Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Poiyenum Perum Velicham.....2 Tesar

  • Thread Author
அத்தியாயம்…..2

பொய்யெனும் பெரும் வெளிச்சம்…

ஷ்யாமுக்கு முதலில் அக்னி என்ன சொல்கிறான் என்பதே புரியவில்லை.. பின்னுமே புரியவில்லை தான்… அவன் மனைவி சித்ரா தான்..

“ஏனுங்க உங்க பிரண்ட் உங்க தங்கையை பெண் கேட்கிறார்….” என்று எடுத்துக் கொடுக்கவும் .. அப்போது கூட ஷ்யாம் நம்பாது இது வரையும் கூட அக்னியையே பார்த்துக் கொண்டு இருந்தவன்.. அப்படியா என்பது போல் தலையாட்டி கேட்டான். கேட்டவனின் பார்வையில் அப்படி ஒரு அதிர்ச்சி.. ஆச்சரியம் இரண்டும் கலந்து இருந்தது.

நண்பனின் பார்வையிலும், பாவனையிலும் அக்னி சட்டென்று சிரித்து விட்டான்.. கேட்கும் வரை தான் தயக்கம்.. அதாவது தொடக்க தயக்கம்..

இப்போது நண்பனை நேராக பார்த்தே… “ ஏன் எனக்கு உன் தங்கையை கொடுக்க மாட்டியா….?” என்று கேட்டவன்..

அவன் முன் இருந்த கை பேசியை எடுத்து அவனே ஷ்யாமின் விரல் எடுத்து ஷ்யாமும் கை பேசியை திறந்தவன்..

அவனே அவன் அம்மா அனுப்பிய ஷ்யாமின் தங்கைக்கு பார்த்து இருந்த மாப்பிள்ளையின் புகைப்படமும் இன்ன விவரங்களை படித்து காட்டி…

“இவனை விட நான் எல்லாத்திலுமே பெட்டர் தானே… எனக்கு இந்த கேஸ்ட் அதுல எல்லாம் இன்ரெஸ்ட் இல்ல. ஆனா பெரியவங்க அது எல்லாம் பார்ப்பாங்க தான்.. அப்படி பார்த்தாலுமே நானுமே உங்க கேஸ்ட் தானே…. நான் பெண் கேட்டதுக்கு நீ ஏன் இப்படி ஷாக் ஆகி நிற்கிற….?” என்று கேட்டான்..

இப்போது ஷ்யாமுமே தன் அதிர்ச்சியில் இருந்து கொஞ்சம் வெளி வந்தாலுமே முழுவதும் வெலி வரவில்லை..

இருந்துமே. “ இல்ல டா. இது வரை நீ என் தங்கையை பார்த்தது கிடையாது..பேசினதும் கிடையாது.. அது தான்.. அதோட நீ இப்படி கேட்பேன் என்று நான் எதிர் பார்க்கla. அது தான் ஷாக்காயிட்டேன்…” என்று சொன்னவனின் பேச்சையே கேட்டு கொண்டு இருந்தவனையே அக்னி பார்த்து கொண்டு இருந்தான்.. ஆனால் ஒன்றும் பேசவில்லை..

அக்னியின் இந்த பார்வையில் ஷ்யாம் தான்… “என்ன டா அப்படி பார்க்கிற…?” என்று திணறி கேட்டவனிடம் தன்னுடைய பார்வை மாற்றாது…

“இல்ல உன் தங்கைக்கு நான் தகுதி இல்லேன்னு நீ நினைக்கிறியா….?” என்று அக்னி கேட்ட நொடி அமர்ந்திருந்த ஷ்யாம் எழுந்து நின்று விட்டான்..

“என்னடா இப்படி சொல்ற….? நீ சொன்னது போல் இப்போ என் வீட்டவங்க பார்த்து இருக்கும் மாப்பிள்ளை உன்னை விட கீழ் என்ன கம்பேர் பண்ண கூட முடியாது…” என்று ஷ்யாம் சொல்லி கூட அக்னி தன் பார்வையை மாற்றது ஷ்யாமையே பார்த்து கொண்டு இருந்தான்…






 
Top