Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட...23.3

  • Thread Author
அத்தியாயம்…23.3



திருமணத்திற்க்கு ஸ்ருதிகா ஸ்ரீயின் இரண்டு அண்ணன்களும் அண்ணிகளும்.. குழந்தைகளோடு சேர்ந்து அனைவருமே வந்தனர் தான்..

அண்ணன்களுக்கு தங்கை குடும்பமாக வாழ வேண்டும்.. கூட சுய நலமாக.. தன் தலையில் பாரம் வந்து விட கூடாது.. அவ்வளவு தான்.. இப்போது இரண்டும் நிறை வேறி விட்டதில் சுமூகமாகவே வந்து கலந்து கொண்டு முன் எதுவும் நடவாதது போல் மகிழ்ச்சியோடு தான் பேசினர்… சிரித்தனர்..

அதே தான் மணமக்களாக இருந்த சாண்டில்யனும், ஸ்ருதிகா ஸ்ரீயுமே செய்தது… திருமணத்திற்க்கு அவர்களை அழைத்த போதே சாண்டில்யன் ஸ்ருதிகா ஸ்ரீயிடம் சொல்லி விட்டான்..

“அவங்க வந்தா எப்போதும் போல நல்ல மாதிரியே பேசு டா… நம்மை சுத்தி எல்லோருமே நல்லவங்கலா இருப்பாங்க என்பது இல்ல.. எந்த அளவுக்கு நம்ம கிட்ட அவங்க நல்ல விதமா நடந்துக்குறாங்க. என்பதை எல்லாம் வைத்து தான் இருக்கு…

அவங்க சூழ்நிலை மனைவி பேச்சை கேட்க வேண்டி இருக்கு…” என்று சொன்னதும் ஸ்ருதிகா ஸ்ரீ…

சாண்டில்யன் சொல்வதை அமைதியாக கேட்டு கொண்டு இருந்தவள் கடைசியாக மனைவியின் பேச்சை கேட்க வேண்டி இருக்கும் என்று சொல்லும் போது மட்டும். ஸ்ருதிகா ஸ்ரீ அதை ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை…

“சும்மா சொல்றேன்.. நாளைக்கு நான் இது போல சொன்னா நீங்க கேட்பிங்கலா என்ன…?” என்று கேட்ட போது சாண்டில்யனிடம் இருந்து உடனடியாக.

“முடியாது..” என்று தான் வந்தது.. பின் அவனே…

“எனக்கு தெரியும் நீ அது போல எல்லாம் நீ என் கிட்ட சொல்ல மாட்டே என்று… ஏன்னா அவங்களுக்கு ஒரு பெண் மனைவியா கிடைத்து இருக்கு,, ஆனா நீ என் தேவதை டா…” என்று சொன்னவனின் பேச்சில் ஸ்ருதிகா ஸ்ரீயின் முகம் விகாசித்து தான் போயின.

பழைய வாழ்க்கையை நினைக்க கூடாது என்று அவள் திரும்ப திரும்ப அவளுக்குள் சொல்லி கொண்டாலுமே, ஒரு சிலதில் அவளாள் நினையாது இருக்க முடியவில்லை..

ஸ்ரீ காந்த் வீட்டிற்க்கு என்று அத்தனை செய்தாள். ஆனால் அவனிடம் இருந்து ஒரு சின்ன பாராட்டு… ஏன் பாராட்டு வேண்டாம்.. தன்னை வைத்து கேலி கிண்டல் இது போலான பேச்சுக்களை தான் அவனிடம் இருந்து அவள் கேட்டு இருக்கிறாள்.. கடைசியாக மிக பெரிய துரோகத்தையும் சந்தித்து விட்டாள்…

தான் சொன்னதற்க்கு எதுவும் சொல்லாது ஏதோ யோசனையில் இருந்த ஸ்ருதிகாவை பார்த்த சாண்டில்யன்..

