Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Pirithariyaa Pithana Podhum-11

  • Thread Author
அத்தியாயம்…11

சிவ பிரகாஷ் எப்போதும் போல அன்றும்.. அதாவது எப்போதும் போலவும் என்றால், லிங்கா இந்த தளத்தை கட்டி முடித்து தான் மட்டுமே அங்கு அனுமதி வேறு யாருக்கும் கிடையாது என்று விட்டான்..

அந்த வார்த்தையே சிவ பிரகாஷ் தினந்தோறும் நடுயிரவு அந்த தளத்தில் வந்து பார்க்க வைத்தது..

அன்றும் அதே போல் பன்னிரெண்டு மணிக்கு மின் தூக்கியை உபயோகிக்காது படிக்கட்டின் வழியாக மூன்றாம் தளமான லிங்கா இருக்கும் தளத்திற்க்கு வந்தடைந்தார்..

எப்போதும் அவர் வந்தால், அந்த இடம் இருள் மட்டுமே சூழ்ந்து இருக்கும்.. ஆனால் அன்று நீச்சல் குளப்பகுதியில் மட்டும் சிறு வெளிச்சம் வர.. தன்னால் அவர் பாதங்கள் அதை நோக்கி நகர்ந்தன..

நீச்சல் குளமான இடத்தை சிவ பிரகாஷ் நெருங்கும் சமயம் மெல்ல பேச்சு குரல் அவர் காதில் விழுந்தன..

ஒரு சமயம் பேசியில் லிங்கா படம் ஏதாவது பார்த்து கொண்டு இருக்கிறானா.? இந்த சமயம் தன்னை பார்த்து ஏதாவது பிரச்சனை ஆகி விட போகிறது என்று நினைத்து மீண்டும் வந்த வழி சென்றிட தான் தன் பாதத்தை பின் நோக்கி நகர்ந்தினார்.

ஆனால் “ ஈஷ் அத்தான்..” என்ற அழைப்பில்.. இது மது குரல் போல இருக்கிறதே என்று நினைத்து பின் நோக்கி நடவாது மெல்ல தன் பாதத்தை அடி எடுத்து லிங்கா இருக்கும் இடத்தை நோக்கி வந்தார்.

வந்தவர் கண்ணில் மாட்டியது தான் லிங்காவின் மீது விழுந்து இருந்த மதுவை. கெட்டதிலும் ஒரு நல்லது .. சிவ பிரகாஷ் அப்போது தான் வந்தார்..

அதாவது மது லிங்காவிடம் முன் பேசியது எதுவும் அவர் காதில் விழவில்லை.. அதே போல் பார்த்தவர் மனதில் சட சட என்று பல திட்டங்கள் உருவாகியதில் விரைந்து அந்த இடத்தை விட்டு சென்று விட்டதால்,

அடுத்து மது சஜனா பற்றி பேச போவதை கேட்காமலேயே சென்று விட்டார். ஆனால் லிங்கா மதுவின் பேச்சை கூர்ந்து கவனித்து உள்வாங்க தொடங்கினான்.

மது.. “ ப்ளஸ் டூ முடித்து சஜனாவை வேறு காலேஜ் அனுப்ப நம்ம எஸ். எம் குழுமம் தயாராக இல்லை.. அவளுக்கு எந்த சப்ஜெக்ட் பிடிக்கும் என்று மும்பையில் இருந்து அப்பா அம்மாவை வர வழைத்து எப்படியோ பேசி நம்ம கல்லூரியிலேயே சேர்க்க வைத்து விட்டாங்க..”

“இங்கு அப்பா அம்மா எப்போதும் காலேஜ் ஸ்கூல் அதில் எல்லாம் தலையிடுவது இல்லாததால் சஜனாவை பற்றி ஒன்றும் தெரியாது போய் விட்டது.”

“சஜனாவுக்கு காலேஜூம் இங்கு படிப்பதில் மகிழ்ச்சி.. எனக்கும் மகிழ்ச்சியாக தான் இருந்தது.. அப்பா உன் மேல் படிப்பு அமெரிக்காவில் தான் என்று சொல்லும் வரைக்கும்..”

“நான் எவ்வளவோ மறுத்து பார்த்தேன்.. நான் இங்கு நம்ம காலேஜிலேயே படிக்கிறேன் என்று..

