அத்தியாயம்…7
தன் வசும்மாவின் உடல் அருகில் வந்து நின்றவன்.. ஒன்றும் பேசவில்லை.. முன் போலவே கை கட்டி தான் நின்று இருந்தான்.. ஆனால் பார்வை வசும்மாவின் பூத உடல் மீது இல்லாது அவர்களின் பேச்சில் இருந்தது.. அதை அவர்களுக்கு தெளிவாக காட்டிய படியே தான் அவர்களின் பேச்சை கவனித்தான்… ஆனால் பேசவில்லை…
வாசுதேவ்வுக்கு சாண்டில்யனின் இன்றைய மாறுப்பட்ட நடவடிக்கை ஒரு வித பதட்டத்தை கொடுத்தது என்றால், அவனின் இந்த அமைதியோ அவன் மனதில் ஒரு எச்சரிக்கை மணி அடித்தது…. .
என்றுமே இது போலான விசயம் வந்தால், தூரம் நின்று கொண்டு… நீ செய் என்று சொல்லாவிட்டாலும், அவனின் செயலின் மூலம் காட்டி விடும் சாண்டில்யன்.. இன்று தூரம் நின்று கொண்டு இருந்தவன் நெருங்கி வந்து நின்றது.. ஏதோ சரியில்லை என்று சொன்னது..
இருந்தும் இதை பற்றி மேல யோசிக்க அவனுக்கு இது நேரம் இல்லை.. என்ன தான் மனதில் ஆயிரம் மனவருத்தங்கள் இருந்தாலும், தன் அன்னைக்கு செய்ய வேண்டிய கடைசி மரியாதையை சரியாக செய்து முடிக்க நினைத்தவன்..
சாண்டில்யன் தான் கொள்ளி வைக்க வேண்டும் என்று சொன்ன தனக்கு பெரிய தாத்தா உறவில் இருப்பவரிடம்..
“சாந்தி அத்தை சொன்னது தான் தாத்தா.. சாண்டில்யாவை முறைப்படி இன்னொரு வீட்டிற்க்கு தத்து கொடுத்துட்டாங்க… நான் தான் அவங்களுக்கு ஒரே மகன்.. நான் தானே தாத்தா கொள்ளி வைக்கனும்.. பெரியவங்க. உங்களுக்கு நான் முறைய பத்தி சொல்ல தேவையில்ல..” என்று சொன்னவனிடம் அந்த பெரியவர்..
“நீ சொன்னது எல்லாம் சரி தான் வாசு….” என்று சொன்னவன் பின் தன் கை பேசியில் ஒரு எண்ணை காண்பித்து..
“இது உன் அம்மா போன் நம்பர் தானே…?” என்று கேட்டவரிடம் குழப்பத்துடனே ஆமாம் என்று சொன்னான். சாண்டில்யனுமே பார்த்தான் தான்… ஆனால் அவன் ஒன்றும் சொல்லவில்லை..
அதில் தன் அன்னை பேசியதை அனைவரும் கேட்கும் படி செய்தார்..
ஆம் வசுமதி மகன் தன் அறையை விட்டு சென்றதுமே தன்னை பார்த்து கொள்ளும் பெண்ணிடம்… தன் கை பேசியை கொடுத்து..
இதுல பெரியவர் என்று போட்டு ஒரு நம்பர் இருக்கும்.. அந்த நம்பருக்கு கூப்பிட்டு நீ கொஞ்சம் வெளியே போய் நில்லு…” என்று சொன்ன வசுமதியிடன்.. அந்த பெண்…
“ம்மா இப்போ டைம் பன்னிரெண்டு…” என்று சொல்லியும்..
“இல்ல நீ கூப்பிட்டு நீ கொஞ்சம் நேரம் வெளியே நில்..” என்றவரின் பேச்சை தட்ட முடியாது அந்த பெண் வசுமதி செய்ய சொன்னதை செய்து விட்டு அந்த அறையை விட்டு வெளியில் நின்று கொண்டாள்..
வசுமதியின் அழைப்பை பார்த்ததுமே அந்த பெரியவர்.. “என்ன வசு இந்த நேரத்தில்…” வசுமதி உடல் சுகவீனம் இல்லாது இருக்கிறார் என்பது தான் அனைவருக்கும் தெரியுமே…
“மாமா நேரம் பார்க்கும் படி நான் இல்ல மாமா.” என்று சொன்ன வசுமதி பின்…
“ மாமா நான் பேசுவதை நீங்க ரெக்கார்ட் செய்து கொள்ளுங்கள் மாமா…” என்று வசுமதி சொல்லவும் தான் அந்த பெரியவர்..
“வசு நீ என்ன சொல்ற.. அங்கு ஏதாவது பிரச்சனையா…. உன் பசங்க எல்லாம் தங்கமான பசங்க ஆச்சே….” என்று சொன்ன போது..
