அத்தியாயம்-----12
பிரதாப் ஒரு வகை பதட்டதுடன். வண்டியின் முன் விழுந்து கிடப்பவளை திருப்பினான். ஆம் அவன் ஊகித்தது சரியே…..பத்மினியே தான்.அசோக்கை பார்தவாறு “அசோக் … அசோக்….சீக்கிரம் தண்ணி கொண்டு வா “என்று பதட்டத்துடன் அழைத்தான்.
பிரதாப்பின் பதட்டமான குரலை கேட்ட அசோக் அந்த பெண்களுக்கு பெரிய அடிப்பட்டு விட்டதாக கருதினானே தவிர அப்பெண்கள் பத்மினி ,ஷாலினியாக இருக்கும் என்று கருத வில்லை.
காரில் இருந்த தண்ணியை பதட்டதுடன் எடுத்து வந்து பிரதாப்பிடம் கொடுத்தவாறு அப்பெண்களை பார்த்தான்.பார்தவுடன் அதிர்ச்சியாகி விட்டான்.இருந்தாலும் ஒரு நிதானத்துடனே அவர்களின் அருகில் சென்று அமர்ந்து காயத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான்.
பிரதாப்போ…..அவசரம் அவசரமாக தண்ணியை இருவரின் மேலும் தெளித்தான்.அசோக்கின் பொறுமையான அணுகுமுறையை பார்த்த பிரதாப் “என்னடா இவர்களை சீக்கிரம் தூக்குடா…” என்று அவனை அதட்டிய வாறு பத்மினியை தூக்க கையை எடுத்துக் கொண்டு சென்றான்.
அதற்குள் சாலையில் மக்கள் கூடி விட்டார்கள். “காரை ஓட்டு என்றால் பிளைட்டை ஒட்டுவது. பாவம் சின்ன பொண்ணுங்க மேல் மோதியதும் இல்லாமல் நீங்களே அவர்களை தூக்கிட்டு போனால் என்னப்பா அர்த்தம்.”என்று கூட்டத்தில் ஒருவன் குரல் கொடுத்தான்.
பிரதாப் டென்ஷானாகி போய் விட்டான். “குரல் கொடுத்தவனை பார்த்து கத்த ஆராம்பித்தான்.”இப்போ வழி விடுறியா…. உன்னோட எனக்கு இவர்கள் மேல் அக்கறை ஜாஸ்தி இருக்கு.பணம் பரிக்க தான் என்றால் இந்தா என்றவாறு…”தன்னுடைய பர்சில் இருந்து பணத்தை எடுத்து வீசியவாறு திரும்பவும் பத்மினியை தூக்க அவளிடம் சென்றான்.
பிரதாப் பணத்தை வீசியவுடன் கத்தியவனுக்கு கோபம் வந்து விட்டது.பிரதாப்பை பார்த்து அவன் பேச முயலும் போதே இங்கு பத்மினிகும் ஷாலினிக்கும் மயக்கம் தெளிந்து விட்டது.
மயக்கம் தெளிந்த பத்மினி முதலில் பார்த்தது பிரதாப்பை நோக்கி ஒருவன் சண்டை இடுவதையே…..பத்மினி இதில் மிகவும் பயந்து விட்டாள்.அதற்குள் ஷாலினி பத்மினியின் விழிப்பை பார்த்த அசோக் பிரதாப்பிடம் “இருவரும் முழிச்சிட்டாங்க சண்டை போடுவதை நிறுத்திட்டு அவர்களை பார்க்கலாம்.”என்று கூறினான்.
பிரதாப்பும் அவசரமாக பத்மினியின் அருகில் சென்று பத்மினியை எழுப்ப கையை நீட்டினான்.பத்மினி தயங்கியவாறு பிரதாப்பின் கைய்யைய் பிடித்து மெல்ல எழுந்தாள்.அசோக்கும் ஷாலினிக்கு கைய் கொடுத்து தூக்கி விடலாம் என்று கைய் நீட்டுவதற்குள் அவளே எழுந்து விட்டாள்.
அசோக்குக்கு அந்த சூழ்நிலையிலும் வடை போச்சே என்ற எண்ணமே…… ஷாலினி எழுந்தவுடன் பிரதாப்பிடம் சண்டையுடுபவனிடம்…”.சண்டை வேண்டாம் எங்களுக்கு தெரிந்தவர்கள் தான் என்று கூறினாள்.” உடனே ஆள்...ஆளுக்கு என்ன...என்னவோ பேசியவாறு சென்றனர்.
இதில் பிரதாப்பிடம் சண்டையிட்டவன் இந்த காலத்து பெண்களை நம்பவே முடியவில்லை.பார்க்க அழகா பெரிய கார் வைச்சிருந்தா போதும் தெரிந்தவர்களாக ஆகிடறாங்க…..என்று அவன் கூறிமுடிப்பதற்க்குள் பிரதாப் அசோக் இருவரும் ஒரு சேர அவன் மீது பாய்ந்தனர்.
இந்த சண்டையை பார்த்தவுடன் பத்மினிக்கு தெளிந்த மயக்கம் மீண்டும் வருவது போல் இருந்தது.பத்மினிக்கு எப்போதும் இந்த அடி தடி இவைகள் என்றாலே அலர்ஜீ தான்.பத்மினியின் முகத்தை பார்த்தே நிலமையை புரிந்துக் கொண்ட ஷாலினி அசோக்கையும், பிரதாப்பையும் அழைத்தாள்.
ஷாலினியின் குரலை கேட்டதும் பிரதாப்பும்… “உன் நல்ல நேரம் அவர்களை ஹாஸ்பெட்டல் கூட்டிக் கொண்டு போக வேண்டும். அதனால் இத்தோடு விடுகிறேன். அடுத்த தடவை என் கண்ணுல நீ பட்ட அவ்வளவு தான்…. என்று அவனை கிழே தள்ளி விட்டு பத்மினி ஷாலினியிடம் வந்தான்.
அவர்களுக்கு அடி ஏதும் பலமாக எல்லாம் பட வில்லை.பயத்தில் தான் இருவரும் மயங்கி வீழ்ந்தனர்.இருவருக்கும் கைய் காலில் சிறு சிராய்ப்பு மட்டுமே….அதனால் தான் அசோக்குக்கு பார்த்தவுடன் தெரிந்து விட்டது. இவர்கள் பயத்தில் தான் மயங்கி விட்டனர் என்று…..அதனால் தான் பதட்டம் படாமல் காயத்தை ஆராய முற்பட்டான்.
