Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட....24...6 நிறைவு....

  • Thread Author
அத்தியாயம்….24.6

எபிலாக்…

எட்டு வருடங்கள் கடந்த நிலையில்…

“சாண்டில்யா நீ கொஞ்சம் அமைதியா உட்காரு.. ஏன் இப்படி டென்ஷனா இருக்க…?” என்று சொல்லி குண சேகரன் அங்கு இருந்த ஒரு இருக்கையில் சாண்டில்யனை வலுக்கட்டாயமாக அமர வைத்தான்..

ஆனால் அதன் பலன் ஒரு இரண்டு நொடி கூட நீடிக்கவில்லை… “ இந்த இடத்துல என்ன ஏசி வரல…” என்று தன் சட்டை காலரை மேல் நோக்கி விட்ட வாறே… அந்த ஓட்டலின் மேனஜரை அழைத்து விட்டான்..

“நான் உங்க ஓட்டலை புக் பண்ணும் போதே சொன்னேன் தானே… காசு பணம் கூட எக்ஸ்ற்றா வாங்கிக்க… ஆனா வசதி குறை ஒன்றும் இருக்க கூடாது என்று…”

என்ன விசயம் என்று சொல்லாது அந்த மேனஜரை சாண்டில்யன் தாளித்து கொட்ட. பாவம் என்னை யாராவது காப்பாத்துங்கலேன் என்று பார்த்தவனுக்கு ஆபத்துப்பாண்டவனாக… குணசேகரன் மீண்டும் அங்கு வந்தவன்..

சாண்டில்யனிடம்.. “ என்ன தான் டா வேண்டும் உனக்கு… உன் பெண்ணுங்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா இது… நாம குடும்பமா வீட்டிலேயே வைத்து கொள்ளலாம் என்று சொன்னேன்… ஆனா நீ கிராண்டா தான் வைப்பேன் என்று சொல்லிட்ட. சரி என்று ஒத்து கொண்டோம்..

ஆனா அதை வைத்து நீ செய்யிற அக்க போர் இருக்கே… தாளமுடியல டா… ஊரையே கூட்டிட்டிட்டு வந்துட்ட. சாப்பாட்டில் அத்தனை ரகம்… உன் பெண்ணுங்களுக்கு மேக்கப் போட.. இப்போ பீல்டுல இருக்குற பெண்ணையும் கூட்டிட்டு வந்துட்ட.. இதை வைத்து ஒரு மாசமா.. யாரையாவது நீ தூங்க விட்டியாடா..” என்று கேட்டான்..

ஆம் இன்று இயல் இசையில் மஞ்சள் நீராட்டு விழா.. அதை கொண்டு தான் சாண்டில்யன் இத்தனை ஆர்ப்பாட்டமும் செய்வது..

ஆனால் இதோ இப்போது கூட குணசேகரனின் பேச்சை காதில் வாங்காதவனாக.. மீண்டும் மேனஜரிடம்..

தன் கழுத்து பகுதியில் வந்த வியர்வை தொட்டு அவன் முன் காட்டி… “ இது என்னது இது என்னது.?” என்று கேட்டான்..

அதற்க்கு குணசேகரன் தான். “ ஏன்டா அது வியர்வை இதுக்கு ஏன்டா நீ அவரை நிற்க வெச்சிட்டு இருக்க…?” என்று கேட்க.

ஆனால் சாண்டில்யன் பார்வையோ… குணசேகரன் பக்கம் திரும்புவதாக இல்லை….

“அது தான் எனக்கு ஏன் வருது… இத்தனை ஏசி போட்டு இருக்கியே.. அது எல்லாம் நல்ல கண்டிஷனில் இருக்கா. சொல்.. சொல்..” என்று சாண்டில்யன் பாவம் அந்த ஓட்டல் மேனஜரை ஒரு வழி செய்து விட்டான்..

