அத்தியாயம்----16
ஷாலினியை அவள் வீட்டில் விட்டு பிரதாப்பும்,அசோக்கும் ,நேராக வாசுவின் வீட்டிற்க்கு சென்றனர்.நாளை வாசுவின் தந்தை மயில்வாகனத்தையும் கூட அழைத்து சென்றால் நல்லது என்று கருதியதால் நாளை செல்வதாக இருந்த மயிவாகனம் வீட்டிற்கு இன்றே பேசிவிடலாம் என்று கருதியதால் உடனே செயல் பட எண்ணி அவர் வீட்டிற்கு சென்றனர்.
கேட்டில் இருந்த வாச்மேன் இவர்களின் பென்ஸ் காரை பார்த்ததும் தன் எஜமானனை கூட கேட்காமல் கேட்டை உடனே திறந்து விட்டான்.அவர்கள் நல்ல நேரம் இவர்கள் போனபோது மயிவாகனமே லன்ச்சுக்கு வந்திருந்தார்.இவர்களை பார்த்த மயில்வாகனம் தான் சாப்பிடுவதை விட்டு எழுந்து வந்தார்.
“வா...பிரதாப் வா எப்படி இருக்கே …?அசோக்கையும் பார்த்து “ வாப்பா”என்று இருவரையும் அமரவைத்தார். அவர் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு வந்ததை பார்த்த பிரதாப்… “அங்கிள் முதல்லே சாப்பிட்டு வாங்க பின் பொறுமையா நாம் பேசலாம்.”என்றதற்கு…..
“ அப்போ நீங்களும் என் கூட சாப்பிட வாங்க” என்று அழைத்தார்.
“இல்லே அங்கிள் நீங்க சாப்பிடுங்க இப்போதான் நான் சாப்பிட்டு வந்தேன்.”என்றதற்கு…
“ஒன்றும் சொல்லாமல் அவர் சாப்பிட சென்றார்….அவருக்கு தெரியும். பிரதாப் மற்ற வீட்டில் அவ்வளவாக சாப்பிட மாட்டான் என்று…..
அதனால் சட்டென்று சாப்பிட்டு விட்டு வந்தார். அவர் வந்ததும் சர்வன்ட் கொண்டு வந்த ஜூஸை கொடுத்து “இதையாவது கண்டிப்பாக குடிக்க வேண்டும்” என்று கூறியதை தட்ட முடியாமல் குடித்து முடித்தான்.
பிரதாப் குடித்து முடித்ததும்…. ”சொல்லு பிரதாப் தம்பி ஏதோ என் உதவி தேவை என்று வாசுவிடம் சொன்னதாக சொன்னான்.நீங்களும் நாளை வருவதாக சொல்லி இன்றே வந்து இருக்கிறீர்கள் என்றால் முக்கியமான விஷயமாகதான் இருக்க வேண்டும்.சொல்லு பிரதாப் எந்த உதவி தேவை என்றாலும் சொல்லுப்பா செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்.”என்று கூறினார்.
பிரதாப் சுற்றி வளைக்காமல் நேரிடையாகவே… “என் பெற்றோருக்கு நான் ஒரே பையன் என்று தானே…. உங்களுக்கு தெரியும்.உங்களுக்கு என்ன பெரும்பாலோர் அப்படி தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் எனக்கு முன் ஒரு அக்கா இருந்தார்கள்...”என்ற பிரதாப்பின் பேச்சை இடைநிறுத்தி …..
“இருந்தார்கள் என்றால் இப்போது….” என்று இழுத்தவாறு நிறுத்தினார்.
“ஆமாம் இப்போது இல்லை.அதுவும் அவர்கள் இறந்து பதினைந்து வருடம் சென்று விட்டது.ஆனால் எங்களுக்கு ஒரு வாரம் முன் தான் தெரியும்.என்ற பிரதாப்பின் பேச்சில் குழம்பி விட்டார்.ஆமாம் அவரும் தீனதயாளனுக்கு ஒரே மகன் என்று தான் நினைத்திருந்தார்.
இப்போது பிரதாப்பின் பேச்சில் குழம்பி போய்விட்டார். “என்ன…?பிரதாப் சொல்றே….உங்களுக்கு ஒரு அக்கா இருந்தாங்களா….அதுவும் அவர்கள் இறந்த விஷயம் பதினைந்து வருடம் கழித்து தான் தெரியுமா…..?எனக்கு ஒன்னும் புரியலையே பிரதாப்” என்ற மயில்வாகனம் கேள்வியில்….
தன் கடந்த காலத்தை சொல்லி முடித்து. “சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் தான் கேசவமூர்த்தியின் குடும்பம் சென்னையில் இருப்பதும்… என் அக்கா செத்து பதினைந்து வருடம் கடந்து விட்டது என்றும் தெரிய வந்தது.என் அப்பாவிடம் பொய் சொல்லி ஏமாற்றி அக்காவை மணந்து என் அப்பா,அம்மாவிடம் இருந்து பிரித்தது போல் அவருக்கும் செய்ய நினைத்து நான் ஒரு சில பொய் சொல்லி கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்.அதற்கு உங்களின் உதவி வேண்டும்.”என்று கூறினான்.
