Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நெருங்கி வா....7

  • Thread Author
அத்தியாயம்----7
கேசவமூர்த்தியின் பேச்சை கேட்ட சந்தானமும், அசோக்கும் அமைதியாக இருந்தார்கள் என்றால்,பிரதாப் தன் மனதுக்குள் போராடி கொண்டிருந்தான். தன் மகள் மட்டும் தன்னை விட்டு பிரிய கூடாது.ஆனால் மற்றவரின் மகளை பிரித்ததும் இல்லாமல் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியப்படுத்த வில்லை.கடைசியில் அவர் இறந்ததும் தெரிவிக்க வில்லை.என்று தன் மனது கொந்தளிப்பை அடக்கி கொண்டிருந்தான்.

பின் பிரதாப்பே கேசவமூர்த்தியை பார்த்து “சரி உங்கள் கன்டிசனுக்கு நான் ஒத்துக் கொண்டாள் ?” என்று கேள்வி எழுப்பினான்.பிரதாப்பின் இந்த பதிலால் மற்ற மூன்று பேருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது என்றால், சகுந்தலா அம்மாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சகுந்தலா அம்மா யோசனையுடன் பிரதாப்பின் முகத்தையே பார்த்திருந்தார்.இவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேன் சிறிதும் யோசிக்காமல் எப்படி உடனே வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க ஒத்துக் கொள்ள முடியும். அதுவும் தன் பெற்றோர்களிடம் கூட கலந்து பேசாமல் தன் இஷ்டப்படி முடிவு எடுப்பது என்பது அவ்வளவு நல்லதிற்கு இல்லையே….என்று தன் சந்தேகத்தை கண்ணில் காண்பித்தார் என்றால் …

கேசவமூர்த்தி அதை தன் வாய் மொழியால் கூறினார். “பிரதாப் சார் எப்படி நீங்கள் டெல்லியில் இருக்கும் பிஸ்னஸை விட்டு இங்கு செட்டில் ஆக முடியும். அதுவும் இல்லாமல் இந்த முடிவை பற்றி நீங்கள் உங்கள் பெற்றோரிடமும் கேட்க வில்லை.”என்று கேள்வி எழுப்பினார்.

பிரதாப் மிக பொருமையாக அசோக்கே இது நம்ம பிரதாப் தானா…. என்று சிந்திக்கும் அளவுக்கு மிகவும் நிதானமாக வார்த்தையை கோர்த்தான். ஏன் என்றால் சகுந்தலா அம்மாவின் சந்தேகத்தை அவரின் கண்களே காட்டி கொடுத்து விட்டது. முதலில் அவரின் சந்தேகத்தை தீர்க்க வேண்டும். பின்பு கேசவமூர்தியின் கேள்விக்கு அவர் ஏற்றுக் கொள்ளும் விதமாக பதில் அளிக்க வேண்டும்.

அதனால் முதலில் சகுந்தாலா அம்மாவிடம்” நான் உடனே உங்கள் நிபந்தனைக்கு சரி என்று நான் சொல்வதால் உங்களுக்கு என் மேல் சந்தேகமாக கூட இருக்கலாம். “ இடையில் ஏதோ பேச வந்த கேசவமூர்த்தியை தடுத்து “நீங்கள் சந்தேகம் பட்டாலும் அதில் தப்பும் இல்லை ஏன் என்றால் நீங்கள் பெண்ணை பெற்றவர் நாளும் யோசிப்பதில் தவறு ஏதும் இல்லை.

முதலில் உங்கள் நிபந்தனைக்கு நான் ஒத்துக் கொண்டதிற்கு முக்கிய காரணம் உங்கள் மகளை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அடுத்து சென்னையிலும் நான் என் தொழிலை தொடங்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். அதனால் தான் சந்தானம் ஒட்டலை வாங்கினேன். இன்னும் ஒரு ஒட்டலையும் விலை பேசிக் கொண்டிருக்கிறேன்.இன்னும் ஒரு வாரத்தில் அதுவும் முடிந்திடும்.”என்று கூறி முடித்தான்.

