Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நெருங்கி வா...21

  • Thread Author
அத்தியாயம்----21

தீனதயாளனுக்கும்,பத்மினிக்கும், சாந்தி படிக்க சென்றவுடன்.வீடே ஒரு அமைதியில் ஆழ்ந்தது போல் இருந்தது.சாந்தி இவ்வீட்டுக்கு வந்து பதினைந்து வருடம் ஆகிவிட்டது.அவளை விட்டு ஒரு நாளும் இருந்தது இல்லை.தீனதயாளன் பிஸ்னஸ் விஷயமாக வெளியுருக்கு சென்றாலும் நான்கு ஐந்து நாட்களுக்குள் வந்து விடுவார்.

இது மாதிரி நீண்ட நாட்களுக்கெல்லாம் பிரிந்தது கிடையாது. சாந்தி படிக்க சென்று இரண்டு வாரம் கடந்து இருந்தது.நாளை தான் அவளை பார்க்க அனைவரும் செல்கின்றனர்.தீனதயாளன்,பத்மினியோடு பிரதாப்புக்கு தான் சாந்தியின் பிரிவு மிக கடினமாக இருந்தது.

பிரதாப் அம்மா,அப்பா,இல்லாமல் கூட இருந்து விடுவான் சாந்தி இல்லாமல் இருந்ததே கிடையாது.சாந்தியின் பிரிவில் சரியாக உண்ணாமல் பாதியாக இலைத்து விட்டான் என்று கூட சொல்லலாம்.

நாளை தன் அக்காவை பார்க்க போக போகிறோம் என்று சொன்னதில் இருந்து.பிரதாப் “அம்மா அக்காவுக்கு ரவலட்டு பிடிக்கும் செய்ங்க…..தேங்காய் பருப்பி பிடிக்கும் செஞ்சுட்டிங்களா….?என்று பத்மினியை உண்டு இல்லை என்று செய்து விட்டான்.

சாந்தியும் அங்கு இதை விடமோசமாக பாதிக்க பட்டாள்.அவளுக்கு எது நடந்தாலும் தன் அம்மா,அப்பாவிடம் சொல்லி விடவேண்டும். பள்ளியை விட்டு வந்தவுடன் இன்று என்ன நடந்தது என்று தன் அம்மாவிடம் சொல்லிய பிறகே தன் ரூமுக்கு செல்வாள்.அப்படி பட்டவள் இங்கு யாரிடமும் பேசாமல் கிளாஸ் முடிந்தவுடன் நேராக தன் ரூமுக்கு சென்று விடுவாள்.யாரிடமும் பேசுவதும் இல்லை.

அவளுக்கு எப்போது ஆறு மாதம் முடியும் என்று இருந்தது.ஆம் அவள் சென்றது ஆறு மாதம் கோர்ஸ் தான். சாந்திக்கு நாளை அப்பா,அம்மா,தம்பி வருகிறார்கள் என்று சொன்னதும் அவளுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.ஆனால் அவர்கள் வரும் போது நாம் இப்படி இருக்ககூடாது என்று கருதினாள்.

அவள் அங்கு சென்றதில் இருந்து துணி உடுத்துவதில் கூட நாட்டம் செல்ல வில்லை.காலையில் எழுந்து குளித்ததும்.கையில் கிடைத்ததை ஏனோ… தானோ… என்று கிடைத்ததை உடுத்தி கொள்வாள்.

சாப்பாடும் அப்படி தான் தட்டில் எண்ண போடுகிறார்கள் என்று கூட பார்க்காமல் போடுவதை சாப்பிட்டு விட்டு செல்வாள்.அதனால் அவர்கள் வரும் போது குளித்து விட்டு நல்ல உடையை உடுத்திக் கொண்டாள்.

அவர்களை வரவேற்க வெளியே கார்டனில் காத்திருக்கும் போது தான் முதன் முதலில் கேசவமூர்த்தியை பார்த்தாள்.அங்கு கேசவமூர்த்தி ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தார்.கேசவமூர்த்தியும் சாந்தி எடுத்த கோர்ஸை தான் படிக்க வந்திருந்தார்.அவர் எம்.பி.ஏ முடிக்கும் தருவாயில் தான் கேசவமூர்த்தியின் தந்தை இறந்தார்.அவர் தந்தையும் ஒட்டலை தான் நடத்திக் கொண்டிருந்தார்.