பின் குணசேகரன் தான் அதை எல்லாம் சமாளித்து பின் ஒரு வழியாக இயல் இசையை மேடையில் அமர வைத்து விழா ஆரம்பம் ஆனது..

பெண்கள் மேடையில் வந்து அமர்ந்த நொடி.. இத்தனை நேரம் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்த சாண்டில்யனின் பார்வை மேடைக்கு தாவியது.

அங்கு இயல் இசை இரு இருக்கையில் அமர வைத்து இருக்க.. இயல் இசை பின்.. பக்கம் அவனின் ஐந்து பெண் பிள்ளைகள்… ஏழு வயதை தொட்ட நிலையில் ஐந்து பெண்களும் ஒன்று போல ஒரே நிறத்தில் பட்டு பாவடை சட்டை அணிந்து கொண்டு தன் அக்காவின் பின் நின்று கொண்டனர்…

மேடை நிறைய தன் பெண்களே நிறைந்து இருக்க.. அதை பார்த்த சாண்டில்யன் மனது நிறைந்து போனாலும் ஏதோ ஒன்று குறைவது போல் இருக்க. மீண்டும் அவன் பார்வை ஒரு தேடலை தொடங்கியது..

அவன் தேடிய அவனின் பொக்கிஷம் ஸ்ருதிகா ஸ்ரீ தன் இடுப்பில் மூன்று வயது ஆண் மகனான வல்லபவனை தூக்கி வைத்து கொண்டு..

தன் அம்மா வைத்த வரிசை தட்டை அடுக்கி வைத்து கொண்டு இருந்தாள். அதில் அவள் ஒரே இடத்தில் நில்லாது மேடை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்க..

அதை பார்த்த கலாவதி.. “ ஒன்னும் அந்த குட்டியை என் இடுப்புக்கு மாத்தனும்.. இல்ல இதை எல்லாம் என் கிட்ட கொடுத்துட்டு நீ உட்காரனும்.. அதுவும் செய்யாம இதுவும் செய்யாம. என்ன டி.. நீயும் வர வர.. உன் வீட்டுக்காரர் போலவே அடம் ஆகிட்டு இருக்க போ….” என்று சத்தம் போட்ட அக்காவிடம்..

“இந்தா வந்தா வாங்கிக்க. எனக்கு என்ன வேண்டுதலா.. எந்த நேரமும் கங்காரு மாதிரி இந்த குட்டியை தூக்கிட்டு சுத்தனும் என்று…”

அந்த பேச்சை கேட்டுக் கொண்டே அந்த இடத்திற்க்கு வந்த சாண்டில்யன்..

“அப்போ வேண்டுதல் இல்லை என்று சொல்றியா….?” என்று ஒரு மாதிரி ஒரு மார்க்கமாக கேட்டு கொண்டே வந்த கணவனின் பார்வை பேச்சு எதுவும் சரியில்லை என்று.. அவளின் இத்தனை வருட திருமண வாழ்க்கை அவளுக்கு எடுத்து உரைக்க.

அதில் அந்த இடத்தை விட்டு தப்பிக்கும் பொருட்டு…. “ என்னங்க… சாப்பாடு எல்லாம் ரெடியா என்று போய் பாருங்க. இங்கு வேலை முடிந்தா அங்கு தான்.” என்று பட பட பொரிந்தவளின் தோள் பற்றி..

“அது எல்லாம் நான் பார்த்துட்டேன்…” என்று சொன்னவன் பின் தன் மகனை காண்பித்து..

“நான் கேட்டதுக்கு பதில் சொல்.. நம்ம மகன் உனக்கு வேண்டுத இல்லையா..?” நீ பதில் சொன்னால் தான் ஆச்சு… என்று நின்ற கணவனிடம்..