“கண்டிப்பா என்ன உதவி தேவை என்றாலும் செய்கிறேன் பிரதாப். உங்கள் குடும்பத்துக்கே நான் கடமை பட்டு இருக்கிறேன்.உன் தந்தை மட்டும் அன்று டெல்லியில் எனக்கு உதவி செய்யாவிட்டால் நான் என் குடும்பத்தோடு தற்கொலை தான் செய்து இருப்பேன்.நான் என்ன செய்யவேண்டும்.”என்று கேட்டார்.
பிரதாப் தன் திட்டத்தை கூறினான்.”இந்த ஜோசிய விஷயம் தான் என்ன செய்யவேண்டும் என்று புரியவில்லை”என்றதற்கு….
“எந்த ஜோசியக்காரர் பிரதாப்” என்ற மயிவாகனம் கேள்விக்கு….. பிரதாப் சொன்ன ஜோசியரின் பெயரை கேட்டவுடன்.. “கவலையை விடுங்க பிரதாப் இந்த ஜோசிய விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்.என்ன…. நம்ப முடியவில்லையா….அந்த ஜோசியரை எனக்கு நன்றாக தெரியும்.நீங்கள் நாளை கேசவமூர்த்தி வருவதற்குள் உங்கள் திட்டப்படி நடக்க ஏற்பாடு செய்கிறேன்.” என்ற உறுதி அளித்தார்.
அவர் கொடுத்த நம்பிக்கையில் பிரதாப்பும்,அசோக்கும், தன் பங்களாவுக்கு வந்தடைந்தனர்.வீட்டிற்க்கு வந்ததும் பிரதாப் அசோக்கிடம் ”நாளை எல்லாம் நல்ல விதமாக முடியவேண்டும்.அந்த ஜோசியரை மயிவாகனம் அங்கிள் பார்த்து கொள்வதாக சொல்லியிருக்கிறார்.எல்லாம் நல்லவிதமாக முடியவேண்டும்.”என்று கூறி ஒரு வித டென்ஷனில், கண் மூடி ஷோபாவில் தலை மேல் நோக்கி சீலிங்கை பார்த்தவாறு தன் முடி கோதி தன்னை அமைதி படுத்த முயற்ச்சித்துக் கொண்டிருந்தான்.
அசோக் அவன் பக்கத்தில் அமர்ந்து “பிரதாப் எல்லாம் நல்ல விதமாக நடக்கும் நீ கவலை பட வேண்டாம்.அது தான் மயிவாகனம் பார்த்து கொள்வதாக சொல்லி இருக்கிறாரே… பின் ஏன்…?கவலைப்படுகிறாய் போய் ரெஸ்ட்டு எடு. காலையில் இருந்தே ரொம்ப அலைச்சல். எனக்கும் ரொம்ப டையர்டா இருக்கு…. இப்போ கொஞ்சம் ரெஸ்ட்டு எடுத்தால் தான் காலையில் நாம் நேரத்தோடு கேசவமூர்த்தியை பார்க்க முடியும்.”என்று கூறினான்.”
“ நான் பத்மினி கழுத்தில் எப்போது தாலியை கட்டுகிறனோ….அப்போது தான் எனக்கு ஒய்வே…. அதுவரை, நீ என்ன சொன்னாலும் எனக்கு டென்ஷன் தான்.”என்று கூறிக் கொண்டே மாடி ஏறினான்.
பிரதாப் காலையில் இருந்தே மயில்வாகனத்துக்கு மூன்று முறை போனில் அழைத்து விட்டான்.அவர் நல்ல விதமாக முடித்து விடுவேன் என்று கூறி கூட அவன் ஒருவித பதட்டதுடனே காணப்பட்டான்.
அசோக்கும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்து விட்டான்.அவனுக்கு தெரியும் இனி மயில்வாகனத்திடம் இருந்து நல்ல விதமாக செய்தி வந்தால் தான் .அவன் அமைதி ஆவான் என்று.
பிரதாப்பின் பதட்டத்தை குறைக்க விரைவிலேயே மயில்வாகனம் நல்ல செய்தியை சொன்னார்.ஆம் பிரதாப் நினைத்த மாதிரி தனக்கும் பத்மினிக்கும் கூடியவிரைவில் திருமணம் செய்வதற்க்கு உண்டான அனைத்து வேலையும் முடித்து இருந்தார்.
பின் பிரதாப் கேசவமூர்த்தி சொன்ன மாதிரி சரியாக பத்து மணிக்கு அவர் சொன்ன இடத்துக்கு சந்தானம்,மயில்வாகனம்,அசோக்கோடு போய் சேர்ந்தான்.அவர்கள் போய் சேரும் முன்பே கேசவமூர்த்தி அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்.
அவர்களை பார்த்த கேசவமூர்த்தி “வாங்க நம்ம ஜோசியர் வந்து விட்டார். நமக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறார்.”என்று கூறினார்.
பிரதாப் மயிவாகனம் அவர்களை “இவர் ******ஓட்டலின் ஒனர் இவரின் ஓட்டலை தான் நான் விலை பேசிக் கொண்டிருக்கிறேன்.”என்று அறிமுகம் படுத்தினான்.
மயில்வாகனம் கேசவமூர்த்திடம் “உங்களை சந்திச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.எனக்கு பிரதாப் தம்பியையும் அவர் குடும்பத்தையும் நல்லா தெரியும். ஓட்டல் தொழிலில் இருப்பவர்கள் அவர்களை தெரியாதவர்களே டெல்லியில் இருக்க மாட்டார்கள். அதுவும் தம்பி தொழிலுக்கு வந்தவுடன் இன்னும் அசுர வளர்ச்சிதான்.”என்று பிரதாப்பின் குடும்பத்தை பற்றியும்,பிரதாப்பை பற்றியும்,புகழ்ந்து கூறினார்.