“இதுக்கு தான் நான் இன்னுமே சீக்கிரம் மேரஜ் வைக்க சொன்னது டா.. நீ என்னை பத்தி மட்டுமே இனி நினச்சிட்டு இருக்கனும்…” என்று சாண்டில்யன் சொன்ன போது..

இதற்க்கு மட்டும் ஸ்ருதிகா.. “ அப்போ குழந்தைங்க…” என்று வெடுக்கென்று கேட்டாள்..

கோபத்தில் சிவந்து போன அவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன்… “ அவங்களை பத்தி நினைக்க நான் இருக்கேன் டா.. உன்னை பத்தியுமே இனி நீ நினைக்க வேண்டாம்.. இனி உன் வேலை எல்லாம் என்னை என்னை பத்தி மட்டுமே நினைக்கனும்… நினைக்க வைப்பேன்…” என்று அவன் பேசும் விதத்தில் ஏதோ கட்டுண்டது போல ஸ்ருதிகா ஸ்ரீ சாண்டில்யனையே பார்த்து கொண்டு இருந்தவள் சாண்டில்யன் கண் அடித்து..

“கல்யாணத்திற்க்கு பின் இல்லை.. முன்னவே என்னை மட்டும் தான் நினைக்க வெச்சிட்டேன் போலவே.” என்று சொன்னவன் தன் காலரையும் தூக்கி விட்டு கொண்டான்.

உண்மையில் சாண்டில்யன் பேச்சில் ஸ்ருதிகா ஸ்ரீ மதி மயங்கி தான் நின்று விட்டாள்.. பின் சாண்டில்யனின் இந்த பேச்சில் தான்..

“நீங்க வக்கீல் என்று இப்போ நான் ஒத்துக் கொள்கிறேன் பா…. “ என்று சொன்னவள் பின்..

“உங்களுக்கு என்ன என் அண்ணன் அண்ணிங்க கல்யாணத்திற்க்கு வந்தா நல்ல மாதிரி பேசனும் அவ்வளவு தானே…” என்று கேட்டவள் பின் இதோ சொன்னது போலவே நல்ல மாதிரியாக சிரித்து பேசினாள்..

கடைசியாக விடை பெறும் போது… சாண்டில்யனிடம்… “வீட்டிற்க்கு வாங்க சாண்டில்யா…” என்று அழைப்பு வேறு விடுத்து சென்றனர்.

கல்யாண கலட்டாவும், வந்தவர்கள் அனைவரும் செல்லவும் மாலை ஆகி விட்டது..

அது வரை வந்தவர்களுக்கு அந்த அந்த நேரத்திற்க்கு ஏதுவாக சாப்பிட கொடுக்க வேண்டி உணவும், விடை பெறும் போது வந்தவர்களுக்கு கொடுக்க பரிசு பொருட்களும் இருந்தது.. இதை அனைத்தையும் குணசேகரன் பொறுப்பில் விட்டு விட்டான் சாண்டில்யன்..

ஸ்ருதிகா ஸ்ரீ கூட.. “ நான் உங்களை சிம்பிளா தானே செய்ய சொன்னேன் சாண்டில்யா…?” என்று கேட்டதற்க்கு..

சாண்டில்யன் சொன்னது இது தான்.. “ நான் என்ன பெரிய கல்யாண மண்டபத்தை பார்த்தேனா..?” என்று கேட்டவன் பின்..

“கச்சேரி என்று இப்படி எல்லாம் வைத்தேன்னா. சாப்பாடு என் அம்மா சாதாரணவே வீட்டிற்க்கு வந்தவங்களுக்கு சாப்பிட கொடுக்காது அனுப்ப மாட்டாங்க.. அதே போல தான் வெறும் வைய்யோடு வந்தவங்களை அனுப்ப மாட்டாங்க.. புத்தகம் குங்கும சிமிழ்.. எதுவும் இல்லேன்னா தோட்டத்தில் இருக்கும் ஒரு ரோஜா பூவையாவது கொடுத்து தான் அனுப்புவாங்க.

