அத்தியாயம்---22
வினோத் கனவு காண பரினிதாவின் அழகு ஒரு காரணம் என்றால் மற்றொறு காரணம் பரினிதா குடும்பத்திற்க்கு அந்த ஊரில் இருக்கும் பெயர்.அவன் சிறு வயது முதலே தன் தாத்தாவின் வாயில் இருந்து அக்குடும்பத்தை பற்றி நிறைய கேள்வி பட்டு இருக்கிறான். இப்போது தன் தாத்தா வந்து அக்குடும்பத்து பெண்ணை உனக்கு கேட்க இருக்கிறேன் என்று கூறியதும்.
தானும் அக்குடும்பத்தின் ஒரு அங்கமாகவே தன்னை கருதி கொண்டான். அதன் விளைவாக அத்திருவிழாவில் பரினிதாவை ஒரு சொந்தத்துடனே பார்த்திருந்தான்.பின் அவள் சென்னைக்கு கிளம்பி ஒரு வாரம் சென்றவுடன் தன் தாத்தாவிடம் “என்ன தாத்தா பரினிதாவின் பாட்டியிடம் பேசினீர்களா…?” என்று கேட்டதற்க்கு பாவம் அந்த தாத்தாவுக்கு வரலட்சுமி அம்மாவை தான் தெரியும் அவர் பேத்தி பெயர் தெரியாதா இல்லை நியாபகத்தில் இல்லையா என்பது அவருக்கே வெளிச்சம்.
யோசனையுடன் “பரினிதா பாட்டியா…யார் அவர்கள். நான் ஏன் அவர்களிடம் பேச வேண்டும்.” என்ற தாத்தாவின் கேள்வியில் பேரன் ஒரு கொலை வெறியோடு அவரை பார்த்துக் கொண்டே
“நான் வரலட்சுமி பாட்டியம்மாவை தான் சொல்கிறேன். பேசுனீர்களா…?”
தன் பேரனின் பேச்சில் அந்த முதியவருக்கு மனதில் ஏதோ ஒரு நெருடல் ஏற்பட்டது.
“வினோத் நான் அந்த அம்மாவிடம் கேட்க போகிறேன் என்று தான் சொன்னேன். இன்னும் ஏதும் முடிவாகவில்லை. மனதில் ஏதும் கற்பனையை வளர்த்துக் கொள்ளாதே…” ஒரு பெரியவராய் தன் அனுபவம் தந்த பாடத்தில் தன் பேரனுக்கு சொன்னார்.
ஆனால் வினோத்தோ “அதெல்லாம் எனக்கு தெரியும்.நீங்கள் அந்த அம்மாவிடம் பேசுனீர்களா...இல்லையா...முதலில் அதை சொல்லுங்கள்.” என்றதற்க்கு.
“பேசினேன்.” என்ற மொட்டையாக முடித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு போக பார்த்தார்.
அவருக்கு என்னவோ தன் பேரனின் பேச்சில் அவ்வளவாக பிடித்த்ம் இல்லை. அதனால் தான் பேச்சி தொடராமல் இருக்க அவ்விடத்தை விட்டு போக வேண்டும் என்று நினைத்து போக நினைத்தார்.
ஆனால் வினோத் “இப்படி மொட்டையாக பேசினால் என்ன. அவர்கள் என்ன சொன்னார்கள்.”
“வினோத் நான் பேசுவதை நன்கு மண்டையில் ஏற்றிக் கொள். ஒரு வீட்டில் பெண் என்று இருந்தால் அந்த பெண்ணை பையனை பெற்றவர்கள் கேட்க தான் செய்வார்கள். ஆனால் அவர்கள் கேட்ட உடனே சட்டென்று அவனுக்கு அந்த பெண்ணை மணம் முடித்து கொடுத்து விட முடியாது. அதை ஏற்றுக் கொள்வதற்க்கும், மறுப்பதற்க்கும் அவர்களுக்கு உரிமை இருக்கிறது.” என்ற தாத்தாவை ஒரு கூர்மையுடன்.
“அவர்கள் என்னை மறுத்து விட்டார்களா தாத்தா ?”
“சேச்சே அப்படி எல்லாம் இல்லை. இப்போது அந்தம்மா பேரன் சித்தார்த்துக்கு கல்யாணம் முடிவு செய்து இருக்காங்களாம். அந்த கல்யாணத்துக்கு நம்மை அழைக்கும் மாறு சித்தார்த் சொல்லி இருக்கிறானா...”
“ம் பிறகு என்ன தாத்தா திருமணத்துக்கு நம்மை அழைக்கிறார்கள் என்றால் நம் சம்மந்தத்தில் அவர்களுக்கு விருப்பம் போல் தானே…” என்ற பேரனை கவலையுடன் பார்த்து.
“விருப்பம் என்றால் உடனே ஒத்துக் கொள்வார்கள் வினோத். இப்படி திருமணத்துக்கு வா பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எல்லாம் கூறமாட்டார்கள். அதுவும் இல்லாமல் இந்த ஊரில் அவர்கள் குடும்பம் பெரிய குடும்பம்.அதனால் திருமணத்திற்க்கு நிறைய பெயரை அழைத்து இருக்காங்க.