மயில்வாகனத்தின் பேச்சைக் கேட்ட கேசவமூர்த்திக்கு பெருமை பிடிபட வில்லை. “பின் கேசவமூர்த்தி வாங்க போகலாம் அவர் நமக்காக ரொம்ப நேரம் காத்துக் கொண்டு இருக்கிறார்”.என்று அவர்களை அழைத்துக் கொண்டு சென்றார்.
அவர் அழைத்ததும் அவரை பின் தொடர்ந்தவாறு பிரதாப் மயிவாகனத்தை பார்த்தான்.மயில்வாகனம் ஒரு புன்னகையுடன் தலை அசைத்து கேசவமூர்த்தியுடன் பேசியவாறு சென்றார்.
அங்கு இவர்களுக்காக காத்திருந்த ஜோசியர் சேஷாத்திரி இவர்களை பார்த்ததும் “வாங்க உங்களுக்காக தான் காத்துக் கொண்டு இருக்கிறேன்.”அவர்களிடம் இருந்த பத்மினி ஜாதகத்தையும், பிரதாப் ஜாதகத்தையும் பெற்றுக் கொண்டார்.
பின் அதனை பிரித்து வைத்துக் கொண்டு தன் விரலை மடக்கியும், விறித்தும், அவருக்குள்ளாகவே ஏதோ மனதுக்குள் கணக்கை போட்டவார் ஒரு அரை மணி நேரம் இவ்வாறு செய்துக் கொண்டிருந்தார்.
இந்த அரை மணி நேரத்தில் பிரதாப்போடு கேசவமூர்த்தி தான் தவித்து போனார்.பிரதாப் பற்றி அனைவரும் சொல்ல கேட்ட கேசவமூர்த்தி எந்த காரணம் கொண்டும் இந்த இடம் தவற விடுவதில் அவருக்கு விருப்பம் இல்லை.
இவர்களின் தவிப்புக்கு முடிவு கட்டும் விதமாக ஜோசியர் சேஷாத்திரி “மாப்பிள்ளை ஜாதகமும் பொண்ணோட ஜாதகமும் அமோகமா பொருந்தி இருக்கு.இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தாள் சுபிக்க்ஷமா இருப்பாங்க….” ஆனால் என்று இழுத்தவாறு நிறுத்தினார்.
உடனே கேசவமூர்த்தி… “என்ன ஆனால் ஏதாவது பிரச்சினையா….”என்று பதட்டத்துடன் வினவினார்.
ஜோசியர் “பிரச்சினை எல்லாம் ஒன்றும் இல்லை.இந்த பெண் ஜாதகப்படி இன்னும் ஆறு நாளுக்குள் திருமணம் வைத்தாக வேண்டும்.இல்லை என்றால் எட்டு ஆண்டுக்கு பிறகு தான் திருமணம் நடக்கும்.அதுவும் வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர் கொள்ள நேரும்” என்று ஜோசியர் இன்று காலை மயில்வாகனம் வந்து சொல்ல சொன்னதை அப்படியே சொன்னார்.
ஜோசியர் சொன்னதை கேட்ட கேசவமூர்த்திக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.அவருக்கு ஜாதகத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை தான். ஆனால் நாம் பார்க்காமல் இருந்தால் அது வேறு விஷயம். ஆனால் ஜாதகத்தை பார்த்து விட்டு மறுத்து நடப்பதற்க்கு தயக்கமாக இருந்தது.
அதுவும் தன் ஒரே பெண் விஷயத்தில் எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை.இந்த எண்ண ஓட்டத்தோடு பிரதாப்பை பார்த்தார்.பிரதாப்பின் முகத்தை வைத்து அவரால் எதையும் அறிய முடியவில்லை.
பின் அவரே பிரதாப்பை பார்த்து “இப்போ என்ன செய்யலாம் பிரதாப் எனக்கு என்னவோ….ஜோசியர் சொல்வதை கேட்பது தான் சரி என்று படுகிறது.”என்று கூறினார்.
பிரதாப்பும் இதை தானே எதிர் பார்த்தது “நீங்கள் சொல்வது சரி தான் .ஆனால் ஆறு நாட்களுக்குள் எப்படி திருமண ஏற்பாட்டை செய்வது.அதுவும் என் பெற்றோர்கள் இன்னும் ஐந்து நாட்கள் கழித்து தான் இந்தியாவுக்கே வருகிறார்கள்.அதுவும் அவர்கள் டெல்லியில் தான் வந்து இறங்குவார்கள் அங்கு இருந்து சென்னை வருவதென்றால் அவர்கள் திருமண நாள் அன்று தான் அவர்களால் வரமுடியும்.” என்று இருத்தவாறு நிறுத்தினான்.
பிரதாப்பின் பேச்சை கேட்ட கேசவமூர்த்திக்கு பிரதாப் எதிர் பார்த்த மாதிரியே “திருமண வேலையை பற்றி நீங்கள் கவலை பாடதீர்கள் எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.உங்கள் பெற்றவர்களிடமும் நானே போனில் பேசுகிறேன்.அவர்கள் திருமணத்துக்கு வந்தால் போதும். பின்பு நீங்கள் டெல்லியில் பெரிய அளவில் ரிசப்ஷன் வைத்துக் கொள்ளலாம்”என்று கூறி உதவிக்கு சந்தானம், மயில்வாகனம் முகத்தை பார்த்தார்.
