அத்தியாயம்-----18
பத்மினியின் தடுமாற்றத்தை பார்த்த பிரதாப் மினி என்று அவளை பிடிக்க அருகில் சென்ற போது அவனிடம் பேசாமல் வேண்டாம். என்பது போல் தன் கைய் அசைவில் சைகை செய்து தன் தாத்தாவான தீனதயாளனின் அருகில் சென்றாள்.
ஆம் அவளுக்கு தன்னிடம் அவர்கள் எதுவும் கூறவில்லை என்றாலும்… அவர்கள் பேச்சில் இருந்தே….படுக்கையில் இருக்கும் பிரதாப்பின் அம்மாதான்.தன் பாட்டி என்றும்,தீனதயாளன் தன் தாத்தாவென்றும் தன் அப்பாவுக்கும் இவர்களுக்கும் ஏதோ பிரச்சினை என்ற வரையில் அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் அதற்கு மேல் வேறு எதுவும் விளங்கவில்லை.
பிரதாப் பத்மினியின் அருகில் ஏதோ சொல்ல முயலும் போது.”எனக்கு எது தெரிவது என்றாலும் உங்களின் மூலம் தெரிய வருவதில் விருப்பமில்லை.நீங்கள் சொல்ல நினைத்திருந்தால் நம் திருமணத்துக்கு முன் சொல்லி இருக்க வேண்டும்.இல்லை கோவாவுக்கு சென்றவுடனாவது சொல்லியிருக்க வேண்டும்.இப்போது உங்கள் மூலம் எதையும் தெரிந்துக் கொள்ள நான் விரும்பவில்லை.”என்று கூறி அந்த அறையை விட்டு வெளியேற நினைக்கும் போது….பத்மினியின் பாட்டி “ராசாத்தி என்னை விட்டு போயிடாதேம்மா….”என்று கூறிக்கொண்டே தன் படுக்கையில் விட்டு எழும்போது தடுமாறி விழபார்த்தார்.
“பாட்டி”என்று பத்மினியும் “அம்மா” என்று பிரதாப்பும் ஒரு சேர அழைத்தவாரே...அவர் அருகில் சென்று பிடித்தனர். “அம்மா என்ன அவசரம் இப்போ உங்க உடல் நிலையிலே இப்படி எழுந்துக்கலாமா….கொஞ்சம் பொறுமையா இருங்கம்மா”என்ற பிரதாப்புக்கு..
“என்ன பிரதாப் பொறுமையா இருக்க சொல்ற… சாந்தி விசயத்திலும் இப்படித்தான் பொறுமையா… இரு,.பொறுமையா…..இருன்னு சொல்லி சொல்லியே….கடைசியில் என் பொண்ணு முகத்தை கூட பார்க்க முடியாமா...போயிடுச்சி.இன்னும் என்னால… பொறுமையா இருக்க முடியாது.எனக்கு என் பேத்தி என் கூடவே என் கடைசி வரைக்குக் இருக்கணும்.”என்று ஆவேசமாக கத்தியவாறு மயங்கி சரிந்தார்.
தீனதயாளன் “பத்தூ,பத்தூ...என்று பதறி அழைத்தவாரே… தன் பேத்தியிடம் “கண்ணாம்மா…சீக்கிரம் தண்ணிக் கொண்டா…”என்றும் பிரதாப்பிடம் “பிரதாப் டாக்டருக்கு போன் போடு சீக்கிரம்” என்று பதறி தன் மனைவியின் கன்னத்தை தட்டியவாறு இருந்தார். பத்மினி கொண்டு வந்த தண்ணியை தன் மனைவி மீது தெளித்ததும் மயக்கம் தெளிந்ததும்.முதலில் தேடியது தன் பேத்தியை தான்.
பாட்டியின் தேடலை பார்த்த பத்மினி தன் பாட்டியின் அருகில் சென்று அவர் கையை பிடித்தவாறு… “பாட்டி கவலைப்படாதீங்க நான் உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன்.”என்று கூறினாள்.
இந்த வார்த்தை அங்கு இருந்த அனைவருக்கும் எவ்வளவு நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுத்தது என்று அவள் அறிந்தாளா..என்று தெரியாது.ஆனால் அந்த வார்த்தையை கேட்ட பிரதாப்புக்கு மனதுக்குள் நிம்மதி பரவியது.
இது வரை எங்கே தன்னை விட்டு சென்று விடுவளோ…?என்று பயந்துக் கொண்டு இருந்தான்.இப்போது தான் அந்த பயம் அகன்றது.இங்கே இருந்தாள் கண்டிப்பாக அவள் மனதை மாற்றி விடலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.அவன் நம்பிக்கை பளிக்குமா…..
பத்மியின் கையை பற்றி கொண்டே….”என் ராசாத்தி எனக்கு தெரியும் நீ என்னை விட்டு போக மாட்டேன் என்று சந்தோஷத்துடன் கூறிக் கொண்டே தன் கணவனிடம்… “என்னங்க என்ன…? பேத்தி முதல் முறையா… இப்போ தான் நம்ம வீட்டுக்கு வந்து இருக்கா...எதுவும் செய்யாமல் என் முகத்தையே….பார்த்திட்டு இருந்தால் எப்படி சீக்கிரம் லஷ்மியே.. கூப்பிடுங்க இல்லே… வேண்டாம் நானே போய் பார்க்குறேன் என்று கூறிக் கொண்டே...எழுந்துக் கொள்ள முயன்றார். ஆனால் உடனே பிரதாப் “அம்மா உடம்பே கெடுத்துக்காதீங்க. அது தான் அவள் இங்கே தானே இருக்க போறா….அதனால் முதலில் உங்க உடம்பு சரியாகட்டும்.பிறகு உங்கள் பேத்திக்கு பிடித்தமானது எல்லாம் உங்க கையாலேயே….செஞ்சி போடுங்க...”என்று கூறி பத்மினியை பார்த்தான்.