பிரதாப் பேசியதை கேட்ட கேசவமூர்த்தி “எந்த ஒட்டலை விலை பேசிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று தன் சந்தேகத்தை கேட்டதற்க்கு…. பிரதாப் ஒரு ஒட்டலின் பெயர் சொல்லும் போதே தன் நண்பன் அசோக்கை பார்த்தான். பிரதாப்பின் கண் அசைவை புரிந்துக் கொண்ட அசோக் தன் செல்லில் பிரதாப் சொன்ன ஒட்டலின் ஒனரும் தங்களுடன் படித்த நண்பனுமான வாசுவுக்கு யாரும் அறியாமல் மெசஜை தட்டினான்.

பிரதாப் பேசியவுடன் கேசவமூர்த்தி வாஷ்ரூமுக்கு சென்று வருகிறேன் என்று பிரதாப் எதிர்பார்த்தது போல் சொல்லி விட்டு சென்றார்.பின் திரும்பி வரும் போது அவர் முகத்தில் திருப்தியை பார்த்தவுடன் பிரதாப் தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டே. திட்டம் போட்டு வீழ்த்த உனக்கு மட்டும் தான் தெரியுமா? என்று நினைத்துக் கொண்டான்.

கேசவமூர்த்தி மனதிலோ…. பிரதாப் சொல்வது உண்மையே…. அதை பிரதாப் விலை பேசியதாக சொன்ன ஒட்டல் முதலாளியின் வாயிலாக சற்று முன் தான் வாஷ் ரூமுக்கு செல்வதாக சொல்லி போன் மூலம் உறுதி படுத்தியத்திக் கொண்டார்.

பின் கேசவமூர்த்தி பிரதாப்பிடம்,”இவ்வளவு பெரிய முடிவை உங்கள் பொற்றோரிடம் கேட்காமல் நீங்களே எப்படி சொல்வீர்கள்….”என்று கேட்டதற்க்கு “நான் முதலில் சொன்னது போல் சென்னையில் இந்த ஒட்டல் பிஸினஸோடு, டெல்லியில் உள்ளது போல் டெக்ஸ்டைல்ஸ்,பில்டிங் கன்செக்க்ஷன்,அடிடெஸ்மன்ட் ஏஜென்ஸி தொடங்க வேண்டும் என்று முதலிலேயே நான் முடிவு செய்து விட்டேன். அது என் பொற்றோருக்கும் தெரியும்.”என்று கூறி கேசவமூர்த்தியை தான் சொல்வதை எல்லாம் நம்புகிறார்றா…. என்று பார்த்தான்

பாவம் பிரதாப் விரித்த வலையில் சரியாக விழுந்தார்…என்பதை கேசவமூர்த்தி தன் கேள்வியின் மூலம் நிருபித்தார்.”பெண்ணை உங்கள் பெற்றோர் பார்க்க வேண்டாமா….?”என்றதற்கு பிரதாப்”நீங்கள் முதலில் சொன்னது போல் என் வயது இருபத்தி ஒன்பது முடிந்து விட்டது. என் பொற்றோர்கள் மூன்று வருடமாகவே திருமணம் செய்து கொள்ள பெண் பார்த்துக் கொண்டுத்தான் இருக்கிறார்கள்.எனக்கு தான் ஒரு பெண்ணையும் பிடிக்க வில்லை. அதனால் அம்மா நீயாக எந்த பெண்னை காண்பித்தாலும் எங்களுக்கு சரியே… நாங்கள் வந்து ஆசிர்வாதம் செய்கிறோம்,என்று முதலிலேயே சொல்லி விட்டார்கள்” என்று மெய்யும்,பொய்யும், கலந்து கூறினான்.