தந்தை இறந்த பிறகு ஒட்டலை கேசவமூர்த்தி நடத்தினார்.அவருக்கு துவரம் பருப்புக்கும்.கள்ளபருப்புக்கு கூட வித்தியாசம் தெரியாது.அதனால் பேசிக்காவது தெரியவேண்டும் என்பதற்காக தான் இந்த கோர்ஸை படிக்க வந்தார். கேசவமூர்த்தியின் வீடு அங்கையே இருந்ததால் விடுதியில் தங்காமல் வீட்டில் இருந்துக் கொண்டே படித்தார்.

கேசவமூர்த்தி தன் நண்பனிடம் பேசிக்கொண்டே சாந்தியை பார்த்தார்.சாந்தி முதலில் கேசவமூர்த்தியை எதேச்சையாக பார்த்ததோடு சரி.பின் வீதியே தான் பார்த்திருந்தாள் தன் வீட்டினருக்காக. சாந்தியின் அமைதி தவழும் முகத்தை பார்த்த கேசவமூர்த்திக்கு பார்த்தவுடன் பிடித்து விட்டது.

கேசவமூர்த்தி யாருக்காக இவள் இப்படி இவ்வளவு நேரமாக காத்திருக்கிறாள்….?என்ற யோசனையில் தன் நண்பனை பேசி அனுப்பி விட்டு .இவள் யாருக்காக காத்திருக்கிறாள் என்று தெரிந்துக் கொள்வதற்க்காக இவனும் காத்திருந்தான்.

அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேர் சாந்தியை பார்த்து கேட்க கூடாத வார்த்தையை சொல்லி அவளை கிண்டல் செய்தனர்.சாந்திக்கு அவ்வார்த்தையை கேட்டதும் எதுவும் பேச தோன்றவில்லை அழுகை தான் வந்தது. தெரு என்றும் பாராமல் அழுக ஆராம்பித்து விட்டாள்.

கேசவமூர்த்திக்கு மூன்று பேர் பேசும் வார்த்தையை கேட்டதும் ஆவேசத்துடன் அவர்களை அடிக்கவே ஆரம்பித்திருந்தார்.மூன்று பேரை தனி ஒருவனாக சமாளிப்பது கேசவமூர்த்திக்கு கஷ்டமாக இருந்தது.சாந்திக்கு என்ன செய்வது என்பதே தெரியவில்லை.

அவளுக்கு இது வரைக்கும் இது மாதிரி சூழ்நிலையை அவள் எதிர் கொண்டதே இல்லை.வீட்டில் இருந்து காரில் தான் செல்வாள்.அது போல் வருவதும் காரில் தான்.கார் டிரைவரும் சாந்தியின் சிறு வயது முதலே அவள் வீட்டில் டிரைவராக இருப்பதால் சாந்தியை மகள் போல் பத்திரமாக பார்த்துக் கொள்வார்.

அப்படிப்பட்ட பாதுகாப்பான சூழ்நிலையில் வளர்ந்த சாந்திக்கு இப்பேச்சும்…. தனக்காக ஒருவர் மூன்று பேருடன் சண்டையிடுவதையும் பார்த்த போது முதலில் ஒன்றும் புரியவில்லை.பின் தனக்காக சண்டையிடுபவரை அவர்கள் அடிப்பதை பார்த்ததும் சாந்தி அவர்களை தடுக்க அருகில் சென்றாள்.

கேசவமூர்த்திக்கு அவள் அருகில் வருவதை பார்த்ததும். அவள் பெயர் தெரியததால் “பொண்ணு வேண்டாம் போ “என்று கத்தினான்.அவனுக்கு அவளை பார்த்து அசிங்கமாக பேசியதையே …ஜிரணித்துக் கொள்ள முடியவில்லை. அவள் அருகில் வந்து இவர்கள் ஏதாவது ...நினைக்கவே முடியவில்லை.

கேசவமூர்த்தி வாரேதே சொல்லியும் அவள் அருகில் சென்றாள்.அவள் அருகில் செல்வதுக்கும் அவள் வீட்டு கார் அவள் அருகில் வந்து நிற்பதற்க்கும் சரியாக இருந்தது.சாந்தி தன் பெற்றவர்களை பார்த்ததும். “அப்பா..அப்பா...என்று அழுதுக் கொண்டே தந்தையிடம் அப்பா அவரை அடிக்கிறார்கள் தடுங்கள்” என்று சொல்லியவாறு திரும்பவும் சாந்தி அவர்கள் அருகில் செல்ல முயன்றாள்.