“ஆனால் இது அம்மா அப்பா மட்டும் இல்ல யாரும் ஒத்து கொள்ளவில்லை. இல்ல நம்ம வீட்டு பசங்க எல்லோரும் காலேஜ் படிப்பு வெளி ண்ஹாட்டில் தான் படிப்பாங்க.. நீயும் அங்கு தான் படிக்க வேண்டும் என்று நான் மறுக்க மறுக்க அங்கு படிக்க வேண்டிய எல்லா ஏற்பாட்டையும் முடித்து விட்டாங்க.”

“முன் எல்லாம் எப்படியோ. ஆனால் நான் தத்து பிள்ளை என்று தெரிந்ததில் இருந்து என்னாலே அம்மா அப்பா கிட்ட மட்டும் இல்ல யாரிடமும் அடம் பிடிக்க முடியல.” என்று சொன்னவளை லிங்காவினால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது..

அவன் தாய் மாமன் கலைசெல்வன் அவ்வளவு நல்லவர்.. அவன் மீது அவ்வளவு பாசம் வைத்து இருக்கிறார். இருந்தும் லிங்கா அவரிடம்.. “ இது தான் வேண்டும்.. “ என்று அடம் பிடிக்க மாட்டான்..

அதே போல் தான் அவனின் மாமி.. “ இன்னைக்கு என்ன செய்யட்டும்..” என்று சமையல் பற்றி கேட்டாலும்.. “ எனக்கு எல்லாமே பிடிக்கும் தான் மாமி… எது செய்தாலும் பரவாயில்லை..” என்று தனக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளை சொல்லாது விட்டு விடுவான்..

அதனால் மதுவின் உணர்வை லிங்காவினால் நன்கு உணர்ந்ததால் தன் தோள் மீது சாய்த்து கொண்டவன் அவளின் முதுகை தடவி விட்ட வாறு..

“ஐயம் ஹன்டர் ஸ்டாட்டிங்க் யூவர் சிட்டிவிஷன்..” என்றவனின் அந்த ஆறுதல் வார்த்தையில் தன் மனதில் இருந்த மிச்சத்தையும் சொல்லி விட்டாள்..

“இப்போ தோனுது.. நான் அமெரிக்காவுக்கு போயே இருந்து இருக்க கூடாது ஈஷ் அத்தான்.. போயே இருந்து இருக்க கூடாது..’ என்று வெறி பிடித்தவள் போல் கத்தியவளை சமாளித்து உட்கார வைப்பதற்க்குள் லிங்காவுக்கு போதும் போதும் என்று ஆகி விட்டது…

பின் தன் அறையில் இருந்து தண்ணீரை கொடுத்து அவளை அசுவாசப்படுத்திய பின் தான் மேலும் சொல்ல தொடங்கினாள்.

“நான் அமெரிக்கா போக மாட்டேன் என்று வீட்டில் சொன்னது போல தான் அவள் கிட்டேயும் எனக்கு உன்னை விட்டு போக விருப்பம் இல்லை என்று சொன்னேன்.”

ஆனால் அதற்க்கு அவள்.. “ நீ தப்பு செய்யிற மது… உன் அப்பா உன் கிட்ட என்ன சொன்னார்.. நம்ம வீட்டு பசங்க வெளி நாட்டில் தான் படிக்கனும் என்று..” என்று சஜனா சொல்லி கொண்டு வர..

உடனே மது… “வெளி நாட்டில் படித்தா தான் நல்ல படிப்பா..?” என்று நான் கேட்டதற்க்கு..

அதற்க்கும் சஜனா ஒன்னு சொன்னா ஈஷ் அத்தான்.. “ உயர்ந்த படிப்பு வெளி நாட்டு படிப்பா உள் நாட்டு படிப்பா.? என்ற பேச்சு இது இல்ல மது.”

“உன் அம்மா அப்பா உயர்ந்த மனசு.. அவங்களுக்கு தத்து பிள்ளை நீ.. ஆனா அவங்க எதிலேயேயும் நீ தத்து பிள்ளை அவங்க ரத்தம் நீ கிடையாது என்று வேற்றுமை பார்க்கல,.. அதனால தான் அவங்க குடும்ப பசங்க படிப்பையே உனக்கும் கொடுக்க முயல்றாங்க.”