பிரதாப் சொல்வதை கேட்ட சந்தானம்…”பிறகு என்ன கேசவா….நீ சொல்வதற்க்கு எல்லாம் தான் பிரதாப் விளக்கம் கொடுத்து விட்டார் வேறு என்ன”?என்று கேட்டதற்கு சகுந்தலா அம்மா “வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதை பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே?”என்றதற்கு…

அசோக் தன் மனதுக்குள் இருந்து….இருந்து… இவன் இப்போது தான் திருமணம் செய்யும் முடிவையே எடுத்து இருக்கிறான். இவர்கள் கேட்கும் கேள்விகளில் அந்த எண்ணத்தையே கை விட்டுட்டுவானோ… நமக்கு இனி காலம் முழுவதும் இவன் பின்னாடி அலைவது தான் விதியோ என்று அவன் கவலையில் மூழ்கினான்.

ஆனால் பிரதாப் அதற்கும் அசராமல் நான் எவ்வளவு அடித்தாலும் தாங்குவேன் என்பது போல் சகுந்தாலா அம்மாவை பார்த்து “நான் சென்னையில் பிஸ்னஸ் தொடங்க போகிறேன் என்று முடிவு ஆனாதும்… முதலிலேயே இங்கு நான் ஒரு பங்களாவை வாங்கி விட்டேன்.ஏன் என்றால் சென்னையில் தான் மாதத்தில் இருவது நாள் தங்க வேண்டியிருக்கும் என்ற காரணத்திற்காக, ஆனால் இப்போது நான் என் பங்களாவில் தங்குவதற்கு பதிலாக உங்களுடன் இருக்க போகிறேன். அப்படியே உங்கள் பிஸினஸையும் நான் பார்த்துக் கொள்வேன் உங்களுடையதும் ஒட்டல் பிஸ்னஸ் என்பதால எனக்கும் ஈஸியாக தான் இருக்கும்.மேலும் உங்கள் மகளும் உங்களை விட்டு பிரிய தேவையில்லை.” என்று கூறினான்.

அசோக் கேசவமூர்த்தியிடம் அவர் மேலும் ஏதும் கேட்கும் முன்பே ”டெல்லியில் உள்ள அவன் பிஸினஸை நான் பார்த்து கொள்வேன்.எனக்கு அது பழக்கமே ஏன் என்றால் முன்பே அவன் பாதி நாள் வெளி நாடுகளுக்கு தான் பறந்து கொண்டு இருப்பான். அப்போது எல்லாம் நான் தான் பார்த்து கொள்வேன்”.என்று கூறி பிரதாப்பின் விளக்கம் சொல்லும் வேலையை குறைத்தான்.

இவ்வளவு விளக்கம் அளித்த பின்பும் ஏனோ சகுந்தாலா அம்மாவுக்கு மனதில் ஏதோ நெரிடியது. அது இன்னதுதான் என்று சொல்ல முடிய வில்லை. ஆனால் ஏதோ தவறு உள்ளது போல் மனதுக்கு பட்டது. அதனால் பிரதாப்பிடம் “நாங்கள் நாளை எங்கள் பதிலை சொல்கிறோம்.”என்று கூறி முடித்தார்.

பிரதாப்புக்கு சகுந்தலா அம்மாவின் இந்த பதில் ஏமாற்றம் அளித்தது.தன் வாழ்நாளில் யாரிடமும் இது போல் பணிந்து அவன் விளக்கம் அளித்தது கிடையாது.இவ்வளவு ஏன் அவன் தன் பெற்றோரிடம் கூட அவன் இவ்வளவு பணிந்தது கிடையாது. குறைந்த பட்சம் பத்மினியிடம் கேட்க வேண்டும் என்று சொல்லியிருந்தாவது, அவனுக்கு மனது ஆறியிருக்கும் இவர்களின் இந்த பதில் அவர்கள் தன்னை அவமதித்து விட்டதாகவே கருதினான்.

பின் எழுந்தவாறு சரி நீங்கள் உங்கள் பெண்ணிடம் கேட்டு பொருமையாகவே பதில் சொல்லுங்கள் என்று அசோக்கிடம் கண் அசைவில் எழும்மாறு கூறினான். பிரதாப்பின் எரிந்த மனதில் எண்ணையை ஊற்றுவது போல் கேசவமூர்த்தி”என் பெண்ணிடம் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.நான் சொல்லும் முடிவே அவளுடையதும் என்று கூறினார்.

