அத்தியாயம் 5
கேசவமூர்த்தியிடம் அவர் மகளை பிரிப்பதற்கு முதல் படியாக சந்தானத்துக்கு போனில் தன் இருப்பிடம் வர சொன்னார். அதற்கு தகுந்தவாறு அன்று மாலையே அசோக்கும் சென்னை வருவது உறுதியாகி இருந்தது.
பின் சந்தானத்தை அழைத்து ஈவ்னிங் அவர் வருவதை உறுதிப்படுத்திக் கொண்டான்.இந்த வேலையெல்லாம் தன் பாட்டுக்கு செய்துக்கொண்டிருந்தாலும், மனம் பத்மினியிடமே வந்து நின்றது. காலையில் அவளை நேரில் பார்த்ததில் இருந்து அவள் நினைவே.
இந்த எண்ணவோட்டதுடனே பிரதாப் ஏர்போர்ட் வந்து சேர்ந்தான். பிளைட்டும் சரியான நேரத்துக்கு வந்து இறங்கியது. அசோக் பிரதாப்பை அங்கே எதிர் பார்க்கவே இல்லை. அவன் எப்போதும் மற்றவர்களுக்காக அதிகம் தன்னை வருத்திக் கொள்ளமாட்டான்.அப்படிப்பட்டவன் சென்னை டிராப்பிக்கில் வந்து இருக்கிறானா!
அவன் எண்ணவோட்டத்தை தடை செய்வது போல் பிரதாப் அருகில் வந்து” என்ன அசோக் அப்படி பார்க்குறே !”என்ற கேள்விக்கு “இல்லே பிரதாப் நான் உன்னை இங்க எதிர்பாக்கல“ என்ற பதிலில் “ஏன் நீ மட்டும் எனக்காக டெல்லியில் ஏர்போட்டுக்கு வரல்லே !அதே மாதிரி தான் நானும் உனக்காக வந்தேன் ஏன் வரக்கூடாதா?’’ என்ற கேள்விக்கு!
“எப்படி….எப்படி….. இப்போ என்னக்காக வந்திருக்க இதை நான் நம்பணும் “என்ற நண்பனை “நண்பேண்டா’ என்று கூறி கட்டியணைத்துக் கொண்டான். அவன் செயல்களில் இருந்தே அவனுக்கு அந்த பெண்ணை எந்தளவுக்கு பிடித்திருக்கிறது என்று அறிந்துக் கொண்டான். எப்போதும் பிரதாப் தன் உணர்ச்சிகளை அவ்வளவு சீக்கிரம் வெளிக்காட்ட மாட்டான். அவனின் இந்த நடவடிக்கை அவனுக்கு புதிது . அவனுடைய எட்டாவது வயதிலிருந்தே சின்ன வயதுக்குரிய எந்த மகிழ்ச்சியையும் அவன் செயலில் அவன் பார்த்தது இல்லை.
எப்போதும் முகத்தில் ஒரு கடினத்துடனே தான் காணப்படுவான். தனிமையை தான் விருப்புவான், அவன் பேசக்கூடிய ஒரே நண்பன் அவன் தான்.
இவனின் முகத்தில் இருக்கும் இந்த மகிழ்ச்சி எப்போது அவனுக்கு நிலைத்து நிற்க வேண்டும் என்று அந்த நல்ல நண்பன் அவனுக்காக கடவுளை வேண்டிக் கொண்டான். அதே மகிழ்ச்சியுடன் “என்ன பிரதாப் நீ சென்னைக்கு வந்தது ஒட்டலை பேசி முடிக்க அந்த வேலை ஏதாவது முடிஞ்சுதா….?” என்று கிண்டலாக கேட்டான்.