“ஆனா நீ இரண்டு வருடமா தான்.. நான் உனக்கு சொந்த உடன் பிறப்பு என்று தெரியும்.. என்னை விட்டு போக முடியாது அவங்க கடமையை செய்ய தடுப்பது போல.. அமெரிக்கா போக மாட்டேன் என்று சொல்வது தப்பு மது..”

“பின்னாடி நம்ம விசயம் தெரிய வந்து.. என்னால தான் இந்த படிப்பு படிக்க நீ அமெரிக்கா போகலேன்னு உன் அப்பா அம்மாவுக்கு தெரிய வந்தா.. அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும் மது.. யோசித்து பார்.. நான் எங்கு போயிட போறேன்.. நீ தான் எங்கு போயிட போற.”

“போன் இருக்கு.. வீடியோ கால்.. சேட்டிங்க.. மெயில் இருக்கு.. நம்ம தொடர்புக்கு இன்னும் என்ன..? “ என்று..

அவளின் அந்த பேச்சு தான் ஈஷ் அத்தான்.. பின் அமைதியா நான் அமெர்க்கா போக காரணம்.. ஆனா நான் எங்கு போயிட போறேன் என்று சொன்னவ போயிட்டா ஈஷ் அத்தான்… போயிட்டா..

அவள் பாடியை கூட நான் பார்க்க முடியாது போயிட்டா.. போயிட்டா.” என்று தனக்கு தானே பேசிக் கொண்டு இருந்தவளை அடுத்து பேச வைத்து..

“நீ அமெரிக்கா போயிட்டே பிறகு உன்னை காண்டெக்ட் செய்யலையா சஜனா.?” என்று கேட்டதும்.

“ ம் செய்தா ஒரு வருடம் நேரம் கிடைக்கும் போது எல்லாம் வாட்ஸ் சாப்பில் பேசிப்போம்.. நேரம் வித்தியாசத்தினால் தோனும் போது எல்லாம் பேச முடியவில்லை என்றாலும், நேரம் கிடைத்தால் பேசிட்டு தான் இருந்தோம்..”

“நான் கூட அவள் கிட்ட சொன்னேன்.. உள் நாட்டிலேயே சுழலாது வெளி நாட்டிலும் நாம கத்துக்க வேண்டிட விசயங்கள் நிறைய தான் இருக்கு சஜனா. ஒன்னு வெளி நாட்டிலேயே இருந்துடாது படித்து முடித்து விட்டு..இல்லாத பட்டவங்க கொஞ்சம் காசு சேர்த்து வைத்து விட்டு இந்தியா வந்துடனும்..

“நீயும் ஹய்யர் ஸ்டேடி இங்கு தான் படிக்கனும்.. என்று அடுத்து நாங்க படிக்கும் படிப்பில் இருந்து காலேஜ் வரை திட்டம் போட்டு வைத்து இருந்தோம்.. எத்தனை கனவுகள்.. எத்தனை ஆசைகள் தெரியுமா எங்களுக்குள் ஈஷ் அத்தான்.. காதலர்கள் தான் கனவு காண வேண்டுமா ஈஷ் அத்தான்..”

“நாம ஒரே இடத்தில் வசித்தது கிடையாது.. இங்கு ஒன்னா இருக்கலாம் ஒன்னா படிக்கலாம். ஏன் ஒரே வீட்டில் போய் வாழலாம் என்று எல்லாம் நாங்க திட்டம் போட்டது எல்லாமே கனவு மட்டும் தான் என்று தெரிந்த போது..”

சஜனா பேச்சு கொஞ்சம் கொஞ்சமா குறைந்து போனது… பேசுன போது கூட அவள் குரலில் முன் இருந்த அந்த மகிழ்ச்சி இல்லை. ஒரு நாள் என்ன உடம்பு சரியில்லையா..? என்று அவ்வளவு கேட்ட பின் தான் சொன்னா..

இதை பற்றி உன் கிட்ட சொல்லலாமா வேண்டாமா என்று தெரியல மது. இந்த ஹாஸ்ட்டல்ல ஏதோ சரியில்ல என்று சொன்னா ஈஷ் அத்தான்.. சொன்னா..