பிரதாப் பத்மினியிடம் “வந்து உனக்கு ஒன்றும் இல்லையே”என்று பதட்டதுடன் கேட்டான்.பத்மினியும் தலையை அசைத்தவாறு “எனக்கு ஒன்றும் இல்லை கொஞ்சம் கைய், காலில் தேய்த்து விட்டது அவ்வளவு தான்” என்று முதல் முறையாக பிரதாப்பிடம் வாய் திறந்து பேசினால்….
அந்த சூழ்நிலையிலும் பத்மினியின் தன்னிடம் பேசிய முதல் பேச்சை ரசித்தான்.அசோக்கும் பிரதாப்பின் நிலை புரிந்து இவனை விட்டால். இங்கேயே ஒரு டூயட்டை போட்டுட்டுவான் என்று கருதி…
“பிரதாப் சீக்கிரம் இவர்களை ஹாஸ்பெட்டல் அழைத்துக் கொண்டு போக வேண்டும். பிறகு இந்த ஸ்கூட்டியை எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவன் கனவு உலகத்தை கலைக்க அவன் காதருகில் சத்தமாக கூறினான்.
பிரதாப்பும் சூழ்நிலை கருதி அசோக்கை ஒன்றும் சொல்லாமல் முறைத்தாவாரே….. “பத்மினி ஷாலினியை பார்த்து காரில் ஏறுமாறு சொல்ல திரும்பினான்.அப்போது ஷாலினி அசோக்கையே பார்த்திருந்தாள்.
அசோக்கும் பார்ப்பதற்க்கு பிரதாப்பை போலவே அழகாகவே இருப்பான்.என்ன ஒன்று பிரதாப் மிக சிவந்த நிறம். அசோக் மாநிறம் அவ்வளவே…. ஆண்மை மிடுக்குடன் உயரமாக இருப்பான்.
ஷாலினி தன்னை பார்ப்பதை அறியாமல் இவர்களை ஆஸ்பிட்டல் கொண்டு செல்வதிலும் ஸ்கூட்டியை என்ன செய்வது என்பதிலுமே கவனமாக இருந்தான்.அவன் எப்போதும் அப்படி தான் கடமை என்று வந்து விட்டால் அவன் கவனம் வேறு எதிலும் செல்லாது.
பிரதாப் அவசரமாக அசோக்கின் அருகில் சென்று “ஏய் ஷாலினி உன்னையே பார்க்கிறாள் நீ அவளை பார்க்காமல் என்னடா…? பண்ற உன் கடமை உணர்வுக்கு ஒரு அளவே இல்லையா...?இப்படியே இருந்தால் வெறும் கனவில் மட்டும் தான் குடும்பம் நடத்துவே….”என்ற பிரதாப்பின் பேச்சில் சட்டென்று ஷாலினியை பார்த்தான்.
ஷாலினி முதலில் அசோக்கை சரியாக கூட கவனிக்க வில்லை.பத்மினியின் வீட்டில் கூட பிரதாப், பத்மினியின் திருமண பேச்சு நடக்கும் போது கூட ஷாலினி அங்கு தானே இருந்தாள்.அவள் கவனம் முழுவதும் பத்மினியின் திருமண பேச்சிலேயே இருந்தது.
ஷாலினிக்கு முன்பே தெரியும் பத்மினிக்கு… பிரதாப்பை ஓட்டலில் வைத்து பார்த்தவுடன் பிடித்து விட்டது என்று.அதனால் தான் பிரதாப்பை ஓட்டலில் பார்த்ததும் பத்மினியிடம் உன் தந்தை பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளையா…?என்று விசாரித்தாள்.பிரதாப்பின் மனநிலையை அறிய. ஆனால் பாவம் பிரதாப்பின் முகத்தை வைத்து அவளால் ஒன்றும் அறிய முடியவில்லை.
அதனால் அந்த விஷயத்தை அப்போதே அவளும் விட்டு விட்டாள்.பிறகு பத்மினியின் வீட்டில் பிரதாப் திருமணம் பேச வந்திருப்பதை அறிந்து மகிழ்ந்து விட்டாள்.ஷாலினிக்கு பத்மினியை பற்றி நன்கு தெரியும் பிரதாப்பை பிடித்திருந்தாலும் அவளாய் வாய் திறந்து தன் தந்தையிடம் சொல்ல மாட்டாள் என்று….
ஆனால் பிரதாப்பே திருமணம் பேச வந்தும் கூட அவள் யோசித்ததில் தான் அவளுக்கு டென்ஷன் கூடி போய் விட்டது.அதனால் தான் வேறு யாரையும் பாராது அவள் கவனம் முழுவதும் பத்மினியிடமே இருந்தது.பின் திருமணத்துக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அந்த மகிழ்ச்சியிலேயே அவர்கள் இருவரையுமே பார்த்திருந்தாள் பத்மினியின் நலம் மட்டுமே நாடும் ஷாலினி.
அதனால் ஷாலினி பத்மினியின் வீட்டில் அசோக்கை சரிவர கவனிக்க வில்லை.இப்போதும் முதலில் விழுந்ததில் கையில் ஏற்பட்ட எரிச்சல்.அத்தோடு பிரதாப்பிடம் சண்டை இடுபவனை துறத்துவதிலும், பத்மினிக்கு ஏதும் அடி பட்டு விட்டதா....?என்ற கவலையிலுமே இப்போதும் அசோக்கை கவனிக்க வில்லை.
பின் நிலமை சரியானவுடன் தான்…. தன் கண்ணை தன்னை சுற்றி வட்டம் இட்டாள்.அப்போது தான் அசோக்கை பார்த்தாள்.மாநிறம் தான் ஆனால் அந்த நிறம் தான் அவனுடைய அழகையே எடுத்து காட்டுவதாக இருந்தது.அத்துடன் நிலமையை சரிவர கைய்யாண்ட அவன் திறமை ….
அவள் எப்போதும் கலகலப்பாக… தான் இருப்பாள்.தோழிகளுடன் மற்ற பசங்களை பாத்து கலாய்ப்பாள் தான். ஆனால்,சீரியஸாக வெல்லாம் இது வரை யாரிடமும் எண்ணம் சென்றது இல்லை. அசோக்கை பார்த்தவுடன் மற்றவர்களை பார்த்து செய்வது போல் கலைய்க்க தோன்றவில்லை.
ஏதோ தனக்குள் இது வரை தோன்றாத வகையில் உடம்பில் நடுக்கம். யாரையும் நேர் கொண்டு கண்ணை பார்த்து தான்… அவளுக்கு பழக்கம். ஆனால் அசோக்கை அப்படி பார்க்க முடியவில்லை.