சாதாரண நாளிலேயே இந்த வீட்டிற்க்கு வந்தவங்களை அப்படி அனுப்பும் போது கல்யாணத்திற்க்கு வந்தவங்களை.. எப்படி..?” என்று கேட்டவனுக்கு ஸ்ருதிகா ஸ்ரீ இசைவாக தான் தலையாட்டினாள்..

“இது போலவே சமத்தா நான் சொன்னதற்க்கு எல்லாம் தலையாட்டின்னா… நல்லா இருக்கும்..” என்று சொன்னவனின் பேச்சு புரிய ஸ்ருதிகா ஸ்ரீக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது.. புரிந்ததும் முறைக்க திரும்பி பார்க்க. எங்கு அவன் இருந்தான்.. தன் சகலையோடு கல கலத்து கொண்டு இருந்தான்…

அவர்களை நோக்கி ஸ்ருதிகா ஸ்ரீ சிரித்து கொண்டே சென்ற போது அவளின் காதில் விழுந்தது….

குணசேகரன். “ சரி சாண்டில்யா எல்லோரும் போயிட்டாங்க நாங்களும் கிளம்புறோம்..” என்று சொல்லும் போது கலாவதியோடு அவள் மகள் மட்டும் அல்லாது இயல் இசையுமே நிற்க.

ஸ்ருதிகா ஸ்ரீ.. குழந்தைங்க கூட போறாங்கலா..? என்று மனதில் நினைத்தவள் அதை பற்றி ஒன்றும் கேட்காது அமைதியாக நின்றாள்..

ஆனால் சாண்டில்யன் கேட்டு விட்டான்.. “ அண்ணி குழந்தைகளையுமா கூட்டிட்டு போறிங்க.. வேண்டாம்..” என்று கேட்டவன் சொல்லியும் விட்டான்.. இங்கேயே இருக்கட்டும் என்று..

ஆனால் குணசேகரன் தான்.. “ சாண்டில்யா. ஒரு வாரம் இங்கு இருக்கேன் என்று தானே நீ சொன்ன… அந்த ஒரு வாரம் குழந்தைங்க எங்க கூடவே இருக்கட்டும்.. நாங்க என்ன குழந்தைங்களுக்கு புதுசா…..? அதுவும் அக்கா கூட இருக்கா..?” என்று தன் மகள் மைதிலியையும் காட்டி வேறு சொன்னவன்..

குழந்தைகளிடமும்.. “ என்ன டா செல்லங்கலா…?” என்று வேறு கேட்க..

இயல் இசை… “ஆமா அக்காவோட இருக்கோம்…” என்று அவர்கள் வாய் சொன்னது தான்..

ஆனால் அந்த இரண்டு குழந்தைகளின் கண்கள்.. ஆசையோடு அந்த வீட்டை சுற்றி முற்றி பார்ப்பதும் தாய் தகப்பனை பார்ப்பதுமாக இருக்க. கண்களில் அத்தனை ஏக்கம்..

அதில்.. சாண்டில்யன்.. “ண்ணா வேண்டாம் ண்ணா. குழந்தைங்க எங்க கூடவே இருக்கட்டும்.. குழந்தைங்க அவங்க அக்காவும் கூட இருக்கட்டும் என்றால் அவளுமே இங்கேயே இருக்கட்டும்…” என்று சொல்லி விட்டான்..

குணசேகரன்.. “ ஏன் சாண்டில்யா..” என்று பல்லை கடிக்கும் போதே..

