Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட...24.5

  • Thread Author
அத்தியாயம்…24.5

சென்னையில் இருக்கும் ஒரு தரமான மகப்பேறு மருத்துவமனையில் தான் சாண்டில்யனும், ஸ்ருதிகா ஸ்ரீயும் அமர்ந்து இருந்தனர்…

ஸ்ருதிகா ஸ்ரீயோடு சாண்டில்யனின் முகத்தில் தான் அத்தனை பதட்டம்.. அதுவும் அந்த மருத்துவரை பார்க்க வந்த பெண்களின் அந்த பெரிய வயிற்றை வேறு பார்த்து பார்த்து .. அவனின் முகம் வேர்த்து போயின..

இதில் சாண்டில்யன் அந்த பெண்களை பார்த்த போது ஒரு பெண் வேறு… தன் வயிற்றை நன்றாக மூடிக் கொண்டு இவனை பார்த்து ஒரு முறைப்பு வேறு கொடுத்தது.

ஸ்ருதிகா ஸ்ரீ தான்.. “என்னங்க.. எனக்கு இது முதல் பிரசவம் போல இப்படி பண்றிங்க.. அதுவும் இன்னைக்கு நம்ம வந்து இருப்பது… கன்சீவா இருப்பதை உறுதி செய்ய தான்… இதுக்கே நீங்க ரொம்ப தான் பண்றிங்க…” என்று சொன்னவளிடம் சாண்டில்யன்.

“உனக்கு ஒன்னும் தெரியாது ஸ்ரீம்மா…” என்று விட்டான்..

அதற்க்கு ஸ்ருதிகா ஸ்ரீ சாண்டில்யனை ஒரு பார்வை பார்த்தவள் பின்..

“ஆமா ஆமா எனக்கு ஒன்னும் தெரியாது தான்… உங்களுக்கு தான் எல்லாமே தெரியும் ஆன்டி…” என்று சொல்ல..

இப்போது சாண்டில்யன் அனைத்தும் மறந்தவனாக. “என்னை அப்படி கூப்பிடாதே டி..” என்று சொன்னவன் அடுத்து என்ன சொல்லி இருப்பானோ…

அங்கு வந்த செவிலியர்.. “எத்தனை முறை மிஸஸ் ஸ்ருதிகா ஸ்ரீ சாண்டில்யன் யாரு யாரு என்று கூப்பிடுறது.. உங்க சண்டையை டாக்டர பார்த்துட்டு வந்து வெச்சிக்கோங்க…” என்று சத்தமாக சொன்னவர்..

பின் தனக்குள் ‘ சண்டை போட்டாலுமே இது எல்லாம் சரியா தான் நடக்கும் போல’ என்பதை மெல்ல தான் சொன்னார்..

அதுவும் இவள் முன் கொஞ்சம் தள்ளி சாண்டில்யனும் ஸ்ருதிகா ஸ்ரீயும் நடக்க தொடங்கிய பின் தான் அந்த செவிலியர் சொன்னது.

ஆனால் மனைவியின் கை பிடித்து முன் நடந்து சென்றவன்… இரண்டு அடி பின் எடுத்து வைக்க.

அப்போதே ஸ்ருதிகா ஸ்ரீ… “என்னங்க…” என்று சொல்லி முடிக்கும் முன் சாண்டில்யன் அந்த செவிலியரிடம்..

“நான் சண்டை போடுறதே… அது எல்லாம் நடக்க தானே…” என்று சொன்னதோடு கண் அடித்து விட்டும் செல்ல… அந்த செவிலியர் தான் வாயை மூடிக் கொள்ளும் படி ஆனது…

பின் வந்த வேலையான மருத்துவரை பார்க்க. அவர் முதலில் ஸ்ருதிகா ஸ்ரீயின் நாடி பிடித்து பார்த்து கொண்டே…

“எத்தனை நாள் தள்ளி போய் இருக்கு…?” என்ற கேள்வியை ஸ்ருதிகா ஸ்ரீயிடம் தான் கேட்டார்..

அதற்க்கு ஸ்ருதிகா பதில் அளிக்கும் முன்… “ எங்க டாக்டர் இவளுக்கு சரியா மந்திலி சர்க்குலர் இல்ல டாக்டர்… நான் கூட வா டாக்டரை பார்க்கலாம் என்று கூப்பிட்டேன்.. ஆனா பாருங்க எனக்கு சின்ன வயசுல இருந்தே இப்படி தான் என்று சொல்லிட்டா.. இப்போ பாருங்க. சாப்பிட முடியாது வாந்தி என்று எல்லாம் சிம்டம்சும் வந்த பின் தான் கிட் வாங்கி பார்த்தது… குழந்தை என்று தெரியாது குழந்தைக்கு ஒத்து கொள்ளாததை எது எது சாப்பிட்டா வேறு தெரியல.” என்று அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டு போனான்.

மனைவியின் முறைப்பையும் அவன் கவனிக்கவில்லை… மருத்துவருக்கு உதவியாக வந்து நின்ற அந்த செவிலியரின் பார்வையையும் அவன் உணரவில்லை.. ஏன் மருத்துவர் இவரை வெளியே இருக்கட்டும் என்று மற்றோரு செவிலியரை அழைத்து சொன்னதையுமே இவன் கவனிக்கவில்லை.

பின் ஒரு வழியாக அந்த மருத்துவரிடம் ஒன்றும் பேச மாட்டேன் என்று சாண்டில்யன் உறுதி அளித்த பின் தான் அந்த மருத்துவர் அவனை அங்கு இருக்க வைத்தார்.