பின் சகுந்தலா அம்மா மிகவும் நேரம் சென்று விட்டது. சாப்பிட்டு தான் செல்ல வேண்டும் என்ற அழைப்பை நிராகரித்துக் கொண்டே இன்னும் எழாமல் அமர்ந்திருக்கும் அசோக்கிடம் கண்டன பார்வையை செலுத்தி கொண்டிருக்கும் போது கேட்டை திறந்துக் கொண்டு பத்மினி ஸ்கூட்டியை தான் எப்போதும் நிறுத்தும் இடத்தில் பிரேக் போட்டு பின்னால் அமர்ந்து இருக்கும் ஷாலினியிடம் “இப்போதாவது கண்ணை திற” என்று அவளை அதட்டினாள்.

ஷாலினியுடன் வந்ததால் கார்டனில் யார்?யார்? இருக்கிறார்கள் என்று பத்மினி கவனிக்க வில்லை. ஆனால் பிரதாப்புக்கு இவ்வளவு டென்ஷனிலும் பத்மினி எங்கே இன்னுமா வீட்டுக்கு வரவில்லை? என்ற கேள்வியும் இல்லை முதலிலேயே வந்து விட்டலா?என்று தன் மனதுக்குள்ளாகவே பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருந்தான்.

அதனால் பத்மினியின் ஸ்கூட்டி சத்தம் கேட்டதும் ஆவாலுடன் அவளையே பார்த்திருந்தான்.ஆனால் பாவம் பத்மினி தான் கவனிக்காமல் ஷாலினியுடன் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தால். எப்போதும் பத்னிமி மிகவும் வேகமாக தான் வண்டியை ஒட்டுவாள்.அதனால் எப்போதும் ஷாலினி பின்னால் அமர்ந்தால் கண்ணை மூடிக் கொண்டுத்தான் அமர்வாள். அதனால் தான் வண்டியை நிறுத்தியதும் வேறு எங்கும் பாராமல் ஷாலினியுடன் கதை அளந்துக் கொண்டிருந்தாள்.

இதை அறியாத பிரதாப் இப்போதும் அவள் தன்னை பாராதது தன்னை அவமதித்து விட்டதாகவே கருதினான். வண்டி சத்தம் கேட்டதும் பிரதாப்புடன் அனைவரும் பத்மினியையும், ஷாலியையும் பார்த்ததால் பேச்சி தடை பட்டு அனைவரின் பார்வையும் அங்கு சென்றது.

பார்த்தவர்களில் ஒவ்வொரு மனநிலையும் வெவ்வேறு விதமாக இருந்தது. பிரதாப்புக்கு தன்னை அவமதித்ததாக கருதினான் என்றால் கேசவமூர்த்திக்கு தன் பெண்ணும் பிரதாப்பை பார்த்தால் அவள் கருத்தையும் கேட்போம் என்று நினைத்து இருந்தார். ஏன் என்றால் அன்று ஒட்டலில் நம் பெண் பிரதாப்பை நன்கு பார்த்திருக்க மாட்டாள் என்றே கருதினார்.அனைத்து தகப்பானரும் நினைப்பது போலவே.

பாவம் அவருக்கு எங்கே? தெரியபோகுது பிரதாப்பை பார்த்து பத்மினி சலனம் பட்டதும், பின் அது தவறு என்று ஒதுக்கினாலும், எப்போதும் படுத்தவுடன் உறங்கிவிடும் பத்மினியின் உறக்கம் நேற்று இரவு பிரதாப்பின் நினைவில் கெட்டதும்.

சகுந்தலா அம்மாவோ, இந்த இடம் வேண்டாம் என்ற முடிவுக்கே வந்து விட்டுருந்தார்.அவர் மனதுக்குள் பதிந்து விட்டது இது தான். தன் மகன் இருபத்தியொரு வருடத்திற்கு முன் எப்படி அவன் மாமனாரிடம் பேசினானோ அதே மாதிரியே பிரதாப்பின் பேச்சும் இருப்பதே அதற்கு காரணம்.சரித்திரம் திரும்புமோ?