“ஆமாம் சாமீ.. ஆமாம் என் மகன் எனக்கு வேண்டுதல் வைத்து தான் பிறந்தான் போதுமா… நீங்க வேண்டாம் உங்க உடம்பு தாங்காது என்று சொல்லி கூட.. மேடையை காட்டி எல்லாமே என் ஜாடையா இருக்கே . உங்க ஜாடையில் உங்க மாதிரியே… ஒரு ஆம்பிள்ளை பிள்ளை வேண்டும் என்று வேண்டுதல் வைத்து தான் இவன் பிறந்தான்.

ஆனா எந்த நேரத்துக்கு நான் உங்களை போலவே கேட்டேனோ.. உங்களை போலவே இடுப்பில் இருந்து இறங்குவேணா என்று இருக்கான்…”

பாவம் நம் ஸ்ருதிகா ஸ்ரீ.. மகனின் அடமான.. கீழே இறங்குடா இல்ல யார் கிட்டவாவது இரு என்று சொன்னதை கேட்காது இருக்கும் வைத்து தான் உங்களை போல் என்று சொன்னது.

ஆனால் நம் சாண்டில்யனோ… “ என்ன டா நம்ம ரூமில் நடப்பதை இப்படி வெட்ட வெளிச்சமா பேசுற பாரு எனக்கு எப்படி ஷையா ஆவுது.” என்று சொன்னவனின் முதுகொல் ஒரு போடு போட்டான்.. அவனின் இந்த பேச்சை கேட்ட குணசேகரன்..

“ யாரு உனக்கு ஷைய்யா இருக்கு…. நாங்க தான்டா சமயத்துக்கு ஷைய்யா ஆகுறோம்… ஒரு சில சமயம். நீ குஜலா இருக்க பசங்களை எதாவது ஒரு வேலை கொடுத்து எங்க வீட்டிற்க்கு அனுப்பிடுற… சரி குழந்தைங்க வீட்டில் இருந்தா போர் அடிக்குமே என்று வெளியில் கூட்டிட்டு போனா… அவன் அவன் என்னை பார்க்கும் பார்வையில் நான் தான்டா ஷைய் ஆகி போறேன். போதும் டா. இனி இதுக்கு மேல நீ ஷை பட்டா நாடு தாங்குதோ இல்லையோ… நம்ம வீடு தாங்காதுடா…

உங்க அம்மா அந்த ஒத்த வார்த்தை சொல்லிட்டு போனாலும் போனாங்க. என் வீடே பெண் குழந்தையால நிறஞ்சி இருக்கனும் என்று… அதையே வெச்சிட்டு நீ பண்ற அட்டூஷியம் இருக்கே.. இனி தாங்காது..

முதல்ல நீ மேடை ஏறு.. பாரு உன் பொண்ணுங்க உன்னையே பார்த்துட்டு இருக்குறதை..” என்று குணசேகரன் சொன்ன நொடி…

காதல் மன்னன் ஆக இது வரை பேசிக் கொண்டு இருந்தவன்.. தந்தையானவனாக மாறி போய்… மனைவியின் பக்கம் பார்த்தவன்.

“வா டா குழந்தை நம்ம தேடுதுங்க பாரு.” என்று அழைக்க.

ஸ்ருதிகா ஸ்ரீயோ… “ நம்மளை தேடல உங்களை தான் தேடுதுங்க போங்க.” என்று சொல்ல.

ஒரு தந்தையாக சாண்டில்யனின் மனதில் ஒரு கர்வம்.. அது கொண்ட தாக்கத்தில்..

“ஆமாம் என் பொண்ணுங்க என்னை தான் தேடுவாங்க..” என்று முகவாயில் ஒரு இடி இடித்து சொல்ல.

“வாடி சும்மா..” என்று சொன்னவன் மனைவியின் கையில் இருந்த மகனை வாங்கி கொண்டடு மேடை ஏறியவன்.

