Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Poiyenum Perum Velicham....15

  • Thread Author
அத்தியாயம்….15

ஸ்வேதா பயந்து வீடு வந்ததிற்க்கு தகுந்தது போல் தான் வீட்டிற்க்குள் இவர்கள் நுழைந்ததுமே மரகதம்..

“என்ன அக்னி இத்தனை நேரம் கழிச்சி வீடு வர.. உனக்காக எத்தனை நேரம் மாப்பிள்ளை காத்துட்டு இருக்குறார் தெரியுமா…?” என்று பிரச்சனையை ஆரம்பித்து விட்டார்..

அக்னிக்கு இன்று இதை பற்றி பேசும் மனநிலையில் அவன் சுத்தமாக இல்லை..

பதினைந்து நாள் முன் தான் அவன் ஆசைப்பட்ட பெண்ணோடு திருமணம் முடிந்தது… இதோ நாளை வெளிநாட்டுக்கு கிளம்ப போகிறான்..

இது முன்பே அக்னிக்கு தெரியும் தான்… திருமணம் முடிந்த உடனே மனைவியை விட்டு திரும்ப அமெரிக்கா செல்ல வேண்டி இருக்கும் என்று..

ஆனால் அது இத்தனை வலியை கொடுக்கும் என்று அவனே எதிர்பார்க்கவில்லை.. அதுவும் மனைவியோடு வாழ்ந்த பின்பு… இதில் இவர்கள் வேறு பிரச்சனையை கிளப்பிக் கொண்டு இருந்தால் ஏற்கனவே தன் பிரிவை நினைத்து வேதனை பட்டு கொண்டு இருக்கும் தன் மனைவி.. இவர்களின் இந்த பேச்சில் பயந்து விட மாட்டாளா என்று.

உண்மையில் ஸ்வேதா அக்னி வீட்டவர்களின் செயல்களை எல்லாம் பார்த்து பயந்து தான் இருந்தாள்.. ஆனால் அந்த பயம் அக்னி வீட்டவர்களை நினைத்து கிடையாது. அக்னியை நினைத்து தான்..

ஆம் அவளின் பயமே அக்னியை நினைத்து மட்டுமே… ஸ்வேதா தந்தை இல்லாது வளர்ந்து சின்ன வயதிலேயெ கஷ்த்தை அனுபவித்து வளர்ந்ததினால்… ஒரு சில இடங்களில் அவமானம் படுத்தும் போது அவர்களை நேருக்கு நேர் நன்றாக கேட்டு விடுவாள்… பயம் இது போல் தயக்கம் எல்லாம் பார்க்க மாட்டாள்..

ஆனால் இன்று தான் அது போல் பேசி கணவனின் காதலை இழந்து விடுமோ என்ற பயம் பெண்ணவளுக்கு ஏற்பட்டது…

மூன்று வருட அவனின் காதலை கணவன் மொத்தமாக இந்த பதினைந்து நாளிலேயே இவள் மீது கொட்டி விட்டதினால், அதில் மூழ்கி திளைத்தவளுக்கு, அக்னி வீட்டவர்களை தான் ஏதாவது பேசி அதனால் அக்னி தன் மீது கோபம் பட்டு விடுவானோ….

அதுவும் பணத்தை வைத்து இவர்கள் ஏதாவது பேசினால், தான் அதற்க்கு ஏதாவது பேசி விட்டால் தான் பணத்திற்க்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதாக தன்னை தன் கணவன் தவறாக நினைத்து விடுவானோ என்ற பயமும் சேர்ந்து கொண்டதினால் தான் ஸ்வேதா அமைதியாக தன்னை அடக்கி கொண்டு இருக்கிறாள்..

ஆனால் இத்தனையும் தான்டி இவள் வாய் திறக்கும் படியான ஒரு சூழலை இன்னும் கொஞ்ச நாளிலேயே அக்னி வீட்டவர்கள் உருவாக்கி விடுவார்கள் என்பது தெரியாது… யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை… அந்த யாரில் கணவனுமே அடக்கம்… அப்படியான சூழ்நிலையில் அவளை அவளின் புகுந்த வீட்டவர்கள் நாளை நிறுத்தி விடுவார்கள் என்று தெரியாது பெண்ணவள் அமைதியாகவே கணவனின் பக்கத்தில் நின்று கொண்டு இருந்தாள்..