ஆனால் சொன்னது போல சாண்டில்யனால் பேசாது இருக்க முடியவில்லை.. காரணம் ஸ்ருதிகாவின் கை பற்றி பரிசோதனை செய்ததிலேயே அந்த மருத்துவரின் முகத்தில் அத்தனை முடிச்சுகள்..

பின் அங்கு இருந்த மறைவிடத்திற்க்கு ஸ்ருதிகாவை அழைத்து சென்று மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்த அந்த மருத்துவரின் முகத்தில் இருந்து அந்த முடிச்சுக்கள் அதிகம் ஆயினவே தவிர குறையவில்லை..

அதுவும் தன் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த செவிலியரிடம்.. கட கட என்று தன் முன் இருந்த சீட்டில் ஏதோ எழுதியவர்..

“இவங்களை உடனே அழச்சிட்டு போய்.. நான் எழுதி கொடுத்து இருக்கும் அத்தனை டெஸ்ட்டும் எடுத்துடுங்க. ரிசல்ட் சீக்கிரம் வேண்டும் என்று நான் சொன்னதா சொல்லுங்க…” என்று அந்த மருத்துவர் சொல்லி கொண்டு இருக்க..

ஸ்ருதிகா ஸ்ரீக்கே ஒன்றும் புரியவில்லை எனும் போது நம் சாண்டில்யனின் நிலை சொல்லவும் வேண்டுமோ. ..

அதனால் தான் பேச மாட்டேன் என்று தன் வாக்குறுதியை மறந்து…. “டாக்டர் ஏதாவது பிரச்சனையா.?” என்று பதட்டத்துடன் கேட்டான்..

“மிஸ்டர் நீங்க படிச்சவங்க தானே..” என்று அந்த மருத்துவர் ஆரம்பிக்கும் போதே…

சாண்டில்யன்.. “ஐயம் லாயர்…” என்று சொன்னான்..

அதற்க்கு அந்த மருத்துவர்… “ ஆமாம் நீங்க லாயர் தான் .. ஆனா பாருங்க இது கோர்ட் கிடையாது… ஆஸ்பிட்டல் அதனால டாக்டரா இருக்கும் நான் தான் இங்கு பேசனும்…” என்று அழுத்தமாக சொன்னதற்க்கு நம் சாண்டில்யன்..

“அது தான் டாக்டர்.. பேசுங்க.. எங்க கிட்ட.” என்று அவன் சொல்லும் போதே ஸ்ருதிகா ஸ்ரீ கணவனின் கை பிடித்து தடுத்து நிறுத்த சாண்டில்யன் அமைதியாக வெளிப்பார்வைக்கு இருந்தான்.

ஆனால் தன் மனைவியை அழைத்து சென்று நீண்ட நேரம் கழித்து தான் திரும்ப தாங்கள் பார்க்க வந்த மருத்துவரை பார்க்கும் வரை சாண்டில்யன் அமைதி இழந்து தான் போனான்…

மீண்டுமே அந்த மருத்துவர் முன் வந்து இவர்கள் அமர்ந்த போது கூட அந்த மருத்துவர் சட்டென்று எதுவும் சொல்லி விடவில்லை..

ஒரு மருத்துவராக ஸ்ருதியை சோதனை செய்யும் போதே ஸ்ருதிகா ஸ்ரீக்கு இது முதல் குழந்தை இல்லை என்பது தெரிந்து விட்டது..

அதனால்… “பஸ்ட் குழந்தை ஆணா பெண்ணா..? என்று தான் கேள்வி எழுப்பினார்.

“இரண்டு பெண் குழந்தைகள் டாக்டர். சாண்டில்யன் தான் இதை சொன்னது.

ஆனால் இந்த முறை அந்த மருத்துவர் சாண்டில்யனை முறைக்க எல்லாம் இல்லை….

“ஓ அவங்களும் ட்வீன்ஸா…?” என்று கேட்ட போது சாண்டில்யனின் முகத்திலும் ஸ்ருதிகா ஸ்ரீயின் முகத்திலும் சட்டென்று பல்பு எரிந்தது…

இருவரும் ஒரு சேர… “ டாக்டர் அப்போ இப்போவுமே ட்வீன்ஸா….” என்று கேட்டனர்..

சாண்டில்யன் அதையும் மீறி.. “ என்ன டாக்டர்… இது முதல்லயே எங்க கிட்ட சொல்லிட்டு டெஸ்ட் எடுத்து இருந்து இருக்கலாமே… நாங்க ரொம்ப பயந்துட்டோம்…” என்று சொன்னான்.. ஸ்ருதிகா ஸ்ரீ கூட அதை தான் நினைத்தாள்…

ஆனால் அந்த மருத்துவர்.. சொன்ன…? ட்வீன்ஸ் கிடையாது… ஐந்து.. ஐந்து குழந்தைகள் இருக்கிறது….” என்று சொன்னதுமே இருவருக்கும் ஒரு நிமிடம் பேச்சு வரவில்லை..

பின் ஸ்ருதிகா ஸ்ரீயின் முகம் தான் ஒரு மாதிரி பட படத்து போய் விட்டது.. ஆனால் சாண்டில்யனுக்கு அத்தனை மகிழ்ச்சி… ஆனாலுமே மனைவி தாங்குவாளா…? இதனால் மனைவிக்கு ஏதாவது பிரச்சனை வருமா…. ? என்ற பயத்தில் சாண்டில்யன் அந்த மருத்துவரிடம் மீண்டும் மீண்டும்..

“இதனால் தாய்க்கு எந்த பாதிப்பும் வராது தானே…? என்று கேட்டவனிடம் அந்த மருத்துவர்..