தன் ஒட்டு மொத்த குடும்பத்தையும்.. வாங்க என்று அழைக்க… சுமதியின் குடும்பம் ..மாளவிகா குடும்பம்… சந்தியா வேதநாயகம்.. பெரிய மகன் சுபாஷ்… ஒரு பெண்… சுதா… மேடை ஏறினர்.. இவர்களே மேடையில் நிற்கும் போது நம் குணசேரனின் குடும்பம் அங்கு நில்லாது போகுமா என்ன.

அது என்னவோ ஸ்ருதிகா ஸ்ரீயின் அண்ணங்கல் உறவில் இருந்தாலும்.. கலாவதி போல் நெருக்கமாக இல்லை… குணசேகரன் அவர்களையும் அழைத்தான் தான்..

ஆனால் அவர்கள் பரவாயில்லை.. என்று சொன்னதும் சாண்டில்யனும் விட்டு விட்டான்.. இவர்கள் அனைவருக்கும் பெரியவராக ஸ்ருதிகா ஸ்ரீயின் அம்மா நடுநாயகமாக அமர்ந்திருக்க… அந்த போட்டோ கிராபருக்கு இவர்கள் அனைவரையும் வைத்து மொத்தமாக ஒரு புகைப்படம் எடுக்க அவர் தான் அல்லாடி போய் விட்டான்..

இயல் இசை விழா இனிதே முடிந்தது.. அனைவரையும் நிற்க வைத்து ஷண்முகமதி தான் சுற்றி போட்டது…. கள் அடி பட்டாலும் கண் அடி பட கூடாது என்று…

இயல் இசை தான் தந்தையின் இரு பக்கமும் கையை பிடித்து கொண்டு..

“ப்பா நீங்க என்ன சொன்னிங்க.. இந்த பங்கஷன் முடிந்தா ஊருக்கு கூட்டிட்டு போறேன் என்று சொன்னிங்க தானே…” என்று தந்தை வாக்கு கொடுத்ததை நியாபகம் படுத்த.

அந்த தந்தைக்கு எப்போதுமே தன் குழந்தைகளின் நியாபகம் தான். அப்படி இருக்க குழந்தைகள் ஆசைப்படுவதை நிறை வேற்றாது விட்டு விடுவானா என்ன..

ஓகே என்பது போல சைகை காட்டியவன் சொன்னது போல் அழைத்து சென்றான்.. அவன் சொந்தமாக வாங்கிய பஸ்ஸில்.

ஆமாம் பின் என்ன. அவனுக்கே எட்டு குழந்தைகள்.. இவனும் மனைவியும் சேர்த்து பத்து..

இதில் இவன் ஊர் வீட்டிற்க்கு போகிறோம் என்று சொன்னால் போதும் இவனின் மொத்த குடும்பமும் கிளம்பி நிற்கும்…

அப்படி இருக்க கார் வேன் எல்லாம் பத்துமா என்ன… அதனால் தான் புதியதாக பஸ் வாங்கி விட்டான்..

அன்று தான் எடுத்து இருந்தான்.. வெளியில் வந்து பார்த்த அனைவரும் என்ன டா இது என்று பார்க்க.

சாண்டில்யன் குடும்பமாக வெளியில் போவதே.. ஒன்றா சிரித்து பேசி செல்ல தான்.. ஆனா இடம் பத்தாது ஆள் ஆளுக்கு ஒரு கார் எடுத்துட்டு போவதுல என்ன சந்தோஷம்.. அதனால தான் பஸ் வாங்கிட்டேன் என்று சொன்னவன்..

“ தேவதைங்கலா ஏறுங்க என்று சொன்ன நொடி… அவன் குழந்தைகள் மட்டும் அல்லாது தம்பி தங்கை.. சகல என்று அனைத்து குழந்தைகளும் ஏறிய பின் தான் பெரியவர்கள் ஏறியது.

அங்கு ஊரில் இருக்கும் வீட்டிற்க்கும் சென்றும்.. அத்தனை கொட்டம் அடித்தனர்… சாண்டில்யன் தான் குழந்தைகளோடு குழந்தையாக அவர்களுக்கு ஈடு கொடுத்து ஆட்டம் போட்டான்..