இன்று அவகாசம் கேட்டதே தன் பேத்தியிடம் இந்த இடம் வேண்டாம் என்று சொல்லி திருமணத்தை தடுக்க நினைத்திருந்தார்.தன் மகனிடமே சொல்லி இருக்கலாம், ஆனால் அது என்னவோ தெரியவில்லை கேசவமூர்த்தியின் திருமணத்திலிருந்தே அவர் தன் தாயின் பேச்சை கேட்பதை நிறுத்தியிருந்தார்.இப்போது அனைவரிடம் முன்பும் பத்மினியிடம் சம்மதம் கேட்டால் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதே, அதற்கு ஏற்றார் போல் சந்தானமும் பத்மினியே வந்து விட்டால் அவளிடமே கேட்டு விட்டே செல்லலாம் என்று கூறினார்.

இங்கு அசோக்கின் நிலமையோ முற்றிலும் வேறு மாதிரியிருந்தது. அவன் எங்கே? பத்மினியை பார்த்தான்.பத்மினியின் பக்கத்தில் ஷாலினி கண்மூடி அமர்ந்து வந்ததையும், பின் கண்ணை திறந்து பத்மினியை முறைத்ததையும் பார்த்தே…. அந்த முறைத்த கண்ணுக்குள்ளேயே முற்றிலும் வீழ்ந்து விட்டான்.

இவர்களின் அனைவரின் மனநிலையையும் எதுவும் அறியாமல் ஷாலினியுடன் சிரித்து பேசிக்கொண்டே கார்டனில் தன் பார்வை சென்ற போது அப்படியே பிரம்மை பிடித்தது போல் நின்று விட்டாள். பின் என்ன?இன்று காலை எழுந்தவுடன் இனிமேல் யாரை நினைக்கவே கூடாது என்று முடிவு செய்து தன் மனநிலையை மாற்றுவதற்கு மாலை காலேஜ் முடிந்தவுடன் வீட்டுக்கு வராமல் ஷாலினியுடன் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்தால் அங்கும் பிரதாப்பை பார்த்தால் பாவம் அவள் தான் என்ன செய்வாள்.?

பத்மினி வராமல் அங்கேயே இருப்பதை பார்த்த கேசவமூர்த்தி “வாம்மா பத்தூ” என்று அழைத்ததும் தான் தன் நிலை அடைந்த பத்மினி ஷாலினியையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றாள்.

ஷாலினியோ பிரதாப்பை பார்த்ததும் பத்மினியின் கையை விட்டு விட்டு அவளுக்கு முன் அங்கு சென்றாள்.எப்போதும் பத்மினி ஷாலினியை பார்த்து எதற்கும் கோபம் கொண்டது இல்லை. ஆனால் ஷாலினியின் இந்த நடவடிக்கையை பார்த்து அவளுக்கு அவ்வளவு எரிச்சலாக இருந்தது.

பின் தன் எரிச்சலை மறைத்துக் கொண்டே தன் தந்தையின் அருகில் போய் நின்றாள். சந்தானத்திடம், எப்போது அங்கிள் வந்தீர்கள் என்று நலம் விசாரித்தாவாரே பிரதாப்புக்கும்,அசோக்குக்கும் சேர்த்து தலை அசைத்து தன் விசாரிப்பை குறைத்து, பிரதாப்பின் வயித்தெரிச்சலை கூட்டினாள்.

பிரதாப்பின் மனதுக்குள் எல்லாவற்றுக்கும் சேர்த்து வைக்கிறேன் ஆப்பூ உனக்கும், உன் தந்தைக்கும் என்று மனதில் நினைத்தக் கொண்டான்.அதற்குள் சகுந்தலா அம்மா பத்மினியை பார்த்து அவர்கள் வந்து ரொம்ப நேரம் ஆகிவிட்டது.சாப்பிட ஏதாவது கொண்டு வா என்று பத்மினியை அவ்விடத்தை விட்டு அனுப்ப நினைத்தார்.