சாந்தியின் செயலை பார்த்த தீனதயாளன் சட்டென்று சாந்தயை இழுத்தவாறு டிரைவரிடம் “முத்து போய் அந்த பையன்னை பாருங்கள் என்று கூறியவாறு.சாந்தியை பத்மினியிடம் ஒப்படைத்து.அவரும் கேசவமூர்த்தியிடம் சென்றார்.

தீனதயாளனும் வருவதை பார்த்த அந்த மூன்று பேரும் ஒடி விட்டனர்.பின் தீனதயாளன் கேசவமூர்த்தியிடன் சென்று கை குடுத்து தூக்கிவிட்டார்.கேசவமூர்த்தியும் எழுந்து தன்னை அறிமுகம் செய்துக் கொண்டார்.அவர்களையே பார்த்திருந்த சாந்தியை அருகில் அழைத்த தீனதயாளன் சாந்தியிடம் என்ன நடந்தது என்று கேட்டதற்க்கு ஒன்றும் சொல்லாமல் தலை கவிழ்ந்து நின்றாள்.

தந்தையே என்றாலும் அவர்கள் பேசிய வார்தையை கூறுவதற்க்கு கூசியது.சாந்தியின் நிலையை புரிந்துக் கொண்ட கேசவமூர்த்தி விடுங்க சார்…..என்று தடுத்து நிறுத்தினார்.சாந்தியின் தலை குனிவும் கேசவமூர்த்தியின் பேச்சை மாற்றும் முயற்ச்சியையும் பார்த்த தீனதயாளன் அவர்கள் தன் மகளிடம் ஏதோ கேட்க கூடாத வார்த்தையை தான் கேட்டிருக்கிறார்கள் என்று புரிந்துக் கொண்ட தீனதயாளனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.

கேசவமூர்த்தியிடம் “ அவர்கள் யார்…? உங்களுக்கு அவர்களை தெரியுமா…?” என்று கேள்வி எழுப்பினார். தீனதயாளனின் கோபத்தை புரிந்துக் கொண்ட கேசவமூர்த்தி “விடுங்க அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்.அவர்களை நீங்கள் ஏதாவது செய்தால் பின் பெரிய பிரச்சினையாகி உங்கள் மகளின் பெயர் வெளியில் வரும் படி ஆகிவிடும்.”என்று கூறியதற்க்கு.

“நீங்கள் செய்தால் என் மகள் பெயர் வெளியில் வராதா என்றதற்கு…”நான் செய்தால் அது ஸ்டுடண்ட் சண்டை என்று ஆகிவிடும்.” என்ற கேசவமூர்த்தியின் பதிலில் அப்போ அவுங்க ஸ்டுடண்டுங்களா….என்று இழுத்தவாறு நிறுத்தினார்.

அவர் இழுப்பிலேயே தன் மகளை தொடர்ந்து இங்கு படிக்க வைப்பதற்க்கு பயப்படுகிறார் என்று புரிந்துக் கொண்ட கேசவமூர்த்தி “வெளியில் வந்து விட்டால் பலதும் தான் இருக்கும் இதற்க்கெல்லாம் பயந்தால் வெளியிலேயே வரமுடியாது.உங்களை பார்த்தால் சொந்தமாக தொழில் செய்பவர் போல் உள்ளது.நீங்கள் சந்திக்காத பிரச்சினைகளா…?”நிறுத்தினார்.

கேசவமூர்த்தியின் பேச்சில் இருந்த உண்மையால் அவர் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார்.அவரும் இதற்க்கு தானே சாந்தியை படிக்கவே வெளியில் அனுப்பியது.இருந்தாலும் கொஞ்சம் பயமாக தான் இருந்தது.

இவர்கள் பேசுவதை எந்த குருக்கிடும் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்த பத்மினி அவர்கள் அருகில் வந்து “ தம்பி சொல்வதும் சரி தாங்க”என்று தன் கணவரிடம் கூறிய பத்மினி கேசவமூர்த்தியிடம் “எங்க சாந்தியை கொஞ்சம் பார்த்துக்கப்பா” என்று கூறினாள்.