ஆனால் பத்மினி அவன் பக்கம் திரும்பவே இல்லை.பிரதாப்புக்கு தெரியும் இவள் சீக்கிரத்தில் சமாதானம் ஆக மாட்டாள் என்று.அதனால் ஒன்றும் கூறாமல் தன் அன்னையிடம். “அம்மா நான் வெளியே போகிறேன்.சீக்கிரம் வந்து விடுகிறேன். அது வரை உடம்பை அலட்டிக் கொள்ளாமல் அமைதியா ரெஸ்ட்டு எடுங்க…” என்று கூறி விட்டை பத்மினியை ஒரு ஆழமான பார்வை பார்த்தவாரே….சென்றான்.
என்னதான் பிரதாப் சாதரணமாக காட்டிக் கொண்டாலும் அவன் முகத்தில் உள்ள கவலையை பார்த்த அந்த தாய் மனதுக்கு கவலையாக இருந்தது.காலையில் தான் தன் கணவரின் மூலம் பத்மினியை திருமணம் செய்ய பிரதாப் செய்த காரியம் எல்லாம் தெரிய வந்தது.
மனதுக்கு கவலையாக இருந்தாலும் அவன் யார் என்று உண்மையை சொல்லியிருந்தாள் கண்டிப்பாக கேசவமூர்த்தி பிரதாப்புக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்து இருக்க மாட்டார்.மாறாக திரும்பவும் முதலில் தன் மகளை தங்களிடம் இருந்து கண் காணாத இடத்துக்கு கொண்டு சென்றது போல் இப்போதும் அவ்வாறு செய்திருப்பார்.
இந்த விஷயத்தில் தன் மகன் செய்த வேலை தான் சரி என்று அந்த தாயுள்ளம் வாதிட்டது. ஆனால் தன் பேத்தியின் மனநிலையிலிருந்து பார்க்கும் போது அவள் மனது என்ன பாடு பட்டிருக்கும் என்று அவரால் உணர்ந்துக் கொள்ளமுடிந்தது.
இதில் இருவரும் அவருக்கு முக்கியமானவர்கள். இதில் யாருடைய மனதும் புன்பட அவர் விரும்பவில்லை.மேலும் இருவரும் சந்தோஷமாக வாழவேண்டும் என்று கருதினார்.அதனால் தன் பேத்தியிடம் தான் உடனே…. பேசியாக வேண்டும்.என்று நினைத்து.தன் கணவரிடம் ஏங்க நான் நம்ம பேத்திக்கிட்டே கொஞ்சம் தனியா பேசனும் என்று கூறி தன் வார்த்தையை நிறுத்தினார்.
தீனதயாளன் “பத்தூ”என்ற அழைப்பிற்க்கு இரு பத்மினியும் அவரை பார்த்தனர்.பிறகு தான் தீனதயாளனுக்கு பெயரின் ஒற்றுமை நினைவுக்கு வந்தது. தன் பேத்தியிடம் “ராசாத்தி நான் உன்னை எப்போதும் பெயர் சொல்லி அழைக்க மாட்டேன்.அதுவும் பத்தூ கண்டிப்பாக இல்லை.அப்பெயர் என் மனைவிக்கு மட்டுமே சொந்தமானது”என்று கூறினார்.
தாத்தாவின் அப்பேச்சில் இந்த வயதிலும் பாட்டியின் முகம் வெக்கத்தில் சிவந்ததை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.பத்மினிக்கு தன் தாத்தா பாட்டியை மிகவும் பிடித்து விட்டது. அவர்களின் அன்பான பேச்சு அவர்களின் பாசம். மேலும் அவர்களின் மனதையும் அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.தன் மகள் இறந்தது கூட தெரியாமல் அவளை பார்ப்போம் என்று எவ்வளவு ஆவளாக இவர்கள் எதிர் பார்த்திருப்பார்கள்.
ஆனால் இனி மேல் தன் மகளை பார்க்கவே முடியாது என்று கேள்வி பட்டதும் எப்படி துடித்து இருப்பார்கள்.என்று அவர்களின் மனநிலையையும் நன்கு உணரமுடிந்தது.ஆனால் அதற்கு பிரதாப் தன்னை ஏமாற்றியதை தான் அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை.
இவள் யோசனையில் மூழ்கி இருக்கும் போதே தீனதயாளன் அவள் அருகில் வந்து அவளின் தலை கோதியே வாரே “மனதை போட்டு குழப்பிக்கொள்ளாதம்மா…எல்லாம் நல்ல படியாக முடியும்.உன் பாட்டி உன்னிடம் பேசணுமாம் நான் எவ்வளவோ சொல்லிட்டேன்.அப்புறம் பேசலாம் என்று ஆனால் அவள் கேட்க மாட்டேங்குறா….”என்று கூறியாவாறு தன் பேத்தி முகத்தை பார்த்தார்.
