற்க்கும் கீழான வேலை என்றால், சம்பளமும் கீழாக தானே இருக்கும்..

மன பிரச்சனையோடு பணப்பிரச்சனையுமே ஸ்ரீ காந்த் கழுத்தை நெரித்தது… பாவனாவாலும் தன் ப்யூட்டி பார்லரை எடுத்து நடத்த முடியாது போய் விட…

வீட்டில் பணத்தை வைத்தும் பிரச்சனை நடந்தது.. என்ன தான் ஸ்ரீ காந்த் தப்பே செய்து இருந்தாலும் அவனின் தந்தை மகன் என்று செய்ய.. கோகுலோ . என்ன செய்வது கூட பிறந்து தொலைத்து விட்டான் என்று கோகுலும் பணம் உதவி செய்து வருகின்றனர்.

ஒரு சில சமயம் ஸ்ரீ காந்தின் அன்னை பவானி தான்.

“இந்த பெண். கொஞ்சம் பொறுத்து போய் இருக்கலாம்..” என்று ஸ்ருதிகா ஸ்ரீயை பற்றி சொல்வது உண்டு..

ஒரு சிலரின் மனநிலையை நம்மால் என்ன யாராலுமே மாற்ற முடியாது… ஆம்பிள்ளை அப்படி இப்படி தான் இருப்பார்கள்.. பொம்பளை தான் அனுசரித்து போக வேண்டும் என்று.

அதுவும் வீட்டு மருமகளுக்கு என்றால், இந்த கொள்கை தான் இந்திய அரசியல் சட்டம் என்பது போலவே பேச்சுக்கள் இருக்கும்.. இதில் பவானி மட்டும் விதி விலக்கா என்ன …?

கோகுல் தான்.. “ம்மா இன்னுமா ம்மா நீங்க திருந்தல.. நல்லா இருக்கும் பேத்தி இப்போ உங்க கிட்ட இல்ல. இருக்கும் பேத்திகளுமே…” என்று சொல்லி கொண்டு வந்தவன்.. பின் ஒரு வித வேதனையுடன்..

“வேண்டாம்மா. வேண்டாம்… முன் எனக்கு இது போல குழந்தை பிறந்த போது நான் என்ன பாவன்ம் செய்தேன் என்று நினைப்பேன் ம்மா.. ஆனா நம்ம வீட்டு பையன் செய்ய போகும் பாவத்துக்கு தான் எனக்கு முன்னவே இப்படி காண்பித்து இருக்கோ என்னவோ… இல்லேன்னா அவனுக்குமே இப்படி பட்ட குழந்தை பிறக்குமா…. போதும்மா.. போதும். அந்த பெண் ரொம்ப நல்ல மாதிரியா இருக்கா.. அந்த பெண் மனசுக்கு ஏத்த படி இருக்கட்டும்....” என்று விட்டான்..

கோகுல் சொன்னது போல் தான் ஸ்ருதிகா ஸ்ரீ அவள் மனதுக்கு ஏற்றப்படி மன நிறைவோடு இருந்தாள்.. இவளின் அம்மா இவள் கூட தான் இருக்கிறார்கள்..

இரண்டு மகன்களும், மருமகள்களும் ஸ்ருதிகா ஸ்ரீ வீட்டிற்க்கு வந்து … தன் அம்மாவிடம்.. “ இப்போ தான் ஸ்ருதிகா தனியா இல்லையேம்மா… வாங்க நம்ம வீட்டிற்க்கே.. என்ன தான் இருந்தாலும் மகள் வீட்டில் இருக்க கூடாது ம்மா..” என்று சொல்ல.

அங்கு இருந்த குணசேகரனோ தன் சகலையிடம்..

“ஆமாம் ஆமாம் மகள் கிட்ட அம்மா இருந்தா… இவங்க கிரிடம் தலை குப்புற விழுந்துடாது…. “ என்று சொன்னவன் பின்..

“சாண்டில்யா இப்போ அம்மாவை தங்கள் கூட வைத்து கொள்வது கூட ஒரு காரணத்துக்காக தான் … “ என்று சொன்னவனை சாண்டில்யன் கேள்வியாக பார்க்க.

குணசேகரன்.. “ ஆமாம் சாண்டில்யா. நம்ம அத்தம்மா பென்ஷன் பணமே கொஞ்சம் பெரிய தொகை தான் ப்பா. நம்ம மாமனார் ரெயில்வேயில் நல்ல பேஸ்ட்டிங்கில் தான் ரிட்டெட் ஆனது.. அதோட அந்த வீட்டு வாடகை கூட நம்ம மாமியார் பேங்குக்கு தான் வருது… கூட… அவங்க இரண்டு பேரு பெண்டாட்டியும் வேலைக்கு போறாங்க… வீட்டில் இருந்து குழந்தையை பார்த்துக்க ஒரு ஆள் தேவை… அதுக்கு தான் நம்ம தன் மானம் உள்ள மச்சானுங்க.. வந்து இங்கு கூவிட்டு இருக்காங்க..” என்று சொல்ல.