ஆனால் அதற்குள் சந்தானம் கேசவமூர்த்தியிடம்,”உன் மகளிடம் கேட்டு நல்ல முடிவா சொன்னால் ஸ்வீட்டோடு சாப்பிடலாம்” என்று கூறினார். ஏன் என்றால் பிரதாப்பின் முகத்தை பார்த்தே அவனின் மனநிலையை அறிந்துக் கொண்டார். மேலும் பிரதாப் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் பத்மினி இன்னும் சிறிது நேரம் இருந்தால் கண்டிப்பாக பிரதாப்பை பிடித்து விடும் என்று கருதியே அவ்வாறு கூறினார்.

சந்தானத்தின் இந்த பேச்சால் சகுந்தலா அம்மா எதுவும் செய்ய இயலாமல் போய்விட்டது என்றால் பத்மினிக்கு ஒன்னும் விளங்கவில்லை என்ன நல்ல விஷயம் என்று யோசித்தாள். அவளின் குழப்பமான முகத்தை பார்த்த கேசவமூர்த்தியும் என்ன நினைத்தாரோ சட்டென்று மகளை தன் அருகில் அமர்த்திக் கொண்டார்.

பத்மினியும் தன் அப்பா அருகில் அவர் முகம் பார்க்குமாறு அமர்ந்துக் கொண்டாள். பின் சிறுது தொண்டை கணைப்புக்கு பிறகு மிக வெளிப்படையாகவே தன் மகளிடம் “பத்தூ பிரதாப் உன்னை பெண் கேட்டு வந்து இருக்கிறார் நீ என்னம்மா சொல்றே?என்ற தந்தையின் கேள்வியால் கண்ணை கூட சிமிட்ட முடியாமல் சிலையாக அமர்ந்து விட்டாள்.

அவளுக்கு தன் செவி திறனிலேயே சந்தேகம் ஏற்பட்டு விட்டது. அவள் சிறிதும் யோசித்து கூட பார்க்க வில்லை தன்னை பெண் கேட்டு வந்து இருப்பார்கள் என்று.காலையில் இருந்து ஏன் நேற்று பிரதாப்பை பார்த்தில் இருந்தே அவளுக்குள் ஏனோ இனம் புரியாத ஒரு எண்ணம்.அவற்றிற்கு என்ன பெயர் இடுவது என்று கூட தெரிய வில்லை.ஆனாலும் தன் மனதுக்குள்ளாகவே இது நமக்கு சரிப்பட்டு வராது என்று ஆயிரம் முறை சொல்லிக் கொண்டாலும் ஆயிரத்து ஒன்றாம் முறையாக அவன் நினைவே.

அப்படி இருக்கும் போது அவர்களே வந்து அதுவும் நேற்று தான் பார்த்தார்.இன்று தன்னை பெண் கேட்டது அவளுக்கு அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது.பாதிப்பு அவருக்கும் இருக்கிறது அல்லவா?ஆனால் நேற்று என்னை அவர் சரியாக கூட பார்க்க வில்லையே…..என்று யோசனையில் நாமும் அவனை நேரில் பார்க்காதது போல் இருந்து மறைந்து திருட்டு தனமகா தான் பார்த்தோம் என்றதை மறந்து விட்டாள்.

இவள் இவ்வாறு யோசனையில் இருக்கும் போது தந்தை பொருமையாக இருப்பார். ஆனால் ஏற்கனவே கடுப்பில் இருக்கும் பிரதாப்பின் மன நிலை என்னவாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள் ?என்னை ஓகே பண்ண இவளுக்கு இவ்வலவு யோசனையா கொஞ்சம் அழகா இருக்கா அவ்வளவு தான் ஆனால் இவ்வளவு சீன் போடுற அளவுக்கு வொர்த்து இல்லை என்று அவன் மனதில் கண்டபடி திட்டிக் கொண்டிருந்தாலும்….

அவ்வளவு வொர்த்து இல்லை என்று நினைப்பவளை தான் அவள் தன்னை ஓகே சொல்ல வேண்டும் என்று எப்போது வேண்டாத கடவுளிடம் அர்ஜெண்டாக ஒரு அப்ளிகேஷனை வைத்தான்.