அது மாதிரி நம்மையும் அழைச்சி இருக்கலாம் இல்லையா….அதனால் பொறுமையாக இரு. இன்னும் கொஞ்ச நாளில் நமக்கு அவர்கள் பெண் கொடுக்கிறார்களா இல்லையா… என்று தெரிந்து விடும்.” என்று கூறி அவ்விடத்தை விட்டு அகன்றார்.
வினோத்தோ சித்தார்த்தோடு ஆவாளாக அத்திருமணத்தை எதிர் பார்த்திருந்தான். இந்த பாழ போன கட்சி ஊர் வல்த்தால் லேட்டாகி விட்டது என்று பார்த்தால் .இங்கு பரினிதா ஏதோ ஒரு பைய்யனிடம் உரிமையுடம் தன் சவுரியை கொடுப்பதும்.
அதனை பார்த்து ஒரு அண்ணன் கண்டிக்காமல் சிரிக்கிறானே என்று சித்தார்த்தை திட்டிக் கொண்டே அவ்விடத்துக்கு போக நினைத்தால் இந்த பாட்டிம்மா வேறு பிடித்து ரம்பம் போடுகிறார்களே….என்று பாட்டிம்மாவையும் திட்டிக் கொண்டே மணமக்கள் இருக்கும் இடத்துக்கு தன் குடும்பத்தோடு சென்றான்.
ராஜாராம் தன் குடும்பத்தை சித்தார்த்துக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு தன் வாழ்த்தையும் பரிசு பொருளையும் கொடுத்தார். சித்தார்த் அதனை ஏற்றுக் கொண்டு நன்றி தெரிவித்து விட்டு தன் மனைவியின் காதில் ஏதோ பேச ஆராம்பித்து விட்டான்.
வினோத் என்ன நம்மை திருமணத்தில் பார்த்து முடிவு செய்வதாக சொன்னவன் ஒன்றும் பேசாமல் இருக்கிறானே...பேசாது மட்டுமா நம்மை நன்றாக கூட பார்க்க வில்லையே என்று நினைத்துக் கொண்டு அவ்விடத்தி விட்டு அகலாது அங்கயே நின்றான்.
பாவம் அவனுக்கு எங்கே தெரிய போகிறது. சித்தார்த் ஆருண்யா திருமணத்துக்கு சம்மதித்த இந்த எட்டு நாட்களில் அவன் அவனாகவே இல்லை என்பதை.அதுவும் இன்று அவன் பிறந்த நாள் இந்த நாளில் தான் ஆசைப்பட பெண்ணே தனக்கு மனைவியாய் அவன் நினைத்துக் கூட பார்த்தது இல்லை.
அவன் எத்தனை நாள் ஆருண்யாவுக்கு திருமணம் முடிந்து இருக்கும் என்று நினைத்து வருந்தி இருப்பான். அவளை நினைக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் தொனண்டை குழியில் சிக்கிய முள் போல் அவதி பட்டு இருக்கிறான்.
ஆனால் இப்போது அவன் பட்ட கஷ்டம் எல்லாம் சூரியனை கண்ட பனிதுளிபோல் மறைந்து விட்டதோடு இல்லாமல் அந்த சூரியன் தன் வாழ்வில் ஒளி வீசவும் செய்கிற போது அவன் இந்த உலகத்திலேயே இல்லாமல். ஆருண்யாவோடு கனவில் தேன்நிலவு கொண்டாடிக் கொண்டு இருந்தான் இத்தனை நாளாய்.
அப்படி இருக்கும் போது பரினிதாவை பெண் கேட்ட குடும்பத்தின் பெயர் எல்லாமுமா நியாபகத்தில் வைத்துக் கொண்டு இருப்பான். சித்தார்த் தன் மனைவியோடு பிஸியாகி விட பரினிதா தான் ராஜாராம் தாத்தா இரண்டு அடி எடுத்து வைத்து விட்டு திரும்பி வினோத்தை பார்த்து வா என்று அழைத்தும் போகாமல் இருக்கும் வினோத்திடம்
“வாங்க நான் சாப்பிட அழைத்து போகிறேன்.” என்று வீட்டு பெண்ணாய் அவனை உபசரித்தாள்.
இவ்வளவு நேரமாக பரினிதா யாரோ ஒருவனிடம் உரிமையுடன் பேசியதாலும், சித்தார்த் தன்னை சட்டை செய்யாததாலும் ஏற்பட்ட கோபம் சாப்பிட நான் அழைத்து போகிறேன் என்ற பரினிதாவன் அந்த ஒத்தை வார்த்தையால் மறைந்து போய் பரினிதாவை பார்த்து சிரித்துக் கொண்டே …
“சரி வாங்க.”
என்று அவள் வீட்டு விழாவில் அவளுக்கே அழைப்பு விடுத்தான். பரினிதா அவனோடு செல்லாமல் அவனையே ஒரு மாதிரியாக பார்த்தாள். ஏன் என்றால் மணமக்களை வாழ்த்த வந்த அனைவரிடமும் அவள் இதையே தான் கேட்டாள்.
ஆனால் அனைவரும் சொல்லி வைத்த மாதிரி பரவாயில்லை நீ இரும்மா நாங்களே போய் சாப்பிட்டுக் கொள்கிறோம் என்று தான் சொன்னார்கள். அந்த தைரியத்தில் தான் வினோத்திடமும் சம்பிரதாயத்துக்காக அவ்வாறு கேட்டு வைத்தாள்.