“ம்… அதெல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சீ…” என்ற நண்பனிடம் “அப்போ எது முடியலே…” என்ற எதிர் கேள்விக்கு. “இன்னிக்கு காலையில் அந்த ஒட்டலின் ஒனரிடம் பேசும் போது மினியும் அவள் அப்பாவும் வந்தாருடா” என்ற அவன் பேச்சை இடைமறித்து”ஏய் யார் மினி “ என்ற நண்பனின் கேள்வியில் “தன்னுடைய கைய்யால் தன் காதைய் தடவிய வாரே” அது தாண்டா பத்மினி “ என்று புன்னையுடன் கூறினான்.
அவனின் இந்த மாற்றம் கண்டிப்பாக தன் நண்பனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை எற்படுத்தும் என்று அசோக் நம்பினான். அவன் பார்க்க தான் கடினமாக இருப்பான். ஆனால் அவனின் உள்மனதின் இரக்க சுபாவம் ஒரு சிலருக்கு தான் தெரியும்.தன் தொழிளாளர்களின் குடும்பத்துக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உடனே உதவி செய்வான். அதே மாதிரி அவர்கள் ஏதாவது தவறு செய்தால் தண்டனையும் கடினமாக இருக்கும்.
இந்த நான்கு ஆண்டுகளாகத்தான் பெண்களின் விசயத்தில் சிறு சறுக்கள் அதுவும் அவனின் வசதிக்கு தானே மேல் வந்து விழும் பெண்களிடம் மட்டும் தான்.அவனாக யாரை தேடியும் சென்றது இல்லை.
தன் நண்பனின் வாழ்வில் இந்த திருமணம் அந்த சறுக்கல்களையும் சரி செய்யும் என்றால் அதை விட சந்தோஷம் தான் அவனுக்கு ஏது?
சரி உன் மினி வந்தாங்க அதுக்கு என்ன? என்ற அசோக்கின் கேள்விக்கு…. “நான் எப்படி சொல்றதுன்னு தெரியலடா….” என்ற நண்பனின் இழுத்த பதிலில் “ஏண்டா பொண்ணு நேரில் நல்லா இல்லையா…? அப்படினா வேண்டாம். இந்த சபதம் எல்லாதையும் மறந்துடு….”.என்று சிரித்தவாரே கூறினான்.
அவனுக்கு தெரியும் பிரதாப்புக்கு பெண்ணை பிடித்து விட்டது. இது வேறு விஷயம் என்று அதனால் தான் மகிழ்ச்சியுடன் கூறினான்.நண்பனின் இந்த பேச்சில் அவசரமாக “அதெல்லாம் இல்லை பெண் நல்லா தான் இருக்கா…. கூட திமிரும் அதிகமாகவே இருக்கு,” என்றான்.
ஏன் உன்னிடம் ஏதாவது திமிராக பேசினாளா..? என்ற கேள்விக்கு “எங்கே பேசினா…? பேசினாதான் பரவயில்லையே, பேசுறது என்ன பார்க்க கூட இல்லைடா” என்ற நண்பனின் பதிலிலேயே அவன் மன நிலையை நன்கு அறிந்துக் கொண்டான்.
எப்போதும் பெண்களின் ஆவலானா பார்வையையே பார்த்தவன். தான் விரும்பும் பெண் தன்னை திரும்பி பார்க்க வில்லை என்பதை ஏற்றுக் கொள்வது கடினம், தான் என்று நினைத்தவாரே பிரதாப்பிடம் “நம்மை பார்க்கும் பெண்ணை விட நாம் பார்க்கும் பெண்ணை நம்மை பார்க்க வைப்பதில் தான் வீரமே இருக்கு என்று ஒரு அறிவாளி சொல்லி இருக்கார்” என்றதுக்கு “யார் அந்த அறிவாளி” என்ற பிரதாப்பின் கேள்விக்கு?
“ஏன் என்ன பாத்தா.. அறிவாளியா தெரிய வில்லையா” என்ற அசோக்கின் பதிலில் சிரித்துக் கொண்டே கண்டிப்பாக நீ அறிவாளியாக தான் இருக்க முடியும் ஏன்னா….நீ என் நண்பன் ஆச்சே என்று மகிழ்ச்சியுடன் தோளில் கை போட்ட வாறு கார் பார்க்கிங்கு வந்திருந்தனர்.