பத்மினின் பேச்சில் கேசவமூர்த்தி அகமகிழ்ந்து போய்விட்டார்.தீனதயாளனின் தயக்கத்தை பார்த்த கேசவமூர்த்தி எங்கே சாந்தியை அழைத்து கொண்டு போய்விடுவாரோ...என்று பயந்தே போய்விட்டார்.சாந்தியை பார்த்ததுமே கேசவமூர்த்திக்கு மிகவும் பிடித்து விட்டது.அதனால் தான் அவளை கவனித்து பார்த்தது.

கேசவமூர்த்தி பத்மினியிடம் “நீங்கள் கவலை படாதீர்கள் உங்கள் மகளை நான் பத்திரமாக பார்த்து கொள்கிறேன்.” என்று கூறினார். தன் மனதுக்குள் இதே போல் திருமணம் முடிந்ததும் அவள் வீட்டில் மாப்பிள்ளையாக அவர்களிடம் கூறவேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

பத்மினியிடம் பேசியவாரே கேசவமூர்த்தி திரும்பி பார்த்தார்.அங்கு சிறு குழந்தை போல் தன் தம்பியிடம் விளையாடி கொண்டிருந்தாள்.அதனை தீனதயாளன் ஒரு வாஞ்சையோடு பார்த்திருந்ததை பார்த்த கேசவமூர்த்தி இது போல் தன் குழந்தையோடு அவள் விளையாடுவதும்.அவற்றை தான் பார்த்து ரசிப்பதுமாக கற்பனையில் ஆழ்ந்தார்.

பின் சாந்தியின் குடும்பம் மனமே இல்லாமல் விடை பெற்று சென்றது.போகும் போது பிரதாப் அவ்வளவு அடம் பிடித்தான் அவனை சமாளிப்பதுதான் பெரும்படாக இருந்தது.பின் சாந்தியின் வார்த்தைக்கு தான் கொஞ்சம் கட்டு பட்டான்.

இதனை எல்லாம் பார்த்திருந்த கேசவமூர்த்திக்கு அப்போதே ஒரு பொறமை உணர்வு ஏற்பட்டது.இது என்ன ஒரு ஆறு மாதம் கூட பிரிந்து இருக்க முடியாத …பாசம்.எப்படி இருந்தாலும் பெண் பிள்ளையை திருமணம் செய்து வேறு வீட்டுக்கு அனுப்பதானே போகிறார்கள் அப்போது என்ன செய்வார்களாம் என்று தன் மனதுக்குள் கூறிக் கொண்டான்.

பாவம் அவனுக்கு தெரியாதது சாந்தியின் இந்த ஆறு மாதம் பிரிவையே தாங்கி கொள்ள முடியவில்லை.அதனால் அவளுக்கு வீட்டோடு தான் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்பதையும்,அந்த முடிவை கேசவமூர்த்தி பத்மினியோடு பேசிக் கொண்டிருக்கும் போது தான் சாந்தியிடம் கூறியதும். அதற்கு சாந்தி அகமகிழ்ந்து போனதும்.

சாந்தியின் வீட்டார்கள் போயும் அவள் போகமல் தெருவிலேயே இருப்பதை பார்த்த கேசவமூர்த்தி “அவங்க இவ்வளவு நேரத்துக்கு வீட்டுக்கே போய் சேர்ந்து இருப்பாங்க.இங்கேயே நின்னுட்டு இருந்தா திரும்பவும் எதாவது பிரச்சினை வரப்போகுது உள்ளே போ” என்று கூறினார்.

கேசவமூர்த்தியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு எதுவும் சொல்லாமல் சாந்தி சென்றாள்.அவள் எதுவும் கூறாமல் சென்றது கேசவமூர்த்திக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.நாம் சொன்னதற்கு அவள் கோச்சீக்கிட்டாளோ…? என்று.ஆனால் அவள் தன் விடுதியின் உள் நுழையும் போது கேசவமூர்த்தியை திரும்பி பார்த்து சிரித்துக் கொண்டே மறைந்தாள்.

அதனை பார்த்த கேசவமூர்த்திக்கு சந்தோஷம் பிடி பட வில்லை.நாள் செல்ல செல்ல சாந்தி கேசவமூர்த்திக்கு மேன்மேலும் சந்தோஷத்தையே கொடுத்தாள்.ஆம் எப்போதும் கேசவமூர்த்தியை பார்த்தால் சிரிப்பது.கேசவமூர்த்தி பேசினால் பேசுவது என்று அவர்கள் உறவு முறை வளர்ந்தது.