இந்த எண்ண ஓட்டதோடு அசோக்கையே பார்த்திருந்த ஷாலினி பிரதாப் அசோக்கிடம் பேசிக் கொன்டிருக்கும் போதே சட்டென்று தன்னை திரும்பி பார்ப்பான் என்று எதிர் பார்க்கவே இல்லை.அப்படி சட்டென்று தன்னை பார்த்தவுடன்… அதுவும் தான் பார்த்ததை அவனும் பார்த்து விட்டானே… என்று சட்டென்று தன் தலையை குனிந்துக் கொண்டான்.இருந்தும் அவள் கன்னம் சிவப்பதை தடுக்க முடிய வில்லை.
பிரதாப்பின் பேச்சைக் கேட்டு ஷாலினியை பார்த்த அசோக் மெய் மறந்து நின்றான்.ஆம் ஷாலினியிந் கன்னச்சிவப்பை அசோக்கும் கவனித்து விட்டான்.அவள் முகத்தை பார்த்தே அவளுக்கும் ஏதோ ஒரு வகையில் தன்னிடம் ஈர்ப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டு கொண்டான்.
இவற்றை அசோக் மட்டும் கண்டு கொண்டிருந்தாள் பரவாயில்லையாக போய் இருக்கும்.ஆனால் அசோக்கின் கெட்ட நேரம் பிரதாப்பும் பார்த்து விட்டது தான் வினையாக போய்விட்டது.
அசோக்கின் விளா எலும்பில் தன் கை முட்டி கொடுத்து இடித்த வாரே… “என்ன காபியும், டவளும் வொர்க்கவுட் ஆகி விட்டது என்று நினைக்கிறேன்” என்று கூறிக் கொண்டே அசோக்கின் கையை இறுக்கி பற்றிக் கொண்டு தன் மகிழ்ச்சியை தெரிவித்தான்.
பாவம் இது ஏதும் அறியாத பத்மினி….என்ன தான் சின்ன காயம் என்றாலும் அந்த சிராய்ப்பு அவளுக்கு எரிச்சல் கொடுத்தது.இவர்கள் காரில் ஏறுமாறு என்று சொன்னதோடு சரி. பின் அவர்கள் பாட்டுக்கு குத்தி கொள்கிறார்கள்.கையை பிடித்து அழுத்திக் கொள்கிறார்கள்.
என்று நினைத்துக் கொண்டே சரி ஷாலினியிடமாவது தனக்கு மிகவும் எரிச்சலாக இருக்கு சீக்கிரம் ஹாஸ்பெட்டல் செல்ல வேண்டும் என்று கூற திரும்பினால்….அவள் முகம் சிவந்து கிடப்பதை பார்த்து பதைத்து விட்டாள். அதே பதைப்புடன் “ஷாலினி என்ன ஆச்சு தலை கவிழ்ந்து விழுந்ததில் முகத்தில் ஏதும் அடிப்பட்டு விட்டதா…..?ரொம்ப வலிக்கிறதா...?ஷாலினி ஏன் முன்பே சொல்லவில்லை…?” என்று கூறி அவள் மானத்தை வாங்கி விட்டாள்.
பத்மினியின் இந்த பேச்சால் ஷாலினிக்கு இன்னும் கன்னம் சிவந்தது தான் மிச்சம் என்றால்….. பிரதாப்புக்கும் அசோக்குக்கும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தே விட்டனர்.இவர்களின் சிரிப்பை பார்த்த ஷாலினி பழைய ஷாலினியாக மாறி அசோக்கை ஒரு பார்வை பார்த்தாள்.
அவ்வளவு தான் அசோக்கின் சிரிப்பு துணி கொண்டு துடைத்தது போல் நின்று விட்டது.ஆனால் பிரதாப் இதுக்கெல்லாம் நான் அசரமாட்டேன் என்பது போல் இன்னும் பலமாக சிரித்தான்.
பத்மினி ஒன்றும் புரியாமல் திருதிருவென்று முழித்தாள். பின் என்ன அடிப்பட்டவர்களை ஹாஸ்பெட்டல் கூட்டிக் கொண்டு போகாமல் இவர்கள் பாட்டுக்கு சிரித்துக் கொண்டிருக்கிறார்களே… என்று கோபம் கொண்டாள்.
ஏனோ அவள் மனதுக்குள் இப்போது தன் தந்தை மட்டும் இருந்தாள்...இப்படியா இருப்பார் துடித்து போய் ஹாஸ்பெட்டல் அழைத்துக் கொண்டு சென்றிருப்பார் என்று நினைக்க தோன்றியது. அதன் விளைவாக உடனே தன் தந்தையை பார்க்க மனம் ஏங்கியது.
பிரதாப்பும் முதலில் பத்மினியை அவ்வாறு தன் வண்டி முன் விழுந்து கிடப்பதை பார்த்ததும் அவனும் பயந்து விட்டான் தான். பின் பயப்படும் படி ஒன்றும் இல்லை சின்ன சிராய்ப்பு தான் என்று தெரிந்தவுடன் அவன் சகஜ நிலைக்கு திரும்பி விட்டான்.அவனை பொருத்த வரை இந்த அடியெல்லாம் ஒன்றுமே இல்லை அவனுக்கும் நிறைய தடவை இது போல் அடிப்பட்டிருக்கிறது.அவனுக்கு அது அவ்வளவாக வலிக்காது என்பதால் அதனை கண்டுக் கொள்ள மாட்டான்.
அவ்வாறு பத்மினியையையும் நினைத்தது… தன் பிற்காலத்தில் பிரதாப் பட போகும் துன்பத்துக்கு வித்திட போகிறது என்று பாவம் அவன் அறிய வில்லை.பத்மினி எப்போதும் தன்னை தனி கவனமுடன் தாங்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாள்.அப்படி தான் பத்மினியின் தந்தை கேசவமூர்த்தி தன் மகளை பார்த்துக் கொண்டார்.
அவளுக்கு நட்பு வட்டம் அதிகம் இல்லாததுக்கு இவளின் இந்த குணமே காரணம். ஷாலினி மட்டுமே அவள் தோழி. ஏன் ?என்றால் சிறு வயது முதலே ஷாலினி அவளிடம் பாசமாக இருப்பாள். அதனால்,மற்றவர்களிடம் பேசினாலும் ஒரு எல்லையிலேயே நிருத்தி விடுவாள்.
கேசவமூர்த்தி பத்மினிக்காகவே தன் முப்பாதாவது வயதிலேயே மனைவியை பறிகொடுத்தும்…..அவர் அம்மா அவரை இரண்டாம் திருமணம் செய்ய வற்புறுத்தியும் கூட தன் மகள் மேல் உள்ள பாசத்தாலும் …தன் மனைவி சாந்தி மேல் உள்ள எல்லையில்லா காதலாலும்…. அவர் அன்னையிடம் திட்ட வட்டமாக சொல்லி விட்டார்.