இந்த மகிழ்ச்சியுடனே இருவரும் தன் இருப்பிடம் சென்றடைந்தனர். சரியாக எட்டு மணிக்கு சந்தானம் பிரதாப்பின் பங்களா வந்தடைந்தார்.பிரதாப் அவரை பார்த்து “வெல்கம் வெல்கம் “ என்று பணிவுடன் வரவேற்றான். பின் அசோக்கை காண்பித்து இவன் என் நண்பனும், எனக்கு பி.ஏ வும், என்று அறிமுகம் படுத்தினான். பிரதாப்பின் இந்த பணிவு அசோக்கை யோசிக்க வைத்தது.
காராணம் இல்லாமல் பயபுள்ள பணிய மாட்டானே…..என்ன விசயமாக இருக்கும், என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அதற்கு உண்டான பதில் பிரதாப் அடுத்தடுத்து பேசிய பேச்சில் புரிந்தது. “ம் சொல்லு சந்தானம் சார் ஒட்டலை விற்று விட்டு அடுத்து என்ன ஐடியாவில் இருக்கிறீர்கள்.? இதில் என் உதவி ஏதாவது தேவைப்பட்டால் தயங்கவே வேண்டாம். ஏன் என்றால் எனக்கு உங்களை மிகவும் பிடித்து விட்டது. பார்க்க என் தந்தைய் மாதிரியே இருக்கிறீங்க”.என்று கூறினான்.
பிரதாப் பேச்சைக் கேட்டு சந்தானம் மிகவும் மகிழ்ச்சியடைந்து விட்டார். பிரதாப்பின் உயரம் பற்றி அவர் நன்கு அறிந்தவர். அவர் தன்னிடம் இப்படி பேசியதில் அவருக்கு பெருமையாக இருந்தது. பிரதாப்பும் இதைத் தானே அவரிடம் எதிர் பார்த்தான்.
பின் மெதுவாக அடுத்த கேள்வியை கேட்டான். “காலையில் உங்களுடன் வந்தாரே ஆ..ஆ.. அவர் பெயர் என்ன?’என்ற அவன் கேள்வியில் அசோக்குக்கு நிஜமாக இவன் தன் நண்பன் தானா? என்ற சந்தேகமே வந்து விட்டது. ஏன் என்றால் அவன் எப்போதும் நேரிடையாக கேட்டுத்தான் பழக்கம் இந்த புதிய அனுகுமுறையால் அவனுக்கு வியப்பு ! ஏற்பட்டது.
பிரதாப்பின் கேள்விக்கு “ அவர் பெயர் கேசவமூர்த்தி பிரதாப் சார்! ஏன் கேட்கிறீர்கள்? என்ற கேள்வியில் “சற்று தயங்கியவாறே இல்லே காலையிலே அவர் பக்கத்தில் இருந்தது அவர் மகள் தானே?’’ என்ற பிரதாப்பின் இந்த பேச்சால் அனுபவம் மிகுந்த அவருக்கு தன்னை எதற்கு தனியாக அழைத்து பேசவிரும்புகிறான் என்று காலையில் இருந்து தன் மனதில் எழுந்த கேள்விக்கு விடை கிடைத்தது.
பின் மெல்ல சிரித்துக் கொண்டே “ஆமாம் பிரதாப் சார்” என்றதற்கு நீங்க என்னை சும்மா பிரதாப் என்றே கூப்பிடுங்கள் இந்த பார்மாலிடீஸ் எல்லாம் வேண்டாம். என்று கூறிக்கொண்டே தன் நண்பனை பார்த்தான்.இன்னும் எவ்வளவு டைலாக்கு பேசுறியோ பேசு என்று மனதில் நினைத்துக்கொண்டே புன்னைகையுடன் பிரதாப்பை எதிர் பார்வை பார்த்தான்.