மரகதமும் அக்னியிடம் .” உன் கிட்ட கொஞ்சம் பேசனும் அக்னி.. இப்படி உட்காரு…” என்று சொன்ன போது ஸ்வேதா அமைதியாக கை கட்டி நின்று கொண்டு இருக்க..

ஆனால் இன்று அக்னிக்கு இதை பற்றி என்ன எதை பற்றியும் பேசும் நிலையில் அவன் இல்லாததினால்.

உட்காரது… “ ம்மா நீங்க என்ன தான் பேசினாலும் என் முடிவில் மாற போறது இல்லேம்மா… அதோடு இங்கு எனக்கு ஒரு பிசினஸ் வேண்டும். அது தொட்டு தான் சூப்பர்மார்க்கெட் வைக்கவே நினைத்தது.. அதனால் வாங்கும் இடம் என் பெயரில் தான்ம்மா… அப்பா வேணா அங்கு வரட்டும்.. அவர் அனுபவத்தை சொல்லட்டும்..” என்று அக்னி சொன்னது தான் தாமதம்.

மரகதம். “ அப்போ உன் அப்பாவை அங்கு வேலைக்காரனா கூப்பிடுறியா.?” என்று இதே அர்த்தம் கொண்ட வார்த்தையையே மாறி மாறி அத்தனை பேச்சு அத்தனை கத்தல் கத்தலுக்கு..

அக்னி ஒரே வார்த்தையில்.. “ அப்போ வீட்டில் ரெஸ்ட் எடுக்கட்டும்மா…” என்றவன் மனைவியோடு இது வரை தாய் தந்தை தங்கி இருந்த அறைக்கு சென்று விட்டான்..

அவன் இப்படி அழுத்தம் திருத்தமாக பேசி விட்டதில் மற்றவர்களால் அதை பற்றி ஒன்றும் சொல்ல முடியாது போய் விட்டது.

இருந்தும் சுந்தரம் தன் மாமியாரிடம்… “ இப்படி அவன் இருக்க நீங்க தான் காரணம்… வசதி வந்ததும் அது எப்படி வந்தது என்று மறந்துட்டார் உங்க மகன்… பெத்தவங்க கிட்ட இப்படியா பேசுறது.” என்று இப்போது இப்படி பேசிக் கொண்டு இருப்பவன் தான் தன் பெற்றோர்களுக்கு தான் ஒரே மகன் என்பதை மறந்து விட்டு….

திருமணம் முடிந்து மூன்றே மாதத்தில் பெற்றோர்களை அம்போ என்று விட்டு விட்டு தன் மாமியார் வீட்டு பக்கமே வீடு பார்த்து வந்து விட்டவன் தான் பெற்றோர்களுக்கு மரியாதை தருவதை பற்றி சொல்கிறான்...



மரகத்திற்க்கோ புது பெண் இருக்க.. இப்படி பேசினால் அவள் எப்படி தன்னை மதிப்பால் என்று நினைத்தவர்.. பின் அவரே ஆனால் இத்தனை பேச்சுக்கும் பெண் வாயே திறக்கவில்லை.. .

அதனால் இல்லாது எதுவும் போடாது வந்ததினால் அடங்கி இருக்கிறாள் போல். ஆமாம் அப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைத்தும் கொண்டார்..

அறைக்கு வந்த புது மண தம்பதியர்கள்… இருவரும் புது மணமக்கள் போல் கூடி களிக்கவில்லை..

ஆனால் ஒருவர் கையை ஒருவர் விடாது பிடித்தப்படி இருந்தனர்.. இடை இடையே ஒருவர் தோள் மீது ஒருவர் தலை சாய்த்தும் கொண்டு இருந்தனர்..