நாளை தான் அவர்களின் கோர்ஸின் கடைசி நாள். கேசவமூர்த்திக்கு சாந்தியின் பழக்கத்தில் இருந்து அவளும் தன்னை விரும்புகிறாள் என்பதனை அறிந்துக் கொண்டார்.அதனால் இன்று தன் விருப்பத்தை தெரிவித்து விடவேண்டும் என்று கருதினார்.அதனால் மாலை பக்கத்தில் உள்ள ஒரு பூங்காவுக்கு சாந்தியை அழைத்து இருந்தார்.சாந்தியும் எந்த தயக்கமும் இல்லாமல் சரி என்று ஒத்துக் கொண்டாள்.இதோ தன் பக்கத்தில் சிவப்பு நிறசுடிதாரில் அவள் அழகு பன்மடங்காக தெரிந்தது.அதனை ஒரவிழியில் ரசித்தவாரே…. எந்த வெளிபூச்சும் இல்லாமல் “சாந்தி உன்னை பெண் கேட்டு எப்போது என் அம்மாவை அழைத்து கொண்டு வரட்டும்.”என்று நேரிடையாக கேட்டார்.

அதற்க்கு சாந்தியிடம் இருந்து ஒரு நிமிடம் வரை எந்த பதிலும் இல்லை.அந்த ஒரு நிமிடத்தில் கேசவமூர்த்தியின் ஆர்ட் பீட் கன்டமேனிக்கு எகிறியது.அவனுக்கு நிச்சயம் அவளும் தன்னை விரும்புகிறாள் என்று.பின் ஏன் இந்த மௌனம் என்று தான் புரியவில்லை.

பின் சாந்தி கேசவமூர்த்தியின் புரம் திரும்பி “நான் உங்களை தவிர வேறு யாரையும் மணக்கமாட்டேன்.எனக்கு உங்களை பிடிக்கும் என்றோ…. இல்லை விரும்புகிறேன் என்றோ… அந்த சிறு சொல்லில் உங்கள் மீதான என் விருப்பத்தை கூறயியலுமா என்று தெரியவில்லை.”என்று நிறுத்தினாள்.

சாந்தியின் பேச்சை கேட்ட கேசவமூர்த்திக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.ஒருவர் விரும்புவதோடு விரும்பபடுதல் எவ்வளவு சந்தோஷத்தையும் பெருமையும் கொடுக்கும் என்று உணர்வு பூர்வமாக உணர்ந்தான்.

“சாந்தி அப்போ என் அம்மாவை நான் எப்போ அனுப்பட்டும்.”என்ற கேசவமூர்த்தியின் கேள்விக்கு ,கேசவமூர்த்தியிடம். “உங்கள் அம்மாவுக்கு நீங்கள் ஒரு பிள்ளை தானே…”என்று சம்மந்தமே இல்லாமல் பேசிய சாந்தியை பார்த்து என்ன பிரச்சினை சாந்தி எது இருந்தாலும் நேரிடையாக சொல்.

“எனக்கு வீட்டோடு தான் மாப்பிள்ளை பார்க்கிறார்கள்.”என்று கூறி கேசவமூர்த்தியைய் பார்த்தாள்.கேசவமூர்த்தி எதுவும் பேசாமல் சாந்தியே பேசட்டும் என்று அமைதி காத்தார்.