இவ்வளவு நேரம் இருந்த மௌனத்தை கலைப்பது போல் சந்தானம் “என்னம்மா உன் முடிவு என்ன தைரியமாக சொல் என்றதுடன், உன் தந்தை சொன்ன எல்லா கண்டீஷனுக்கும் பிரதாப் ஓகே சொல்லி விட்டார்”. என்பதை சேர்த்தே சொன்னார்.

பத்மினி முதலில் சந்தோஷம் பட்டாலும் தன் தந்தை தனக்கு வீட்டோடு தானே மாப்பிள்ளை பார்ப்பதாக கூறினார்.ஆனால் இவரை பார்த்தால் வசதியாக இருப்பது போல் இருக்கிறார். வசதி போல் என்ன வசதி உடையவராக தான் இருக்க வேண்டும்.இல்லை என்றால் ஒரு ஓட்டலை விலை பேச முடியுமா? இந்த யோசனையுடன் தான் அவர்கள் கேட்டதுக்கு பதில் சொல்ல இயலாமல் தன் தந்தை முகத்தையையே பார்த்திருந்தாள்.

ஆனால் சந்தானம் அங்கிள் தன் தந்தை சொன்ன கண்டீஷனுக்கு ஒத்துக் கொண்டார் என்று கூறுயவுடன்...அவள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் அது வெளிப்படையாக தெரிந்தது.ஆனால் இதில் என்ன சோதனை என்றால்? அவள் தன் தந்தையை பார்த்தவாறு இருந்ததால்…...கேசவமூர்த்தி மட்டுமே தன் மகளின் முகம் தெரிந்தது.அதில் தெரிந்த மகிழ்ச்சியை பார்த்தே தன் பெண்ணுக்கு பிரதாப்பை பிடித்து விட்டது. இனி என்ன காரணத்தை முன்னிட்டும் இத்திருமணத்தை தடுக்க கூடாது என்று கருதினார்.

ஆம் கேசவமூர்த்தி தான் கேள்வி கேட்டதில் இருந்து…. தன் மகள் முகத்தையே தான் பார்த்திருந்தார்.அதனால் தான் தன் மகளை அருகில் அமர்த்திக் கொண்டு அவளையும் தன் முகத்தை பார்த்தவாறே அமர்த்திக் கொண்டார்.பத்மினியிடம் தான் பிரதாப் உன்னை பெண் கேட்டு வந்திருக்கிறார் என்று சொன்னவுடன்…

அவள் முகம் மலர்ந்ததும் பின் யோசனையில் மூழ்கியதும்… சந்தானத்தின் பேச்சால் திரும்பவும் அவள் முகம் மலர்ந்தது மட்டும் அல்லாமல் வெக்கப்பட்டு அவள் தலை குனிந்ததையும் பார்த்து தன் பெண்ணுக்கு பிரதாப்பை மிகவும் பிடித்து விட்டது.அதனால் தன் மகள் விரும்பும் வாழ்க்கையே அமைத்து தரவேண்டும் என்று முடிவு செய்தார்.

அதனால் கேசவமூர்த்தி தன் மகளிடம் சம்மதத்தை கூட கேட்கவில்லை. ஆனால் மற்றவர்கள் அவ்வாறு இருப்பார்களா? பத்மினியின் இந்த மவுனம் பிரதாப்புக்கு நம்பிக்கையே போய் விட்டது. அவளுக்கு தன்னை பிடிக்க வில்லை என்று முடிவே கட்டி விட்டான்.

அசோக்கும் ஒரு மாதிரியாகி விட்டான் என்றே கூற வேண்டும்.ஷாலினியை நோட்டம் விடும் வேலையை கூட விட்டு விட்டான். தன் நண்பனை பற்றி நன்கு அறிந்தவன் அவன் செல்வாக்கு பற்றியும் தெரிந்தவன்.திருமணம் பற்றி பத்மினி பதில் சொல்லாதது பிரதாப்பின் மன நிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதனையும் அவன் நன்கு அறிவான்.பிரதாப்பின் கையை தன் கையோடு பிடித்து அமைதி படுத்திக் கொண்டிருந்தான்.