அவரின் கவலையை புரிந்துக் கொண்ட பத்மினி “கவலை படாதீங்க தாத்தா நான் பார்த்து கொள்கிறேன்.அவர்களின் உடல் நிலையை பற்றி எனக்கும் அக்கரை இருக்கு தாத்தா அவங்க என் பாட்டி “என்று தன் உறவு முறை கூறினாள்.
அவ்வார்த்தையை கேட்ட தீனதயாளன் மகிழ்ந்து தன் பேத்தியின் நெற்றியில் முத்தம் இட்டு வெளியேறினார்.அவருக்கு கூடியவிரைவில் அனைத்தும் சரியாகி விடும் என்று நம்பினார்.தன் பேத்திக்கும் தன் மகனுக்கும் கூடிய விரைவில் சரியாகி விடும் என்று கருதினார்.
பத்மினிக்கும் அனைத்தும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று கருதினாள்.அதற்க்கு தன் பாட்டி தான் சரியானவர் என்று கருதியதால் தன் தாத்தா வெளியேறுவதை தடுக்க வில்லை.
தீனதயாளன் வெளியேறியதும் பத்மினி தன் பாட்டியின் அருகில் அமர்ந்துக் கொண்டு அவர் கையை தன் கையோடு சேர்த்துக் கொண்டாள். “சொல்லுங்க பாட்டி …ஆனால் எது சொல்வது என்றாலும் நீங்க உணர்ச்சி வசப்பட கூடாது.”என்று வாக்கு வாங்கியே பேச அனுமதித்தாள்.
பேத்திக்கு தன் மேல் உள்ள அக்கறையை பார்த்து “நீ பார்க்க மட்டும் இல்லை. பாசத்திலும் அப்படியே உன் அம்மாவே தான்” என்று கூறிக் கொண்டே தன்னையும் அறியாமல் தன் கண்ணில் இருந்து நீர் வருவதை தடுக்க முடியவில்லை.
“நான் என்ன சொன்னேன் பாட்டி உணர்ச்சி வசப்படக்கூடாது என்று தானே….இப்படி அழுவது என்றால் நீங்க ஒன்றும் பேசவேண்டாம்.பிறகு பேசலாம்.”என்று தன் பேத்தி கூறியதை கேட்டதும்.
“நான் அழ மாட்டேன்.ஆனால் நான் உன்னிடம் இப்போதே பேசனும் என்ற பாட்டி “எனக்கும் உங்க தாத்தாவுக்கும் திருமணமாகி நான்கு வருடமாகியும் குழந்தை பாக்கியம் இல்லை.”என்று கூறிக்கொண்டே தன் கடந்த காலத்தில் மூழ்கினார்.
தீனதயாளனுக்கும் பத்மினிக்கும் திருமணமாகி நான்கு வருடம் சென்று கூட குழந்தை பிறக்காததில் சொந்தக்காரார்கள் எல்லாம் கேட்க ஆரம்பித்ததும்.பத்மினியும் கவலை பட ஆரம்பித்திருந்தாள்.தன் கணவரிடம் சென்று இதைப் பற்றி கேட்டதும்.
“பத்தூ கண்டிப்பா பிறக்கும் இப்போ நமக்கு என்ன? வயதாகி விட்டது.உனக்கு இருபத்தியிரண்டு வயதும் எனக்கு இருபத்தியாறு வயதுதானே… ஆகுது.கவலைப்படாதே கண்டிப்பாக கடவுளின் அருளால் நமக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.”என்பதை கடவுள் அருள் என்பதனை கெட்டியாக பிடித்துக் கொண்ட பத்மினி கோயில் கோயிலாக செல்லலானாள்.
தீனதயாளனும் முடிந்த வரை தன் மனைவிக்காக கூடவே தன் வேலை எல்லாம் முடிந்த வரை ஒதுக்கி விட்டு செல்வார்.ஒரு முறை அவ்வாறு கோயிலுக்கு குழந்தை வரம் கேட்டு சென்று வரும் போது நடுயிரவு கடந்து விட்டது. அப்போது…பத்மினி “ஏங்கே…கொஞ்சம் வண்டியை நிறுத்துங்க… அங்கே பாருங்க” என்று பதட்டத்துடன் கூறியதை கேட்ட தீனதயாளன் வண்டியை நிறுத்தி பார்த்தார்.பார்த்தவர் பதறி விட்டார்.
அங்கு ஒரு கார் முன் பக்கம் அடி வாங்கி தலைகீழாக இருந்தது.தீனதயாளன் வண்டியை விட்டு பதறியவாறு இறங்கி அருகில் சென்றார்.கூடவே பத்மினியும் இறங்க தீனதயாளன் வேண்டாம் என்று தடுத்தும் பத்மினியும் உடன் சென்றார்.
அங்கு பார்த்த காட்சியில் பத்மினிக்கு மயக்கம் வருவது போல் இருக்க தன் கணவனின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.தீனதயாளனும் தன் மனைவியின் நிலை புரிந்து தோளில் கைய் போட்டு ஆறுதல் அளித்து காரின் அருகில் சென்றார்.
அங்கு கணவன் மனைவி இருவரும் இரத்த வெள்ளத்தில் இருந்தார்கள்.தீனதயாளன் அந்த காரை தன் காரின் டிக்கியில் உள்ள ஸ்பேனர் உதவியுடன் காரை உடைக்க முயன்றார். பிறகு ஒரு வழியாக உடைத்து முடித்ததும்…. அவர்களை வெளியே எடுத்தார்.