அவர் எதிர் பார்த்த படியே சந்தானமும்,மயில்வாகனமும், “பின் என்ன பிரதாப் அது தான் அவர் அவ்வளவு சொல்கிறாரே….எல்லாம் நல்ல படியாகவே நடக்கும் சரி என்று சொல்லுங்கள்”.கூடுதலாக மயில்வாகனம் “நான் உன் தந்தையுடன் பேசுகிறேன். அவர் ஒன்று சொல்லமாட்டார்.உன் திருமணத்தை ஆவளுடன் எதிர்பார்ப்பவர் ஆயிற்றே….”என்று பிரதாப்பை பார்த்து கண் அடித்தவாறு கூறி முடித்தார்.
மயிவாகனத்தின் கண் சமிஞ்சயிலேயே உடனே ஒத்துக்கொள் என்ற செய்தி இருப்பதை புரிந்துக் கொண்ட பிரதாப் “சரி நீங்கள் மூன்று பெரும் பெரியவர்கள் இவ்வளவு சொல்வதால் சரி” என்று தன் சம்மதத்தை கூறினான்.
பிரதாப் சம்மதம் சொன்னவுடன் அசோக் மகிழ்ச்சியுடன் அவனை அணைத்துக் கொண்டான்.
அவன் எதிர்பார்த்த மாதிரியே எல்லாம் சரியாக நடந்தது.அன்றே திருமணத்தை அன்றிலிருந்து ஆறு நாட்களில் நடத்த முடிவு செய்தனர்.கேசவமூர்த்தி பிரதாப் சம்மதம் கிடைத்தவுடன் தனக்கு தெரிந்த சத்திரத்தை புக் செய்ய மகிழ்ச்சியோடு விரைந்தார்.இந்த மகிழ்ச்சி எல்லாம் இன்னும் ஆறு நாட்கள் தான் என்று பாவம் அந்த தந்தைக்கு தெரியவில்லை.
அத்தியாயம்---17
படுக்கையில் இருந்து கண் விழித்த பிரதாப் முதலில் பார்த்தது.பத்மினியிடம் முகத்தை தான்.ஆம் அவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு நாள் கடந்து இருந்தது. இப்போது அவர்கள் ஹனிமூனுக்காக கோவாக்கு வந்திருக்கிறார்கள்.அவன் திருமணத்துக்கு அவன் செய்த வேலைகளை நினைத்து பார்த்தான்.பத்மினியை பார்த்து ஒரு மாதம் கடந்து இருக்குமா…..முதலில் பழி வாங்கத்தான் திருமணம் என்று தன் மனதுக்குள் கூறிக் கொண்டாலும் பத்மினியை நாம் டிவியில் பார்த்தவுடனே பிளாட் என்று இப்போது மனதார ஒப்புக் கொண்டான்.
ஜோசியரை பார்த்து வந்தவுடன் தான் செயல்பட்ட வேகமும், அசோக்கின் நட்பும்,மயில்வாகனம்,சந்தானம்,ஆகியோரின் உதவியும் இல்லாமல் கண்டிப்பாக இத்திருமணத்தை இவ்வளவு சீக்கிரமாகவும்,எந்த விதமான பிரச்சனையும் இன்றி முடிந்து இருக்காது.
அப்பா,அம்மா,இல்லாமல் திருமணம் செய்தது தான் மனதுக்கு சிறு கவலையாக இருந்தது. ஆனால் அதுவும் தன் தந்தை எங்கள் ஆசிர்வாதம் உனக்கு எப்போதும் இருக்கும்.மேலும் எனக்கு மிக பெரிய சந்தோஷமே…. பத்மினியை சீக்கிரம் திருமணம் முடிப்பது தான். என்று அவர் கூறியவுடன் அந்த சிறு கவலையும் அகன்றது…என்றாலும் நீ வருவதற்குள் உன் அம்மவிடம் சாந்தி பற்றி செய்தியை சொல்லி விடுகிறேன் என்றது தான் கொஞ்சம் பயமாக இருந்தது.
அவனுக்கு தெரியும் அம்மா சாந்தி அக்காவை பார்க்க எவ்வளவு ஏங்கினார்கள் என்று.இப்போது அவரை எப்போதும் பார்க்க முடியாது என்று தெரிந்தால் அதை தாங்கி கொள்வார்களா…..?என்று கவலைப்பட்டான்.
தன் திருமணத்தில் இரண்டு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தான்.ஒன்று பாதபூஜை சம்பிரதாயத்தை நடத்த விடவில்லை.இந்த சாங்கியம் வேண்டாம் என்று திட்ட வட்டமாக மறுத்து விட்டான்.தன் தாய் ,தந்தைக்கு செய்ய வேண்டிய மரியாதை மற்றவர்களுக்கு செய்ய அவனுக்கு விருப்பம் இல்லை.
மற்றொன்று தன் வாழ்க்கையை கேசவமூர்த்தி வீட்டில் தொடங்க அவன் விரும்பவில்லை.அதனால் கேசவமூர்த்தி எவ்வளவு தடுத்தும் திருமணம் முடிந்த அன்றே கோவாவுக்கு கிளம்பி விட்டான்.என்ன ஒன்று அந்த சகுந்தலா அம்மாவை சமாளிப்பது தான் பெரும் கஷ்டமாக இருந்தது.திருமணம் அவ்வளவு சீக்கிரம் வைத்துக் கொள்வதில் அவருக்கு துளி கூட விருப்பமே இல்லை.