சாண்டியனுமே சிரித்து கொண்டே… “ பரவாயில்லை ண்ணா.. உங்களுக்கு எல்லா விசயமும் தெரியுது…” என்று கிண்டலாக பேசியதற்க்கு.. குணசேகரன்..

“ஆல் டிடையில்ஸ் ஐ நோ…” என்று பெருமை பட்டு கொண்டவன் பின் தன் காலரையும் தூக்கி விட்டு கொண்டான்…

சாண்டில்யனுமே சிரித்து கொண்டே… “ எல்லோர் வீட்டிலும் பொன் அடுப்பு இல்ல மண் அடுப்பு தானே…” என்று சொன்னவனின் தோளை தட்டிய குணசேகரன்..

“ஆமாம் சாண்டில்யா… முன்னாவது மாமியார் மருமகள் சண்டை போட்டாலுமே மகன்கள் கொஞ்சம் அப்பா மேல இல்லை என்றாலும் அம்மா மீது பாசமா இருப்பாங்க. அதுல பொண்டாட்டி கிட்ட… என் அம்மாவை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்க என்ற வார்த்தையாவது வரும்.

ஆனா இப்போ இருக்க பசங்க எல்லாம் ரொம்ப விவரமா தான் இருக்காங்கப்பா. அம்மாவை கூட வைத்து கொள்வது கூட காரணம் காரியத்தோடு தான் வைத்து கொள்கிறார்கள்… ஒன்னு அம்மாவால பணம் உதவி இருக்கனும் இல்ல.. உடல் உழைப்பால இருக்கனும். நம்ம மாமியாரால இது இரண்டும் கிடைக்கும் எனும் போது சும்மா விடுவாங்கலா என்ன…?

இதே நம்ம மாமியார் கிட்ட பணமும் இல்ல. அவங்களால வேலையும் செய்ய முடியாது என்றால், இரண்டு பிள்ளைங்க அடிச்சிப்பாங்க.. ஏன் இப்போ நான் மானஸ்த்தன் என்று பேசும் இந்த வாய் கூட. ஏன் அம்மாவை பசங்க தான் வெச்சிக்கனுமா… பெண்ணுங்க வைத்து கொள்ள கூடாதா.. என்று சட்டம் பேசுங்க…” என்று இது வரை தான் வயதாவனவர்களுக்காக வாதாடிய சில விசயங்களை பார்த்து குணசேகரன் இப்படி பேசினான் என்றால் சாண்டில்யன்.

“ஆமாம் ண்ணா.. இதுல பொண்டாட்டி நல்லா சம்பாதித்து கூட திறமையும் இருந்துட்டு பெண்டாட்டியால வீடு வாசல் என்று கட்டிட்டா போச்சு.. அப்பா அம்மாவை கூட விட்டுட்டு பொண்டாட்டி பின்னே போயிடுறாங்க.. அப்பா அம்மாவுக்கே இந்த நிலைன்னா.. கூட பிறந்தவங்க எல்லாம் இவங்க நியாபகத்தில் கூட இருக்காது…

எங்க அம்மா ஒரு பழ மொழி சொல்லுவாங்க ஒரு பிள்ளை பெத்தா உளியில் சோறு நாளு பிள்ளை பெத்த நடுத்தெருவில் சோறுன்னு… ஆனா இப்போ ஒரு பிள்ளை தான் எல்லோரும் பெத்துக்குறாங்க… ஆனாலுமே…” என்று அவன் வாதாடிய விசயங்களை வைத்து அவன் பேசினான்..

அந்த சமயத்தில் ஸ்ருதிகா ஸ்ரீயின் அன்னையான ஷண்முகமதி தன் மகன்களிடன் தீர்த்து சொல்லி விட்டார்.

“ஸ்ருதிகா ஸ்ரீ திரும்ப வேலைக்கு போகனும் என்று சொல்றா… மாப்பிள்ளை நம்ம வீட்டு பெண்ணுக்கு எல்லா வகையிலுமே துணை தான். ஆனாலுமே அவரும் கோர்ட்டுக்கு போகனும் தானே… பேத்திங்களை பார்த்துக்க நான் இங்கு இருக்கனும் என்று விட்டார்.

அவருக்கு சின்ன மகளும் இங்கு இருக்கிறாள்.. அதே போல் பெரிய மகளும் பக்கத்து தெருவில் உள்ளாள்… அவருக்கு மகன்களை விட இரண்டு மருமகன்களோடு இருப்பது தான் பிடித்து இருந்தது… அதனால் இப்படி சொல்லி விட்டார்.

அதை கேட்ட குணசேகரனோ தன் சகலையிடம் சம்மந்தம் இல்லாது…. “ புது துடப்பம் நல்லா தான் பெருக்கும்…” என்று சொன்னான்..