“நான் அவர்களின் சொந்த மகள் கிடையாது.அவர்களின் தத்து மகள் தான்.ஆனால் இந்த விஷயம் எனக்கு தெரியும் என்று அவர்களுக்கு தெரியாது.என்னுடைய பதினைந்தாவது பிறந்த நாளும்,என் தம்பி பிரதாப்பின் ஐந்தாவது பிறந்த நாளும் அன்று தான்.என் பிறந்த நாள் என்பது அவர்களுக்கு நான் எப்போது கிடைத்தேனோ… அன்று தான் கொண்டாடுகிறார்கள் என்று எனக்கு பின்பு தான் தெரியவந்தது. என் பிறந்த நாளுக்கு என் அப்பா,எனக்கு ஒரு வைரநெக்லஸ் பரிசளித்தார்.என் தம்பிக்கு ஒரு விளையாட்டு காரை பரிசளித்தார்.அப்போது என் அத்தை அப்பாவின் அறையில் நான் பாத்ரூமில் இருப்பது தெரியாமல் எங்கிருந்தோ… வந்த தத்து மகளுக்கு வைரநெக்லஸ் சொந்த மகனுக்கு பிளாஸ்ட்டிக் கார் என்று என் அப்பாவிடம் சண்டை இட்டுக் கொண்டிருந்தார்.அதற்க்கு என் அப்பா அத்தையிடம் சாந்திக்கு இந்த விஷயம் தெரிந்தது நான் சும்மா இருக்க மாட்டேன்.பிறகு அக்கா,தம்பி என்ற உறவே அறந்து போயிடும் என்று சத்தம் இட்டார்.அதற்க்கு பிறகு அவர்கள் அறையை விட்டு சென்றவுடன் தான் நான் வெளியில் வந்தேன். முதலில் எனக்கு மிக வருத்தமாக இருந்தது.பின் தான் யோசித்தேன் அவர்களுக்கு எனக்கு இந்த விஷயம் தெரியும் என்று தெரிந்தாள் கவலை படுவார்கள் அதனால் எனக்கு தெரியும் என்பதை மறைத்து விட்டேன்.”என்று தன் பேச்சை முடித்தாள்.

கேசவமூர்த்தி சாந்தியிடம் “நீ தத்து மகளுக்கும் வீட்டோடு மாப்பிளை ஆவாதற்க்கும் என்ன சம்பந்தம்”என்று கேட்டதற்க்கு “அவர்கள் விருப்பம் தான் என் விருப்பமும் என் அம்மா,அப்பா,கவலை படுவதை நான் விரும்ப மாட்டேன். மேலும் என் தம்பி என்னை பிரிந்து இருக்க மாட்டான்.நீங்கள் வீட்டோடு மாப்பிளையாக வருவதாக இருந்தாள் உங்கள் அம்மாவை அனுப்புங்கள்.”என்று இழுத்தவாறு நிறுத்தினாள்.

அதற்க்கு கேசவமூர்த்தி சாந்தியிடம் “இல்லை என்றால் நீ வீட்டில் பார்க்கும் வீட்டோடு மாப்பிள்ளையை…”என்ற கேசவமூர்த்தியின் வார்த்தையை முடிக்கவிடவில்லை.

“என்னை பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறிர்கள்.சட்டென்று என் மனதை மாற்றிக் கொள்வேன் என்றா...?உங்களை தவிர வேறு ஒருவரை கண்டிப்பாக நான் மனதால் கூட நினைக்க மாட்டேன்.பின் எப்படி திருமணம் செய்துக் கொள்வேன்.நான் இப்படியே எங்கள் தொழிலை பார்த்துக் கொண்டும் என் தம்பியை வளர்ப்பதிலும் இருந்து விடுவேன்.”என்று ஆவேசமாக கூறினாள்.

கேசவமூர்த்தி எதையோ அமைதியாக யோசித்தார் பின் “நான் நாளை மறுநாளே...என் அம்மாவை அனுப்புகிறேன்.என் நினைவில் நீ திருமணமனம் செய்யாமல் எல்லாம் இருக்க வேண்டாம்”என்று கூறியதற்க்கு….

“உங்கள் அம்மா ஒத்துக் கொள்வார்களா…..நீங்கள் அவர்களுக்கு ஒரே மகன் ஆயிற்றே….அதுவும் இல்லாமல் உங்கள் தந்தை வேறு சமீபத்தில் தான் இறந்ததாக சொன்னிர்கள்.” என்று ஏகப்பட்ட கேள்வியை படபடப்பாக கேட்டாள்.

அதற்க்கு நிதானமாக “அதை பற்றி நீ கவலை பாடதே நீ உன் அம்மா,அப்பா,தம்பி பிரியாமல் இருக்கிறாய் இல்லையா….எனக்கு அது தான் வேண்டும்.” என்று அழுத்தி கூறினார்.