போட்ட ஆட்டத்தில் அனைவரும் தூங்கி போக. தூங்காது தன் பால் கனியில் தன் பூ பந்தலின் நடுவில் அமர்ந்திருந்த மனைவியின் தோள் தொட்டு..

“என்ன என்ன யோசனை டா…” என்று கேட்டு மனைவியை அள்ளி அணைத்து கொண்டவன்.. இது வரை தந்தையாக இருந்தவன்.. அந்த சமயம் காதல் மன்னனாக மாறி போய் கொஞ்சியவன்.. பின் மிஞ்சியவன்.. பின் அனைத்தும் நீயே என்பது போல் மனைவியிடம் சரணாகதி ஆனவன்…

கூடலின் முடிவில். “ தேங்கஸ் டா. தேங்கஸ்… தனிமையா இருந்த என் வாழ்க்கை உன் விரல் தீண்டியதால் தான்.. சொர்க்கம் கிடைத்தது… மீண்டும் ஒரு ஆழ்ந்த முத்தம்..

இது எப்போதும் நடப்பது தான் என்பதினால் ஸ்ருதிகா ஸ்ரீ சிரித்தவள் பின் மன்னவனின் நெஞ்சில் மஞ்சம் கொண்டாள்..

நான்கு நாட்கள்… இங்கு இருந்து விட்டு மீண்டும் அதே பேருந்தில் குடும்பமாக சென்னையை நோக்கி ஒரு பயணம்..

பேருந்திலும் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இல்லை தான். ஆனால் நடுவில் ஒரு குடும்பம் உதவியாக பேருந்தை நிற்க சொல்ல.. சாண்டில்யன் தான் முதலில் அவர்களை பார்த்தது..

நடு வீதியில் வெட்ட வெயிலில் கையில் குழந்தையை தூக்க முடியாது தூக்கி கொண்டு நின்று கொண்டு இருந்த ஸ்ரீ காந்தையும் பாவனாவையும் பார்த்தவன் பேருந்தை நிறுத்தினான்.

யாரோ தங்களுக்கு உதவி செய்கிறார்கள் என்று ஸ்ரீ காந்த் குழந்தையை தூக்கி கொண்டு.. “ சீக்கிரம் வா…” என்று சிடு சிடு என்று தான் பாவனாவை அவன் அழைத்தது..

அவனுக்கு எங்கு தாமதம் செய்தால் விட்டு விட்டு சென்று விடுவார்களோ என்ற பயம் அவனுக்கு, பின் என்ன குழந்தைக்கு வைத்தியம் பார்க்க வேண்டி வாரத்திற்க்கு ஒரு நாள் இந்த அத்துவான இடத்திற்க்கு வரும் சூழல்.

சென்னையிலேயே குழந்தைக்கு வைத்தியம் பார்க்கலாம் தான்.. ஆனால் அங்கு கேட்கும் கட்டணத்தை கட்டும் நிலையில் இப்போது ஸ்ரீ காந்த் இல்லை..

இங்கு கொஞ்சம் சாகய விலையில் வைத்தியம் பார்ப்பதினால் தான்.. இங்கு வருவது….. காரில் அழைத்து வரலாம் தான்.. ஆனால் முன் சொந்த கார் வைத்து இருந்தவன் கடன் வாங்கிய இடத்தில் கொடுக்க முடியாது போய் விட. அவன் வட்டிக்கு தான் இந்த கார் என்று எடுத்து கொண்டு சென்று விட்டான்..

இரு சக்கர வாகனத்தில் இத்தனை தூரம் அதுவும் ஒன்பது வயது பெண்ணை இருவருக்கும் நடுவில் உட்கார வைத்து அழைத்து செல்ல முடியவில்லை..