என் வாழ்க்கைக்கு என் மகள் பத்மினி மட்டும் போதும் என்று… எனக்கும் என் மகளுக்கும் இடையில் வேறு ஒருவர் வருவதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று.இவற்றை பத்மினி தன் பாட்டி சில சமயம் ஆதங்கத்தில் சொல்லுவார். அதனை கேட்ட பத்மினி தன் தந்தையின் மீது மேலும் மரியாதை கூடியது.
இவளின் இந்த குணத்தால் பாவம் பிரதாப் எந்த அளவுக்கு பாதிக்க பட போகிறானோ… பாவம்.இப்படி பட்ட குணம் உடைய பத்மினி தனக்கு அடி பட்டும் அதனை சிறிதும் கண்டு கொள்ளதா பிரதாப்பின் மீது கோபம் வந்தது.அதுவும் அவன் வேறு ஒருவனாக இருந்தாள் அவள் கோபம் கொண்டிருக்க மாட்டாள்.
நமக்கு கோபம் யார்? மீது வரும் உரிமை உள்ளவரிடம் தானே கோபம் வரும்.இந்த கோபத்துடன் கையில் உள்ள சிராய்ப்பில் எரிச்சலும் சேர்ந்துக் கொள்ள….நேராக ஷாலினியிடம் விரைந்தாள்.அவளிடம் உள்ள தன் பர்ஸை பிடிங்கி அதில் உள்ள செல்லை எடுத்து தன் தந்தைக்கு அழைக்க முற்பட்டாள்.
அவளின் செயலை பார்த்திருந்த ஷாலினி சட்டென்று அவளிடமிருந்த செல்லை பிடிங்கினால் “என்னடி செய்கிறாய் என்ற வாறே…”
“ஏன்…?என் அப்பாவை கூப்பிடறேன் ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போக “என்று அவள் கூறி முடிப்பதற்குள் பிரதாப் அவளின் கையை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளினான். இந்த செயலை பத்மினி சிறிதும் எதிர் பார்க்க வில்லை.அவளிடம் யாரும் இது வரை இது போல் நடந்தது கிடையாது.
பத்மினி பயந்து போய் காரின் மூலையில் ஒடுங்கினாள்.அசோக்கும் பிரதாப்பின் இச்செயலை சிறிதும் எதிர் பார்க்க வில்லை.ஷாலினி சிறிது நேரம் என்ன நடந்தது என்று அனுமானிக்கவே சில நிமிடம் தேவைப் பட்டது.புரிந்தவுடன் அசோக்கை முறைத்தாறு பத்னிமியிடம் விரைந்தாள்……அவளை பற்றி ஷாலினிக்கு நன்கு தெரியும் ஒரு சிறு அவமதிப்பு கூட அவளால் தாங்கி கொள்ள முடியாது.அதுவும் தன்னவனிடம் இருந்து ஷாலினிக்கு பத்மினியின் குணநலன்கள் நன்கு தெரியும்.அதனால் தான் பிரதாப்பின் இந்த நடவடிக்கையால் பிரதாப்பை முறைக்க முடியாமல் அசோக்கை பார்த்து முறைத்தாள்.
பத்மினியிடம் விரைந்த ஷாலினி “என்னடி ஆச்சீ ஏன்? உன் அப்பாவை கூப்பிட நினைத்தாய்.அது தான் அழைச்சிட்டு போக இவங்க இருக்காங்களே….”என்று கூறினாள்.பிரதாப்பின் நடவடிக்கையில் இருந்தே அவனின் மன நிலையை நன்கு அறிந்துக் கொண்டாள் ஷாலினி…. பத்மினி அருகில் இருக்கும் தன்னை ஹாஸ்பெட்டலுக்கு அழைக்காமல் அவள் தந்தையை அழைத்தது தான் கோபம் என்று.
இது காதலின் உரிமை என்றும்… ஷாலினி படிப்பில் தான் அப்படி… இப்படி…. மற்ற பொது அறிவில் அவளை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.
ஷாலினி கேட்டவுடன் பயந்துக் கொண்டே “இ...இல்…...இல்லை எனக்கு ரொம்ப வலிச்சது அது தான் என்று இழுத்தாறு தன்னுடைய பேச்சை நிறுத்தி பயத்துடன் பிரதாப்பை பார்த்தாள்.
பிரதாப்பின் இந்த நடவடிக்கையால் அவனின் பிற்கால வாழ்க்கையை அவனே சிக்களாக்கி கொள்கிறான் என்றும்….. அந்த சிக்களுக்குள் அவனே சிக்கீ சின்ன பின்னமாக போகிறான் என்றும்….. பாவம் அவன் அறிந்திருக்கவில்லை.
அத்தியாயம்-----13
பத்மினி வலித்தது அதனால் தான் தன் தந்தையை அழைத்தேன் என்று உரைத்தவுடன்.அதை கேட்ட பிரதாப்புக்கு கோபம் எல்லையைய் கடந்தது.ஆக்ரோஷத்துடன் முகத்தை வைத்துக் கொண்டு “எங்களை எல்லாம் பார்த்தால் உனக்கு மனுஷங்களா தெரியவில்லையா…..” மனதுக்குள் உன் தந்தை மட்டும் தான் மனித ஜென்மமா… தெரியறனா… என்று நினைத்துக் கொண்டான்.
பிரதாப் மட்டும் தன் மனதில் நினைத்ததை வெளியில் சொல்லி இருந்தால் ….அவனின் திருமணப் பேச்சு பேச்சோடு நின்று இருக்கும்.பிரதாப் இந்த கோபத்திலும் அவளின் வலிக்கிறது என்ற சொல் அவனை விரைந்து செயல் படவைத்தது. டிரைவர் சீட்டில் அமர்ந்தவாறு ஷாலினியையும் அசோக்கையும் அமரும் படி அவசரப்படுத்தினான்.
இருவரும் அமர்ந்ததும் காரை விரட்டினான்….. பிரதாப்பின் அருகில் அமர்ந்து இருந்த பத்மினி பயந்து போய் கண்ணை மூடிக்கொண்டாள்.பத்மினியே தன் ஸ்கூட்டியை வேகமாக தான் ஒட்டுவாள். ஆனால் பிரதாப்பின் இந்த வேகம் அவள் பயந்து தன் கண்ணை மூடிக் கொள்ள.