ஆனால் அவரை சரிக்கட்டும் பொறுப்பை அவர் மகன் கேசவமூர்த்தியே எடுத்துக் கொண்டதால் நமக்கு வேலை மிச்சம் என்று எண்ணிக் கொண்டான். அவன் தன் எண்ணங்களில் மூழ்கி இருக்கும் போதே பத்மினி தூக்கம் கலைந்து திரும்பி,திரும்பி படுப்பதை பார்த்த பிரதாப் புது மணமகனாக அவளை நெருங்கி…
”என்ன மினி தூக்கம் வரலயா….என்று கேட்டவாரே அவள் கழுத்தில் தன் முகம் பதித்து தன் மூச்சு காற்றை இழுத்து விட்டவாரே மினி உன்னிடம் வித்தியசமா...எதோ வாசனை ம்...இப்போ தெரியுது உன் வேர்வையும் நேற்று நான் கட்டிய தாலியில் உள்ள மஞ்சளும்,மற்றும் உனக்கே உன்டான வாசனையும் தானே….”என்று தன் கண்டுப்பிடிப்பை மிக பெருமையாக் கூறினான்.
“அய்யோ எது தான் ரிஸர்ச் செய்றது என்று விவஸ்தையில்லையா….”என்று வெட்கத்துடன் கூறினாள்.நேற்று இரவுக்கு பிறகு பிரதாப்பை மிக நெருக்கமாக கருதினாள்.பத்மினி சட்டென்று யாருடனும் உரிமையுடன் பேச மாட்டாள். கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவள்.ஆனால் அந்த கூச்சத்தை நேற்று நடந்த சங்கமம் தகர்த்தது.
பத்மினியின் வெக்கம் பிரதாப்பை மீண்டும் அவளிடம் நெருங்க தூண்டியது.”ஏய்….இப்போ இந்த ரிசர்ச் தான் பண்ணனும்.வேறு ஏதாவது பண்ணினா தான் தப்பு.ரிசர்ச்சிலே சின்ன டவுட் அதை கிளையர் பண்ணிக்கவா… என்று கூறிக்கொண்டே நேற்று நள்ளிரவில் முடித்த கதையை…..மீண்டும் அதிகாலையில் தொடங்கினான்.
பிரதாப்பின் மனம் எப்போதும் இல்லாதா அளவுக்கு மிக லேசாக உணர்ந்தான்.பக்கத்தில் இருக்கும் பத்மினியிடம் “மினி நீ சந்தோஷமா….இருக்கியா….?”என்ற பிரதாப்பின் கேள்வியில் ஒன்றும் புரியாமல் “நீங்கள் என்ன சொல்றீங்க புரியலையே….”
“இல்லே பத்மினி இந்த பத்து நாள் எனக்கு போனதே தெரியலை.நான் இது வரை இவ்வளவு சந்தோஷமா இருந்ததே இல்லை.என் எட்டாவது வயதில் இருந்தே ஒரு வித இறுக்கத்துடன் தான் நான் இருப்பேன்.என் சுபாவத்தை மாற்ற அசோக் எவ்வளவோ முயற்ச்சி பண்ணான்.ஆனால் என்னால் தான் முடியவில்லை.பின் நான் தொழிலில் இறங்கியவுடன் என் தனிமையை போக்க வேறு வழியை நாடினேன்.”என்று கூறினான்.
பாவம் பத்மினிக்கு தன் தனிமையை போக்க வேறு வழி என்பதை தொழிலிலேயே அவன் முழுகவனத்தையும்,செலுத்தினான்.என்று புரிந்துக் கொண்ட பத்மினி “நீங்கள் உங்கள் கவனத்தை தொழிலிலேயே….செலுத்தியதால் தானே...உங்களுக்கு தொழிலில் இவ்வளவு முன்னேற்றம்.”என்று கூறியதை கேட்ட பிரதாப்புக்கு, இவளுடைய நிம்மதிக்காவது என் கடந்த காலம் இவளுக்கு தெரியாமல் இருக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டான்.
பிரதாப்புக்கு அனைத்தும் சரியாகவே நடந்துக் கொன்டிருந்தது.ஆணால் ஒன்று மட்டும் தான் அவனுக்கு எரிச்சலை வரவழித்தது.காலை ஆறு மணி ஆகக்கூடாது. கேசவமூர்த்தி போன் வந்து தான் அவர்கள் துயில் களைவதே…..
அவன் தன் கை வித்தையாலும்,தன் உதட்டின் திறமையாலும்,பத்மினியை வேறு எதை பற்றியும் சிந்திக்கவே விடாமல் செய்தான். அதில் ஒரளவுக்கு வெற்றியும் கிடைத்தது.ஆனால் இவர் போனால் தன் முயற்சி கெடுவதாக கருதினான்.
டெல்லி சென்றவுடன் அவள் சிம்மை மாற்றுவது தான் தன் முதல் வேலை என்று எண்ணிக் கொண்டான்.ஆம் அவன் பத்மினியை சென்னை பக்கமே அனுப்பும் எண்ணம் இல்லை.கோவாவில் இருந்து நேராக டெல்லிக்கு அழைத்து செல்வது தான் அவன் திட்டம்.