“நானுமே இது வரை அப்படி தான் நினச்சிட்டு இருந்தேன் மாமா. ஆனால்… அது எல்லாம் விடுங்க மாமா… எனக்கு இப்போவே மூச்சு வாங்க ஆரம்பிக்குது நான் பேசுறதை பதிவு செய்ங்க…” என்ற இந்த உரையாடல்கள் அவர்கள் இருவருக்குள்ளும் நடந்தது.. அதை தன் வாய் வழி மூலமாக சொன்ன அந்த பெரியவர்..
பின் வசுமதி பதிவு செய்ய சொன்னதை தன் கை பேசியில் அனைவரும் கேட்கும் படி செய்தார்..
அதாவது வசுமதி சொன்னதான… “எனக்கு கொள்ளி என் பெரிய பையன் சாண்டில்யன் தான் வைக்கனும் மாமா.. வாசு பிரச்சனை செய்வான் என்று தான் எனக்கு தோனுது.. ஆனா எனக்கு கொள்ளி என் பெரிய பையன் என் சீமந்தபுத்திரன் தான் வைக்கனும்.. அதோட அவன் தனி மரமா நிற்க்கிறான் மாமா… அவன் இப்படி நிற்க நானுமே ஒரு காரணமா போயிட்டேன்… அவனுக்கு எப்படியாவது ஒரு குடும்பத்தை ஏற்படுத்தி கொடுத்துடுங்க மாமா..” இப்படி தான் அந்த ஒளி பதிவில் வசுமதி சொல்லி இருந்தது…
வசுமதி சொன்னது… வசுமதியின் பூத உடலின் அருகில் இருந்தவர்களும் இதை கேட்க நேர்ந்தது… கேட்டவர்கள் வாசுவை ஒரு மாதிரியாக வேறு பார்க்க.
அந்த பெரியவர்…. “ நீ சொன்னது சரி தான் வாசு… சாண்டில்யன் ஒரு வீட்டுக்கு தத்து போயிட்டான் தான்.. ஆனா உன் அம்மா சொன்னத கேட்ட தானே…இறந்தவங்க ஆத்மா சாந்தி அடையனுமுன்னா.. அவங்க சொன்னது செய்வது தான் சரி… “ என்று சொன்னவர் சாண்டில்யனை காட்டி..
அந்த சடங்கு செய்பவரிடனம்.. “ இவருக்கு ஆக வேண்டிய வேலைகளை பாருப்பா..” என்று விட்டார்…
அதில் வாசு தெவ்வின் கால்கள் தன்னால் வசுமதியின் உடலை விட்டு கொஞ்சம் தள்ளி சென்றது… அன்னையின் இரு பக்கமும் நின்று கொண்டு இருந்த அவனின் தங்கைகள் குடும்பமும்.. அவன் குடும்பமுமே வாசு தேவ்வின் பக்கம் வந்து நின்று விட….
தன் பக்கம் நின்று கொண்டு இருந்த தன் குடும்பத்தை பார்த்தவனுக்கு மனதில் ஒரு பெருமிதம் தன்னால் அவனின் பார்வை தனித்து நின்று கொண்டு இருந்த சாண்டில்யனின் மீது படிந்தது.
சாண்டில்யனும்.. தன் சட்டை பட்டனை ஒவ்வொன்றாக கழட்டி கொண்டே அவனின் அந்த பெருமிதமான பார்வையும் பார்த்தான்.. தான் தனித்து நின்றதையும் கவனித்தான் தான்..
தன் வசும்மாவின் ஆசையாக முறையாக தன்னை பெற்ற அன்னைக்கு செய்ய வேண்டிய அனைத்தும் செய்து முடித்து வீடு வந்த அன்று தனக்கு கட்டி கொண்ட பகுதிக்கு சென்றவன் குளித்து முடித்து விட்டு மீண்டுமே பெரிய வீடான தன் வசும்மா இருந்த வீட்டிற்க்கு வந்தான் கையில் பெட்டி படுக்கையுடன்..
முன் வீட்டில் பெண்கள் இருக்கிறது என்று வாசு சொல்லும் முன் எந்த அறையில் தங்கி இருந்தானோ… அந்த அறையில் தன் பெட்டியை கொண்டு சென்று வைத்தவன்..
பின் அவனே தன் வசும்மாவுக்கு செய்ய வேண்டிய அனைத்து சாங்கியத்தையும் கொள்ளி வைத்தவன் என்ற முறையில் அனைத்தும் செய்து முடித்தான்..