அவர்களை வெளியே இழுக்கும் போதே ஆணுக்கு உயிர் இல்லை என்று தெரிந்து விட்டது.அந்த பெண் மூச்சை இமுத்து… இழுத்து...விட்டவாரே ஏதோ கூற முயன்றாள்.அதற்குள் பத்மினி ஒடி போய் தங்கள் காரில் உள்ள தண்ணியை எடுத்து வந்து தன் கையாலேயே அவளுக்கு புகட்டினாள்.
பின் அந்த பெண் காரை நோக்கி கைய் காட்டினாள்.அந்த கையசைவிலேயே காரில் வேறு ஒருவர் இருக்கிறார் என்று புரிந்துக் கொண்ட தீனதயாளன் காரை நோக்கி சென்று பார்த்தார்.காரின் முன் பக்கம் யாருமே...இல்லை.பின் பக்கம் பார்க்கும் போது ஒரு நீலநிறத்தில் ப்ராக் தெரிந்தது பின் பக்கம் கார் அவ்வளவு அடிவாங்க வில்லை.
அதனால் எளிதில் பின் பக்கம் கதவை திறந்து பார்த்தார்.அங்கு ஒரு பெண் குழந்தை இருந்தது.சட்டென்று அக்குழந்தையை தூக்கினார்.தூக்கி பார்க்கும் போது அக்குழந்தைக்கு ஒன்றும் அடிபடவில்லை.ஆனால் கண்ணை மூடியவார் இருந்தது.பின் அக்குழந்தை நாடி துடிப்பை பார்க்கும் போது சீராகயிருந்ததில் இருந்து அக்குழந்தை மயக்கத்தில் தான் உள்ளது என்று அறிந்துக் கொண்டார்.
அக்குழந்தையை அப்பெண்மணியின் அருகில் எடுத்து சென்றார்.அக்குழந்தையை பார்த்த பத்மினி பதட்டத்துடன் ஒடிவந்து அவள் வாங்கி கொண்டாள்.கண்மூடி கிடக்கும் அக்குழந்தையை பார்க்கும் போது மனதுக்குள் சாந்தம் வருவதை உணர்ந்துக் கொள்ள முடிந்தது.
அக்குழந்தையை மார்போடு அணைத்த போது கணவர் சொன்ன கடவுள் நமக்கு குழந்தை கொடுப்பார் என்பது ஏனோ நினைவில் வந்து சென்றது.தீனதயாளன் குழந்தையை இன்னும் அப்பெண்ணிடம் கொடுக்கதா மனைவியை உலுக்கி “பத்தூ சீக்கிரம் குழந்தையை அப்பெண்ணிடம் கொடு நான் வேறு ஏதாவது வண்டி வருகிறாதா என்று பார்க்கிறேன்.” என்று கூறினார்.
அடிப்பட்ட அப்பெண் தீனதயாளனையும், பத்மினியையும் பார்த்து கஷ்டப்பட்டு “நீ… ங்க இரண்...டு பேரு..ம் வாங்க.”அழைத்தார்.தீனதயாளன் உடனே அப்பெண் அருகில் சென்றார்.தன் மனைவி வராததில் திரும்பி பார்க்கும் போது அக்குழந்தையை கெட்டியாக பிடித்தவாறு அவ்விடத்திலேயே நின்று இருந்தாள்.
தீனதயாளன் கோவத்துடன் பத்மினி சீக்கிரம் வா...என்ற அழைப்பிற்க்கு பலன் இருந்தது.தீனதயாளன் கோவத்தில் மட்டும் தான் தன் மனைவியை பத்மினி என்று முழு பெயரிட்டு அழைப்பார்.பெரும்பாலும் அந்த சூழ்நிலை ஏற்படாது..இப்போது தீனதயாளனுக்கு நன்கு புரிந்து விட்டது. அப்பெண்ணுக்கு இன்னும் சிறிது நேரம் தான் உயிர் தங்கும் என்று.மேலும் தன் மனைவியின் மனமும் அக்குழந்தையை தன் மார்போடு பிடித்திருந்தே விதமே தெரியபடுத்தி விட்டது.அதனால் தான் அதட்டி அழைத்தார்.
பத்மினி குழந்தையை எடுத்துக் கொண்டு அப்பெண்மணியிடன் சென்று அவளிடம் கொடுக்க போகும் போது அப்பெண்…. அணைய போகும் விளக்கு பிரகசமாக எரிவது போல் அப்பெண்ணின் பேச்சு தங்கு தடையின்றி ஒளித்தது.
“வேண்டாம் அக்குழந்தையை என்னிடம் தரவேண்டாம்.இனி உங்களிடமே இருக்கட்டும்.”இடையில் பேச வந்த தீனதயாளனை தடுத்து “இன்னும் கொஞ்ச நேரம் தான். நானே பேசிவிடுகிறேன்.நாங்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள்.எங்களை இருவீட்டாரும் ஒதுக்கி விட்டார்கள்.தன் கணவரை பார்த்தவாரு இன்னும் சிறிது நேரத்தில் நானும் என் கணவரிடம் சென்று விடுவேன்.உங்கள் மனைவிக்கு குழந்தையை மிகவும் பிடித்து விட்டது.என்று நினைக்கிறேன்.என்று கூறிக் கொண்டே பத்மினியை பார்த்தவாறு பேச்சை தொடர்ந்தாள்.இனி இக்குழந்தை உங்களது”அவள் பேசிய கடைசி வார்த்தை இது தான்.