“கண்டிப்பா வராது… வர விட மாட்டோம்… சிசரின் தான்.. குழந்தைகளின் வளர்ச்சியை நாங்க… ரெகுலரா செக்கப் பண்ணுவோம்.. என்ன ஒன்னு மத்தவங்களை விட. இன்னுமே குழந்தைகளின் வளர்ச்சியை இன்னும் டீப்பா செக் பண்ணுவோம்.. அதுக்கு நீங்க அடிக்கடி இங்கு வர வேண்டி இருக்கும்….” என்று சொன்னதும் தான் சாண்டில்யனுக்கு நிம்மதி ஆனது…

ஆனால் ஸ்ருதிகா ஸ்ரீயின் முகம் அப்போது கூட தெளிவு இல்லாது போனதில் வீட்டிற்க்கு வந்த பின்..

“என்ன டா பயமா இருக்கா.. வேண்டும் என்றால் இந்த குழந்தை…” என்று ஸ சொல்லி கொண்டு இருந்த சாண்டில்யன் அடுத்து என்ன சொல்லி இருப்பானோ..

ஸ்ருதிகா ஸ்ரீ கணவன் வாய் மீது கை வைத்து. “ வேண்டாம் அப்படி சொல்லாதிங்க. அதுவும் நீங்க சொல்ல கூடாது சாண்டில்யா…” என்று சொன்ன ஸ்ருதிகா ஸ்ரீயின் குரலில் அத்தனை கண்டிப்பு…

“இல்லே டா… டாக்டர் சொன்னதுல இருந்து உன் முகமே ஒரு மாதிரி இருந்தது.. அதனால தான் நீ பயப்படுறியோ… ஏன்னா ஏற்கனவே ட்வீன்ஸ் என்றதினால் அப்போ ஏதாவது பெரிய பிரச்சனையை நீ சந்தித்து இருந்தா அது எனக்கு தெரியாது தானே..” இந்த பேச்சு எல்லாம் சாண்டில்யன் பார்த்து பார்த்து தான் பேசியது..

காரணம் இந்த பேச்சுக்கள் ஸ்ருதிகா ஸ்ரீயின் பழைய வாழ்க்கையோடு தொடர்புடையது. தான் பேசும் பேச்சு ஏதோ ஒரு வகையில் ஸ்ருதிகா ஸ்ரீயின் மனதை காயம் படுத்து விடுமோ என்ற பயம்…

ஆனாலுமே ஒரு சிலதை கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது அவனுக்கு, தனக்கு குழந்தை என்றால் எத்தனை பிடிக்கும் என்பது தன்னவளுக்கு தெரியும் தானே… அப்படி இருந்துமே அவள் முகம் பயத்தை காட்டுக்கிறது என்றால், முன் பிரசவத்தில் பெரிய பிரச்சனை ஏதாவது வந்ததோ..

அப்போதாவது இரண்டு.. ஆனால் இப்போது ஐந்து… வேண்டாம்.. வேண்டாவே வேண்டாம். என்று சாண்டில்யன் யோசனை செல்லும் போதே ஸ்ருதிகா ஸ்ரீ இன்னும் கணவனை யோசிக்க விடாது..

“இல்லேங்க ஐந்துமே பெண்ணா இருந்தா. அது தான்…” என்று மனைவி சொன்ன நொடி சாண்டியல்யன் முதலில் அடைந்தது அத்தனை ஆசுவாசத்தை தான்..

என்ன என்னவோ நினைத்து பயந்து போனவனுக்கு மனைவியின் இந்த பேச்சு.. முதலில் நிம்மதி கொடுத்த அதே நொடி கோபத்தையும் கொடுத்தது…

மனதில் கோபம் வந்தாலுமே அதை சாண்டில்யன் மனைவியிடம் முழுமையாக கூட காட்ட முடியவில்லை.. இப்போது இல்லை எப்போதுமே சாண்டில்யனுக்கு மனைவியிடம் காட்டும் முகமே வேறு தான்..

“நான் என்ன என்னவோ நினச்சி பயந்துட்டேன் தெரியுமா.?” என்று சொன்னவன் பின்.

“நமக்கு எத்தனை குழந்தை இருந்தாலுமே, என்னால் அவங்களை நல்ல முறையில் படித்து ஆளாக்க முடியும் .” என்று சொன்னவன்.

பின்.. “ உனக்கு இல்லையா.?” என்று கேட்ட நொடி பெண்ணவள்..

“அய்யோ… என்னங்க.” என்று தன் வாய் மீது கை வைத்து பெண்ணவள் தன் அதிர்ச்சியை வெளிப்படுத்த..

சாண்டில்யனுக்கு அப்போது தான் தங்களுக்கு குழந்தை வர போகிறது.. அதுவும் ஒன்று அல்ல இரண்டு அல்ல. ஐந்து… கடவுள் தன்னை இத்தனை ஆண்டுகள் தனிமையை கொடுத்ததிற்க்கு ஈடு செய்யும் வகையாக யாருக்கும் கொடுக்காத பாக்கியத்தை எனக்கு கொடுத்து இருக்கார்… ஆனா அதை முழுமையா அனுபவிக்க கூட முடியாது எனக்கு பயம் காணித்து விட்டியே…” என்று சொன்ன கணவனை இறுக்கி அணைத்து கொண்ட ஸ்ருதிகா ஸ்ரீ..

அவன் மார்பில் தன் முகத்தை பதித்தவள்…” இல்ல ஏற்கனவே இரண்டும் பெண் குழந்தை.. இதுவுமே எல்லாமே பெண்ணா இருந்தா…” என்று இழுத்து நிறுத்த..