வாசுதேவ் ஒன்றும் சொல்லவில்லை.. இடை இடையே இரண்டு தங்கைகளும்… தங்கையின் சம்மந்திகளும் தன்னிடம் பேச முயலும் போது எல்லாம் வாசுதேவ் பேசவிடாது தடுத்து நிறுத்தினான்..
சாண்டில்யனுக்கு வாசுதேவ் நடவடிக்கையை வைத்து ஒன்று மட்டும் புரிந்தது.. அவன் மனதில் பெரியதாக ஏதோ வைத்து இருக்கிறான் என்பதும்…
மனதில் அத்தனை இருந்தும்… அதை முகத்தில் காட்டாது அனைத்தும் செய்து முடித்தாலுமே, சாண்டில்யனுக்கு தோள் சாய ஒரு தோள் தேவைப்பட்டது.. ஆனால் இல்லையே…
அதுவும் என்ன தான் வீராப்பாக இங்கு தங்கி கொண்டாலுமே, அதுவும் சாண்டில்யனுக்கு ஒரு வகையில் நரகவேதனையாக தான் இருந்தது என்று சொல்ல வேண்டும்..
தொழிலில் சாதித்தாலுமே தனி வாழ்க்கையில் நான் படு தோல்வி அடைந்து விட்டேன் என்று சொல்லாமல் சொன்னது சாப்பிடும் இடத்தில் தனக்கு சமையல்காரம்மா பரி மாற… வாசு தேவ்வுக்கு அவன் மனைவியும்.. தன் இரண்டு தங்கைகளும் தன் கணவன் மார்களுக்கு பரிமாறும் காட்சியும்,. இடை இடையே அவர்களின் குழந்தைகள்..
“எனக்கு இது வேண்டாம். மேகி வேண்டும்..” என்று அடம் பிடிக்கும் பேச்சும்.. அதற்க்கு ஒரு குரல் அந்த குழந்தைகளை கண்டிக்க, மற்றோரு குரலோ. சமாதானம் செய்ய. என்று இருக்க.
அவன் மட்டும் தனித்து தான் கேட்கும் உணவை தன் தட்டில் வைக்கும் சமையல்காரம்மாவின் கையில் உணவு உண்டு…
தான் போதும் என்று சொன்னால், இன்னும் கொஞ்சம் போட்டு கொள் என்று சொல்ல ஆள் இல்லாது… உடலுக்கு கெடுதியான உணவை கேட்டாலும் தட்டாது தன் தட்டில் வைக்கும் அந்த உணவை உண்டு விட்டு தன் அறைக்கு வந்தவனுக்கு…
ஒரு தோள் வேண்டும்.. கண்டிப்பாக. காமத்திற்க்கும், காதலுக்கும், இல்லாது போனாலும்.. அன்புக்கும் அதாரவுக்கும் என்று துணை வேண்டும் என்று அவனே முடிவு செய்தான் தான்..
ஆனால் தொழிலில் என்ன பேசினால் எப்படி மடக்கி பேசி… தன் கட்சிகாரரை ஜெயிக்க வைக்கும் சாண்டில்யனால் தனக்கு துணையை எப்படி தேடுவது என்பது பாவம் தெரியாது போனான்… முப்பத்தியெழு வயதுடைய சாண்டில்யன்…
இதே மனநிலையில் இங்கு இருந்தால், கண்டிப்பாக தன் கோபத்தை வாசுவின் சட்டையை பிடித்து கேட்டு விடுவோம் என்று நினைத்தான்..
கேட்க தான் நினைக்கிறான்.. ஆனால் முதல் பேச்சாக தன்னுடையதாக அது இருக்க கூடாது… எதிர் பக்கத்தில் இருந்து தான் முதல் வார்த்தை வர வேண்டும்.. அவனின் வக்கீல் மூளை இப்படியாக தான் யோசித்தது..
அவன் இப்படி தன் குடும்பத்திற்க்குள் தொழிலில் செய்வதை செய்வோம் என்று முன் நினைத்து இருந்து இருக்க மாட்டான்..
அப்படியாக யோசித்து இருந்தால் கண்டிப்பாக இன்று அவன் தனித்து நின்று இருக்க மாட்டான்… முதல் முறை தன் ஜாதகத்தை பற்றி சொன்ன போதே… அது மெய்யா…? பொய்யா….? என்று தீரா விசாரித்து தெரிந்து கொண்டு இருந்து இருப்பான். நம்பினான்… தன்னை அவர்களுக்குள் சேர்த்து கொள்ளவில்லை என்றாலும், தன் சொந்தங்கள் தானே என்று நம்பினான்…
தான் அவர்கள் மீது வைத்த அந்த நம்பிக்கைக்கு அவர்கள் தனக்கு கொடுத்தது.. மிக மிக பெரிய துரோகம்… அவன் இதை எளிதில் விட கூடாது என்று தான் நினைத்தான்..