ஆனால் அவன் உடனே வா என்று அழைக்கவும் போக விருப்பம் இல்லாமல் தன் அண்ணனை பார்த்தாள். ஏன் என்றால் அவள் முன்னே தன் அன்ணனிடம் சொல்லி விட்டாள். நான் திருமணத்தில் உங்களை விட்டு அங்கே இங்கே நகர மாட்டேன். அதனால் பாட்டிம்மாவை சாமளிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று சொல்லி விட்டதால் தன் அண்ணனை உதவிக்கு வரும் மாறு ஒரு பார்வை பார்த்தாள்.
ஆனால் அந்தோ பரிதாபம் இன்று தன் தங்கையைய் கவனிக்கும் நிலையில் சித்தார்த் இல்லாத காரணத்தால் பரினிதாவை பார்க்காமல் தன் மனையாட்டியே பார்த்திருந்தான்.ஆனால் ஆஷிக் பரினிதா அழைத்ததும் அதற்க்கு வினோத் உடனே வா என்று கூப்பிட்டதும், பரினிதா போக விருப்பம் இல்லாமல் தன் அண்ணாவை பார்ப்பதை பார்த்து அவனே முன் வந்து பரினிதாவிடம்
“நீ இங்கயே இரு நான் அழைத்துக் கொண்டு போகிறேன்.” என்று சொல்லி விட்டு வினோத்தை ஒரு கண் சாடையில் வா என்று சொல்லி விட்டு முன்னே நடந்தான். ஆஷிக்குக்கு வினோத்துக்கு தான் கல்யாணம் செய்ய பரினிதாவை கேட்டது தெரியாது. அவன் என்னவோ பரினிதாவுக்கு உதவி செய்ய தான் கூப்பிட்டான்.
வினோத்தோ ஆஷிக் யார் என்றும், அவன் உயரம் என்ன என்றும் தெரிந்துக் கொள்ளாமல் .
“பரியே வரட்டும்” என்று சொல்லி விட்டு பரினிதாவை பார்த்தான்.
வினோத்தின் பரி என்ற அழைப்பில் சட்டென்று திரும்பி வினோத்தை பார்க்காது பரினிதாவை தான் பார்த்தான். ஒரு சமயம் இது அவள் ஊர் இவளுக்கு சிறு வயது முதலே தெரியுமோ என்ற எண்ணத்தில்.
ஆனால் பரினிதா யாருக்கு வந்த விருந்தோ என்கிற பட்சத்தில் தன் அண்ணனோடு அடுத்து வருபவர்களோடு போட்டோ எடுத்துக் கொள்ள ரெடியாகிக் கொண்டு இருந்தாள். அதனை பார்த்து சிரித்துக் கொண்டே சரி இவனிடமே கேட்கலாம் என்று திரும்பி வினோத்தை பார்க்கும் போது தான் அவன் பார்வையில் உள்ள வித்தியாசம் அவன் கண்களுக்கு தெரிந்தது.
ஆம் ஆஷிக் வினோத்தை பார்க்கும் போது வினோத் பரினிதாவின் இடுப்பு பகுதியை பார்த்துக் கொண்டு இருந்தான். அன்று தான் முதன் முதலாக பரினிதா தாவணி கட்டி இருப்பதால் என்ன இழுத்து இடுப்பை மறைத்தாலும் நிக்காமல் வழுக்கி வழுக்கி வந்து அவள் மென்னையான இடுப்பு வெளியில் தெரியும் படியாகி விட்டது.
முதலில் பரினிதாவை தாவாணியில் பார்த்ததும் ஆஷிக் ஒரு நிமிடம் அசந்தே விட்டான். அவளுக்கு தாவணி அழகாக இருப்பதோடு அவன் கண்ணுக்கு ஒரு வளர்ந்த பெண்ணாக தோன்றினாள். அதனால் அப்போதே அவன் ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.
ரிசப்ஷனுக்கு ஆருண்யாவிடம் சொல்லி எப்படியாது அவள் சேலை கட்டி அவளை அதில் பார்த்து விட வேண்டும் என்று. ஆனால் ஆஷிக் அவள் நளினத்தை தான் ரசித்தானே தவிர வினோத் போல் தப்பான பார்வை பார்க்க வில்லை.
இப்போது வினோத்தின் பார்வையை பார்த்த ஆஷிக் கோபத்துடன் பரினிதாவிடம் “போய் உன் பாட்டிம்மாவிடம் ஏதாவது வேலை இருக்கா என்று கேள் வயதானவர்கள் எவ்வளவு தான் பார்ப்பார்கள் போ.” என்று கூறி விட்டு வினோத்தை ஒரு முறை முறைத்தான்.
வினோத்துக்கு தெரிந்து விட்டது. தான் பார்த்தை ஆஷிக் பார்த்து விட்டான். அதனால் தான் பரினிதாவை அவ்விடத்தை விட்டு அகற்றி விட்டான் என்று. ஆனால் இவன் யார் நான் பார்ப்பதை தடுக்க. நான் திருமணம் செய்துக் கொள்ளும் பெண்ணை நான் பார்க்கிறேன் இடையில் இவன் யார் என்று நினைத்து ஆஷிக்கிடம்.