“இருக்கட்டும் டா.. நம்ம வீடு முழுவதும் உன்னை மாதிரியே தேவதைங்கலா உலா வரட்டுமே….” என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்த பெண்ணவள்…

“ஏன் எனக்கும் ஆசை இருக்கும் தானே… உங்களை மாதிரி ஒரு பையன் வேண்டும் என்று….”

பெண்ணவள் இதை சொல்லி முடித்த நொடி சாண்டியனிடம் இருந்து அத்தனை சிரிப்பு…

பின்… “ம் இது தான் உன் கவலையா. அதுக்கு என்ன டா. ஐந்தும் பெண்ணா பிறந்தா.. அடுத்து முயற்ச்சி செய்யலாம் டா…. என்னை பொறுத்த வரை.. உன் உடம்புக்கு ஒன்னும் இல்ல.. நல்லா இருக்க. இது போதும்… உன்னை போல என்னை போல உன் அப்பா போல என் அப்பா அம்மா போல.. வசும்மா விசுப்பா போலவும்…” என்று கணவன் சொல்லி கொண்டே போக.

ஸ்ருதிகா ஸ்ரீ… “ போதும் போதும் லிஸ்ட் ரொம்ப லெந்தா போகுது….” என்று சொல்லியவளிடம் சாண்டில்யன்..

“உன் மீது இருக்கும் என் ஆசையுமே அத்தனை லெந்த் தான்டி…” என்று சொன்னவன் பின்.

“நாம நம்ம அறைக்கு வரும் போது பாவம் உன் அக்கா டாக்டர் என்ன சொன்னாங்க என்று கேட்க வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க போல. நாம பாட்டுக்கு அவங்க கிட்ட ஒன்னும் சொல்லாம வந்ததுக்கு அவங்க பயந்து இருப்பாங்க…

வா போய் சொல்லலாம் எல்லோர் கிட்டேயும்..” என்று சொல்லி சாண்டில்யன் மனைவியை அழைத்து கொண்டு கூடத்திற்க்கு வந்து பார்த்த போது…

கூடத்தில் முதலில் கலாவதி மட்டுமே இருந்தவள் இப்போதும் ஓட்டு மொத்த குடும்பமே அங்கு இருந்தனர்.. அதுவும் முகத்தில் ஒரு வித பதட்டத்தோடு….

ஆனால் இவனின் பாசம் மிகு சகலை மட்டுமே இவனை பார்த்து முறைத்து கொண்டு இருந்தான்…

இவனுமே நேராக குணசேகரன் பக்கத்தில் போய் நின்றவன்… “ என்ன ண்ணா.. என்ன என்னை இத்தனை பாசமா பார்க்கிறிங்க..” என்று கேட்டவன்.

அதோடு விடாது அவனின் கருப்பு நிற வக்கீல் அங்கியை காட்டி… “ என்ன ண்ணா. இதை கழட்டாது இருக்கிங்க…?” என்று கேட்டவன் மேலும்..

ஓ நீங்க வக்கீல் இல்லை என்று யாராவது கேட்டாங்கலா…? என்று வேறு கேட்டு வைத்தவன் அதோடு கூட விடாது தொடர்ந்து..

“நீங்க கவலை படாதிங்க ண்ணா. இந்த வீட்டு முன் உங்க அந்த வீட்டு முன் பெரிய எழுத்துல… உங்க பெயர்.. நீங்க படிச்ச படிப்பையும் சேர்த்து நேம் போர்ட் மாட்டி விட்டு விடலாம்…” என்று சொல்ல.

குணசேகரனுக்கோ… இவன் கிட்ட பேசி தான் ஜெயிக்க முடியாது என்று நினைத்த அந்த வக்கீல்..

எப்போதும் போல கணவன் மார்கள் செய்யும்.. அது தாங்க வெளியில் பேச முடியாத பேச்சை எல்லாம் தன் மனைவியிடம் தானே பேசுவார்கள்..

அது போல… “ நீ என்ன டி.. சொன்ன.. என் தங்கை முகமும்… என் மச்சினர் முகமும் சரியில்ல. நீங்க உடனே வாங்க என்று தானே சொன்ன.. நானும்… வாதாடி கொண்டு இருந்த கேசை வாய்த்தா கேட்டுட்டு ஓடி வந்தேன்.

ஆனா இவன் பாரு.. என்னை கிண்டல் செய்துட்டு இருக்கான்.. “ என்று மனைவியிடம் எகிற.

கலாவதியோ…. “ ஆமா என்னவோ இன்னைக்கு தான் நீங்க வாதாடும் கேசுக்கு புதுசா வாய்தா வாங்குவது போல பேச்ச பாருங்க. உங்க பிழைப்பே அந்த வாய்தாலா தான் போகுது….” பாவம் அந்த வக்கீலின் வாதம் தன் மனைவியிடம் கூட தோல்வியில் முடிய.

பாவம் நம் குணசேகரன் தான். “ நான் பாட்டுக்கு டெல்லியில் இருந்தேன்.. என்னை இங்கு வர வழைத்து.” என்று பாவம் அழுவது போல சென்று விட்டனின் தோள் மீது கை போட்ட சாண்டில்யன்..

“ண்ணா…” என்று இத்தனை நேரம் அத்தனை பேச்சு பேசிய சாண்டில்யன் பேச்சுக்கு அவனை முறைத்து கொண்டு இருந்த குணசேகரன்..

“ண்ணா…” இரண்டே இரண்டு வார்த்தைகள் கூட இல்லை எழுத்தை தான் சொன்னது..