இவன் யோசனையில் மூழ்கி இருக்கும் போது அவன் தந்தையிடம் இருந்து போன் வந்தது.அதனை எடுத்து காதில் வைத்தவாரே பத்மினியை பார்த்தவாறு பால்கனிக்கு சென்று பேசினான்.அதில் தன் தந்தையின் பதட்டமான குரலை கேட்ட பிரதாப் “அப்பா என்னப்பா என்ன விஷயம் “என்று பதட்டதுடன் கேட்டான்.
பிரதாப்பின் பதட்டத்தை பார்த்த பத்மினி பால்கனிக்கு விரைந்து வந்து “என்ன பிரதாப் என்ன விஷயம்” என்று கேட்டதற்க்கு கை அசைவில் இரு என்று சொல்லி தந்தையின் பேச்சை கவனிக்க அதில் “பிரதாப் அம்மாவுக்கு உடம்பு முடியலை இரண்டு நாள் முன் நான் சாந்தியை பற்றி சொன்னேன். அதில் அவள் பிபி அதிகமாகி ஹாஸ்பெட்டலில் சேர்க்கும் அளவுக்கு சென்று விட்டது.இதோ இப்போது தான் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தேன்.”என்று தந்தை கூறிய செய்தி கேட்டதும்.
“அப்பா ஏம்பா….இதை முதலிலேயே சொல்லலே…”என்ற பிரதாப்பின் பதட்டத்தை பார்த்த பத்மினி என்னங்க மாமாக்கு என்ன என்று கேட்டதற்கு “கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா….”என்று எரிந்து விழுந்தான்.
இந்த பக்கம் அவன் பேச்சை போனில் மூலம் கேட்ட தீனதயாளன் “என்ன பிரதாப் எதற்கு இப்போ பத்மினியை திட்டுகிறாய்…கொஞ்சம் அமைதியா இரு இருக்கிற பிரச்சினையில் கூட நீயும் மேலும் பிரச்சினை சேர்க்காதே…”என்ற அதட்டலுக்கு ஏதும் சொல்லாமல் “சரிப்பா இப்போ உடனே கிளம்பி நாங்க அங்க வருகிறோம்.”என்று கூறி போனை வைத்தவுடன்.
பத்மினியிடம் சீச்சிரம் நாம் கிளம்ப வேண்டும்.எல்லாவற்றையும் எடுத்து பேக் பண்ணு நான் பிளைட் டிக்கட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன்.என்று கூறிக் கொண்டே விரைந்தான்.
பத்மினி ஒரு நிமிடம் ஒன்றும் செய்யாமல் கட்டிலில் சிலையாக அமர்ந்தாள்.பிரதாப் தன்னை திட்டியதுக்கு கூட அவள் வருந்தவில்லை.பின்னாவது தன்னிடம் தன் தாயின் உடல் நிலையை பற்றி கூறுவான்.பின் அதனால் தான் டென்ஷனில் உன்னை திட்டும் படி ஆகிவிட்டது என்று தனக்கு விளக்கம் அளிப்பான் என்று அவள் எதிர் பார்த்தாள்.
பத்மினிக்கு பிரதாப்பின் போன் உரையாடளிலேயே விஷயம் அவளுக்கு விளங்கி விட்டது.ஆனால் பிரதாப் தன்னிடம் ஒன்றும் சொல்லாமல் எதோ கட்டளை போல் உரைத்து சென்றது தான் அவள் மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
மேலும் தன்னிடம் தன் தாயின் உடல் நிலையை பற்றி கூறி தன்னிடம் ஆறுதல் பெறவில்லையே…என்பதும் பத்மினிக்கு வருத்ததை தந்தது.பின் தன் கவலை ஒதுக்கி பிரதாப் வருவதற்குள் அனைத்தும் எடுத்து வைக்க வேண்டுமே என்று விரைந்து செயல் பட்டாள்.
வெளியே சென்ற பிரதாப்புக்கு தன் தாயின் உடல் நிலைப் பற்றி கவலை ஒரு புறம் என்றால்.பத்மினியை எவ்வாறு சமாளிக்க போகிறோம். என்ற கவலையும் சேர்ந்துக் கொண்டது.சற்று நேரத்துக்கு முன்பு தான் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்ந்தேன். அதற்குள் இப்படி ஆகி விட்டதே என்று வருந்தினான்.
அவன் கோவாவில் ஒரு மாதத்துக்கு என்று தான் திட்டம் இட்டான்.ஆனால் பத்மினியிடமும் கேசவமூர்த்தியிடமும்,பதினைந்து நாள் தான் என்று சொல்லியிருந்தான்.ஏன் என்றால் பத்மினி தன் படிப்பை பற்றி கூறி தன் அட்டனன்ஸ் அடிப்பட கூடாது என்று கூறியதால் அவ்வாறு உரைக்கும் படி ஆனாது.
ஆனால் பத்மினியின் படிப்பை டெல்லியில் தொடர்வர்தற்க்கு உண்டான அனைத்து காரியமும் தன் செல்வாக்கால் டெல்லியில் செய்து முடித்திருந்தான்.அதனை பற்றி பத்மினியிடம் சொல்வதற்கும் பின் அவர் தந்தையை பற்றி சமயம் பார்த்து கூறுவதற்க்கும் சேர்த்து தான் தன் ஹனி மூனை ஒரு மாதத்துக்கு திட்டம் இட்டான்.