பிரதாப் பத்மினி கண்ணை மூடியதும் வலியில் தான் கண் மூடி கொள்கிறாள் என்று கருதி இன்னும் தன் வேகத்தை கூட்டினான்.இருபத்தி ஐந்து நிமிடத்தில் கடக்க வேண்டிய இடத்தை பத்து நிமிடத்தில் வந்தடைந்தான்.
பின் பிரதாப்பின் அவசரத்தினாலும் அவன் எப்போதும் பயன்படுத்தும் தன் பண பலத்தாலும் அதிக நேரம் காக்க வைக்காமல் பத்மினிக்கும், ஷாலினிக்கும் சிகிச்சை நடந்தது.
சிகிச்சைக்கு பிறகு பத்மினிக்கு எரிச்சல் கொஞ்சம் குறைந்தது.மேலும் பிரதாப் ஹாஸ்பெட்டல் வந்ததும் தன் சிகிச்சைக்காக அவன் செயல் பட்ட விதத்திலும், காரையும் தனக்காக தான் அவ்வளவு அவசரமாக செலுத்தினான் என்று சற்று முன் அசோக்கிடம் சொல்லியதை கேட்டதாலும் அவள் மனநிலை சகஜ நிலைக்கு மாறியது.
ஆம் பத்மினிக்கு அவள் மீது கொஞ்சம் அக்கரை செலுத்தினாலே போதும் அவள் சகஜ நிலைக்கு மாற… இவற்றை பிரதாப் புரிந்துக் கொள்வானா….?
பிரதாப் பத்மினியின் அருகில் வந்து “இப்போது எப்படி இருக்கிறது” என்று மிக மென்மையாக வினாவினான்.பத்மினிக்கு சற்று முன் தன்னிடம் சத்தம் போட்டவாரா… என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு...அவன் முகத்தில் அவ்வளவு மென்மை,குரலில் அவ்வளவு குழைவு.
பிரதாப்பின் இந்த அணுகு முறையே பத்மினியை வீழ்த்துவதற்கு போதுமானதாக இருந்தது.மெல்ல சிரித்துக் கொண்டே “கொஞ்சம் பராவாயில்லை”என்று கூறிக் கொண்டே அவனை பார்த்தாள்.அப்போது பிரதாப்பும் அவளைதான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் பார்ப்பதை அறிந்துக் கொண்ட பத்மினி சட்டென்று தலை குனிந்தாள்.அவனின் பார்வையில் கன்னம் மட்டும் சிவக்காமல் தன் உடல் முழுவதும் சிவந்தது.ஆம் அவன் பார்வை தன் முகத்தில் மட்டும் இல்லாமல் தன் உடல் முழுவதும் வலம் வந்ததே அதற்கு காரணம்.
பத்மினியின் மாற்றத்தை அறிந்துக் கொண்ட “பிரதாப் என்னை பார் மினி”என்று கூறி அவள் முகத்தை தன் கைய் தொட்டு நிமிர்த்தினான்.
அந்த தொடுகை இருவருக்குள்ளும் இருந்த நீருப்பூத்த நெருப்பு போல் இருந்த அவர்களின் உணர்ச்சியை விசிறியால் விசிறிவிட்டது போல் ஆனாது.
பிரதாப் பத்மினியின் மிக அருகில் நகர்ந்து அமர்ந்துக் கொண்டான்.பத்னிமியின் காயத்தை மெல்ல தடவியவாறு “ வலிக்கிறதா….”என்று கேட்டவாறு பதில் சொல்லும் அவள் உதட்டையே பார்த்திருந்தான்.
அவன் பார்வையில் மேலும் சிவந்தது தான் மிச்சம்.பிரதாப் சிரித்துக் கொண்டே “இப்போது புரிகிறதா...ஷாலினிக்கு முகம் ஏன் சிவந்தது என்று”கூறி கண் சிமிட்டி சிரித்தான்.
பத்மினி அப்போதும் புரியாமல் பிரதாப்பை பார்த்து “அவளுக்கு ஏன் சிவக்க வேண்டும் அவளுக்கு தான் இன்னும் திருமணத்தை பற்றியே இன்னும் பேச வில்லையே…”என்று ஒரு அறிவு பூர்வமான கேள்வி எழுப்பினாள்.
பத்மினியின் இந்த பதில்… பிரதாப்பின் நெஞ்சில் தென்றல்,புயல் இரண்டும் ஒரு சேர வீசியது. கன்னம் சிவக்க திருமணம் தேவையில்லை என்று புரியாதவளாக இருக்கிற அவள் கள்ளம் கபட மற்ற மனது அவனிக்கு மகிழ்ச்சியை அளித்தது.
ஆனால் அதற்கு தான் தகுதி உடையவனா..?என்ற கேள்வி தன் மனதில் வந்து செல்வதை தடுக்க முடிய வில்லை.பின் தன் மனநிலையை மாற்ற எண்ணினான்.பத்மினியுடன் இருக்கும் பொழுதை மகிழ்ச்சியுடன் செலவிடவே அவன் விரும்பினான்.
பத்மினியை சிரிப்புடன் பார்த்தவாரே… அவள் கையை தன் கைக்குள் சிறையிட்டு கொண்டான்.அந்த தொடுகை பத்மினிக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது.அவன் கையில் இருந்து தன் கையை எடுக்க முயன்றவாறு ப்ளீஸ் கைய் விடுங்க அவங்க வந்துட போறாங்க…..”என்று கூறிக் கொண்டே தன் கையை இன்னும் பலமாக இழுத்தாள்.
அப்போதும் விடாமல்” இந்த கையைவிடவா….” என்று கூறி புருவத்தை ஏற்றி இறக்கி கண் சிமிட்டினான்.மனதில் உன் கையைய் விடவா நான் இவ்வளவு காரியம் செய்கிறேன் என்று கூறிக் கொண்டான்.
பத்மினி பிரதாப்பின் கண் சிமிட்டலில் நெளிந்தவாரே….”ப்ளீஸ் பிரதாப்”என்று கூறினாள்.
“ஏய்...இப்போ என்ன சொன்ன…?பத்மினியிம் வாயில் இருந்து தன் பெயர் ஒலித்ததில் தன் பெயருக்கே ஒரு அழகு வந்து விட்டதாக கருதினான்.ஆனால் மனதுக்குள் நீ என் பெயரை சொல்வதை விட மாமா என்ற அழைப்பிற்காக தான் நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டான்.
பத்மினியோ நாம் இப்போது என்ன சொன்னோம் இப்படி பதட்டமாக கேட்கிறார்.தவறாக கூறி இருப்போமா…?அப்படி என்ன கூட முடியவில்லை.ஏன் என்றால் அவர் முகத்தில் கோபத்துக்கான சாயல் சிறிதும் இல்லை.