குணசேகரனும்.. “ சாண்டில்யா…” என்று அழைத்தவன் அவன் மீது கை போட்டு கொள்ள…

“ண்ணா நீங்க திரும்ப பெரியப்பா ஆகிட்டிங்க….” என்று சொல்ல… இப்போது குணசேகரன் ஒன்றும் பேசவில்லை… காரணம் சாண்டில்யன் சொன்ன விதம் அப்படி..

குணசேகரன் நினைத்தது போல் தான்… “ ஐந்து ண்ணா…” என்று மெல்ல சாண்டியன் தன் சகலையின் காதில் சொல்ல..

அதை கேட்ட குணசேகரன் அப்படி ஒரு சிரிப்பு… “ இப்போ நான் ஒத்துக்கிறேன் டா.. புது துடப்பம் புது துடப்பம் தான்…” என்று சொன்னவன் பதிலுக்கு குணசேகரன்..

“நீயும் சித்தப்பா ஆக போகுற டா…” என்று இந்த பேச்சை குணசேகரன் சத்தமாக தான் சொன்னது.

சாண்டில்யன்.. “ண்ணா..” என்று திரும்பி குணசேகரனை பார்க்க… குணசேகரனும் கண் சிமிட்டியவன்..

“சென்னை வந்ததுக்கு ஏதோ இதிலாவது .. பரவாயில்லை.. ஆனா உன்ன போல பைவ் ஸ்டார் எல்லாம் இல்லே டா ராசா.. ஒத்த ரோசா தான்…”

குடும்பமே மகிழ்ச்சியோடு இருந்தது… சாண்டியனும் மகிழ்ச்சியோடு தான் இருந்தான். ஆனால் இடை இடையே அவன் முகம் சிறிது மாறியது.. அதுவும் குறிப்பாக…. சந்தியாவை பார்க்கும் போது மட்டும்..

இதை யார் கவனித்தார்களோ இல்லையோ அவனின் ஸ்ருதிகா ஸ்ரீ கவனித்தாள்.. கணவனின் முக மாற்றத்திற்க்கு உண்டான காரணமும் அவளுக்கு புரிந்தது தான்….

அன்று இரவு தனிமையில்… “ சந்தியா அக்கா இப்படி தனியா இருப்பது உங்களுக்கு வருத்தத்தை கொடுக்குது என்று எனக்கு புரியுது சாண்டில்யா…” என்று சொன்ன மனைவியின் கை பற்றி..

“எனக்கு அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தா தான் டா.. என் மனசு முழு நிம்மதி கிடைக்கும் …” என்று சொன்னவனிடம்..

“எனக்கு புரியுதுங்க… ஆனா ஒரு பெண்ணுக்கு முதல் கல்யாணத்தை விட இரண்டாம் கல்யாணத்துக்கு இன்னுமே ரொம்ப பார்க்கனும் .. அதுவும் ஒரு குழந்தை இருந்துட்டா. சந்தியாவோட அந்த குழந்தைக்கும் எதிர் காலத்தில் எந்த பிரச்சனையும் இல்லாது பார்க்கனும்… உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்….” என்று சொன்ன மனைவிக்கு ஆமாம் என்பது போல தலையாட்டினான்.. அவன் யோசனை முழுவதும் அவனின் ஜூனியர் வேதநாயகமே… அதனால் மனைவியின் பேச்சு கேட்டு கொண்டு இருந்தாலும் பதில் பெரியதாக் பேசவில்லை..

ஆனால் அடுத்து ஸ்ருதிகா ஸ்ரீ சொன்ன. “ எல்லோரும் உங்களை போலவே அடுத்தவங்க குழந்தையை தன் குழந்தையா பார்த்துப்பாங்க என்று சொல்ல முடியாது லே.” என்று சொன்ன நொடி…

இலகுவாக மெத்தையின் மீது சாய்ந்து அமர்ந்திருந்தவன் மனைவியின் இந்த பேச்சில் விருட்டென்று எழுந்து அமர்ந்து விட்டான்…

“ நீ குழந்தை உண்டாகி இருக்கே என்று பார்க்கிறேன் … இனி நீ என் குழந்தையை அடுத்தவங்க குழந்தை என்று சொன்னா வைத்து கொள்… குழந்தையை நான் வெச்சிட்டு உன்னை உன் அம்மா வீட்டிற்க்கு அனுப்பி விடுவேன்…” என்று கோபமாக எச்சரித்தான்.

ஒரு மனைவியாக ஸ்ருதிகா ஸ்ரீ.. கணவனின் இந்த பேச்சுக்கு ஒன்று கோபம் பட வேண்டும்.. இல்லை என்றால் அழுது இருக்க வேண்டும்..

ஆனால் ஸ்ருதிகா ஸ்ரீ.. சிரித்தாள்.. ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான சிரிப்பு அது.. மனம் முழுமையான நிம்மதி அடையும் போது தான் இது போலான சிரிப்பு முகத்தில் வரும்..

அதே மனநிறைவில் தான் ஸ்ருதிகா ஸ்ரீ இருந்தாள்… பின் இருக்காதா தன் குழந்தைக்காக தானே கணவனின் இந்த கோபம்.. தான் மனதில் தன் குழந்தை என்று நினைத்தது தெரிந்தால் கூட அம்மோய்.. என்று நினைத்தவளின் புன்னகை இன்னும் பெரியதாக.

மனைவியின் சிரிப்பை பார்த்தவன். “ நான் உன்னை திட்டிட்டு இருக்கேன் நீ சிரிக்கிற.” என்று சாண்டில்யன் கேட்ட போது கூட தன் சிரிப்பு மாறாது… கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள்..