“என்னை சாப்பிட அழைத்து போவதாக சொன்னீர்கள். என்ன அப்படியே செல்கிறீர்கள்.” என்றதற்க்கு ஆஷிக் பதில் சொல்லும் வேலையில் சித்தார்த்தின் மச்சான் என்ற அழைப்புக்கு வினோத்திடம் பதில் சொல்லாது சித்தார்த்தை பார்த்தான்.
அங்கு சித்தார்த் பக்கத்தில் ஒரு மத்திய மந்திரி நின்றுக் கொண்டு இருந்தார். ஆஷிக் அவரிடம் போகும் முன்னே அவரே வந்து ஆஷிக்கிடம் வந்து பேச தொடங்கினார்.
“என்ன ஆஷிக் உங்களை பார்க்கவே முடியவில்லை. போன தடவை சென்னை வந்த போதே உங்களை பார்க்க நினைத்தேன் நீங்கள் சிங்கப்பூர் சென்று இருந்த்தால் என்னால் பார்க்க முடியவில்லை. அதனால் தான் உங்கள் தங்கையின் கல்யாணத்துக்கு கூப்பிட்டவுடன் ரிசப்ஷன் வரை பொறுத்து இருக்க முடியாது கல்யாணத்துக்கே வந்து விட்டேன்.” என்ற அமைச்சரிடம்.
“ரொம்ப சந்தோஷம் நீங்க வந்ததுக்கு.” என்று சொல்லி விட்டு “என்ன விஷயம் அவசரமா என்னை பார்ப்பதற்க்கு.” என்ற ஆஷிக்குக்கு பதில் அளிக்காமல் பக்கத்தில் தன் பாதுக்காப்புக்கு நின்று இருப்பவரை அனுப்பி விட்டு. ஆஷிக் பக்கத்தில் நின்றுக் கொண்டு தங்கள் பேச்சையே வாயை பிளந்து கேட்டுக் கொண்டு இருக்கும் வினோத்தை பார்த்து.
“இவர் உங்களுக்கு வேண்டியவரா…?” என்று கேட்டதுக்கு .
“அப்படி எல்லாம் இல்லை.” என்று சொல்லி விட்டு வினோத்தை பார்த்தான் ஆஷிக். அவன் பார்வையை புரிந்துக் கொள்ளாத நிலையில் இருந்தான் வினோத்.
வினோத் என்னவோ ஆஷிக்கை சித்தார்த்துக்கு நண்பனாகவோ...இல்லை தூரத்து சொந்தமாகவோ...இருப்பான் என்று தான் முதலில் நினைத்தான். ஆனால் சித்தார்த்தின் மச்சான் என்ற அழைப்பிலேயே ஆஷிக் என்ன உறவு முறை என்று தெரிய வந்ததில் பரினிதா தனக்கு கிடைப்பாளா என்ற பாதி சந்தேகத்தில் இருந்தவன்.
இப்போது ஒரு மந்திரியே வந்து பார்த்து பேசும் அளவுக்கு ஆஷிக் இருக்கிறான் என்றால் அதிலேயே அவனின் உயரம் வினோத்துக்கு புரிந்து விட்டது.
இப்போது பரினிதா தனக்கு கிடைப்பது என்றால் அது இந்த ஆஷிக்குக்கு பரினிதாவின் மேல் எந்த நாட்டமும் இல்லாது இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே ஆஷிக்கை பார்த்திருந்தான்.
தான் பார்த்தும் அந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கும் வினோத்தை பார்த்து விட்டு அவன் நிலை தெரிந்தவனாய் “என்ன வினோத் இப்போதும் நானே தான் உன்னை சாப்பிட அழைத்து போக வேண்டுமா….? என்று கேட்டதற்க்கு அவசரமாக தலையசைத்து விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.
வினோத் அவ்விடத்தை விட்டு அகன்றதும் மந்திரியிடம் “என்ன விஷயம் .” என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போதே அந்த இடத்துக்கு பரினிதா வந்து சேர்ந்தாள்.
பேச நினைத்த மந்திரி பரினிதாவை பார்த்து ஒன்றும் பேசாமல் ஆஷிக்கை பார்த்தான். ஆஷிக் பரினிதாவை மேலில் இருந்து கீழ் வரை பார்த்து விட்டு பின் “சொல்லுங்க இவள் என் சிஸ்டரின் சிஸ்டரின்லா தான் .” என்று கூறினான்.
ஆஷிக் அவ்வாறு பரினிதாவை பார்த்ததுக்கும் காரணம் இருக்கிறது .முன்னால் இருக்கும் மந்திரி பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி தான் இருப்பார் என்பது அவனுக்கு நன்கு தெரியும். அதனால் தான் பரினிதாவின் துணி ஏதாவது விலகி இருக்கிறதா...என்று பார்த்து விட்டு மந்திரிக்கு அறிமுகப் படுத்தினான்.
தான் பேச சொல்லியும் எதுவும் பேசாமல் இருக்கும் மந்திரியை பார்த்து “என்ன சார் எது என்றாலும் சொல்லுங்க. பரினிதா எனக்கு ரொம்ப வேண்ட பட்டவள் தான்.” என்றதற்க்கு.
“அதனால் தான் நான் கேட்க வந்ததை கேட்பதா….வேண்டாமா…. என்று யோசிக்கிறேன்.”
அத்தியாயம்---23
மந்திரியின் பேச்சில் குழம்பி போய் பார்த்தவனாகா… “நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை.”