அவளுக்கு புரியாமல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டே…. இருந்ததில் அதில் தெரிந்த குழந்தை தனத்தில் தன்னை முற்றிலுமாக இழந்தான்.அவர்கள் இருந்த இடம் கூட நினைவிக்கு வரவில்லை.தன் கையில் இருக்கும் அவள் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டான். அவள் கையின் ஸ்பரிஸத்தை கண் மூடி அனுபவித்தான்.
பின் கண் திறந்து பார்த்ததில் அவள் முகத்தில் பதட்டத்தை பார்த்து அப்போது தான்…. இருக்கும் இடமும் ,பின் அவளின் நிலையும் புரிந்து சட்டென்று அவள் கையை விட்டு விட்டான்.
பிரதாப் கையை விட்டவுடன் சட்டென்று அவனை விட்டு நகர்ந்து அமர்ந்தாள்.அவளுக்கு அவன் முகத்தை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. இது போல் ஒரு உணர்வு அவள் வாழ்நாளில் உணர்ந்தது கிடையாது.
பிரதாப்புக்கும் இது ஒரு புது அனுபவமே…...பெண்களின் ஸ்பரிசம் அவனுக்கு புதியது கிடையாது.அவன் பழகிய பெண்களுக்கு வெட்கம் என்றால் என்ன வென்று தெரியாது.மேலும் அதில் காமம் மட்டுமே இருக்கும்.
பத்மினியின் தளிர் கரத்தில் தன் கைப்பட்டவுடன் அதில் அவள் மேனியில் எழுந்த சிலிர்ப்பை அவனால் நன்கு உணரமுடிந்தது.அதுவும் அவள் மேனியில் இருந்து வரும் வாசனை… எந்த வாசனை திரவியமும் இல்லாமல் அவள் மேனியில் இருந்து வரும் இயற்கையான வாசனை அவனை பித்தனாக ஆக்கியது.
பிரதாப்பும் பத்மினியும் ஒன்றும் பேசாமல் அவர் அவர் நினைவலையில் மூழ்கி இருந்தனர்.இவர்களின் மௌனத்தை கலைக்க மாத்திரை வாங்க சென்று இருந்த ஷாலினியும் அசோக்கும் அப்போது தான் வந்திருந்தனர்.
ஷாலினி பத்மினியின் அருகில் சென்று அவள் கையை தொட்டு “என்ன பத்மினி ஏன் அசையாமல் இருக்கிறாய் என்று பதட்டதுடன் விசாரித்த வாரே….”அசோக்கை முறைத்தாள்.
அவளுக்கு தான் சென்றவுடன் திரும்பவும் பிரதாப் ஏதாவது பத்மினியை திட்டி இருப்பானா…? என்று சந்தேகம். அதனால், தான் அசோக்கை பார்த்து முறைத்தாள்.அசோக் ஒன்றும் புரியாமல் முழித்தான். இப்போது கூட மருந்தகத்தில் நன்றாக தானே அவளுக்கும் தனக்குமான உறவு முறை சென்று கொண்டிருந்தது.
மருந்தகத்தில் ஷாலினி கொடுத்த பணத்தை வாங்கி போட்டு கொண்டு கொடுக்கவில்லை என்று வாதாடி கொண்டிருந்த அந்த கேஷியரை…. ஷாலினி பிடி பிடி என்று பிடித்துக் கொண்டிருந்தாள். கார் பார்கிங்கில் பிரதாப் அவசரமாக நோ பார்கிங்கிங் ஏரியாவில் நிறுத்தி விட்டு வந்ததால் வாச்மேன் வந்து இவர்களை காரை எடுக்குமாறு கூறினான்.
அதனால் அசோக் பிரதாப்பிடம் இருந்து சாவியை பெற்றுக் கொண்டு காரை பார்க் செய்து வருவதற்குள் இங்கு ஷாலினி அந்த கேஷியரை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தாள்.அப்போது அசோக் தான் தலையிட்டு அவர்களிடம் கணக்கை சரிபடுத்தும் போதே தங்களின் கெமிஸ்டிரியையும் சரிபடுத்திக் கொண்டு அவளின் கைய் கோர்த்துக் கொண்டு வரும் நிலைக்கு வந்திருந்தான்.
ஆனால் இங்கு பத்மினியை பார்த்ததும் பழைய நிலைக்கு திரும்பவும் தள்ளப்பட்டான்.பிரதாப் செய்யும் ஒவ்வொறு வேலைக்கும் தனக்கு இங்கு ஆப்பு ரெடியாகிறேதே…. என்று மனதுக்குள் நொந்துப்போனான்.
அந்த கோபத்தில் பிரதாப்பிடம் “ இப்போ என்னதாண்டா உன் பிரச்சனை….?” என்று சளிப்புடன் வினாவினான்.அசோக்கின் கேள்வில் தான் தன் சுயநிலையை அடைந்த பிரதாப்” நீங்க எப்போடா வந்தீங்க…? உனக்கு காரை பார்கிங் பண்ண இவ்வளவு டைமா…?என்று அசோக்கிடம் கேள்வி எழுப்பிக் கொண்டே பத்மினியை பார்த்தான்.
பத்மினியும் பிரதாப்பின் பார்வைக்கு பதில் பார்வை பார்த்ததில் நிலமையை புரிந்துக் கொண்ட ஷாலினி ஒ…. அம்மா இதுக்கு தான் மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி இருக்காங்களா…..என்ற நமுட்டு சிரிப்புடன். அசோக்கை பார்த்து …
“அசோக் நீங்க ஏன்…? காரை பார்க் பண்ண இவ்வளவு டைம் எடுத்திங்க…? பார் இவங்க பாவம் இவர்கள் தங்களுக்குள் பேசாமல் நீங்க எப்போ வருவீங்க என்று பார்த்து…. பார்த்து…. கண் கூட பூத்து போச்சீ பாருங்க….?என்று அவர்களை வாரினாள்.
ஷாலினியின் கேலி பேச்சில் பத்மினி என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தாள் என்றால் …பிரதாப் “ஆமாம் ….ஆமாம்…..நானும் போனவங்களை காணவில்லையே என்று பார்த்திருந்ததால் தான் இருவரும் கைய் கோர்த்து வரும் அற்புத காட்சியை என்னால் பார்க்க முடிந்தது.” என்று பதிலுக்கு பிரதாப் அவர்கள் இருவரையும் வாரினான்.
அசோக் மனதுக்குள் இவன் எந்த மனநிலையிலும் ஸ்டடியா தான் இருக்கான் நாம் தான் ஜெர்க் ஆகிடறோம்.என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான். பாவம் கொஞ்ச நேரம் முன் வந்திருந்தால் தன் நண்பனின் நிலை தன் நிலையை விட மோசம் என்று எண்ணி இருப்பான்.