ஆனால் அதன் தொடக்கம்.., மறுபக்கத்தில் இருந்து வர வேண்டும் என்பது தான் அவன் எண்ணம்..
ஆனால் அதற்க்கு தான் இது போல இருக்க கூடாது என்று தான் சென்னையை விட்டு செங்கல்பட்டுக்கு கிளம்பி சென்றது..
அந்த வீடு ஆட்கள் தராத அமைதியை.. தன் அன்னை தன் தந்தை வீடு தரும் என்று தான் இங்கு வந்தது..
ஆனால் அந்த வீட்டின் ஒவ்வொரு இடமும்.. பார்க்கும் போது அதுவும் அவனின் அன்னை அவனின் இருபது வயதில் இருந்தே… எங்காவது ஒரு குழந்தையை பார்த்தால் போதும்…
“உன் குழந்தை இது போல இருக்குமா சாண்டில்யா.?.” என்று தன் பார்வையை அந்த குழந்தை மீதே வைத்து தான் எப்போதும் கேட்பார்..
அவன் கூட. “ ம்மா நீங்க இப்போ ஒரு அழகான பெண்ணை பார்த்து இது போல உனக்கு ஒரு ஒய்ப் வரனும் என்று தான் சொல்லனும்.. ஆனா நீங்க என்னன்னா.. ஸ்டைட்டா குழந்தைக்கு போயிட்டிங்க..” என்று இவன் கேட்கும் போது அவனின் அன்னை ஒன்றும் இவனிடம் சொன்னது கிடையாது தான்..
ஆனால் அவன் அன்னையின் அந்த மெளனம்.. அவனுக்கு ஆயிரம் சொன்னது.. தனக்கு கிடைக்காத ஒரு விசயத்தை பார்த்து தான் மனது ஏங்கும்… அதே போல் குழந்தை செல்வம் அவருக்கு மறுக்கப்பட்டது..
தன்னையுமே அவர் ஏழாவது வயதில் இருந்து தான் தத்து எடுத்தது.. அதனால் சிறு குழந்தைகளை… அவர் மனது தேடுகிறது… அந்த அவரின் அந்த தேடலை தன் குழந்தைகளின் மூலம் நிறை வேற்ற பார்க்கிறார் என்று நினைத்து கொண்டவன்.
அதற்க்கு பின் அன்னையை ஓட்டியே தான் அவன் பேச்சும் இருக்கும்..
அவனின் இருபத்தி ஐந்தாம் வயதிலேயே தன் அன்னை திருமணம் பேச்சு எடுத்து விட அவனின் தந்தை தான்.. அவன் இப்போது தான் தனியாகவே ஒரு இரண்டு கேஸ் எடுத்து வாதாடுக்கிறான்.. இன்னும் இரண்டு வருடம் போகட்டும்..
அவன் என் மகன் என்று சொல்வதை விட… அவன் தந்தை நான் என்று எல்லோரும் சொல்லட்டும்.. அதற்க்கு உண்டான முதல் படியாவது அவன் எடுத்து வைக்கடும் என்று தடை போட்டு விட்டார்.
பின் அவனின் இருபத்தியெழாவது வயதில் தான் தன் திருமணம் பேச்சு எடுத்து நடந்த விசயங்கள். என்று அந்த வீட்டை பார்க்க பார்த்த அத்தனையும் அவனின் கண் முன் வந்து போயின.
அதுவும் முன்பு இந்த வீட்டிற்க்கு வந்த போது இருந்ததை விட இப்போது அதிகம் வேதனை பட்டான்..
“ம்மா இருபது வயதிலேயே என் குழந்தைகளை பற்றி அப்படி ஆசையா பேசுனிங்கலேம்மா… ஆனா பாரு முப்பதியெழு வயது வரை என்னை அப்பா என்று கூப்பிட ஒரு குழந்தை இல்லாது இருக்கேன் ம்மா.. இந்த வீடு குழந்தைகளாக நிறைந்து இருக்கனும் சாண்டில்யா… அதுவும் பெண் குழந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் சாண்டில்யா.. “ என்று பேச்சுக்கு பேச்சு என் பெயரை சொல்லி சொல்வீங்கலேம்மா.. ஆனா உன் மகன் அடி முட்டாளா ஏமாந்து நிற்கிறேனும்மா. தனிச்சி ஏமாந்து நிற்கிறேன்…
தன் பெயரை எப்போதுமே அவனின் அன்னை சுருக்கி அழைத்தது இல்லை… அதே போல் மற்றவர்களையும் அப்படி அழைக்க விட்டதும் கிடையாது.. அப்படி அவன் தன்னை சாண்டில்யா சாண்டில்யா என்ற அந்த அழைப்பே கேட்டு கொண்டு இருந்தது…
தன் வசும்மாவின் உடல் அருகில் வந்து நின்றவன்.. ஒன்றும் பேசவில்லை.. முன் போலவே கை கட்டி தான் நின்று இருந்தான்.. ஆனால் பார்வை வசும்மாவின் பூத உடல் மீது இல்லாது அவர்களின் பேச்சில் இருந்தது.. அதை அவர்களுக்கு தெளிவாக காட்டிய படியே தான் அவர்களின் பேச்சை கவனித்தான்… ஆனால் பேசவில்லை…
வாசுதேவ்வுக்கு சாண்டில்யனின் இன்றைய மாறுப்பட்ட நடவடிக்கை ஒரு வித பதட்டத்தை கொடுத்தது என்றால், அவனின் இந்த அமைதியோ அவன் மனதில் ஒரு எச்சரிக்கை மணி அடித்தது…. .