“சரி வந்தது வந்து விட்டேன். நான் நேரிடையாவே கேட்டு விடுகிறேன்.ஆறு மாதம் முன் நான் மந்திரி பதவி ஏற்றதுக்கு என்னுடைய சார்பாக ஒரு விருந்துக்கு உங்களை அழைத்திருந்தேனே...நியாபகம் இருக்கா…”
“ஆ நல்லா நியாபகம் இருக்கே. நான் கூட வந்தேனே…”
“அப்போ நான் என் பெண்ணை உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன். அது உங்களுக்கு நியாபகத்தில் இருக்கா…” என்ற மந்திரியின் கேள்வியில் ஆஷிக் இப்போது மந்திரியை கேள்வியோடு பார்த்தான்.
அவனுக்கு ஏதோ விளங்குவது போல் இருந்தது. ஏன் என்றால் அவ்விழாவில் மந்திரியின் பெண் தன்னோடு நிறைய நேரம் பேசிக் கொண்டு இருந்தாள். அவனுக்கே கொஞ்சம் சங்கடமாக தான் இருந்தது. அவ்விழாவில் பத்திரிகைகாரர்களும் வந்து இருந்தனர்.
அவர்கள் ஏடகூடாமாக ஏதாவது எழுதி விட போகிறார்களோ என்று. அவனுக்கு கவலை இல்லை. ஆனால் இதனால் அப்பெண்ணுக்கு ஏதாவது பிரச்சினை வந்து விட போகிறது என்று நினைத்து மந்திரியிடம் தான் என் சிஸ்டரை பார்க்க போகிறேன் என்று சொல்லி விட்ட அவ்விழாவில் பாதியிலேயே வெளியேறினான்.அதனை நினைத்து கொண்டே
“ஏன் இல்லாமல் நன்றாக நியாபகம் இருக்கு. இப்போது எதற்க்கு அதை கேட்கிறீங்க.”
“காரணமா தான் ஆஷிக். அன்றே என் பெண் உன் மீது விருப்பம் என்று சொல்லி விட்டாள்.” என்று சொன்னது தான்.
“ஐய் ஜாலி.” என்று எகிரி குதித்தது யாராக இருக்கும் என்று நினைக்கிறீங்க. எல்லாம் நம்ம பரினிதா தான்.
அவளின் சந்தோஷத்தை பார்த்த மந்திரியின் உதடு புன்னகையை காண்பித்தது என்றால், ஆஷிக்கின் கண்கள் கோபத்தை காட்டியது. அவன் கோபத்தை பார்த்து விட்டு இவன் ஏன் இப்படி முறைக்கிறான்.
ஒரு சமயம் அந்த பெண் அவ்வளவு மோசமாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்து விட்டாள். ஆனால் இப்போது அவளுக்கும் சேர்த்து அந்த மந்திரியே பேச ஆராம்பித்து விட்டார்.
“பாப்பாவை ஏன் கோச்சிக்கிறீங்க ஆஷிக். வீட்டில் ஒரு கல்யாணம் என்றால் அந்த வீட்டு சார்ந்த பெண்ணுக்கு சந்தோஷமாக தானே இருக்கும்.” என்று அந்த மந்திரி திருமணம் வரை சென்று விட்டார்.
அந்த மந்திரிக்கு தெரிந்து விட்டது இந்த பெண்னுக்கு ஆஷிக் மீது விருப்பம் எல்லாம் இல்லை என்று. இந்த ஆஷிக் தான் அப்பெண்ணை கொஞ்சம் விருப்பதோடு பார்க்கிறான். அதுவும் அப்பெண்ணிடம் கூட சொல்லவில்லை என்று. அதனால் தான் நேரிடையாக திருமணம் என்று சொல்லி விட்டார் தன் பெண்ணின் அழகில் உள்ள நம்பிக்கையில்.
ஆஷிக் பரினிதாவிடம் திரும்பி “பேபிம்மா நீ சித்தார்த், ஆருண்யாவிடம் போ” என்று சொன்னதற்க்கு.
“நான் அங்கு தானே இருந்தேன். நீங்க தானே அங்கே இருந்து விரட்டி விட்டிட்டீங்க. இப்போ போ என்று சொல்லுறீங்க.” என்று சொல்லி விட்டு தன் காலை தரையில் உதைத்தாவாறு நடந்து சென்று தன் அண்ணனின் அருகில் நின்று கொண்டாள்.
ஆஷிக் அவள் செய்கையை ஒரு புன்னகையுடன் பார்த்து விட்டு மந்திரியிடம் “என்ன சார். கல்யாணம் என்று எல்லாம் பேசுறீங்க. உங்க பெண்ணுக்கு மட்டும் விருப்பம் இருந்தால் போதுமா...”
“அது தான் உங்க கிட்ட கேட்க வந்தேன் ஆஷிக். நான் என் பெண் சொன்னவுடனே உங்களிடம் கேட்க வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் அப்போது உங்கள் சிஸ்டருக்கு கல்யாணம் முடிவாக வில்லை.
அதுவும் இல்லாமல் அவர்கள் உங்கள் இரட்டையர். ஒரே வயதில் இருந்துக் கொண்டு பெண்ணுக்கு திருமணம் செய்யாமல் நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்று நினைத்து தான் பொறுமையாக கேட்கலாம் என்று நினைத்து விட்டேன். ஆனால் இப்போது அது தவறோ என்று எனக்கு படுகிறது.” என்று சொல்லிக் கொண்டே பரினிதாவை பார்த்தார்.