சாண்டில்யனுமே சாய்ந்தவளின் தலை மீது தன் மோவாயை வைத்து கொண்டவனுக்கு மீண்டும் சந்தியா வேதநாயகம் நினைவு… தான் நினைத்தது நடந்தால்.. நன்றாக இருக்கும்..

கூட இந்த பேச்சை தான் பேசுவதோடு வேதா ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்.. ஒரு சமயம் அவன் சாதாரணமாக பார்த்து இருந்தால், தான் இது பற்றி பேசி பின் அது போல இல்லை என்று அவன் சொல்லி விட்டால், தன் வீட்டு பெண்ணை எந்த நிலையிலும் நாம் கீழ் இறக்கி விட கூடாது தானே..

அவன் சந்தியாவை இந்த வீட்டு பெண்ணாக தான் பார்த்தான்… அவன் பயந்ததிற்க்கும் வருந்தியதற்க்கும் அவசியமே இல்லை என்பது போல மறு நாள் விடியலிலேயே வேதநாயமும் அவனின் அன்னை. மூன்று அக்கா ஒரு தங்கை என்று குடும்பமாக இவன் வீடு தேடி வந்து விட்டனர்..

சந்தியா தான் அவர்களை வர வேற்று அமர வைத்தவள்… முதலில் வந்தவர்களுக்கு தண்ணீரை கொடுத்த பின்.. வேதநாயத்தை தான் சந்தியாவுக்கு தெரியும் தானே..

அதனால் சந்தியா அவனை பார்த்து தான்.. “ பெரிய அத்தான் ரூமுல தான் இருக்கார் இதோ கூப்பிடுறேன்…” என்று சொல்லி விட்டு சாண்டில்யனின் அறையின் முன் நின்று கதவை தட்ட.

சாண்டில்யன் தான் வந்து கதவை திறந்தது… அவன் என்ன விசயம் என்று கேட்கும் முன்பே சந்தியாவே.

“அத்தான் உங்க ஜூனியர் அவர் குடும்பத்தோட வந்து இருக்கார்.. நான் நினைக்கிறேன். அவருக்கு மேரஜ் போல அது தான் பத்திரிக்கை வைக்க வந்து இருக்கார் போல…” என்று விட்டு செல்ல.

கணவன் பின் வந்த ஸ்ருதிகா ஸ்ரீ காதிலும் சந்தியாவின் பேச்சு விழுந்தது.. அதில் தன் கணவனை சோகமாக பார்த்தாள்..

நேற்று இரவு முழுவதும் தூங்காது இருந்த கணவனிடம் என்ன விசயம்.. ஏன் இது போல இருக்கிங்க… சந்தியா விசயத்தை அவசரப்படாதிங்க.. இப்போவும் நான் சொல்றேன்.. சந்தியாவுக்கு பார்த்து தான் மாப்பிள்ளை தேடனும்..

நாம அவளுக்கு நல்லது செய்யிறேன் என்று திரும்ப அவளை பிரச்சனையில் மாட்டி விட கூடாது…” என்று சொன்ன மனைவியிடம் சாண்டியன்..

“அது தான் டா.. தெரியாதவனை பார்த்தா பிரச்சனை என்று தான் நம் வேதநாயகம்…” என்று சொன்னதுமே ஸ்ருதிகா ஸ்ரீ..

“அவருக்கு விருப்பமாங்க.” ஆவலாக தான் கேட்டது.

அதற்க்கு சாண்டில்யன் அவன் பார்த்ததை சொன்னான்… “ நீங்க நினத்தது மாதிரி நடந்தா நல்லா இருக்கும் சாண்டில்யா. உங்க கிட்ட அவர் எட்டு வருஷமா இருக்கார் லேங்க..” என்று கேட்டதற்க்கு ஆமாம் என்று தலையாட்டியவன்..

பின்.. “ நாளை அவன் கல்யாணம் விசயமா சும்மா மேலோட்டமா பேசி பார்க்கிறேன்… இது வரை நான் யார் கிட்டேயும் பர்சனல் விசயத்தை பேசியது கிடையாது..

அவனுக்கு மனசுல சந்தியா மீது விருப்பம் என்றால், கண்டிப்பா நான் இதை பேசினா புரிஞ்சிப்பான்… பிர்லியண்ட் தான்.. தன் விருப்பத்தை சொன்னாலும் சொல்லுவான்…” என்று சொல்லி தான் கணவன் தூங்கியது.

காலையில் கல்யாணம் என்று பத்திரிக்கை வைக்க வந்து இருக்கிறான் என்று சந்தியாவே வந்து சொன்னால், இருவருமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்..

பின் நாம நினைத்தால் மட்டும் போதுமா…? என்று நினைத்து கொண்டு தான் கணவன் மனைவியும் அங்கு சென்றது..

இவர்கள் இருவரும் செல்வதற்க்குள் சந்தியா அனைவருக்கும் காபியும் கொடுத்து விட்டாள்.. பின் இவர்கள் வந்ததும் சந்தியா அவள் அறைக்கு சென்று விட்டாள்.. தன் பையனை கவனிக்க…

வந்தவர்கள் அவர்கள் ஊர் உறவு முறை தன் நான்கு பெண்களை திருமணம் செய்த ஊர்.. வீட்டு மாப்பிள்ளை எங்கு எங்கு வேலை செய்கிறார்கள் என்று அனைத்து விசயத்தையும் வேதநாயகத்தின் அம்மா பேசிக் கொண்டு இருந்தார்.