தன் நண்பனிடமிருந்து பார்வை திருப்பி சந்தானத்திடம் சென்றது.சந்தானம் சிரித்துக் கொண்டே “ரொம்ப சந்தோஷம் பிரதாப் இவ்வளவு சின்ன வயதில் நீங்க தொழில்லே எவ்வளவு சாதித்து இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். உங்களுடன் இந்த வெற்றிக்கு காரணம் பெரியவர்களிடம் நீங்க செலுத்தும் மரியாதைத்தான்னு எனக்கு இப்போ தெரியுது” என்று கூறி. “சொல்லு பிரதாப் உங்களுக்கு கேசவமூர்த்தியின் பெண் பிடித்து இருக்குன்னு உங்க பேச்சியில் இருந்தே தெரிகிறது.” என்று கூறி பிரதாப்பின் முகம் பார்த்தார். எது இருந்தாலும் அதை பிரதாப்பின் வாயிலிருந்தே வர வேண்டும் என்பது அந்த அனுபவம் மிகுந்தவரின் எண்ணம்.
அவரின் எண்ணம் புரிந்தவனாக அவரிடம் நேரிடையாகவே. “ஆமா சந்தானம் சார் காலையிலே கேசவமூர்த்தியோட பெண்ணை பார்த்தவுடன் எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. அதனால் தான் நான் உங்களை இங்க வரவழைத்தேன். ஆனால் இது மட்டும் இல்லை நான் முதலில் சொன்னது போல் உங்களுக்கு என்ன உதவி தேவை பட்டாலும் என்னிடம் கேட்கலாம். அது இந்த பெண் முடிய வில்லை என்றாலும்….” என்று கூறி தான் மிகப்பெரிய பிஸ்னஸ் மேன் என்று தன் வார்த்தையால் அடித்தான்.
ஆம்… இனிமேல் தான் எதுவும் செய்ய வேண்டியது இல்லை. தானே முன்னிருந்து தன் திருமணத்தை முடித்துக் கொடுத்து விடுவார் என்று அவனுக்கு தெரியும்.அவன் எண்ணத்துக்கு ஏற்ற மாதிரியே “எனக்கு உங்களைப் பார்த்து ரொம்ப சந்தோசமா இருக்குப்பா. அப்புறம் நான் இந்த ஒட்டலை வித்ததே என் மகன் அமெரிக்காவில் இருக்கிறான். அவனுக்கு அங்க பிஸ்னஸ் பண்ண கொஞ்சம் பணம் தேவைப்படுது அதுக்காகத்தான் விற்றேன். இந்த பணத்துடன் நானும் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிடலாம் என்ற ஐடியாவில் இருக்கிறேன் “என்று ஏற்கனவே பிரதாப்புக்கு தெரிந்த விஷயத்தை கூறினார்.
ஆம் பிரதாப் எப்போதும் எதை ஒன்று வாங்கும் போதும் அவர் ஏன்? அதை விற்கிறார்?. அதில் ஏதாவது குளறுப்படி இருக்கிறாதா! என்று ஆராய்ந்தே வாங்குவான். அதன் படி அனைத்து விஷயங்களும் தெரியும்.
ஆனால் அனைத்து விஷயத்தையும் அறிந்துக் கொண்டே புதியதாக கேட்பது போல் கேட்டுக் கொண்டிருந்த பிரதாப்பை அசோக் கிண்டலுடன் நோக்கினான்.
“அப்போ உங்களுக்கு பணம் அவசரமாக தேவைப்பட்டால் சீக்கிரமாகவே நாம ரிஜிஸ்ட்ரேஷன் முடித்திடலாம்.” என்று அவர் வீக் பாயிண்டில் அடித்தான். “சரி பிரதாப் நீங்க சொன்ன மாதிரியே சீக்கிரம் ரிஜிஸ்ட்ரேஷன் முடித்து விடலாம். ஆனால் அதற்கு முன் உங்க விஷயத்தை கண்டிப்பாக முடித்து விட்டு தான் நான் அமெரிக்கா போவேன்.” என்று பிரதாப் எதிர்ப்பார்த்த பதில் தந்தார்.
