Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

புதியதொரு ஜோடி.... 24...5 டீசர்

  • Thread Author
அத்தியாயம்…24…5 நிறைவு பகுதி….

மஞ்சுளா தான் வைஷ்ணவி எதற்க்கு இப்படி பேசினாள்.. பின் ஏன் இப்படி ஓடுகிறாள் என்று புரியாது வைஷ்ணவி சென்ற திசையை நோக்கிய பார்த்து கொண்டு இருந்தவளை பின் பக்கம் இருந்து அணைத்து கொண்டவன்..

“புருஷன் நான் இருக்க..? அங்கு என்ன டி பார்வை….?” என்று மனைவியின் காதருகில் வந்து பேசியதில் அவனின் அடர்ந்த மீசை உராய்ந்ததில் அவளின் மேனி ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்தியது தான்..



இருந்தும் அதை கணவனிடம் காட்டாது அந்த அணைப்பில் சட்டென்று மஞ்சுளாவின் பார்வை நர்த்தகனிடம் தான் நகர்ந்தன.. நல்ல வேளை குழந்தை அங்கு குளத்தில் இருக்கும் வாத்தை பார்த்து கொண்டு இருந்தான்…

குழந்தை பார்க்கைல்லை என்று நிம்மதி அடைந்தாலும் இது என்ன இது போல வெட்ட வெளியில் என்று நினைத்து கணவனின் அணைப்பில் இருந்து விலக பார்த்தாள்..

ஆனால் அவன் விட்டால் தானே…. “ என்னங்க இது குழந்தை எதிரில்….” குழந்தை வேறு பக்கத்தில் இருக்க… அவன் காதில் விழ கூடாது என்று மஞ்சுளா ரகசியம் பேசுவது போல மெல்ல பேச…

துகிலனும் மனைவி போலவே அதே குரலில்.. “ குழந்தை வாத்த பார்த்துட்டு இருக்கான்…” என்று அவன் இதை சொன்ன போது கூட முன் போலவே தான் அவனின் மீசை முடி உராய்வது போல கேட்டது…

மஞ்சுளாவுக்கு இன்னும் கூச்சம் அதிகம் ஆகியது…

அதில் ரகசிய குரல் வேறு மாதிரியான குரலாம மாறி போனவளாக… “ பப்ளிக் ப்ளேஸ்ல…” என்று பேச்சை இழுக்க.

“இது பப்ளிக் கிடையாது டி… “ என்று சொன்னவன் ஒரு கை மனைவியின் வயிற்று பகுதியில் கை வைத்து வயிற்றை மெல்ல தடவி விட..

“அதுக்கு என்று…” என்று கேட்ட மஞ்சுளாவின் குரலில் ரகசியத்தை மீறி வேறு ஒன்று குரலில் தெரிந்தது.

அவளுக்குமே கணவனின் இந்த அருகாமை நீண்ட நாட்களுக்கு பின் கிடைத்து இருக்கிறது… அது இன்னும் வேண்டும் என்றும்.. இதற்க்கு மேலும் வேண்டும் என்றும் கேட்க… ஒரு மாதிரியான அவஸ்த்தை நிலையில் தான் பெண்ணவளும் இருந்தாள்…

மனைவியின் நிலை கணவனுக்கு புரிந்து விட்டது போல… “பேபியை தூங்க வெச்சிடு டா….” என்று சொல்லி கொண்டு இருந்த போது தான் நர்த்தகனின் கவனமும் வாத்திடம் இருந்து இவர்கள் பக்கம் வந்தது…

தந்தையை பார்த்ததுமே… “ டாடி…” என்று இவனிடம் தாவ…

துகிலனும் குழந்தையை தூக்கி கொண்டவன்.. “ பேபி தூக்கம் வருதா…?” என்று கேட்டான்…

“வரலையே டாடி…” என்றவன்.. அதோடு விடாது…

“நீங்க பேபி என்று சொன்னா நான் இன்னைக்கு உங்கள தூங்க விட மாட்டேன்…” என்றது தான் துகிலன்..

“அய்யோ ராசா. இனி நான் உன்னை பிக் மேன் என்று கூட கூப்பிடுறேன் ராசா… இன்னைக்கு நான் தூங்கும் ஐடியா இல்லை தான்.. ஆனா அந்த தூக்க கெடல் வேறு ஒன்றுக்கு டா பிக் மேன்…” என்று சொல்ல குழந்தைக்கு தந்தையின் வார்த்தையின் அர்த்தம் புரியாது போனாலும்.. தந்தை தன்னை அழைத்த அந்த பிக் மேனில் மனது குளிர்ந்து போனது..

அதனால் நான் பெரிய மனதன் தான் என்பதை தந்தையிடம் உடனே நிரூபித்து காட்டி விட வேண்டும் என்றும் அந்த குழந்தை மனது நினைத்தது போல.

அதனால்.. “ நியூ பிராஜெக்ட் ஒர்க்கா டாடி…?” என்று மகன் கேட்டான்.

இந்த பேச்சு எல்லாம் நர்த்தகனை துகிலன் தூக்கி கொண்டு வீட்டிற்க்கு நுழையும் போது நடந்தது… மகன் இப்படி கேட்கவும் நடந்து வந்து கொண்டு இருந்தவன் சட்டென்று நின்று விட்டான்…

அதோடு விடாது மகன் கேட்ட.. “ ரொம்ப சீக்ரெட்டா செய்ய வேண்டியதா டாடி….?” என்று கேட்டு வைக்க..

பின் தொடர்ந்து வந்த மஞ்சுளாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.. துகிலனுக்கும் சிரிப்பு வந்து விட்டது தான்..

சில சமயம் சில பிராஜெக்ட்க்கு கோட்டேஷன் தயார் செய்வது.. ரகசியம் காக்கா வேண்டியும்… ஒரு சில சந்தேகம் வந்தாலுமே அலுவலகத்தில் ஒரு கொட்டேஷனை அலுவலக ஊழியர்களை வைத்து தயார் செய்த பின்…

உண்மையான அனுப்ப வேண்டிய கொட்டேஷனை நர்மதாவும் துகிலனும் வீட்டில் தனித்து செய்து முடிப்பர்.. அதை தான் இப்போது மகன் சொல்வது…

சிரிப்பு வந்தாலும் சிரிக்காது.. “ ஆமா செல்லம்.. இது யாரின் பார்வைக்கும் தெரியாது.. ரொம்ப ரொம்ப சீக்ரெட்டா செய்ய வேண்டிய விசயம்.. அது தான் நீ சாப்பிட்டு தூங்கு… அம்மாவையும் என்னையும் டிஸ்ட்டப் செய்ய கூடாது.” என்றும் சேர்த்து சொன்னான்..

இந்த பேச்சில் மஞ்சுளா மெல்ல. “ குழந்தை கிட்ட என்ன பேச்சு.?” என்று கேட்டவள் முறைத்தும் வைத்தாள்…
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
112
அடேய் கேடி பில்லா கில்லாடி ரங்கா புதுசு அதுவும் சீக்ரெட் புராஜக்ட் டா உனக்கு 🥰🥰🥰.
பயபுள்ள இப்பதான் குடும்ப இஸ்தரனாகற தகுதிக்கு தயாராகுது🤭🤭.
ஜீ ஏற்கனவே போட்ட டீ பதிவோட எபி இன்னும் வரலையே. இப்ப இன்னொரு டீ பதிவு ன்னா? எது முன்னாடி பின்னாடி வரும் ஜீ?🤔 இல்லை இரண்டும் ஒன்னா சேந்து வருமா ஜீ🤔?
 
Top