ஒரு முறை அதை முயன்று… நடுவில் அமர்ந்திருந்த குழந்தை நழுவி விழ பார்க்க… குழந்தைக்கு பின் அமர்ந்திருந்த பாவனா அவளை இழுத்து பிடிக்க முடியாது மூவருமே வண்டியோடு கீழே விழுந்தது தான் மிச்சம்..

அதோடு அந்த மாதம் இவர்களுக்கும் சேர்த்து மருத்துவ செலவு ஆகவிட. அதற்க்கும் சேர்த்து கடன் வாங்கும் படி ஆகி விட்டதில்..

பேருந்தில் தான் வந்து செல்வது.. இந்த வழியாக பேருந்து அடிக்கடி எல்லாம் வராது. ஒரு மணி நேரத்திற்க்கு ஒரு முறை தான் வரும்..

அப்படி வந்த பேருந்து இவன் கண் முன் தான் சென்றது.. தூரமே ஸ்ரீ காந்த் பேருந்து வந்து நிற்பதை பார்த்தான் தான்..

“நிறுத்துங்க நிறுத்துங்க…” என்று கத்தி கொண்டு ஓடி வந்தான் தான்.. ஆனால் ஒன்பது வயதை தொட்ட பெண்ணை தூக்கி கொண்டு அவனால் அத்தனை வேகமாக ஓட முடியவில்லை… அதனால் இவன் கண் முன் தான் அந்த பேருந்து சென்றது..

அய்யோ இந்த வெயிலில் இன்னும் ஒரு மணி நேரம் இருக்க வேண்டுமா என்று நினைக்கும் போது தான் சாண்டில்யன் பேருந்தை ஸ்ரீ காந்த் பார்த்தது.

பாவம் ஸ்ரீ காந்த் அதில் யார் யார் இருக்கிறார்கள் என்று எல்லாம் கவனிக்கவில்லை… அப்பாடா.. ஒரு மணி நேரத்திற்க்கு வீட்டிற்க்கு சென்று விடலாம்… மதியம் மேலாவது அலுவலகம் செல்லலாம்.. இன்றைய பாதி நாள் சம்பளமாவது கிடைக்கும்.. அவன் கவனம் மொத்தமும் இதிலேயே இருந்ததால், மற்றதை கவனிக்கவில்லை..

ஏறியவன் கடைசி இருக்கையில் இரு இருக்கை இருக்க. அதில் அமர்ந்தும் கொண்டவன் பாவனாவை பார்த்து முறைத்து கொண்டே..

“உட்காரு… எத்தனை நேரம் நமக்காக பஸ் எடுக்காம இருப்பாங்க. உட்கார்…” என்று பல்லை கடித்து கொண்டு சொல்ல.

பாவனாவோ அவனை போலவே பல்லை கடித்து கொண்டு… அமர்ந்து கொண்டாள்.. காரணம் ஸ்ரீ காந்த் தான் யாரையும் பார்க்கவில்லை..

ஆனால் பாவனா பேருந்தில் ஏறியதும் பார்த்து விட்டாள்..

அதுவும் முதலில் அவள் பார்த்தது நம் ஸ்ருதிகா ஸ்ரீயை தான்… சுடி தார் அணிந்து கொண்டு சாண்டில்யனின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு இருந்தாள்..

முன்பை விட இளமையாக.. முன்பை விட அழகோடு.. ஆம் ஸ்ருதிகா ஸ்ரீ முன்பே அழகு தான் என்று ஸ்ரீ காந்துக்கு தெரியுமோ இல்லையோ… ஒரு அழகு கலை நிபுணராக இருந்த பாவனாவுக்கு முதன் முதலில் ஸ்ருதிகா ஸ்ரீ சீமந்ததிற்க்கு அழகுப்படுத்த வந்த பாவனா ஸ்ருதிகா ஸ்ரீயில் ஸ்கீன்னை பார்த்து விட்டு… நினைத்தாள்.. ஆம் நினைத்தாள் தான். அதை அவளிடம் சொல்லவில்லை…