என்றுமே இது போலான விசயம் வந்தால், தூரம் நின்று கொண்டு… நீ செய் என்று சொல்லாவிட்டாலும், அவனின் செயலின் மூலம் காட்டி விடும் சாண்டில்யன்.. இன்று தூரம் நின்று கொண்டு இருந்தவன் நெருங்கி வந்து நின்றது.. ஏதோ சரியில்லை என்று சொன்னது..
இருந்தும் இதை பற்றி மேல யோசிக்க அவனுக்கு இது நேரம் இல்லை.. என்ன தான் மனதில் ஆயிரம் மனவருத்தங்கள் இருந்தாலும், தன் அன்னைக்கு செய்ய வேண்டிய கடைசி மரியாதையை சரியாக செய்து முடிக்க நினைத்தவன்..
சாண்டில்யன் தான் கொள்ளி வைக்க வேண்டும் என்று சொன்ன தனக்கு பெரிய தாத்தா உறவில் இருப்பவரிடம்..
“சாந்தி அத்தை சொன்னது தான் தாத்தா.. சாண்டில்யாவை முறைப்படி இன்னொரு வீட்டிற்க்கு தத்து கொடுத்துட்டாங்க… நான் தான் அவங்களுக்கு ஒரே மகன்.. நான் தானே தாத்தா கொள்ளி வைக்கனும்.. பெரியவங்க. உங்களுக்கு நான் முறைய பத்தி சொல்ல தேவையில்ல..” என்று சொன்னவனிடம் அந்த பெரியவர்..
“நீ சொன்னது எல்லாம் சரி தான் வாசு….” என்று சொன்னவன் பின் தன் கை பேசியில் ஒரு எண்ணை காண்பித்து..
“இது உன் அம்மா போன் நம்பர் தானே…?” என்று கேட்டவரிடம் குழப்பத்துடனே ஆமாம் என்று சொன்னான். சாண்டில்யனுமே பார்த்தான் தான்… ஆனால் அவன் ஒன்றும் சொல்லவில்லை..
அதில் தன் அன்னை பேசியதை அனைவரும் கேட்கும் படி செய்தார்..
ஆம் வசுமதி மகன் தன் அறையை விட்டு சென்றதுமே தன்னை பார்த்து கொள்ளும் பெண்ணிடம்… தன் கை பேசியை கொடுத்து..
இதுல பெரியவர் என்று போட்டு ஒரு நம்பர் இருக்கும்.. அந்த நம்பருக்கு கூப்பிட்டு நீ கொஞ்சம் வெளியே போய் நில்லு…” என்று சொன்ன வசுமதியிடன்.. அந்த பெண்…
“ம்மா இப்போ டைம் பன்னிரெண்டு…” என்று சொல்லியும்..
“இல்ல நீ கூப்பிட்டு நீ கொஞ்சம் நேரம் வெளியே நில்..” என்றவரின் பேச்சை தட்ட முடியாது அந்த பெண் வசுமதி செய்ய சொன்னதை செய்து விட்டு அந்த அறையை விட்டு வெளியில் நின்று கொண்டாள்..
வசுமதியின் அழைப்பை பார்த்ததுமே அந்த பெரியவர்.. “என்ன வசு இந்த நேரத்தில்…” வசுமதி உடல் சுகவீனம் இல்லாது இருக்கிறார் என்பது தான் அனைவருக்கும் தெரியுமே…
“மாமா நேரம் பார்க்கும் படி நான் இல்ல மாமா.” என்று சொன்ன வசுமதி பின்…
“ மாமா நான் பேசுவதை நீங்க ரெக்கார்ட் செய்து கொள்ளுங்கள் மாமா…” என்று வசுமதி சொல்லவும் தான் அந்த பெரியவர்..
“வசு நீ என்ன சொல்ற.. அங்கு ஏதாவது பிரச்சனையா…. உன் பசங்க எல்லாம் தங்கமான பசங்க ஆச்சே….” என்று சொன்ன போது..
