அத்தியாயம்….21…2
“நீ பேசுறது சரியில்ல மஞ்சுளா….” என்று சொன்ன கணவனை தான் மஞ்சுளா இப்போதும் அதே ஆழமான பார்வை பார்த்து கொண்டு இருந்தவள்…
கணவனின் இந்த பேச்சுக்கு சிரித்து விட்டாள்… அவளின் அந்த சிரிப்பு மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இல்லை… கிண்டலின் வெளிப்பாடாக தான் இருந்தது..
.அதை துகிலனும் கண்டு கொண்டவன் பல்லை கடித்து கொண்டு தன் கோபத்தை அடக்கி கொண்டான்.. தன் மனைவி இப்போது கர்பமாக இருப்பதினால் தன் கோபத்தை காட்டாது இருந்தான்..
ஆனால் மஞ்சுளா… எதை பற்றியும் யோசிக்கும் மன நிலையில் அவள் இல்லை.. அவளுக்கு தனக்கும் தன் குழந்தைக்கும் ஒரு முறையான ஒரு அங்கிகாரம் வேண்டும்.. அவ்வளவே…
அதனால் மீண்டுமே அதே கேள்வியான…. “ டைவஸ் எதுக்கு ஆச்சு…?” என்று கேட்டவளிடம் துகிலன்…
“எங்களை நீ சந்தேகப்படுறியா…?” என்று கேட்டான்..
அதற்க்கு மஞ்சுளா. மீண்டும் ஒரு கிண்டலாக சிரித்தவள்… தான் இருந்த இருக்கையை விட்டு இன்னுமே முன் நோக்கி தன் உடலை நகர்த்தி கொண்டவள்..
“நான் ஒரு பேச்சுக்கு கேட்கிறேன்… எனக்கு கல்யாணத்துக்கு முன் ஒரு லவ் இருந்தது என்று வைத்து கொள்ளுங்கள்…” என்று மஞ்சுளா சொல்லும் போதே துகிலனின் முகம் மாற தொடங்கியது..
அதை மஞ்சுளாவுமே கவனித்தாள் தான்.. ஆனால் அதை எல்லாம் பார்க்காது… “ அதுவும் அவன் என் சின்ன வயசுல இருந்தே பழகின பிரண்ட் என்று வைத்து கொள்ளுங்கள்…
ஒரு வயதுக்கு அப்புறம் அவன் மீது எனக்கு காதலும்… என் மீது அவனுக்கு காதலோ காதல் என்று வந்து.. நாங்க இரண்டு பேரும் லவ்வோ லவ் பண்ணி..
ஆனால் ஒரு கால கட்டத்தில் அந்த லவ் ப்ரேக் ஆகி..” என்று சொன்னவள் பின் அவளே…
“அது என்ன ஏதோ ஒரு கால கட்டம். என் அக்கா இது போல பண்ணியதில் என் அம்மா அப்பா அழ. குடும்ப மானம். நீ எங்க பேச்சு தான் கேட்கனும் என்று ஒரு எமோஷனல் ப்ளாக் மெயிலில் நான் அந்த காதலை ப்ரேக் பண்ணிட்டேன்.. ஆனா நான் இன்னுமே அவன் கூட தொடர்பில் தான் இருக்கேன். காரணம் இடையில் வந்த எங்க காதல் தான் ப்ரேக் ஆகிடுச்சி.. சின்ன வயசுல இருந்தே இருக்கும் எங்க நட்பு அப்படியே தான் இருக்கு.. அதை வாடாம நாங்க பார்த்துக்குறோம் என்று நானும் அவனுமே எப்போவுமே கையை பிடிச்சி திரிஞ்சிட்டு இருந்தா நீங்க ஒத்து கொள்வீங்கலா…?” என்று மஞ்சுளா தன் கணவனை பார்த்து கேட்டாள்….
“நீ பேசுறது சரியில்ல மஞ்சுளா….” என்று சொன்ன கணவனை தான் மஞ்சுளா இப்போதும் அதே ஆழமான பார்வை பார்த்து கொண்டு இருந்தவள்…
கணவனின் இந்த பேச்சுக்கு சிரித்து விட்டாள்… அவளின் அந்த சிரிப்பு மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இல்லை… கிண்டலின் வெளிப்பாடாக தான் இருந்தது..
.அதை துகிலனும் கண்டு கொண்டவன் பல்லை கடித்து கொண்டு தன் கோபத்தை அடக்கி கொண்டான்.. தன் மனைவி இப்போது கர்பமாக இருப்பதினால் தன் கோபத்தை காட்டாது இருந்தான்..
ஆனால் மஞ்சுளா… எதை பற்றியும் யோசிக்கும் மன நிலையில் அவள் இல்லை.. அவளுக்கு தனக்கும் தன் குழந்தைக்கும் ஒரு முறையான ஒரு அங்கிகாரம் வேண்டும்.. அவ்வளவே…
அதனால் மீண்டுமே அதே கேள்வியான…. “ டைவஸ் எதுக்கு ஆச்சு…?” என்று கேட்டவளிடம் துகிலன்…
“எங்களை நீ சந்தேகப்படுறியா…?” என்று கேட்டான்..
அதற்க்கு மஞ்சுளா. மீண்டும் ஒரு கிண்டலாக சிரித்தவள்… தான் இருந்த இருக்கையை விட்டு இன்னுமே முன் நோக்கி தன் உடலை நகர்த்தி கொண்டவள்..
“நான் ஒரு பேச்சுக்கு கேட்கிறேன்… எனக்கு கல்யாணத்துக்கு முன் ஒரு லவ் இருந்தது என்று வைத்து கொள்ளுங்கள்…” என்று மஞ்சுளா சொல்லும் போதே துகிலனின் முகம் மாற தொடங்கியது..
அதை மஞ்சுளாவுமே கவனித்தாள் தான்.. ஆனால் அதை எல்லாம் பார்க்காது… “ அதுவும் அவன் என் சின்ன வயசுல இருந்தே பழகின பிரண்ட் என்று வைத்து கொள்ளுங்கள்…
ஒரு வயதுக்கு அப்புறம் அவன் மீது எனக்கு காதலும்… என் மீது அவனுக்கு காதலோ காதல் என்று வந்து.. நாங்க இரண்டு பேரும் லவ்வோ லவ் பண்ணி..
ஆனால் ஒரு கால கட்டத்தில் அந்த லவ் ப்ரேக் ஆகி..” என்று சொன்னவள் பின் அவளே…
“அது என்ன ஏதோ ஒரு கால கட்டம். என் அக்கா இது போல பண்ணியதில் என் அம்மா அப்பா அழ. குடும்ப மானம். நீ எங்க பேச்சு தான் கேட்கனும் என்று ஒரு எமோஷனல் ப்ளாக் மெயிலில் நான் அந்த காதலை ப்ரேக் பண்ணிட்டேன்.. ஆனா நான் இன்னுமே அவன் கூட தொடர்பில் தான் இருக்கேன். காரணம் இடையில் வந்த எங்க காதல் தான் ப்ரேக் ஆகிடுச்சி.. சின்ன வயசுல இருந்தே இருக்கும் எங்க நட்பு அப்படியே தான் இருக்கு.. அதை வாடாம நாங்க பார்த்துக்குறோம் என்று நானும் அவனுமே எப்போவுமே கையை பிடிச்சி திரிஞ்சிட்டு இருந்தா நீங்க ஒத்து கொள்வீங்கலா…?” என்று மஞ்சுளா தன் கணவனை பார்த்து கேட்டாள்….