அத்தியாயம்-----19
சாந்தி … தீனதயாளன் பத்மினிக்கு மகளாக அவ்வீட்டுக்கு வந்து ஏழு வருடங்கள் கடந்து விட்டனவா…..என்பதனை நம்ப முடியவில்லை.அக்குழந்தையின் தாய் அவர்களிடம் கடைசியாக இனி இவள் உங்கள் மகள் என்பது தான்.பின் அவள் பேச அவள் உடம்பில் உயிர் இல்லை.
பின் தீனதயாளன் சட்டபடி அனைத்து காரியமும் செய்தார்.அக்குழந்தையின் பெயர் கூட அவர்களின் கையில் கொடுக்கும் போது அப்பெண் சொல்ல வில்லை.பத்மினியே அவள் தன் கையில் ஏந்தும் போது தன் மனதில் ஒரு அமைதி நிலவியதால் சாந்தி என்று பெயரிட்டார்.
இப்போது சட்டபடி சாந்தி அவர்களின் மகள்.தீனதயாளனின் உற்றார்கள் உங்களுக்கு குழந்தை பிறக்கும் போது இக்குழந்தை உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று கூறியும் அவர்கள் கேட்க வில்லை.
குழந்தை வரம் கேட்டுதான் அவர்கள் கோயிலுக்கு சென்றது.சாமி தரிசனம் முடித்து விட்டு வரும் வழியில் இக்குழந்தை அவர்களுக்கு கிடைத்ததால் அக்கடவுளே தங்களுக்கு இக்குழந்தையை கொடுத்ததாக பத்மினி கருதினார்.
அதனால் எக்காரணத்தை முன்னிட்டும் அக்குழந்தையை இழக்க பத்மினி தயாராக இல்லை.தீனதயாளன் கடைசியாக அப்பெண்மணி தங்களை நம்பி ஒப்படைத்ததாலும்….,மேலும் குழந்தை இல்லாமல் வருந்தும் தன் மனைவிக்காவும் தான் முதலில் அக்குழந்தையை அவர் ஏற்றார்.
ஆனால் நாள் செல்ல...செல்ல….பத்மினியோடு தீனதயாளனுக்கு தான் அக்குழந்தை செல்லமாகா ஆனாது.ஆம் அக்குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பால் தீனதயாளன் உள்ளத்தை கொள்ளை கொன்றாள் என்பது தான் நிஜம்.
பின் தீனதயாளன் தான் தொடங்கும் அனைத்து தொழிலுக்கும் சாந்தி என்று தன் குழந்தை பெயரிலேயே தொடங்கினார்.அவ்வீட்டில் அக்குழந்தை வந்து ஏழு வருடமாகி விட்டிருந்தது.
அவ்வீட்டில் சாந்தி இட்டது தான் சட்டம். வீட்டுக்கு என்ன வண்ணதில் வர்ணம் என்பதிலிருந்து...தோட்டத்தில் என்ன செடி வைப்பது வரை அனைத்தும் அவள் இஷ்டமே…..
ஒரு நாள் பத்மினி “சாந்தி நில்” என்றவாறு அவள் பின்னாடியே….கையில் எண்ணை கிண்ணத்தோடு அலைந்துக் கொண்டிருந்தாள்.அதனை பார்த்த தீனதயாளன் “பத்தூ உனக்கு வயதாகி விட்டது பார்.என் மகளை உன்னால் பிடிக்கவே முடியவில்லை.”என்று கேலி செய்தவாரே தன் மகளிடமும் “சந்து அம்மாவை ஒட விடதே உன் நல்லதுக்கு தான் அம்மா தலையில் எண்ணை தடவுகிறார்கள்.எண்ணை தடவினால் தான் முடி நீளமாக வளரும்.”என்று குழந்தை எது சொன்னால் கேட்பாலோ அவ்வார்தையை கூறினார்.
உடனே குழந்தை ஒடுவதை நிறுத்தி விட்டு “அப்படியாப்பா….எனக்கும் அம்மா மாதிரியே முடி வளருமா….”என்று ஆசையாக கேட்டதுக்கு…. “அம்மா மாதிரி என்ன உன் டீச்சர் மாதிரி அழகாக வளரும்.”என்று கூறி பத்மினியிடம் ஒரு முறைப்பையும் வாங்கிக் கொண்டார்.
“வேண்டாம்பா….எனக்கு அம்மா மாதிரி தான். முடி வேண்டும்.”என்று கூறி தன் அன்னையின் கழுத்தை வந்து இருக்கி கட்டிக் கொண்டாள்.அவளுக்கு எப்போதும் தன் அம்மா,அப்பா,தான் எல்லாவற்றிலும் சிறந்தவர்கள்.
உடனே பத்மினி ”பார்த்தீங்களா...உங்களுக்கு அவள் டீச்சர் முடிதான் பிடிக்கும்.ஆனால் என் குழந்தைக்கு எல்லா… வகையிலும் என்னை தான் பிடிக்கும் என்று கூறி ..”தன் கழுத்தில் உள்ள குழந்தையின் கையில் முத்தமிட்டு அவள் தலைக்கும் எண்ணை தேய்த்து எழுந்தாள்…. எழுந்தவுடன் கால் தரையில் படாமல் ஏதோ அந்தரத்தில் கால் வைத்தது போல் தடுமாற்றமாக இருந்தது.உடனே பக்கத்தில் உள்ள ஷோப்பாவின் கைய்பிடியை பிடித்தாவாறு தடுமாறி நின்றால்.