“ண்ணா ப்ளீஸ் ஒரு சில விசயங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப யோசித்து தான் நாம செய்யனும் ண்ணா… குழந்தைங்க மனசுல அவங்க அம்மாவை கல்யாணம் செய்த அன்னைக்கே இவன் நம்மளை விட்டு பிரிச்சிட்டான் என்ற யோசனை என் குழந்தைகளுக்கு வந்து விட கூடாது ண்ணா…. அவங்களுக்கு இங்கு இருக்க தான் ஆசை ண்ணா.. உன் பெண்ணுக்கும் இங்கு இருக்க ஆசை.. இருக்கட்டும்..” என்று குணசேகரன் கேட்கும் படி மட்டும் சொல்ல.

குணசேகரனுக்கு சாண்டில்யன் சொல்வதும் சரி என்பது போல தோன்ற.. அவன் தன் மனைவியோடு மட்டும் செல்ல விடை கொடுக்கும் போது சாண்டில்யன் குணசேகரனின் காதில்.

“ இன்னைக்கு நையிட் நானும் என் மனைவியும் உங்களுக்கு எந்த தொந்திரவும் கொடுக்க மாட்டோம் ண்ணா…” என்று சொல்ல.

“டேய் டேய்… இதை நான் உன் கிட்ட சொல்லனும் டா.. ஆனா நீ இருக்கியே..” என்று கிண்டலாக அவன் முதுகில் ஒன்று போட்டு விட்டு தான் விடைப்பெற்றது.

இரவு எட்டு மணிக்கே குழந்தைங்கள் மூன்று பேருக்கும் உணவு கொடுக்கப்பட்டு விட்டது.. அந்த வீட்டில் காலம் காலமாக வேலை செய்யும் பெண் மணி மட்டும் கொஞ்சம் தயங்கி தயங்கி சாண்டியனிடன் வந்து..

“சின்ன ஐய்யா உங்க ரூமை.” என்று சொல்லும் போதே.. அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொன்டவன் வேண்டாம் என்று மறுத்து விட்டான்..

காரணம் குழந்தைகளுக்கு அது வித்தியாசமாக தெரியும்.. அதோடு இயல் இசையோடு குணசேகரன் பெண்ணான மைதிலி கொஞ்சம் புத்தி தெரியும் பெண்… இதை அனைத்தையும் விட அவனின் ஸ்ருதிகா ஸ்ரீ….

என்ன தான் நீ பழையதை நினைக்க கூடாது என்னை மட்டுமே நினை என்று சொன்னாலுமே, மனது ஒன்றும் கம்பியூட்டர் இல்லையே… டெலிட் என்று ஒரு ஆப்ஷன் கொடுத்தால் அனைத்துமே அழிந்து போவதற்க்கு… எந்த நியாபகமும் வந்து அவளை வேதனை அடைய செய்ய கூடாது என்றும் தான் ஒன்றும் செய்யாது விட.

இதோ காலையில் இருந்து அந்த பெரிய வீடு மட்டும் அல்லாது தோட்டம் .. பின் பக்கம் பூக்களோடு இருந்த செயற்க்கை குளத்தில் என்று ஓடி ஆடிய குழந்தைகள் சாப்பிட்ட உடனே மூன்று பேருமே தூங்கி விட்டனர்..

கூடத்தில் தான்… தூங்கினார்கள்.. சாண்டில்யன் ஸ்ருதிகா ஸ்ரீயுமே சாப்பிட்டு விட்டனர்… சாண்டில்யன் முன் தான் வேலை செய்யும் அந்த பணிப்பெண்… ஸ்ருதிகா ஸ்ரீ கையில் பாலை கொடுத்தது..

பின்.. குழந்தைகளை காட்டி.. ஒரு பக்கத்து அறையையும் காட்டியவள்..

“அங்கு படுக்க வைக்கட்டுமா ஐய்யா. கூட நானுமே இருக்கேன் ஐய்யா …” என்று கேட்டாள்..

அந்த பெண்மணி காலம் காலமாக அங்கு வேலை செய்தவர். அவருக்கு ராஜ ராஜேஷவரியையும் தெரியும்.. அவரின் ஆசை எண்ணமும் தெரியும்..