பிரதாப் அசோக்கை பார்த்து ”அசோக் சீக்கிரம் இவர் வேலையை முடித்து விடு “என்று கூறிக் கொண்டே அவரை டைனிங் ஹாலுக்கு அழைத்து சென்றார்.
பின்பு சந்தானம் எட்டரை மணி வாக்கில் விடை பெற்று சென்றார். அவர் சென்றவுடன் அசோக் பிரதாப்பை இறுக்கமாக வாரி அணைத்துக் கொண்டான். “ஏய் ...சீ...சீ என்னடா இது விடு என்று” தன்னை விடுவித்துக் கொண்டான்.
“ஆமாண்டா… ஆமா நான் கட்டிபிடித்தா பிடிக்குமா…? நீ எதிர் பார்க்கிற குவாலிபிகேஷனே வேறு ஆச்சே…” என்று சொன்ன அசோக்கை “தெரிந்தா சரி தான்” கூறிக்கொண்டே செல்லில் தன் அன்னையிடம் பேசியவாறே தன் ரூமுக்குள் சென்றான்.
மறுநாள் விடியலிலேயே சந்தானம் பிரதாப்பை அழைத்திருந்தார். “பிரதாப் நான் கேசவமூர்த்தியிடம் நான் உன்னை அழைத்து வருகிறேன், என்று கூறியிருக்கிறேன். ஆனால் விஷயத்தை சொல்லவில்லை.இன்று மாலையில் சந்திக்க சம்மதித்து விட்டார்.நாம் மற்றவற்றை நேரில் பேசிக் கொள்ளலாம்.” என்று கூறி செல்லை அணைத்து விட்டார்.
சந்தானம் செல்லை வைத்தவுடன். பிரதாப் சிந்தனையில் ஆழ்ந்தான். எப்படி அவரிடம் பேசுவது என்று தன் மனதில் திட்டம் வகுக்க ஆராம்பித்தான். அந்த யோசனையுடனே அன்று முடிக்க வேண்டிய, சந்தானம் ஒட்டலை வாங்கும் வேலையையும் பார்த்துக் கொண்டான்.
அதுவும் பேசிய விலைக்கு அதிகமாக வாங்குவதை பார்த்து அசோக் ஆச்சரிய பார்வை செலுத்தியதுக்கு “அசோக் சந்தானத்தின் வேலை நமக்கு இத்துடன் முடிந்து விடுவது கிடையாது. அவர் தேவை நமக்கு தேவை!” என்று புன் சிரிப்புடன் கூறினான்.
அசோக் நண்பனை பார்த்து சிரித்துக்கொண்டே ,”என்ன என்னவோ சொல்லுறே …. என்ன என்னவோ செய்யுறே…..” என்று அவனும் ரைமிங்ககா பேசி அவனை கலாய்த்தான்.இவ்வாறே மாலை வரை சென்றது.
சந்தானத்துக்கு தான் பேசியதை விட அதிகமாகவே பிரதாப் விலை கொடுத்தது மிக்க மகிழ்ச்சி ஏற்ப்பட்டது. இதனால் எப்படியாவது பிரதாப் ஆசைப்பட்ட பத்மினியை அவனுக்கு திருமணம் செய்து விட வேண்டும் என்று நினைத்தார்.
அதுவும் இல்லாமல் பிரதாப்புக்கு என்ன குறை அவன் பல தொழிலில் ஈடுப்பட்டிருக்கிறான். அவன் கால் பதித்த அனைத்து தொழிலிலும் கொடிக்கட்டி பறக்கிறான். பிரதாப்பை மாப்பிள்ளையாக அமைய கேசவமூர்த்தி கொடுத்து வைத்திருக்க வேண்டும். தான் அமெரிக்க செல்வதுக்குள் அவர்கள் திருமணத்தை முடித்து வைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்தார்.