ஆனா நான் அதுக்கு அப்படி ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு.. நீ என்ன பெரிய சீஐடியா. நம்ம விசயம் ஆராய்ந்து உண்மை கண்டு பிடித்தே.. ஆனா எல்லாமே ஆராய்ந்து பார்த்து. யப்பா யப்பா.. அது நம்ம காலேஜ் ஹாஸ்ட்டல் சஜனா.. அதுல என்ன சரியில்ல என்று சொல்ற நீ.. எனக்கு புரியல..

எல்லாம் உன் அதிகப்படியான மூளை செய்யும் வேலையா இருக்கும்… நீ என்ன செய்யிற அந்த அதிகப்படியான மூளையை படிப்புக்கு பயன் படுத்து என்று விட்டேன்.”

பின் ஒரு நாள் அந்த ஹாஸ்ட்டலில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள்..

அதுக்கு காரணம் இந்த காலேஜ் நிர்வாகம் உங்க வீட்டு ஆண்களில் ஒருவன் என்று என் கிட்ட சொன்னா.. முதல்.. முறை அவள் மீது எனக்கு அவ்வளவு கோபம் ஆத்திரம் வந்தது ஈஷ் அத்தான்..

“என்ன பேசுற.. சஜனா.. என் கிட்ட பழக… பழக பேச பேச. இந்த வீட்டில் இருந்து உன் அப்பா அம்மா கிட்டேயே என்னை சேர்த்துடலாம் என்று திட்டம் போட்டு இது போல எல்லாம் பேசுறியா நீ ..” என்று சொல்லி அப்படி திட்டி செல்லை வைத்து விட்டேன் ஈஷ் அத்தான்..

அப்புறம் தினம் மூன்று முறை எனக்கு ஒரு வாரத்திற்க்கு போனில் அவள் என்னை அழச்சிட்டு தான் இருந்தா.. அப்புறம் அவள் கிட்ட இருந்து எனக்கு எந்த அழைப்பும் இல்ல..

நானும் அவளுக்கும் என் மீது கோபம் போல. நான் போன் எடுக்காதது என்று நான் இரண்டு வாரம் விட்டு விட்டேன்.. நான் பண்ண பெரிய தப்பு அது தான் ஈஷ் அத்தான்.. அது தான்..

அப்புறம் நான் அவள் குரலை கேட்க போறது இல்ல என்று எனக்கு தெரிந்து இருந்தா, ஏன் அவள் சொன்ன வார்த்தையில் உண்மை இருக்கலாம் என்ற ரீதியில் நான் யோசித்து இருந்து இருந்தால்,, நான் அவளை இழந்து இருக்க மாட்டேன் ஈஷ் அத்தான்.

.நான் போன் செய்த போது அவள் எடுக்காதது முதலில் பிரச்சனையா தெரியல ஏன் பயப்பட கூட இல்ல ஈஷ் அத்தான்.. ஆனால் அதன் பின்னும் இரண்டு வாரம் தொடர்ந்து என் அழைப்புக்கு எந்த ரெஸ்பான்ஸும் இல்லை என்ற பட்சத்தில் நான் பயந்து விட்டேன்..

அவளை பத்தி நான் யார் கிட்ட கேட்க முடியும்.. பள்ளியில் படிக்கும் போது கூட அங்கு மட்டும் என் பேச்சு இருக்கும்.. வீட்டில் தப்பி தவறி கூட அவள் பெயரை எடுக்க மாட்டேன்..

அதே போல் தான் வெளியில் எல்லாம் சென்றது கூடையாது.. இங்கும் வர மாட்டா.. அப்பா அம்மா கிட்ட போனில் பேசும் போது எப்போவாவது அவள் செல்லை ஸ்பீக்கரில் போட்டு பேசுவா.

அப்போ அவங்க குரல் கேட்பேன்..அவங்க சஜனா கிட்ட பேசுவதை கேட்க கேட்க எனக்கே மனதில் பயம் தட்டி விட்டது.. அதனால நான் பேச போறேன் என்று போனில் ஸ்பீக்கர் மோடில் போடும் போது எல்லாம் வேண்டாம் அப்புறம் பேசு என்று விடுவேன்.



அடுத்து அவள் அதற்க்கு ஏன் என்று கூட என் கிட்ட கேட்டது இல்ல ஈஷ் அத்தான்.. அவ்வளவு புரிதல் என் கிட்ட அவளிடம் இருந்து இருக்கு ..ஆனால் நான்.. “ என்று தன் நெஞ்சின் மீது கை வைத்து சொன்னவளின் பேச்சு அடுத்து என்னவாக இருக்கும் என்று நினைக்கும் போதே லிங்காவுக்கே ஒரு மாதிரியாகி விட்டது..