ஆம் அசோக்குக்கும் அதே நிலை தான் இது வரை அவன் தொழில் ரீதியாக மட்டுமே பெண்களின் கை குலுக்கு இருக்கிறானே .தவிற ….தனிப்பட்ட முறையில் பெண்களின் கை கூட அவன் தொட்டது கிடையாது.
ஷாலினியின் இந்த கை தொடுகை அவனை வேறு உலகுக்கே இழுத்து சென்றது.அவன் சஞ்சாரத்தை கேசவமுர்த்தியின் குரலால் தடை பட்டது.பதட்டதுடன்” பத்தூ பாப்பா என்னம்மா ஆச்சீ யார் உன்னை இடித்தது அடி ஒன்றும் பலம் இல்லையே….. “என்று மற்றவர்களுக்கு பதில் சொல்லும் வாய்பே கொடுக்காமல் பேசிக் கொண்டே சென்றார்.
கேசவமுர்த்தியின் குரலால் அசோக்கின் சஞ்சாரம் கெட்டது என்றால் பிரதாப்புக்கு அது வரை இருந்து வந்த இதமான மனநிலை மாறியது.
தந்தையின் குரலை கேட்ட பத்மினி சட்டென்று பிரதாப்பின் அருகில் இருந்து எழுந்து தன் தந்தையிடம் விரைந்து வந்து அணைத்துக் கொண்டாள்.அவளுக்கு சிறு வயது முதலே தாய் இல்லாததால் அனைத்துக்கும் தன் தந்தையையே நாடுவாள். சிறு வலியை கூட பத்மினியால் பொறுத்துக் கொள்ள முடியாது.
ஏன் இப்போது கூட பத்மினி ஷாலினிக்கு ஒன்றாக தானே அடிப்பட்டது.இன்னும் கேட்டால் … பத்மினியை விட ஷாலினிக்கு தான் அதிக சிராய்ப்பு. அவள் அதை ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்ள வில்லை. ஆனால் பத்மினி அடி சிறிது என்றாலும் கூட தான் கவனிக்க படவில்லை என்றதிலேயே அவளின் வலி மேலும் அதிகரித்தது.
அதனால் தான் அப்போது தன் தந்தையை தேடினாள். ஏன் அவள் பெரிய மனிஷியாக ஆகும் போது கூட வேறு யாரிடமும் இதை பகிராமல் தன் தந்தை ஆபீஸில் இருந்து வந்தவுடன் தான் கூறினாள்.வேலைகாரி ஏன் சீக்கிரம் வீட்டுக்கு வந்து விட்டீர்கள் என்று விசாரித்த போதும் ஒன்றும் சொல்லவில்லை.
எந்த விஷயத்தையும் தந்தையுடனே பகிரும் பழக்கம் கொண்ட பத்மினி இப்போதும் அது போலவே தந்தயை ….பார்த்தவுடன் இவ்வளவு நேரம் காதல் மயக்கத்தில் இருந்தவள்… பாசவலையில் வீழ்ந்து விட்டாள்.
தந்தையின் மார்பில் தலை வைத்து “அப்பா… அப்பா… “என்று கூறிக் கொண்டே தன் காயத்தை காட்டிக் கொண்டிருந்தாள். அதனை பார்த்த அசோக்குக்கே வயித்தெரிச்சலாகி விட்டது,
பின் என்ன ?பத்மினியை பார்த்தால் தன் அம்மூவுக்கு தான் காயம் அதிகம் அவளே…. ஒன்றும் சொல்லாமல் மாத்திரையையும் அவளே வாங்கிக் கொண்டு வந்திருக்கிறாள். பத்மினி என்னடனா….என்னவோ மல்டி பிராக்சர் மாதிரி என்னமா...சீன போடுறாங்க பத்மினி மட்டும் தன் நண்பன் பிரதாப்பின் வருங்கால மனைவியாக இல்லாதிருந்தாள். கண்டிப்பாக ஏதாவது சொல்லியிருப்பான்.
அசோக் அந்த கடுப்புடனே பிரதாப்பை நோக்கினான். அங்கு பிரதாப்பின் முகத்தில் அவன் கண்ட கோபத்தை பார்த்து தன் நினைப்பை எல்லாம் தூக்கி போட்டு அவன் அருகில் சென்று “பிரதாப் கண்ரோல் பண்ணு…. இல்லேன்னா நாம் இவ்வளவு கஷ்டப்பட்டது எல்லாம் வீணாக போயிடும்.”என்று கூறியவாறு அவன் கையைய் தன் கையோடு சேர்த்து அவனை சமநிலைக்கு கொண்டு வர முயற்ச்சி செய்தான்.
அசோக்கின் பேச்சில் பிரதாப் இருக்கும் சூழ்நிலையை கருதி தன் முகத்தை சதாரணமாக வைக்க முயற்ச்சி செய்தான்.அது அவனுக்கு கடினமான காரியமே …..ஏன்? என்றால் அவன் யாருக்ககாவும் இது வரை தன்னை நியாயப்படுத்தி காட்டிக் கொள்ள முனைந்தது கிடையாது. அதனால் நான் இப்படி தான் என்று வெளிப்படையாக நடந்து தான் பழக்கம்.
அதனால் அவன் தன் சுபவாத்துக்கு எதிர்பதமாக நடந்துக் கொள்வது என்பது மிக கடினமாக இருந்தது.முயன்று தன்னை நார்மலாக காட்டிக் கொண்டான்.அதுவும் இப்போது அவனின் கோபம் எல்லாம் கேசவமூர்த்தியை விட பத்மினி மீது தான் அதிகம் இருந்தது.
இவ்வளவு நேரம் தன் அருகில் குளிர் நிலவு என அமர்ந்து தனக்கு குளிர்ச்சியை தந்தவள். தன் தந்தையை பார்த்ததும் தன்னை விட்டு சட்டென்று நீங்கி தன் தந்தையின் தோள் சாய்ந்தது தன் மேல் நெருப்பை கொட்டியது போலானது.
அவன் சகஜநிலைக்கு வந்ததும் தன் கவனத்தை பத்மினி கேசவமூர்த்தியிடம் திருப்பினான்.அங்கு பத்மினி அதற்குள் தன் தந்தையிடம் செல்லம் கொஞ்சி முடித்திருந்தாள்.