பிரதாப் மாலையில் சீக்கிரமாக தன் பங்களா வந்தடைந்தான். முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி ஒரு புன் சிரிப்புடனே அந்த வீட்டின் சமையல்காரான் ராமைய்யாவிடம் “ராமைய்யா ஒரு டீ போட்டு எடுத்து வா “. என்று கூறினான்.
தன் எஜமானின் சிரிப்பு அவன் முகத்திலும் வெளிப்பட்டது. எஜமானின் சிரிப்புக்கு காரணம் தெரியவில்லை என்றாலும் அந்த சிரிப்பு வாடாமல் இருக்க கடவுளிடம் மனு போட்டுக்கொண்டே டீ கலக்க சென்றான்.
ராமைய்யா போட்ட டீயை குடித்துக் கொண்டே சந்தானத்தை செல்லில் அழைத்தான். அந்த பக்கம் சந்தானம் ”நானே இப்பதான் உங்களை கூப்பிடனும்னு நினைத்தேன்” என்று இழுத்தவாறே கூறினார்.
அவர் இழுத்த அந்த ஒரிரு நிமிடத்தில் ஆயிரம், ஆயிரம் யோசனைகள் பிரதாப்பின் மனதுக்குள் வந்து சென்றன. “ஏன் சந்தானம் சார் இன்று அவரை பார்க்க முடியாதுன்னு சொல்லி விட்டாரா” என்று பதட்டத்துடன் வினவினான்.
பிரதாப்பின் பதட்டத்தை பார்த்தே பெண்ணை பைய்யனுக்கு ரொம்ப பிடித்து விட்டது என்று அறிந்துக் கொண்டார். எப்படியாவது இந்த இடத்தை முடித்து வைத்து விட வேண்டும் என்று தன்னுள் கங்கணமே கட்டிக்கொண்டார்.
பின் லைனில் பிரதாப் ஹலோ…. ஹலோ என்ற அழைப்பில் “அதெல்லாம் ஒண்ணும் இல்லே பிரதாப் இப்போ தான் கேசவமூர்த்தியை செல்லில் அழைத்து பேசினேன். அவர் வீட்டுக்கு வருகிறீர்களா என்று கேட்டார். அது தான் உங்களிடம் கேட்டு சொல்லுவதாக சொன்னேன்” என்று கூறியதுக்கு பிரதாப். உடனே சிறிதும் யோசிக்காமல் வீட்டுக்கே வருவதாக சொல்லிவிடுங்க.” என்று கூறி செல்லை அணைத்து விட்டு மகிழ்ச்சியுடன் மாடி ஏறினான்.
தன் ரூமுக்கு வந்ததும் பாத்ரூமுக்குள் நுழைந்து ஷவரின் அடியில் நின்று நிதானத்துடன் நீர் துளிகள் தன் மேல் விழுவதை கண் மூடி அனுபவித்தான். தன் மேல் விழும் நீரின் குளுமை பத்மினியை நினைவு படுத்தியது.
குளித்து முடித்ததும் டவளை மட்டும் கட்டிக் கொண்டு கண்ணாடி முன் வந்து நின்றான். கண்ணாடியில் தன் உருவத்தை மிக நிதானமாக ஒரு முறை பார்த்தான். அவன் எப்போதும் தன் உடலை நேர்த்தியாக பாதுகாப்பான்.
தன்னுடைய ஹார்ட்வொர்க்கிலும் தவறாது ஜாகிங்க்கு செய்வான். பின்பு ஜிம்முக்கு செல்வான். அதனால் அவன் உடல் எப்போதும் ஃபிட்டாகவே இருக்கும். ஏன் ஒரு சமயம் ஆண் மாடல் வரவில்லை. அன்று நிறைய செலவு செய்து செட்டிங் எல்லாம் செய்திருந்தார்கள். அன்று சூட்டிங் நடக்கவில்லை என்றால் நிறைய லாஸ்.