அதனால் தான் சாண்டில்யனுக்கு திருமணம் தான் நேரம் சென்று நடந்தது. மத்ததாவது கால காலத்துக்கும் நடக்கட்டுமே… என்று தான் கேட்டது.

அதற்க்கும் சாண்டில்யன் மறுத்து விட்டான். “ இல்ல எங்க ரூமிலேயே குழந்தைங்க தூங்கட்டும் ..” என்று சொல்லி விட்டான்.

தூங்கி கொண்டு இருந்த குழந்தைகளை ஒவ்வொரு குழந்தையாக தோளில் தூக்கி கொண்டு மாடியில் இருக்கும் தன் அறையில் படுக்க வைத்தவன் பின் கடைசியில் தான் மனைவியின் கை பற்றி மாடிக்கு அழைத்து சென்றது.

இந்த வீட்டிற்க்கு ஸ்ருதிகா ஸ்ரீ நேற்றே வந்து விட்டாள் தான்.. ஆனால் இது வரை மாடிக்கு செல்லவில்லை… சாண்டில்யனுமே அழைத்து காட்டவில்லை.

அதில் ஸ்ருதியா ஸ்ரீக்கு கொஞ்சம் வருத்தம் தான்.. கீழ் பகுதியை மட்டுமே பார்த்திருந்தாள்.. அதுவும் மாடிக்கு சாண்டில்யன் மட்டுமே போக வர இருந்தவன்..

வா என்று தன்னை அழைக்கவில்லையே.. அதுவும் பேச்சு வாக்கில் இவளின் மாமா குணசேகரன் தன் மனைவியிடம்..

“ மாடி முழுவதுமே சாண்டில்யனுடையது மட்டுமே .. முன் நான் இங்கு வந்த போது கூட நான் மாடிக்கு போகவில்லை…இப்போவும் காட்ட மாட்டேங்குறான் பாரேன்… மேல என்ன வைத்து இருக்கிறான் புதையலா…?” என்று பேசியதை ஸ்ருதிகா ஸ்ரீயும் கேட்டாள் தான்..

ஆனால் தன்னையும் அழைக்கவில்லையே. என்ற ஆதங்கம் நேற்றில் இருந்து இருக்க தான் செய்தது.. இப்போது அழைத்து செல்லவும்…

“இப்போ மட்டும் நான் மாடிக்கு வரலாமா..?” என்று ஒரு மாதிரியாக தான் கேட்டான்.

அதற்க்கு சாண்டில்யன்.. “ ஓ மேடமுக்கு கோபம் போல.. நான் கூட்டிட்டு போய் காட்டல என்று…?” என்று கேட்டவன் பின்..

“ஒரு சர்பிரைஸ்க்காக தான் டா…” என்று விட்டான்..

ஸ்ருதிகா ஸ்ரீ ஒன்றை கவனித்தாள்.. தான் அன்று நீங்க அழைக்கும் அழைப்பு கூட எனக்கு முந்தைய வாழ்க்கையை நியாபகம் படுத்துக்கிறது என்று இவள் சொன்னதில் இருந்து கூடிய மட்டும் தன்னை பெயர் சொல்லி அழைக்காது டா என்று அழைப்பதை கவனித்தவள் அதை பற்றி ஒன்றும் கேட்கவில்லை..

ஆனால் இப்போது சாண்டில்யனின் கை பிடித்து ஒவ்வொரு படியாக ஏறும் போது பெண்ணவளுக்கு இன்று ஏதாவது ஒரு இடத்தில் தன் பழைய சுவடு தன் மனதில் வந்து விடுமோ… அது போல வந்தால் தன் முகத்தை வைத்தே அனைத்தையும் புரிந்து கொள்பவன். அதையும் புரிந்து கொண்டால், அவன் மனது எத்தனை வேதனை அடையும்…

கடவுளே… எந்த ஒரு நிலையிலும் சாண்டில்யன் மனதை நான் வேதனை படுத்த கூடாது என்று வேண்டிக் கொண்டே சென்ற போது அவனின் அறை வந்து விட்டது..