அவர் பார்வையை தொடர்ந்து தன் பார்வையையும் செலுத்திய ஆஷிக் “ நீங்கள் சொல்வது அனைத்தும் சரியே” என்று சொல்பவனை மந்திரி தன் பார்வையை பரினிதாவிடம் இருந்து ஆஷிக்கிடம் மாற்றினார்.
ஆனால் அப்போதும் ஆஷிக் விடாமல் பரினிதாவை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். ஆஷிக் பார்வையை பார்த்த மந்திரி “இது சரி வரும் என்று உங்களுக்கு தோன்றுகிறதா…” என்றவுடன் தன் பார்வையை பரினிதாவிடம் இருந்து திருப்பி மந்திரியிடம் கூர்மையான பார்வை பார்த்துக் கொண்டே
“எது சரி வருமா...என்று கேட்கிறீர்கள்.”
பரினிதாவை காட்டி “நானும் உங்கள் வயது கடந்து வந்தவன் தான். பரினிதாவை பார்த்தவாரே அப்பெண்ணின் விளையாட்டுத்தனம் பார்க்க நன்றாக தான் இருக்கும். ஆனால் வாழ்க்கை என்று வரும் போது பக்குவம் தான் கைய் கொடுக்கும்.
அதுவும் நீ நிறைய தொழில் செய்பவன். அந்த தொழிலில் உங்களுக்கு உதவியாக அப்பெண் இருக்க வேண்டுமே தவிர. உங்கள் வேலையையும் கெடுத்துக் கொண்டு இருப்பவளாக இருக்க கூடாது. அதுவும் அந்த பெண் குடும்பம்.” என்றதும்.
இவ்வளவு நேரம் அவர் சொல்வதை எல்லாம் எதுவும் சொல்லாமல் கேட்டுக் கொண்டு இருந்த ஆஷிக் “அக்குடும்பத்தை பற்றி பேச நமக்கு தான் யோகியதை இல்லை.” என்றான்.
முதலில் அவர் சொல்வதை எல்லாம் பொறுமையாக கேட்டதற்க்கு காரணம் அவனுமே பரினிதா மேல் தன் எண்ணம் போவதை நினைத்து இது சரி வருமா என்று இப்போது மந்திரி சொன்னா காரணத்தை எல்லாம் யோசித்து தான் பார்த்தான்.
இன்னும் சொல்ல போனால் அவனுக்கு பெண்கள் மீது எல்லாம் பெரிய ஈடுபாடு எல்லாம் கிடையாது என்றாலும் திருமணம் செய்ய கூடாது என்று எல்லாம் அவன் நினைத்தது இல்லை. அப்படி திருமணம் செய்துக் கொண்டால். அப்பெண் நம் தொழிலுக்கு உதவியாக இருக்கும் பெண்ணை தான் கட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தான்.
ஆஷிக்குக்கு இன்னும் இன்னும் தன் தொழில் சாம்ராஜ்ஜியத்தை பெருக்க நினைத்தான். அதனால் முதலில் தன் சகோதரியையும், தன் அம்மாவையுமே தொழிலை பார்த்துக் கொள்ளும் மாறு கூப்பிட்டான். ஆனால் சொல்லி வைத்த மாதிரி இதில் எல்லாம் எங்களுக்கு விருப்பம் இல்லை என்று இரண்டு பேரும் சொல்லி விட்டனர்.
அப்போது சரி நமக்கு வரும் மனைவியாவது தொழில் செய்பவளாகவோ...இல்லை அதில் விருப்பம் இருப்பவளாகவோ இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால் பரினிதா இதற்க்கு எதிர்பதம் என்றும் அவன் உணர்ந்து தான் இருந்தான். இருந்தும் இவ்வளவு வேறுபாடுகள் இருந்தும், அவள் மீது தன் மனம் செல்வதை அவனால் தடுக்க முடியவில்லை.
பின் அவளை நினைக்க நினைக்க இத்தனை வருடம் அவன் மனதில் இருந்த அழுத்தம் குறைவது போல் இருந்ததால். அவள் எனக்கு இந்த மகிழ்ச்சி கொடுத்தால் போதும் மற்றவற்றை நானே பார்த்துக் கொள்வேன் என்று நினைத்து தான் பரினிதாவை தன் மனைவியாக நினைக்க ஆராம்பித்தான்.
அதனால் தான் மந்திரி பேசுவதை தடுக்காது கேட்டுக் கொண்டு இருந்தான். ஆனால் அவள் குடும்பம் என்ற உடன் அவனால் பொறுத்துக் கொள்ளமுடிய வில்லை. சித்தார்த்தின் தாத்தாவை பற்றி டிடெக்டிவ் கொடுத்த ரிப்போர்ட்டை படிக்க படிக்க அவனால் வியாக்காமல் இருக்க முடியவில்லை.
இக்காலத்தில் இப்படி பட்ட மனிதரா என்று.அப்படி இருக்கும் போது முப்பது வருடம் முன் சாரயம் தொழில் செய்து. பின் படி படியாக முன்னேறிய இந்த மந்திரி அக்குடும்பத்தை பற்றி பேசலாமா...என்று நினைத்து தான் அப்படி கூறினான்.