ஆனால் பத்மினி பக்கத்தில் இருக்கும் போது தான் என்ன கூறவேண்டும் என்பதையே மறந்து… தன் இளமையின் தேவையே அவனுக்கு முதலில் பட்டது.பின் அவனே தனக்குள் கோவாவை விட்டு செல்லும் கடைசி நாள் சொல்லலாம் என்றும்… இப்போது உள்ள நல்ல சூழ்நிலையை கெடுத்துக் கொள்ளவேண்டாம். என்று தனக்கு தானே சமாதானமும் செய்துக் கொண்டான்.
ஆனால் இப்படி தன் அன்னையின் உடல் நலம் கெடும் என்று கனவிலும் நினைத்து பார்க்க வில்லை.அவனுக்கு இரு விஷயத்தை நினைத்து கவலைப் பட்டான்.ஒன்று தாயின் உடல் நிலை மற்றொன்று பத்மினியின் மனநிலை.டெல்லி சென்றவுடன் அவள் எப்படி நடந்துக் கொள்வாளோ என்றும்.
இவ்வாறு தன் நினைவலையுடன் தன் வேலையையும் முடித்துக் கொண்டான்.பிளைட்டின் டிக்கட்டுக்கு ஏற்பாடு செய்து விட்டு அவர்கள் தங்கி இருந்த ஓட்டலை வந்தடைந்த போது பத்மினி அனைத்தையும் பேக் செய்து ரெடியாக இருந்தாள்.
அவளை பார்த்தவுடன் எவ்வளவு மகிழ்ச்சியோடு இங்கு வந்தோம்.இப்போது அதற்க்கு எதிர்ப்பதமான மனநிலையில் திரும்புவதை நினைத்து வருந்தினான்.பத்மினி அவனை பார்த்தவுடன் இப்போதாவது தன்னிடம் ஏதாவது சொல்வான் என்று ஆவளுடன் அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.
அவளின் அந்த முகபாவத்தை பார்த்த பிரதாப் விரைந்து வந்து அவளை அணைத்துக் கொண்டான்.”சாரி மினி ஏதோ டென்ஷனில் அப்படி உன்னிடம் பேசிவிட்டேன்.”என்று வருந்தி கூறினான்.
பத்மினி இதை தானே எதிர் பார்த்தாள் அவளுக்கு அவளை திட்டியது கூடபெரிதாக படவில்லை.ஆனால் அதற்கு உண்டான காரணத்தை சொல்லாமல் சென்றது தான் மனதை உறுத்தியது.
இப்போது அவனே வந்து வருந்தவும்… “பரவாயில்லை பிரதாப் விடுங்க…இப்போ அத்தைக்கு எப்படி இருக்கு“ என்று அவள் விசாரித்ததில் “அத்தையா யாரு?”அவன் கேள்வியில் என்ன பிரதாப் நான் உங்கள் அம்மாவைத் தான் சொல்கிறேன்.”பத்மினியின் பதிலில் ஒரு ஆழ மூச்செடுத்து “தெரியவில்லை சீச்சிரம் கிளம்பு பிளைட்டுக்கு டைம் ஆயிடுச்சி என்று கூறி அவளை துரிதபடுத்தினான்.
பின் விரைவில் ஏர்போட்டுக்கு வந்தடைந்தனர்.பிளைட்டில் அமர்ந்தவுடன் தன் தந்தைக்கு போனில் அழைத்தான் “அப்பா நாங்க கிளம்பியாச்சு இன்னும் இரண்டு மணி நேரத்தில் அங்கு இருப்போம்”என்று கூறியவுடன்.
அந்தப்பக்கம் தீனதயாளன் “பத்மினியை பார்த்து அழைத்துக் கொண்டு வா...அம்மா அவளை தான் பார்க்க வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருக்கிறாள்.சீக்கிரம் வாருங்கள்.”என்று போனை அணைத்தார்.
அவன் கண்ணை மூடி தன் நெத்தியை கையால் தடவிக் கொண்டான்.”என்ன பிரதாப் மாமா என்ன சொன்னார்கள்.அத்தைக்கு இப்போ பரவாயில்லை தானே… தலை வலிக்கிறதா...என் ஹன்பேகில் தைலம் இருக்கிறது தடவவா…”என்று கேட்டாள்.
“இல்லை வேண்டாம் சிறிது நேரம் கண்ணை மூடிக் கொண்டிருந்தாலே சரியாகி விடும்” என்று கூறி அவள் பேச்சில் இருந்து தப்ப திரும்பவும் கண்ணை மூடிக் கொண்டான். அவள் அப்படி தன் தாய் தந்தையை உறவு மாற்றி அழைப்பதற்கு இவள் அவர்களை பற்றி விசாரிக்காமலேயே இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டான்.இன்னும் இரண்டு மணி நேரம் தான் எல்லாவற்றுக்கும் விடை தெரிந்து விடும்.என்று நினைத்துக் கொண்டான்.
டெல்லி ஏர்போட்டில் பிளைட் வந்து இறங்கியவுடன் அவனுக்காக காத்திருந்த பிஎம் டபள்யூ காரில் தன் லக்கேஜை எல்லாம் வைக்கும்படி தன் டிரைவரிடம் கொடுத்தான்.ஆனால் அவன் அதனை கவனிக்காமல் ஒரு ஆச்சரியத்துடன் பத்மினியையே பார்த்திருந்தான்.