அதனால் அப்போது அந்த விளம்பரத்தின் டைரக்டர் பிரதாப் சார் நீங்களே இந்த விளம்பரத்தில் நடிக்கலாம். அந்த விளம்பர மாடலுடன் நீங்களே இதுக்கு பர்பெக்டா இருப்பீங்க என்று கூறியும் பிரதாப் மறுத்து விட்டான். அவர் அவர் தொழில் அவர்களுக்கு என்று கூறி.
அப்படி பட்டவன் தன்னை அவளுக்கு பிடிக்குமா? என்று திடீர் என்று சந்தேகம் ஏற்ப்பட்டது. அன்று ஒட்டலில் கூட அவள் நம்மை பார்க்க வில்லையே! இல்லை ஏற்கனவே அவள் மனதில் யாராவது ! நோ……. அந்த நினைவே அவனுக்கு வேப்பங்காயாக கசந்தது.
பின் நினைவு வந்தவனாக அன்று பேட்டியில் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் தான் சிறந்தது என்று அன்று அவள் கூறியது நினைவுக்கு வந்தது. பிறகு தான் மனம் சிறிது சமாதானம் ஆனாது.பின் திரும்பவும் கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தை பார்த்தான்.
அவன் எப்போதுமே டிரஸ்ஸில் மிகவும் அக்கறை செலுத்துவான். தன் தொழிலுக்கு டிரஸ்சென்ஸ் மிகவும் முக்கியம். அதுவும் இல்லாமல் அவன் பல தொழில்முறை பார்ட்டிக்கு செல்வான். அவன் எப்போதும் தான் தனித்து தெரியவேண்டும் என்று விரும்புவான்.
அதனாலும் அவன் டிரஸ்சில் ஒரு தனித்துவம் இருக்கும். ஆம் அவன் எப்போதும் கடைகளில் சென்று தன் உடைகளை எடுக்க மாட்டான். தனக்கு என்றே உடை வடிவமைப்பாளர் தனியாக உடையை அமைத்துகொடுப்பார். அவன் அதைத்தான் எப்போதும் அணிவது. அவனின் டிரஸ் சென்சுக்கே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அப்படி பட்டவன் தான் என்ன உடை அணிவது என்று குழம்பிக் கொண்டிருந்தான். ஒன்றை எடுத்து அணிவது பின் அது அவளுக்கு பிடிக்குமா பிடிக்காதா என்ற யோசனையில் அதை களைந்து வேறு ஒன்று உடுத்துவது, என்று இதற்கு என்றே அரை மணி நேரம் செலுத்தினான்.
பின் ஒரு வழியாக ஒரு உடையை தேர்வு செய்து உடுத்திக் கொண்ட பிறகு இந்த கலர் அவளுக்கு பிடிக்குமா? என்று மாபெரும் சந்தேகம் எழுந்தது. அவன் யோசனையுடன் கண்ணாடியை பார்த்துக் கொண்டிருக்கும் போது அசோக்கை அப்போது தான் கண்ணாடியில் கண்டான்.
கண்ணாடியில் இருந்து பார்வையை திருப்பி “நீ எப்போது வந்தாய்? என்று வினாவினான்.”ஏன் கேட்க மாட்ட ஒன் அவறா நான் இங்கேயே தான் இருக்கிறேன். நீ டிரஸ் பண்ணி முடிப்பேன்னு காத்துக்கிட்டு இருக்கேன் நீ எங்கே முடிக்கிற மாதிரியே தெரியலே “ என்று கூறி பெரு மூச்சி விட்டான்.
“ஏண்டா எவ்வளவு தைரியம் இருந்தால் நான் டிரஸ் பண்ணுவதை பார்த்தது இல்லாமல் அதை என்னிடேமே சொல்லுவே”.என்று கண்களில் குறுநகையுடன் வினாவினான்.