இதனை முதலில் பார்த்த சாந்தி “அப்பா...அம்மா”என்று கூறியவாறு தன் அன்னையின் அருகில் சென்று அம்மாவின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.தீனதயாளனும் “பத்தூ...பத்தூ ..”என்று கையைபிடித்தவாறு மெல்ல ஷோபாவில் அமரவைத்து… “லஷ்மி அம்மா...லஷ்மி அம்மா...சீக்கிரம் தண்ணி கொண்டாங்கா”என்று பதட்டத்துடன் அழைத்தார்.
தீனதயாளனின் அழைப்புக்கு லஷ்மி வருவதற்க்குள் சாந்தியே ஒடி சென்று தண்ணி எடுத்து வந்து தன் தந்தையிடம் தந்தாள்.தீனதயாளன் தண்ணியை பத்மினியின் வாயில் புகட்டி “பத்தூ என்னம்மா செய்து உடம்புக்கு”என்று கேட்டதற்க்கு “ஒன்றும் இல்லைங்கே… இன்று வெள்ளிக்கிழமை விரதம் .அதனால் மயக்கமா இருக்கும்”என்று கூறி பயத்துடன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சாந்தியை அழைத்து…..
“ஒன்றும் இல்லைடா செல்லம் அம்மாவுக்கு பயப்படாதே”என்று குழந்தைக்கு ஆறுதல் அளித்தாள். அதற்க்கு சாந்தி “அம்மா இனிமே நீங்க விரதம் இருக்க வேண்டாம். நான் இருக்கிறேன்.நான் இப்போது பெரிய பெண்தானே….. ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன்.பாருங்கள் உங்கள் உயரம் வருவதற்க்கு இன்னும் கொஞ்சம் தான் இருக்கிறது”என்ற தன் மகளை பத்மினி தீனதயாளன் இருவரும் ஒன்றாக அணைத்துக் கொண்டார்கள்.
தீனதயாளன் தன் மனைவியிடம் “பத்தூ நம் பெண் நிஜமாகவே வளர்ந்து விட்டாள்.”என்று பெருமை பட்டதற்க்கு…..சாந்தி “அப்பா என்னப்பா டாக்டர் மாமாவை கூப்பிடாமல் என்ன பேசிட்டு இருக்கீங்க”என்ற தன் மகளின் அதட்டலுக்கு “நான் அப்போதே நீ வளர்ந்து விட்டதாக உன் அம்மாவிடம் கூறிக் கொண்டிருக்கும் போது போனில் சொல்லிட்டேமா….ஆனால் பாவம் என்னன்னா…..அவர் வீடு கொஞ்சம் தொலைவில் இருப்பதால் ஒரு கால் மணிநேரம் ஆகும்.”என்று தன் மகளிடம் பணிவாக சொல்லி கேலி செய்தார்.
இவர்கள் பேசுவதற்க்கும் அவர்களின் குடும்ப டாக்டர் சேகர் வருவதற்க்கும் சரியாக இருந்தது.”என்னம்மா….விரதம் இருந்து மயக்கம் வந்ததாமே…..இப்போது என்ன வேண்டும். என்று நீங்கள் விரதம் இருக்கிறீர்கள்….?கணவன்… குழந்தை ….செல்வம் …என்று எது இல்லைன்னு கடவுளிடம் மணு போடுகிறாய்.என்று கூறியவாறு பத்மினியின் நாடி பிடித்து பார்த்தார்.
“ஒ ….இப்போது புரிந்து விட்டது என்ன வேண்டி விரதம் இருந்தீர்கள் என்று.ஆசைக்கு பெண் இருக்கிறால்,ஆஸ்த்திக்கு ஆண் வேண்டும் என்று விரதம் இருந்தீர்களா….”என்று அக்குடும்ப டாக்டரும் அவர்களின் நண்பருமனா…..சேகர் தீனதயாளனிடம் கை கொடுத்தார்.
முதலில் அவர் சொல்ல வருவதை புரிந்துக் கொள்வதற்க்கே...ஒரு நிமிடம் தேவைப்பட்டது.புரிந்ததும் கணவன், மனைவி, இருவரும் ஒருவருக்குள் ஒருவர் பார்த்து கொண்டனர்.
அவர்களின் குடும்ப டாக்டர் சேகர் தான் எவ்வளவு சந்தோஷமான விஷயத்தை சொல்லியிருக்கோம்.ஆனால் அதற்க்கு மகிழாமல் என்ன இது ரியாக்க்ஷன் என்று வியந்து போனார்.ஏன் என்றால் அவருக்கு அவர்கள் குடும்பத்தை பற்றி நன்கு தெரியும்.அவர்களுக்கு திருமணம் முடிந்து குழந்தை பிறக்காததும்.அதற்க்கு கோயில் கோயிலாக சென்று வந்ததும். சாந்தி அவர்களுக்கு எப்படி கிடைத்தாள் என்பதும்.
அப்படி இருக்கும் போது தான் கூறிய விஷயம் அவர்களுக்கு எந்த அளவுக்கு மகிழ்ச்சி அளித்திருக்க வேண்டும்.என்ற யோசனையுடன் தீனதயாளனை பார்த்தார்.தீனதயாளனும் அப்போது சேகரை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
டாக்டர் கூறியதை புரிந்துக் கொள்ளதா சாந்தி பயந்து டாக்டரிடம் “மாமா அம்மாவுக்கு ஒன்றும் இல்லையே… நீங்க என்ன ஒன்றும் ஒழுங்காவே….சொல்லலே அப்பாவும் அம்மாவும் ஒன்றும் பேசாமல் இருக்காங்க….? என்று பயந்தவாறு கேட்டாள்.