அந்த சூழ்நிலையிலும் அதை விரும்பாதவனாக “என்ன அங்க பார்வை ம்...சீக்கிரம் லக்கேஜை டிக்கியில் வைத்து வண்டி எடு என்று கூறி பத்மினியையும் ஏறும் மாறு ஜாடை காட்டினான்.பத்மினி டெல்லி ஏர்போட்டுக்கு வந்தவுடனே அவன் முகபாவமே மாறிவிட்டதாக எண்ணினாள்.
முகபாவத்தில் கடுமை கூடிவிட்டதாகவே கருதினாள்.பாவம் அந்த கார் ட்ரைவர் தன் முதலாளி மனைவி என்று தானே பார்த்தான்.ஏன் இப்படி தேவை இல்லாமல் கோபம் படவேண்டும்.என்று எண்ணிக் கொண்டே காரில் அமர்ந்தாள்.
காரில் அமைதியே நிலவியது.பத்மினியும் ஒன்றும் கூறாமல் சைடில் வேடிக்கை பார்த்தவாறு வந்தாள். கால் மணி நேரத்துக்குள் கார் ஒரு பெரிய அரண்மனை மாதிரி இருந்த பங்களாவின் முன் நின்றது. அந்த பங்களாவை பார்த்த பத்மினி பிரதாப் தங்களை விட வசதி என்று தன் தந்தை சொன்னாலும் இந்த அளவுக்கு எதிர் பார்க்க வில்லை.வாச்மேன் வந்து கேட்டை திறப்பதை பார்த்த பத்மினி கேட்டின் பக்கத்தில் கோல்டன் எழுத்தில் பத்மினி இல்லம் என்ற எழுத்தில் மின்னியதையும் பார்த்தாள்.
அவள் யோசனையுடன் பிரதாப்பை பார்த்தவாரே பிரதாப்பின் அம்மா பெயர் பார்வதி தானே சொன்னார்.என்று தன் ஞாபக ஏட்டை தட்டினாள்.எவ்வளவு தட்டினாலும் விடை பார்வதி என்று தான் கிடைத்தது.ஒரு சமயம் போன் மூலம் தன் பெயர் எழுத சொன்னாறோ….என்ற எண்ணத்தையும் அந்த எழுத்தின் தன்மை அது எழுதி ஆண்டு கணக்கில் ஆகியிருக்கும் என்று கருத வைத்தது.
இவள் யோசனை போகும் போக்கை நினைத்து தன்னையே திட்டிக் கொண்டாள்.பாவம் அவர் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை அதைப்பற்றி யோசிக்காமல் என்ன இது என்று கேட்டை தாண்டி இன்னுமா வீடு வரவில்லை என்று பிரதாப்பை பார்த்தாள்.
பிரதாப் அவளையே பார்த்திருப்பதை பார்த்த பத்மினி அவன் கையை பற்றி “ ஒன்றும் இருக்காது பிரதாப் “என்று ஆறுதல் கூறினாள்.அவள் கையை தன் கையால் இருக்க ஒரு முறை பற்றி எடுப்பதற்க்கும் கார் நிற்பதற்கும் சரியாக இருந்தது.
காரை விட்டு இறங்கிய பிரதாப் வாசலை விட்டு வந்துக் கொண்டிருந்த தன் தந்தையை பார்த்து ஆழமூச்செடுத்து …. அந்த பக்கத்தில் இருந்து இறங்கிய பத்மினியை அழமாக நோக்கினான்.
பிரதாப் அருகில் வந்த தீனதயாளன் பிரதாப்பை விட்டு பத்மினியிடம் விரைந்து வந்து அவளை அணைத்துக் கொண்டார்.பத்மினிக்கு யார் இவர் என்று கேட்க பிரதாப் பக்கம் திரும்பினால் அவன் அவள் பக்கம் பார்வையை திருப்பவே இல்லை.
என்னதான் அவர் பெரியவராக இருந்தாலும் அவர் அணைத்ததும் சங்கடத்துடன் தன்னை விடுவித்துக் கொண்டு அவரை பார்த்தாள்.தீனதயாளன் “வாம்மா….வா உன் பாட்டியை வந்து பார்.உன்னை பார்த்தால் அவள் சந்தோஷப்படுவாள்.நீ அப்படியே….சாந்தி மாதிரியே இருக்கேம்மா…” என்று கூறிக் கொண்டே அவள் கையை பிடித்து அவரே அழைத்துச் சென்றார்.
அப்போதும் பத்மினி பிரதாப்பை நோக்க அவன் இவள் பக்கம் திரும்பாமலேயே ஒரு அறையை நோக்கி விரைந்தான்.தன் கை பற்றி அழைத்து சென்றவரும் அந்த அறைக்கே அழைத்து சென்று அங்கு படுக்கையில் இருக்கும் ஒரு அம்மாவிடம் அருகில் சென்று “பத்தூ பார் யார் வந்து இருக்காங்கன்னு நம்ம பேத்தி வந்து இருக்கா…”என்ற பேச்சில் சட்டென்று கண்ணை திறந்து “வந்துட்டியாமா என் ராசாத்தி அய்யோ ஏங்க பார்க்க அப்படியே…. நம்ம பொண்ணு போலவே இருக்கா…”என்ற பேச்சில் அரைமயக்கத்துக்கு சென்றாள் என்றால் ….பிரதாப் “அம்மா டென்ஷன் ஆகாதீங்க உங்கள் பேத்தி இனி மேல் உங்கள் கூடவே தான் இருப்பாள்” என்ற பேச்சில் பத்மினி முழு மயக்கத்துக்கு சென்றாள்.