மனைவியின் தவிப்பில் அவனின் மனமும் தவித்து போய் கிடந்தாலுமே.. பெண்ணவளிடம்..

“ஒரு மாசம் தான்டா. இப்படி என்று சொடக்கு போடுறதுக்குள்ளே ஓடி போயிடும்… இதோ நமக்கு மேரஜ் முடிஞ்சி டூ வீக் ஆக போகுது.. எனக்கு என்னவோ நேத்து தான் ஆனது போல இருக்கு…” என்று சொன்னவனின் மனது ஆனது..

இந்த பதினைந்து நாளுமே நீ என் பக்கத்தில் இருந்த.. அது தான் நொடியா தெரிந்தது என்று நினைக்க.. பெண்ணவளும் அதையே தான் நினைத்தாள் வேறு மாதிரியாக.

‘ நீங்க என் பக்கத்தில் இருந்திங்க’ என்று… நினைத்தவளுக்கு தெரியும் கணவன் தன்னை விட தன்னை பிரிந்து செல்வதை நினைத்து துடித்து கொண்டு இருக்கிறான் என்று..

அவன் தான் திருமணம் முன்பே… திருமணத்திற்க்கு பின்பு உடனே உன்னை விட்டு செல்லும் படியாக இருக்கும் என்று வருந்தி சொன்னானே.. ஆனால் அந்த வருத்தம் அப்போது ஸ்வேதாவுக்கு துளி கூட இல்லை.

இன்று தனக்கே இப்படி இருக்கும் போது கணவனுக்கு எப்படி இருக்கும் என்று நினைத்தவள் தன் வருத்தத்தை கணவனிடம் பேசாது அமைதியாக இருந்தாலும், அவள் முகம் காட்டி கொடுத்து விட்டது அவளின் வேதனையை…

இந்த சூழ்நிலையிலும் அவர்களுக்கு தனிமை கொடுக்காது ஏதோ ஒரு காரணத்தை சொல்லிக் கொண்டு அந்த அறைக்கு வந்த மரகதம்..

அந்த அறையில் இருந்த பீரோ… இல்லை என்றால் ஷெல்பில் இந்த பொருள் எடுக்க அந்த பொருள் எடுக்க என்று வந்து கொண்டு இருந்தார். அந்த அறை அக்னியின் பெற்றோர்களின் அறை தானே…

அந்த பொருள்கள் எல்லாம் உடனடியாக வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லாத போது எடுக்க வந்தார்.

வந்தவர் எடுத்த பின் அந்த அறையை விட்டு போகும் முன்..

“எதுக்கு தான் அப்போவே வீட்டை பெருசா கட்டு என்று சொன்னேன். இவன் கேட்டானா.. இப்போ கூட ஒரு அறை தான் கட்டனும் என்று சொல்றான்.

அதுவும் நீங்களும் இனி இங்கு தான்னா எப்படி பத்தும்.. போக போக குடும்பம் பெரிசாகிட்டு தானே போகும்.. இதோ இவன் தம்பி பொண்டாட்டிக்கு இன்னும் கொஞ்சம் நாளில் குழந்தை பிறக்க போகும்.. நாளைக்கு உங்களுக்கும் குழந்தை பிறக்கும்…

ப்ரீத்தாவுக்கு ஒரு குழந்தை இருக்கு.. அவளுமே இன்னும் ஒரு குழந்தை பிறக்கும் தானே,.. அதுங்க எல்லாம் ஓடி ஆடி விளையாட வேண்டாமா…?” என்று இதை மரகம் கேட்டது… தன் மகன் அக்னியிடம் இல்லை..

மருமகள் ஸ்வேதாவிடம் தான்… ஸ்வேதா மாமியாரின் கேள்விக்கு பதில் அளிக்காது அமைதியாக பார்த்து கொண்டு இருந்தார்..

மனதோ இது என்ன நியாயம் என்று தான் நினைத்தது..

ஆனால் மரகதமோ இது தான் நியாயம் என்பது போல் அடுத்து சொன்ன வார்த்தையான.