மது எப்படி சொல்வாள்.. துக்கம் தான்.. துயரம் தான்.. ஆனால் இத்தனை ஆண்டுகள் மனதில் தேக்கி வைத்து இருந்த துயரத்தை இறக்கி வைத்தாலாவது பாரம் குறையாதா என்று நினைத்து விட்டாள் போல் மது..

சொல்ல முடியுமா.. தன் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைக்க முடியுமா..? என்றே மதுவுக்கு பயம் வர லிங்கா.

“ வேண்டாம் மது விடு.. என்னால ஒரு அளவுக்கு கெஸ் செய்ய முடியுது.. நீ எதை நினைத்து என்னிடம் சொன்னியோ.. அது கண்டிப்பா செய்து முடிப்பேன் என்று லிங்கா சொல்லியும் மறுப்பாக தலையசைத்த மது..

“இங்கே எனக்கு எப்போதும் பாரமாவே இருக்கு ஈஷ் அத்தான்.. “



தன் நெஞ்சை சுட்டி காட்டி சொன்னவள்.. “ முன் போல என்னால இருக்க முடியாது தான்.. ஆனா என் மனசுல இருப்பது உங்க கிட்ட சொன்னாலாவது.. குறையுதா என்று பார்க்கனும்..” என்று சொன்னவள்..

பின்… “ சஜனா போனை எடுக்கல. அவளை பத்தி யார் கிட்டேயும் விசாரிக்க முடியல.. அவளுக்கு உடம்பு சரியில்லையா. இல்ல ஊரில் இல்லையா..? என்று தான் யோசித்தேன் ஈஷ் அத்தான்..

ஆனா நான் இது எல்லாம் யோசிக்கும் போது. அவள் இல்ல.. அவளே இல்ல ஈஷ் அத்தான் அவளே இல்ல.

அம்மாவிடம் பேசும் போது தான்.. இந்த பெண்கள் ஏன் தான் இப்படி இருக்காங்களோ.. உயிர் என்பது அவ்வளவு ஈசியா போயிடுச்சி.. அதே போல எப்படியாவது வாழலாம் என்று ஒழுக்கம் இல்லாது எப்படியாவது வாழ்றது..” என்று அம்மா பேச பேச.

அந்த வார்த்தை சஜனாவை பத்தி என்று எனக்கு தெரியல ஈஷ் அத்தான்..” என்ற அந்த பேச்சில் லிங்கா அதிர்ந்து விட்டான்..

சஜனா இறந்து விட்டாள் என்பது தெரியும்.. ஆனால் அவள் கொலையை தற்கொலையாக மாற்றியவர்கள் அவளில் ஒழுக்கத்தையும் மாற்றி இருப்பார்கள் என்பது அவன் நினைத்து பாராத ஒன்று…

அப்படி என்ன நடந்தது. ? பார்க்கலாம்..








 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
270
பாவம் மது கூடப் பிறந்தவளை இழந்த துக்கம் மட்டும் இல்லாம குற்ற உணர்வும் சேர்ந்து உள்ளுக்குள்ள வச்சு அழுந்திட்டு இருந்துருக்கா.... 😐😐😐😐

உண்மை தான் ஒருவேளை சஜானா சொன்னதை நம்பி என்னனு கேட்டு இருந்தா அவ இப்போ உயிரோட இருந்திருக்கலாம்.... 😔
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
பாவம் மது கூடப் பிறந்தவளை இழந்த துக்கம் மட்டும் இல்லாம குற்ற உணர்வும் சேர்ந்து உள்ளுக்குள்ள வச்சு அழுந்திட்டு இருந்துருக்கா.... 😐😐😐😐

உண்மை தான் ஒருவேளை சஜானா சொன்னதை நம்பி என்னனு கேட்டு இருந்தா அவ இப்போ உயிரோட இருந்திருக்கலாம்.... 😔
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்துகள் சொல்லவும்
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
330
Vera enna seiwanga… avalai rape pannittu avaloda olukkathai kevalama pesuwanga… vera enna theriyum intha society ku
 
  • Like
Reactions: grg
Top