என்ன இது ஒரு பத்திரிக்கை வைக்க இத்தனை பேரா என்று நினைத்தவன்.. சரி இங்கு சென்னைக்கு வேறு வேலையா வந்து இருக்கலாம்… வேதநாயகம் தன் மீது இருக்கும் மரியாதைக்கு அனைவரையும் அப்படியே இங்கு அழைத்து கொண்டு வந்து விட்டான் என்று நினைத்தவன்.

‘வேதநாயகத்தின் அம்மாவின் இந்த வள வல பேச்சில் என்ன இது வந்த விசயமான பத்திரிக்கை வைத்து விட்டு போக வேண்டியது தானே… என்னவோ இந்த வீட்டிற்க்கு பெண் கொடுக்க இல்ல பெண் எடுப்பது போல அவங்க குடும்ப விசயம் எல்லாம் பேசிட்டு இருக்காங்க என்று தான் நினைத்தான் சாண்டில்யன்.

என்ன தான் சரி பார்த்து கொள்ளலாம்.. சந்தியாவுக்கு வேறு மாப்பிள்ளை தேடலாம் என்று நினைத்தாலுமே, வேதநாயகம் என்றால் பயப்பட தேவையில்லை.. அதில் கொஞ்சம் நம்பிக்கையும் வைத்து விட்டான்..

அதனால் ஒரு மாதிரி மனநிலையில் தான் அவர்கள் பேச்சை வேண்டா வெறுப்பாக கேட்டு கொண்டு இருந்தது.

ஆனால் கடைசியாக வேதநாயகம் அம்மா சொன்ன..

“ எங்க வீட்டிற்க்கு வேதா தான் ஒரே பையன் தம்பி… உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் வேதாவுக்கு அப்பா இல்ல என்று.. அதனால என் நாளு பெண்ணுக்கும் நல்லது கெட்டது எல்லாமே வேதா தான் பார்த்துப்பான். இதுல உங்க வீட்டு பெண் தடுக்க கூடாது அம்புட்டு தான்…” என்று சொன்ன போது தான் சாண்டில்யனுக்கு இத்தனை நேரம் ஏன் அவர்கள் குடும்ப விவரம் அனைத்தையும் சொன்னார்கள் என்பதே புரிந்தது..

புரிந்த நொடி சாண்டில்யனின் முகத்தில் சட்டென்று பிரகாசம் ஆக. தன் மனைவியையும் பார்த்து கொண்டவன். வேதநாயகம் அம்மாவிடம் சாண்டில்யன் ஏதோ கூற வரும் முன் வேதநாயகம்..

“ம்மா நான் என்ன சொல்லி இங்கு கூப்பிட்டு வந்தேன்.. முதல்ல சார் அவங்க வீட்டு பெண்ணை எனக்கு கொடுக்குறார் என்று தெரியல.. இதுல நீங்க கண்டிஷன் வேறு போடுவீங்கலா…?” என்று அதட்டி கொண்டு இருந்தான்..

அதற்க்கு அந்த தாய்… “ என் மவனுக்கு என்ன குறை பெண் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல…” என்று அந்த தாய் மகனிடம் எகிறியவர்..

பின் சாண்டில்யனை பார்த்து… “ என்னப்பா நீ சொல்லுப்பா என் மவனுக்கு என்ன குறை… உங்க கிட்ட தானே இத்தனை வருஷமா இருக்கிறான்.. ஒரு குறை சொல்ல முடியுமா..? என்று வக்கீலின் அம்மா ஒரு வக்கீலிடம் தன் மகனுக்காக வாதாட.

சாண்டில்யனின் தலை.. தன்னால்.. “ இல்லை என்று ஆட.

இப்போது மகனிடம்.. “ பாரு தம்பியே நீ நல்ல பையன் என்று சொல்லுறார்.. உனக்கு பெண் கேட்டா கொடுக்க மாட்டேன் என்றா சொல்லுவாரு.” அந்த தாயின் வாதம் இதுவாக தான் இருந்தது.. என் மகனுக்கு என்ன குறை..? என்று.

வேதநாயகம் தான் சாண்டில்யனிடம்.. ஒரு மாதிரி குரலில்.

“ சார் சாரி சார்.. அம்மாவுக்கு எப்படி பேச என்று தெரியல ஆட்சுவலி.. இப்போ நாங்க வந்தது.. எனக்கு எனக்கு..” என்று ஒரு மாதிரியாக சந்தியாவின் பெயரை சொல்ல முடியாது இழுத்தான்.

காரணம் சந்தியாவை சட்டென்று தான் பெயர் சொல்லி குறிப்பிடுவது சரியா என்று தெரியவில்லை..

அதே சமயம் சாண்டில்யனின் தம்பியுடான உறவு முறை சொல்லி எக்ஸ் என்று சொல்லவும் பிடிக்கவில்லை.. அதனால் ஒரு மாதிரி இழுக்க..

இப்போதும் அவனின் தாய் தான். “ என்ன நீ அது இது என்று சந்தியா என்று சொல்லு.. நாளை கல்யாணம் பண்ணி பொண்டாட்டியா ஆன பின் கூட இப்படி தான் தயங்குவீயா என்ன…?” என்று கேட்டவர்…..

பின் சாண்டில்யனிடம்… “ தம்பி நேத்து போன் போட்டு பேசும் போது மவன் குரலில் வருத்தம் இருந்தது… அவன் என் வீட்டு குல சாமி பா.. ஆம்பிள்ளை பிள்ளை அதனால குல சாமீ என்று சொல்லலே.. உண்மையில் என் குடும்பத்தை காக்க வந்து சாமீ பா அவன்..