“நான் ஏண்டா? பார்க்க போறேன் , என் கண் குருடாவதற்கா! நான் திரும்பி தான் நின்றேன். சரி நீயே டிரஸ் பண்ணி முடிப்ப நாம எதற்க்கு டிஸ்டர்ப் பண்ணனும் என்று வெயிட் பண்ணேன்” என்ற நண்பனிடம் அசோக் இந்த டிரஸ் எனக்கு நல்ல இருக்கா?” என்று வினாவினான்.
அசோக் யோசனையுடன் பிரதாப்பை பார்த்த வாறே! “முதலில் உனக்கு ஒன்றும் இல்லையே” என்று எதிர் கேள்வி கேட்டான்.
“என்னடா சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் கேள்வி கேட்குறே?”
“யாரு? நானா ! நான் சம்மந்தம் இல்லாமல் கேள்வி கேட்கிறேன். உன்னுடைய டிரஸ் சென்ஸ் டெல்லியிலேயே புகழ் பெற்றது. அப்படி பட்டவன் வந்து என் கிட்ட வந்து நல்லா இருக்கான்னு கேட்டா நான் என்ன சொல்வது நீயே சொல்”? என்ற அசோக்கின் பேச்சில் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
பின் மெதுவாக “அசோக் என் டிரஸ் சென்ஸ் மற்றவர்களுக்கு பிடிப்பதை பற்றி இனி மேல் எனக்கு கவலை இல்லை. மினிக்கு பிடிக்குமா? அதுதான் என் கவலை.”என்ற நண்பனை நினைத்து அவனுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.
அவன் மற்றவர்கள் பற்றி அவ்வளவாக என்றைக்கும் கவலை பட மாட்டான்.அப்படி பட்டவன் இன்று அவனின் மாற்றம் அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது, காதல் வந்தால் ஒருவனுக்கு இவ்வளவு மாற்றத்தை கொண்டு வர முடியுமா?என்று வியந்து போனான். இன்னும் சிறிது நாளில்… இல்லை இன்னும் சிறிது நேரத்தில் தான் காதலில் விழுந்து அதை உணர்வு பூர்வமாக அனுபவிக்க போகிறோம் என்று தெரியாமல்.
தன் யோசனையில் இருந்து கலைந்து “உனக்கு என்னடா எந்த டிரஸ் போட்டாலும் நல்லா இருக்கும்”என்றுக் கூறிக் கொண்டே அணைத்தான்.
பிரதாப் அசோக்கை பார்த்து சிரித்துக் கொண்டே”இப்போது எல்லாம் நீ நிறைய தடவை என்னை கட்டி கட்டி பிடிச்சுக்கிறே. என்ன விசயம் என்ன கல்யாணத்துக்கு பெண் பார்த்துடலாமா?” என்று கூறி கண்ணாடித்தான்.
“முதலில் உன் பைத்தியத்தை தெளிய வைப்போம். பிறகு என்னுடையதை பார்த்துக்கலாம்.”என்று கூறினான்.
அசோக்கை பார்த்து ”நீயும் என்னோட வரியா”?என்று வினாவினான்.
அசோக் பிரதாப்பை பார்த்து முறைத்த வாறே “ஏண்டா சொல்ல மாட்ட என்ன பார்த்த எப்படி இருக்கு?நான் கிளம்பிட்டு உன்னை கூப்பிட்டு போகலாமுன்னு தான் வந்தேன்.என்ன பார்த்து வரியான்னு அசால்ட்டாக கேட்கிறே.”என்ற நண்பனின் பதிலில் மகிழ்ச்சி அடைந்து அணைக்க போகும் போது தான் கூறியது நினைவு வந்தவனாக சிரித்துக் கொண்டே அவன் முகம் பார்த்தான். அவனும் தன்னையே சிரித்துக் கொண்டு பார்த்திருப்பதை பார்த்ததும் எதையாவது நினைத்துக் கொள்ளடா… என்று அணைத்திருந்தான். இந்த மகிழ்ச்சி பிரதாப்புக்கு நிலைக்குமா…..?