ஆனால் அந்த மந்திரியோ ஆஷிக் நினைத்ததுக்கு எதிர் பதமாக பேசினார். “அது தான் ஆஷிக் நானும் கூறுகிறேன்.நீங்கள் அக்குடும்பத்தில் பெண் கொடுப்பதை கேள்வி பட்டு நானும் விசாரித்தேன். நான் நினைத்தது சரி தான் என்பது போல் தான் இருந்தது மாப்பிள்ளையின் வசதி.
ஆனால் நான் எதிர் பாராதது அவர்களின் குடும்பம் பாராம்பரியமும், அவர்களின் நேர்மையும், வரலட்சுமி அம்மாவை காண்பித்து அவர்களின் கணவர் அந்த காலத்திலேயே தன் ஊர் மக்கள் எங்கும் வேலை தேடி வெளியே செல்ல கூடாது என்று நினைத்து ஒரே சமயத்தில் மூன்று தொழில் சாலையை தொடங்கினாராமே...”
என்று சொல்லி விட்டு சித்தார்த்தை காண்பித்து “உங்கள் மாப்பிள்ளை மட்டும் என்ன லேசு பட்டவரா ...இந்த காலத்தில் பார்க்க முடியாதா...நேர்மை,நியாயம், என்று பார்த்துக் கொண்டு இந்த ஐந்தாண்டு சர்வீசில் ஐந்து இடத்துக்கு மாற்றம் வாங்கி இருக்கிறாரே….இப்போதும் அவர் மாற்றலுக்கு ஏற்பாடு நடப்பதாக தான் கேள்வி பட்டேன்.” மேலும் ஏதோ சொல்ல வந்தவரை தடுத்து நிறுத்திய ஆஷிக்
“இப்போது என்ன சொல்ல வரிங்க. இவ்வளவு பாரம்பரியமிக்க குடும்பம் என் குடும்பத்தில் எப்படி பெண் எடுத்தார்கள் என்றா இல்லை எப்படி பெண் கொடுக்க போகிறார்கள் என்றா…?” என்ற ஆஷிக்கின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
உண்மையில் அவர் அதை தான் குறிப்பிட எண்ணினார். மேலும் உன் சகோதரியாவது சித்தார்த் விரும்பினான் அதனால் திருமணம் செய்துக் கொண்டான். ஆனால் உன் நிலமை அப்படி இல்லையே. அந்த பெண்ணை நீ தான் விரும்புகிறாய். அப்பெண்ணுக்கு உன் மீது நாட்டம் இல்லை போலவே என்று சொல்லி விட்டு. என் பெண்ணை மணந்தால் கிடைக்கும் லாபத்தை கூற எண்ணினார்.
ஏன் என்றால் அவர் தன் பெண்ணிடம் ஆஷிக்கிடம் பேசி அவனை உனக்கே திருமணம் செய்து விடுகிறேன் என்று கூறிவிட்டு வந்திருந்தார். அது மட்டும் இல்லாது ஆஷிக்கின் திறமை மீது அவர் நிறைய நம்பிக்கை வைத்திருந்தார். தன் ஒரே பெண்ணை ஆஷிக்குக்கு திருமணம் செய்து கொடுத்தால் நம் தொழிலை திறம்பட பார்ப்பதோடு அவனும் மேலும் மேலும் முன்னேறுவான் என்று நினைத்தும் ஆஷிக்கை மாப்பிள்ளையாக்க எண்ணினார்.
அதனால் தான் ஆஷிக்குக்கு வேறு பெண் மீது நாட்டம் என்று தெரிந்தும் அதனை கலைத்து தன் பெண்ணை மணம் முடிக்க எண்ணினார். இருந்தும் அவர் உள் மனது சொல்லியது இது தான். ஆஷிக் ஒரு முடிவு எடுத்து விட்டால் அதில் இருந்து பின் வாங்க மாட்டான் என்று. இருந்தும் முயற்ச்சித்து தான் பார்ப்போமே என்று பேசி பார்த்தார்.
அவர் எதிர் பார்த்த மாதிரியே தான் ஆஷிக்கும் பேசி வைத்தான். “நீங்கள் சொல்வது அனைத்தும் சரியே. ஆனால் இதில் ஒன்று இருக்கிறது. என் குடும்பம் பாராம்பரியம் மிக்க குடும்பம் இல்லை என்றாலும் சாராயம் காச்சும் குடும்பமும் இல்லையே….அது மட்டும் இல்லாமல் அந்தஸ்த்திலும் நாங்கள் அவர்களுக்கு சமமே ...
அதனால் நீங்கள் என் திருமணத்தை பற்றி கவலை படாமல் அடுத்த எலெக்க்ஷனுக்கு என்னிடம் உங்களுக்கு எவ்வளவு தொகை வேண்டும் என்று மற்றும் சொல்லுங்கள் மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்ற பேச்சில் அமைதியாக அவ்விடத்தை விட்டு அகன்றார். ஏன் என்றால் ஒரு சில அவரின் ரகசியங்கள் ஆஷிக்கிடம் இருக்கிறது. அதனால் அவனை பகைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.