அவன் குரல் மாற்றம் எனக்கு தெரியாதா.. என்னப்பா என்று கேட்டேன்.. முதல்ல ஒன்னும் இல்லேன்னு தான் சொன்னான்.. ஆனா நான் விடாம கேட்கவும்.. உங்க வூட்டு பெண்ணை பத்தி எல்லாம் சொல்லி.. எனக்கு பிடிச்சி இருக்கும்மா.. ஆனா எனக்கு சார் கொடுப்பாரா தெரியல என்று சொன்னான்.. நான் அவன் கிட்ட ஒன்னும் சொல்லலே..

ராவோட ராவா என்று பொண்ணுங்களை கூட்டிட்டு விடியலில் வந்துட்டேன்.. வா டா பொண்ணு கேட்கலாம் என்று கூப்பிட்டா வர தயக்கம்.. இழுத்துட்டு வந்தேன்.. இப்போ பொண்ணு கேட்கவும் தயங்குனா எப்படி பா.. நீயே சொல்லுப்பா..” என்று அந்த கிராமத்து பெண்மணியின் வெள்ளந்தியான பேச்சில் சாண்டில்யனின் மனது இன்னுமே குளிர்ந்து தான் போய் விட்டது… இன்னும் ஆழமாக சந்தியாவை வேதநாயகத்திற்க்கு திருமணம் செய்து வைத்தால், அவள் வாழ்க்கை நல்ல முறையில் ஆகும் என்ற நம்பிக்கை வர..

இன்னுமே அந்த பெண்மணி…. “ உங்க அளவுக்கு வசதி இல்ல தம்பி… ஆனாலும் என் மவன் அவன் சம்பாத்தியத்தை அவன் உடன் பிறந்தவனுக்கு செய்வான்.. அதுக்கு என்று அவன் குடும்பத்தை பார்க்காது கொட்டி கொடுக்க சொல்லலே… என் பொண்ணுங்க மனசு சுணுக்கமா இருக்கும் போது தாய் வீட்டிற்க்கு என்று வந்தா.. வாய் நிறைய வாங்க அண்ணி என்று கூப்பிடனும்…

ஒரு இரண்டு நாளுக்கு முகம் காட்டாது பார்த்து அனுப்பனும்.. போகும் போது ஒரு வெத்தலை பாக்குல நூறு ரூபா கொடுத்தா கூட போதும் தம்பி.. என் பொண்ணுங்க… அதை புதையலா நினைப்பாங்க… ஏன்னா என் காலத்துக்கு அப்புறம் என் பொண்ணுங்களுக்கு தாய் வீடா இருப்பது அவன் தானுங்கலே…”

இந்த வார்த்தை சொல்லும் போது அந்த பெண்மணியின் கண்கள் கலங்கி விட்டது… எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த சாண்டில்யன் வேதா அம்மாவின் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டவன். அவர் கை பிடித்து கொண்டு..

“நீங்க கவலை பட கூடாதும்மா.. உங்க பொண்ணுக்கு ஒரு அண்ணன் இல்ல. நானுமே ஒரு அண்ணான இருப்பேன்.” என்று வாக்கு அளித்தவன் பின் அவர்களை வழி அனுப்பிய பின் தன் தாய் மாமா மாமியை அழைத்து வேதநாயகத்தை பற்றியும் அவர்கள் சந்தியாவை பெண் கேட்டு வந்ததை பற்றியும் கூறினான்..

அதை கேட்ட வசந்திக்கும் கணபதிக்குமே மகிழ்ச்சி தான்.. சாண்டில்யனின் கையை பிடித்து கொண்டவர்கள்..

“நல்ல படியா இது செய்து முடிச்சிடுப்பா…” என்று கூறினர்…

அப்போது சந்தியாவுமே அங்கு தான் இருந்தாள்… வேண்டாம் என்று எல்லாம் மறுத்து கூறவில்லை..

என்ன தான் சந்தியா வெளிப்பார்வைக்கு மகிழ்ச்சியாக இருந்தாலுமே, அனைவரும் குடும்பமாக இருக்கும் போது அவள் மனது கொஞ்சம் ஏங்கி தான் தவித்து போனது..

அதனால் சாண்டில்யனிடம் ஒன்றே ஒன்று மட்டும் தான் சொன்னது..

“உண்மையில் அவர் பிடித்து தானே கேட்டது அத்தான்.. ஏன்னே ஒரு முறை ஏமாந்தது போதும் அத்தான்..” என்று சொன்ன சந்தியாவின் தலையை தடவி கொடுத்த சாண்டில்யன்..

“பிடிச்சி கேட்டான் சந்தியா… அவனை எனக்கு நல்லா தெரியும் உன்னை நல்லா பார்த்துப்பான்…” என்று சொல்ல.

இதோ அடுத்த ஒரு வாரத்திலேயே மிக எளிமையாக வேதாவின் குலதெய்வ கோயிலில் சந்தியா வேதநாயகத்திற்க்கு திருமணம் முடிந்தது.


 
Well-known member
Joined
Mar 31, 2025
Messages
101
ஏன்பா சாண்டி விடாமுயற்சி விஸ்வரூப வெற்றிங்கிறது இதுதானாடா 😜😜😜😜😜.......திண்ணையில கிடந்த உனக்கு திடுக்கின யோகம் வரும் சொல்றது இதுதானா பா😆😆😆😆😆.....உனக்கு கடுமையான போட்டிக்கு குணாவ இறக்கிவிட்டு இருக்காங்க பாரு Writer ji அங்க நிக்கிறாங்க 😝😝😝😝😝Super da enjoy thambhu☺☺☺☺
 
Top