இதை குதர்கமாக எடுத்துக் கொள்ளதா சாந்தி அகமகிழ்ந்து போனால் தனக்காக தானே தன் அம்மாவையும் விட்டு வீட்டோடு மாப்பிள்ளையாய் வரசம்மதித்தார் என்று அவருக்கு தன் மேல் எவ்வளவு காதல் என்ற என்னத்தோடு பக்கத்தில் இருக்கும் கேசவமூர்த்தியை கன்னத்தில் முத்தம் இட்டு ஒடி போனாள்.

கேசவமூர்த்திக்கு தான் காதலில் வெற்றி பெற்றோம்.ஆனால் தன்மானத்தில் படுதோல்வி தழுவினோம் என்றே கருதினான்.சாந்தியின் பதிலை திரும்பவும் யோசித்து பார்த்தான்.அவள் தன்னை பிடிக்கவில்லை என்று கூறியிருந்தாள் கூட இந்த அளவுக்கு வலித்திருக்காது என்றே….கருதினான்.

சாந்தியின் இந்த பதிலில் தன் மனம் மரண அடிவாங்கியதாகவே கருதினான்.ஆனாலும் அவளை விட எண்ணவில்லை.அந்த அளவுக்கு அவளை விரும்பினான்.தன் மனதுக்குள் ஒரு புது சபதமே….மேற்க்கொண்டான்.இன்னும் எண்ணி மூன்றே….மாதத்தில் அவளுக்கு அனைத்துக்கும் நானாகவே இருப்பேன்.நானாக மட்டுமே இருப்பேன் என்று.

பின் அதிவேகமாக காரியாம் அனைத்தும் நடந்து முடிந்தது.கேசவமூர்த்தியை தீனதயாளன் முன்பே பார்த்ததில் இருந்தே அவர் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டு விட்டது.தன் மகளுக்காக மூன்று பேர் இருக்கிறார்களே….என்று கூட யோசிக்காமல் அவர்களிடம் சண்டையிட்டது வேறு அவர் மனதில் பதிந்து விட்டது.அதனால் கேசவமூர்த்தி தன் அன்னையுடன் வந்து தன் மகளை கேட்டதும் தன் மகளை தான் பார்த்தார்.அவள் முகத்தில் தெரிந்த விருப்பத்தை பார்த்த தீனதயாளன் சிறிதும் யோசிக்காமல் தன் சம்மதத்தை தெரிவித்தார்.

பின் அடுத்த மூன்று வாரத்தில் திருமணம் கோலகாலமாக நடந்தது.அப்போது சாந்தியின் முகத்தில் பார்த்த மகிழ்ச்சியில் குடும்பமே மகிழ்ந்து போயினர்.பிரதாப் தன் அக்காவை விட்டு அங்கு இங்கு நகரவில்லை.தன் அக்காவின் மடியிலேயே தான் இருந்தான்.

தன் கடந்த காலத்தில் இருந்து நிகழ் காலத்திற்கு வந்த பாட்டி பத்மினி தன் பேத்தியி கை பிடித்து நாங்கள் சந்தோஷமாக இருந்தது அன்று தான் ராசாத்தி.திருமணத்திற்கு பிறகு மூன்று மாதம் மட்டும் தான் எங்கள் பெண் எங்களோடு இருந்தாள்.

அந்த மூன்று மாதத்தில் கூட உன் அப்பா எங்களிடம் சரியாக பேசவில்லை.வேலை முடிந்து வந்ததும் நேராக தன் ரூமுக்கு சென்று விடுவார்.சாப்பாடு கூட தன் அறையிலேயே முடித்து விடுவார்.

ஒரு நாள் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது உன் அம்மா மயங்கி வீழ்ந்தாள்.உன் தாத்தா தான் டாக்டரை அழைத்து பார்த்தார். அப்போது சாந்தி கர்ப்பமாக இருப்பதாக கூறியதும். எவ்வளவு மகிழ்ந்தோம் என்று சொல்வதற்க்கு வார்த்தைகள் இல்லை.ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் கூட நீடிக்கவில்லை.

இந்த விஷயத்தை போனில் உன் அம்மா,அப்பாவிடம் தெரியபடுத்தினாள்.கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் உன் அப்பா வந்து விட்டார்.அவர் வந்ததும் அவர்களுக்கு தனிமை கொடுத்து நாங்கள் எங்கள் அறைக்கு சென்று விட்டோம்.