“நானுமே இது வரை அப்படி தான் நினச்சிட்டு இருந்தேன் மாமா. ஆனால்… அது எல்லாம் விடுங்க மாமா… எனக்கு இப்போவே மூச்சு வாங்க ஆரம்பிக்குது நான் பேசுறதை பதிவு செய்ங்க…” என்ற இந்த உரையாடல்கள் அவர்கள் இருவருக்குள்ளும் நடந்தது.. அதை தன் வாய் வழி மூலமாக சொன்ன அந்த பெரியவர்..
பின் வசுமதி பதிவு செய்ய சொன்னதை தன் கை பேசியில் அனைவரும் கேட்கும் படி செய்தார்..
அதாவது வசுமதி சொன்னதான… “எனக்கு கொள்ளி என் பெரிய பையன் சாண்டில்யன் தான் வைக்கனும் மாமா.. வாசு பிரச்சனை செய்வான் என்று தான் எனக்கு தோனுது.. ஆனா எனக்கு கொள்ளி என் பெரிய பையன் என் சீமந்தபுத்திரன் தான் வைக்கனும்.. அதோட அவன் தனி மரமா நிற்க்கிறான் மாமா… அவன் இப்படி நிற்க நானுமே ஒரு காரணமா போயிட்டேன்… அவனுக்கு எப்படியாவது ஒரு குடும்பத்தை ஏற்படுத்தி கொடுத்துடுங்க மாமா..” இப்படி தான் அந்த ஒளி பதிவில் வசுமதி சொல்லி இருந்தது…
வசுமதி சொன்னது… வசுமதியின் பூத உடலின் அருகில் இருந்தவர்களும் இதை கேட்க நேர்ந்தது… கேட்டவர்கள் வாசுவை ஒரு மாதிரியாக வேறு பார்க்க.
அந்த பெரியவர்…. “ நீ சொன்னது சரி தான் வாசு… சாண்டில்யன் ஒரு வீட்டுக்கு தத்து போயிட்டான் தான்.. ஆனா உன் அம்மா சொன்னத கேட்ட தானே…இறந்தவங்க ஆத்மா சாந்தி அடையனுமுன்னா.. அவங்க சொன்னது செய்வது தான் சரி… “ என்று சொன்னவர் சாண்டில்யனை காட்டி..
அந்த சடங்கு செய்பவரிடனம்.. “ இவருக்கு ஆக வேண்டிய வேலைகளை பாருப்பா..” என்று விட்டார்…
அதில் வாசு தெவ்வின் கால்கள் தன்னால் வசுமதியின் உடலை விட்டு கொஞ்சம் தள்ளி சென்றது… அன்னையின் இரு பக்கமும் நின்று கொண்டு இருந்த அவனின் தங்கைகள் குடும்பமும்.. அவன் குடும்பமுமே வாசு தேவ்வின் பக்கம் வந்து நின்று விட….
தன் பக்கம் நின்று கொண்டு இருந்த தன் குடும்பத்தை பார்த்தவனுக்கு மனதில் ஒரு பெருமிதம் தன்னால் அவனின் பார்வை தனித்து நின்று கொண்டு இருந்த சாண்டில்யனின் மீது படிந்தது.
சாண்டில்யனும்.. தன் சட்டை பட்டனை ஒவ்வொன்றாக கழட்டி கொண்டே அவனின் அந்த பெருமிதமான பார்வையும் பார்த்தான்.. தான் தனித்து நின்றதையும் கவனித்தான் தான்..
தன் வசும்மாவின் ஆசையாக முறையாக தன்னை பெற்ற அன்னைக்கு செய்ய வேண்டிய அனைத்தும் செய்து முடித்து வீடு வந்த அன்று தனக்கு கட்டி கொண்ட பகுதிக்கு சென்றவன் குளித்து முடித்து விட்டு மீண்டுமே பெரிய வீடான தன் வசும்மா இருந்த வீட்டிற்க்கு வந்தான் கையில் பெட்டி படுக்கையுடன்..
முன் வீட்டில் பெண்கள் இருக்கிறது என்று வாசு சொல்லும் முன் எந்த அறையில் தங்கி இருந்தானோ… அந்த அறையில் தன் பெட்டியை கொண்டு சென்று வைத்தவன்..
பின் அவனே தன் வசும்மாவுக்கு செய்ய வேண்டிய அனைத்து சாங்கியத்தையும் கொள்ளி வைத்தவன் என்ற முறையில் அனைத்தும் செய்து முடித்தான்..