அதே போல் அவலின் கூந்தல் உடல் அமைப்பு.. என்று அனைத்தும் சிறந்தது தான்.. ஆனால் அதை வெளிப்படுத்த அப்போது அவளுக்கு தெரியவில்லை என்று பாவனா நினைத்தாள்…

பாவம் பாவனா கூட அப்போது ஸ்ருதிகா ஸ்ரீக்கு தெரியவில்லை என்று தான் நினைத்தாள்.. ஆனால் இன்றைய அவளின் அனுபவம் சொன்னது தெரியவில்லை என்பது இல்லை.. நேரம் இல்லை என்பது..

இதோ இப்போது பத்து வருடங்கள் கடந்து பார்க்கிறாள். ஆனால் ஸ்ருதிகா ஸ்ரீயை பொறுத்த வரை அவளின் வயது பத்து வருடங்கள் கூடவில்லை.. குறைந்தது போலான ஒரு தோற்றத்தில் தான் அவள் தெரிந்தாள்..

அவள் முன் தான் என்று தன்னை ஒரு முறை குனிந்து பார்த்து கொண்டாள்… காட்டான் புடவை தான் கட்டி இருந்தாள்.. ஆனால் அதை அயன் செய்யாது கட்டி இருந்ததில் அங்கு அங்கு சுருக்கமாக கசங்கி போய் இருந்தது.. ஐயன் செய்து கட்டி இருந்தாலுமே அவளின் புடவை இதே நிலையில் தான் இருந்து இருக்கும்..

காரணம் குழந்தையை இது போல மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது பெரும் பாலும் ஸ்ரீ காந்த் தான் தூக்கி கொள்வான்.

ஆனால் சில சமயம்.. பெண்ணை பாவனாவிடமும் கொடுப்பான்.. “ என் கை ரொம்ப வலிக்குது..” என்று சொல்லி..

அதனால் எதையும் பார்க்கும் சூழ் நிலையில் பாவனா என்ன ஸ்ரீ காந்தும் இல்லாததினால் இதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் இன்று.. அதுவும் ஸ்ருதிகா ஸ்ரீ முன் நிலையில், பாவனா தன்னை மிகவும் கீழாக உணர்ந்தாள்..

ஸ்ரீ காந்தோ தன் பக்கம் வந்து அமர்ந்ததில் இருந்து முன் பக்கம் பார்ப்பதும்.. பின் தன்னையே பார்ப்பதுமாக பார்த்து கொண்டு இருந்தவன்..

“உனக்கு என்ன ஆச்சு…?” என்று கேட்டவன் காதில் மெல்ல.

“நாம கீழே இறங்கி விடலாமா…?” என்று கேட்டாள்..

பாவனாவின் தன்மையும் இப்போது மாறி தான் போய் இருந்தது.. முன் போல் அகங்காரம். திமிர் என்று மறைந்து… ஏதோ போல ஒரு வாழ்க்கையை தான் வாழ்வது.. காலம் அப்படி அவளை மாற்றி விட்டது..

பாவனாவின் இந்த பேச்சில் ஸ்ரீ காந்துக்கு தான் கோபம் வந்து விட்டது… “ என்ன விளையாடுறியா…? நான் போய் வேலைக்கு வேறு கிளம்பனும்..” என்று எரிந்து விழுந்தான்..

கொஞ்சம் சத்தமாக தான்.. பாவம் அவன் தான் பேருந்தில் இருப்பவர்கள் யாரையுமே இன்னும் பார்க்கவில்லையே… இவன் பேச்சு அங்கு இருந்த அனைவருக்கும் கேட்டது.