பின்பு தான் பத்மினி தான் இருக்கும் இடமே நினைவுக்கு வந்தது என்றால் பிரதாப்பின் நிலையை நீங்களே யோசித்து கொள்ளுங்கள்.பின்பு பத்மினி “அப்பா இவர் தான் என்னை ஹாஸ்பெட்டல் அழைத்துக் கொண்டு வந்தார்”என்று கூறினாள்.
ஆனால் தப்பி தவறி கூட தனக்கு அடிபட இவர் தான் காரணம் என்பதை கூற வில்லை.ஷாலினி கேசவமூர்த்தியிடம் “அங்கிள்….”என்று எதையோ கூற வருவதற்குள் ஷாலினியிடம் கண் ஜாடை காட்டி அடக்கினாள்.
ஷாலினியும் என்னடா…. இது உலக அதிசயமாக இருக்கு. பத்மினி தன் தந்தையிடமிருந்து ஒன்று மறைக்கிறாள் என்றால் அவளுக்கு தெரிந்து இது ஒன்று தான்.
பத்மினியின் கண் ஜாடையை ஷாலினி மட்டும் கண்டுக் கொள்ள வில்லை பிரதாப்பும் அதனை பார்த்து விட்டான். அவளின் இந்த செயளால் எரிகின்ற மனதுக்கு பன்னீர் தெளித்தது போல் இருந்தது.
பிரதாப்புக்கு புரிந்து விட்டது.ஷாலினி ஆக்சிடெண்டை தான் கூற வந்தாள் என்றும். அதனை பத்மினி தடுத்தது தன்னை கேசவமூர்த்தி தவறாக நினைக்க கூடாது…. என்று தானே….. தன் தந்தையிடமே மறைத்தாள்.தனக்காக தன் தந்தையிடமே ஒன்று மறைக்கின்றாள் என்றால் தன்னை முக்கியமாக கருதுகிறாள் என்று தானே அர்த்தம்.
அவன் மனதுக்குள் மகிழ்ந்துக் கொண்டு இருக்கையிலேயே...கேசவமூர்த்தி பிரதாப்புக்கு நன்றி தெறிவித்தார்.அந்த நன்றி கூட பிரதாப்புக்கு வெப்பங்காயக… கசந்தது.யார்…?யாருக்கு நன்றி சொல்வது. என் பத்மினியை ஹாஸ்பெட்டல் அழைத்து வந்ததற்கு இவர் எனக்கு நன்றி சொல்வாராமா…..?கூடிய விரைவில் உன்னிடம் இருந்து அந்த உரிமையை பறிக்கிறேன். என்று மனதோடு இதனை சொல்லிக் கொண்டு…
கேசவமூர்த்தியிடம் மறைமுகமாக இதற்கு எல்லாம் ஏன் நன்றி ... இனிமேல் அவள் நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் நான் தானே பொறுப்பு என்று உரைத்தான்.
இதில் உள்ள உள்குத்து அறியாத கேசவமூர்த்தி பிரதாப்பின் பேச்சில் மயங்கி விட்டார்.ஏற்கனவே இந்த ஆஸ்பிட்டலின் டியூட்டி டாக்டர் மூலம் தான் பத்மினியின் விபத்து பற்றி தெரிந்து இங்கு வந்தார்.மேலும் அவர் பிரதாப் பற்றி கூறிய விஷயம்…. தான் பத்மினிக்கு நல்ல மாப்பிள்ளையை தான் நாம் தெர்ந்தெடுத்து இருக்கிறோம் என்று மகிழ்ந்து போனார்.அந்த உணர்ச்சி மிகுதியில் பிரதாப்பின் கை பற்றி கண்டிப்பாக மாப்பிள்ளை என்று உரிமையுடன் அழைத்தார்.
ஆம் இந்த ஹாஸ்பெட்டலில் வேலை பார்க்கும் டாக்டர் கேசவமூர்த்தியின் நண்பர் அவர் மூலமே கேசவமூர்த்திக்கு விஷயம் தெரிந்தது.பிரதாப் பத்மினிக்கு சிகிச்சை மேற்கொள்ளும் போது இஞ்சக்க்ஷன் செலுத்தும் போது பத்மினியோடு பிரதாப் தான் பக்கத்தில் இருந்து “பார்த்து…. பார்த்து….” என்று அழிச்சாட்டியம் செய்துக் கொண்டிருந்தான்.
அந்த டாக்டருக்கு ஏற்கனவே பத்மினியை கேசவமூர்த்தி மகளாக தெரியும். ஆனால் பத்மினிக்கு தான் அவரை தன் தந்தையின் நண்பர் என்று தெரியாது.அதனால் அந்த டாக்டர் விக்டர் பிரதாப்பிடம் “நீங்க என்ன வேண்டும் என்று கேட்டதற்கு…. “எப்போதும் திமிருடன் சொல்வது போல்…. அவரிடமும் ஏன்? சொன்னால் தான் சிகிச்சை அளிப்பீர்களா…” என்று கேட்டான்.
“யாருக்கு வேண்டுமென்றாலும் நான் சிகிச்சை அளிப்பேன். ஆனால் நோயாளியின் அருகில் இருப்பதற்கு நெருங்கிய உறவுக்கு மட்டுமே இங்கு அனுமதி.அதனால் தான் கேட்டேன். இப்போது சொல்லாம் இல்லையா…?” நீங்கள் இவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை…
அப்போதும் தெனவெட்டாக…. “இவள் அருகில் இருப்பதற்கு முழு உரிமையும் உள்ள ஒருவன் என்றால் அது நான் தான். அவள் வருங்காள கணவன். இப்போது நான் அருகில் இருப்பதில் உங்களுக்கு தடையேதும் இல்லையே….”என்று கூறினான்.
பிரதாப்பின் பதிலில் பத்மினியின் மேல் அவன் வைத்திற்க்கும் உரிமையை பார்த்து கேசவமூர்த்தி தன் மகளுக்கு நல்ல மணமகனை தான் தெர்ந்தெடுத்து இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டார். அதனால் தான் டாக்டர் விக்டர் அதனை போன் மூலம் தெரிவித்தார்.பிரதாப் பத்மினிக்காக பதைத்து விட்டான் என்று தெரிவித்தாரே தவிர தனக்கும் பிரதாப்புக்கும் நடந்த உரையாடலை தெரிவிக்க வில்லை.
அப்படி தெரிவித்திருந்தாள்.பிரதாப்பின் தனக்கு மட்டுமே உரிமை என்ற சொல்லிலேயே….இக்கல்யாணத்தை நடத்தி இருக்க மாட்டார். இது தான் விதி என்பதோ…. இன்னாருக்கு இன்னார் என்று எழுதி விட்டாள். அதனை யார்? வந்தாலும் மாற்ற முடியாது.