சிறிது நேரத்திற்க்கெல்லாம் ஹாலில் கேட்ட சத்தத்தில் நாங்கள் வந்து பார்க்கும் போது பிரதாப் கீழே விழுந்து கிடந்தான்.உன் அப்பா கோவத்துடன் சாந்தியிடம் நீ இப்படி இருக்கும் போது அவன் உன் வயிற்றை இப்படி கட்டி பிடிக்கிறானே நம் குழந்தைக்கு எதுவும் ஆகிவிட்டால்.என்று சத்தமிட்டு கொண்டு இருந்தார்.

சின்ன வயதில் இருந்தே இது ஒரு பழக்கம்.சாந்தியும் சிறு வயதில் இப்படி தான் சந்தோஷத்தில் வயிற்றை தான் கட்டி பிடிப்பாள்.அவள் வளர்ப்பு தானே அவன் தம்பியும் அதே மாதிரி தானே இருப்பான். பின் அதுவே வினையாகவும் போனது.

பின் அடுத்த நாளே சாந்தி மாப்பிள்ளை எங்களிடம் ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டனர்.எங்கு சென்றனர் என்று கூட எங்களுக்கு தெரியாது.முதலில் உன் தாத்தா இதை ஒரு பெரிய விஷயமாக கருதவில்லை.கோவத்தில் தன் அம்மாவிடம் தன் மனைவியை அழைத்துக் கொண்டு சென்று இருப்பார் என்றே...கருதினார்.

பின் மூன்று நாளுக்கு பிறகும் அவர்கள் வரவும் இல்லை ஒரு போனும் இல்லை என்றவுடன்…. நான் , உன் தாத்தா, பிரதாப் மூன்று பேரும் உன் பாட்டி வீட்டுக்கு சென்றோம்.அங்கு சென்றவுடன் தான் எங்கள் தலையில் இடியே….விழுந்தது.

உன் பாட்டி அங்கு இல்லை மூன்று நாளுக்கு முன்பே அவர் மகன் கேசவமூர்த்தி தன் மனைவியுடன் வந்து காலி செய்து அழைத்து சென்று விட்டதாக பக்கத்தில் இருப்பவர்கள் கூறினார்.பின் அது அவர்கள் சொந்த வீடு தானே என்று விசாரித்ததுக்கு ...அதனை அவர் விற்று விட்டதும்.மேலும் அவர்களுக்கு சொந்தமான ஒட்டலையும் விற்று விட்டார் என்று தெரிய வந்தது.

இதில் கொடுமை என்ன வென்றால் உன் அப்பா அந்த வீட்டையும் ஒட்டலையும் விலை பேசி அட்னான்ஸ் வாங்கி மூன்று மாதம் ஆகிவிட்டது என்று அவர்கள் கூறி கேட்டவுடன் தான் எனக்கு விளங்கியது.நம் மகளை முழுவதும் இழந்து விட்டோம் என்று.

பின் பிரதாப்பை சமாளிக்க எங்களால் முடியவில்லை.பின் அவனே மெல்ல மெல்ல மாறினான்.ஆனால் அவன் மாற்றம் தான் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.அனைவருடமும் ஒரு ஒதுக்கத்தையே…கடைபிடித்தான்.

அசோக்கிடம் மட்டும் கொஞ்சம் தாராளமாக பேசுவான்.தன் பேத்தி கைய் பிடித்து “ராசாத்தி அவன் இப்போது தான் அவன் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கிறேன்.அவன் தவறு செய்திருந்தாள்.அவனை மன்னித்து விடுமா…என்று தன் பேத்தியின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

பாட்டியின் பேச்சை கேட்ட மினி தன் தந்தையா …..இப்படி என்று அதற்க்கு மேல் சிந்திக்க கூட முடியவில்லை.மினி தன் பாட்டியிடம் “கவலை படாதிர்கள் பாட்டி நான் ஒன்றும் உங்கள் பையனை பண்ணமாட்டேன் “என்று உறுதி அளித்து தன் பாட்டியிடம் ஒய்வு எடுக்கும் படி சொல்லி விட்டு யோசனையுடன் அறையை விட்டு வெளியேறினாள்.

ஆனால் மினியே இந்த விஷயத்தில் பிரதாப்பை மன்னித்தாலும்… வெளியில் சென்ற பிரதாப்புக்கு சனி உச்ச கட்டத்தில் ஆட்சி செய்கிறது என்பதனை மாடல் மோனாவின் மூலம் தெரியவந்தது.
 
Top