மேலும் நம் பெண்ணின் அழகுக்கும் ,அந்தஸ்த்துக்கும் மாப்பிள்ளை நீ நான் என்று போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். இவன் என்ன பெரிய இது என்று இந்த பழம் புளிக்கும் என்ற வகையில் நினைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றார்.
ஆஷிக் அவர் செல்வதை ஒரு புன்னகையோடு பார்த்துக் கொண்டு இருந்தான்.அவனுக்கு தெரியும் அந்த மந்திரி தன்னை பகைத்துக் கொள்ள மாட்டார் என்று. அவர் உலகத்துக்கு சொல்வது எனக்கு ஒரே பெண் என்று. ஆனால் அவருக்கு எத்தனை பிள்ளைகள் என்ற விவரம் ஆஷிக்குக்கு தெரியும். அதனால் இனி இந்த விஷயத்தை பற்றி பேசி பிரச்சனை பண்ண மாட்டார் என்று நினைத்துக் கொண்டே மணமக்கள் இருக்கும் இடத்துக்கு சென்றான்.
ஆனால் அமைச்சர், மந்திரி ,என்று எல்லோர் வாயையும் அடைக்க தெரிந்த ஆஷிக்கால் பரினிதாவின் வாயைய் அடைக்க வித்தை தெரியாதவனாய் மணமக்கள் இருக்கும் இடத்தில் மாட்டிக் கொண்டு முழித்தான்.
ஆம் அவன் அங்கு செல்வதற்க்குல் மந்திரி பெண் ஆஷிக்கை விரும்பியதை பற்றி சொல்லி ஒரு காதல் நாடகத்தையே நடத்தி முடித்து விட்டாள். இதில் என்ன கொடுமை என்றால் இவருக்கும் விருப்பம் போல் அதனால் தான் என்னை அவ்விடத்தை விட்டு போக சொல்லி விட்டார் என்று. எக்ஸ்ரா ஒரு பிட்டை வேறு போட்டு விட்டாள்.
அந்தோ பாவம் அந்த நேரத்துக்கு பார்த்து அந்த இடத்தில் ஆஷிக்கின் அம்மா கலையரசி, வரலட்சுமி பாட்டி வேறு இருந்தார்கள். ஆஷிக் போன உடனே ஆருண்யா பரினிதா சொன்னதை சொல்லி விட்டு .
“இது உண்மையா ஆஷிக் “ என்று கேட்டதுக்கு ஆருண்யாவுக்கு பதில் அளிக்காமல் பரினிதாவை பார்த்து முறைத்துக் கொண்டு நின்று இருந்தான்.
பின் ஆருண்யா சித்தார்த்தை பார்க்க சித்தார்த் “என்ன ஆஷிக் எதுவும் சொல்லாமல் இருக்கே.அப்போ உண்யை தானா….”
ஆருண்யாவிடம் பதில் சொல்லாமல் இருப்பது போல் சித்தார்த்திடம் இருக்க முடியாது என நினைத்து .
“அப்படி எல்லாம் இல்லை.” என்று முழுவதும் சொல்வதற்க்குள்.
“அவங்க பொய் சொல்றாங்க நானே என் காதால் கேட்டேன்.” என்ற பரினிதா பேச்சில் இப்போது ஆஷிக் எதுவும் சொல்லாமலேயே பாட்டிம்மா…
“நீ சும்மா இருக்க மாட்டே ...அது தான் ஆஷிக் சொல்றாங்களே....முதலில் அவர் சொல்வதை என்ன என்று கேட்போம்.” என்று கூறினார்.
அவருக்கும் ஆஷிக் அந்த குடும்பத்தில் இருந்து பெண் எடுக்கிறார்களா...என்று தெரிய வேண்டி இருந்தது. ஏன் என்றான் அந்த மந்திரி பற்றி அவரும் கேள்வி பட்டு இருக்கிறார். ஆனால் அது நல்ல விதமாக இல்லை. அதனால் தான் தெரிந்துக் கொள்ள விரும்பினார்.
ஆஷிக் வரலட்சுமிபாட்டிம்மாவை பேசியதை கேட்டு இவர் அடுத்தவர்கள் விஷயத்தில் அனாவசியமாக மூக்கை நுழைக்க மாட்டார்களே என்று நினைத்துக் கொண்டே சித்தார்த்திடன்
“நான் அவர் கொடுத்த ஒரு விருந்துக்கு சென்று இருந்தேன் அங்கு அவர் பெண் என்னை பார்த்து விட்டு அவர் அப்பாவிடம் என்னை மணக்க விருப்பம் என்று போல் சொல்லியிருக்கிறால் போல் .ஆனால் நான் மறுத்து விட்டேன்.” என்று கூறி விட்டு வரலட்சுமி பாட்டிம்மாவை பார்த்தான்.
ஏன் என்றால் காரணம் இல்லாமல் அவர்கள் கேட்க மாட்டார்கள் என்று. ஆஷிக் நினைத்தது போலவே தான் அவர் பேச்சிம் இருந்தது. “நல்ல முடிவை தான் எடுத்து இருக்கிங்க ஆஷிக். அவரை பற்றி நான் நல்ல விதமாக கேள்வி பட்டது இல்லை. ஒரு நிமிடம் அவர் நம் குடும்பத்தோடு இணைவதா என்று நினைத்து விட்டேன் பரவாயில்லை.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அந்த இடத்துக்கு விடை பெறுவதற்க்காக வினோத் குடும்பம் வந்தது