அதில் பாவனா இன்னுமே குன்றி பொய் விட.. அதில் மெதுவாக.. “ ஏங்க… ஸ்ருதிகா ஸ்ரீ இருக்கா. இது அவங்க பஸ் போல…” சாண்டில்யன் கலாவதி என்று அனைவரையும் பாவனா முன் பார்த்து இருப்பதால் சொல்ல…

பாவனா சொன்ன நொடி ஸ்ரீ காந்தின் பார்வை அந்த பேருந்து மொத்தமும் வலம் வந்து கடைசியாக ஒரு இடத்தில் நிலைத்து நின்றது.

அப்படி அவன் பார்வை நிலைத்த இடம் இயல் இசை… இருவரும் ஒன்று போல சுடிதார் அணிந்து கொண்டு பக்கம் பக்கம் அமர்ந்து கொண்டு இருக்க. அவர்களின் தம்பி வல்லபவனோ.. தன் தலையை இயல் அக்கா மீது வைத்து இருந்தான் என்றால் காலை இசை அக்கா மீது போட்டு கொண்டு படுத்திருந்தான்.

இயல் தம்பியின் தலையோ கோதி கொண்டு இருக்க. இசை தம்பியின் பாதத்தை பிடித்து கொண்டு இருந்தான்..

அப்போது சாண்டில்யன் தான். “ அவனை கீழே விடு டா…” என்று சொன்ன போது இருவரும் ஒன்று போல்..

“ப்பா சின்ன குழந்தை தானேப்பா. அதுவும் இல்லேம்மா இன்னைக்கு ஒரு இடத்தில் நிற்கல.. அத்தனை ஆட்டம்.. கால் வலிக்கும் ப்பா. சின்ன கால் தானே ப்பா….”

வார்த்தைக்கு வார்த்தை இயல் இசை சாண்டில்யனை அப்பா போட்டு அழைத்து பேசிக் கொண்டு இருக்க… அதை ஒரு கைய்யாலாக தனத்தோடு ஸ்ரீ காந்த் பார்த்து கொண்டு இருந்தான்..

இவை அனைத்தையும் விட கொடுமை.. ஸ்ரீ காந்த் பாவனாவையும் அனைவரும் கண்டு கொண்டு விட்டனர் தான். ஆனால் யாரோ ஒரு வழி போக்கனுக்கு உதவி செய்வது போல தான் அவர்கள் கண்டு கொள்ளாது இருந்தனர்..

மற்றவர்கள் தான் அப்படி என்றால் இயல் இசைக்கு ஸ்ரீ காந்த் யார் என்றே தெரியவில்லை… அவர்களின் மொத்த கவனமும் அவனின் தம்பி மீது தான் இருந்தது.. அக்காவே அன்னையாக அவனை கவனித்து கொண்டனர்…

ஸ்ரீ காந்தும் பாவனாவும் இறங்கும் இடம் வந்தது இறங்கி கொண்டு விட்டனர்.. சாண்டில்யனின் குடும்பம் இந்த பேருந்து பயணத்தில் மட்டும் இல்லை வாழ்க்கை பயணத்திலும் மகிழ்ச்சியோடு பயணிப்பர்…

என்னோடு இந்த கதையில் பயணித்த அனைவருக்கும் நன்றி வாசகர்களே.. அடுத்து அடுத்த புது கதையில் சந்திக்கலாம்..

…..நிறைவு.






 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
196
❤️❤️❤️❤️❤️

சாண்டில்யன் சதியால தனிச்சு ஒத்தையா இருந்தவன் இப்போ குடும்பத்துக்காக பஸ் வாங்குற அளவுக்கு உறவுகளால நிறைஞ்சு இருக்குறதை பார்க்க நிறைவா இருக்கு...... 🥰🥰🥰💚💚💚 அவனோட தேவதைகள் அழகு ❣️

ஸ்ரீகாந்த் பாவனா சரியான தண்டனை தான் கிடைச்சுருக்கு..... 🙂

அருமையான கதை 😍😍😍😍💞💞💞💞💞💞💞
 
Top