வாசுதேவ் ஒன்றும் சொல்லவில்லை.. இடை இடையே இரண்டு தங்கைகளும்… தங்கையின் சம்மந்திகளும் தன்னிடம் பேச முயலும் போது எல்லாம் வாசுதேவ் பேசவிடாது தடுத்து நிறுத்தினான்..
சாண்டில்யனுக்கு வாசுதேவ் நடவடிக்கையை வைத்து ஒன்று மட்டும் புரிந்தது.. அவன் மனதில் பெரியதாக ஏதோ வைத்து இருக்கிறான் என்பதும்…
மனதில் அத்தனை இருந்தும்… அதை முகத்தில் காட்டாது அனைத்தும் செய்து முடித்தாலுமே, சாண்டில்யனுக்கு தோள் சாய ஒரு தோள் தேவைப்பட்டது.. ஆனால் இல்லையே…
அதுவும் என்ன தான் வீராப்பாக இங்கு தங்கி கொண்டாலுமே, அதுவும் சாண்டில்யனுக்கு ஒரு வகையில் நரகவேதனையாக தான் இருந்தது என்று சொல்ல வேண்டும்..
தொழிலில் சாதித்தாலுமே தனி வாழ்க்கையில் நான் படு தோல்வி அடைந்து விட்டேன் என்று சொல்லாமல் சொன்னது சாப்பிடும் இடத்தில் தனக்கு சமையல்காரம்மா பரி மாற… வாசு தேவ்வுக்கு அவன் மனைவியும்.. தன் இரண்டு தங்கைகளும் தன் கணவன் மார்களுக்கு பரிமாறும் காட்சியும்,. இடை இடையே அவர்களின் குழந்தைகள்..
“எனக்கு இது வேண்டாம். மேகி வேண்டும்..” என்று அடம் பிடிக்கும் பேச்சும்.. அதற்க்கு ஒரு குரல் அந்த குழந்தைகளை கண்டிக்க, மற்றோரு குரலோ. சமாதானம் செய்ய. என்று இருக்க.
அவன் மட்டும் தனித்து தான் கேட்கும் உணவை தன் தட்டில் வைக்கும் சமையல்காரம்மாவின் கையில் உணவு உண்டு…
தான் போதும் என்று சொன்னால், இன்னும் கொஞ்சம் போட்டு கொள் என்று சொல்ல ஆள் இல்லாது… உடலுக்கு கெடுதியான உணவை கேட்டாலும் தட்டாது தன் தட்டில் வைக்கும் அந்த உணவை உண்டு விட்டு தன் அறைக்கு வந்தவனுக்கு…
ஒரு தோள் வேண்டும்.. கண்டிப்பாக. காமத்திற்க்கும், காதலுக்கும், இல்லாது போனாலும்.. அன்புக்கும் அதாரவுக்கும் என்று துணை வேண்டும் என்று அவனே முடிவு செய்தான் தான்..
ஆனால் தொழிலில் என்ன பேசினால் எப்படி மடக்கி பேசி… தன் கட்சிகாரரை ஜெயிக்க வைக்கும் சாண்டில்யனால் தனக்கு துணையை எப்படி தேடுவது என்பது பாவம் தெரியாது போனான்… முப்பத்தியெழு வயதுடைய சாண்டில்யன்…
இதே மனநிலையில் இங்கு இருந்தால், கண்டிப்பாக தன் கோபத்தை வாசுவின் சட்டையை பிடித்து கேட்டு விடுவோம் என்று நினைத்தான்..
கேட்க தான் நினைக்கிறான்.. ஆனால் முதல் பேச்சாக தன்னுடையதாக அது இருக்க கூடாது… எதிர் பக்கத்தில் இருந்து தான் முதல் வார்த்தை வர வேண்டும்.. அவனின் வக்கீல் மூளை இப்படியாக தான் யோசித்தது..
அவன் இப்படி தன் குடும்பத்திற்க்குள் தொழிலில் செய்வதை செய்வோம் என்று முன் நினைத்து இருந்து இருக்க மாட்டான்..
அப்படியாக யோசித்து இருந்தால் கண்டிப்பாக இன்று அவன் தனித்து நின்று இருக்க மாட்டான்… முதல் முறை தன் ஜாதகத்தை பற்றி சொன்ன போதே… அது மெய்யா…? பொய்யா….? என்று தீரா விசாரித்து தெரிந்து கொண்டு இருந்து இருப்பான். நம்பினான்… தன்னை அவர்களுக்குள் சேர்த்து கொள்ளவில்லை என்றாலும், தன் சொந்தங்கள் தானே என்று நம்பினான்…
தான் அவர்கள் மீது வைத்த அந்த நம்பிக்கைக்கு அவர்கள் தனக்கு கொடுத்தது.. மிக மிக பெரிய துரோகம்… அவன் இதை எளிதில் விட கூடாது என்று தான் நினைத்தான்..