அவள் எதிர் பார்க்கவில்லை. அத்தனை பெரிய அறை.. அதுவும் அனைத்துமே பழைய காலத்தை ஒட்டியே இருக்க. பார்க்க எதோ ஒரு அரண்மனைக்கு வந்து விட்டோமோ என்று எண்ணும் அளவுக்கு இருந்தது..

அதை சாண்டில்யனிடம் சொல்லவும் செய்தாள்..

அதற்க்கு சாண்டில்யன். “ம் அரண்மனை என்றே நினை.. நான் உன் ராஜா…. நீ என் மகாராணி.. கட்டிலில் உறங்கும் பெண்களை காட்டி..

“இவங்க நம்ம இளவரசிமார்கள்… இப்போ நம்ம ராஜ்ஜியத்தை ஆளா ஒரு இளவரசனை ஏற்பாடு செய்ய தான் வந்து இருக்கோம்… என்று நினை…” என்று சாண்டில்யன் சொன்னதுமே….

ஸ்ருதிகா ஸ்ரீக்கு சட்டென்று ஒரு வித பட படப்பு வந்து ஒட்டிக் கொண்டது.. வெட்கமும் இருந்தது.. கூடவே பயமும்.. பழைய நியாபகம் வந்து விடுமோ என்று.. தன் முகத்தையே ஊன்றி கவனித்து கொண்டு இருக்கும் கணவனின் கவனத்தை திசை திருப்ப வேண்டி..

அவளுமே கிண்டலாக.. “ அப்போ ராஜாவோட அந்தப்புரம் எங்கு…” என்று கேட்டவளின் பாவனையின் சாண்டில்யன் சிரித்து விட்டான்..

பின் ஸ்ருதிகா ஸ்ரீ தான் கட்டிலின் அருகில் சென்று… மூன்று பேருமே மெத்தை முழுவதுமே ஆக்கிரமித்து உறங்குபவர்கள காட்டி…

“இவங்களை கொஞ்சம் ஓரமா படுக்க வைக்கட்டுமா…?” தாங்கள் எங்கு படுப்பது என்ற யோசனை ஸ்ருதிகா ஸ்ரீக்கு.. கூடவே வேறு யோசனையுமே தான். ஆனாலும் தயக்கமும் பயமுமாக தான் இதையும் கேட்டாள் பெண்ணவள்..

அதற்க்கு சாண்டில்யன்.. “ குழந்தைகளை தொந்திரவு செய்ய வேண்டாம் டா…” என்று சொன்னவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க.

அங்கோ இத்தனை நேரம் இருந்த அந்த முகம் மறைந்து போய்… காதலும்.. காமமும்.. இரன்டும் சேர்ந்த வேட்கையும் மட்டும் தெரிய… அப்படியே பார்த்து கொண்டு இருந்தவளின் அருகில் வந்தவன்..

சட்டென்று ஸ்ருதிகா ஸ்ரீயை தன் கையில் தூக்கி கொண்டவனாக..

அந்த அறையை ஒட்டி இருந்த பெரிய பால்கனிக்கு அழைத்து சென்றான்….














 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
188
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍.
இந்த விஜிம்மா வேற குணாவ விட சாண்டிக்கு ரொம் வைப்பேன் ன்னு சொன்னாங்க. ஆனா இந்த எபில மிஸ் ஸாகிடுச்சே.
அடுத்த எபிவரை வெயிட் பண்ணோனுமே 🥰🥰🥰🥰😁😁😁🙄
எல்லாருமே சுயநலந்தான். தான் தனது ன்னு.
ஸ்ருதியோட பொறந்தவன்களும் விதிவிலக்கு கிடையாது .
ஜஸ்ட் பிராக்டிகல்லா நடக்கறாங்க.
 
Top