ஷாலினியை பற்றி சொல்லவே வேண்டாம். பத்மினியை கொலை வெறியோடு முறைத்து பார்த்தாள்.பின் என்ன?பார்ப்பதற்க்கு கதாநாயகன் மாதிரி இருப்பவனை கான்பித்து திருமணம் செய்ய சம்மதமா என்று கேட்டாள். உடனே ஒத்துக் கொள்ள வேண்டாமா……?அதை விட்டு என்னவோ தீர்க்கவே முடியாத இந்தியா பாகிஸ்தான் ஒப்பந்தம் மாதிரி யோசித்தாள் அவளுக்கு கொலை வெறியே வந்து விட்டது.

இவர்களின் அனைவரின் வயித்தெரிச்சலையும் கொட்டிக் கொண்ட பத்மினி மிக நிதானமாக தலை குனிந்தவாறு கூறினாள் பாருங்க… ஒரு பதில் பிரதாப்பின் உச்ச கட்ட பிபியை ஏற்றுவதற்க்கு அந்த பதிலே போது மானதாக இருந்தது.

ஆம் கேசவமூர்த்தியின் கேள்விக்கு என் தந்தை விருப்பம் தான் எனதும் என்று கூறினாள்.பத்மினியின் முகம் கூட பிரதாப்புக்கு தெரியவில்லை. அவள் தந்தையை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் பிரதாப்பை பார்த்தவாறு இருந்திருந்தால் குறைந்த பட்சம் அவள் முகம் சிவப்பதில் இருந்தாவது அறிந்திருப்பான்.அறிந்திருப்பானா…? இல்லை தான் பழகிய பெண்களிடம் கண்டது போல்….இவள் ரூஜ் ஏன் இவ்வளவு டார்க்காக போட்டிருக்கிறாள் என்று யோசித்திருப்பானோ…. ? ஏன் என்றால் அவன் பெண்கள் வெக்கப்பட்டு பார்த்ததே இல்லை.

பத்மினியின் இந்த பதில் அசோக்குக்கே திருப்தியை தரவில்லை என்றால், பிரதாப்பின் மனநிலை எந்த நிலையில் இருக்கும்.பேசாமல் பத்மினியிடம் எனக்கு நீ வேண்டாம் என்று கூறி விடலாமா என்று கூட யோசித்தான்.

அவன் யோசனையை கேசவமூர்த்தியின் பதில் தடை செய்தது.பிரதாப்பிடம் மிக பெருமையாக “என் பெண்ணுக்கு என்னுடைய விருப்பமே அவள் விருப்பம். எனக்கு சம்மதம் நீங்கள் உங்கள் வீட்டு பெரியவர்களிடம் இருந்து முறையாக வந்து பேசினால் மற்றவற்றை முறையாக பேசலாம்.”என்று ஒரு பெண்ணின் தகப்பனுக்கே உரிய பெருமையுடன் பேசினார்.

பிரதாப்புக்கு என்ன சொல்வது என்றே ஒரு நிமிடம் புரிய வில்லை.இந்த பதில் என்ன மாதிரியானது திருமணத்திற்கு அப்பா, பெண் இரு வரும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். ஆனால் அந்த சம்மதத்தில் தன் தன் மானம் முழுவதும் அடிவாங்கியதாக கருதினான்.

ஒரு நிமிடம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு “இப்போது அவர்கள் வேல்டு டூரில் இருக்கிறார்கள்.நான் அவர்களை உங்களிடம் போனில் பேச வைக்கிறேன்.நாம் மேற் கொண்டு ஆக வேண்டிய திருமண வேலை பார்க்கலாம்.அவர்கள் திருமணத்திற்கு வந்து விடுவார்கள்” என்று ரத்தின சுருக்கமாக கூறி தன் திருமணத்தை உறுதி படுத்திக் கொண்டான்.
 
Top