சாண்டில்யனுக்கோ.. தன் சகலை ஏன் இந்த வார்த்தையை சொல்கிறான் என்று புரியாது போனாலும்.. ஆனா ஏதோ வில்லங்கம்மா தான் சொல்கிறான் என்பது அவனுக்கு புரிந்து விட்டது..

அதனால் ஒன்றும் சொல்லாது தன் சகலையை பார்க்க.. சாண்டில்யன் நினைத்தது போல தான் குணசேகரன் தொடர்ந்து…

“நம்ம மாமியார் தன் மகளை திரும்ப வேலைக்கு அனுப்ப பார்க்கிறாங்க ஆனால் நீ புது துடப்பத்தை பழசா ஆகும் வரை வீட்டை பெருக்கோ பெருக்கோ என்று பெருக்குவதை பார்த்தா… அவங்க மகள் வேலைக்கு இல்ல இன்னொரு முறை டெலிவரிக்கு ஆஸ்பிட்டல் தான் போக போவது பாவம் நம்ம மாமியாருக்கு தெரியல.” என்று குணசேகரன் சொன்ன விநாடி… சாண்டில்யன் தன் சகலையை இறுக்கி அணைத்து கூட ஒரு உம்மாவும் கொடுத்தான்…

அதை பார்த்து அனைவரும் சிரிக்க அவர்களின் சிரிப்பை கூட்டும் வகையாக ஸ்ருதிகா ஸ்ரீ அங்கு இருக்கும் வாஷ்பேஷனுக்கு வாந்தி எடுக்க ஓட.

குணசேகரனோ… “ பரவாயில்லை சகல.. துடப்பம் தேயாமலேயே வீட்டை சுத்தம் செய்துட்ட ..” என்று சொன்னவனிடம் சாண்டில்யன்..

“நீங்க சொன்னது தான் சகல.. புது துடப்பம்… ஆனா…” என்று சொல்லி சாண்டில்யன் அவனை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்து வைக்க.

குணசேகரனோ… சாண்டில்யனை முறைக்காது தன் மனைவியை முறைத்தான்… எல்லாம் உன்னால தானே டி… என்று சொல்லி…

ஸ்ருதிகா ஸ்ரீக்கே தெரிந்து விட்டது.. தான் குழந்தை உண்டாகி இருக்கிறோம் என்று… முதலில் குழந்தை உண்டாகி பெற்ற பெண் தானே ஸ்ருதிகா ஸ்ரீ.

ஸ்ருதிகா ஸ்ரீக்கு இந்த குழந்தை பேறு முதல் முறை கிடையாது தான்.. ஆனால் சாண்டில்யனுக்கு ஒரு குழந்தை.. அதுவும் குழந்தை மீது அத்தனை பாசம் பிடித்தம் வைத்து இருப்பவனுக்கு தான் ஒரு குழந்தையை பெத்து கொடுக்க போகிறேன்… என்ற நினைப்பே ஸ்ருதிகா ஸ்ரீக்கு அத்தனை ஒரு மகிழ்வை தந்தது…

அந்த மகிழ்வோடு ஸ்ருதிகா ஸ்ரீ தன் கணவனை பார்த்தாள்.. சாண்டில்யனுமே அப்போது தன் மனைவியை தான் நிறைந்த மனதோடு பார்த்து கொண்டு இருந்தான்…

இன்னும் கேட்டால் அனைவருமே அந்த கூடத்தில் இருந்தனர் தான்.. இன்னும் தனிமை அவர்களுக்கு கிட்ட வில்லை..

ஆனாலுமே இத்தனை பேருடன் தங்கள் மகிழ்ச்சியை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்வதில், அவர்கள் மனதில் அத்தனை நிம்மதி.

பின் சுமதி மாளவிகா கலாவதி என்று ஒருவருக்கு ஒருவர் தங்களின் மகிழ்ச்சியை தெரிவிக்க.. அப்படி சந்தியாவுமே…

“ரொம்ப சந்தோஷம் அத்தான்..” என்று அவள் மன நிறைவோடு தான் வாழ்த்தியது.

ஆனால் சாண்டில்யனால் அந்த வாழ்த்தை மன நிறைவோடு ஏற்றுக் கொள்ள முடியவில்லை…

தனிமை எத்தனை கொடுமை என்பதை அவன் அனுபவித்தவன் ஆயிற்றே… அதுவும் இவளின் இந்த தனிமைக்கு தானும் ஒரு காரணம் ஆகி விட்டோம் என்றதில் இப்போதைய அவனின் இந்த மகிழ்ச்சியை அவனால் முழுமையால அனுபவிக்க முடியவில்லை.

அப்போது தான் ஒரு பைல் கொடுக்க சாண்டில்யனின் ஜூனியர் வேதநாயகம் அங்கு வந்தது..

வந்தவனின் பார்வை அதிகமாக சந்தியாவின் மீது விழுந்ததோ என்ற சந்தேகம் சாண்டில்யனுக்கு…






 
Top