சாந்தியின் பயத்தை தான் முதலில் போக்க வேண்டும் என்று கருதிய தீனதயாளன் “சந்துக்குட்டி அம்மாவுக்கு ஒன்றும் இல்லேடா….கொஞ்சம் வீக்கா இருக்காங்களா...அவ்வளவுதான். ரெஸ்ட்டு எடுத்தா போதும். நீ போய் படிமா என்று தன் மகளை அவ்விடத்தில் இருந்து அகற்ற முற்பட்டார்.
அப்பாவின் பேச்சை கேட்ட சாந்தி “அப்பா இனிமேல் நான் அம்மாவை தொந்தரவே...பண்ண மாட்டேன்.லஷ்மியம்மா கொடுப்பதையே நான் அடம் பண்ணாமல் சாப்பிடுகிறேன்.நானே எண்ணை தேய்த்து குளிக்கிறேன் “என்று தன்னால் தான் அம்மா வீக்கா ஆகிவிட்டார்களோ…என்று பயந்து கூறினாள்.
அவளின் பயத்தை பார்த்த தீனதயாளன் “செல்லம் நான் தான் சொல்ரேன் இல்லே….அம்மாவுக்கு ஒன்றும் இல்லை. நீ போம்மா என்று அனுப்பி வைத்தார்.
டாக்டர் சேகருக்கு ஒன்றும் புரியவில்லை.சாந்திக்கு ஒன்றும் சிறு குழந்தை இல்லை. அவளுக்கு ஒரு தம்பியோ...தங்கையோ….வரப்போகிறது என்று சொன்னால் புரிந்தும் கொள்வாள்…. சந்தோஷமும்…. படுவாள்.அதனை விட்டு இவர்கள் என்ன ?என்னவோ சொல்கிறார்களே….என்று குழம்பி போனார்.
சாந்தி அவ்விடத்தை விட்டு அகன்றதும்.தீனதயாளன் சேகரை பார்த்து” இந்த குழந்தை எங்களுக்கு வேண்டாம்.”என்று கூறினார்.தீனதயாளன் சொல்வதை கேட்ட சேகர் பத்மினியை பார்த்தார்.பத்மினியும் சேகரின் பார்வையை புரிந்துக் கொண்டு “அது தான் அவரே சொல்கிறாரே….அப்புறம் ஏன்? அண்ணா என்னை பார்க்கிறீங்க “என்று தீனதயாளன் கூறியதையே பத்மினியும் கூறினாள்.
சேகர் கோபத்தோடு “தீனா உங்க இரண்டு பேருக்கும் பைத்தியம் ஏதாவது பிடிச்சிடிச்சா…புரிஞ்சுதான் பேசுறிங்களா…உங்களுக்கு கல்யாணமாகி பதினொன்று வருடத்துக்கு பிறகு உதித்த குழந்தையை கலைக்க சொல்ல எப்படி மனது வந்தது.இரு...இரு...பத்மினிக்கு வயது சென்று விட்டதோ…. அதனால், பிரச்சினை ஏதாவது ஆக போகிறது என்று பயப்படுகிறீர்கள் என்றால்… கவலை வேண்டாம். பத்மினியின் உடல் நிலையைப் பற்றி உங்கள் குடும்ப டாக்டரா எனக்கு நன்கு தெரியும் நார்மல் டெலிவரியாக்குவது என் பொறுப்பு”என்று ஒரு டாக்டராக மட்டும் அல்லாமல் அக்குடும்பத்தின் நண்பராகவும் பேசினார்.
டாக்டரின் பேச்சை கேட்ட பத்மினி “அவர் என் உடல் நிலைக்காக இக்குழந்தை வேண்டாம் என்று கூறவில்லை அண்ணா.சாந்தியின் மனநிலைக்கா தான் வேண்டாம் என்கிறார்.” என்று பத்மினி கூறியதை கேட்ட டாக்டர்.
“ஏன் அவள் முன்பே இதைப்பற்றி ஏதாவது சொன்னாலா….”என்றதற்க்கு ,தீனதயளான் “சே...சே...இல்லை.குழந்தை என்று இப்போது நீ சொல்லி தான் எங்களுக்கே தெரியும்.பிறகு எப்படி இது பற்றி முன்பே பேச போகிறோம்.அதுவும் குழந்தையான அவளிடம்.”என்ற தீனதயாளனின் விளக்கத்தில் டாக்டர் குழம்பி தான் போனார்.
“கணவன் மனைவி இரண்டு பேரும் என்ன குழப்பாமல் என்னான்னு விளக்கமா...எங்கிட்டே சொல்றீங்களா…அதுவும் கருச்சிதைவு என்பது சாதரணம் விஷயம் இல்லை. ஒரு பிரசவத்தோடு கருச்சிதைவு தான் ஆபத்தானது.”என்று ஒரு டாக்டராக தன் கருத்தை கூறினார்.
டாக்டரின் பேச்சை கேட்ட தீனதயாளன் “அப்போ பத்தூக்கு ஏதாவது பிரச்சினை ஆகுமோ”என்று கணவராக பதரினார்.