“ அவங்களை வர கூடாது போக கூடாது என்று யாரும் சொல்ல முடியாதும்மா. ஏன்னா இந்த இடம் பரம்பரையா வந்தது..” என்று சொன்னார்..

காரணம் ஸ்வேதா இந்த முறை இதை முன்பே சொல்லி விடும்மா என்று ப்ரீத்தா சொன்னதினால் தான் மரகதம் இது எடுக்க வந்தேன்.. என்று ஒரு பொருளை எடுத்து விட்டு இந்த பேச்சை ஆரம்பித்தது…

ப்ரீத்தா அனைத்து நாளுமே இங்கு வந்து விடுவாள்ல் இங்கு தான் காலை சாப்பாடு மதியம் அலுவலகத்திற்க்கு சாப்பாடு எடுத்து கொண்டு கிளம்புவது.. அவள் மட்டும் கிடையாது.. அவளின் கணவனுமே…

காலை கணவனும் மனைவியும் இங்கு வருபவர்கள் சாப்பிட்டு விட்டு மதியத்திற்க்கும் எடுத்து கொண்டு தன் குழந்தையையும் தன் அன்னையிடம் கொடுத்து விட்டு மாலை வருபவள்…

சிறிது நேரம் ஏசி போட்டு கொண்டு அறையில் ஓய்வு எடுத்து விட்டு இரவு உணவையும் முடித்து கொண்டு கணவனுக்கும் கொண்டு சென்று விடுவாள்..

மொத்தத்ட்தில் இரவு உறங்க மட்டுமே தான் ப்ரீத்தா வாடகைக்கு வீடு எடுத்து இருக்கிறாள். இப்போது புதியதாக வந்து இருக்கும் ஸ்வேதா மூலம் இதற்க்கு பங்கம் ஏதும் வந்து விட கூடாது என்று நினைத்து தான்..

இந்த வீட்டில் தனக்குமே உரிமை இருக்கு என்று ஸ்வேதாவின் காதில் போடும் மாறு சொல்லி அனுப்பியது.. மரகதமும் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு தான் வந்தது.

கணவன் மனைவி இருவருக்கும் மரகதத்தின் பேச்சு எல்லாம் மூளையில் ஏறவில்லை..

ஒரு சிறு கோட்டிற்க்கு பக்கத்தில் ஒரு பெரிய கோடு போட்டது போல் தான் இப்போது அக்னிக்கும் ஸ்வேதாவுக்கும் வீட்டவர்கள் செய்யும் பிரச்சனை பெரியதாக தெரியாது அவர்களின் பிரிவு பெரியதாக தெரிந்தது..

அவர்கள் பேசாத மெளனங்களின் அர்த்தத்தை இருவருமே பிரிது கொண்டு ஆறுதல் படுத்தி கொண்டு இதோ அதோ என்று இருந்த அக்னியின் அமெரிக்க பயணம் ஆனது வந்து விட்டது..

விடியற்க்காலையிலேயே ஏர்போர்ட்டில் இருக்க வேண்டும்.. அதனால் மூன்று மணிக்கே வீட்டை விட்டு கிளம்பி விட திட்டம் இட.

இதோ ஸ்வேதா கணவனை வழி அனுப்ப அவளும் ரெடியாகி நின்றவளை பார்த்தவனுக்கு மனது என்னவோ செய்தது..

பல முறை… “ பத்திரமா இரு.. எது என்றாலும் எனக்கு கால் செய்..” என்று அத்தனை முறை சொல்லி… தாள முடியாது ஒரு ஆழ்ந்த முத்தத்தை அவளுக்கு கொடுத்தவன் இதுக்கு மேல் இந்த அறையில் இருந்தாள்..

கண்டிப்பாக இங்கு இருந்து செல்லாது தான் இங்கு இருந்து விடுவேன்.. அது தங்களின் எதிர்கால பொருளாதார வாழ்க்கைக்கு நல்லது கிடையாது என்று நினைத்தவன். மனையின் கை பிடித்து கொண்டு கூடத்திற்க்கு வந்தான்…


 
Top