ஆனால் அதன் தொடக்கம்.., மறுபக்கத்தில் இருந்து வர வேண்டும் என்பது தான் அவன் எண்ணம்..
ஆனால் அதற்க்கு தான் இது போல இருக்க கூடாது என்று தான் சென்னையை விட்டு செங்கல்பட்டுக்கு கிளம்பி சென்றது..
அந்த வீடு ஆட்கள் தராத அமைதியை.. தன் அன்னை தன் தந்தை வீடு தரும் என்று தான் இங்கு வந்தது..
ஆனால் அந்த வீட்டின் ஒவ்வொரு இடமும்.. பார்க்கும் போது அதுவும் அவனின் அன்னை அவனின் இருபது வயதில் இருந்தே… எங்காவது ஒரு குழந்தையை பார்த்தால் போதும்…
“உன் குழந்தை இது போல இருக்குமா சாண்டில்யா.?.” என்று தன் பார்வையை அந்த குழந்தை மீதே வைத்து தான் எப்போதும் கேட்பார்..
அவன் கூட. “ ம்மா நீங்க இப்போ ஒரு அழகான பெண்ணை பார்த்து இது போல உனக்கு ஒரு ஒய்ப் வரனும் என்று தான் சொல்லனும்.. ஆனா நீங்க என்னன்னா.. ஸ்டைட்டா குழந்தைக்கு போயிட்டிங்க..” என்று இவன் கேட்கும் போது அவனின் அன்னை ஒன்றும் இவனிடம் சொன்னது கிடையாது தான்..
ஆனால் அவன் அன்னையின் அந்த மெளனம்.. அவனுக்கு ஆயிரம் சொன்னது.. தனக்கு கிடைக்காத ஒரு விசயத்தை பார்த்து தான் மனது ஏங்கும்… அதே போல் குழந்தை செல்வம் அவருக்கு மறுக்கப்பட்டது..
தன்னையுமே அவர் ஏழாவது வயதில் இருந்து தான் தத்து எடுத்தது.. அதனால் சிறு குழந்தைகளை… அவர் மனது தேடுகிறது… அந்த அவரின் அந்த தேடலை தன் குழந்தைகளின் மூலம் நிறை வேற்ற பார்க்கிறார் என்று நினைத்து கொண்டவன்.
அதற்க்கு பின் அன்னையை ஓட்டியே தான் அவன் பேச்சும் இருக்கும்..
அவனின் இருபத்தி ஐந்தாம் வயதிலேயே தன் அன்னை திருமணம் பேச்சு எடுத்து விட அவனின் தந்தை தான்.. அவன் இப்போது தான் தனியாகவே ஒரு இரண்டு கேஸ் எடுத்து வாதாடுக்கிறான்.. இன்னும் இரண்டு வருடம் போகட்டும்..
அவன் என் மகன் என்று சொல்வதை விட… அவன் தந்தை நான் என்று எல்லோரும் சொல்லட்டும்.. அதற்க்கு உண்டான முதல் படியாவது அவன் எடுத்து வைக்கடும் என்று தடை போட்டு விட்டார்.
பின் அவனின் இருபத்தியெழாவது வயதில் தான் தன் திருமணம் பேச்சு எடுத்து நடந்த விசயங்கள். என்று அந்த வீட்டை பார்க்க பார்த்த அத்தனையும் அவனின் கண் முன் வந்து போயின.
அதுவும் முன்பு இந்த வீட்டிற்க்கு வந்த போது இருந்ததை விட இப்போது அதிகம் வேதனை பட்டான்..
“ம்மா இருபது வயதிலேயே என் குழந்தைகளை பற்றி அப்படி ஆசையா பேசுனிங்கலேம்மா… ஆனா பாரு முப்பதியெழு வயது வரை என்னை அப்பா என்று கூப்பிட ஒரு குழந்தை இல்லாது இருக்கேன் ம்மா.. இந்த வீடு குழந்தைகளாக நிறைந்து இருக்கனும் சாண்டில்யா… அதுவும் பெண் குழந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் சாண்டில்யா.. “ என்று பேச்சுக்கு பேச்சு என் பெயரை சொல்லி சொல்வீங்கலேம்மா.. ஆனா உன் மகன் அடி முட்டாளா ஏமாந்து நிற்கிறேனும்மா. தனிச்சி ஏமாந்து நிற்கிறேன்…
தன் பெயரை எப்போதுமே அவனின் அன்னை சுருக்கி அழைத்தது இல்லை… அதே போல் மற்றவர்களையும் அப்படி அழைக்க விட்டதும் கிடையாது.. அப்படி அவன் தன்னை சாண்டில்யா சாண்டில்யா என்ற அந்த அழைப்பே கேட்டு கொண்டு இருந்தது…