“அது தான் இப்போ கருச்சிதைவுக்கு என்ன அவசியம் என்று உங்கள் இருவரிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.”என்ன விஷயம் சொல்லுங்க கணவன் மனைவி இரண்டு பேரும் ஒன்றாக முடிவு எடுத்து இருக்கீங்கன்னா….சொல்லுங்க என்ன விஷயம்.”ஒரு டாக்டரா என்னிடம் சொல்ல வேண்டாம் நண்பனாக சொல் தீனா என்று ஒரு நல்ல நண்பராக அவர் பதறி கேட்டார்.
அக்குழந்தை கலைக்க அவருக்கு விருப்பம் இல்லை.இப்போது ஏதோ காரணத்திற்க்காக கலைத்து விட்டு பின் வருந்த கூடாது என்று கருதினார்.தீனதயாளன் அருகில் உள்ள தண்ணியை எடுத்து குடித்து விட்டு…
“எனக்கு மட்டும் குழந்தையை கலைக்க விருப்பமா….?”என்று பேசிக்கொண்டே தன் மனைவியை பார்த்தார்.மனைவியின் முகத்தில் உள்ள எல்லை இல்லா சோகத்தை பார்த்த தீனதயாளன்.தன் மனைவி முகத்தை பார்ப்பதை தவிர்த்து சேகரிடம் தன் பேச்சை தொடர்ந்தார்.
“இப்போது எங்கள் மகளுக்கு பத்து வயதாகிறது.உனக்கே தெரியும் எங்கள் மகள் எங்களுக்கு எப்படி கிடைத்தால் என்று. எங்கள் சொந்தக்காரர்களுக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை என்று. இன்னும் இரண்டு மூன்று வருடன் கழித்து எப்படியோ… என் மகளுக்கு விஷயம் தெரிந்து விடும். தெரியபடுத்தாமல் நம்மை சுற்றி இருப்பவர்கள் விட மாட்டார்கள். இப்போது இக்குழந்தை எங்களுக்கு பிறந்தால் கண்டிப்பாக என் உடன் பிறந்தவர்களும், பத்தூவின் உடன் பிறந்தவர்களும், அக்குழந்தையை கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என்பது நிச்சயம்.அதுவும் இத்தனை வருடம் கழித்து பிறந்த குழந்தையை சொல்லவே வேண்டாம்.அப்போது என் மகள் சந்துவின் மனநிலை என்ன ஆவாது.கண்டிப்பாக என் குழந்தை இதை தாங்க மாட்டாள் சேகர்.தாங்கிக் கொள்ளவே மாட்டாள்.”என்ற தீனதயாளனின் பேச்சில் உண்மை இருந்தாலும் அப்போதும் சேகருக்கு இக்குழந்தை அழிப்பதில் விருப்பம் இல்லை.
“ஏன் தீனா நாம் சாந்திக்கு மற்றவர்கள் சொல்லி தெரிவதைவிட நாம் இப்போதே இவற்றை பற்றி சாந்தியிடம் பக்குவமாக கூறலாமே….”என்று கூறினார்.எப்படியாவது அக்குழந்தை அழிப்பதை தடுப்பதற்க்காக.
பத்மினி சேகரிடம் “அண்ணா உங்கள் என்ணம் எங்களுக்கு புரிகிறது.எங்கள் பிறக்காத குழந்தைக்காக நீங்கள் பேசுகிறீர்கள்.இப்போது இருக்கும் குழந்தைக்காக நாங்கள் பேசுகிறோம்.எப்படி அண்ணா அவளிடம் போய் நாங்களே …நீ என் சொந்த மகள் இல்லை. என்று கூறுவது.குழந்தையின் மனநிலையை பற்றி டாக்டரான உங்களிடம் நான் கூற தேவையில்லை.இந்த வயதில் தான் அவர்களை நாம் பத்திரமாக அவர்களின் மனநிலையை எந்த வகையிலும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று.நான் சாந்தியின் விஷயத்தில் எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை அண்ணா.நாளை உங்கள் ஹாஸ்பெட்டலுக்கு வரட்டுமா…இல்லை”என்று இழுத்து நிறுத்தினாள்.அப்பேச்சில் இருந்து நாங்கள் எங்கள் எண்ணத்தில் இருந்து சிறிதும் மாறப்போவது இல்லை என்று உறுதி தெரிந்தது.
“இல்லேம்மா என் ஹாஸ்பெட்டலுக்கே வந்துடுங்க உன் உடல் நிலையை பற்றி என் ஹாஸ்பெட்டல் இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும். வெளியில் போய் வேறு எந்த பிரச்சினையும் வேண்டாம். என்று மனமே…. இல்லாமல் கூறினார்.
“சரி சேகர் அப்போது நாளை காலையில் வந்து விடுகிறோம்.”என்று கூறி முடிக்கும் போது தீனதயாளனின் பேச்சில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது.
பத்மினி தன் கணவரின் கைய் பற்றி அவருக்கும் ஆறுதல் அளித்து அவரின் கைய் தொடுகையின் மூலம் தானும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முனைந்தாள்.அந்த ஆத்மார்த்தமான தம்பதியின் வாரிசு உலகிற்கு வேண்டாம் என்று அவர்கள் முடிவு எடுத்து விட்டார்கள். ஆனால் வருமா…?வராதா…?என்பதனை அந்த கடவுள் தானே… முடிவு எடுக்க வேண்டும் இடையில் நாம் யார்….?